Verse 55
आद्यायामिततेजसे श्रुतिपदैर्वेद्याय साध्याय ते
विद्यानन्दमयात्मने त्रिजगतः संरक्षणोद्योगिने ।
ध्येयायाखिलयोगिभिः सुरगणैर्गेयाय मायाविने
सम्यक्ताण्डवसम्भ्रमाय जटिने सेयं नतिः शम्भवे ॥ ५५॥
அந்தமும் ஆதியும் இல்லா அருட்பெருஞ்ஜோதியென,
மாந்தர் அறியும், மறை புகழும், பேரின்ப அறிவு வடிவான,
மூவுலகம் காக்கும், முனிவரினம் துதிக்கும், தேவரினம் போற்றும்,
மாயைதனை உள்ளடக்கும், மின்னார் செஞ்சடைகளுடன்,
ஆனந்த நடனமாடி மகிழும் , பொங்கும் மங்களம் வழங்கும்,
பொன்னார் மேனியனைப் போற்றி வணங்கிடுவேன் யான் என்றும்
—————————————–
Verse 56
नित्याय त्रिगुणात्मने पुरजिते कात्यायनीश्रेयसे
सत्यायादिकुटुम्बिने मुनिमनः प्रत्यक्षचिन्मूर्तये ।
मायासृष्टजगत्त्रयाय सकलाम्नायान्तसञ्चारिणे
सायं ताण्डवसम्भ्रमाय जटिने सेयं नतिः शम्भवे ॥ ५६॥
முக்குணமாகி, முப்பரம்எரி முதலவனாகி, முன்னவள்உமை தவப்பலனாகி,
உண்மை வடிவாகி, உலகாளும் ஆதிகுடும்பியாகி, முனிகள்தம் உணர்வொளியாகி,
மாயைவழி மூவுலகங்கள் படைத்து, மறைமுடி உபநிடங்கள் உள்ஓடி
மாலைவேலைதனில் சடைமுடிதரித்து ஆனந்த நடனமாடி, பொங்கும்
மங்களம் வழங்கும், சங்கரனைப் போற்றி வணங்கிடுவேன் யான் என்றும்
————————————-
Verse 57
नित्यं स्वोदरपोषणाय सकलानुद्दिश्य वित्ताशया
व्यर्थं पर्यटनं करोमि भवतः सेवां न जाने विभो ।
मज्जन्मान्तरपुण्यपाकबलतस्त्वं शर्व सर्वान्तर-
स्तिष्ठस्येव हि तेन वा पशुपते ते रक्षनीयोऽस्म्यहम् ॥ ५७॥
வயிறுநிரப்ப வழிதேடி, பொருளாசையால் பலர் நாடி, அலைந்து உழன்று
திரிந்து, உன்பணி அறிவிலியானேன், ஏனென்று அறியலேனே உலகோனே!
அடியாரின் பாவங்கள் களைவோனே, முன்நல்வினைப்பயனாலே யான் உனை
உலகோர் உள் உறைவோனென அறிந்தேனே, ஆதலினால் ஆண்டவனே நீ
எனைக் காத்திடும் தகுதியினை அடைந்தேனே உலகோர் உளம்உறை நாயகனே !
This old Tamil Film Song by and large brings out the essence of these three verses.
ஆதியந்தம் இல்லா..!, அரும் ஜோதியே.. ஆண்டவனே எம்மையே. ஆளும் தயாநிதியே..
நீதி முறை நாட்டில்.. நிறைந்தோங்கவே.நீ அருளே..!, புரிவாய்..எம்மானே.
வேதங்கள் காணாத.மலர்ப் பாதனே..அம்மையே.அப்பனே..உண்மையின் உருவமே.
தந்தை தாய் சுற்றம் என்னும். பந்த பாசம் தன்னைத் தந்ததல்லால் இன்பம்..தந்ததுண்டோ.ஐயா..
துன்ப வினை என்ன.செய்விருந்தாலும்..மூடர் என் பிழைத் தன்னைப் பொறுத்தாளுமே..
எந்த ஜென்மம் வருனிம்.ஜெகதீசனே..உன்னைச் சிந்தித்திடும்..வரம் தா பெருமானே..
அன்புச் சிவம் இரண்டும்.ஒன்றல்லவோ..
movie:- Naane Raja (நானே ராஜா) Courtesy: You Tube