சங்கரனின் வைரக்கூடம் 8 – இல்லற உறவு

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

இந்த உலகம், உண்மையில் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் அது உங்களுக்குத் தீங்கு செய்யாது என்று கூறுகிறது வேதாந்தம். இது தான் வேதாந்தத்தின் உண்மையான உள்நோக்கம் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.  இந்த உலகம் என்பது என்ன என்று நாம் அறிய நமக்கு உதவி புரியவே

வந்த வரவை மறந்து-மிக்க
மாதர்பொன் பூமி மயக்கத்தில் ஆழும்
இந்தம யக்கை அறுக்க-எனக்கு
எந்தை மெய்ஞ்ஞான எழில்வாள் கொடுத்தான்

என்ற தாயுமானவர் பாடல் கூறுவது போல, மண் என்ற நிலம் மீது பெண் துணைகொண்டு, பொருளைக் கொண்டு வாழ்ந்து, அப்பொருள்களிலிருந்து பெறுகின்ற அனுபோகமே இன்பம் என்றும், அதுவே பொருள் என்ற மயக்க நிலையில் மதி கெட்டு இருந்திடும் மூட மனிதனின் அறிவை உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல, அவனுள் உறங்கிக் கிடக்கும் வைரமெனும் வைராக்கியத்தை தோண்டி எடுத்து, பட்டை தீட்டி, மெருகூட்டும் பணியாக இதுவரை ஏழு செயல்முறைகளை, அவரது வைரக் கூடத்தில் நம் அனைவருக்கும் அளித்தார் ஆதி சங்கரர்.

இப்பொழுது அடுத்த படியாக, முக்கியமான அடிப்படை கேள்விகளை எழுப்பி நம் சிந்தனையை தூண்டுகிறார் இந்த எட்டாவது ஸ்லோகத்தில். வாருங்கள், பட்டை தீட்டிக் கொள்வோம் நம் வைரத்தை (வைராக்கியத்தை).

சமஸ்க்ருத ஸ்லோகம்

का ते कान्ता कस्ते पुत्रः

संसारोयमतीव विचित्रः |
कस्य त्वं कुत आयातः

तत्त्वं चिन्तय तदिह भ्रातः ||

ஆதி சங்கரர்

தமிழ் ஒலிபெயர்ப்பு

கா தே காந்தா கஸ்தே புத்ர:

ஸம்ஸாரோயமதீவ விசித்ர: |

கஸ்ய த்வம் குத ஆயாத:

தத்வம் சிந்தய ததி3த3ம் ப்4ராத: ||

தமிழ் மொழிபெயர்ப்பு

யாருந்தன் மனைவி யாருந்தன் பிள்ளை

விந்தை யன்றோ இவ்உலக வாழ்க்கை

யாருந்தன் மூலம் எங்கிருந்து வந்தாய்

தம்பி தத்துவ சிந்தனை செய்வாய்

சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள்

का ते - கா தே - யாருந்தன் 
कान्ता - காந்தா - மனைவி
कस्ते - கஸ்தே - யாருந்தன்
पुत्रः - புத்ர: - பிள்ளை
संसारोयमतीव विचित्रः - ஸம்ஸாரோயமதீவ விசித்ர: - संसार + अयमं + अतीव + विचित्रः - ஸம்ஸார + அயம் + அதீவ + விசித்ர: - ஸம்ஸாரம் + இந்த + மிக + விசித்ரம்कस्य - கஸ்ய - எவருடையவன்
त्वं - த்வம் - நீ
कुत - குத - எங்கிருந்து
आयातः - ஆயாத: - வந்தாய்
तत्त्वं - தத்வம் - இந்த உண்மையை
चिन्तय तदिह - चिन्तय + तद् + इह - சிந்தய+ தத் + இஹ - சிந்தி இங்கேயே
भ्रातः - ப்4ராத: - (உடன் பிறவா) சகோதரனே

விளக்கவுரை

நேரடி பொருள்
 (உடன் பிறவா) சகோதரனே! உன் மனைவி யார்? உன் மகன் யார்? நீ எவரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து இந்த விசித்திரமான சம்சாரத்திற்கு வந்து சேர்ந்தாய்? இந்த உண்மைகளைக் கொஞ்சம் சிந்தனை செய்!
விளக்கம்
குடும்பம் என்ற சொல்லிற்கு  மூவகை உறவுகளால் ஒன்றுபட்ட நபர்களின் குழு என்று பொருள் கொள்ளலாம்.  அதாவது, திருமணம், இரத்தம் அல்லது தத்தெடுப்பு ஆகிய உறவுகளால் ஒன்றுபட்ட நபர்களின் குழு.  இந்தக் குழுவில் ஒவ்வொருவருக்கும் அன்னை, தந்தை, மகன், மகள், அக்கா, தங்கை, அண்ணா, தம்பி, கணவன், மனைவி என்ற சமூக நிலைகள் உண்டு. இணக்கமான வாழ்க்கைக்காக நாம் ஏற்றுக்கொண்ட ஒரு ஏற்பாடுதான் குடும்பம் என்ற ஒரு நிறுவனம். குடும்பத்தின் வெவ்வேறு உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

வாழ்க்கையின் போக்கில், நாம் இந்த உறவுகளின் வலுவான பற்றுதல் காரணமாக நமக்கு பொறுப்புகள், கடமைகள் மற்றும் அவர்கள்/அவைகள் தொடர்பான இன்ப துன்பங்கள், நினைவுகள், கவலைகள் முதலானவற்றை சந்திக்கின்றோம். கால சுழற்சியில் கடைசி காலம் வரும்பொழுது “நான் யார் நீ யார், நாலும் தெரிந்தவர் யார் யார்? தாய் யார், மகன் யார் தெரியார், தந்தை என்பார் அவர் யார் யார்” என்றும், “நான் கேட்டு தாய்தந்தை படைத்தானா; இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா; இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே, வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன” என்றெல்லாம் தத்துவ கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்கிறோம்.

இது தான் உலக யதார்த்தம். இதனைத்தான் ஆதி சங்கரர் நமக்கு தெள்ளத் தெளிவாக இந்த ஸ்லோகத்தில் எடுத்துரைத்து, சிந்திக்க வேண்டும் என நமக்கு அறிவுரை வழங்குகிறார்.

ஆழ்ந்து ஆராய்ந்தால், உண்மை புரியும். உதாரணமாக, மகன் பிறப்பதற்கு முன்பே தாயின் வயிற்றில் இருந்தான். அதற்கு முன், அவன் நம் சொந்த உடலில் ஆற்றலாக இருந்தான். அதற்கு முன்பு அந்த ஆற்றல் உணவாக, அவ்வுணவு வயல்களில் உள்ள தாவரங்கள் மற்றும் காய்கறிகளாக, அவைகளனைத்தும் அதற்கு முன்பு பூமியாக இருந்தது. நாம் பூமி என்று அழைக்கப்படுவது உணவாகவும், பின்னர் என் உடலில் ஆற்றலாகவும் மாறி, பின்னர் கருவாகி, தாயின் வயிற்றில் குழந்தையாக மாறியது. எனவே, மாற்றத்தின் முழு செயல்முறையையும் நாம் பார்க்கும்போது, மனைவி, மகன் மற்றும் கணவன் என்று நாம் அழைப்பது ஐந்து கூறுகள் எனப்படும் ஒரு அடிப்படை பொருளின் மாற்றங்களே தவிர வேறில்லை.

ராட்சத “ரோலர் கோஸ்டர்” எனும் “உயர் சுழல் வீச்சு சவாரி”யில் செல்லும்போது , நாம் எந்த திசையில் செல்கிறோம் என்பது நமக்குத் தெரியாது. அதிலிருந்து வெளியே வரும்போதுதான், முடிவில்லாத வட்டங்களில் நாம் சுழன்று கொண்டிருப்பதைக் காணலாம். குடும்பமும் அப்படித்தான். 'குடும்ப' வாழ்க்கையிலிருந்து வெளியே வரும்போது மட்டுமே உலகத்துடனான நமது உண்மையான உறவு புரியும்.

இந்த அடிப்படைக் கேள்விகளை ஆராய்வதற்கான அழைப்பே இந்த ஸ்லோகம். ஆராய்ந்து அறிந்தால் நமது மனதை தயார்படுத்தி, உள்ளுறங்கும் வைராக்கியத்தை பட்டை தீட்டி மெருகேற்றி வெளிக் கொண்டு வர முடியும்.

நல்லோர் இணக்கம், குருவின் வழிகாட்டு, பரம்பொருளின் மேல் பற்று - இவை மூன்றுமே நமது மனதை தயார்படுத்த நமக்கு வேண்டிய கருவிகள். மிக முக்கியமாக, பரம்பொருளின் மேல் பற்றினை வளர்த்திட பிரார்த்தனை மனப்பான்மை தேவை. அதனால் துதி கோவிந்தனை என்கிறார் ஆதி சங்கரர்.
தமிழ் இலக்கியங்களில் உறவுகள்
திருவாசகம் (யாத்திரைப் பத்து)

தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே. நடை முறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரே. ஆதலால் அடியவர் களே! நீங்கள், நாம் யார்? எம்முடையது என்பது யாது? பாசம் என்பது எது? இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து இவை நம்மை விட்டு நீங்க இறைவனுடைய பழைய அடியாரொடும் சேர்ந்து அவ்விறைவனது திருவுளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக் கொண்டு, பொய் வாழ்வை நீத்துப் பாம்பணிந்தவனும், எமையாள் வோனுமாகிய பெருமானது பொன்போல ஒளிரும் திருவடிக்கீழ் போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

ஐந்தாம் திருமுறை - கொண்டீச்வரம் - அப்பர்

தந்தை தாயொடு தாரம் எனும் தளை
பந்தம் ஆங்கு அறுத்துப் பயில்வு எய்திய
கொந்தவிழ் பொழில் கொண்டீச்சுரவனை
சிந்தை செய்மின் அவனடி சேரவே

தந்தை தாய் தாரம் ஆகிய சொந்தங்களின் பந்தம் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் கட்டாயத்தில் நம்மை தள்ளி விடுகின்றது, மிகவும் அவசியமான தேவைகளை நிறைவேற்றுவது நமது கடமை. ஆனால் பல சமயங்களில் அவர்களது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு நாம் செய்யும் முயற்சிகளில் நாம் இறைவனை மறக்க வாய்ப்பு இருப்பதால், நாம் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தவே பந்தம் எனும் தளை அறுத்து என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இறை சிந்தனை, நாம் பாசக் கட்டுகளிலிருந்து விடுபட உதவு செய்யும் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். மேலும் இறைவனின் திருவடிகளை சென்று அடைவதற்கு ஓரே வழி, அவனைப் பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்வது தான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

பட்டினத்தார் பாடல்

“ஊரும் சதமல்ல – உற்றார் சதமல்ல – உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல – பெண்டில் சதமல்ல – பிள்ளைகளுஞ்
சீரும் சதமல்ல – செல்வம் சதமல்ல – தேசத்திலே
யாரும் சதமல்ல”

“வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே”

முடிவுரை

இந்த ஸ்லோகம், குடும்பம் என்ற கட்டமைப்பை தாழ்த்துகிறது; தந்தை, மகன், துணைவி போன்றவற்றில் ஒருவரின் பாசத்தையும் அவரது கடமைகளின் செயல்திறனையும் குறைத்திடுகிறது என்னெல்லாம் தவறாக நாம் கணிக்கக்கூடாது.

ஆன்மிகமும் குடும்ப வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று முரண்பாடு இல்லாதவை. ஆன்மீக வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கையை துறக்காமலேயே வாழ முடியும். தமிழ்நாட்டில் உள்ள 63 நாயன்மார்கள் என்பவர்களில் குறிப்பாக பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் தான் முக்தி அடைந்து உள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

நடைமுறை மட்டத்தில், அவர் இங்கு சுட்டிக் காட்டுவது என்னவென்றால், நாம் நமது பல்வேறு பாத்திரங்களில் மற்றவர்களுடன் பழகினாலும், அவர்களிடம் பாசம் காட்டினாலும், போதுமான அளவிலான புறநிலையைப் பேண வேண்டும், அந்த பிணைப்புகள் நம்மைக் குருடாக்கி, வழிக்கு வர விடக்கூடாது. நமக்கான விடுதலையை நாமே தேடுகிறோம் என்பதையே இந்த செயல்முறை விளக்குகிறது.

இதனை அறிந்துணர்வோம். சங்கரனின் வைரக் கூடத்தில் மீண்டும் சந்திப்போம். அதுவரை…….

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க

Sankara’s Smithy – Strike 8 – The family Blow

Introduction

Dictionaries define family as , “a group of persons united by the ties of marriage, blood or adoption, constituting a single household and interacting with each other in their respective social positions, usually those of spouses, parents, children and siblings”.

Adi Sankara in his eighth strike in his Smithy (eighth verse) addresses common people like us who are totally engrossed in this worldly family life and tells us clearly that there are limitations to this social concept and advises us that one should clearly inquire and understand these limitations.

Let us try to understand this strike in its totality

Sanskrit Verse

का ते कान्ता कस्ते पुत्रः

संसारोयमतीव विचित्रः |

कस्य त्वं कुत आयातः

तत्त्वं चिन्तय तदिह भ्रातः ||

Adi Sankara

English Transliteration

Kaa tE kaantaa kastE putrah, 

SamsaarOyamatIva vichitrah

Kasya tvam kuta aayaatah,

Tattvam chintaya tadiha bhraatah

Meaning of the Sanskrit Words

का ते - kaate  = who is your    
कान्ता - kaanta = wife
कस्ते - kaste = who is your
पुत्रः - putrah = son

संसारोयमतीव - सम्सार अयम् - samsaara ayam = this samsara
अतीव - atiiva = supremely
विचित्रः - vichitrah = wonderful

कस्य - kasya = of whom
त्वं - tvam = who are you
कुत - kuta = from where
आयातः - aayatah = have come

तत्त्वं - tatwam = of that Truth
चिन्तय - chintaya - dwell over, think, inquire
तदिह - तद् इह - tad iha = that here alone
भ्रातः - bhraatah : O brother

Meaning in English

Oh, brother! Who is your wife? Who is your son? This life is very strange.  You belong to whom ? Where did you come from? Dwell and reflect on these truths here.

Explanation

Adi Sankara raises some fundamental questions here. He takes us to a different plane of inquiry. 

“Who is your wife? Who is your son? You belong to whom ? Where did you come from?”

The questions posed above are important and fundamental. But can we really ponder over these questions and grasp the explanations given in the scriptures while our minds are clouded by preconceived and unsubstantiated notions underlying our relationships that bind and blind us? Let us try to understand these relationships.

1. Initially the relationship is between two individuals through “marriage”. From a dictionary perspective, marriage is “the state of being united as spouses in a consensual and contractual relationship recognized by law”.

2. Over a period of time, this relationship fructifies into a “family” as defined in the introduction to this blog.

3. The “family” takes us to the arena of interactions with roles, responsibilities, authorities, goals and tasks for each member of the family individually and collectively.

4. Add to this the dimension of “Time” and the impermanence of materialism. We are now in the thick of issues, challenges, attachments, detachments, pains and pleasures.

5. This process is never ending till the soul permanently terminates its lease agreement with the body and identifies itself with the Ultimate Reality, which happens after innumerable cycles of births and deaths (called Samsara)

This is the ground reality which we decide to ignore and continue life till it hits us one day with all its severity. So the definitions of marriage and family continues to be highly controversial. This is not an issue to be resolved by dictionaries. Therefore, Adi Shankaracharya is looking at these relationships, beyond one’s family concerns and encourages us to question:

1. Did these relationships help to discover the inherent oneness and harmony that obtains between them, inspite of their obvious duality at the level of the body, their individual personalities etc.

2. Were these meant to achieve another goal in life; the realisation of the unity of life in this universe?

For many of us it may appear that Adi Sankara is questioning the validity of the institution of the family. The family institution itself has to be seen in the broader context of the purpose of human life. It is valid for a certain period, during the householder’s stage of life. When it has served its purpose, one has to go beyond its parameters, i.e. wife and son, etc. It is valid only for a certain task in life, not throughout life. So look at these relationships from outside, says Sankara. Then only the true nature of worldly existence or Samsara can be understood.

For example, the son was in the mother's womb before birth. Before that, he was as an energy in our own body. Before that, that energy was in the food that we took, that food was from the plants and vegetables in the fields and all of that was earth before that. What we call earth became food, then energy in my body, then a fetus, then a child in the mother's womb. So when we look at the whole process of transformation, what we call wife, son and husband are nothing but transformations of one basic substance called the five elements (pancha bootha) over a period of time.

When we are in a giant roller coaster , we do not know in which direction we are going. Only when we step out of it, can we see see that we were being spun around in never-ending circles. So it is with Samsara. Step out and see says Sankara.

Conclusion

We must bear in mind that this sloka does not demean the structure of family; We should not misjudge that it diminishes one's affection and the performance of one's duties in father, son, spouse, etc.

Spirituality and family life are not mutually exclusive. Spiritual life can be lived without sacrificing family life.

On a practical level, what Adi Sankara is pointing out here is that even as we interact with and feel affection for others in our various roles, we must maintain a sufficient degree of objectivity so that we do not let those bonds blind us and get in the way of our seeking unadulterated, permanent and eternal happiness called liberation (mukti) from the unending cycles of births and deaths (samsara).

Pretty deep questions posed in a simple manner sums up this eighth strike. Let us now get prepared for the next one soon. Until then………

God Bless.

சங்கரனின் வைரக்கூடம் – 7 – பருவக் கோளாறு

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசை பிடித்து அலையாமல், நமது வாழ்வு நிலையற்றது என்பதை உணர்ந்து, உறவுகள் தொடர்கதைகள் அல்ல என்றும் அந்த உறவுகளும், நாம் ஈட்டும் செல்வமும், நாம் உள்ளிழுத்து விடும் மூச்சுக்காற்றும் உள்ளவரையே என்பதை நன்கு ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆறு செயல்முறைகளை சங்கரனின் வைரக்கூடத்தில் அறிந்தோம் இதுவரை.

‘அரிது அரிது, மானிடராய் பிறப்பது அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது.’ என்றார் ஓளவையார். அப்படிப்பட்ட அரிய பிறவியை எடுத்துள்ள நாம் அதை எப்படி கழிக்கிறோம் என்பதை இந்த நாட்டுப்புற பாடல் எளிமையாக எடுத்துரைக்கிறது..

''தத்தக்கா புத்தக்கா நாலே காலு
தானே நடக்கையிலே ரெண்டேகாலு
உச்சி வெளுக்கையிலே மூணே காலு
ஊருக்குப் போகையிலே எட்டே காலு''

என்ன இது? தத்தக்கா புத்தக்கா என்ற உளரல். இதற்கும் இந்த பஜகோவிந்த ஸ்லோகத்திற்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் உண்டு; இந்த நாட்டுப்புற பாடலின் பொருளை அறிய, முடிவு வரை காத்திருக்கலாம்.

மனித வாழ்வவினை (பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ள காலத்தை) பருவங்களாக பிறிக்கலாம். இந்தப் பிறிவுகள் ஒவ்வொருவரின் கண்ணோக்கத்தைப் பொருத்து; இரண்டிலிருந்து, பண்ணிரண்டு வரை பிரிக்துப் பார்க்கலாம் என்பர். அனைத்து கண்ணோக்களிலும் மூன்று முக்கிய நிலைகள் உண்டு. நமது வாழ்நாளை, குழந்தை, இளமை, முதுமை என்று பருவங்களாகப் பிரிக்கலாம். (மேலே உள்ள படத்தை பாரக்கவும்).

இந்தப் பருவங்களை எப்படி கடக்கிறோம் நாம், என்பதை ஆதி சங்கரர் ஒரு புகைப்படம் போல ஒரு ஒரு வரியில் விவரிக்கின்றார் இந்த அடுத்த செயல்முறையில்.

வாருங்கள். எப்படி என்று பார்க்கலாம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

बालस्तावत्क्रीडासक्तः

तरुणस्तावत्तरुणीसक्तः |

वृद्धस्तावच्चिन्तासक्तः

परमे ब्रह्मणि कोऽपि न सक्तः ||

ஆதி சங்கராச்சார்யா

தமிழ் ஒலிபெயர்ப்பு

பா3லஸ்தாவத் க்ரீடா3 ஸக்த:
தருணஸ் தாவத் தருணீ ஸக்த: |
வ்ருத்3த4ஸ் தாவத் சிந்தா ஸக்த:
பரமே ப்ரஹ்மணி கோபி ந ஸக்த: ||

தமிழ் மொழிபெயர்ப்பு

பாலகனாக பற்றுவோம் ஆட்டம்

வாலிபனாக குமரியில் நாட்டம்

முதியவனாக உள்ளத்தில் கவலை

முத்தனைப் பற்றிட எவனும் இல்லை

சமஸ்க்ருத சொற்களின் பொருள்கள்

बालस्तावत् - பாலஸ்தாவத் - குழந்தைப் பருவத்தில், 

क्रीडा असक्तः - க்ரீடா ஸக்த: - க்ரிட + அஸக்த: - ஆட்டம்/விளையாட்டு + பற்றுதல்

तरुणस्तावत् - தருண ஸ்தாவத் - இளமை பருவத்தில்

तरुणीसक्तः - தருணீஸக்த: - பெண்ணாசை/குமரியில் நாட்டம்

वृद्धस्तावत् - வ்ருத்தஸக்த: - முதுமைப் பருவத்மில்

चिन्तासक्तः - சிந்தாஸக்த: - கவலை உள்ளம் கொள்வது

परमे ब्रह्मणि - பரமே ப்ரஹ்மநி - பரப்பிரம்மனை

कोपि न - கோபி ந - க அபி ந - ஒருவரும் இல்லை

असक्तः - அஸக்த: - பற்றுடன்

விளக்கவுரை

நேரடிப் பொருள்
விளையாட்டு/விளையாட்டுத்தனத்தின் மீதான பற்றுதலால் குழந்தைப் பருவம் நழுவிப் போகிறது. பெண் மீதான பற்றுதலால் இளமை மறைகிறது. பல விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதில் முதுமை கடந்து செல்கிறது. ஐயகோ, பரபிரம்மத்தைப் பற்றிட விரும்பும் எவரும் இல்லை.
தத்துவ விளக்கம்
முந்தைய இரண்டு ஸ்லோகங்களில் , ஆதி சங்கரர் மரண நேரத்தை விளக்கி, நிலையிலா, வெறுமையான, தவறான மனித உறவுகள் எவ்வாறு நமது முட்டாள்தனமான மனதை நமது ஆன்மீக இலக்கிலிருந்து திசைதிருப்ப முடியும் என்பதை நினைவூட்டினார்.

இந்த செயல்முறையில், அவர் நமது வாழ்க்கைப் பயணத்தின் நான்கு நிலைகளை சுட்டிக்காட்டி அந்நிலைகளின் யதார்த்த நிலமையை எடுத்துரைக்கிறார்.

ஒரு மனிதன் வாழ்வில் நான்கு பருவங்களைக் (4 நிலைகளைக்) கடந்து செல்கிறான் - குழந்தை, பாலகன், இளைஞன், முதியவன் என்பவை இவை.

இந்தப் பயணத்தில் நம்மை எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் பற்றி அவர் எச்சரிக்கிறார். நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கவனச்சிதறல்கள் உள்ளன.

இன்றய காலக் கட்டத்தில் நாம் அனைவரும் ஒரே “பிஸி” - ஒய்விலா பரபரப்பு; அல்லவா! எப்படி?

1. குழந்தைகளாக இருந்தபோது, விளையாட்டிலே பிஸி.
2. இளமை எனும் பூங்காற்றுக் காலத்தில் பாலினத்தில் நாட்டம். இளஞனுக்கு எத்தனை பெண் தோழிகள் இருக்கிறார்கள் என்ற கவலையும், குமரிப் பெண்ணுக்கு, தனக்கு பின்னால் எத்தனை ஆண் நண்பர்கள் சுற்றுகிறார்கள் என்ற கவலை.
3. முதுமையில், வாழ்க்கையின் இறுதி/இறுதிக் கட்டங்களுக்குள் நுழைகிறோம். நமது கவனம் முழுவதுமாக மாறி, நமது உடமைகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் போன்றவற்றின் பாதுகாப்பு/கவலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். எவரிடத்தில் பேசினாலும், “நமது மலரும் நினைவுகளை அவர்களின் மீது வாந்தி எடுக்க ஆரம்பிக்கிறோம்”.

பரம்பொருளை அறியவும், மெய்ப்பொருளை உணரவும் நேரமே இல்லை. சிறிது நேரம் ஒதுக்கலாம் என்று நினைத்தாலும், பயிற்சியின்மையால், அப்படிப்பட்ட எண்ணங்களில் மனம் ஈடுபட மறுக்கும், நொண்டிச்சாக்குகளை நோக்கி விரையும்.

நம் வாழ்வில் தெய்வீகத்தை, மிகக் குறைந்த வயதிலேயே கொண்டுவரும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நமது உடல், மனம் மற்றும் புத்தி வளாகம் உலக விவகாரங்களில் சிக்கிக்கொள்ளும் முன் இதைச் செய்ய முடிந்தால், அது வாழ்க்கையில் நிறைய கசப்பான அனுபவங்களைக் கடக்க உதவும். இந்த வைராக்கியமெனும் வைரத்தை தோண்டி எடுத்து, பட்டை தீட்டி, மிருகேற்றி நம்மில் ஒளித்திடவே, ஆதி சங்கராச்சாரியார் இந்த நிலையை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

இப்படி எடுத்துரைப்பதால், சங்கரர் உலக நோக்கங்களுக்கு எதிரானவர் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை விளையாட வேண்டும், ஒரு இளைஞன் சம்பாதித்து குடும்பத்தை வளர்க்க வேண்டும் மற்றும் நேர்மையான வழிகளில் செல்வத்தைப் பெற வேண்டும். ஆனால் ஒருவன் தனது அன்றாட வாழ்வின் தொடகத்திலேயே, கடவுளை மையமாகக் கொண்ட உள்நோக்கிய பயணத்தைத் தொடங்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி செய்தால், வயதான காலத்தில், நமது உலக உடைமைகளைப் பற்றிய தவிர்க்கக்கூடிய கவலைகள் நம்மை தீண்டாது. நமது மன அமைதியையும் பறிக்காது.

இதுவே இந்த ஸ்லோகத்தின் சாரம்.

தமிழ் இலக்கியங்களில் வாழ்க்கைப்பருவங்களின் நிலையாமை

பட்டினத்தார் பாடல்

முதற்சங்கு அமுதூட்டும்,
மெய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு
பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும், அம்மட்டோ?
இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!

வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே

திருமந்திரம்

திருமந்திரப் பாடல் ஒன்றில், பாலன் இளைஞன் முதியவன் என்ற பல பருவ மாறுபாட்டினை உடல் அடைவதைக் கண்ட பின்னரும், இளமை நிலையற்றது என்ற உண்மையை புரிந்து கொள்ளமால் உலகத்தவர் இருக்கின்றார்களோ என்று வருந்தும் திருமூலர், காலத்தையும் அண்டங்களையும் கடந்தவனாகிய இறைவனின் திருவடிகளை நாம் தொழவேண்டும் என்று உணர்த்துகின்றார்.

பாலன் இளையன் விருத்தன் என நின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்து அண்டம் ஊடறுத்தான் அடி
மேலும் கிடந்து விரும்பவன் நானே

ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண்டு ஆரும் புகுந்து அறிவார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே.

அறியாமையிலேயே பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இறைவனே நம் அனைவருக்குத் தந்தையாவான். அவன் நினைவை நெஞ்சில் பூண்டு கொண்டு அவன் ஒளியில் புகுந்து பேரறிவு பெறுபவர் இல்லை. நீண்ட ஆயுள் பெற்று, நீண்ட நாட்கள் வாழ்ந்த போதிலும், தூண்டினால் ஒளியைப் பெருக்கும் விளக்குப் போன்ற இறைவனை அறியாமலேயே உலகில் வாழ்கின்றனர்.

அறநெறிச்சாரம்

தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்
பிரிவுந் துயிலும் உறீஇப் -- பருவந்து
பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு
வித்துக் குற்று உண்பார் பலர். --- அறநெறிச்சாரம்.

(தெரிவு இல் இளமையும்) பொருள்களை ஆராய்தற்கு ஏலாத இளமைப் பருவத்தையும், (தீப்பிணியும்) கொடிய நோய்களையும், (மூப்பும்) கிழத்தன்மையையும், (பிரிவும்) உற்றாரைப் பிரிதலையும், (துயிலும்) மரணத்தால் வருந் துன்பங்களையும், (உறீஇ) அடைந்து, (பருவந்து) வருந்தி, (பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு) பயனற்ற சின்னாள் வாழ்க்கைக்கு, (வித்துக் குற்று உண்பார் பலர்) உணவை விரும்பும் வேளாளன் அறிவின்றி வித்தையும் அழித்து உண்பதைப்போல வீடுபேற்றுக்கு வித்தாய அறத்தையே அழித்து வாழ முயல்பவரே உலகிடைப் பலராவர்.

அப்பரின் தேவாரம்

அப்பர் பிரான், இளமைக் காலத்தில் நம்மை விரும்பும் பெண்கள் நம்மை இகழ்வதற்கு வழி வகுக்கும் முதுமை வரும் முன்னர் இறைவனை நினைத்து வழிபடவேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
எழுது கொடியிடையார் ஏழை மென்தோள்
இளையார்கள் நம்மை இகழா முன்னம்
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டு தான்
என்னோடு பகை தான் உண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றும் கூடி முடியால்
உற வணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான்
ஊர் போலும் ஆரூர் தானே

முடிவுரை

நமது வாழ்நாளின் யதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டும் அருமையான ஸ்லோகம். ஆழ்ந்து நம்மை சிந்திக்க வைக்கும் உண்மைகள்.

நாலு கால்களில் (இரு கை, இரு கால்) தத்தக்கா புத்தக்கா என்று தவழும் குழந்தையாக, பின் தானாக (சக்தியுடன்) இரு கால்களில் நடக்கும் இளைஞனாக, உச்சி வெளுத்து தண்டுகோல் கொண்டு மூன்று கால்களில் நடக்கும் முதுமைப் பருவம் தாண்டி, எமன் அழைத்து செல்லும் ஊருக்குப் போகையிலே எட்டு கால்களுடன் (நம் பிணத்தை தூக்கிச் செல்லும நால்வரின் கால்கள்) செல்லும் நாம், இறைவனை நினக்க தேரம் ஒதுக்கினோமா என்று ஆராய வேண்டும். இது தான் இந்தப் பண்ணின் சாரம்.
இதனைத்தான்  15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹான் கபீர்தாஸ் , இந்தி மொழியில் கூறுகிறார்:

बीत गये दिन भजन बिना रे।
भजन बिना रे, भजन बिना रे॥

बाल अवस्था खेल गवांयो।
जब यौवन तब मान घना रे॥

लाहे कारण मूल गवाँयो।
अजहुं न गयी मन की तृष्णा रे॥

कहत कबीर सुनो भई साधो।
पार उतर गये संत जना रे॥

ஞானி கபீர் தாஸ்
“ஐயோ, உமது தியானம் இல்லாமலேயே என் உயிர் போய்விட்டது ஆண்டவரே! நான் என் குழந்தைப் பருவத்தை விளையாடிக் கழித்தேன், என் இளமையில் என் பெருமை என்னைத் தாண்டியது.நான் என் வாழ்வின் பெரும்பகுதியை (முக்கியத் தொகை) பயனற்ற நாட்டங்களில் இழந்துவிட்டேன், என் மனம் மற்றும் புலன்களின் ஆசைகள் இன்னும் தணியவில்லை”.

ஆய்வோம் உட்கருத்தினை. தயாராகுவோம் அடுத்த பதிவிற்கு. அதுவரை

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க

Sankara’s Smithy – Strike 6 – The “airy” blow

Introduction

This Sloka is an extension of the previous Sloka. In the previous blog, Sankara declared that recognition and respect is a result of your wealth earning capability. 

This Strike (Sloka ) is an auxiliary strike to the previous one; it amplifies the same thought to yet another bitter reality. The theme begun in the previous Sloka is continued here with a graphic touch added to it, to drive home the same point with added emphasis. It looks at things straight in the eye.

Let us start with a small incident that we often come across.

A child saw a balloon vendor opposite and wanted to get a a balloon. The mother of the child was not willing to get the child the object of her love. The. Child got disappointed and started crying. An elderly saint saw this, went to the vendor, got the baloon, gave it to the child. The child was extremely thrilled, she started playing with the baloon and was very happy.

The mother asked the seer as to why he bought the baloon. The saint smiled at her and responded:

“Look at the child; she is so happy as long as the baloon is in her hand. The moment the baloon goes out of her hand or the baloon gets deflated, the child will be disappointed and will be unhappy again. We all are children like her. We are very happy with our body, play with that in life and are happy because we think we own them and we love the body of ours. The moment the air inside us gets deflated/released, we are gone; there is only distress and crying all around. So don’t bother much” he said and walked away.

This in ident involving the greatest saint of Kanchi Kamkoti Mutt sets the background for this strike by Adi Sankara. Let us now receive the sixth strike.

Sanskrit Verse

यावत्पवनो निवसति देहे,

तावत् पृच्छति कुशलं गेहे |

गतवति वायौ देहापाये,

भार्या बिभ्यति तस्मिन्काये ||

English Transliteration

yāvatpavano nivasati dehe, 

tāvat pṛcchati kuśalaṃ gehe |

gatavati vāyau dehāpāye,

bhāryā bibhyati tasminkāye ||

Meaning of the Sanskrit Words

यावत्  - yaavat. - so long as;
पवनः - pavanaH - air/breath (life breath)
निवसति - nivasati - lives/dwells;
देहे - dehe- in the body;
तावत् - taavat - till then;
पृच्छति - pR^ichchhati - enquires about;
कुशलं - kushalaM - welfare;
गेहे - gehe - in the house; in the family
गतवति - gatavati - while gone; has left
वायौ - vaayau - air(breath);
देह अपाये - dehaapaaye - life departs the body;
भार्या - bhaaryaa - wife;
बिभ्यति - bibhyati - is afraid;fears;
तस्मिन् काये - tasminkaaye - tasmin.h+kaye - in that body;

Meaning in English

As long as he/she is alive, the family members crowd around and enquire about the welfare. But when the breathing stops, even the spouse who has enjoyed this body fears the corpse.

Explanation

For ordinary people like us, death is frightening. We are people with likes and desires and attachments to worldly beings and things. So, we all tend to shun the topic of death. We close our eyes to the reality that is certain to overtake us one day. 

Even if someone talks about it in a conversation, we tend to say “Don’t talk about “inauspicious” matters. We will see when it comes. Why do you worry about that now. We all have very good health now and we have family and friends to take care of us. Relax now and enjoy.” Fine for that moment. But, is this the reality?

The body is important only to the extent that it is an instrument for achieving certain of our goals. However healthy a body may be, it is appreciated only as long as it has “breathing” or life in it. The departure of prana (the spark of consciousness) changes the entire outlook.

Once breathing stops and life is gone, the person becomes a body or a corpse. “He” or “She” becomes “it”, a fast decaying object no longer required. “It” needs to be disposed off first. Everyone including the wife will be scared to be with a corpse. So, the body is laid out, placed on blocks of wood, and set fire to or laid to rest with Mother Earth. The only things that accompany the departed are noble (dhārmic धार्मिक्) acts”.

Then the relatives and others leave. And after the ceremonial rituals, everyone without exception moves on in life to seek new avenues of joy and the dead person becomes history and fades away in memory. This is a sour fact. As long as the gasp of life is there, people come and surround.

This is reality. So, “The blind affection which we give to our family is never shown towards something is ever-present. Unless there is detachment from worldly pleasures, mind can not be turned inwards. The utter worthlessness of the ties will become apparent after one contemplates on the impermanence of the worldly ties. If one enquires deeply, one can rise about merely satisfying the needs of the body and make the mind suitable for self-enquiry by making time for the spiritual dimension of life. So pray Govinda”

Adi Sankara clearly brings out this and advises us to weigh our priorities.

Conclusion

“Knowing the limitations of the body will help us keep a healthy outlook in life and turn the mind to everlasting principles, rather than being obsessively engaged in pampering our bodies. This, however, doesn’t mean we don’t take care of the body and neglect it. Yes, we should take care of the ‘vehicle’ (our body) for living a meaningful life and use that as a means or a tool to understand and realise the truth, but without undue attachment to it. We must pray to the divine to give us the understanding to dispel the ignorance in which we are slowly drowning every day. So, Shankara through this verse reminds us of the temporary nature of the body and advises us to chant the name of the Lord who will ultimately guide and help us to realise our true self”.

This is the essence of the Strike 6. Let us understand the reality of our lives and prepare ourselves dor the inevitable which Adi Sankara continues to remind us in this Bhaja Govindam.

We will get ready for his next strike. Until then……

God Bless

சங்கரனின் வைரக் கூடம் – 6 – காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

தமிழ் வலைதள ஒலித்தொடர் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

ஒரு  குழந்தை எதிரில் இருந்த பலூன் வியாபாரியை பார்த்து     பலூன் வேண்டுமென்று அழுதது. தாய் கண்டிக்க,அங்கிருந்த ஒரு ஞானி,பலூன் வாங்கி குழந்தையிடம் தரும் படி சொன்னார். பலூன் கைக்கு வந்தவுடன் குழந்தைக்கு ஒரே கொண்டாட்டம்,    கும்மாளம். இதைப் பார்த்த அந்த மாமுனி:   

“பாரு!குழந்தை இப்போ ஒரே சந்தோஷமா இருக்கு. அது பலூனில் காத்துள்ள மட்டும் தான். காத்து போயிடுத்தோ அல்லது பலூன் உடைஞ்சி போச்சுன்னாலோ ஒரே வருத்தமாயிடும் அழும். இப்போ எவ்வளவு சந்தோஷமோ, காத்து போனா அவ்வளவு துக்கம் வரும். நாமும் குழந்தை மாதிரி தான் இந்தஉடம்பை வெச்சுண்டு விளையாடுறோம். ரொம்ப சந்தோஷமா, சவுக்கியமா இருக்காப்புல நினைக்கிறோம். ஆனால்,இதுலயும் காத்து போயிட்டா ஒரே துக்கம்,அழுகதான்”. இதைத் தான் சித்தர்கள் ரொம்ப சாதாரணமா

காயமே இது பொய்யடா வெறுங்
காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த
மண்ணு பாண்டம் ஓடடான்னுபாடிவிட்டார்கள் என்றார்.

அந்த மாமுனியே நமது காஞ்சிப் பெரியவர்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

यावत्पवनो निवसति देहे,

तावत् पृच्छति कुशलं गेहे |

गतवति वायौ देहापाये,

भार्या बिभ्यति तस्मिन्काये ||

தமிழ் ஒலிபெயர்ப்பு

யாவத் பவனோ நிவஸதி தே3ஹே
தாவத் ப்ருச்சதி குச’லம் கே3ஹே |
க3தவதி வாயௌ தே3ஹாபாயே
பா4ர்யா பி3ப்4யதி தஸ்மின் காயே ||

தமிழ் மொழிபெயர்ப்பு

காயம் தனிலே காற்றுள்ள வரைக்கும்

குசலம் கேட்பர் சுற்றமும் சூழலும்

மூச்சுக் காற்று நின்று போனதும்

உடலைக் கண்டு மனைவியும் அச்சம்

சமஸ்க்ருத சொற்களின் பொருள்

यावत्  - யாவத் - எவ்வளவு
पवनः - பவன: - மூச்சுக் காற்று - பிராண வாயு
निवसति - நிவஸதி - வசிக்கும் - இருக்கும்
देहे - தேஹ - உடலில்
तावत् - தாவத் - அதுவரைக்கும்;
पृच्छति - ப்ருச்சதி - விசாரித்தல்
कुशलं - குச’லம் - நலம்
गेहे - கே3ஹே - வீட்டில்/குடும்பத்தில்
गतवति - க3தவதி - சென்றது
वायौ - வாயௌ - காற்று
देह अपाये - தே3ஹாபாயே - உடலை விட்டு பிரிதல்
भार्या - பா4ர்யா - மனைவி/இல்லாள்
बिभ्यति - பி3ப்4யதி - அச்சத்தில்;
तस्मिन् काये - தஸ்மின் காயே - அந்த உடலை (உயிர் பிரிந்த உடலை)

விளக்கவுரை

நேரடிப் பொருள்

(உன்) உடலில் எவ்வளவு காலம் வாயு (ஜீவன்) இருக்கிறதோ அதுவரை தான் உனது குடும்பத்தினர் உன் நலனில் இச்சை காட்டுவார்கள். தேஹத்திலிருந்து வாயு (ஜீவன்) அகன்று விட்டாள், உனது மனைவிகூட உன் (உயிரற்ற) சடலத்தை கண்டு ந்டுங்குவாள். அதாவது உடலில் மூச்சுக் காற்றுள்ள வரையே வீட்டில் உள்ளவர்கள் உன் நலத்தை விசாரிப்பார்கள். பிராணன் பிரிந்துவிட்டால், நீ கூடிக்குலாவிய உன் மனைவிகூட உன் உடலைக்கண்டு அஞ்சுகின்றாள்.

விளக்கம்:

நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு, மரணம் பயமாக இருக்கிறது. நாம் அனைவருமே உலக உயிர்கள், பொருள்கள் மீது விருப்பு, வெறுப்பு, ஆசைகள் மற்றும் பற்றுதல் கொண்ட மக்கள். எனவே, நாம் மரணம் என்னும் பேச்சையே தவிர்க்கிறோம். ஏதாவது நமது உரையாடலில் யாராவது அதைப் பற்றி பேசினால் கூட, "அமங்கலமான" விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். வரும்போது பார்ப்போம். அதைப்பற்றி இப்போது ஏன் கவலைப்படுகிறீர்கள். நாம் அனைவரும் இப்போது மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம், நம்மை கவனித்துக் கொள்ள குடும்பம் மற்றும் நண்பர்கள் உள்ளனர். இப்போது ஏன் அதைப் பற்றிய பேச்சு?" என்று கூறி நமது உரையாடலை திசை திருப்பி தொடர்கிறோம். அல்லவா!

ஆனால் இது தான் நிஜ வாழ்வா? சிந்திக்கலாம்.

நமது சில இலக்குகளை அடைவதற்கான கருவியாக இருக்கும் அளவுக்கு மட்டுமே உடல் முக்கியமானது. ஒரு உடல் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், அதில் "சுவாசம்" அல்லது உயிர் இருக்கும் வரை மட்டுமே அது பாராட்டப்படுகிறது. பிராணனின் புறப்பாடு (உற்ற தேகத்மிலிருந்து உயிர் பிரியும் பொழுது), நம் அனைவரின் முழுக் கண்ணோட்டத்தையும் மாற்றுகிறது.

சுவாசம் நின்று, உயிர் போனவுடன், அந்த நபர் உடலாகவோ, பிணமாகவோ மாறுகிறார். "அவன்" அல்லது "அவள்" என்பது "அது" ஆகிவிடும்; வேகமாக அழுகும் பொருள் இனி தேவையில்லை "இது".
முதலில் அகற்றப்பட வேண்டும். மனைவி உட்பட அனைவரும் பிணத்துடன் இருக்க பயப்படுவார்கள். எனவே, உடல் அமைக்கப்பட்டு, மரக் கட்டைகளில் வைக்கப்பட்டு, தீ வைக்கப்படுகிறது அல்லது அன்னை பூமியுடன் சேர்கப்படுகிறது. பிரிந்தவர்களுடன் இருக்கும் ஒரே விஷயங்கள், அவர்களின் உன்னதமான (தார்மிக் धार्मिक्) செயல்கள்”

பின்னர் உறவினர்களும் மற்றவர்களும் சென்று விடுவர். சடங்குகளுக்குப் பிறகு, விதிவிலக்கு இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியின் புதிய வழிகளைத் தேடப் புறப்பட்டு, வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள், இறந்தவர் வரலாற்றாகி நினைவிலிருந்து மங்குகிறார். இது ஒரு கசப்பான உண்மை.

இதுதான் யதார்த்தம். எனவே, “நம் குடும்பத்தின் மீது நாம் காட்டும் கண்மூடித்தனமான பாசம்/பற்று, நிலையாக நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளின் மேல் காட்டப்படுவதில்லை. உலக இன்பங்களிலிருந்து பற்றின்மை இல்லாவிட்டால், மனதை உள்நோக்கித் திருப்ப முடியாது. உலக உறவுகளின் நிலையற்ற தன்மையைப் பற்றி ஒருவர் சிந்தித்த பிறகு, உறவுகள் தொடர்கதை அல்ல அவைகள ரயில் பயண சிநேகிதம் போலவே என்பது தெளிவாகத் தெரியும். ஆழ்ந்து விசாரித்தால், உடலின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து, வாழ்க்கையின் ஆன்மிகப் பரிமாணத்திற்கு நேரத்தை ஒதுக்குவதன் மூலம் மனதை சுய விசாரணைக்கு ஏற்றதாக மாற்ற முடியும். எனவே கோவிந்தாவை வேண்டிக்கொள்”

ஆதிசங்கரர் இதை தெளிவாக வெளிப்படுத்தி, வாழ்க்கையில் நமது முன்னுரிமைகளை எடைபோட அறிவுறுத்துகிறார்.

தமிழ் இலக்கிய மேற்கோள்கள்


திருக்குறள்

உயிர் என்பது நமது உடலை இயக்கும் ஒரு ஆற்றல் என்று கருதப்படுகிறது. உயிர் நிலையானது என்றும், அது மீண்டும் மீண்டும் பல பிறவிகளை எடுக்கிறது என்றும் வள்ளுவர் கருதுகிறார். இவ்வுடம்புக்கும் உயிருக்குமுள்ள நட்பு, முட்டைக்குள் இருந்த பறவை இறக்கை முளைத்தபின் வெளிவந்து, அந்த முட்டையைவிட்டுப் பறந்து போவதைப் போன்றது (குறள் – 338). மற்றும், சாவு என்பது உறக்கத்தைப் போன்றது; பிறப்பு என்பது உறங்கி விழித்தலைப் போன்றது (குறள் – 338). உறங்கியவன் மீண்டும் எழுவதைப்போல், ஒரு உடலில் இருந்த உயிர் அந்த உடலின் மரணத்திற்குப் பிறகு அந்த உடலைவிட்டு வெளியேறி, மீண்டும் மற்றொரு உடலோடு இயங்குகிறது என்பதை உணர்ந்த வள்ளுவர், “உடம்பில் ஒதுக்குக் குடியாயிருந்த உயிர்க்கு புகுந்து தங்குதற்கு நிலையான ஒரு இல்லம் அமைந்திடவில்லையே (குறள் – 340)” என்று வியக்கிறார்.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. (குறள் – 338)

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள் – 339)

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (குறள் – 340)

சுந்தரர் தேவாரம்.

ஊன்மிசை உதிரக் குப்பை
ஒருபொருள் இலாத மாயம்
மான்மறித்து அனைய நோக்கின்
மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுடப் பிறவி வாழ்வு
வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்,
ஆனல்வெள் ளேற்ற ஆரூர்
அப்பனே! அஞ்சி னேனே. --- சுந்தரர் தேவாரம்.

வெள்ளிய நல்ல ஆனேற்றை உடையவனே! திருவாரூரில் உள்ள தந்தையே! இறைச்சியை உள்ளடக்கி ஓடுகின்ற குருதிக்குப் பையாய் உள்ள இவ்வுடம்பு , பொருட்டன்மையாகிய உண்மையை உடைத்தல்லாத பொய்ப்பொருள் ; ஆதலின் , அத் தன்மையை அறியாத , மான் மருண்டாற் போலும் பார்வையினை யுடைய பெண்டிரே மதிக்கின்ற இந்த மானிடப்பிறவி வாழ்வினை , இன்புற்று வாழ்வதொரு வாழ்வாக விரும்புகின்றிலேன்; அத்துன்ப நிலைக்கு அஞ்சுதல் உடையன் ஆயினேன் .

சோமேசர் முதுமொழி வெண்பா

சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

ஆக்கையும் ஆயிரத்துஎட்டு அண்டங்களும் நிலையாத்
தூக்கி அழிந்தான்சூரன், சோமேசா! - நோக்கியிடில்
நில்லாதவற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை.

சூர பத்மன் , தன் உடம்பும், தன் அரசாட்சிக்குரித்தாக ஆணை செலுத்திய ஆயிரத்தெட்டு அண்டங்களும், நிலையுடையவெனக் கருதி, அழிந்தொழிந்தான்; சோமேசா! அதுபோல, ஆராயுமிடத்து நிலையுதல் இலவாகிய பொருள்களை, நிலையுதலை உடையன என்று, புல்லிய அறிவினை உடையராதல் கருதுகின்ற இழிபாம்.

பட்டினத்தார் பாடல்

“காற்றைத் துருத்தி கடிய வினைக்கு உள்ளான
ஊற்றைச் சடலத்தை உண்டு என்று இறுமாந்து
பார்த்து இரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல்
ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே”

யாரோ ஒரு கவி

"பொய்வீடு கட்டிப் புலால் வீட்டைப் போஷித்து
மெய்வீட்டினை இழந்த மேடங்காள்! -- பொய்வீடு
போ என்னும், உங்கள் புலால் வீட்டை உண்பதற்கு
வா என்னும் நல்ல வனம்"

முடிவுரை

வயலில் விளைந்த நெற்பயிரினை அறுவடை செய்யும்போது, நெற்பயிரின் அடிப்பகுதியில் ஒருசாண் அளவிற்கு விட்டு அறுவடை செய்வர். பின் களத்து மேடுகளில் அறுத்த நெற்பயிரிலிருந்து நெல்மணிகள் தனியாக உதிர்ந்து விடுமாறு அடித்து பிரிப்பர். இதற்கு போரடித்தல் என்று பெயர். போரடித்து பிரிக்கப்படும் நெல்மணிகளுடன் தூசு, குறைந்த விளைச்சல் கொண்ட நெல்மணிகளான சாவி போன்றவையும் சேர்ந்து இருக்கும்.போரடித்து வரும் நெல்லை காற்று வீசும்போது அள்ளி தூற்றுவர். இவ்வாறு தூற்றும்போது நல்ல நெல்கள் நேராக கீழேயும், தூசு, பதர் என்று சொல்லப்படும் விளைச்சல் குறைந்த நெல்கள் காற்றின் பிடியில் சிக்கி சற்றுத் தள்ளியும் விழும். நல்ல நெல்லினை இம்முறையில் எளிதில் பிரித்து எடுக்கலாம். இதுவே இப்பழமொழிக்கான நேடியான பொருளாகும். 

ஆனால் இந்தப் பழமொழிக்கு மறைமுகப் பொருள் ஒன்றும் உள்ளது.காற்று என்ற ஒன்று இல்லாதிருந்தால் உயிர்கள் உயிர்வாழ இயலாது.எனவே காற்று என்பது உயிர்களுக்கு மிகவும் அவசியம். இந்தக் காற்று உடலில் உட்சென்று வெளிவந்து தன் பணியை செய்யும் வரையே உடலில் உயிர் நிலைத்து நிற்கும். மாறாக உடலில் காற்று செல்லாத நிலை ஏற்பட்டால் அவ்வுடலைவிட்டு உயிர் நீங்கி விடும். உடலில் காற்று உள்ள வரையே மட்டுமே ஒரு மனிதனுக்கு வாழ்வு உள்ளது. அதற்குள்ளாக தான் தூற்றிக் கொள்ள வேண்டும். மனிதன் தேவையில்லாத கெட்டவற்றை ஒதுக்கிவிட்டு, தேவையான நல்லவற்றை மட்டுமே கடைப்பிடித்து வாழ வேண்டும். இதை விளக்கவே நமது முன்னோர்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று கூறியுள்ளனர்.

இது தான் ஆதி சங்கரரின் ஆறாவது செயல்முறை. இதுவரை நாம் பெற்ற முறைகள் மூலம், உடல், செல்வம், காமம், வாழ்க்கை, உறவு, உயிர் இவைகளின் நிலையாமை பற்றி அறிந்தோம். அடுத்த செயல்முறையை அறியும்வரை….

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

Sankara’s Smithy – Strike 5 – The “love”ly blow

Relationship

Link to the Tamil Podcast

https://soundar53.substack.com/podcast

Introduction

Adi Sankara has so far explained to our closed mind, that body, wealth , lust, life are all impermanent. 

Our mind at times can be very rigid and closed. Even after taking four strikes at Sankara’s Smithy, it will not let go. It will come out with this response:

"Do you how much attached, are my kith and kin? I have plenty of them. If something happens to me, they will come and help me”

May be, it's true. But how often and for how long do siblings and relatives help? Can you answer?

Come on! The fifth strike awaits us in Sankara’s Smithy. After receiving it, the answer to this question will be automatically available.

Sanskrit Verse

यावद्वित्तोपार्जन सक्तः

स्तावन्निज परिवारो रक्तः |

पश्चाज्जीवति जर्जर देहे

वार्तां कोऽपि पृच्छति गेहे ||

Adi Sankara

English Transliteration

Yaavad vithOpaarjana saktha:

TaavannijaparivaarO raktha:

Paschaajjeevati jarjara dehe

Vaarta kOpi na prchati gEhE

Meaning of the Sanskrit Words

यावद्  yaavad So long as 

वित्त-उपार्जन-सक्तः vithah upaarjana saktha: - one is able to earn money (), [only] Vitta = wealth; Upaarjana = earning / acquiring; Shaktah = capability / vigor

तावत् taavat - until then

निज परिवारः nija parivara: - one’s relations

रक्तः raktha: - remain affectionate

पश्चात् paschaat - later i.e.,when one is unable to earn

जर्जर देहे जीवति jarjara dehe jeevati - one lives in a decript body Jiivati = living (when you are living without earning); Jarjara = feeble/ frail (by disease etcetera), Dehe = in the body;

कोपि न kOpi na - No one

गेहे gEhE - at home

वार्तां पृच्छति vaarthaam prchati - bothers to ask even a word

Meaning in English

As long as there is the capability to earn, so long the kith and kin are attached to you. Later on, when you come to live with an infirm body no one at home cares to speak even a word with you.

Explanation

Man is a social animal, they say. Man seeks security in relationships such as those of family, husband, wife, brothers, sisters or children, in the hope that they will always be with him. Those who sit all around you are called parivara. ParitaH means surround you. You are attached to your parivara, your family, your friends and retinue and feels that the love and attachment is mutual.  But, is this feeling of security/attachment/love eternal or permanent in life time? 

There is a common saying that “There ain't no such thing as a free lunch“. It is a popular adage. [The "free lunch" refers to the once-common tradition of Saloons/Bars in the USA providing a free lunch to patrons who had purchased at least one drink. Many foods on offer were high in salt (e.g., ham, cheese, and salted crackers), so those who ate them ended up buying a lot of beer. You get lunch free if hou have money to buy beer, as simple as that. If not, out you go & you are no more a patron].

We command respect in our corresponding circles of influence as long as we are of use to those around. When our “utility factor” wanes, so does the respect we command.

In our professional careers, we see/have seen several cases of Bosses/CEOs/MDs/Chairmen getting entry refused, the very next day of their exit/retirement at the very same organisations they have contributed and were controlling for years.

When the titles are taken away from us or the process of time diminishes our abilities, fewer people seem to find any value/utility in us anymore. But that is the nature of the world isn’t it?

You are so attached to your parivara, your family, your friends and retinue, but only so long as you are capable of earning and making money. Later on, when you become old and infirm, and are no more capable of earning any money or commanding any respect, what happens to you? Nobody will ask after your welfare, even in your own home. Today, you are receiving a lot of respect from people because you are capable of earning money. Here, money implies all potential.

If one becomes a liability in old age, physical burden and financial burden, with dependence on others, quality of love changes.
People send application to Lord to relieve the person from pain but actually they actually want freedom from that person who is of no more value. They don’t express it but that is the hidden agenda in the mind.

Aren’t we seeing a growing number of parents left at old age homes/elder care institutions, ashrams? Aren’t we seeing increase in domestic litigations for property?

The adage is equally applicable in the case of “parivaar” too. Any source of love from anyone is conditional love. Nobody loves anyone for that person. Everybody loves only for their own well being. If I expect unconditional love from world, it is my Moha – delusion. When I mistake conditional love as unconditional love, world gives me shock one day.

Sri Sankaracarya points out this very crude fact of life here.

Conclusion

It is an undeniable fact that we have eternal love for ourselves. No one dislikes oneself; that love manifests itself as a feeling of happiness/pleasure.

Similarly, the incomparable love, which we have for the incomparable object (vastu), i.e., that love towards the imperishable, eternal, omnipresent Lord, is also imperishable.

Just as the unprocessed love that I have within me does not perish and naturally manifests itself as happiness/pleasure (smile), so is the love of the Lord. When that love is expressed, the dual form it, is devotion and pleasure). If that love is not expressed and experienced within us, that devotion and pleasure that exists within us and we are aware about it, is Bliss. After all the Supreme Reality is nothing but pure existence, pure consciousness and pure Bliss. That is Govindham.

If we understand that happiness/love, we will not seek it outside. This is the essence of this Sloka.

Thus, Adi Sankara tries to clear our closed mind with five strong Hammer strokes by stating clearly that body, material, lust, life and relationship are all impermanent. It is up to us to live our lives.

A word of caution.

“Because of the transitory nature of wealth, fame and name, Shankara asks us to temper the value we place on these frills of life. This is not to say that we must shun wealth and fame. In fact we must enjoy it while it we have it. But we must derive our sense of value and self-worth from something deeper and more permanent. We must find our worth from pursuing our goal of self-development and self-purification. Because the only thing that remains with us is are our spiritual assets which are gained through introspection, reflection and contemplation on the higher values of life”.

Let us absorb this and contemplate our future course of actions. We will get ready for the next strike in the next blog. Until then……

God Bless

சங்கரனின் வைரக் கூடம் – 5 – உறவும் பிரிவும்

உறவும் பிரிவும்

வலைதள தமிழ் ஒலிப்பதிவு தொடரின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

உடல், பொருள், காமம், வாழ்வு,  இவை அனைத்தும் நிலையற்றவை என ஆதி சங்கரர் இதுவரை நமது மூட மனதிற்கு நான்கு செயல்முறைகளாக எடுத்துரைத்துள்ளார். 

நமது மனம் எவ்வளவு மூடமானது பாருங்கள். நான்கு முறைகளை உள்வாங்கியும், நம் மனது தளராமல் கூறுகிறது

“எனக்கு எதற்கு இந்த முயற்சியெல்லாம். எனக்கு உற்றார், உறவினர், சுற்றம், சூழம் எவ்வளவு பேர்கள் எனக்கு. ஏதாவது ஒன்று எனக்கு என்றால் ஓடி வந்து உதவுவார்கள் தெரியுமா? நதி எங்கே போகிறது? கடலைத் தேடி; நாளெங்கே போகிறது? இரவைத் தேடி; நிலவெங்கே போகிறது? மலரைத் தேடி; நினைவெங்கே போகிறது? உறவைத் தேடி” என்று கூறுகிறது நம் மனம். அல்லவா!

உண்மை தான். உற்றார்களும், உறவினர்களும் எவ்வளவு தடவை, எவ்வளவு நேரம் உதவுவர்? விடை கூற முடியுமா?

வாருங்கள். சங்கரனின் வைரக்கூடத்தில் ஐந்தாவது செயல்முறை காத்திருக்கிறது. அதைப் பெற்றபின், இந்தக் கேள்விக்கு பதில், கிடைக்கும்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

यावद्वित्तोपार्जन सक्तः

स्तावन्निज परिवारो रक्तः |

पश्चाज्जीवति जर्जर देहे

वार्तां कोऽपि पृच्छति गेहे ||

ஆதி சங்கரர்

தமிழ் ஒலிபெயர்ப்பு

யாவத்3 வித்தோ பார்ஜன சக்த:

தாவன் நிஜ பரிவாரோ ரக்த: |

பச்’சாஜ்ஜீவதி ஜர்ஜர தே3ஹே

வார்த்தாம் கோபின ப்ருச்சதி கே3ஹே ||

தமிழ் மொழிபெயர்ப்பு

பொருள்தனை ஈட்டும் ஆற்றல் வரைக்கும்

கொள்வர் சுற்றம் பற்றுடன் பிரியம்!

சக்தி இன்றி தளர்ந்திடும் தேகம்

கேட்பார் இல்லை யோக ஷேமம்!!

சமஸ்க்ருத சொற்களின் பொருள்

यावद्  யாவத்3 - எது வரையில்/எதுவரைக்கும்

वित्त-उपार्जन-सक्तः வித்தோ பார்ஜன சக்த: வித்த உபார்ஜன சக்த: - வித்த - பொருள், உபாரஜன - ஈட்டுதல்/சம்பாதித்தல், சக்த: - சக்தி/ஆற்றல்

तावत् - தாவத் - அதுவரையில்/அதுவரைக்கும்

निज परिवारः நிஜ பரிவார: - சுற்றத்தார்

रक्तः ரக்த: - பற்றுடன் பிரியம்

पश्चात् பச்’சாத் - பின்னர் (பொருள் ஈட்ட இயலா நிலை வரும் பொழுது)

जर्जर देहे जीवति ஜர்ஜர ஜீவதி தே3ஹே - ஜீவதி - பொருள் ஈட்ட முடியா நிலையில் வாழ்தல், ஜர்ஜர - முதுமைக் காலத்தில் (உடல் தளர்ந்த காலத்தில்), தேஹே - உடலில்

कोपि न கோபின - ஒருவரும் இல்லை

गेहे gEhE - கே3ஹே வீட்டினில்

वार्तां पृच्छति வார்த்தாம் ப்ருச்சதி - வார்தைகள் கூற (நலம் விசாரிக்க, அன்புடன் பேச)

விளக்கவுரை

பணம் சம்பாதித்துத் தரும் வரையில் மனைவி, மக்கள் அன்புடன் பழகுவர். உடல் தளர்ந்தபின் அவன் வீட்டில் தங்கிவிட்டால், யாரும் அவனுடன் பேசக்கூட மாட்டார்கள். சுற்றத்தினர்களும் சுயநலவாதிகளே என்று உணர்வாய். இதுதான் நேரடியான பொருள் இப்பண்ணிற்கு. இதன் விளக்கத்தை இப்பொது காணலாம்.

மனிதன் என்பவன் ஒரு சமூகப் பிராணி. குடும்பம், கணவன், மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், குழந்தைகள் போன்ற உறவுகளில், அவர்கள் எப்போதும் தன்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் மனிதன் பாதுகாப்பைத் தேடுகிறான். நம்மைச் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் நம் பரிவாரங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வாழ்வில் நம் குடும்பத்தினர், நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்திருக்கின்றோம். அன்பும் பற்றுதலும் பரஸ்பரம் இருப்பதாக உணர்கிறோம். ஆனால், இந்த பாதுகாப்பு/பற்றுதல்/காதல் என்ற உணர்வு, வாழ்நாளில் நிரந்தரமா, நிலையானதா?

நாம் சுற்றியுள்ளவர்களுக்குப் பயன்படும் வரை, நம் தொடர்புடைய வட்டங்களில் நமக்கு செல்வாக்கு/மரியாதை. நம் வாழ்வில், எத்தனை மேலாளர்கள்/உயர் அதிகாரிகள்/ ஆனையர்கள், அவர்கள் ஓய்வு பெற்ற/வெளியேறிய மறுநாளே, அவர்களால் பணியில் சேர்க்கப்பட்ட காவல் தொழிலாளியால் அதே அலுவலகங்களில், நுழைவதற்கு தடை செய்யப்படுகின்றனர் என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

பதவி, பொருள் ஈட்டும் நிலை, அல்லது நம் திறன்களைக் காலத்தின் செயல்முறை குறைக்கும் போது, மக்கள் நம்மில் எந்த மதிப்பையும்/பயனையும் காண மாட்டார்கள். ஆனால் அதுதான் உலக இயல்பு அல்லவா?

அது போல, நம் பரிவாரம், நம் குடும்பத்தினர், நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உறவுகள் தொடர்கதை என்று நாம் கருதினாலும், அது சிறு கதையாக முடியாமல் இருக்க நம் பதவி, பொருள் ஈட்டும் நிலை, அல்லது நம் திறன் உதவுகிறது என்பது உலக யதார்த்தம்.

முதுமைக்காலத்தில், திறன், உடல் நலக்குறைவு அடைந்து, பணம்/பொருள் சம்பாதிக்க வழி இல்லாத நேரத்தில், சொந்த வீட்டில் கூட நாம் ஒரு சுமை. அப்படி, மற்றவர்களைச் சாரந்து வாழும் போது அன்பின் தரம் மாறுகிறது.

அன்றாட வாழ்வில் இந்த யதார்த்தத்தை நிருபிக்க முதியோர் இல்லங்கள் / முதியோர் பராமரிப்பு நிறுவனங்கள், ஆசிரமங்களில் விடப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒன்றே போதுமானது.

ஒரு சிலர், வயது முதிர்ந்து நெடுநாள் நோய்பட்டு இருக்கும் நபரை வலியிலிருந்து விடுவிப்பதற்காக, இறைவனிடம் பிராரத்தனை; ஆனால் உண்மையில் அவர்கள் எந்த மதிப்பும் இல்லாத அந்த வயோதிகனிடமிருந்து விடுதலையை விரும்புகிறார்கள். அவர்கள் அதை நேரடியாக வெளிப்படுத்தவில்லை ஆனால் அதுதான் மனதில் மறைந்திருக்கும் நிகழ்ச்சி நிரல். இதுவும் யதார்த்தமே.

ஆக, யாரிடமிருந்தும் அன்புக்காக ஏங்காதே. இதனை ஆங்கிலத்தில் Emotional Dependence என்பார்கள்.

உணர்வுகளை உலுக்கிடும் உலக நடப்பை நேரடியாக ஸ்ரீ சங்கராச்சாரியார் சுட்டிக்காட்டுகிறார்.

தமிழ் இலக்கியத்தில் உறவு நிலையாமை

திருமந்திரம்

பந்தல் பிரிந்தது, பண்டாரம் கட்டு அற்ற
ஒன்பது வாலும் ஒக்க அடைத்தன,
துன்பு உறு காலத் துரிசுவர மேன்மேல்
அன்புடையார்கள் அழுது அகன்றார்களே.

உடல் என்னும் அழகிய பந்தல் பிரிந்துவிட்டது. உயிர்நிலை அப்போது நிலை குலைந்துவிட்டது. உடலின் ஒன்பது வாயில்களும் ஒன்றாக மூடிக் கொண்டன. துன்பம் தருகின்ற, காலம் என்பதன் முடிவு வந்து சேர்ந்தது. அன்பு கொண்ட உறவினர்கள் அழுவிட்டு அகன்று சென்றார்கள்.

பண்டம்பெய் கூரைபழகி விழுந்தக்கால்
உண்டஅப்பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமுமல்லது
மண்டியவருடன் வழி நடவாதே.

கன்ம வினைப் பயன்களைத் துய்த்த பின் உடல் விழுந்துவிடும். உடன் இருந்து இன்பங்களை அனுபவித்த மனைவியோ மக்களோ உடன் வரமாட்டார்கள் அப்போது நம்முடன். வாழ்ந்திருந்த காலத்தில் நாம் செய்த நோன்புகளின் பலன்களும்,நாம் சேகரித்த ஞானமும் மட்டுமே நம்மைத் தொடர்ந்து வரும்.

ஆர்த்துஎழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர், ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதி இலோரே.

ஆரவாரம் செய்து எழும் சுற்றத்தவரும், மனைவியும், மக்களும், ஊருக்கு வெளியே உள்ள நீர்நிலை வரை வந்துவிட்டு நீங்குவர். வாழ்க்கைக்கு வேராகிய தலையினை மறைத்து எரி மூட்டுவார்கள். நீரில் தலை முழுகிவிட்டுச் செல்லும் இவர்கள் பந்தம் அற்றவர்கள்.

அப்பர் - பதிக எண்: 5.70 கொண்டீச்சரம் குறுந்தொகை

சுற்றமும் துணை நன் மடவாளொடு
பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர்
குற்றமில் புகழ்க் கொண்டீச்சுரவனார்
பற்று அலால் பற்று மற்று இல்லையே

பொதுவாக உலகியலில் காணப்படும் காட்சியை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். தங்களுக்கு பயனுள்ள வரை ஒட்டி உறவாடும் சுற்றத்தார், நம்மால் ஆகவேண்டிய காரியம் ஏதும் இல்லை என்ற நிலை வந்த பின்னர், நம்மைப் போற்றுவதை நிறுத்திவிடுவார்கள். இத்தகைய செய்கைகளுக்கு, மனைவியும் பெற்ற மக்களும் விதிவிலக்கு அல்ல என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இந்த நிலையை நாம் பல இல்லங்களில் காண்கின்றோம். பயன் கருதி பழகும் மாந்தர்கள், நாம் அவர்களுக்கு பயனாக இருக்கும் தன்மையின் அடிப்படையில் நம்முடன் பழகும் விதத்தில் மாறுபாடு கொள்கின்றார்கள். ஆனால் இறைவனுக்கு நம்மால் ஆக வேண்டிய காரியம் ஏதும் இல்லை. அதனால் என்றும், அவனைச் சார்ந்து வழிபடும் அடியார்களிடம் மாறாத அன்பு கொண்டு அவன் காப்பற்றுகின்றான், எனவே இறைவனை விடவும் சிறந்த பற்றுக்கோடு நமக்கு ஏதும் இல்லை என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

ஔவையாரின் மூதுரை பாடல்

ஒருவனது செல்வம் குறைந்து வறுமை அடையும் நேரத்தில், நீர் குறைந்து வறண்டும் நிலையை அடைந்த குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் விலகுவது போல், சுற்றத்தார் அகன்று விடுவார்கள் என்று இந்த பாடல் ஔவை பிராட்டி கூறுகின்றார்.

அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல்
உற்றுழி தீர்வார் உறவு அல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

பட்டினத்தார் பாடல்கள்

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் உந்தன் வாயில் மட்டே
இனமான சுற்றமும் மயான மட்டே வழிக்கே துணை
தினையாம் அளவு எள்ளளவாகிலும் முன்பு செய்த தலந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்கும் சத்தியமே. 7.

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்பு ஒழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே. 8.

மாடுண்டு கன்றுண்டு மக்கள் உண்டென்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டு எனும்படி கேட்டுவிட்டோம் இனிக் கேள் மனமே
ஓடுண்டு கந்தை உண்டு உள்ளே எழும் ஐந்தும் ஓதவுண்டு
தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையும் உண்டே. 9.

உற்றார் அழுது அலுத்தார் உறன்முறையார் சுட்டு அலுத்தார்
பெற்று அலுத்தால் தாயார் பிறந்து அலுத்தேன் பூரணமே

வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே”

சதுரகிரி சித்தர் பாடல்

காயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்
காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!
கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்
கானல்காட் டும்ப்ர வாகம்!

இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழியைப் போன்றது,இந்த வாழ்க்கையானது மலையைச் சுற்றியுள்ள காட்டிலே ஓடுகின்ற ஆற்று வெள்ளம் ஆகும்,அன்புக்கு உரிய மக்கள், உறவினர், தேடிய வீடு, மனைவி ஆகிய இவைகளெல்லாம் கானல் நீர் காட்டுகின்ற வெள்ளம்!

திரை இசைப்பாடல்கள்

உறவு என்றொரு சொல்லிருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்‍கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவு இருக்‍கும் …..வாலி

வீடு வரை உறவு
வீதி வரை மணைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ……. கண்ணதாசன்

முடிவுரை

உற்றார், உறவினர், சுற்றம், சூழம் இவர்களிடமிருந்து வரும் அன்பு நிலையற்றது. எதிர்பார்ப்புகளுடன் நிறைந்தவை அவை.

எனினும், நமக்கு நம் மேல் என்றுமே, எப்பொழுதுமே அளவிலா, அழியாத அன்பு. அந்த அன்பே இன்பமெனும் உணர்வாக வெளிப்படுகிறது. இது மறுக்க முடியாத உண்மை. அல்லவா?

அதைப்போல, ஒப்புயர்வற்ற பொருளின் (வஸ்து) மேல் நாம் வைக்கும் ஒப்புயர்வற்ற பேரன்பு (परमप्रेमं- பரம ப்ரேமம்), அதாவது, அழியா, மாறா இறைவனிடத்தில் செலுத்தும் அந்த அன்பும், அழியாதது. அந்த அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

எப்படி என்னுள் அழியாமல் எனக்கு இருக்கும் பதப்படுத்தப்படாத அன்பு, இயற்கையாக இன்பமாக(புன்னகையாக) வெளிப்படுகிறதோ, (“யத்ர யத்ர ஸுகம், தத்ர தத்ர ப்ரீதி) அப்படி இன்பத்தோடு உறையும் அன்பே இறைவன். அந்த அன்பு வெளிப்படுத்தப்படும்போது, இருமை வடிவம் (அன்பு, இன்பம்); வெளிப்படுத்தாவிடில் நம்முள்ளே தூய இருப்பாய், தூய உணர்வாய் இருந்திடும் அந்த பேரன்பே இறைவன்; அதுவே கோவிந்தம். அது யாண்டும் அழியாதது.

அதை புரிந்து கொண்டால், அதை வெளியில் தேடமாட்டோம். ஆகையால் கோவிந்தனைத் துதி. இது தான் இந்த பண்ணின் சாரம்.

பின் குறிப்பு

“செல்வம், புகழ் மற்றும் பெயர் ஆகியவற்றின் நிலையற்ற தன்மையின் காரணமாக, அதன் மேல் உள்ள பற்றினை பதப்படுத்த வேண்டும் என ஆதிசங்கரர் கூறுகிறார். செல்வத்தையும் புகழையும் நாம் தவிர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. உண்மையில் அது நம்மிடம் இருக்கும்போது அதை அனுபவிக்க வேண்டும். ஆனால் நாம் அவற்றின் மீது வைக்கும் மதிப்பு/பற்றினை, நிரந்தரமான ஒன்றிலிருந்து பெற வேண்டும். அதுதான் இறை நோக்கமுடைய தூய மனம்.

ஏனெனில், பட்டினத்தார் கூறிய போல “ஆவியோடு காயம் அழிந்தாலும், மேதினியில் பாவி என்று நாமம் படையாதிரு”க்க, அந்த தூய மனத்தை இறை நோக்கி செலுத்திப்பெரும் ஆன்மீகச் சிந்தனைகளே நம்மிடம் எஞ்சியிருக்கும் சொத்து, காலனின் அழைப்பிதழ் வரும் பொழுத”.

ஆக, உடல், பொருள், காமம், வாழ்வு, உறவு இவை அனைத்தும் நிலையற்றவை என்று தெளிவாக, ஐந்து செயல்முறைகளால் ஆதி சங்கரர் நம் உள் உறைந்த வைராக்கியமெனும் வைரக்கல்லினைத் தோண்டி, பட்டை தீட்டி மெருகேற்ற முயல்கிறார்.

ஆறாவது செயல்முறையில் சங்கரர் என்ன செய்யப் போகிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.அதுவரை…..

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

சங்கரனின் வைரக் கூடம் – 3 – காமம் நிலையாமை

தமிழ் வலைதல ஒலிப்பதிவுத் தொடர் இணைப்பு (Tamil Podcast Link)

https://soundar53.substack.com/p/3#details

முகவுரை

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்ற இரண்டு முக்கியமான தத்துவங்களை இரண்டு செயல்முறைகளாகப் பெற்ற நாம், இப்பொழுது சங்கரனின் வைரக் கூடத்தில், மூன்றாவது செயல்முறைக்குத் தயாராகுவோம்.

பொதுவாக, நாம் ஆசைப்படும் பொருட்களின் மீதுள்ள பற்று (முறையற்ற ஆசைகள் என்றும் கூறலாம்) விலக வேண்டும் என்றால், அந்த ஆசைப் பொருட்களில் உள்ள குறைபாடுகளைப் பார்ப்பது ஒரு சக்திவாய்ந்த யுக்தியாகும். இதனை வடமொழியில் விஷய தோஷ தர்சனம் என்பர். இந்த யுக்தியை ஆதி சங்கரர், இந்த மூன்றாவது செயல்முறையில் (ஸ்லோகத்தில்) கையாளுகிறார்.

கம்பனின் கவிதையும், வாலியின் கேள்வியும்

இந்த மூன்றாவது செயல்முறையைக் காணும் முன், கம்பன் காட்டும் கவிதைச் சித்திரத்தைக் காணலாம்:

வார் குலாம் முலை, வைத்த கண் வாங்கிடப்
பேர்கிலாது, பிறங்கு முகத்தினான்,
தேர்கிலான் நெறி; அந்தரில் சென்று, ஒரு
மூரி மா மத யானையை, முட்டினான்!

வார் குலாம் முலை – ஒரு அழகியின் கச்சை அணிந்த மார்பங்களின் மீது
பேர்கிலாது வைத்த கண் வாங்கிட – வைத்த கண்களை எடுக்க முடியாமல் அதையே பார்த்துக் கொண்டு நடந்த
பிறங்கு முகத்தினான் – விளங்குகின்ற முகத்தை ஒரு இளைஞன்
நெறி தேர்கிலான் – தான் செல்ல வேண்டிய வழி தெரியாமல்
அந்தரில் சென்று – குருடனைப் போலச் சென்று
ஒரு மூரி மா மதம் யானையை – வலிமை கொண்ட ஒரு மத யானை மேல் சென்று
முட்டினான் – மோதினான்.

அதாவது கச்சை அணிந்த பெரிய மார்பகங்களைக் கொண்ட அழகி அவள்!அவளை வைத்த கண் விடாமல் பார்க்கிறான் அந்த இளைஞன்.அவள் நடக்க, இவன் நடக்க, அவளையே பார்த்து நடந்து கொண்டிருந்த இளைஞன் தான் செல்ல வேண்டிய வழியை விட்டுக் குருடன் நடந்தது போல நடந்து ஒரு வலிமையுள்ள பெரிய மத யானையின் மீது போய் முட்டினான்.ஆவென்று அலறினான். மற்றவர்கள் சிரித்தார்கள் – நடந்தது என்ன என்று தெரிந்து கொண்டு.

இக்கவியை மனதில் கொண்டோ என்னவோ, கவிஞன் வாலி இப்படி கேட்டான்.

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போகும் பாதையை மறந்து போகலாமா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஆதி சங்கரர் உள்ளங்கை நெல்லிக் கனி போல, “உறைக்கும்” உண்மையை எடுத்துரைத்து, நமக்கு விடையளிக்கிறார்.

சங்கரனின் பதில் – சமஸ்க்ருத ஸ்லோகம்

नारीस्तनभरनाभीदेशं

दृष्ट्वा मा गा मोहावेशं |

एतन्मांसवसादिविकारं

मनसि विचिन्तय वारं वारं ||

தமிழ் ஒலிபெயர்ப்பு (Tamil Transliteration)

நாரீ ஸ்தனப4ர நாபீ4 தே3ச’ம்

த்3ருஷ்ட்வா மாகா3 மோஹாவேச’ம் |

ஏதன் மாம்ஸ வஸாதி3விகாரம்

மனஸி விசிந்தய வாரம் வாரம் ||

தமிழ் மொழிபெயர்ப்பு (Tamil Translation)

மகளிர் மார்பகம் மேகலை உறைவிடம்

மயங்கியே கண்டு மனதினில் மோகம்

மாமிசம் கொழுப்புடன் மாறிடும் தேகம்

மனதில் சிந்தனை வேண்டும் வேண்டும்.

ஸமஸ்க்ருத சொற்களின் பொருள்

नारीस्तनभरनाभीदेशं - नारी स्तनभर नाभीदेशं - நாரீ, ஸ்தனப4ர, நாபீ4 தே3ச’ம் - பெண், மார்பகம், மேகலை இடை வெளி

दृष्ट्वा मा गा मोहावेशं - दृष्ट्वा मा गा मोह आवेशं - த்3ருஷ்ட்வா மாகா3 மோஹ ஆவேச’ம் - பாரத்து/கண்டு, அடையாதே/கொள்ளாதே, மோகம்/மயக்கம், உணர்ச்சிவசப்படுதல்,

एतन्मांसवसादिविकारं एतन्मांसवसादि विकारं ஏதன் மாம்ஸவஸாதி3 விகாரம் - இவை மாமிசம், உவர்நீர் முதலான, மாற்றம்

मनसि विचिन्तय वारं वारं - மனஸி விசிந்தய வாரம் வாரம் - மனதில் சிந்திப்பாய் மீண்டும் மீண்டும்

விளக்கவுரை

ஆணினத்தவர்க்கு பெண்ணின் மார்பு (கொங்கை)யும், மேகலை அணியும் இடைப்பகுதியும் காம இச்சையை தூண்டிவிடும். இந்த இச்சை இயற்கை இயல்பு.

உண்மையில், அவ்விரு உடலுறுப்புகள் (அனைத்து உடலுறுப்புகளுமே) வெறும் மாமிசம் மட்டும் உவர்நீரின் (கொழுப்புகளின்) உருமாற்றமே; அவைகளனைத்தும் நிலையானவைகள் அல்ல என்பதால் வெளித்தோற்றத்தால் நிரந்தர இன்பம் அடைய முடியாது என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

இந்த ஸ்லோகத்தின் சாரம் காம மோஹம் தவிர்த்தல். அதாவது உடல்ரீதியான காம இச்சைகள களைவது.

பொதுவாகப் புறப்பகைகளை வெல்லுதல் ஆண்மை என சமூகத்தால் மதிக்கப்படுகிறது. ஆனால், அகப்பகையான காமம், வெகுளி போன்றவற்றை வெல்லுதல்தான் மிகவும் கடினமான ஒன்று. அதனால் முறையற்ற காமத்தை வெல்லுதல், மதிக்கத்தக்க பேராண்மை என்று பாராட்டப்படுகிறது.

ஆண்மையை விட பெரிய சொல் பேராண்மை. அத்தகைய பேராண்மை உடையவன், பிறர் மனைவியை நோக்காது இருப்பவன்.

தமிழ் இலக்கியத்தில் பேராண்மை

திருக்குறள்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு[திருக்குறள், அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை ]

என்ற குறள் இந்த கருத்தை ஒட்டியதே.

சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணியில்

“பெரியவாள் தடங்கண் செவ்வாய்ப் பிறர்மனை பிழைக்கும் மாந்தர் ….. ஆண்பிறந்தார்கள் அன்றே” இந்தக் கருத்தினைப் பிரதிபலிக்கிறது.

கம்ப ராமாயணம்

கம்பனும் இப்பேராண்மையைப் பற்றி கூறுகையில்,

இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி நாளும் நகையுற நாண் இலன்,
பச்சை மேனி புலர்ந்து பழிப்படூஉம்
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ. --- கம்பராமாயணம், பிணிவீட்டு படலம்.

ஆசையின் இயல்பினால் அயலார் மனைவியை விரும்பி (அதனால்) எந்நாளும் பிறர் தன்னை இகழ்ந்து சிரிக்க, வெட்கமற்றவனாய் பசுமையான உடம்பு உலரப் பெற்று பழிப்பை அடைகின்ற இழிவான இவ்வகை ஆண் தன்மையும், சிறந்த குணங்களில் ஒன்றாகச் சேருமா? (சேராது என்றபடி) என்றான்.

நாலாடியார்

நாலடியார், இந்த நற்குணமில்லாருக்கு ஏற்படும் விளைவினைச் சுட்டிக்காட்டி இதே கருத்தினை எடுத்துரைக்கிறார்

செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ –
உம்மைவலியாற் பிறர்மனைமேற் சென்றாரே,
இம்மைஅலியாகி ஆடிஉண் பார்.

நல்லகுணமின்றி, கீழினத்தாரோடு சேர்ந்து, பெரியமார்களை உடைய பெண்களின் தோளிலே முயங்க விரும்பி, ஒருவன் இப்பிறப்பில் தனக்கு உள்ள செல்வம், வலிமை முதலியவற்றால் மற்றவர் மனைவியரை கூடுவாராயின், மறுபிறப்பில் அவர்கள் ஆணும் பெண்ணுமில்லா அலியாகி கூத்தாடி வயிறு பிழைக்க நேரிடும்.

பட்டினத்தார் பாடல்

மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே

மறைகள்

ஒருவரின் மனைவியைத் தவிர மற்ற பெண்களைப் பொறுத்தவரை மற்றும் ஒருவரின் சொந்த மனைவியுடன் சரியான நடத்தையைப் பேணுவதில் இந்த கருத்து பொருந்தும். மேலும், சாஸ்திரங்களில் உள்ள மற்ற அறிவுரைகளும் பெண்களுக்கும் இணையாகப் பொருந்தும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

நமது மறைகள், உண்மையில் மற்றொருவரின் மனைவியை தாயாகவும், மற்றொருவரின் உடைமைகளை அழுக்காகவும், எல்லா உயிர்களையும் தன்னைப் போலவும் பார்க்கும் ஒருவரே தீர்க்தரிசி/ஞானி என்று கூறுகின்றன. (मातृवत् परदारान्स्च परद्रव्याणि लोष्टवत् आत्मवत् सर्वभूतानां यो पश्यति सो पश्यति Maatrvat paradaaranscha paradravyaani loshtavat, aatmavat sarvabhootaanaam yah pasyati sah pasyati).

முடிவுரை

இரண்டு உடலுறுப்புகளை எடுத்துக்காட்டி, இருளென உறையும் நம் அறியாமையை எளிதினில் அறிய வைப்பது, இந்த மூன்றாவது செயல்முறை.  உண்மை என்றுமே உறைக்கும் என்பதை உணர வைக்கும் சொற்கள். உள்வாங்கி உணர்வோம் உட்கருத்தினை. நம் உடல், மன, புத்தி வளாகத்தை உறுதிப்படுத்தி, அடுத்த செயல்முறைக்குத் தயாராகுவோம். அதுவரை……..

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

சங்கரனின் வைரக் கூடம் – 2 – செல்வம் நிலையாமை

தமிழ் வலைதல ஒலிப்பதிவுத் தொடர் இணைப்பு (Tamil Podcast Link)

https://soundar53.substack.com/podcast

முகவுரை

உடலுக்கும், உயிருக்கும் உள்ளது வெறும் குத்தகை ஒப்பந்தமே என்றும், யாக்கை நிலையற்றது என்றும் அறிந்து உணர்ந்து, இரண்டாவது முறையாக சங்கரனின் வைரக் கூடத்திற்கு பட்டை தீட்டி மெருகேற்றிக் கொள்ள வருகை தந்த, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இன்று நாம் அனைவரும் எதிர்கொள்ளும் செயல்முறைக்கு (diamond cutting and polishing process), செல்வம் நிலையாமை என்று பெயர். “ஸரீர அநித்யம்” என்பதை முதல் செயல்முறையில் வழங்கிய ஆதி சங்கரர், “தன அநித்யத்தை” இரண்டாவது செயல்முறை வழியே நம் மூட மனத்திற்கு கொடுக்கிறார்.

இந்த செயல்முறையை உள்வாங்கினால், பணம்/செல்வம் என்பவை, நிரந்தரமான மகிழ்வைத் தேடும் நமக்கு ஒரு கருவிகளே அன்றி அவைகளை அடைவதே நமது குறி அல்ல என்பது ஆழமாகப் பதியும்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

मूढ जहीहि धनागमतृष्णां

कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् ।

यल्लभसे निजकर्मोपात्तं

वित्तं तेन विनोदय चित्तम् ||

தமிழ் ஒலி பெயர்ப்பு

மூட4! ஜஹீஹி த4நாக3ம த்ருஷ்ணாம்

கு1ரு ஸத்3புத்3தி4ம் விஷயவித்ருஷ்ணாம் |

யல்லப4ஸே நிஜகர்மோபாத்தம்

வித்தம் தேன வினோத3ய சித்தம் ||

தமிழ் மொழிபெயர்ப்பு

மூடனே வெல்வாய் செல்வத் தாகம்

மனதினில் தணித்திடும் நல்லறி ஞானம்

மறை வழி ஈட்டிய செல்வம் போதும்

நிறைவடை என்றும் சிந்தையில் செல்வம்

சமஸ்க்ருத சொற்றொடர்களின் பொருள்

முதல் சொற்றொடர்

मूढ - மூட - ஏ அறிவிலியே, ஏ மூட மனமே !

जहीहि - ஜஹீஹீ - விட்டுவிடு, வென்றுவிடு

धनागमतृष्णां = धन + आगम + तृष्णां
1. धन - தன - செல்வம். தனம் என்று சொல்வது, பணத்தால் கிடைக்க கூடிய எல்லா பொருட்கள், வசதிகளைக் குறிக்கும்.
2. आगम - ஆகம - வரவு
3. तृष्णां - த்ருஷ்நாம் - வேட்கை, தாகம், அடக்கமுடியா விருப்பம்,

कुरु सद्बुद्धिं = குரு ஸத்புத்திம் = कुरु + सद्बुद्धिं - வளர்த்திடு நல்லறிவை

मनसि - மனஸி - மனதினில்

वितृष्णाम् - வித்ருஷ்நாம் - வேட்கையின்றி, தாகமின்றி

அதாவது, செல்வத்தின் மேல் உள்ள வேட்கையை வென்று, நல்லறிவை மனதில் வளர்த்திடு என்ற பொருள் இச்சொற் தொடருக்கு.

இரண்டாம் சொற்றொடர்

यल्लभसे - ய்ல்லபஸே= यत् யத்+ लभसे லபஸே - எந்த, அடைவது,

निजकर्मोपात्तं = நிஜகர்மோபாத்தம் = निजकर्मणा उपात्तम् = நிஜகர்மணா + உபாத்தம் = உனக்கு விதிக்கப்பட் வினைகளைப்புரிந்ததால் விளையும்; தனக்கு விதிக்கப்பட்ட வினைகளை, அற வழியில் (தர்ம ரீதியாக) , தனது முற்பிறவி வினைப்பலானக

वित्तं तेन विनोदय चित्तम् - வித்தம் தேந விநோதய சித்தம்
वित्तं - வித்தம் - செல்வம்
तेन - தேந - அவ்வழியில்
विनोदय - விநோதய - மகிழ்
चित्तम् - சித்தம் - மனது

அதாவது, நேர்வழியில் ஈட்டியதாலோ மற்றும் தனது முற்பிறவி வினைப்பலானக அடைந்ததாலோ எந்த ஒரு செல்வத்தை அடைந்திருக்கிறாயோ, அவ்வழிகளில் வந்த அந்தச் செல்வத்தை வைத்து மனமகிழ்வு அடை என்ற பொருள் இச்சொற்றோடருக்கு.

விளக்கவுரை

அன்றாட வாழ்வில் செல்வத்தால் சுகம் கிடைக்கும் என்ற கருத்து நமது மனித இயல்பு. செல்வமில்லையேல் வாழ்வதெப்படி? ஆதலினால் பணத்தாசை ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணம் நமக்கு. 

பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழியை அறிந்த நாம், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை அறிய விரும்புவதில்லை. இந்த தவறான கருத்தினால், பணத்தின் மீது அளவு கடந்த அவா நமக்கு அதிகம்.

மனிதப் பிறவி என்றால் வினைகளைப் புரிந்தே ஆக வேண்டும். கர்மம் பண்ணுவது நமது கடமை. அதுவும் அதில் கிடைக்கும் பலனை பரமனிடம் விட்டுவிட்டு கர்மம் புரியவேண்டும் என நமது மறைகள் எடுத்துரைக்கின்றன.

அப்படி மனதில் பேராசையை வளர்க்காமல் நம் கர்மத்தில் மனதை செலுத்தி அதன்மூலம் தானே கிடைக்கும் பலனை அனுபவிக்க மனதை பழக்கிக்கொள்ள வேண்டும். கர்மபலன், முப்பிறவியிலும், இப்பிறவியிலும் நாம் புரியும் கர்மத்தின் தன்மையை பொறுத்திருக்கிறது. அது நம் வசம் இல்லை.

ஆசை கூடாது என்றோ, பணத்தை தியாகம் செய்யவோ, அதை உபயோகிக்க கூடாது என்றோ இப்பண்ணில் ஆதி சங்கரர் கூறவில்லை. நம் கர்மத்திர்க்கு ஏற்ப கிடைக்கும் தனத்தில் த்ருப்தி கொண்டு சந்தோஷமாக அதை உபயோகித்து மனதை சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள்; அதன் மூலமாகவே மன சாந்தி ஏற்படும் என பொருள் கொள்ள வேண்டும்.

இதுவே இப்பண்ணின் சாரம்.

தமிழ் இலக்கியத்தில் செல்வம் நிலையாமை

செல்வம் நிலையாமையைப் பற்றி எண்ணற்ற விளக்கங்களை, தமிழ் புலவர்கள் அளித்துள்ளனர். அதில் சிலவற்றை ஆய்வோம்.

திருமூலர்

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கு ஓர்வீடு பேறுஆகச்
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே.

முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற செல்வமும், தானே முயன்று ஈட்டிய செல்வமும் அனைத்துமே நீரில் மூழ்கும் படகு போலக் கவிழக் கூடியது. அழியும் இயல்பு கொண்ட மனித உடலுக்கு ஓர் அழியாத சேமிப்பு வீடு பேறு என்பதை அறிந்து கொண்டவர் அழியும் செல்வத்தைப் பெருக்க எண்ணார்.

நாலடியார்

துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால்
தொட்டுப்பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.

குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறி வரும்.

திருக்குறள்

அற்கா வியல்பிற்றுச் செல்வ மது
பெற்றா லற்குப வாங்கே செயல். - 333 நிலையாமை

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்ரஎன்று உணர்த்தப்படுகிறது.

வளையாபதி

வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங்
கள்வரென்(று) இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளில் உறுபொருளை யொட்டா(து) ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோ யெவ்வம் இகப்பவோ. 35

ஒருவர் சேர்க்கும் செல்வமானது வெள்ளம், மறதி, வெற்றியுடைய வேந்தர், நெருப்பு, தாயத்தார், கள்வர் என்று கூறப்படுகின்ற இந்த ஆறு வழிகளாலும் உடையவனது கையினின்றும் மறைவாக ஒழிந்து போகும் இயல்புடையதாகும். ஆதலால் உள்ளீடற்ற நமக்கு உதவாத பொய்யான பொருளாகிய செல்வத்தைப் பற்றாமல் துறந்த சான்றோர் பிறர் இகழ்வதற்குக் காரணமான பெரிய துயரங்களைச் செய்யும் பிறவிப் பிணியாகிய துன்பத்தை நீங்கி வாழ்வர் எனப்படுகிறது.

(உதாரணங்கள் - சென்ற 2015 டிசம்பரில் சென்னையில் மழையினாலும், ஏரிகள் உடைப்பினாலும் ஏற்பட்ட இழப்பு, மறதியினால் நாம் செய்யும் தவிர்க்கக்கூடிய செலவுகள், வேந்தன் எனும் அரசு, மதுபானம் விற்று மக்கள் சம்பாதிப்பதை சேமிக்க விடாமல் குடிபோதைக்கு ஆளாக்கி விடுவது, அங்கங்கே வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகளால ஏற்படும் பெரும் நட்ம், தாயாதிக்காரர்களாகிய அண்ணன் தம்பிகள் வழக்கு, வீடு, வங்கிகளில் கொள்ளை என நாம் இவைகளைக் கண்கூடாகக் காண்கிறோம்).பொருள் முயன்று ஈட்டிய போதும் நம்மை விட்டு அகலுதற்குப் பலவேறு வழிகளையும் உடைத்தாம். ஆகவே அதனை ஈட்டல் பயனின்றாம். பொய்யாகிய அப்பொருளின்பாற் பற்று விட்டவர்களே பேரின்பம் எய்துபவர் என்பதாகும்.

சித்தர் பாடல்கள்

“தேடிய செம்பொன்னும் செத்தபோது உன்னோடு
நாடி வருவதுண்டோ
போம்போது தேடும் பொருளில் அணுவேணும்
சாம்போது தான் வருமோ

என்ற பாடலில் நாளும்நாளும் தேடிய செல்வங்கள் யாவும் சாவும் போது துணைக்கு வாரது. ஒரு மனிதன் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும் கடைசியில் அவனுக்கு மண் மட்டுமே சொந்தமாகும்.

செல்வம் நிலையாமை குறித்து பாம்பாட்டிச்சித்தர் ,கூறுகையில்,

“மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ ” (பாம்.சித்,பா. 44)

என்ற பாடலில் மலைபோன்ற செல்வங்களை வைத்திருந்தாலும் எமன் வந்து அழைத்தபின் பயனாகுமா ?என்று கேள்வி எழுப்புகிறார்

நாட்டுப்பாடல்

வாழ்வே நிலையற்றது எனக் கூறுகையில் அதில் ஒருவன் ஓடித்தேடி சம்பாதிக்கும் செல்வமும் இறுதி காலத்தில் துணைவராது, சகடம் எனச் சென்று கொண்டே இருக்கும் தன்மையானது என்பதை,

''பஞ்சு பருத்தி எடுத்து - அதைப்
பேரான மணையிலே ஊட்டி அரைத்து
நெஞ்சக் கருத்தாலே நூத்து - அதை
நேரோடும் பாவில் ஓடி நெய்தாலும்
நாலு முழத்தில் ஒரு துண்டு - அதில்
நாலைந்து பக்கமும் பீத்தலும் உண்டு
பாதியைப் பறையன் கிழித்தான் - அதில்
பகுபாதி அம்பட்டான் கொண்டோடிப் போனான்
அக்கினி தேவுக்குப் பாதி - இந்த
அழகான கட்டைக்குப் போத்தப்பத்தாது''

என்ற பாடல் எடுத்துரைக்கின்றது.

முடிவுரை

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.

நாம் செல்வம் உடையோம் என்ற கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத சிற்றறிவுடையோரின் பெரும் செல்வம், இரவில் கருமையான மேகம் வாய் திறப்பதால் உண்டான மின்னலைப் போலத் தோன்றி, இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்!

ஆதலினால், துதி கோவிந்தனை, துதி கோவிந்தனை, கோவிந்தனைத் துதி மூட மனமே என்று எடுத்துரைக்கிறது இந்த இரண்டாவது செயல்முறை.

செல்வத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஆதி சங்கரர் கூறுகிறார் என்று தவறான முடிவிற்று நாம் வரக்கூடாது. தங்கள் சொந்த நலனுக்காக கண்மூடித்தனமான ஈடுபாட்டிற்கு எதிரான அறிவுரையாக இந்த இரண்டாவது செயல்முறையை கவனமாக உட்கொள்ள வேண்டும்.

உள்ளுணர்வோம். அடுத்த செயல்முறை என்னவென்று புது வருட முதல் நாள் (01-01-2023) அன்று அறிவோம். அதுவரை

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

Sankara’s Smithy- Strike 2 – The “Wealth”y Blow

Vanishing Wealth

Link to the Tamil Podcast

https://soundar53.substack.com/podcast

Introduction

Welcome to Sankara's Smithy, the Forge Shop where we have commenced our transformation process by receiving the first hammer blow. The hammer did  strike the very core of our misbelief  that we are nothing without our body and our physical body is permanent. It shatters that misconception.

Now comes the second hammer blow. This deals with the impermanence of wealth - “Dhana” as we call it. This blow will remove our wrong notions about acquisition, storage and distribution of wealth. We will realise that wealth is after all a “means” and not an “end”.

Sanskrit Verse

मूढ जहीहि धनागमतृष्णां

कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् ।

यल्लभसे निजकर्मोपात्तं

वित्तं तेन विनोदय चित्तम् ||

Adi Sankara

English Transliteration

Mooda jaheehi dhanaagama trushnaam

Kuru sadbuddhim manasi vitrshnaam

YallabhasE nija karmOpaattam

Vittam tEna viNodaya chittam

Meaning in English

Oh ignorant ! Win over the thirst for the inflow of wealth. In your mind develop detached noble thoughts. Rejoice your mind
with that wealth which is obtained with your own efforts or karma.

Explanation

Meaning of the Sanskrit Words 
1. मूढ - Mooda - Oh! Ignorant mind.

2. जहीहि - jaheehi - Win over

3. धनागमतृष्णां = dhanaagama trushnaam - धन + आगम + तृष्णां
a) धन - dhana - wealth - This includes money and all worldly things.

b) आगम - aagama - receipts/inflows

c) तृष्णां - trushnaam - thirst, yearn, uncontrolled desire

4. कुरु सद्बुद्धिं - Kuru sadbuddhim - develop noble thoughts

5. मनसि - manasi - in the mind

6. वितृष्णाम् - vitrshnaam - detached, not thirsty

7. यल्लभसे - YallabhasE - यत् yat + लभसे labhase - which is + obtained

8. निजकर्मोपात्तं - nija karmOpaattam - निजकर्मणा उपात्तम् - nija + karma + upaattam - with your own efforts. It means that whatever actions that are prescribed to oneself by the scriptures and what you are destined to perform as residual fruits of actions from your previous births.

9. वित्तं तेन विनोदय चित्तम् - Vittam tEna viNodaya chittam - wealth (vittam) , that (tEna), rejoice (vinodaya) , mind (chittam) - rejoice your mind with that wealth)

The philosophy behind these words

As a householder, one has to earn money and acquire various possessions to support one’s family and also to meet one’s obligations to society.   

The great poet Tiruvalluvar said that those without possessions do not really have a world here — பொருளில்லாற்கு இவ்வுலகு இல்லை (“porulillaarukku ivvulaku illai”).

It is human nature to think that wealth brings happiness in everyday life. This thinking is due to the fear that how one can one live without wealth.

While we accept proverbs which highlight the importance of wealth/money, we conveniently choose to forget the fact that anything in excess is a poison. Because of this misconception, we have more money cravings.

The first sentence of this Sloka can be misinterpreted as Adi Sankara holding worldly pursuits in such disdain as to call everyone shun wealth, worldly pursuits and opt for sanyaasa.

No, the approach towards wealth is brought out in the second sentence.

As an admonition against indiscriminate indulgence in wealth for their own sake at the expense of one’s growth into a higher plane, Sankara “advices to keep one’s pursuits legitimate and in conformity with dharma, making adequate room for the contemplation of higher goals”.

Simple living & great thinking is the need of the hour.

Tamil literatures like THIRUKURAL, Naaladiyaar, Thirumanduram, Valayapathy etc have given innumerable explanations including separate Chapters on the impermanence of wealth. A few of them are highlighted in the Tamil Version of this blog.

Conclusion

Adi Sankara drives home the point that wealth like our body is not eternal and is perishable. It is not an end in itself and cannot be the goal of our life. It is only a means to lead a  Dharmic life to achieve our higher goal of sorrows free permanent happiness. 

What a great impact it will have on our lives, if only we could absorb this second strike and start our journey with this fresh rethinking.

With that rethinking, let us proceed to the next strike which will be on the first day of the new year (01-01-2023).

Until then, take care. Introspect and turn a fresh page in life.

God Bless