பிறவிக் கடலினின்றும் கரையேற நிச்சயித்த பெரியோர்கள் அவர் தம் துணையாருக்கும் பகவானின் பஞ்ச முகங்களில் தென்னோக்கியதான அகோர முகத்தை சரணமடைந்து முக்தி யடைகிறார்க்ள். இறைவனின் தென்திசை முகத்திற்கு அகோரம் (அ கோரம் – கோரமில்லாத, ஸாந்தம்) என்று பெயர். இதனை நான் சார்ந்திருக்கிறேன் என்கிறார் அப்பையர்.
அப்பையர், பரத்வாஜ கோத்திரத்தை சார்ந்தவர். பரத்வாஜர் அகோரத்தை வழிபட்டு உய்வு பெற்றவர். தானும் அதே வழியில் இறையினை வழிபட முயல்கிறேன் என்கிறார். கோபத்தைக் கட்டுப்படுத்துவது அமைதி, ஸாந்தம். எனவே பாஹி, அதாவது (அகோரம் – அமைதியைக் கொடுத்து) என்னையும் காப்பாயாக என்கிறார்.
ஏன் அப்படி கூறுகிறார் ? “ஹஸ்த ஆலம்ப ப்ரபதனம் ப்ராப்யதே” அதாவது பாழுங்கிணற்றில் விழுந்து, அழுது அழுது துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் அவருக்குப் பற்றிக்கொள்ள இறைவன் நீட்டிய கை கிடைத்தது என்பதனால் என்கிறார்.
இதன் கருப்பொருள் என்ன ? மெய்யறிவைப் பெற்றதனால், பயமேதுமில்லை என்பதனைக் குறிப்பது ஆகும். மெய்யறிவு பெற்றோர்க்கு அனைத்தும் ஆன்மா, அனைத்திலும் ஆன்மா என்று அறிந்தபின், யாரிடமிருந்தும், எவையிடமிருந்தும் அச்சமோ, கவலையோ இல்ல என உபநிஷத் மந்திரங்களும், பகவத் கீதையும் எடுத்துரைக்கின்றன.
எந்தப் பாழுங்கிணறைக் கூறுகிறார் அப்பையர்? ஸம்ஸாரம் எனும் அதாவது இந்திரிய ஸுகம், உலக உறவுகள் என்பதே பெரும் (“மஹத்”) பாழுங்கிணறு (“மஹதி அந்தகூபே”). அப்படி விழுந்து “விஷீதன்” என்று அவர் கூறுவது, அதாவது அழுது அழுது என்று கூறுவது அவரது துன்பத்தின் வெளிப்பாடு (“விஷீத”). வெளிப்படாத துன்பத்தை “ஷோக: என்றும் துன்பத்தின் வெளிப்பாடு ‘விஷீத’ என்றும் கூறப்படுகிறது வடமொழியில்.
நாயிற் கடையாய்க் கிடந்த அடையேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே!
என்ற மாணிக்கவாசகர் உரை, இவரது நிலைக்கு ஒப்பு.
சரி, சம்சாரம் எனும் பாழுங் கிணற்றில் ஏன் விழுந்தார் என கூறுகிறார் ? வேதங்களில் கூறப்பட்டுள்ள கர்ம, ஞான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது கடினம் என்பதனால், பாபத்திலேயே ஈடுபாடு உள்ள மனதை அடக்கமுடியாமல் வீழ்ந்திட்டேன் என்கிறார் அப்பையர்.
கருத்துரை
“கர்மாவைச் செய்து சுத்தியடைவதும் ஞானத்தைச் சம்பாதிப்பதும் சிரத்தையினாலும் விடாமுயற்சியினாலும் காலக்கிரமத்தில் ஸாதிக்க வேண்டுவன வாதலால் சோம்பேறியும் சபல புத்தியுள்ளவனுமாகிய என்னால் அஃதெல்லாம் நிறைவேற்ற முடியாத காரியம் என்பது திண்ணம். துர்வாஸனையினால் தடுக்கப்பட்ட காரியங்களில் ஊக்கமுடைய என் மனத்தையே என்னால் திருப்பமுடியவில்லையே. இந் நிலையில் ஸம்ஸாரமாகிற பாழுங்கிணற்ற்றில் பரிதபிக்கும் என்னைக் கரையேற்ற உன் கைப்பிடி கிடைத்திருப்பதால் இனி எனக்கு பயமில்லை”.
This Sloka presents Goddess Lakshmi who shines in all Her splendour in front of all the devotees who have obtained “Sarupya Mukti” as described in the earlier Slokas and gathered at Vaikunta Loka.
Goddess Lakshmi is projected as unsteady in nature while dealing with her devotees. We see in our daily lives, some who become overnight millionaires and somewho became paupers from being extremely rich. We have heard “rags to riches” stories and vice versa too. Unpredictability being the trade mark of Goddess Lakshmi, her form is quite often compared to lightning.
The Sri Suktam (or Shri Suktam) is an ancient and powerful Vedic hymn of sixteen verses found as a supplement to the Rig Veda, dedicated to invoking the divine Mother Goddess in the form of Lakshmi, the embodiment of prosperity and abundance (Sri).
Narayana Bhattathri in this Sloka 6, keeps this essence of Sri Suktam in his mind, when he describes the divine beauty of Goddess Lakshmi.
Sanskrit Verse
नानादिव्यवधूजनैरभिवृता विद्युल्लतातुल्यया विश्वोन्मादनहृद्यगात्रलतया विद्योतिताशान्तरा । त्वत्पादांबुजसौरभैककुतुकाल्लक्ष्मी: स्वयं लक्ष्यते यस्मिन् विस्मयनीयदिव्यविभवं तत्ते पदं देहि मे ॥६॥
yasmin vismayaniiyadivyavibhavaa tatte padaM dehi me ||
Meaning of the Words
नाना-दिव्य-वधू-जनै: – by various divine damsels
अभिवृता(who is) – attended
विद्युत्-लता-तुल्यया – (who is) like a streak of lightning
विश्व-उन्मादन-हृद्य-गात्र-लतयाthe – world is enchanted and captivated by (whose) slender and charming form
विद्योतित-आशान्तरा – (who) illumines the quarters
त्वत्-पाद-अम्बुज-सौरभैक-कुतुकात् – to Thy lotus feet fragrance being attached to
लक्ष्मी: स्वयं लक्ष्यते – where Laxmi herself is seen
यस्मिन् – in which (Vaikunth)
विस्मयनीय-दिव्य-विभवं – in astounding divine riches (which) aboun
dतत्-ते पदं देहि मेthat – Thy abode grant me
Explanation
O Lord! That abode of Thine Vaikunth, where Laxmi Thy consort resides, is attended to by various celestial damsels. Her, Laxmi’s, slender and beautiful form is like the streak of lightening which enchants and captivates the whole world and enlightens the quarters. She being deeply attached to the fragrance of Thy lotus feet is herself always there, in Vaikunth, which abounds in astounding divine riches. O Lord that abode of Thine grant to me.
முகவுரை
இந்த ஸ்லோகம், முந்தைய ஸ்லோகங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி “சாருப்ய முக்தி” பெற்று வைகுண்ட லோகத்தில் கூடியிருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் முன்னால், தனது முழு மகிமையிலும் பிரகாசிக்கும் லட்சுமி தேவியை முன்வைக்கிறது.
லட்சுமி தேவி தனது பக்தர்களுடன் பழகும்போது நிலையற்ற தன்மை கொண்டவராகக் காட்டப்படுகிறார். நம் அன்றாட வாழ்வில், சிலர் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாகவும், சிலர் மிகவும் பணக்காரர்களாக இருந்து ஏழைகளாகவும் மாறியதைக் காண்கிறோம். கணிக்க முடியாத தன்மை லட்சுமி தேவியின் வர்த்தக முத்திரையாக இருப்பதால், அவளுடைய வடிவம் பெரும்பாலும் மின்னலுடன் ஒப்பிடப்படுகிறது.
ஸ்ரீ சூக்தம் என்பது ரிக் வேதத்திற்கு கூடுதல் இணைப்பாக காணப்படும் பதினாறு வசனங்களைக் கொண்ட ஒரு பழமையான மற்றும் சக்திவாய்ந்த வேத மந்திரம். இது செழிப்பு மற்றும் வளம் இவைகளின் உருவகமான (சமஸ்க்ருதத்தில் இவை “ஸ்ரீ” என்ற சொல்லாகும்) லட்சுமியின் வடிவத்தை ஸ்ரீ சூக்தம் விவரிக்கிறது.
நாராயண பட்டத்ரி, லட்சுமி தேவியின் தெய்வீக அழகை விவரிக்கும்போது, ஸ்ரீ சூக்தத்தின் இந்த சாரத்தை மனதில் வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது
யஸ்மிந் விஸ்மயநீயதி₃வ்யவிப₄வம் தத்தே பத₃ம் தே₃ஹி மே || 6||
தமிழாக்கம்
பணிவிடைபுரி பல தேவ கன்னிகை புடைசூழ கொடி மின்னலொப்ப, உலகு கவர்ந்து மயக்கிடும் மென்மை உடல் வனப்புடனே ஒளிர்விக்கும் நிலையிலாத் திருமகள் உன் கமல மலர் பாத நறுமணம் நாடி நிலைத்திட்டு ஒளிர்விடும் வியக்கிடும் வளம் நிறை வைகுந்தமதில் புகலிடம் தந்திடுவாய் அடியேனுக்கு !! 7.6
விளக்கம்
அந்த வைகுண்டத்தில், ஸ்ரீ மகாலக்ஷ்மியானவள், தேவப்பெண்களால் சூழப்பட்டு, மின்னல் கொடி போன்ற அழகிய கொடி போன்ற உடலால் திக்குகளைப் பிரகாசிக்கச் செய்கிறாள். தங்கள் பாதத் தாமரையின் வாசனையை முகர்வதில் உள்ள ஆசையினால் அங்கு எப்போதும் காணப்படுகிறாள். அத்தகைய தங்கள் ஸ்தானமான வைகுந்தத்தை எனக்குத் தந்தருள வேண்டும்.
ஶிவ - மங்களமானவரே த்வயி - தங்களிடத்தில் தாஸ: - அடிமையாக அஸ்மின் - இருக்கிறேன் இதி - என்று நித்யஸித்தம் - எப்போதும் உறுதியாக மயா - என்னால் நிவேத்யம் - தெரிவிக்கப்பட வேண்டுமா அஹம் - நான் நிர்கதி - கதியின்றி ஸம்ப்ரமாமி - அலைகிறேன் (உழல்கிறேன்) யேதத் - இதனை த்வமபி - தாங்களும் ஜாநாஸ- அறிவீர் நாத - தலைவனே தே - தங்களிடத்தில் மம - எனக்கு விஜ்ஞாபநீயம் - தெரிவிக்க, வேண்டிட அந்யத் - வேறு கிமபி - ஏதொன்றும் நாஸ்த்யேவ - இல்லையே தீநவ்ருத்தே - எளியோன் மே - என் ஶரணவரணம் - திருவடி தேர்தலை (சரணாகதி பிராரத்தனையை) காருண்யாந்- கருணையுடன் க்ருஹாண - ஏற்பீரே
விளக்கம்
சிவ பெருமானே ! தங்களின், அடிமை யான் என எப்போதும் உறுதியாக என்னால் தெரிவிக்கப்பட வேண்டுமா என்ன ! நான் கதியின்றி அலைகிறேன் (உழல்கிறேன்) என்பதனை தாங்களும் அறிவீர்.தலைவனே ! தங்களிடத்தில் எனக்கு தெரிவிக்க, வேண்டிட வேறு ஏதொன்றும் இல்லையே ! எளியோன் என் திருவடி தேர்தலை (சரணாகதி பிராரத்தனையை) கருணையுடன் ஏற்பீரே !
ஸ்வாமி! நான் உன் தாஸன், உன்னைத் தவிர வேறு கதி எனக்கு இல்லை, என்பதைத் தானே நான் உன்னிடம் சொல்லிக்கொள்ள முடியும். ஆனால் நான் உன் தாஸன் என்பது சாச்வதமாய் ஏற்பட்ட நிலை. ஆதலின் நான் சொல்லிக்கொள்ளாமலே நீ அறிந்த விஷயம். நான் திக்கற்றவனாய் பரிதபிக்கும் நிலையில் காப்பவரின்றிச் சுழன்று கொண்டு வருகிறேன் என்பதும் முற்று முணர்ந்த உனக்குத் தெரியாததில்லை. இவ்விதம் பார்க்குங்கால் நான் உன்னிடம் தெரிவித்திக் கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது? ஆகையினால் கருணையை முன்னிட்டு மிக்க பரிதாப நிலையிலிருக்கும் என்னுடைய சரணாகதியை ஏற்றுக் கொள்வாயாக.
பொறி வென்ற யோகியரின் பெரு முயற்சித் துதிப்பொருளாய், அவர்தம் இறுதி மூச்சுக் காற்று முடியும் தருணமதில், தானே முன்நின்று முக்திக்கு வித்தாகும் மும்மல அச்சம் போக்கிடும் முழுமை அறிவு உரைத்திடும் மும்மறைக் கருவுரை ஆசானுன் மும்மலர்ப்பாதம் பணிந்திடுவேன் எப்போதும் மலையோனே !! 19
சொற்களின் பொருள்
கிரிஶ - மலையோனே விஜிதகரணைர் - பொறிகளை வென்றவர்களான யோகிபி - யோகிகளால் யத்நாத் - பெரு முயற்சியால் த்யாதஹ - தியானிக்கப்படுகின்ற யஹ - எந்த தேவஹ - இறைவன் விமுக்த்யை (விம்ருக்ய:) - மோக்ஷத்தின் பொருட்டு (தேடப்படுகின்ற) தேப்ய: - அந்த யோகிகளுக்கு ப்ராண உத்க்ரமண ஸமயே - பிராணம் உடலிலிருந்து கிளம்பும் சமயம் ஆத்மநா ஏவ - தானே ஸம்நிதாய - காட்சி கொடுத்து (உபதேசித்து, மோக்ஷத்தை அளிக்கிறார்) பவபயஹரம் - பிறவித் துன்பமாகிய அச்சத்தை நீக்குகின்ற தாரகம் - சம்சாரத்தைக் கடக்கின்ற தத் ப்ரஹ்ம - அந்த (அகண்டமான) மெய்ப்பொருளை வ்யாசஷ்டே - உபதேசிக்கிறாரோ தம் - அத்தகைய ப்ரஹ்மவித்யாகுரும் - மெய்யறிவு புகட்டும் ஆசானாகிய த்வாம் - உம்மை அஹம் - நான் ஸததம் - எப்போதும் ஸேவே- வழிபடுகிறேன்
விளக்கம்
பொறிகளை வென்றவர்களான யோகிகளால் பெரு முயற்சியால் தியானிக்கப்படுகின்ற, மோக்ஷத்தின் பொருட்டு தேடப்படுகின்ற, எந்த இறைவன் அந்த யோகிகளுக்கு பிராணம் உடலிலிருந்து கிளம்பும் சமயம் தானே காட்சி கொடுத்து (உபதேசித்து, மோக்ஷத்தை அளிக்கிறார்) பிறவித் துன்பமாகிய அச்சத்தை நீக்குகின்ற சம்சாரத்தைக் கடக்கின்ற அந்த (அகண்டமான) மெய்ப்பொருளை
உபதேசிக்கிறாரோ, அத்தகைய மெய்யறிவு புகட்டும் ஆசானாகிய
உம்மை நான் எப்போதும் வழிபடுகிறேன் என்று பிராரத்திக்கும் தீக்ஷிதர், இந்த ஸ்லோகத்தில் மறைமுகமாக, இந்திரிய நிக்ரஹம் செய்ய முடியாத, தர்மத்தை அனுஷ்டிக்க இயலாதவனாக நான் உனைச் சரணடைகிறேன் கூறுகிறார்.
பிரம்மவித்யை என்ற சொல்
ஜீவனை ப்ரம்மன் என்று புரியவைக்கும் வித்யை.
ஜீவாத்மாவை, பரமாத்மாவாகப் புரியவைக்கின்ற வித்யை.
இறைவனைப் பற்றிய அறிவு
உயிர் இறைவனாகவே இருக்கிறது என்ற அறிவைப் புகட்டுகின்ற வித்யை. (“ஜீவோ ப்ரம்மைவ நா பரஹ”)
த்வைத பக்தி செய்தவனுக்குத்தான் அத்வைத ஞானத்தை உபதேசிக்க முடியும்.
என்றவைகளைப் பற்றியது.
இந்த ஸ்லோகம் நமக்கு கூறுவது:
யோகியாக இருத்தல்.
புலனடக்கம் பழகுதல்.
விடாமுயற்சி செய்து இறைவனை தியானித்தல்
அவ்வாறு தியானிப்பவர்களுக்கு, இறைவனே வந்து அகண்ட ப்ரம்மோபதேசம் செய்வார்.
na tatra sūryo bhāti na candratārakaṃ nemā vidyuto bhānti kuto’yamagniḥ | tameva bhāntamanubhāti sarvaṃ tasya bhāsā sarvamidaṃ vibhāti || 15 ||
Katopanishad (2.2.15) clearly brings out that “The sun does not shine there; nor do the moon and the stars, nor do these lightnings shine. How could this fire? Him shining, all shine after. All this shines by His light”.
This has been restated in Bhagwad Gita (15.6) too by Lord Krishna. Mundaka Upanishad (2.2.11) too states this.
This “causeless cause”, the omniscient, omnipotent, infinitely blissful, self effulgent, eternally existing “consciousness” is what the Scriptures describe as “Parama Padam”, “Vishnu Padam”, “Purushartha Lakshyam (goal of human endeavour). This is what is the ultimate destination called “Moksham”. This indeed is Sri Vaikuntam, the abode of Lord.
In this Sloka, Bhattathri provides an indication of this.
भाते जगद्भ्य: बहि:- (which) shines beyond all the fourteen worlds
शोक-क्रोध-विमोह-साध्वसमुखा:- sorrow, anger, delusion, fear etc.
भावा:-तु दूरं गता: – (such) mental modifications are far beyond
सान्द्रानन्दझरी च – and the torrent of supreme bliss
यत्र परम-ज्योति:-प्रकाशात्मके – where there is the splendour of the supreme light of consciousness
तत्-ते धाम – that abode of Thine
विभावितं – (was) shown (to Brahmaa)
विजयते – shining
वैकुण्ठरूपं – as the Vaikunthloka
विभो – O All pervading Lord!
Explanation
Oh All pervading Lord!
Thy abode Vaikunth is located beyond the fourteen worlds, where Maayaa has no influence and where the modifications of the mind, like sorrow,anger delusion fear are left far behind,such is. It is full of supreme bliss and is engulfed with the constant flow of bright effulgence. That shining divine abode called “Vaikunta”, Thou showed to Brahmaa.
என்கிறது. அதாவது, “ஆத்ம ஸ்வரூபமாக இருக்கக் கூடிய ப்ரம்மத்தை சூரியன், நிலவும், நட்சத்திரங்களும் ஒளிர்விப்பதில்லை. இந்த மின்னலும் ஒளிர்விப்பதில்லை. அப்படியிருக்க, இந்த அக்னியானது எப்படி? (ஒளிர்விக்க இயலும்?). எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டு, தன்னைத்தானே விளங்கிக் கொண்டிருக்கிற அந்த மெய்ப்பொருளைச் சார்ந்தே (சூரியன் முதலான) அனைத்தும் (அனைத்திலும் புகுந்து) அவற்றை ஒளிர்கின்றன (விளங்கச் செய்கிறது). அதனுடைய (மெய்ப்பொருளினுடைய) ஒளியால்தான் (ஆத்ம சைத்தன்யத்தால்தான்) இவை (சூரியன், நிலவு, நட்சத்திரம், மனம், புத்தி’ யாவும் விதவிதமாக ஒளிர்கின்றன” என்கிறது இந்த வேத மந்திரம்.
இதே மந்திரம், முண்டக உபநிஷத்திலும் (2.2.11) உள்ளது. பகவத் கீதை (15.6) “ந த1த்3பா4ஸயதே1 ஸூர்யோ ந ஶஶாங்கோ1 ந பா1வக1:….. “சூரியனோ, சந்திரனோ, நெருப்போ என்னுடைய அந்த உன்னத இருப்பிடத்தை ஒளிரச் செய்ய முடியாது என்று இந்த மந்திரத்தின் சாரத்தையே கூறுகிறது.
அனைத்திற்கும் ஆதாரமான, காரணமேதுமிலா காரணமான ப்ரம்மமே, பரமபதம், விஷ்ணுபதம், மோக்ஷம், முக்தி, வீடுபேறு என்றெல்லாம் அழைக்கப்படும் தன்னொளிரான (“ஸ்வயம் ப்ரகாஸம்”) , பேரின்ப (“ஆனந்த”), தூய உணர்வின் (“ஸுத்த சைதன்யம்”) இருப்பு (“ஸத்”). ஒன்றே சச்சிதானந்தம் (சத், சித், அனந்தம்). அதுவே இறையின் இருப்பு. அதுவே ஶ்ரீவைகுந்தம். இதனைத்தான் இந்த ஸ்லோகத்தில், பட்டத்ரீ கோடிட்டுக் காட்டுகிறார்.
தமிழில் ஒலிபெயர்ப்பு
மாயா யத்ர கதா₃பி நோ விகுருதே பா₄தே ஜக₃த்₃ப்₄யோ ப₃ஹி:
ஸ்மரஹர - மன்மதனை எரித்தவனே, காமனை எரித்தவனே, ஆசையை அழித்தவனே யஹ - எந்த பரமேஸ்வரன் ஏக: - ஒருவராகவும் சிதசிததிக: - சித் அசித அதிக: - ஜீவன் ஜடம் இவற்றிற்கு வேறானவராகவும் ப்ரஹ்மாதீந் - பிரம்மன் முதலான ஸர்வாந் பஸுந் - அனைத்து உயிரினங்களையும் மோஹபாஶேந - மோஹம் எனும் கயிற்றால் பத்த்வா - கட்டி ஆத்மக்ருத்யம் - அவரவருடைய கடமைகளை காரயித்வா - செய்யுமாறு செய்து ய: ச - எந்த பரமேஸ்வரன் ஏதேஷு - இவர்களுள் ஸ்வபதஶரணாந்வித்யயா - தன் திருவடிகளை சரணடைந்தவர்களை வித்யயா - மெய்யறிவினால் மோசயித்வா - விடுவித்து ஸாந்த்ராநந்தம் - ஒப்புயர்வற்ற பேரின்பத்தை பரம் - பரமனின் தாம - ஸ்வரூபத்தை (மேலான இருப்பிடத்தை, மோக்ஷத்தை) கமயதி - அடையும்படி செய்கிறாரோ (உணரத்துகிறாரோ) தம் த்வாம் ப்ரபத்யே - அந்த உம்மை முழுமையாக சரண்டைகிறேன்.
விளக்கம்
சிதசிததிக: என்பது இறையின் இலக்கணம். உயிர்களையும், உயிரற்றவைகளையும் தன் உடலாகக் கொண்டு, அந்த உடலுக்கு வேறாக இருப்பவரே இறைவன். அவருக்கு சமமாகவோ, உயர்வாகவோ யாரும் இல்லை.
அவரே குருவாக வந்து (வித்யையா மோசயித்வா) அறிவால் உணர்த்துகிறார். கோகழி ஆண்ட குருமணிதன் தாழ் வாழ்க என்கிறார் மாணிக்கவாசகர்.
பிரம்ம தேவன் உத்தமமான பசு. இந்த பசுவான படைக்கும் கடவுள் பரமனால் படைக்கப்பட்டார்.
பசு என்றால் உயிரினம் என்று பொருள். விலங்கினமான பசு, புல் உண்டு, விவேகமின்றி, தன்னை வேலை வாங்கும் மனிதர்களுக்கு அடிமையாகி பாரமிழுத்தல் முதலிய காரியங்களில் புரிந்து, க்லேசமும் துக்கமுமடையும்.
அவைகளைப்போல, அஜ்ஞானக் கயிற்றால் கட்டி, ஜீவர்களை இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் கட்டுண்டு , வினைகள் புரிந்து வினைப்பலன்களை அடைய வைக்கின்றான் ஆண்டவன். இந்த ஜீவன்களை கட்டுவதும் அவிழ்த்து விடுவதும் பரமேஸ்வரனே.
இந்த ஜீவன்களிடையே எவன் உன்னைச் சரண மடைகின்றானோ அவனுக்கு ஞானத்தை அளித்து அவனுடைய கட்டை அவிழ்த்து விட்டு நித்யானந்த பரிபூர்ணமான உன்னுடைய அப்ராக்ருதமான பதவிக்கு அவனை அழைத்துக் கொள்ளுகிறாய் நீ. அந்த முப்புரம் எரி முதல்வனாம் பரமேஸ்வரன் உன்னை நான் சரணடைகிறேன் என்று துதிக்கின்றார் அப்பைய தீக்ஷிதர்.
யார் படைப்பின் தொடக்கத்தில் பிரம்ம தேவரைப் படைத்து (“யோ ப்ரஹ்மானாம் விததாதி ரூபம்”) அவரிடம் வேதங்களைக் கொடுத்து (“யோ வை வேதாஷ்ஷ்ச ப்ரஹிநோதி தஸ்மை”), இந்த படைப்பை படைக்கும்படி செய்தாரோ, என்னுடைய மனதையும் புத்தியையும் ஒளிர்விக்கும் அந்த இறைவனை (“தம் தேவ ஆத்மபுத்திப்ரகாஸம்”) மோக்ஷத்தை விரும்பும் நான் சரணடைகிறேன் (“முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே”)
என்கிறது ஷ்வேதாஷ்த்வரோப உபநிஷத் 6.28. அதே போல இங்கு தீக்ஷிதர் கூறுகிறார்.
சிருஷ்டி இருவகைப்படும். ஒன்று ப்ரகிருதி சிருஷ்டி. மற்றொன்று விக்ருதி சிருஷ்டி. ப்ரகிருதி சிருஷ்டியில் சிவனிடமிருந்து பிரமன் உண்டானது. ஷ்ருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. ஶ்ரீமத் பாகவதத்தின் தியான ஸ்லோகமும் இதனை கூறுகிறது. பகவத் கீதை அத்தியாயம் 15 இதைப் பற்றியே (15.1-15.4).
அப்படிப்பட்ட ஆண்டவன் ஆத்ம, புத்திப்ரகாஶம்; அதாவது இறைவன் உணர்வாக இருக்கிறார்; நான், உணர்த்த உணர்பவனாக இருக்கிறேன் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார் அப்பைய தீக்ஷிதர்.
க்ரியா யோகசர்யா: – கிரியை, யோகம் வழியாக அதாவது வழிபடுதல், தியானம் முதலான சாதனைகளை
ந கர்தும் (ஶக்நோமி) – செய்ய இயலாதவனாக இருக்கிறேன்
அநிதரகதி:- வேறு வழியின்றி
கேவலம் த்வாம் ப்ரபத்யே – உன் ஒருவனையே சரணடைந்து சார்ந்துள்ளேன்
விளக்கம்
சைவ சித்தாந்தத்தில், இறைவனை அடைவதற்கான உபாயமாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களை வரையறுத்துள்ளனர் பெரியோர்.
1. இதில் சரியை என்பது உழவாரப்பணி முதலாக சிவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் செய்யும் தொண்டு. அதோடு சிவனடியார்களை அன்பாக உபசரிப்பதும் ஆகும்.பெரிய புராணத்தில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதன் மூலமே இறையருளைப் பெற்ற எண்ணற்ற நாயன்மார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
2. அடுத்து கிரியை எனப்படுவது, உள்ளத்தாலும் புறத்தாலும் பூஜிப்பது.
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே
தாயுமானவர்
3. சிவம் ஒன்றையே ஒருமுகப்படுத்தி வழிபடும் நிலை யோகம். புலன்களின் வழியாக வேறு எந்த சிந்தனைகளும் நமக்குள் தோன்றாதவாறு, நாம், இறைவனாகிய பரம்பொருளை தியானிக்கிறோம் என்னும் வேறுபாடு மறைந்து, நாமும் தியானமும் இரண்டறக் கலக்கும் நிலையே யோகம்.
4. இறைவனைப் பற்றியும் உயிரைப் பற்றியும் தெரிவிக்கும் நூல்களைக் கற்று பெரியவர்களின் உபதேசங்களைப் பெற்று இறைவனின் அருளைப் பெறுவதற்கான ஞானத்தைப் பெறுவது.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இந்த நான்கு வழிகளின் மூலமாக இறைவனின் அருள் கிடைக்கும்.
சிவன் அடியார்களைப் போற்றி சிவன் ஆலயங்களில் செய்யும் தொண்டால், சாலோகம் (சிவன் உலகம்),
உள்ளும் புறமும் பூஜிப்பதால் சாமீபம் (சிவன் அருகில் இருத்தல்),
பரிபூரண யோகத்தால் சாரூபம் (சிவ ஸ்வரூபமும்) கிடைக்கும்.
சிவ சிந்தனையை ஞானத்தில் தேக்கி இருப்பதால் முக்தி எனும் பலன் கிடைக்கும்.
மரணம் எப்பொழுது வரும் என்பதை அறிந்திலேன் நான். இங்கு இருப்பதோ இரவலாக கிட்டியது. “நம் மனே அல்லீநே! இல்லி சும்மனே பந்திதீனே!” (எம் வீடு அங்குதான்; இங்கு சும்மா வந்துள்ளேன்) என்கிறார் புரந்தர தாசர். எனவே இமைப்பொழுதும் என் நெஞ்சம் நீங்காதான் தாழ் இப்பொழுதே பணிகிறேன்.
“பெருமானே, என் உடல், உயிர் அனைத்திலும் இப்போது நீதான் நிறைந்திருக்கிறாய். இனி நான் செய்கின்ற செயல்கள் யாவும் நீ செய்வதுதான். நான் சரியான காரியங்களைச் செய்தாலும், தவறான செயல்களைப் புரிந்தாலும் அத்தனைக்கும் நீ தான் பொறுப்பு ” என்றும்
“அன்றே எந்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ? இன்றுஓர் இடையூறு எனக்கு உண்டோ எண்தோள் முக்கண் எம்மானே? நன்றே செய்வாய், பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே?”
என்றும் இறைவனிடம் கேட்கிறார் மாணிகக வாசகர்.
இதே மனநிலையில் உள்ள அப்பைய தீக்ஷிதர்,
“ஹே பரமசிவ! எனக்கு உன் இருப்பிடமோ தெரியாது, கர்மானுஷ்டானத்தையோ யோகாப்யாஸத்தையோ செய்ய என்னால் இயலாது. வேறு ஒரு வழியும் அறியாத நான் உன்னைச் சரணமடைவது ஒன்றையே அனுஷ்டிக்கிறேன். அந்த்ய காலத்தில் மனதை ஈசுவரனிடம் அர்ப்பணம் செய்வது அஸாத்யமானபடியால் இப்பொழுது உன் நினைவு வந்திருக்கும் பொழுதே நான் உன்னிடம் என்னை ஸமர்ப்பணம் செய்து விடுகிறேன். என்னை மட்டுமில்லை. என் பரிவாரங்களையும் சேர்த்துக் கொண்டு ஆத்மார்பணம் செய்து விடுகிறேன்”.
एवं देव in this manner O Lord! चतुर्दश-आत्मक-जगत्-रूपेण in the form of the fourteen worlds जात: पुन: – manifesting (Thyself) again तस्य-ऊर्ध्वं खलु at the head (peak) of that (the worlds) सत्य-लोक-निलये in the abode of Satyaloka जात: -असि धाता स्वयं manifested as Brahma (the Creator) Thyself यं शंसन्ति whom (Brahma) (the Srutis) describe हिरण्यगर्भम्- (as) Hiranyagarbh अखिल-त्रैलोक्य-जीवात्मकं of all the beings in the three worlds as the collective soul य: -अभूत् who became स्फीत-रज:-विकार-विकसन्- because of the upsurge of Rajoguna नाना-सिसृक्षा-रस:- became desirous of creating various beings.
Meaning in English:
The fourteen worlds are also known as trilokyam (3 worlds). The 7 worlds together below the earth are taken as one, called Patala. The Earth is taken as Bhuloka as second and the six worlds above the earth are taken as third as Upper world.
Thus O Lord! Thou who manifested in the form of the fourteen worlds, again by Thy own will, manifested as Brahma, in Satyaloka, which is the highest and loftiest of all the worlds.This Brahma is known as Hiranya Garbh (the golden egg) the cosmic intelligence of all the beings of the three worlds. With the upsurge of Rajoguna, Thou as this Hiranya Garbha became desirous of creating various beings.