சங்கரனின் வைரக்கூடம் – பஜ கோவிந்தம் – புத்தகம்


“தன்னைக் கட்டுதல் அறம், பிறர் துயர் தீர்த்தல் பொருள், பிறர் நலம் நாடுதல் இன்பம், உலகு காக்கும் ஒருவனைப் போற்றுதல் வீடு” என்று பாரதியார் எளிமையாக எடுத்துரைக்கும் வீடுபேறினை அடைய முயலும் நம் அனைவரின் வாழ்க்கையிலும், அன்றாடம் இடைவிடாது முக்கியமான மூன்று பெரும் தத்துவங்கள் தொடர்பு கொள்கின்றன. அவை, மனிதன், உலகம் (படைப்பு), இறைவன்.

இவைகளை என்னவென்று அறியாமல், வாழ்வில் உபயோகித்து (அனுபவித்து) , வினைகள் புரிந்து, “பொருள்” தேடி, “இன்பம்” துய்த்து, களைத்து, முடிவில் “நாம் வந்த கதை என்ன? நாம் கொண்டது என்ன, கொடுப்பது என்ன? மன்னைத் தோண்டி தண்ணீர் தேடும் நாம், நம்மைத் தோண்டி ஞானம் கண்டோமா? இல்லை, நம் மனமெங்கும் தெருக் கூத்து, பகல் வேஷமா?” என்றெல்லாம் பிதற்றி, தன்னை அறிவதே தனது பிறவியின் நோக்கம், அதனை அறிய முயலாமல் வாழ்நாளை வீனாக்கினோமே என துன்பமுற்று, வருந்தி மடிகிறோமே. இது தானே நடப்பு.

அறியாமையாகிய அடரிருள் காட்டில், திசை தெரியாமல் திரிந்தலைந்து, இப்படி கேள்விகள் கேட்கும் மூடப்பிராணிகளான என் போன்றோர்க்கு, மெய்யறிவு நெறியை புரிந்து கொள்ளும் வகையில் “சில்வகை எழுத்தின் பல்வகைப் பொருளைச் செவ்வன் ஆடியின் செறித்து”, பக்தி, அறிவு (ஞானம்), வினைகள் (கர்ம) வழியான வாழ்வின் செயல்முறைகளை, எளிய ஸமஸ்க்ருதத்தில் அரிய கருத்துகளைக் கொண்ட முப்பத்தி ஒன்று ஸ்லோகங்களாக நமக்கு வழங்குகின்றனர் ஆதி சங்கரரும் அவரது சீடர்களும், “பஜ கோவிந்தம்” எனும் படைப்பினில்.

இந்த செயல்முறைகள், மாற்ற முடியாத கடந்த காலத்தைப் பற்றிய குற்ற உணர்வின்றியும், அறியப்பட இயலாத எதிர்காலத்தைப் பற்றிய கவலையின்றியும், நிகழ்காலத்தில் நாம் வாழ உதவுகின்றன.
வேதாந்த தத்துவங்கள் அடங்கிய இந்த படைப்பின் விளக்கவுரைகள் ஏராளம். எனினும், குருவிடமிருந்து நான் அறிந்தவற்றின் தமிழாக்கமே இந்நூல்.

இந்நூல் இப்பொழுது இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் கிடைக்கிறது. விவரங்கள் இதோ:

இந்தியாவில் (புத்தக வடிவில்)

https://notionpress.com/read/bhaja-govindam-moha-mudgara

வெளி நாடுகளில் (அமேசானின் கிண்டில் வலைதள பதிப்பு)

இந்த புத்தகங்களின் விற்பனையில் வரும் வருமானம் அனைத்தும் தர்ம காரியங்களுக்கே. பொருளீட்டும் எண்ணம் ஏதுமில்லை.