Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 10. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 10

Link to the audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/uktn01tyqgweogevkj6jl/Verse-10.mp3?rlkey=d7v2nb942agd9nc60ml3rvrjd&dl=0

Sanskrit Verse

दृग्जगन्मयवपुस्तव कर्मभाजां
कर्मावसानसमये स्मरणीयमाहु: ।
तस्यान्तरात्मवपुषे विमलात्मने ते
वातालयाधिप नमोऽस्तु निरुन्धि रोगान् ॥१०॥

Translation in Tamil 

விராடபுருட உன் இவ்வடிவம்தனை
வினைபுரிந்து கர்மவழி செல்வோர்
வினைமுடிவில் செயலிழந்த நேரம்
நிலை நிறுத்த வேண்டும் தன்னுள் என
மெய்யுணர்ந்த பெரியோர் உரைப்பர்
நிர்மல குண வடிவ நீயன்றோ அவ்
விராட புருடனெனும் மெய்ப்பொருள்!
தீரா என்பிணியைத் தீர்திடு குருவாயூரப்பனே!! 9.10

Transliteration in English 

iidR^igjaganmayavapustava karmabhaajaaM
karmaavasaanasamaye smaraNiiyamaahuH |

tasyaantaraatmavapuShe vimalaatmane te
vaataalayaadhipa namO(a)stu nirundhi rOgaan ||

Transliteration in Tamil 

ஈத்₃ருக்₃ஜக₃ந்மயவபுஸ்தவ கர்மபா₄ஜாம்
கர்மாவஸாநஸமயே ஸ்மரணீயமாஹு: |

தஸ்யாந்தராத்மவபுஷே விமலாத்மநே தே
வாதாலயாதி₄ப நமோ(அ)ஸ்து நிருந்தி₄ ரோகா₃ந் || 10||

Meaning in English 

Human beings who are bound by the law of Karma should remember this Viraat (cosmic) form of Thine, which is of the nature of pure Sattva, at the end of all rituals, and when desirous of liberation and at the time of death. O Lord of Guruvaayur! My salutations to Thee. Please eradicate my ailments.

Meaning of the Sanskrit Words 

ईदृक्-जगन्मय-वपु: - तव - such cosmic (Viraat) form of Thee

कर्मभाजां - by all human beings (who are subject to the law of Karma)

कर्म-अवसान-समये - at the end of all vedic karmas and at the time of death

स्मरणीयम्-आहु: - should be remembered, it is said

तस्य-अन्तर-आत्म-वपुषे - (Thou) who are the Indweller of that Viraat form

विमलात्मने ते - (and) Thou who are of the nature of pure Sattva

वातालयाधिप - O Lord of Guruvaayur!

नम: -अस्तु - my salutations be to Thee

निरुन्धि रोगान् - may my ailments be eradicate

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 9. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 9

Link to the audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/qoy0enmkr0fjsklbsjbaa/Verse-9.mp3?rlkey=vd2ellstvwa8wdfmrxhapvjhq&dl=0

Sanskrit Verse

संसारचक्रमयि चक्रधर क्रियास्ते
वीर्यं महासुरगणोऽस्थिकुलानि शैला: ।
नाड्यस्सरित्समुदयस्तरवश्च रोम
जीयादिदं वपुरनिर्वचनीयमीश ॥९॥

Translation in Tamil 

எம் பிறப்பிறப்புச் சக்கரம் உன் செயல்கள்
உம் வீரபராக்ரமன்றோ அசுரர்தம் குழாம்
மலைத்தொடர்கள் உன்னுடல் எலும்புகள்

வற்றா நதிகளே உன் குருதிக் குழாய்கள்
மரங்களனைத்தும் உன் உரோமங்கள்
விரித்துக் கூற இயலா உன் இவ்வடிவம்
விளங்கட்டும் ஒளிமயமாய் என் இதயத்தில்
கரமதனில் சக்ரமேந்திய சாரங்கனே!! 6.9

Transliteration in English 

samsaarachakramayi chakradhara kriyaaste
viiryaM mahaasuragaNO(a)sthikulaani shailaaH|

naaDyassaritsamudayastaravashcha rOma
jiiyaadidaM vapuranirvachaniiyamiisha ||

Transliteration in Tamil 

ஸம்ஸாரசக்ரமயி சக்ரத₄ர க்ரியாஸ்தே
வீர்யம் மஹாஸுரக₃ணோ(அ)ஸ்தி₂குலாநி ஶைலா: |

நாட்₃யஸ்ஸரித்ஸமுத₃யஸ்தரவஶ்ச ரோம
ஜீயாதி₃த₃ம் வபுரநிர்வசநீயமீஶ || 9||

Meaning in English 

O Thou wielder of the discus! Thy activity is the wheel of Samsaara and the host of Asuras are Thy prowess.The mountains are Thy bones, the many rivers are Thy blood streams and the trees are Thy hair. May this indescribable form always shine in me.

Meaning of the Sanskrit Words 

संसार-चक्रम्- the wheel of Samsaara ( the cycle of birth and death)

अयि चक्रधर -=O Thou wielder of the discus!

क्रिया: -ते - is Thy activity

वीर्यं महा-असुर-गण: - (Thy) prowess is the host of powerful Asuraas

अस्थि-कुलानि शैला: - (Thy) bones are the mountains

नाड्य: -सरित्-समुदय: - (Thy) blood vessels are the many rivers

तरव: -च रोम -=and the trees are Thy hair

जीयात्- May it always shine (in me)

इदं वपु: -अनिर्वचनीयम्- this indescribable form

ईश - O Lord

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 8. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 8

Link to the audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/9kv0byecpmoi2redc1as7/Verse-8.mp3?rlkey=bp2oh00frsh7l3nak5evvdfp4&dl=0

Sanskrit Verse

श्रोणीस्थलं मृगगणा: पदयोर्नखास्ते
हस्त्युष्ट्रसैन्धवमुखा गमनं तु काल: ।

विप्रादिवर्णभवनं वदनाब्जबाहु-
चारूरुयुग्मचरणं करुणांबुधे ते ॥८॥

Translation in Tamil 

மால் உன் இடுப்பு வழி விலங்கினத் தோற்றம்
பாத நகவழி வேழ பரி ஒட்டக வகை தோற்றம்

காலம் உன் பாத நடை, வதன கர தொடையுடன்
கால்கள் வழி நால்வகை தொழில் வர்ண உதயம்
காட்சியுடன் காத்தருள்வாய் கருணைக் கடலே!! 6.8

Transliteration in English 

shrONiisthalaM mR^igagaNaaH padayOrnakhaaste
hastyuShTrasaindhavamukhaa gamanaM tu kaalaH|

vipraadivarNabhavanaM vadanaabjabaahuchaaruuruyugmacharaNaM
karuNaambudhe te ||

Transliteration in Tamil 

ஶ்ரோணீஸ்த₂லம் ம்ருக₃க₃ணா: பத₃யோர்நகா₂ஸ்தே
ஹஸ்த்யுஷ்ட்ரஸைந்த₄வமுகா₂ க₃மநம் து கால: |

விப்ராதி₃வர்ணப₄வநம் வத₃நாப்₃ஜபா₃ஹு-
சாரூருயுக்₃மசரணம் கருணாம்பு₃தே₄ தே || 8||

Meaning in English 

O Ocean of mercy! The animal world is Thy lower-back and the elephants camels and horses are the nails of Thy feet. Time is Thy movement. The four varnas -Brahmins, Kshatriyaa, Vaishyaa and Shoodraas originated from Thy lotus face, hands, charming thighs and feet, respectively.

Meaning of the Sanskrit Words 

श्रोणी: -स्थल - (Thy) lower-back

मृगगणा: - forms the animal world

पदयो: - नखा: - ते - the nails of Thy feet

हस्ति-उष्ट्र-सैम्धव-मुखा: - are the animals like elephants, camels, horses etc.

गमनं तु काल: - (Thy) movement is Time

विप्र-आदि-वर्ण-भवनं - Brahmins and the other Varnas ensue from

वदन-आब्ज-बाहु-चारु-उरु-युग्म-चरणं - (Thy) lotus face,arms, charming thighs and feet

करुणा-अम्बुधे ते - of Thee, O Ocean of mercy

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 7. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 7

Link to the audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/k2mn8gwer1hvthjfr1hl4/Verse-7.mp3?rlkey=snqcb5ghomglhu5dqslfx19g5&dl=0

Sanskrit Verse

पृष्ठं त्वधर्म इह देव मन: सुधांशु –
रव्यक्तमेव हृदयंबुजमम्बुजाक्ष ।

कुक्षि: समुद्रनिवहा वसनं तु सन्ध्ये
शेफ: प्रजापतिरसौ वृषणौ च मित्र: ॥७॥

Translation in Tamil 

தீவினைதாம் முதுகென
தெளிமனம் நிறைமதியென
இதயம் மலர்தாமரையென
நீக்கமற நிறைவு முக்குணமென

நீர்நிரை பேர்கடல் வயிறென
வைகறை அந்தி அணிஆடையென
பிறப்புருப்பு இனப்பெருக்கும் பதியென
விந்தகமிரண்டும் இறை மித்திரனென
அமைந்த ஆண்டவன் உனை
அடிபணிவேனே கமலக் கண்ணனே !! 6.7

Transliteration in English 

pR^iShThaM tvadharma iha deva manaH sudhaamshuravyaktameva
hR^idayaambujamambujaaksha |

kukshiH samudranivahaa vasanaM tu sandhye
shephaH prajaapatirasau vR^iShaNau cha mitraH ||

Transliteration in Tamil 

ப்ருஷ்ட₂ம் த்வத₄ர்ம இஹ தே₃வ மந: ஸுதா₄ம்ஶு -
ரவ்யக்தமேவ ஹ்ருத₃யம்பு₃ஜமம்பு₃ஜாக்ஷ |

குக்ஷி: ஸமுத்₃ரநிவஹா வஸநம் து ஸந்த்₄யே
ஶேப₂: ப்ரஜாபதிரஸௌ வ்ருஷணௌ ச மித்ர: || 7||

Meaning in English 

O Self Effulgent Lord! The back of “Your” Cosmic Form is unrighteousness ( this implies that unrighteousness should be left behind or abandoned);  Your mind is the Moon. O Lotus-eyed Lord! Your Lotus heart is the Unmanifest (Un differentiated nature) with the three Gunas in equilibrium. 

Your abdomen is the oceans; Your garments are the two Sandhyaas—dawn and the dusk. Your generative organ is Prajaapati, the God of procreation; Your testicles are God Mitra

Meaning of the Sanskrit Words 

पृष्ठं तु-अधर्म - (Thy) back is Adharma (unrighteousness)

इह - of this (cosmic world)

देव - O Lord!

मन: सुधांशु: - mind is the moon

अव्यक्तम्-एव - the unmanifest

हृदय-अम्बुजम् - (is Thy) heart lotus

अम्बुजाक्ष - O Lotus eyed One!

कुक्षि: समुद्रनिवहा: - (Thy) abdomen is the ocean

वसनं तु सन्ध्ये - (Thy) garments are the two sandhyaas (dawn and dusk)

शेफ: प्रजापति:- - (Thy) generative organ is Prajaapati (god of procreation)

असौ वृषणौ च मित्र: - and (Thy) testicles are god Mitra

இறைவனின் திருவடி – ஒரு கண்ணோக்கம்

முன்னுரை

பக்தி என்பது ஒரு உணர்வு. பக்தி என்ற உணர்வு ஒன்றே; இந்த உணர்வில் பல வகைகள் இல்லை. இந்த ஒரே உணர்வினை வெளிப்படுத்தும் வகைகள் மட்டுமே வேறு. நவபக்தி என்பது பக்தியின் ஒன்பது வழிகள். ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத ஸேவநம், அர்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதநம்.

1. ஸ்ரவணம் – இறைவனுடைய நாமங்களையும், அவனுடைய கல்யாண குணங்களையும் கேட்பது.

2. கீர்த்தனம் – பகவானின் பெருமைகளைப் பேசுவது.

3. ஸ்மரணம் – எப்பொழுதும் இறைவனை நினைவது.

4. பாத ஸேவனம் – இறைவன் திருவடிகளை வணங்குவது.

5. வந்தனம் – பகவானை வணங்குவது, அவனைப் போற்றுவது.

6. அர்ச்சனம் – இறைவனுக்கு மலர்களையும், கனிகளையும் கொடுத்து மகிழ்வது.

7. தாஸ்யம் – பகவானின் வேலைக்காரனாக நடந்து கொள்வது.

8. ஸக்யம் – ஆண்டவனிடம் நட்பு கொள்வது.

9. ஆத்ம நிவேதனம் – ஆண்டவனிடம் ஆத்மாவை ஒப்படைப்பது

இந்த ஒன்பது வகையான வெளிப்பாடுகளில் ஒன்று இறைவன் தாழ் பணிதல். குருநாதர் ஓம்காரனந்த ஸ்வாமிகளின் அருளுரைகளிலிருந்து அடியேன் அறிந்ததை இப்போது காண்போம்.

தாள் பணிதல்

நம்மில் பெரும்பாலோர்க்கு ஆண்டவனின் வழிபாடு என்பதே அடி பணிதலில் தான் தொடங்குகிறது. அதனால் தான் ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று திருவாசகம் குறிப்பிடுகிறது. திருவள்ளுவர், கடவுள் வாழ்த்திலுள்ள பத்து குறள்களில் ஏழு குறள்களில் இறைவனின் தாழ், அடி வணங்குவதைக் குறிப்பிடுகிறார். அனைவரும் தேடும் அடைக்கலம் இறைவனின் பாதங்களே.

நாம ரூபமுடைய ஒவ்வொரு இறைவனுக்கும் கரங்கள் பல இருந்தாலும் கூட, கால்கள் மட்டும் இரண்டுதான். காரணம் அடியவர்கள் அப்பொழுது தான் பற்றிக் கொள்ள இயலும். நமக்கெல்லாம் கரங்கள் இரண்டு தான் உள்ளது, வலது கரம்,இடது கரம். எண்ணற்ற கால்கள் இறைவனுக்கு இருந்தால், இந்த இரண்டு கரங்களால் எப்படிப் பற்றிக் கொள்ள இயலும் என்பதால் தான்,கால்கள் இரண்டாகவும், கைகள் அள்ளிக் கொடுப்பதற்கு பலவாகவும் இருக்கின்றது என்பதை நாம் உணரலாம்.

இறைவனின் திருவடிகளை தாமரை மலருக்கு ஒப்பிடுகிறது மறைகள்.

“ஆண்டவரே, உமது இரண்டு தாமரை பாதங்களும் இலையுதிர் காலத்தில் வளரும் தாமரை மலரின் இரண்டு மலர்ந்த இதழ்கள் போல் தோன்றும் அளவுக்கு அழகாக இருக்கின்றன. உண்மையில், உனது தாமரை பாதங்களின் நகங்கள் ஒரு பெரிய பிரகாசத்தை வெளிப்படுத்துகின்றன”

என்கிறது ஶ்ரீமத் பாகவதம் (4.24.52).

அவன் தாளை, அதாவது இறைவனின் திருவடியைப் பணிவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கும் ஆண்டவனின் அருள் வேண்டும் என்று அழகாகக் குறிப்பிட்டுள்ளனர் ஞானிகள்.

திருவடி பணிவதன் பலன்

இறைவன் திருவடிதனைப் பணிவதனால், என்ன பலன் என்ற கேள்வி எழலாம். இதற்கு விடைகள் ஏராளமாக உள்ளன நமது மறைகளில்.

1. “இறைவா! உன் திருவடி நகங்களின் ஒளி, ஒரு வரையறுக்கப்பட்ட ஆத்மாவின் இதயத்தில் உள்ள அனைத்து இருளையும் உடனடியாக அகற்றுகின்றன. என் அன்பான இறைவா, ஒரு பக்தனின் இதயத்தில் உள்ள எல்லா வகையான இருளையும் எப்போதும் அகற்றும் உனது அந்த வடிவத்தை எனக்குக் காட்டுவாயாக. என் அன்பான ஆண்டவரே, நீங்கள் அனைவருக்கும் உயர்ந்த ஆன்மீக குரு; எனவே அறியாமையின் இருளால் மூடப்பட்டிருக்கும் அனைத்து ஆன்மாக்களும் ஆன்மீக குருவாகிய உன்னால் ஞானம் பெற முடியும்” என்கிறது ஶ்ரீமத் பாகவதம் (4.24.52).

2. இறைவனின் திருவடி என்ன செய்யும்,என்பதை அருணகிரிநாதர் தெளிவாகக் கூறியிருக்கிறார். ‘நாளென் செய்யும்! வினைதான் என்செய்யும்! எனை நாடி வந்த கோள் என் செய்யும்!’……‘இங்கு என் தலைமேல் நின் கால்பட்டு அழிந்தது அயன் கையெழுத்தே’ என்பது கந்தர் அலங்காரப் பாடல். எனவே இறைவனின் திருவடியானது நம் விதியை மாற்றவல்லது.

3. பெருமாள் கோவிலுக்குச் சென்றால் நம் திருவடிச் சின்னமான சடாரி வைக்கப்படுவது, நம் தலையெழுத்து சிறப்பாக அமைய வேண்டும் என்பதால் தான்.

4. நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்று இறைவனது திருவடியைப் பணிவதில் ஒரு தத்துவம் உள்ளது. வாழ்வில் ஒவ்வொருவரும் பெரியவர்களுக்கும், குருவாக விளங்கும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கீழ்படிதல் வேண்டும் என்ற ஒப்பற்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகத் தான் திருவடி வழிபாடு உருவாக்கப்பட்டது என்பர் ஞானியர்.

5. திருவடிகளைப் பற்றினால் காலனைக் கூட வெல்ல முடியும். இதற்கு திருக்கடையூர் வரலாறு சாட்சி கூறுகிறது. மார்க்கண்டேயனின் உயிரை எடுப்பதற்கு பாசக்கயிற்றை வீசினான் காலன். மார்க்கண்டேயன் அலறி ஓடி சிவலிங்கத்தை இறுக்கக் கட்டிக் கொண்டான். எமதர்மனால் வீசப்பட்ட பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. லிங்கத்தில் இருந்து சிவபெருமான் வெளிப்பட்டார். காலனைத் தன் காலால் உதைத்தார்.எம தர்மன் இறைவனைப் பணிந்து மார்க்கண்டேயனுக்கு விதி விலக்கு அளித்தது உலகறிந்த உண்மையல்லவா!!

6. ஜோதி வடிவான ஆதிப் பரம்பொருளாகிய ஈசனின் அடி முடி காண, மாலும் அயனும் முயன்றனர்.திருவடி தேடிச் சென்றவர் திருமால், திருமுடி தேடிச் சென்றவர் பிரம்மன்.

இறைவனின் திருவடியை முதலில் பணிந்தால் நம் மனதில் பக்குவம் ஏற்படும். நாம் தலையைக் குனிந்து வழிபட்டால் திருவடி தெரியும். அகக்கண் திறந்து அனைத்தும் வளமாக வேண்டுமானால் இறைவனின் இணையடிகளைப் பார்த்து வழிபாடு செய்வது அவசியமாகும். இறைவனின் திருவடிகள் அறிவைக் (ஞானம்) குறிக்கின்றன. அறிவு உள்ள இடத்தில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.

திருவடிகளும் மெய்ப்பொருள் ஞானமும்

பொதுவாக, இறைவனின் கமலப்பாதங்கள் இரண்டினைப் பற்ற, உடல், வாக்கு, மனம் வழி நாம் புரியும் வழிபாட்டுச் செயல்கள்களால் நமக்கு வரும்/கிடைக்கும் பலன்களை, ஒவ்வொரு திருவடியின் அருள் என எடுத்துக் கொண்டால், அவைகளை இங்கனம் பிரித்துப் பார்க்கலாம்:

இடது திருவடி குறிப்பது

1. அபர ஞானம்

2. கர்ம காண்ட ஞானம்

3. உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது

4. சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)

வலது திருவடி குறிப்பது

1. பர ஞானம்

2. ஞான காண்ட ஞானம்

3. உண்மையை உணர்த்துவது

4. யோகம்(உள்ளத்தால்), ஞானம்

பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 6. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 6

Link to the audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/8mc1df4vpv1f8ro3i95fu/Verse-6.mp3?rlkey=jf5xkykia6mgbdvo2g7t4j2im&dl=0

Sanskrit Verse

माया विलासहसितं श्वसितं समीरो
जिह्वा जलं वचनमीश शकुन्तपङ्क्ति: ।

सिद्धादय: स्वरगणा मुखरन्ध्रमग्नि-
र्देवा भुजा: स्तनयुगं तव धर्मदेव: ॥६॥

Translation in Tamil 

மயக்கிடும் மாயை புன்முறுவலாய்,
மன்றம் வீசுதென்றல் சுவாசமாய்,
மண்டிலாத் தெளிநீர் நாவாய்,
திரள்புள் சிலம்பம் மொழியாய்,

சித்த ஞானியர் ஏழிசையாய்,
சிவந்த கனல் திருவாயாய்,
வின்னவரினம் திருக்கரமாய்,
இல்லற துறவற தர்மங்கள் இருமார்பாய்
அமைந்த ஆண்டவன் உனை
அடிபணிவேனே எளியன் யான்!! 6.6

Transliteration in English 

maayaa vilaasahasitaM shvasitaM samiirO
jihvaa jalaM vachanamiisha shakuntapanktiH |

siddhaadayaH svaragaNaa mukharandhramagnirdevaa
bhujaaH stanayugaM tava dharmadevaH ||

Transliteration in Tamil 

மாயா விலாஸஹஸிதம் ஶ்வஸிதம் ஸமீரோ
ஜிஹ்வா ஜலம் வசநமீஶ ஶகுந்தபங்க்தி: |

ஸித்₃தா₄த₃ய: ஸ்வரக₃ணா முக₂ரந்த்₄ரமக்₃நி-
ர்தே₃வா பு₄ஜா: ஸ்தநயுக₃ம் தவ த₄ர்மதே₃வ: || 6||

Meaning in English 

O Lord! Controller of the Universe, Your sportive smile constitutes Maya, Your Cosmic Creative Power; Your breath is the wind; Your tongue is water, Your speech the formation of beautiful birds; 

Your tunes (The seven notes Sa,Ri, Ga, Ma, Pa, Da, Ni) are the divine Siddhas, and Gandharvas; Your mouth is the God of Fire, arms the Devas, and Your twin breasts are the God of Dharma representing Pravriti and Nivriti Dharmas !

Meaning of the Sanskrit Words 

माया	 - Maayaa (Thy cosmic creative power)

विलास-हसितं - is (Thy) charming smile

श्वसितं समीर: - (Thy) breath is the wind

जिह्वा जल - (Thy) tongue is water

वचनम्- speech

ईश O Lord !

शकुन्त-पङ्क्ति - is the birds' chirping in formation

सिद्ध-आदय: स्वरगणा: - (Thy) voice is the Sidhdhaas (and other divine artists)

मुख-रन्ध्रम्-अग्नि: - (Thy) mouth is fire

देवा भुजा: - (Thy) arms are the gods (Devaa)

स्तनयुगं तव धर्मदेव: - Thy breasts is the Dharmadeva (the god of righteousness)

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 5. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 5

Link to the audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/401gtan38laea5ojba4mg/Verse-5.mp3?rlkey=a561mqktct5s89b9ce7691lxs&dl=0

Sanskrit Verse

निश्शेषविश्वरचना च कटाक्षमोक्ष:
कर्णौ दिशोऽश्वियुगलं तव नासिके द्वे ।
लोभत्रपे च भगवन्नधरोत्तरोष्ठौ
तारागणाश्च दशना: शमनश्च दंष्ट्रा ॥५॥

Translation in Tamil 

அறுகுணமுடை ஆண்டவனே, உந்தன்
கடைவிழிப் பார்வையில் அண்ட படைப்பு!
காணும் திசைகள் எட்டும் உன்னிரு செவி!
நாசிகள் இரண்டும் பரியேறு பரிதி குமரர்!

உன்னிரு இதழ்களும் அவாவுடன் பணிவு!
உனதெழில் பல்வரிசை வின்மீண்கள்!
உன் கடைவாய் பற்கள் காலனவனன்றோ !! 6.5

Transliteration in English 

nishsheShavishvarachanaa cha kaTaakshamOkshaH
karNau dishO(a)shviyugalaM tava naasike dve |

lObhatrape cha bhagavannadharOttarOShThau
taaraagaNaashcha radanaaHshamanashcha damShTraa ||

Transliteration in Tamil 

நிஶ்ஶேஷவிஶ்வரசநா ச கடாக்ஷமோக்ஷ:
கர்ணௌ தி₃ஶோ(அ)ஶ்வியுக₃லம் தவ நாஸிகே த்₃வே |

லோப₄த்ரபே ச ப₄க₃வந்நத₄ரோத்தரோஷ்டௌ₂
தாராக₃ணாஶ்ச த₃ஶநா: ஶமநஶ்ச த₃ம்ஷ்ட்ரா || 5||

Meaning in English 

“Your side-long glance constitutes the creation of all the fourteen worlds. Hence, it is needless to say that the closure of Your eye lids is the Great Deluge; Your ears are the Directions; the two Nostrils are the pair of Ashwini devas; Your Upper and lower lips represent modesty and greed respectively; Your Teeth, the Stars and Your Molars is Yama, the God of Death”

Meaning of the Sanskrit Words 

निश्शेष-विश्व-रचना च - the creation of the whole universe

कटाक्ष-मोक्ष: - is by extending a glance of Thy eye

कर्णौ दिश: - (Thy) ears are the directions (quarters)

अश्वियुगलम् - the two Ashvinidevas

तव नासिके द्वे - are Thy two nostrils

लोभत्रपे च - greed and modesty

भगवन् - O Lord!

अधर-उत्तर-ओष्ठौ - (are Thy) lower and upper lips

तारा-गणा: - च - and the galaxy of stars

दशना: - are Thy teeth

शमन: च दंष्ट्रा - the molars are Yama (the god of death

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 4. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 4

Link to the audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/b2zqndhlg7wo25k0ou2ju/Verse-4.mp3?rlkey=8fmg3r4rh3a7wd9go050pw5mh&dl=0

Sanskrit Verse

  त्वद्ब्रह्मरन्ध्रपदमीश्वर विश्वकन्द
छन्दांसि केशव घनास्तव केशपाशा: ।
उल्लासिचिल्लियुगलं द्रुहिणस्य गेहं
पक्ष्माणि रात्रिदिवसौ सविता च नेत्रै ॥४॥

Translation in Tamil

அண்டமதின் ஆணிவேராம் ஈசனே
உன் சுழிமுனையே நீ உரை நான்மறை
சுருண்டிரு எழில் குழல் கருமுகில்!

இரு புருவம் இறைஅயனின் இல்லம்
இமை இரண்டும் இரவு பகல்
இருவிழி என்றும் ஒளிரும் பரிதி !! 6.4

Transliteration in English

tvadbrahmarandhrapadamiishvara vishvakanda
Chandaamsi keshava ghanaastava keshapaashaaH |

ullaasichilliyugalaM druhiNasya gehaM
pakshmaaNi raatridivasau savitaa cha netre ||

Transliteration in Tamil

த்வத்₃ப்₃ரஹ்மரந்த்₄ரபத₃மீஶ்வர விஶ்வகந்த₃
ச₂ந்தா₃ம்ஸி கேஶவ க₄நாஸ்தவ கேஶபாஶா: |

உல்லாஸிசில்லியுக₃லம் த்₃ருஹிணஸ்ய கே₃ஹம்
பக்ஷ்மாணி ராத்ரிதி₃வஸௌ ஸவிதா ச நேத்ரை || 4||

Meaning in English

O Lord who are the root cause of the Universe!  Your” Brahmarandhara (an aperture on crown of the head) is the Vedas. O Keshava, one with luxuriant hair and the Slayer of the demon Kesi! “Your” ornamented hair are the dark clouds. “Your” delightful pair of eyebrows are the abode of Brahma, the Creator. “Your” eye-lashes are night and day and “Your” eyes are the sun

Meaning of the Sanskrit Words

त्वत्-ब्रह्मरन्ध्रपदम्- Thy Brahmarandhra area (the psychic orifice on the crown of the head)

ईश्वर विश्वकन्द - O Lord! Thou the source of the universe!

छ्न्दांस - (are) the Vedas

केशव - O Keshava!

घना: तव केशपाशा: - the dark clouds are Thy locks of hair

उल्लासि-चिल्लि-युगलं - the delightful two eyebrows

द्रुहिणस्य गेहं - are the abode of Brahma

पक्ष्माणि - the eyelashes

रात्रि-दिबिसौ -=are night and day

सविता च नेत्रे - and the eyes are the Sun

பகவத் கீதை ஸ்லோகம் 2.22- மரணம் – பழையன கழிதலும் புதியன புகுதலும்

முகவுரை


ந‌ன்னூ‌ல் எ‌ன்ற இல‌க்கண நூ‌லி‌ன் சொ‌ல் அ‌திகார‌த்‌தி‌ல் உ‌ள்ள “பழையன க‌ழிதலு‌ம் பு‌தியன புகுத‌லு‌ம் வழுவல கால வகை‌யி னானே” எ‌ன்ற தொட‌ர், வழ‌க்‌கிழ‌ந்த இல‌க்கண‌க் கரு‌த்து‌க்களை ‌நீ‌க்குவது‌ம், புதிய வழ‌க்குகளை ஏ‌ற்பது‌ம் தவ‌றி‌ல்லை எ‌ன்‌பதைக் குறிப்பது. அதாவது,
இல‌க்கண‌ம் கால‌‌ந்தோறு‌ம் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌த்‌தி‌ற்கு உ‌ட்ப‌ட்டது எனக் கூறு‌கிறது.  

வீட்டில் உள்ள பயனற்ற பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதுவே இதன் அடிப்படைத் தத்துவம்.

சரி, பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலில் வரும் ஒரு தத்துவத்திற்கும், போகிப் பண்டிகைக்கும், பகவத்கீதைக்கும் என்ன சம்பந்தம்? அதாவது, பழையனவற்றைக் கழித்தலுக்கும், புதியனவற்னை புகுத்தலுக்கும், பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு? போர்க்களத்தில் பார்த்தனுக்கு, சாரதியான கண்ணன் இதைப்பற்றி என்ன அறிவுரை வழங்கினான்?

வாருங்கள், ஒரு முக்கியமான ஸ்லோகத்தை அறிய முற்படுவோம்.

ஸமஸ்க்ருத ஸ்லோகம்

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா2 விஹாய
நவாநி க்3ருஹ்ணாதி நரோபராணி!

ததா2 ஸரீராணி விஹாய ஜீர்ணா
ந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே3ஹீ!!

பகவத் கீதை 2.22

பொருள் விளக்கம்

தொப்புள் கொடி உறவாக தொடங்கிய நாம், முதலில் நம்மை நமது உடலுடன் பிண்ணி இணைக்கிறோம். இது இயல்பு. பின் வளர்ச்சியின் அங்கமாக அது படிப்படியாக உறுதியாகி, உடலே உயிர் எனும் உணர்வினை அடைகிறோம். அதனை வளர்க்க, மெருகுபடுத்த, காக்க, விதவிதமான பொருள், செயல்முறை என்று பலவற்றை உபயோகப்படுத்துகிறோம்.

காலன் விதித்திட்ட வேளை வந்தால் செத்து மடிகிறோம். நாம் இவ்வுலகில் வந்திறங்கியது எதற்காக, வந்து புரிந்தது என்ன என்று அறியாமல்கூட செல்கிறோம். இருக்கும் போது, நாம் இருக்கும் காயம் ஒரு பொய்; இந்த யாக்கை நிலையாதது என்று நொடிப்பொழுதும் உள்நோக்கி ஆய்ந்ததில்லை. இதுதான் யதார்த்தம். மரணம் என்பது ஒரு கசப்பான உண்மை என்பதை உணர மறுக்கிறோம். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ளத்தான் பகவான் கண்ணன் பார்த்தனுக்கு இந்த ஸ்லோகம் வழியாக அறிவுரை வழங்குகிறான்.

“எப்படி ஒரு மனிதன் நைந்து போன ஆடைகளை கழட்டிவிட்டு வேறு புதியவற்றை அணிந்து கொள்கிறானோ, அப்படியே தேஹத்தில் உறைபவன், நைந்து போன உடல்களை விட்டுவிட்டு வேறு புதியவற்றை அடைகிறான்”

என்று பகவான் ஶ்ரீக்ருஷ்ணர் மரணத்தைப் பற்றி கூறுகிறார்.

தாய், குழந்தைக்குப் பழைய அழுக்கான உடுப்பைக் கழட்டிவிட்டு புதியதை அணிவிக்கிறாள். அப்போது குழந்தை அழுகிறது. ஆனால் தாயார் குழந்தை அழுவதைப் பொருட்படுத்துவதில்லை. குழந்தைக்கு “ஹிதம்” (நன்மை) என்று, புதியதை மாற்றிக் கொடுக்கிறாள்.

அது போல, பகவானும் ஜீவனுக்கு ஹிதமாக அவன் அழுவதை கவனியாமல் அவன் உடலை மாற்றிக் கொடுக்கிறார். உடலுக்கு உடை ஆடை; உயிருக்கு உடல் ஆடை.

இதைப் புரிந்தவர் அழுவதில்லை; புரியாதவர் அழுகின்றனர். அதனால்தான் “செத்த பிணத்தைப் பார்த்து சாகாத பிணம் அழுகிறது” என்பர் ஞானியர்.

சொற்களின் உபயோகமும், அவைகளில் பதிந்துள்ள உட்கருத்துக்களும்ஒரு கண்ணோட்டம்

1. “ஜீர்ணாநி” என்பதற்கு நைந்து போனது என்ற பொருளாகும். இந்த சொல் துணிகளுக்குப் பொருந்தும். நைந்த உடலென்று பகவான் ஒப்பிடுவது, வயதாகித் தேய்ந்த (நலிந்த) உடலுக்குத்தான் மரணமெனும் உடை மாற்றத்தைக் குறிப்பதல்ல. சிறு வயதிலும் மரணமெய்தலாம். உடல் நலிவு என்பது, “ஆயுள் முடிந்தது” என்ற பொருளில் கூறப்படுவது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

2. உடையை மாற்றிக் கொள்பவன் ஒரே சமயத்தில் பல உடைகளை (உள்ளாடை, வேஷ்டி, சட்டை, அங்கவஸ்த்திரம் என) மாற்றிக் கொள்ளமுடியும். உயிரைப் (ஜீவாத்மாவைப்) பொருத்தவரை, ஒரே உடலைத்தானே மாற்ற இயலும் என்று இருக்கையிலே, “வாஸாம்ஸி”, “ஸரீராணி”, என்று பன்மையில் பகவான் கூறுவதன் உட்கருத்து என்ன என்பதை இருவகையில் ஆயவேண்டும்:

• ஜீவன் இதுவரை எவ்வளவு உடல்களை விட்டுப் புதிய உடல்களை அடைந்திருக்கிறதோ, அவற்றுக்குக் கணக்கு கிடையாது. வரும் காலத்திலும், ப்ரம்ம ஞானமெனும் ஆத்ம ஞானம் கிட்டும்வரை, இன்னும் எத்தனைப் பழைய உடல்களைவிட்டுப் புதிய உடல்களை அடையப் போகிறது என்பதும் தெரியாது. எனவே சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

• ஸ்தூலம், ஸூக்‌ஷ்மம், காரணம் என்று மூன்று உடல்கள் ஜீவனுக்கு உள்ளன. இந்த உடலுவிட்டு அடுத்த உடலை அடையும்போது, இந்த மூன்றும் மாறுகின்றன. ஸத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஒவ்வொருவருக்கும் குணமயமான, அவனுக்கே உரித்தான, தனித்தன்மையுடைய “வ்யஷ்டிப்ரக்ருதி” அமைகிறதே, அது காரண ஸரீரம். இதையே “ஸ்வபாவம்” என்பர். மனிதன் எப்படிச்செயல்படுகிறானோ, அதற்கு ஏற்றவாறு ஸ்வபாவம் மாறுகிறது. இந்த ஸ்வபாவத்திற்கு ஏற்றவாறுதான் உயிர் பிரியும்போது மனதில் எண்ணமும் உண்டாகிறது. அதன்படிதான் அவனுக்கு ஸூக்‌ஷ்ம ஸரீரம் அமைகிறது. காரணம், ஸூக்‌ஷ்மம் என்ற இரு ஸரீரங்களுடன் இந்த உடலை (ஸ்தூல ஸரீரத்தை) விட்டுப்பிரிந்த பின்னர், ஸூக்‌ஷ்மத்திற்கேற்றவாறு அடுத்த பிறவியில் ஸ்தூல ஸரீரத்தைப் பெற்று, காரண ஸரீரத்திற்கேற்றவாறு அடைந்த அந்த அடுத்த உடலில் அவனது ஸ்வபாவம் அமைகிறது. இப்படி மூவுடலும் மாறுவதால், சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

3. ஆத்மாவிற்கு அசைவில்லை, போக்குவரத்து இல்ல. எனவே ஜீவாத்மா எனும் “தேஹி” அடுத்த உடலைப் போய் சேர்கிறான் என்று சொல்வது எப்படி பொருந்தும் என்பதை இப்போது ஆய்வோம்.

உண்மையில் ஆத்மாவிற்கு அசைவில்லை, செயலில்லை, எந்த நிலையிலும் போக்குவரத்தும் இல்லை. ஆனால், ஒரு குடத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போகும்போது, அதற்குள் இருக்கும் ஆகாயம் போகவில்லையானாலும், குடத்துடன் சம்பந்தத்தால் அது போவதாக நினைக்கிறோம் அல்லவா!

அதுபோல, ஸூக்‌ஷ்ம ஸரீரம் போகும்போது, அத்துடன் இணைந்த ஆத்மாவும் போவதாகத் தெரிகிறது. இதை உலகத்தார்புரிந்து கொள்ளவே, உயிர் வந்து போவதாக கற்பனை செய்து கூறப்பட்டது. “தேஹீ” என்றால் சரீரத்தை உடையவன் என்று பொருள். தேஹத்தை உற்ற உயிர் என்பர். ஆகவே உடலின் சம்பந்தத்தால் அவனிடம் போக்குவரத்து என்ற தோற்றம் ஏற்படுகிறது.

இதனால்தான இந்த ஸ்லோகத்தில் துணியைப் பற்றிக் குறிப்பிடும்போது “க்ருஹ்ணாதி” (ஏற்பது) என்றும், உயிரைப் பற்றிக் கூறும்போது “ஸம்யாதி” (செல்லுதல்) என்ற சொல்லும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

3. “நர”, “தேஹி” என்ற சொற்களின் விளக்கம்

ஆடையை அணிவது, நைந்தது, துறப்பது என்பவைகள் எல்லாம் மனிதனுக்கே உரித்தானது. எனவே இந்த ஸ்லோகத்தில் முதல் சொற்றொடரில், மனிதனைக் குறிக்கும் “நர” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. உடல்களின் போக்குவரத்து என்பது, உடலபிமானமுடைய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். எனவே இரண்டாவது சொற்றொடரில் “தேஹி” என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்லோகத்தின் உட்கருத்து

ஆத்மா உடல் எடுப்பதில்லை, ஸூக்‌ஷும ஸரீரம் மட்டுமே உடல் எடுக்கிறது. ஸூக்‌ஷ்ம ஸரீரமே (mind) பயணிக்கிறது. தூய உணர்வாகிய நான் எங்கும் பயணிப்பதில்லை. நான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.

இறைவனும் ஆத்மாவும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவை. எனவே இறைவனும் ஆத்மாவும் ஒன்றே. இறைவனது உபாதியும், ஆத்மாவின் உபாதியும் வேறு. இறைவன் காரண உபாதியை உடையவர், ஆத்மா காரிய உபாதியை உடையது. காரணமும் காரியமும் மாயத்தோற்றங்களே. இருப்பது பரம்பொருள் ஒன்றே.

ஆத்மா எதையும் அனுபவிக்க வேண்டியதில்லை. அனுபவங்கள் அனைத்தும் மாயை. அனுபவிப்பவனைப் பற்றிய உண்மையே நமக்கு முக்தியை கொடுக்கும். எந்த அனுபவமும் மோக்‌ஷத்தை கொடுக்காது.

அனைத்து உயிர்களில் இருக்கும் ஆத்மா நானே என்கிறான் கண்ணன்.

இதுதான் இந்த ஸ்லோகத்தின் சாரம்.

இதனைத்தான் கவிஞர் கண்ணதாசன், காலத்தால் அழியாத அருமையான திரையிசைப் பாடலாக வடித்துள்ளார்.

பாடலைக் கேளுங்கள்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 3. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 3

Link to Audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/12u6hjxt5cblqjqdlcuml/Verse-3.mp3?rlkey=b685prkio4kq0nw9lalku3o1g&dl=0

Sanskrit Verse

ग्रीवा महस्तव मुखं च जनस्तपस्तु
फालं शिरस्तव समस्तमयस्य सत्यम् ।
एवं जगन्मयतनो जगदाश्रितैर-
प्यन्यैर्निबद्धवपुषे भगवन्नमस्ते ॥३॥

Translation in Tamil

உன் மிடறு மகர, முகம் ஜன, நுதல் தவ, சிரம் சத்ய
உலகென ஈரேழு உலகம்தனை உன் உள்ளடக்கி
உன்னுடல் உலகப் பொருட்கள் அனைத்தாலுமே – அந்த
உலகுடலோன் உனைத் துதிப்பேன் குருவாயூரப்பனே 6.3

Transliteration in English

griivaa mahastava mukhaM cha janastapastu
phaalaM shirastava samastamayasya satyam |
evaM jaganmayatanO jagadaashritairapyanyairnibaddhavapuShe
bhagavannamaste ||

Transliteration in Tamil

க்₃ரீவா மஹஸ்தவ முக₂ம் ச ஜநஸ்தபஸ்து
பா₂லம் ஶிரஸ்தவ ஸமஸ்தமயஸ்ய ஸத்யம் |
ஏவம் ஜக₃ந்மயதநோ ஜக₃தா₃ஶ்ரிதைர-
ப்யந்யைர்நிப₃த்₃த₄வபுஷே ப₄க₃வந்நமஸ்தே || 3||

Meaning in English

O Lord! Thy body is the whole universe. Maharloka is Thy neck. Janaloka is Thy face. Tapoloka is Thy forehead. Satyaloka is Thy head. Of all the other things of which the universe is made, Thy body is also conceived of being made up of all that. O Lord! salutations to Thee.

Meaning of the Sanskrit Words

ग्रीवा मह: - तव - Thy neck is Maharloka

मुखं च जन: - and face is Janaloka

तप: - तु फालं Tapoloka, indeed, is forehead

शिर: - head

तव समस्तमयस्य of Thee who are everything

सत्यम् - is Satyaloka

एवं - in this manner

जगन्मयतनो - whose body is the universe!

जगदाश्रितै:-अपि-अन्यै: - of all other things forming the universe

निबद्धवपुषे - whose body is conceived as being made up of

भगवन् नम: - ते - O Lord! Salutations to Thee