ஸ்மரஹர - மன்மதனை எரித்தவனே, காமனை எரித்தவனே, ஆசையை அழித்தவனே யஹ - எந்த பரமேஸ்வரன் ஏக: - ஒருவராகவும் சிதசிததிக: - சித் அசித அதிக: - ஜீவன் ஜடம் இவற்றிற்கு வேறானவராகவும் ப்ரஹ்மாதீந் - பிரம்மன் முதலான ஸர்வாந் பஸுந் - அனைத்து உயிரினங்களையும் மோஹபாஶேந - மோஹம் எனும் கயிற்றால் பத்த்வா - கட்டி ஆத்மக்ருத்யம் - அவரவருடைய கடமைகளை காரயித்வா - செய்யுமாறு செய்து ய: ச - எந்த பரமேஸ்வரன் ஏதேஷு - இவர்களுள் ஸ்வபதஶரணாந்வித்யயா - தன் திருவடிகளை சரணடைந்தவர்களை வித்யயா - மெய்யறிவினால் மோசயித்வா - விடுவித்து ஸாந்த்ராநந்தம் - ஒப்புயர்வற்ற பேரின்பத்தை பரம் - பரமனின் தாம - ஸ்வரூபத்தை (மேலான இருப்பிடத்தை, மோக்ஷத்தை) கமயதி - அடையும்படி செய்கிறாரோ (உணரத்துகிறாரோ) தம் த்வாம் ப்ரபத்யே - அந்த உம்மை முழுமையாக சரண்டைகிறேன்.
விளக்கம்
சிதசிததிக: என்பது இறையின் இலக்கணம். உயிர்களையும், உயிரற்றவைகளையும் தன் உடலாகக் கொண்டு, அந்த உடலுக்கு வேறாக இருப்பவரே இறைவன். அவருக்கு சமமாகவோ, உயர்வாகவோ யாரும் இல்லை.
அவரே குருவாக வந்து (வித்யையா மோசயித்வா) அறிவால் உணர்த்துகிறார். கோகழி ஆண்ட குருமணிதன் தாழ் வாழ்க என்கிறார் மாணிக்கவாசகர்.
பிரம்ம தேவன் உத்தமமான பசு. இந்த பசுவான படைக்கும் கடவுள் பரமனால் படைக்கப்பட்டார்.
பசு என்றால் உயிரினம் என்று பொருள். விலங்கினமான பசு, புல் உண்டு, விவேகமின்றி, தன்னை வேலை வாங்கும் மனிதர்களுக்கு அடிமையாகி பாரமிழுத்தல் முதலிய காரியங்களில் புரிந்து, க்லேசமும் துக்கமுமடையும்.
அவைகளைப்போல, அஜ்ஞானக் கயிற்றால் கட்டி, ஜீவர்களை இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் கட்டுண்டு , வினைகள் புரிந்து வினைப்பலன்களை அடைய வைக்கின்றான் ஆண்டவன். இந்த ஜீவன்களை கட்டுவதும் அவிழ்த்து விடுவதும் பரமேஸ்வரனே.
இந்த ஜீவன்களிடையே எவன் உன்னைச் சரண மடைகின்றானோ அவனுக்கு ஞானத்தை அளித்து அவனுடைய கட்டை அவிழ்த்து விட்டு நித்யானந்த பரிபூர்ணமான உன்னுடைய அப்ராக்ருதமான பதவிக்கு அவனை அழைத்துக் கொள்ளுகிறாய் நீ. அந்த முப்புரம் எரி முதல்வனாம் பரமேஸ்வரன் உன்னை நான் சரணடைகிறேன் என்று துதிக்கின்றார் அப்பைய தீக்ஷிதர்.
சுவாசம் அடங்கும் வேளையிலே உள்ளம் உன்பாதம் பணித்திட்டு பிறவி ஈனும் பாபமுழுதும் உதறி எறிய இயலும் புரமெரி நாதனே ! ஒருகால் அக்காலம் என் உள்ளம் ஓரிரு நோய் வாய்ப்பட்டு நினைவு தவறிட்டால் உனதடி பணிந்திட எங்கனம் எனக்கு கை கூடும் !! 13
சொற்களின் பொருள்
நாத – உயிரின் தலைவனே! ஸ்வாமீ!
புரஹர – முப்புரத்தை எரித்தோனே
ஜந: – மனிதன் (உயிர்)
ஶ்வாஸப்ரஶமஸமயே – மூச்சு நன்கு அடங்கும் சமயம்
சேத: – மனதை (சித்தத்தை)
த்வத்பாதாப்ஜே – உன் திருவடித் தாமரைகளில்
நிதாய – பணித்திட்டு (அர்ப்பணம் செய்து)
ஸம்ஸ்ருதிப்ராப்தம் – பிறவிகளில் வந்து அடைந்திருக்கும்
ஸர்வம் – அனைத்து
ஆக3ஹ – பாபங்களையும்
ஷேப்தும் – உதறி எறிந்துவிட
ப்ரபவதி – முடியும் (எனினும்,)
தஸ்மிந் காலே – அந்த சமயத்தில்
யதி – ஒரு வேளை
தோஷத்ரயார்தம் – வாதம், பித்தம்,கபம் என்ற மூன்று தோஷங்களால் (பீடிக்கப்பட்ட என் உடலால்)
மம மநோ – என் மனது ப்ரஜ்ஞாஹீநம் – நினைவு தவறியதாக
பவேத் – ஆகிவிட்டால்
தத் – அப்படி (திருவடித் மாமரைகளில் அரப்பணிக்க)
கதம் மே – எப்படி எனக்கு
கடேத – கைகூடும்
விளக்கம்
எவ்வித பாபிக்கும் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. இறக்கும் காலத்தில் இறைவனுடைய திருவடிகளில் மனதைச் செலுத்தி, உயிரை உடலிலிருந்து பிரித்துக்கொண்டால், இந்தப் பிறவியில் செய்த அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபடலாம். அந்திய காலத்தில் பிரஜ்ஞையுடன் கூடி இருப்பது அரிது. வாத பித்த கபங்களின் விபரீதங்களால் மூர்ச்சை ஏற்பட்டும் விடலாம். ஆகையினால் ப்ராண வியோக சமயத்தில் மனத்தை ஈசுவரனிடம் செலுத்தி ஸர்வ பாபங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்றும் நிச்சயமாக நம்பியிருக்கவும் முடியாது. நோயின் பிடியில் சிக்கி, தன் நிலை இழந்த மனதால் இறைவனைத் தியானிக்க முடியாது. என் செய்வது என வருந்துகிறார் அப்பையர்.
திருவடித் தாமரை பணிவது பாபங்களை களைந்திடும் – விளக்கம்
இறைவன் திருவடியைப் பற்றினால், பாவங்கள் களையும் என்று அப்பையர் கூறுவதற்கு ஆதாரம் (ப்ரமாணம்) என்ன என்பதை முதலில் காண்போம்.
இறைவனின் பாத அபிஷேகங்களின் போது வேதத்தில் உள்ள (தைத்ரிய ப்ராஹ்மணம் 3.12.3) சில மந்திரங்கள் உரைக்கப்படும். அதில் ஒன்று
இறைவன் திருவடி எங்கும் நிறைந்திருக்கிறது, பழமையானது, புனிதமானது. அதுவே அடைக்கலம். அதன் மூலம் எல்லா உயிர்களும் தமது பாபகர்மங்களைத் தாண்டிச் செல்கின்றன. அதே புனிதமானதும், தூய்மையானதும் ஆன அத்திருவடிகளால் தாம் தூய்மை அடைவோமாக !.மிகுந்த பாபங்களையும் நன்கு கடந்துடுவோமாக!……இறைவன் திருவடி நமக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் !
என்கிறது தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3).
இறைவன் திருவடிகள் , அறிவினை (ஞானம்) குறிப்பது.
இடது திருவடி குறிப்பது
அபர ஞானம்
கர்ம காண்ட ஞானம்
உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது
சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)
வலது திருவடி குறிப்பது
பர ஞானம்
ஞான காண்ட ஞானம்
உண்மையை உணர்த்துவது
யோகம்(உள்ளத்தால்), ஞானம்
பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.
தோஷத்ரயார்தம் – அல்லது திரிதோடங்கள் – ஓரிரு நோய் – விளக்கம்
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
என்கிறது திருக்குறள் (941).
நம் உடலில் வாதம், பித்தம், கபம் (சிலேட்டுமம்) அல்லது `வளி (காற்று) , அழல் (நெருப்பு) , கபம் (நீர்)’ என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில் சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.
வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.
பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.
சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.
இப்படி இருநூறுக்கும் அதிகமான நோய்களில் ஏதேனும் ஒன்று, வயது முதிர்ந்து, உயிர் பிரியும் தருணம் நம்மைத் தாக்கலாம். அப்போது இறைவன் திருவடித் தாமரையை எப்படி தியானிப்பது என்று உழல்கிறார் அப்பையர்.
பகவான் ஷ்ருஷ்டி கர்த்தா. அவருடைய ஸ்வரூபத்தை எவராலும் அறிய முடியாது. ஆனால் அவர் பக்திக்கு வசப்பட்டவர் என்று முதல் ஸ்லோகத்திலும்,
படைப்பு இருப்பதால், படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும். ஜடப்பொருளாலும், வரையறைகளுக்கு உட்பட்ட ஜீவன்களாலும் படைக்க முடியாது என்பதனால், அனைத்து ஆற்றலும், அறிவையும் கொண்ட இறைவன் ஒருவனால் தான் இதனைப் படைக்க முடியும். எனவே கடவுள் இருக்கிறார் என்ற அறிவுப்பூர்வமான அநுமானத்தை
அப்பையர், இரண்டாவது ஸ்லோகத்திலும் கூறினார்.
இந்த மூன்றாவது ஸ்லோகம் இந்த அனுமானத்தை
“ஆதிதேவன், வேதங்கள் வாயிலாக அறியப்படுகிறார் – வேதங்கள் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக அநுமானத்தின் மூலமாக நமக்கு விளங்க வைக்கிறது”
என்ற ஷ்ருதிப் ப்ரமாணத்தை கூறுகிறது.
“வேதங்கள் ஐயா என ஓங்கி அகழ்ந்து அகன்ற நுண்ணியனே” என்கிறார் மாணிக்க வாசகர். இதுவே இந்த ஸ்லோகத்தின் சாரம்.
பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு. என்பர் சிலபேர் பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே
என்று தாயுமானவரும் கூறுகின்றனர்.
இப்படி, அறியதற்கு அரிதான, பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமயமான இறைவனுக்கு ஒரு வடிவத்தை கூறுவதுபோல அமைந்துள்ளது இந்த ஸ்லோகம். இறைவனை அறிபவர், “அவரவர் தம்தம் தறிவறி வகை வகை” என்கிறார் நம்மாழ்வார்.
ஆயிரம் தெய்வம் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் - பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளீரோ !
என பாரதி பண் பாடினான். அப்படிப்பட்ட சாஸ்த்திரம் இறைவனை எப்படி யாருக்கு அறிய வைக்கவேண்டும் என்று வகுத்தறிந்துள்ளது. எனவே
உத்தம அதிகாரிக்கு – உன்னிடத்தில் உணர்வாக இருப்பவரே இறைவன் (விவர்த்த காரணம்)
சிவ – சொல் விளக்கம்
சிவ என்றால் மங்கலம், இன்பம் எனப்படும். அதாவது பொறிகளைப் பயன்படுத்தாமல் அறிவால் அறியக்கூடிய இன்பம் எனப்பொருள். இது பேரின்பம்.
“அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமருரும் அறியார் “ என்றும், “உலப்பலா ஆனந்தமாய் தேனினைச் சொரிந்து” என்றும் வர்ணிக்கின்றார் மாணிக்கவாசகர்.
மித்ரம் வருணம் – விளக்கம்
வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும். மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம். சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.
என்று பொய்யாழ்வர் இந்த மித்ர வருண தத்துவத்தை விளக்கிகிறார். அதாவது,
நாமம்/பெயர்– சிவன், நாராயணன், வாகனம் – ரிஷபம், கருடன், நூல்கள் – ஆகமம், வேதம், வசிப்பிடம் – மலை, கடல் (கயிலை, பாற்கடல்), தொழில்/கருமம் – அழித்தல், காத்தல், ஆயுதம் – திரிசூலம், சக்ராயுதம், உருவம் – அக்கினிப் பிழம்பு, மேகத்தின் கருப்பு, ஆனால் உடல் ஒன்றுதான் (சங்கர நாராயணன், அர்த்த நாரீ)
இதைத் தான் வேதம், மித்ர-வருண என்று சேர்த்துச் சொல்கிறது.
இந்த பெரிய இயற்கை நிகழ்வை, விஞ்ஞான உண்மையைச் சொல்வதால் வேதத்தை என்றுமுள்ள சத்தியம் என்கிறோம்.
காரண ப்ரம்மன் அனைத்திற்கும் மூலகாரணமான இறைவன், பரம்பொருள். கார்ய ப்ரம்மன் தேவதைகள். கார்ய ப்ரம்மர்களுக்கு பொறுப்புகள் உள்ளன. காரண ப்ரம்மத்தின் ஆற்றலின் ஒரு சிறு துளியே இத்தேவதைகளனைத்தின் ஆற்றல். இதனை
அந்த அந்த புராணத்தில் அந்தந்த தேவதைகள் காரணப் பரம்மனாக வழிபடப்படுகிறார். உண்மையில் காரண ப்ரம்மத்திற்கு நாம ரூபங்கள் இல்லை. மித்ரம், வருணம் என்று இரு தேவதைகளை கோடிட்டுக் காட்டி இறைவன் எனும் சிவனுடைய ரூபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், ரூபமில்லா இறைவனை நமக்கு உணர்த்துகிறார் அப்பையர் இந்த மந்திரத்தில்.
ஸ்லோகத்தின் கருப்பொருள்
மனம் வடிவத்தைப் பற்றிக் கொண்டாலும், உண்மையில் இறைவனுக்கு வடிவமில்லை என்ற அறிவுடன் இருக்க வேண்டும்.
உண்மையில் வணங்குகின்ற எனக்கும் வடிவமில்லை, வணங்கப்படும் இறைக்கும் வடிவமில்லை. அறியாமையால் என்னை உருவமாக கருதி, காணும் அனைத்தும் நாம, ரூபம் உள்ளவை என அறியாமையினால் எண்ணாத எண்ணமெல்லாம் ஏங்கி ஏங்கித் தவிக்கிறேன். தனித்தன்மைகள் உண்மை என எண்ணுவது மாயை. உணர்ச்சிகள் உண்மை அல்ல, எனினும் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் தேவை.
இத்தகைய எண்ணத்தில் நிலைத்திருக்க, மனதை சமநிலைப்படுத்தி, ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்கு உதவும், அப்பையரின் இந்த ஸ்லோகத்தின் விசாரம்.
I meditate (bhAvayEham) on Lord Sadachaleshvara, He who has his abode (geham) in Chamatkarapura, and is the beloved (moham) of Girija.
Like a Kalpa tree (vrksha), He is always (sadA) a refuge (Ashrita) for everyone(samUham=group), including the celestials (dEvatA samUham) who seek sanctuary(sharanAgata = literally, they who come to His feet), he who is known (nAmadhEya, literally titled) as the one who turned water (uda) to ghee (Ajya), he is like a flow (pravAham) of nectar (amrtam) of bliss (chidAnanda).
He is Mahalinga (shiva) who causes (karaNa) the well-being (prasAda) of king (bhUpAla) Chamatkara etc (Adi).
His shadow-less (chAyA rahita) sanctum (garbhagRha madhya rangam=the inner room in the middle of the house) is lit by a lamp (dIpa prakAsha).
He removes (hetu bhoota, literally causes to be past) all sorrows (dukha) etc (Adi) and removes fear (bhaya bhanga) of this ocean (sAgaram) like life (samsAra).
Like a bee (bhRnga) which hovers (implied) over a lotus (sarasija), He hovers over the hearts (hrdaya) of good people (sAdu jana) who are tranquil (shama) and self-controlled (dama), senses etc (unsure: cannot findpavrti in dictionary) in unison (samyukta).
His lotus-like (kamala) victory-giving (vijaya kara) hands (implied) holds (vidhRta) a deer (kurangam),
he is like a nectar-filled (sudha maya) wave (taranga) of compassion (karuna rasa).
He is worshipped (vinuta) by Vishnu (kamalesha), he is mounted (turangam) on a bull (vRshabha), he is dear to the lotus-faced (kamala vadana) Guruguha (subrahmanya).
Meaning of the Sanskrit Words
पल्लवि
सदा – always
अचल- mountain (that which doesn’t move)
ईश्वरं – lord
भावये- worship
अहं – i
चमत्कार पुर – According to the Skanda Purana, Tiruvarur is also called Chamatkara-pura, after a king who ruled the place
गेहं – resides
गिरिजा – மலைமகள், Goddess Parvati
मोहम्. – loves
अनुपल्लवि
सदा- always
आश्रित – to the surrendered
कल्प वृक्ष समूहं – grove of wish fulfilling trees
शरण आगत देवता समूहं – (the one in whom) the legions of Devas seek refuge,
उद-आज्य कृत नामधेय वाहं – the one bearing the name and fame of converting water to ghee,
चित्-आनन्द-अमृत प्रवाहम् – the flood of bliss of consciousness
चरणम्
चमत्कार भू-पाल-आदि प्रसाद -करण निपुण महा-लिङ्गं – the one in the form of a great Linga, adept at bestowing grace to the King Chamatkara,
छाया रहित दीप प्रकाश -गर्भ गृह मध्य रङ्गम् – the one at the centre of the sanctum lit by a lamp that casts no shadow,
समस्त दुःख-आदि हेतु भूत -संसार सागर भय भङ्गं
शम दम-उपवृत्ति-आदि संयुक्त -the one who removes the fear of the ocean of Samsara (worldly existence) which is the root cause of all misery,
साधु जन हृदय सरसिज भृङ्गम् – the honey bee that hovers in the heart-lotus of saints endowed with tranquility, self-restraint, endeavour etc.
कमल विजय कर विधृत कुरङ्गं – the one who holds a deer in his hand that surpasses a lotus (in beauty)
करुणा रस सुधा-अर्णव तरङ्गं – the wave from the ambrosial ocean of compassion,
कमला-ईश विनुत – the one worshipped by Vishnu (lord of Lakshmi),
वृषभ तुरङ्गं – the one who rides a bull,
कमल वदन गुरु गुह-अन्तरङ्गम् – the one dear to the lotus-faced Guruguha.
• The phrase ‘camatkAra bhU-pAla-Adi prasAda’ contains the Raga Mudra
• According to the Skanda Purana, Tiruvarur is also called Chamatkara-pura, after a king who ruled the place
• The reference to converting water to ghee is connected to the Saivite saint Nami Nandi aDigaL (one of the 63 Nayanmars), who took up a challenge from the Jains who were occupying the place to light a lamp with water.
• The reference to the lamp not casting a shadow is again from the Skanda Purana. Shiva appeared before King Camatkara and told him that the lamp would not cast a shadow in the sanctum sanctorum.
பற்றிடும் அடியார்தனை பொன்திரவியமென காக்கும் ஆண்டவன்
சரணம் 1
பூதப்பிரேத பிசாச கணநாதப் பரமேஸ்வரம் பிரபு
மூவினைவிளை பகைபாவமச்சம் களைவோனே
தில்லையம்பதிவாழ் மிளிர்பிறைதரி சிவனே
வேண்டும் வரமளிக்கும் உன் பொன்மலர்பாதமிரு பணிவேனே
மத்யமகாலம் – கண்டநடை
கருஒளிமிகு வடிவுடன் அழல் ஆதவன் விழிஉடையோன்
திரிசூலம் கபாலம் உடுக்கை பாசக்கயிற்றுடன்
கலீர்கலிரென ஒலி கால்தண்டை அணி ஞமலி வாகனன்
மின்னார் செஞ்சடையும் அநிசமாலையெனஅரவு அணியோன்
Meaning in English
I pray , the lotus faced, the Lord Swarna Kaala Bhairava. He has blood red colored flame in his hand and gas long curly hair who is compassionate and gas a dog as his mount. He holds the rope that pulls us out from this earth, skull and trident in his hand. He shines red like the flame and has auspicious eyes. He provides treasures to the devotees like the land lord to the peasants. He controls all the demons and spirits. He removes the sins (past, present & future), sorrows. He lives in Chidambaram. I pray and bow to the feet that provides whatever I wished for. He has dark blue lustre and has powerful eyes like sun. With trident, skull and the destiny rope, he walks with the anklets making majestic sound with his dog. With his red hair locks tidied up,, he wears the snake as garland. I salute the Swarna Kala Bhairava.