சங்கரனின் வைரக்கூடம் 11 – மாயச் செருக்கு

Well lit balcony – a Maya?

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

பெரும் சாதனை புரிந்த உணர்வு, நம்பிக்கை நிறைந்த முகம்,  மலர்ந்த புன்னகையுடன் வரும் மகனைக் கண்டு “உன்னைப் பார்க்கும் போது எனக்கு எவ்வளவு கர்வமாக/பெருமையாக இருக்கு தெரியுமா?”  என்று கூறும் தாய் ஒரு புறம்.

“அவனிடம் சென்று எதுவும் கேட்காதே. அவன் ரொம்ப கர்வம்/பெருமை புடிச்சவன்” - அண்டை வீட்டுக் காரனைப் பற்றி கூறும் அடுத்தவன் ஒரு பக்கம்.

ஒரே சொல் - கர்வம்/பெருமை. இரண்டு எதிர்மறையான கருத்துள்ள பொருள். முதல் கர்வம்/பெருமை அடுத்தவரைப் பாதிக்காதது. இரண்டாவது, அடுத்தவரைப் பாதிப்பது. இதனை வெளிக்காட்ட ஒரு அருமையான திருக்குறள் உண்டு.


அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

திருவள்ளுவர்

மற்றவர்களுடன் ஒத்து நடக்காமல், தன் உண்மையான வலிமையின் அளவையும் அறியாமல், தன்னையே வியந்து பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பவன் விரைவிலேயே அழிந்து போவான் என்று ’தன்னை வியந்தான்’ என்ற சொல்லில் திருவள்ளுவர் கர்வம் பிடித்த மனிதர்களை மிக அருமையாக விளக்கி விடுகிறார்.

இந்த தன்னை வியக்கும் தன்மையைத்தான் கர்வம், தற்பெருமை, தலைக்கணம் என்றெல்லாம் எதிர்மறை சிந்தனையில் கூறுகிறோம்.

கர்வம் எதனால் வருகிறது, அதன் விளைவுகள் என்ன, அதனை நீக்குவதற்கு வழி எதுவும் உண்டா என்ற கேள்விகளுக்கு விடைகள், சங்கரனின் வைரக் கூடத்தில் நமக்கு கிட்டும், இந்த 11வது ஸ்லோகம் வழியாக.

வாழ்க்கையின் யதார்த்தத்தை விளக்குவதற்கு, மூன்று எடுத்துக்காட்டுகளை கோடிட்டுக் காட்டுகிறார் ஆதி சங்கரர். இந்த முக்கியமான ஸ்லோகத்தை ஆராய்வோம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

मा कुरु धनजनयौवन गर्वं

हरति निमेषात्कालः सर्वम् |

मायामयमिदमखिलं हित्वा

ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा ||

Adi Sankara

தமிழ் ஒலி பெயர்ப்பு

மாகுரு த4ன ஜன யௌவன க3ர்வம்

ஹரதி நிமேஷாத் காலஸ் ஸர்வம் |

மாயாமயமித3ம் அகி2லம் ஹித்வா

ப்3ரம்மபத3ம் தவம் ப்ரவிச’ விதி3த்வா ||

தமிழ் மொழி பெயர்ப்பு

வளம் குடி இளமை கர்வம் வேண்டாம்

கணத்தினில் கவர்ந்திடும் என்றும் காலம்

உலகே மாயம் என்பதால் விடுத்திட்டு

மெய்ப்பொருள் அறிவாய், நீயே என்று

சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள்

मा कुरु  - மாகுரு - அடைய வேண்டாம்

धनजनयौवन गर्वं - த4ன ஜன யௌவன க3ர்வம் - வளம் (செல்வம்), குடி (மக்கள்/உறவு), இளமை (இவைகளினால் வரும்) தற்பெருமை

हरति निमेषात्कालः सर्वम् - ஹரதி நிமேஷாத் காலஸ் ஸர்வம் - அழித்திடும் நிமிடத்தில் காலம் அனைத்தையும்

मायामयमिदमखिलं - மாயாமயமித3ம் அகி2லம் - உலகே மாயம்

हित्वा - ஹித்வா - துறந்து

ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा - ப்3ரம்மபத3ம் தவம் ப்ரவிச’ விதி3த்வா - மெய்ப்பொருள் அறிவாய், நீயே என்று

விளக்கவுரை

நேரடி பொருள்
“நான் பணக்காரன்” ; “எனக்கு நிறைய சுற்றத்தினர் உள்ளனர்”;“நான் இளமையுடன் எழிலுடன் (யௌவனம்) இருப்பவன்” என்றெல்லாம் கர்வம் கொள்ளாதே.

காலம் நினைத்தால் இவற்றை எல்லாம் ஒரே நிமிடத்தில் கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விடும். உலகமே பொய்க் காட்சி. பிரம்மம் மட்டுமே உண்மையானது என்று அறிந்து நீயும் பிரம்மமே என்பதை அறிந்துணர்வாயாக.
விளக்கம் 
இந்த ஸ்லோகத்தில், நான்கு தத்துவங்களை கோடிட்டு காட்டி, ஆதி சங்கரர் நிலைக்கண்ணாடியில் நம்மைப் பார்க்க உதவுகிறார். அவைகள் முறையே:

1. மனிதரின் அகந்தைகள்
2. நேரத்தின் விளைவு
3. உலகமும் மாயையும்
4. பரம்பொருளும் (பிரம்மனும்) அவனைப் பற்றிய அறிவும்.

ஒருவர் நேர்மையாகவும், உயர்ந்த குணமுடையவராகவும் இருந்தால், அவர் தன்னைத்தானே ஒரு கேள்வியைக் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று சங்கரர் சொல்லாமல் சொல்லி வைத்தார் இப்பண்ணிலே.

“இவ்வுலகில், என் வாழ்வில், நான் ஒருவன் மட்டுமே எதையாவது ஒன்றை உருவாக்கியிருக்கிறேனா அல்லது பெருமைப்படக்கூடிய ஒன்றை எனக்கு சொந்தமாக வைத்து கட்டுப்படுத்துகிறேனா?”

இது தான் அந்த கேள்வி. இதனை நமக்கு நாமே கேட்டுக்கொண்டு இருந்தோமானால், நமக்கு இந்தப் பண்ணில் உள்ள கீழ்கானும் விளக்கங்கள் புரியும். 
த4ன ஜன யௌவன க3ர்வம்

ஆதி சங்கரர் “தன, ஜன மற்றும் யௌவன” ஆகிய மூன்று வெற்று அகந்தைகளை எடுத்துக்கொள்கிறார். இவை மூன்றும் செல்வம், புகழ் மற்றும் இளமை ஆகியவற்றைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் பொய்யான மாயைகள் என்றும் அவை எந்த நேரத்திலும் மறைந்துவிடும் என்றும் கூறுகிறார்.

இந்த மூன்றும் அனைத்து ஆன்மீக முயற்சிகளுக்கும் பாரம்பரிய தடைகள். ஏனென்றால் தன்முனைப்பு எனும் அஹங்காரத்தை (ego) அழிக்கும் நோக்கமுடைய ஆன்மீகத்திற்கு எதிர்மறையாக, இந்த மூன்று அகந்தைகள், தன்முனைப்பிற்கு முட்டுக் கொடுத்து உதவும்.

இந்த மூன்று "தன்முனைப்பு முட்டுக்களை" ஆராய்வோம்.

தனம் - செல்வம்

முன்னே கூறியது போல், "நான் செல்வத்தை உருவாக்கியுள்ளேனா அல்லது இந்த செல்வத்தின் மீது எனக்கு கட்டுப்பாடு இருக்கிறதா?" என்ற கேள்வியைப் பயன்படுத்துவோம். இக்கேள்விக்கு ஆமாம் என்று என்னால் உறுதியாக பதில் கூற முடியாது. ஏன்?

என்னுடையது என்று நான் சொல்லும் இந்தச் செல்வம் எங்கிருந்து வந்தது? பரம்பரை சொத்தை விட்டு விடலாம். அது என்னால் இல்லை. நான் கடினமாக உழைத்து சம்பாதித்தது என்று நாம் கூறும் செல்வத்தை ஆய்வோம்.

என் உடலை வருத்தி புரியும் உழைப்பு, அதனால் வரும் சம்பாதிப்பு என்றால், உடனடியாக நாம் பட்டிருக்கும் மூன்று கடன்கள் நமக்கு நினைவுக்கு வரவேண்டும்.

1. நம் உடல் எங்கிருந்து வந்தது - பெற்றோரிடமிருந்து.
2. நம் உழைப்பு திறன் எங்கிருந்து வந்தது - ஆசானிடமிருந்து
3. இவரிருவரின் மூலம் எது - பரம்பொருள் எனும் இறைவன்

ஆக, இந்த மூவரும் இலையேல் எங்கிருந்து வரும், நம் கடின உழைப்பும், செல்வமும்.

எனவே தான், கடவுளுக்கும், முன்னோர்களுக்கும்/பெற்றோர்களுக்கும், நமக்கு ஆசானாக விளங்கிய ரிஷிகளுக்கும் நாம் நன்றி செலுத்தி, செலுத்த வேண்டிய கடன்களை (தேவ, பித்ரு, ரிஷி ருணம் என்று வடமொழியில் கூறுவர்) நிறைவேற்ற வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் தெளிவாகச் சொல்கின்றன.

மேலும் நமக்கு உடல் ஆற்றலைக் கொடுக்கும் உணவு எங்கிருந்து வந்தது? கன்னட மொழியில் மிகப் பிரபலாமான, திரு. டி.வி. குண்டப்பா அவர்கள் எழுதிய மக்கு திம்மா என்ற படைப்பில்

பசி களையும் கவளம் வெந்தது உன் வியர்வையிலோ
புசிக்கும் வேளை நினை, அது பிறன்தன் கண்ணீரோ
இசைவதும் நீ கொடுத்த அளவே ; தின்ற மிகுதியோ
இசித்திடும் சமியாக் கடனே -மக்குத் திம்மா

என்று அழகாக நமது கடனை எடுத்துரைக்கிறார்.

எனவே, வாழ்க்கையின் யதார்த்தங்களைப் பற்றி நாம் இப்படி உண்மையிலேயே சிந்திக்கும்போது, நம்மிடம் பணிவும், தன்னடக்கம் மட்டுமே வளரும்/இருக்கும்; பெருமை இருக்காது. இந்த அடிப்படை நன்றியுணர்வை நாம் புரிந்து கொள்ளாமலோ அல்லது உணராமலோ இருந்தால், செல்வத்துடன் வரக்கூடிய மிகப்பெரிய ஆபத்து, ஆணவம், செருக்கு, மமதை என்றெல்லாம் கூறப்படும் தன்முனைப்பு.

செல்வத்தைப் போலவே மக்களும் (உற்றார், உறவினர், நன்பர் - அவர்களால் வரும் புகழும்) இளமையும் என்றும் நிலைப்பதில்லை. முந்தைய பண்களில் (2,5,6) ஆதி சங்கரர், செல்வம் அல்லது சம்பாதிக்கும் சக்தி இல்லாத ஒருவரைத் நெருங்கிய உறவுகள் கூட அண்டமாட்டார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார் அல்லவா!

மேலும் கொழுப்பு மற்றும் சதையை அடிப்படையாகக் கொண்ட இளமையும் உடல் வலிமையும், உடலின் இயற்கையான மாற்றங்களான முதுமையும் இறுதியில் சிதைவு அடைந்தே தீரும். முந்தைய ஸ்லோகங்களில் ஆதிசங்கரர் நம் முட்டாள் மனதிற்கு, உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையேயான குத்தகை ஒப்பந்தம் முடிவடைவதற்கு நியமிக்கப்பட்ட நாளும் நேரம் வரும்போது எதுவும் நமக்கு உதவாது என்று கூறினார் என்பதை நினைவு கூற வேண்டும்.

எனவே, உலகமும் அது வழங்கும் அனைத்து செல்வங்களும் மாயை தான், அவைகள் நிலையற்றவை மட்டுமே. இதைத்தான் அடுத்த சொற்றொடரில் விளக்குகிறார் பரமனின் அவதாரமான ஆதி சங்கரர்.
ஹரதி நிமேஷாத் காலஸ் ஸர்வம்

ஆதி சங்கரர் ஹரதி, நிமேஷ கால, சர்வம் ஆகிய மூன்று முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்; எல்லாம் சில நொடிகளில் அழிந்துவிடும் என்பது நேரடியான பொருள்.

இந்த வாக்கியத்தை விவாதிக்க மற்றும் புரிந்து கொள்ள, ஒருவர் எங்கும் செல்ல வேண்டியதில்லை. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் உலக வங்கியின் தரவுகள் இங்கே:

மார்ச் 2020 முதல், 1000 நாட்களில் (86,400,000 வினாடிகள்), "இது" இதுவரை பின்வரும் தாக்கத்தை ஏற்படுத்தியது:

1. அதிகாரப்பூர்வ, உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான 6,606,624 மனிதர்களின் அகால இறப்பிற்கு “இது” காரணம். அதாவது சுமாராக ஒவ்வொரு 13 வினாடிக்கும் இவ்வுலகில் ஒருவர் மரணம் எய்யக் காரணம் “இது”.
2. கடுமையான அதிர்ச்சி அலைகள் மூலம் உலகப் பொருளாதாரத்தை உலுக்கி, இந்த நூற்றாண்டிலேயே மிகப்பெரிய உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தூண்டியது “இது”.
3. வளர்ந்து வரும் மற்றும் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரங்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வருமான இழப்பினால், வேண்டிய அடிப்படை நுகர்வுகளை மூன்று மாதங்களுக்கு மேல் தக்கவைக்க முடியவில்லை “இதன்” விளைவால்.
4. நாடுகளுக்குள்ளும் நாடுகளிலும், சமத்துவமின்மையும், வறுமையும் வெகுவாக உயரக் காரணமாக இருந்தது “இது”.

இந்த 21 ஆம் நூற்றாண்டின் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மதிகளில் , "இது" வரப்போகிறது என்பது நமக்குத் தெரியுமா? "இது" இப்படி "ஹரதி நிமேஷாத் கால: சர்வம்" செய்யும் என்று நமக்குத் தெரியுமா?

இந்த “இது” எது? அதுதான் கோவிட்-19 தொற்றுநோய்.

"அதனால்", அதாவது, கோவிட் 19 தொற்றுநோயால், செல்வம் அழிந்தது, இளமை மறைந்தது, நண்பர்கள் சில நொடிகளில் சென்றுவிட்டனர்.

இதற்கு மேல் என்ன விளக்கம் வேண்டும் இச் சொற்றொடருக்கு!

இந்த நிகழ்வுகள்,

“நீநாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார்
சாநாளும் வாழ்நாளும்”

என்று பத்து வயது பாலக ஞானி, திருஞானசம்பந்தர் அருளிய இரண்டாம் திருமுறை நினைவுக்கு கொண்டு வரும்.

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாளதுணர்வார் பெறின்

உண்மை அறிந்தோர், ஒரு தினம் என்பது கால அளவு போல் தோன்றினாலும் அது வாழ்நாளை அறுக்கும் வாள் என்று உணர்வர் என்ற திருக்குறள் இந்த சொற்றொடரைத் தழுவியதே.
மாயாமயமித3ம் அகி2லம் 

உலகம் முழுக்க மாயையால் நிரம்பியுள்ளது என்பதே நேரடிப் பொருள். உலகே மாயம். சங்கரர் வெளிப்படுத்திய மாயையின் கருத்தைப் புரிந்துகொள்ள, கோவிட்-19 பற்றிய நமது விவாதத்தை மேலும் தொடர்வோம்.

இல்லாத ஒன்று இருக்கின்ற மாயம்

நமது அன்றாட வாழ்வில், நமது உடல், மன வளாகத்தால் (பொறி புலன்களால்) உணர முடியாத “எதை”யும் பொதுவாக நாம் “அது” இல்லாதது என்றும் (இல்லையென்றும்), உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றும், “அதை”ப்பற்றி நாம் கவலையும் படுவதில்லை என்பது உலக இயல்பு அல்லவா! கண்ணால் காணும் பொருளே, நம் விரல் நகத்தைத் தாண்டிவிட்டால் அது நமது “இல்லை” என்கிறோம். காண முடியாத ஒன்றை “இருக்கிறது” என்று கூறுவோமா,இல்லை என்றுதானே “அதை”க் கூறுவோம். அந்த “இல்லாத” (அதாவது நமது பொறி புலன்களால்) உணர முடியாத ஒன்றை இப்பொழுது உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

உங்களால் "அதை" பார்க்க முடியவில்லை, என்னால்"அதை" கேட்க முடியவில்லை, மேலும் அவர்களால் "அதை" உணர முடியவில்லை. அது தான் கொடிய கோவிட்-19 வைரஸ். எனினும் “அது” பரவி இருக்கிறது அல்லவா. அகராதிகளின் வரையறையின்படி, ஒருவர் "அந்த கோவிட்-19 வைரஸை " மாயா என்றும் சொல்லலாம். இல்லாத ஒன்று என்று பொறி புலன்களுக்கு உண்மையற்றதாகத் தோன்றினாலும் அது இருந்தது, இருப்பது, இருக்கும், அது தான் உண்மை.

இருப்பது, இல்லாத மாயம்

இதேபோல், "இருப்பது, உண்மையானது" என்று தோன்றும் "உண்மையற்றதும், இல்லாததும்" உள்ளன, உதாரணமாக கானல் நீர், மந்திரவாதியின் செயல்கள் இவைகளைல்லாம் ஒரு மாயத்தோற்றம்.

நமது உடலையே எடுத்துக் கொள்வோம். நம் உடலுக்கு சுகங்களை நாம் கொடுக்க கொடுக்க, பதிலுக்கு அவ்வுடல் நமக்கு என்ன கொடுக்கிறது; துக்கத்தை ஒன்றே கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இதுவும் மாயமே. ஏனெனில் சுகமும், துக்கமும் நாம் நினைப்பது போன்ற சுகமும் துக்கமும் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக மாயை என்பது புரிந்து கொள்ள இயலாமை (non apprehension), தவறாக புரிந்துகொள்ளும் தன்மை (mis apprehension) என்ற இரண்டு தத்துவங்களை உள்ளடக்கியது.

அதாவது மறைப்பு, வெளிப்படுத்துதல் என்ற இரண்டு சக்திகளுடையது மாயை. (The AvaraNa shakti is called the power of concealment and the vikShepa-shakti the power of projection). இருப்பு இலாத தன்மை போன்று தோன்றினாலும், உடல் மன வளாகமான நம் உள்ளுணர்வில் வடிவங்களை உருவாக்கும் சக்தியுடையது மாயை.

(மாயை எனும் தத்துவத்தை, எனது மூட மனதிற்கு எட்டிய வரை https://soundar53.substack.com/p/-5- என்ற வலைதளப்பதிவில் விவரித்துள்ளேன். நேரம் கிடைத்தால் காணவும்).

எனவே தனம், ஜனம், யௌவ்வனம் போன்றவைகளைத் தவறாக புரிந்து கொண்டதால் (misapprehension) வளரும் தன்முனைப்பு என்ற கர்வம் எனும் தற்பெருமையால், நம்மை வாழ்க்கையின் யதார்த்தமான நிலையையும் அல்லது இவ்வுலகைப் பற்றிய சார்பற்ற புறநிலை உணர்வையும் புரிந்து கொள்ள இயலாமைக்கு (non apprehension) வழி வகுக்கிறது.

இதனால் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று கிளிஞ்சல் வெள்ளியென, கண்ணாடித்துகள் மணிக்கல்லென, மாக்கலந்தநீர் பாலென, கானல்நீர் தண்ணீரென மருட்சிகொண்டு, நிலையிலாதவற்றை நிலையெனக் கண்டு மயங்குவதே உலக வாழ்க்கை என்பதை உணர்த்தவே, ஆதி சங்கரரின் மாயாமயமித3ம் அகி2லம் என்ற சொற்றொடர்.
ஹித்வா

கைவிடு, துறந்திடு, விட்டுக்கொடு என்பதே நேரடிப் பொருள். ஆதிசங்கரர் இந்த (தன, ஜன, யௌவ்வன) என்ற தன்முனைப்பு முட்டுக்கள் எதிலும் நிலையான மகிழ்வைக் காண முடியாது என்பதை உணருமாறு அறிவுறுத்துகிறார். எனவே "ஹித்வா" அவைகளைத் துறக்குமாறு அவர் வலியுறுத்துகிறார்.

இந்த சொல்லிற்கான தனது விளக்கவுரையில், சுவாமி விதிதாத்மானந்தா கூறுகிறார்:

“வேதாந்தத்தில், துறவு என்பது ஒரு செயல் அல்ல; இது ஒரு மனநிலை, உலக விஷயங்களைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட அணுகுமுறை. புற நிலையில், வினைகள் புரிவதில்லை, பொருட்களை நிராகரிப்பது என்பதெல்லாம் துறவு அல்ல. விட்டுவிட்ட எதையாவதின் இழப்பை உணர்ந்தால், நான் அதை உள்நோக்கி விட்டுக்கொடுக்கவில்லை என்றுதான் அர்த்தம்”.

தூய, நிலையான மகிழ்வெனும் இலக்கை நோக்கி பயணிக்கும் நாம், சோகம், பயம் அல்லது பாதுகாப்பின்மை போன்ற உள்நோக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காண, “பொருளாகிய உலகத்தை நோக்காதே; உலகப் பொருள்களால் இவற்றைத் தீர்க்க முடியாது” என்ற இந்த உண்மையை அங்கீகரிப்பதே துறவு.

எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட அளவே யதார்த்தம் அல்லது பயன் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, அந்த அளவிற்கே அவைகளை மதிப்பிடுவது, அவைகளின் பயனை அனுபவிப்பது என்பதே இந்த “ஹித்வா” என்ற சொல்லின் பொருள்.

குறிப்பு: சமஸ்க்ருத மொழியில், சில பதிவுகளில் “ஹித்வா” என்ற சொல்லிற்கு பதிலாக “பு3த்4வா” என்று காணப்படுகிறது. அதற்கு அறிந்துணர்தல் என்ற பொருள். அதாவது எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட அளவே யதார்த்தம் அல்லது பயன் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, அந்த அளவிற்கே அவைகளை மதிப்பிட்டு, அவைகளின் பயனை அனுபவிப்பதை அறிந்துணர்தல் என்ற பொருளைக் கொள்ளலாம்.
ப்3ரம்மபத3ம் த்வம் ப்ரவிச’ விதி3த்வா

விதி3த்வா என்றால் அறிந்து, உணர்ந்த பிறகு (புரிந்து அனுபவிப்பது), த்வம் ப்3ரம்மபத3ம் ப்ரவிச’, உன்னைப் பற்றிய உண்மையை அறிந்த நீ பரம்பொருளின் (பிரம்மனின்) இருப்பிடத்தில் நுழைவாயாக என்பது நேரடிப் பொருள்.

எனவே, என்னைப் பற்றிய உண்மையை அறிந்து, பிரம்மனின் இருப்பிடத்தில் பிரவேசிக்க, நான் உலகத்தைத் துறக்க வேண்டும், அதாவது, எனது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், எனது இலக்கை அடைவதற்கும் நான் உலகத்தைச் சார்ந்திருக்கும் போது என்னை நான் அறிவதில்லை.

மனிதப் பிறப்பின் நோக்கமே தெய்வீகமாக மாறுவதுதான். மற்றவை அனைத்தும் வாழ்க்கையின் வழிமுறைகள். வாழ்க்கையின் குறிக்கோளுக்கும் வாழ்க்கை வழிமுறைக்கும் இடையில் நாம் ஒருபோதும் குழப்பமடையக்கூடாது. வாழ்க்கையின் குறிக்கோள் நமக்கு நிரந்தர மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

"பிரம்ம சத்யம், ஜகத் மித்யா" (பிரம்மம் மட்டுமே இறுதி உண்மை, மற்றும் உலகம் நிரந்தரமற்றது) என்பதை உணர்ந்து அனுபவித்தால், என் அமைதியான மனம் எந்த கவனச்சிதறல்களிலிருந்தும் விடுபட முடியும். பின்னர் என்னால் என்மேல் கவனத்தை செலுத்த முடியும். அப்படி செலுத்துகையில் தன்னைப் பற்றிய அறிவு எனும் "நீயே அது" ("தத் த்வம் அசி") என்ற மெய்ப்பொருளின் இருப்பிடத்திற்குள் நுழையலாம். ஆகாயத்தில், மேகங்களை விட மேலான சொர்கமெனும் இடத்தில், வின்னவரும் தேவதைகளும், மிளிரும் வெள்ளை நிற ஆடையில் நம்மைச் சுற்றி பறந்திடும் இடமல்ல அது. அந்த இடம் உன்னிடமேதான் உள்ளது.

இங்கேயே, இப்பொழுதே வீடுபேறு எனும் விடுதலை நிலை தன்னை அறிந்தோர்க்கு. இதைத்தான் ஆதி சங்கரர் 9வது ஸ்லோகத்தில் “நிஸ்சல தத்த்வே ஜீவன்முக்தி:” என்று கூறினார்.

முடிவுரை

உலகத்தின் நிலையற்ற தன்மையும் அதன் இன்பங்களும் நம்மை நம் உறக்கத்திலிருந்து நம்மை எழுப்ப வேண்டும். நாம் நமது உடல் மன வளாகத்தைப் பயன்படுத்தி, இவைகளனைத்தும், சாராம்சத்தில் வெறும் மாயை (மாயா) என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பரம தத்துவமான பிரம்மத்தை அறிந்து, அதில் நமது உணர்வை இணைப்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் ஆத்மாவே உண்மையான நிரந்தரமான மெய்ப்பொருள், அதுவே பரம்பொருள் எனும் நிலையான உண்மை. அதுவே தூய இருப்பு, தூய உணர்வு, தூய பேரின்பம்.

ஆதி சங்கரரின் இந்த முக்கியமான செய்தியை நாம் ஆழ்ந்து உணரவேண்டும். அடுத்த வலைப்பதிவில் அடுத்த ஸ்லோகத்திற்குச் செல்வோம்.

அதுவரை……

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

Sankara’s Smithy – Strike 10 – The cause and effect blow

Introduction

Science at best  “describes” the Universe and life in this Universe whereas Vedanta “explains” them. The former is an outward looking study based on “multiple objects” whereas the later is an inward looking journey based on the “single subject”.  

So far, in the last eight verses, Adi Sankara drove home the point that one should realise and understand that the body, wealth, lust, life, family, relatives and our different states of physical and economical growth are all impermanent and won’t provide the permanent, sorrow free, pure happiness that we all are looking for as the goal in our lives and we should focus on the eternal, ultimate reality, Brahman otherwise known as Govinda.

Adi Sankara, now takes again, two of the above issues that are easily connected and understood by common man viz., lust and wealth and makes us understand that in our daily life,

1. if there is no fruit, there is no relationship ; as long as there is fruit, there is relationship.
2. Focusing on the effects won’t do any good as long as one doesn’t understand what the root cause is.

In four precise and concise sentences, Adi Sankara brings out clearly what today’s professionals call “root cause analysis” or DISO (dig in and sort out). Where the cause has ended, the effects cannot continue; therefore it is worthless to pursue them and shouldn’t be our sole attention.

Let us examine the Sloka.

Sanskrit Verse

वयसि गते कः कामविकारः

शुष्के नीरे कः कासारः ।

क्षीणे वित्ते कः परिवारो
ज्ञाते तत्त्वे कः संसारः ॥१०॥

Adi Sankara

English Transliteration

Vayasi gatē kaḥ kāmavikāraḥ

śuṣkē nīrē kaḥ kāsāraḥ ।

Kṣīṇē vittē kaḥ parivārō

jñātē tattvē kaḥ sansāraḥ ॥10॥

Meaning of the Sanskrit Words

वयसि गते - vayasi gate - When youthfulness has passed

कः कामविकारः - kah kaama vikaara: - where is lust and its play

शुष्के नीरे - sushkE neerE - When water has dried up

कः कासारः - kah kaasaarah - where is the lake

क्षीणे वित्ते - Ksheene vittE - When wealth is spent

कः परिवारो - kah parivara: - where are the relation

ज्ञाते तत्त्वे - jnaatE tatvE - When the Truth is realized

कः संसारः - kah samsaarah - where is the bondage/ samsaar/cycle of birth and death

Meaning in English

Just as the tremor of lust in youth automatically disappears in old age; just as a lake is only a stretch of land when water is dry; just as a wealthy man, when reduced to poverty is devoid of servants; so one who attains self-knowledge is rid of ephemeral pleasures.

Explanation

The wisdom to discern the eternal from the ephemeral, comes only if we understand the temporary nature of the material world. That is what Adi Sankara tried to drill into our ignorant and foolish minds through the previous Slokas.

When one talks about eternal and ephemeral to common men like us, he/she has to invariably talk about two subjects which are wired into us. ; lust and wealth; the former is naturally instinctive (physiological & biological need) and the later wired through our relationships(socially induced). Adi Sankara takes up these two to drive home the point.

How can there be an expression of lust in the body when youthfulness is no more? There cannot be lust when youthfulness is spent because youthfulness is a cause, and the expression of lust, an effect. The idea is that when the cause is gone, the effect cannot remain. The impermanence of lust was also discussed in Sloka 3. A day to day phenomenon which we see - birds flocking to the water bodies when water is full and migrating to other places when water dries up, is taken as reference to drive home this point.

Similarly, when your wealth is no more with you, where are the followers? Wealth here means money or power, position, or some skill. Only as long as these things are there will people look up to you or follow you. When the cause is no more, the effect is no longer there as well. We studied this in detail in Slokas 2 & 5.

This verse tells us how to deal with the effect by addressing the root cause. For this let us try to understand the Sanskrit Word “ samsara”. What is samsara?

‘Samyak sarati asmin iti samsaraH’. The word samsara is made up of sam and sara. The word sara is derived from sr , to move. Sarati is the one who moves. Sam comes from samyak, meaning constant. samsara_ – samyak sara, that in which there is constant movement. What kind of motion is this? It is motion from one birth to another, from one situation to another, one accomplishment to another, and one becoming to another. Man is always trying to become something. This life of becoming is called samsara” .

Swami Viditatmananda says “ The problem of samsara is the constant sense of self-rejection or self non-acceptance. There is a constant current of self non-acceptance in me. I am not satisfied with the way I am now. On the one hand I do not accept myself as I am, and on the other, I cannot tolerate this self non-acceptance either. Therefore, there is an immediate impulse or urge to become acceptable to myself. Thus arises an effort or action on my part to become acceptable. A poor man wants to become rich, a weak man wants to become strong, a strong man wants to become stronger, a man who is not educated wants to get educated, a man in the east wants to go to the west, and so on. Every man or woman wants to become something, and this need reflects the dissatisfaction with one’s present state. Thus, the fundamental problem of the human being is his constant dissatisfaction with himself.

Why does this complex arise in the human being? It arises out of self non-acceptance. There is a constant battle going on within us; we don’t require a battle outside. That is samsara.

What is this freedom from samsara that we seek? It is nothing but freedom from this sense of self non acceptance or self-rejection, freedom from the need to become something. In reality, the only freedom that we have to acquire is inner freedom, a freedom from the compulsion within, that I must change. Sri Sankaracarya says, Jnate tattve kaH samsaraH. When the tattva or truth is known, where is the samsaraH? What is this truth”?

It is the truth of the Self. When can that truth be known? We studied that in detail Sloka 9, the progressive ladder to climb for understanding the Truth. “Nirmohatve niscalatattvaH”, the truth can be known only when the mind is free from raga-dvesas and has the clear perception that enables it to see the truth.

This clarity comes as a result of worship of God, and therefore, the worship of God becomes a means for gaining the knowledge of the Self. Therefore “Bhaja Govindam” says Adi Sankara.

Conclusion

What Shankara says here is Cause & Effect Theory. In the book ‘Manual of Self-Unfoldment’, Swami Chinmayananda speaks about four laws of Cause & Effect.

1. For every effect, there is a cause.2. Cause is nothing but effect in a different form.3. If the cause is removed, there is no effect.4. The cause is concurrent and inherent in the effect.

If we are able to think over this deeply, we will realize how to tackle any problem at the Cause level so that the Effect is never generated.

Misery is the Effect. Ignorance is the Cause. The Solution is Para Vidya, knowledge of the Supreme Reality.

Adi Sankara literally sums up his previous Slokas in this wonderful verse. Let us try and consolidate our learnings and get ready for the next input from him. Until then……

God Bless

சங்கரனின் வைரக்கூடம் 10 – காரணம் அறிவாய்

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

நிலையற்ற இவ்வுலகில், நிலையாதவற்றை நன்கு அறிந்து, நிலையாமையை உணர்ந்து உள்நோக்கினால்தான், இல்லாதது ஒன்றில்லை, எல்லாமே நீயென்று சொல்லாமல் சொல்லிவைத்த பரம்பொருளை அறியும் ஞானம் நல்லோர் இணக்கத்தால் நமக்கு கிட்டும் என்பதனை ஆதி சங்கரர், முந்தைய ஸ்லோகங்கள் வழியாக அறிவிலிகளான நம் மூடமனதிற்கு எடுத்துரைத்தார்.

நம்மைப் போன்ற சாமானியர்களிடம் ஒருவர் நிலையானது மற்றும் நிலையற்றது என்ற ஆழ்ந்த தத்துவங்களை உணர வைக்க முயலும் போது, நமக்கு விருப்பமான, நமக்குள் இணந்து, நாம் எளிதில் பிடித்துக்கொள்ளக்கூடிய இரண்டு விஷயங்களையாவது சம்பந்தப்படுத்தி (இணைத்து) பேசினால் நமது கவனம் அந்த தத்துவங்களின் மீது நிலைக்கும். இது ஆசான்கள் கடைப்பிடிக்கும் ஒரு யுக்தி.

இவைகள்தான் காமம் மற்றும் செல்வம்; முந்தையது இயற்கையாகவே உள்ளுணர்வு (உடலியல் மற்றும் உயிரியல் தேவை) மற்றும் இரண்டாவது நமது உறவுகள் (சமூக ரீதியாக தூண்டப்பட்டவை) மூலம் நம்மிடம் இணைக்கப்பட்டுள்ளது.

ஆதி சங்கரர் இந்த இரண்டையும் எடுத்துக்கொண்டு, நமது அன்றாட வாழ்வில், பலன் இல்லையேல் பந்தம் இல்லை, பலன் இருக்கும் வரையே பந்தம் என்றும், காரணத்தை விட்டுவிட்டு விளைவுகளை மட்டுமே நோக்கமாக வைத்து வாழ்வது மடமை என்றும் நமக்கு புரிய வைக்கிறார், இந்த ஸ்லோகத்தில்.

வாருங்கள், சங்கரனின் வைரக் கூடத்தில் இவைகளை ஆராயலாம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

वयसि गते कः कामविकारः

शुष्के नीरे कः कासारः ।

क्षीणे वित्ते कः परिवार:

ज्ञाते तत्त्वे कः संसारः ॥१०॥

ஆதி சங்கரர்

தமிழ் ஒலி பெயர்ப்பு

வயஸி க3தே க: காமவிகார:

சு’ஷ்கே நீரே க: காஸார: |

க்ஷீணே வித்தே க: பரிவார:

ஜ்ஞாதே தத்வே கஸ் ஸம்ஸார: ||

தமிழ் மொழி பெயர்ப்பு

முதுமை வயதினில் காமம் எங்கே

நீர்வடி பின்னர் குளம்தான் எங்கே

செல்வம் குறைந்தால் சுற்றம் எங்கே

தத்துவ மறிந்தால் பிணியும் எங்கே

சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள்

वयसि गते - வயஸி கதே , வயதானபின்பு, 

कः कामविकारः- க: காமவிசார - எங்கே சிற்றின்பம்

शुष्के नीरे - சுஷ்கே நீரே – நீர் வற்றிய பின்பு,

क: कासार: - க: காஸார:, ஏரி எங்கே இருக்கிறது?

क्षीणे वित्ते - க்ஷீணே வித்தே – செல்வம் போனபின்பு,

कः परिवार: - க: பரிவார: , யார் பின்தொடர்வார்?

ज्ञाते तत्त्वे - ஞாதே தத்வே- ஆத்மாவை உணர்ந்தவனுக்கு,

कः संसारः - க: சம்சார: , பிறவிப்பிணி/சம்சாரம் ஏது?

விளக்கவுரை

நேரடி பொருள்
முதிர்ச்சி அடையும்போது (அதாவது இள வயது போய் வயதாகும்போது) என்ன காம விசாரம்? ஜலம் வற்றின் பிறகு எங்கே தடாகம் (ஏரி)? தனமில்லதாகும் பொழுது எங்கே சுற்றத்தார்கள்? இதனை அறிந்தால் பிறவிப்பிணி எங்கே? 
விளக்கம்
முதல் மூன்று சொற்றொடர்களின் விளக்கம்

இளமையே இல்லாத நிலையில் உடலில் காமம் எப்படி வெளிப்படும்? இளமை கழிந்தால், காமம் இருக்க முடியாது. ஏனெனில் இளமை ஒரு காரணம், காமத்தின் வெளிப்பாடு ஒரு விளைவு. காரணம் இல்லாமல் போனால் விளைவு நிலைத்திருக்க முடியாது என்பது கருத்து. இளமை, காமம் இவைகளின் நிலையற்ற தன்மையும் ஸ்லோகம் 3, 7ல் விவாதிக்கப்பட்டது.

நமது செல்வம் நம்மிடம் இல்லாதபோது, நம்மைப் பின்தொடர்பவர்கள் எங்கே? இங்கு செல்வம் என்பது பணம், அதிகாரம், பதவி அல்லது சில திறமைகளைக் குறிக்கிறது. இந்த விஷயங்கள் இருக்கும் வரை மட்டுமே மக்கள் உங்களைப் காண்பார்கள், உங்களைப் பின்தொடர்வார்கள். காரணம் இல்லாதபோது, விளைவும் இருக்காது. இதை ஸ்லோகங்கள் 2 & 5ல் விரிவாகப் படித்தோம்.

நீர் நிரம்பினால் நீர்நிலைகளில் பறவைகள் கூட்டமாக வருவதும், தண்ணீர் வற்றியவுடன் மற்ற இடங்களுக்கு இடம்பெயரும் நாம் காணும் அன்றாட நிகழ்வினை சுட்டிக்காட்டி ஆதி சங்கராச்சார்யர் இந்த நிலையாமையை எடுத்துக்காட்டுகிறார்.

அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல
உற்றுழி தீர்வார் உறவு அல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

என்ற ஔவையின் பாடலும்,

குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ளே சொந்தமில்லே

கவிஞர் கண்ணதாசனின் இப் பாடலும் இதைத் தழுவியதே.
இந்த உவமான உவமேயங்களை வைத்து, இறுதி சொற்றொடரில், நமக்கு தத்துவங்களப் போதிக்கின்றார் ஆதி சங்கரர்.
இறுதி சொற்றொடரின் விளக்கம்
ஜ்ஞாதே தத்வே கஸ் ஸம்ஸார: - (ஆத்ம) ஞானம் கிடைத்தபிறகு ஏது ஸம்ஸாரம்? என்பது நேரடி பொருள். இதன் உட்பொருளில், இரண்டு தத்துவங்களை உள்ளடக்கியது இந்த சொற்றொடர்; சம்சாரம் (பிறவிப் பிணி), ஆத்ம ஞானம் (மெய்ப்பொருள் அறிவு). இவைகளை இப்பொது சுருக்கமாக அறிய முயலலாம். 

சம்சாரம் (பிறவிப்பிணி)

இந்த தத்துவத்தை அறிய ஒரு வினாடிவினா கேள்வியும் விடையும். இதோ!

உண்டதும் தீரும், உரிய காலத்தில் திரும்பி வரும். அது என்ன?

ஒன்று பிறப்பு; இன்னொன்று பசி. மணிமேகலை பசியை பிணி என்றே கூறுகிறது. பசிப்பிணி தீர்க்க அட்சயபாத்திரம் பெற்றாள் மணிமேகலை என்பது இலக்கியம். பசியானது உணவு உண்டதும் போய்விடும், ஆனால் சிறிது கால இடைவெளியில் திரும்ப வந்துவிடும்;அது போலவே பிறவியும் ஒருவகையில் பிணியே; ஏனெனில் இப்போது இருப்போம், இறப்போம். மீண்டும் பிறப்போம், மீண்டும் இறப்போம். அதனால் தான் பெரியவர்கள் பிறவியை பிணி என்றனர்

பிணி என்ற சொல்லுக்கு உரைநடையில் நோய், வியாதி என்ற பொருள் சொல்வோம். ஆனால் ஆன்மீகத்தில் உள்ள பிணி என்பதன் பொருள் வேறு. எப்படி? வியாதி நோய் போன்றவை மருந்து சாப்பிட்டால் தீரக்கூடியவை. ஆனால் பிணி என்பது தீராதது.

சம்சாரம் என்றால் என்ன? ஸ்வாமி விதிதாத்மானந்தா கூறுகிறார்

‘ஸம்யக் சரதி அஸ்மிந் இதி ஸம்ஸாரஹ’ என்று கூறுவர் வடமொழியில். சம்சாரம் என்ற சொல் சம் மற்றும் சாரத்தால் ஆனது. சர என்ற மூல வார்த்தையிலிருந்து உருவானது. சர என்றால் அசைவு, இயக்கம் என்று பொருள. சம்ய என்றால் மாறா அல்லது இடைவிடா என்று பொருள். அதாவது இடைவிடா இயக்கம் எனப்பொருள். இது என்ன வகையான இயக்கம்? பிறப்பு-இறப்பு-பிறப்பு எனும் இயக்கமே. இதனைத்தான் சம்சாரம் என்று கூறுகிறது மறைகள்.

“சம்சாரத்தின் அடிப்படை பிரச்சனை என்னையே நான் அறியாமல் இருக்கும ஒரு நிலையான நீரோட்டம்தான். நான் இப்போது இருக்கும் விதத்தில் திருப்தி இல்லை. இந்த நிலையை, நான் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை,இதனை பொறுத்துக் கொள்ளவும் முடியாது. எனவே, நானே ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக மாறுவதற்கான உடனடி உந்துதல் அல்லது தூண்டுதல் என்னுள் உள்ளது. எனவே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆவதற்கான முயற்சி அல்லது நடவடிக்கை என்னில் எழுகிறது. ஒரு ஏழை பணக்காரன் ஆக விரும்புகிறான், பலவீனமானவன் பலமாக மாற விரும்புகிறான், வலிமையற்றவன் வலிமையாக விரும்புகிறான், படிக்காதவன் கல்வி கற்க விரும்புகிறான், கிழக்கில் உள்ளவன் மேற்கு நோக்கிச் செல்ல விரும்புகிறான். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஏதோவொன்றாக மாற விரும்புகிறார்கள்; இந்தத் தேவை ஒருவரின் தற்போதைய நிலையில் உள்ள அதிருப்தியை பிரதிபலிக்கிறது. எனவே, மனிதனின் அடிப்படைப் பிரச்சினை, அவன் தன்மீது உள்ள நிலையான அதிருப்தியே. இந்த சிக்கல் ஏன் மனிதனில் எழுகிறது? இது தன்னை ஏற்றுக்கொள்ளாததன் விளைவாக எழுகிறது. நமக்குள் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருக்கிறது; இதுதான் சம்சாரம்” என்கிறார் சுவாமி விதித்தாத்மானந்தா.

ஆத்ம ஞானம் (மெய்ப்பொருள் அறிவு)

அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல் அதிகாரத்தில் திருவள்ளுவர், குறள் 355ல்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்றுரைத்தார். இதற்கு, பரிமேலழகர் அவரது விளக்க உரையில், “யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும், அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது. (பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று)” என்கிறார்.

எவ்வித அறிவும் நிகழ்வதற்கு நான்கு அம்சங்கள் தேவை. இவை நான்கும் இன்றியமையாதவை.

1. அறிவு நிகழ்வதற்கு நிலைக்களனான அறிபவன். இவனை வடமொழியில் பிரமாதா என்பர்.
2. அறியப்படும் பொருள். இது பிரமேயம் எனப்படும்.
3. அறிவு வரும் வழி. இதனை பிரமாணம் என்பர்.
4. அறிவு. இது பிரமிதி எனப்படும்.

ஆத்ம ஞானம் எனும் மெய்ப்பொருளை அறிய இந்த நான்கிலும் நமக்கு தெளிவு வேண்டும்.

“உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்”

என்ற திருமந்திரத்திற்கிணங்க, உடம்பு, உள்ளம், ஊண், சீவன், சிவன் என்ற தத்துவங்களை படிப்படியாக அறிந்துணருவதே மெய்ப்பொருள் அறிவு.

இந்த அறிவை அடைவதற்கு நான்கு அடிப்படையான, மிகவும் இன்றியமையாத தகுதிகள் ஒவ்வொருவருக்கும் தேவை. இதனை ஸாதன சதுஷ்டைய சம்பத்து என்பர் வடமொழியில். இவைகள் கீழ்வருமாறு:

1. பகுத்தறிவு (நிலையானவை, நிலையற்றவை எவை என்று அறியும் நித்ய அநித்ய விவேகம்),
2. மன உறுதி (நிலையற்ற பொருட்களின் மீதான பற்றின்மை எனும் வைராக்கியம்),
3. மறைகள் விதித்த விலக்கப்பட வேண்டியவைகளை மனதால் நாடாத, நினையாத சமாதிஷட்3கம்,
4. மனதிலுள்ள நிறைவின்மையிலிருந்து முழுமையாக விடுதலை வேண்டும் என்ற உறுதியான புத்தி எனும் முமுக்ஷுத்வம்.

ஆத்ம ஞானம் அடைவதற்கு விசாரம் என்கின்ற ஒரேயொரு பாதைதான் இருக்கிறது. உபநிஷத்தும், குருவும் ஆத்ம ஞானத்தை அடைய உதவும் பிரமாணங்கள். இவைகளை பயன்படுத்தி நான் யார்? (ஜீவன் சம்பந்தமான கேள்வி) பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த உலகம் எப்படி தோன்றியது? (ஜகத் விஷயமான கேள்வி) இதற்கு காரணமாக இருப்பவர் யார்? (ஈஸ்வரன் விஷய கேள்வி) எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பது எது? என்ற கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொண்டு அதற்கான பதிலை தேடி அடைவதே ஆத்ம விசாரம் செய்ய வேண்டியமுறையாகும்.

மறைகள், அதை உபதேசிக்கும் குருவின் மீதும் சிரத்தை இல்லாதவர்களுக்கு ஆத்மாவை புரிந்து கொள்வது கடினம்.

ஆத்மாவின் அறிவு எனும் உண்மை எப்போது தெரியும்? உண்மையைப் புரிந்துகொள்வதற்கான ஏணிப்படிகளை ஸ்லோகம் 9ல் விரிவாகப் படித்தோம். “நிர்மோஹத்வே நிச்சலதத்வா”, மனம் ராக த்வேஷங்களிலிருந்து விடுபட்டு, உண்மையைக் காணும் தெளிவான உணர்வைப் பெற்றால்தான் உண்மையை அறிய முடியும்.

இந்த தெளிவு, நல்லோர் இணக்கத்துடன், குருவின் உபதேசத்துடன், இறையருளால், இறையை வணங்குவதன் விளைவாக வருகிறது, எனவே “பஜ கோவிந்தம்” என்கிறார் ஆதி சங்கரர்.

ஆக, இந்த சம்சாரத்திலிருந்து விடுதலை என்றால், நாம் யார் என்பதை அறிந்து நம்மை நாம் உணர்வது. இந்த அறிவைத்தான் ஆதி சங்கரர் தத்துவம், உண்மை என்கிறார்.

தன்னைத் தான் உணரத்தீரும் தகையறு பிறவி என்பது
என்னைத் தான் மறையும் மற்றத் துறைகளும் இசைத்த வெல்லாம்
முன்னைத் தான் தன்னை ஓரா முழுப்பிணி அழுக்கின்மேலே
பின்னைத் தான் பெறுவது அம்மா நறவுண்டு திகைக்கும் பித்தோ

–கிட் கிந்தா காண்டம், கம்பராமாயணம்

பொருள்:-
ஒருவன் தன்னை அறிந்துகொண்ட அளவில் பிறவிப்பிணி நீங்கிவிடும் என்று வேதங்களும் மற்ற சாத்திரங்களும் சொல்லுகின்றன. இந்த மெய்யறிவைப் பெறாததால் பிறவி நோய்க்காளாகும் இந்த அழுக்குடலைப் பெற்றிருக்கிறேன் இத்தோடு நில்லாமல், போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்ற பழமொழிக்கு ஏற்ப கள்ளை உண்டு மனமும் மயங்குவது தகுமோ! (சுக்ரீவன் வருந்திச் சொன்ன பாடல் இது). குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வருத்தப்படும் சுக்ரீவனின் வாய் வழியாக இந்தப் பெரிய கருத்தை வலியுறுத்துகிறான்.

ஜ்ஞாதே தத்வே கஸ் ஸம்ஸாரஹ. ஆத்ம ஞான தத்துவம் அல்லது உண்மையை அறிந்தால், சம்சாரம் எங்கே என்கிறார் ஆதி சங்கரர்.

முடிவுரை

ஆதி சங்கரர் இங்கே சொல்வது காரணங்களையும் அதன் விளைவுகளையும் பற்றியது. ஸ்வாமி சின்மயானந்தா, ‘ஆத்ம விரிவு (Self Unfoldment) என்ற புத்தகத்தில், காரணம் மற்றும் விளைவு பற்றிய நான்கு விதிகளைப் பற்றி பேசுகிறார்.

1. ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. 2. காரணம் என்பது வேறு வடிவத்தில் உள்ள விளைவைத் தவிர வேறில்லை. 3. காரணம் நீக்கப்பட்டால், எந்த விளைவும் இல்லை. 4. காரணம் ஒரே நேரத்தில் மற்றும் விளைவில் உள்ளார்ந்ததாக உள்ளது.

இதை ஆழமாகச் சிந்திக்க முடிந்தால், எந்தப் பிரச்சனையையும் காரண மட்டத்தில் எப்படிச் சமாளிப்பது என்பதை நாம் உணர்வோம், அதனால் விளைவு ஒருபோதும் உருவாக்கப்படாது.

துன்பமே விளைவு. அறியாமையே காரணம். அறியாமையை விரட்டுவது ஞானம். அந்த ஞானமே பரம்பொருள் அறிவு. இதனை பரவித்யா என்பர்.

ஆதி சங்கரர் தனது முந்தைய ஸ்லோகங்களின் சாரத்தைப் பிழிந்து ரசமாக நமக்கு இந்த அற்புதமான ஸ்லோகத்தில் வழங்குகிறார். நாம் இதுவரை கற்றவைகளை ஒருங்கிணைத்து, இந்த ரசத்தைப் பருகி, அடுத்த உள்ளீட்டிற்குத் தயாராகி விடுவோம். அதுவரை……

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

Sankara’s Smithy – Strike 9 – The progressive blow

Satsangh

Introduction

The first eight verses Adi Sankara’s Bhaja Govindam, come as heavy hammer blows to blast us out of our comfortable anchors in life. That is the first phase of spiritual transformation. 

Now we come to the first of the verses that extend a positive helping hand to the seeker of Truth.

Man is a gregarious animal. He wants associates; he wants companions; he must have society. Rare is he who can live by himself. Why? Because man has been made so, created so. The Lord created man with the senses going outward therefore he perceives, seeks things outside,’ says the Kathopanisad.

His delights are outside of himself. He wants to share his thoughts, his sorrows, his joys with others. For where is the man who can say that he will not share some good news, that gives him happiness, with another who is likely to appreciate his talents, or envy his success? In sorrow and in disease, man really needs somebody, who would sympathise with him, who would feel for him.

In our everyday life we meet with such situations where we share joy, grief, pain and pleasure in an atmosphere that is conducive (in listening to us). This means that an atmosphere is not merely physical but something more. And this other atmosphere acts on the psychic being of man as the outer climate and atmosphere acts on his body. The psychic being in man can be and is influenced by the environment he lives in, by the company he keeps.

‘Tell me with whom thou art found, and | will tell thee who thou art,’ said the German poet- philosopher Goethe.

So, it has been a universal experience, all through the ages, all
through the climes and all throughout the world that, but for a few
exceptions, all men desire company; and that association influences them as sure as milk acted upon by acid transforms itself into curd. That being so it behoves all to take good care with what type of people they associate. It can be inferred by your own experience in life. Spiritual personages have emphasized the need of keeping holy company, on all aspirants

It is important that if one wants to evolve oneself to his/her true potential (both materially and more importantly spiritually) one should should seek out like minded good company. Such good company comes in the form of great teachers and religious exponents, spiritually inclined friends and colleagues, prayer groups, religious discourses and gatherings, etc.

Swami Chinmayananda commenting on this sloka states that in this sloka Adi Sankara has given a ladder of progress in the spiritual field to beginners in devotion.

Let us try and understand the Sloka in its entirety.

Sanskrit Verse

सत्संगत्वे निस्संगत्वं,

निस्संगत्वे निर्मोहत्वं।

निर्मोहत्वे निश्चलतत्त्वं,

निश्चलतत्त्वे जीवन्मुक्तिः ॥९॥

Adi Sankara

English Transliteration

Satsangatve nissangatvam 

nissangatve nirmohatvam,

nirmohatve niscalatattvam

niscalatattve jivanmuktiH

Meaning of the Sanskrit Words

सत्संगत्वे - Satsangatve = through the company of the good          

निस्संगत्वं -nissangatvam = ( there arises) non attachment/dispassion

निस्संगत्वे - nissangatve = through non attachment/dispassion

निर्मोहत्वं - nirmohatvam = ( there arises) freedom from delusion

निर्मोहत्वे - nirmohatve = through freedom from delusion

निश्चल - nischala = immutable or unchangeable

तत्त्वं - tatvam = Reality

निश्चलतत्त्वे - nishchalatatve = through this immutable Reality/from the steadfast establishment in the Truth

जीवन्मुक्तिः - jivanmuktih = state of liberation/one becomes realized / released from bondage, here and now, while alive.

Meaning in English

Through the company of the good and wise people arises non attachment. Through non attachment arises the freedom from delusion, when there is freedom from delusion, there is unchangeable reality. On experiencing this unchangeable reality, there comes liberation or freedom. Seek Govinda.

Explanation

The steps in the ladder that Swami Chinmayananda was referring are 

1. Satsangam - association of good people
2. Nissangatvam - non attachment
3. Nirmohatvam - freedom from delusion
4. Nishchalatatvam - steadfastness
5. Jeevan Mukti - liberation in life

Let us try to understand each one of these steps.

Satsangh

Satsang is a Sanskrit term derived from two roots: sat meaning "true’"and sangha meaning community, company or association.

It can be translated as "associating with good people" or simply "being in the company of truth," and refers to the act of gathering with like-minded, uplifting people, especially those on a spiritual path.

The mind requires a suitable atmosphere to grow, in much the same way as a little plant does. As a sprout, it is very delicate and requires a lot of care and nurturing. Our mind is also like this sprout. It has to be taught and trained to follow certain values and priorities so that we get a proper perception of life.

Satsang, or the company of those who are good and have wisdom and insight exerts a positive influence upon us. We need an inspiring atmosphere in order to maintain our enthusiasm in a conducive and positive manner.

In modern times, satsang has evolved to mean any gathering in which spiritual reflection, discussion, meditation or teaching takes place. It helps to remove the negative thoughts, material attachments and mental obstacles that block the path to Self-realisation.

Swami Paramarthananda classifies Satsangh into three levels depending on the meaning of the word Sat.

1. At the first level, the word Sat means a person who has got noble values. He is a man of values (Dharma Purusha) who does not compromise with values and adheres to the dharmic values. This is the operational level of “good” people. The primary focus is on action and adherence as laid down by scriptures. By sheer association with such a Dharmic person one will effortlessly imbibe these values. The focus will be on “appropriate, clean, balanced and non-binding desires that will help the society” says Swami Omkarananda. However in this level, the inner growth (inward looking journey) is limited due “avidya” - the lack of knowledge about Self.

2. In the second level of Satsangh, the word Sat means Jnana Purusha or Jnani. As every Jnani has values, the association with a Jnani has two fold benefits. The first benefit is one will imbibe values and the second benefit is one will get an opportunity to imbibe knowledge also. Learning the scriptures from a Jnani sat purusha is the second level of Satsangh.

3. In the third stage of Satsangh, the word Sat means Brahman itself. Association with Brahman itself means removal of ignorance that I am away from Brahman, through the knowledge gained from scriptural study that I am Brahman, “Aham Brahmasmi”, i.e. Brahma Prappti or Brahma Ikyam.

As philosopher Mooji says

“Satsangh is the invitation to step into the fire of self-discovery. This fire will not burn you, it will burn only what you are not.”

Therefore Adi Sankara advises us to keep the company of “good”, the divine centred people who are seeking and spreading the knowledge of “Truth”, as proper environment and company is necessary to start the process of detachment.

At any cost, we must avoid the company of the bad and the company of non-believers or those who can shake our sraddha. We should avoid discussion with others; there is no need for us to go around convincing others, or preaching to them. More often than not, they will convince us otherwise.

As Swami Chinmayananda used to say, “The Rudraksha Mala around Shankaracharyaji’s neck did not get realization!” Mere physical closeness does not ensure the awakening of knowledge and understanding. We have to be ‘in touch’ with what the saint stands for. What is necessary is that we must grow and realize how important this self-growth is.

Thus, when we keep the company of the good, we slowly grow out of the influence of the bad. Our personal commitment to pure thoughts through Satsangam gives us the access to the next step.
Nissangatvam
Satsang sets the ball rolling. The first fruit of Satsang is seen when we become a little detached to things we once clung onto with intense attachment. The light of Satsang lifts the veil of delusion that clouds our intellect. From that point onwards spiritual life begins in earnest.  With the influence of good people, the mind develops a secret of detachment. Everyone is talking about seeking the highest. We all know its the mind that puts value to the objects. Once the mind realizes that one needs to develop detachment to the objects, the person is at the second step in the ladder.

Now here is a word of caution from Swami Viditatmananda.

“We must clearly understand what attachment and detachment do not mean. Very often, people think that giving up attachment means giving up contact with the family, or running away from the world. In fact, you cannot run away from the world because it is present everywhere in some form or the other. Therefore, it is not the physical objects of the world, but your dependence on them that has to be given up. People mistakenly interpret detachment as being an aversion to the sense objects or to the world. The teachers do not ask not to have any contact with the world. The world is meant for our enjoyment. They are only teaching us how to enjoy things. Enjoyment is having a relationship which is free from either dependence or demand, either attachment or aversion. Aversion is but a distorted form of attachment. Therefore, attachment and aversion (raga and dvesha), are the two sides of the same coin. Both represent bondage and dependence. They lead to an unhealthy relationship in which I lose my objectivity to the situations of the world; I allow my happiness to be determined by the situations and objects around me. In being attached, I superimpose a greater value on something than it has, and in having aversion, I see less value in it than it deserves. Thus, when it is said that we should become free from attachment, it also means that we should seek to become free from aversion”.

It is satsanga, the company of the good that enables us to slowly become free from both attachment and aversion. What is meant by satsangatve nissangatva is that in the company of the wise, I slowly develop composure of the mind and a freedom from the reactions of likes and dislikes and become objective. I learn to develop an objective perception of the world and deal with the realities of life, rather than living in a world defined by how I see it.
Nirmohatvam 
This means free from “moha”. To understand this term, we should first understand what is “moha”. 

The Monier-Williams Sanskrit-English Dictionary explains moha as 'loss of. consciousness, bewilderment, perplexity, distraction, infatuation, delusion, error. '

It is delusion of mind which prevents one from discerning the truth (makes one believe in the reality of worldly objects and to be addicted to the gratification of sensual pleasures).

नित्य अनित्य अविवेक: इति मोह: (nitya anitya aviveka: iti moha:).

So, a deluded mind superimposes an unjustified value upon the things of the world through Raga-devsha (attachments and aversions) as impurities. A mind under the influence of raga-dvesha is an impure and reactive mind. When something confirms my attachment I get elated and when something contradicts it I get depressed. Elation is the product of raga and depression is the product of dvesha. While I cannot see my raga-dveshas directly, when I find myself reacting I can see the product of these raga dveshas. These reactions could be anger, greed, resentment, repression, sadness etc. A reactive mind is thus an impure mind.

As the mind becomes clear, it slowly becomes free from moha or delusion. As the mind slowly becomes free from this moha it becomes free from raga and dvesha.

To the extent that the mind is pure, it enjoys peace, serenity, and composure, and to the extent that the mind is composed, it enjoys balance or equipoise. Just as water becomes transparent and pure when you remove the dirt from it, so also, as the impure thoughts are removed from the mind, it becomes pure and serene, and we enjoy tranquility of the mind - niscalatattvam
Niscalatattvam
When the mind becomes tranquil, it becomes objective. It is then able to understand the purport of the scriptures. Until then, whatever we hear is processed by a mind which is distorted by raga-dveshas. When those distortions are not there, the mind is able to truly appreciate the unfoldment of the vision of the scriptures. When the attachment to raga-dveshas goes, the moha or delusion goes; when the delusion goes, the mind is able to understand clearly what the scriptures reveal about the Ultimate Reality - the  intrinsic nature of the Self and not its incidental nature. That is how the knowledge takes place and one slowly gains abidance in that knowledge.
Jeevan Mukti 
Jivanmukti, according to Hindu philosophy, is the state of being spiritually liberated while still alive. The Sanskrit term is derived from the root words, jiva, meaning "life," and mukti, meaning "freedom." Jivanmukti is a state in which one possesses the limitless knowledge (of seamless integration of Self & Brahman), free from suffering, and enjoys eternal bliss.

As outlined in the previous step, when this abidance in the knowledge (the aparoksha jnanam i.e. “Aham Brahmaasmi” - the direct knowledge that “ I am the Ultimate Reality”) is experienced, there is freedom even while one is alive. This is the growth that the scriptures present before us, the goal presented by Vedanta. The goal is jivanmuktiH, becoming free even when we are in this body. It is not the mukti or liberation after death, but the liberation or the freedom even while I am here.

For the one thus liberated (who has realised that all being are the Self), there is neither delusion nor grief, as there is no second for him. The Jivanmukta rests with an unshaken mind in the All-blissful Brahman. He is free from all the modifications of the mind. His heart is pure like the Himalayan snow or the crystal. He is free from the distinctions – I, He, Thou.

It is satsanga, the company of the wise or the company of the good, which ultimately leads to this jivanmuktiH.

Conclusion

If we don’t adhere  to these processes, then what we can expect is clearly described in verses 62 and 63 of Chapter 2 of Bhagavad Gita.

ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषूपजायते । सङ्गात्सञ्जायते कामः कामात्क्रोधोऽभिजायते ॥ २-६२॥

dhyāyato viṣayānpuṃsaḥ saṅgasteṣūpajāyate saṅgātsañjāyate kāmaḥ kāmātkrodho’bhijāyate

When a man thinks of objects, attachment for them arises; from attachment desire is born; from desire arises anger.

क्रोधाद्भवति सम्मोहः सम्मोहात्स्मृतिविभ्रमः । स्मृतिभ्रंशाद् बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणश्यति ॥ २-६३॥

krodhādbhavati sammohaḥ sammohātsmṛtivibhramaḥ smṛtibhraṃśād buddhināśo buddhināśātpraṇaśyati

If we don’t attempt to climb the ladder of knowledge, we are bound yo come crashing down the ladder of attachment as outlined in the first eight strikes. We start all over again. That is why Adi Sankara outlines the 5 step process of achieving liberation in this Sloka.

Let us understand these concepts, digest, internalise and move to the next step towards Self Realisation. We will see what Sankara comes up with in his next strike. Until then…..

God Bless

You can now get this and other Slokas in the book (English) which is now available at Notion Press

https://notionpress.com/read/bhaja-govindam-1389756?book=published&utm_source=share_publish_email&utm_medium=email

சங்கரனின் வைரக்கூடம் 8 – இல்லற உறவு

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

இந்த உலகம், உண்மையில் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் அது உங்களுக்குத் தீங்கு செய்யாது என்று கூறுகிறது வேதாந்தம். இது தான் வேதாந்தத்தின் உண்மையான உள்நோக்கம் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.  இந்த உலகம் என்பது என்ன என்று நாம் அறிய நமக்கு உதவி புரியவே

வந்த வரவை மறந்து-மிக்க
மாதர்பொன் பூமி மயக்கத்தில் ஆழும்
இந்தம யக்கை அறுக்க-எனக்கு
எந்தை மெய்ஞ்ஞான எழில்வாள் கொடுத்தான்

என்ற தாயுமானவர் பாடல் கூறுவது போல, மண் என்ற நிலம் மீது பெண் துணைகொண்டு, பொருளைக் கொண்டு வாழ்ந்து, அப்பொருள்களிலிருந்து பெறுகின்ற அனுபோகமே இன்பம் என்றும், அதுவே பொருள் என்ற மயக்க நிலையில் மதி கெட்டு இருந்திடும் மூட மனிதனின் அறிவை உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல, அவனுள் உறங்கிக் கிடக்கும் வைரமெனும் வைராக்கியத்தை தோண்டி எடுத்து, பட்டை தீட்டி, மெருகூட்டும் பணியாக இதுவரை ஏழு செயல்முறைகளை, அவரது வைரக் கூடத்தில் நம் அனைவருக்கும் அளித்தார் ஆதி சங்கரர்.

இப்பொழுது அடுத்த படியாக, முக்கியமான அடிப்படை கேள்விகளை எழுப்பி நம் சிந்தனையை தூண்டுகிறார் இந்த எட்டாவது ஸ்லோகத்தில். வாருங்கள், பட்டை தீட்டிக் கொள்வோம் நம் வைரத்தை (வைராக்கியத்தை).

சமஸ்க்ருத ஸ்லோகம்

का ते कान्ता कस्ते पुत्रः

संसारोयमतीव विचित्रः |
कस्य त्वं कुत आयातः

तत्त्वं चिन्तय तदिह भ्रातः ||

ஆதி சங்கரர்

தமிழ் ஒலிபெயர்ப்பு

கா தே காந்தா கஸ்தே புத்ர:

ஸம்ஸாரோயமதீவ விசித்ர: |

கஸ்ய த்வம் குத ஆயாத:

தத்வம் சிந்தய ததி3த3ம் ப்4ராத: ||

தமிழ் மொழிபெயர்ப்பு

யாருந்தன் மனைவி யாருந்தன் பிள்ளை

விந்தை யன்றோ இவ்உலக வாழ்க்கை

யாருந்தன் மூலம் எங்கிருந்து வந்தாய்

தம்பி தத்துவ சிந்தனை செய்வாய்

சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள்

का ते - கா தே - யாருந்தன் 
कान्ता - காந்தா - மனைவி
कस्ते - கஸ்தே - யாருந்தன்
पुत्रः - புத்ர: - பிள்ளை
संसारोयमतीव विचित्रः - ஸம்ஸாரோயமதீவ விசித்ர: - संसार + अयमं + अतीव + विचित्रः - ஸம்ஸார + அயம் + அதீவ + விசித்ர: - ஸம்ஸாரம் + இந்த + மிக + விசித்ரம்कस्य - கஸ்ய - எவருடையவன்
त्वं - த்வம் - நீ
कुत - குத - எங்கிருந்து
आयातः - ஆயாத: - வந்தாய்
तत्त्वं - தத்வம் - இந்த உண்மையை
चिन्तय तदिह - चिन्तय + तद् + इह - சிந்தய+ தத் + இஹ - சிந்தி இங்கேயே
भ्रातः - ப்4ராத: - (உடன் பிறவா) சகோதரனே

விளக்கவுரை

நேரடி பொருள்
 (உடன் பிறவா) சகோதரனே! உன் மனைவி யார்? உன் மகன் யார்? நீ எவரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து இந்த விசித்திரமான சம்சாரத்திற்கு வந்து சேர்ந்தாய்? இந்த உண்மைகளைக் கொஞ்சம் சிந்தனை செய்!
விளக்கம்
குடும்பம் என்ற சொல்லிற்கு  மூவகை உறவுகளால் ஒன்றுபட்ட நபர்களின் குழு என்று பொருள் கொள்ளலாம்.  அதாவது, திருமணம், இரத்தம் அல்லது தத்தெடுப்பு ஆகிய உறவுகளால் ஒன்றுபட்ட நபர்களின் குழு.  இந்தக் குழுவில் ஒவ்வொருவருக்கும் அன்னை, தந்தை, மகன், மகள், அக்கா, தங்கை, அண்ணா, தம்பி, கணவன், மனைவி என்ற சமூக நிலைகள் உண்டு. இணக்கமான வாழ்க்கைக்காக நாம் ஏற்றுக்கொண்ட ஒரு ஏற்பாடுதான் குடும்பம் என்ற ஒரு நிறுவனம். குடும்பத்தின் வெவ்வேறு உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

வாழ்க்கையின் போக்கில், நாம் இந்த உறவுகளின் வலுவான பற்றுதல் காரணமாக நமக்கு பொறுப்புகள், கடமைகள் மற்றும் அவர்கள்/அவைகள் தொடர்பான இன்ப துன்பங்கள், நினைவுகள், கவலைகள் முதலானவற்றை சந்திக்கின்றோம். கால சுழற்சியில் கடைசி காலம் வரும்பொழுது “நான் யார் நீ யார், நாலும் தெரிந்தவர் யார் யார்? தாய் யார், மகன் யார் தெரியார், தந்தை என்பார் அவர் யார் யார்” என்றும், “நான் கேட்டு தாய்தந்தை படைத்தானா; இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா; இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே, வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன” என்றெல்லாம் தத்துவ கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்கிறோம்.

இது தான் உலக யதார்த்தம். இதனைத்தான் ஆதி சங்கரர் நமக்கு தெள்ளத் தெளிவாக இந்த ஸ்லோகத்தில் எடுத்துரைத்து, சிந்திக்க வேண்டும் என நமக்கு அறிவுரை வழங்குகிறார்.

ஆழ்ந்து ஆராய்ந்தால், உண்மை புரியும். உதாரணமாக, மகன் பிறப்பதற்கு முன்பே தாயின் வயிற்றில் இருந்தான். அதற்கு முன், அவன் நம் சொந்த உடலில் ஆற்றலாக இருந்தான். அதற்கு முன்பு அந்த ஆற்றல் உணவாக, அவ்வுணவு வயல்களில் உள்ள தாவரங்கள் மற்றும் காய்கறிகளாக, அவைகளனைத்தும் அதற்கு முன்பு பூமியாக இருந்தது. நாம் பூமி என்று அழைக்கப்படுவது உணவாகவும், பின்னர் என் உடலில் ஆற்றலாகவும் மாறி, பின்னர் கருவாகி, தாயின் வயிற்றில் குழந்தையாக மாறியது. எனவே, மாற்றத்தின் முழு செயல்முறையையும் நாம் பார்க்கும்போது, மனைவி, மகன் மற்றும் கணவன் என்று நாம் அழைப்பது ஐந்து கூறுகள் எனப்படும் ஒரு அடிப்படை பொருளின் மாற்றங்களே தவிர வேறில்லை.

ராட்சத “ரோலர் கோஸ்டர்” எனும் “உயர் சுழல் வீச்சு சவாரி”யில் செல்லும்போது , நாம் எந்த திசையில் செல்கிறோம் என்பது நமக்குத் தெரியாது. அதிலிருந்து வெளியே வரும்போதுதான், முடிவில்லாத வட்டங்களில் நாம் சுழன்று கொண்டிருப்பதைக் காணலாம். குடும்பமும் அப்படித்தான். 'குடும்ப' வாழ்க்கையிலிருந்து வெளியே வரும்போது மட்டுமே உலகத்துடனான நமது உண்மையான உறவு புரியும்.

இந்த அடிப்படைக் கேள்விகளை ஆராய்வதற்கான அழைப்பே இந்த ஸ்லோகம். ஆராய்ந்து அறிந்தால் நமது மனதை தயார்படுத்தி, உள்ளுறங்கும் வைராக்கியத்தை பட்டை தீட்டி மெருகேற்றி வெளிக் கொண்டு வர முடியும்.

நல்லோர் இணக்கம், குருவின் வழிகாட்டு, பரம்பொருளின் மேல் பற்று - இவை மூன்றுமே நமது மனதை தயார்படுத்த நமக்கு வேண்டிய கருவிகள். மிக முக்கியமாக, பரம்பொருளின் மேல் பற்றினை வளர்த்திட பிரார்த்தனை மனப்பான்மை தேவை. அதனால் துதி கோவிந்தனை என்கிறார் ஆதி சங்கரர்.
தமிழ் இலக்கியங்களில் உறவுகள்
திருவாசகம் (யாத்திரைப் பத்து)

தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே. நடை முறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரே. ஆதலால் அடியவர் களே! நீங்கள், நாம் யார்? எம்முடையது என்பது யாது? பாசம் என்பது எது? இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து இவை நம்மை விட்டு நீங்க இறைவனுடைய பழைய அடியாரொடும் சேர்ந்து அவ்விறைவனது திருவுளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக் கொண்டு, பொய் வாழ்வை நீத்துப் பாம்பணிந்தவனும், எமையாள் வோனுமாகிய பெருமானது பொன்போல ஒளிரும் திருவடிக்கீழ் போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

ஐந்தாம் திருமுறை - கொண்டீச்வரம் - அப்பர்

தந்தை தாயொடு தாரம் எனும் தளை
பந்தம் ஆங்கு அறுத்துப் பயில்வு எய்திய
கொந்தவிழ் பொழில் கொண்டீச்சுரவனை
சிந்தை செய்மின் அவனடி சேரவே

தந்தை தாய் தாரம் ஆகிய சொந்தங்களின் பந்தம் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் கட்டாயத்தில் நம்மை தள்ளி விடுகின்றது, மிகவும் அவசியமான தேவைகளை நிறைவேற்றுவது நமது கடமை. ஆனால் பல சமயங்களில் அவர்களது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு நாம் செய்யும் முயற்சிகளில் நாம் இறைவனை மறக்க வாய்ப்பு இருப்பதால், நாம் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தவே பந்தம் எனும் தளை அறுத்து என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இறை சிந்தனை, நாம் பாசக் கட்டுகளிலிருந்து விடுபட உதவு செய்யும் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். மேலும் இறைவனின் திருவடிகளை சென்று அடைவதற்கு ஓரே வழி, அவனைப் பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்வது தான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

பட்டினத்தார் பாடல்

“ஊரும் சதமல்ல – உற்றார் சதமல்ல – உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல – பெண்டில் சதமல்ல – பிள்ளைகளுஞ்
சீரும் சதமல்ல – செல்வம் சதமல்ல – தேசத்திலே
யாரும் சதமல்ல”

“வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே”

முடிவுரை

இந்த ஸ்லோகம், குடும்பம் என்ற கட்டமைப்பை தாழ்த்துகிறது; தந்தை, மகன், துணைவி போன்றவற்றில் ஒருவரின் பாசத்தையும் அவரது கடமைகளின் செயல்திறனையும் குறைத்திடுகிறது என்னெல்லாம் தவறாக நாம் கணிக்கக்கூடாது.

ஆன்மிகமும் குடும்ப வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று முரண்பாடு இல்லாதவை. ஆன்மீக வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கையை துறக்காமலேயே வாழ முடியும். தமிழ்நாட்டில் உள்ள 63 நாயன்மார்கள் என்பவர்களில் குறிப்பாக பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் தான் முக்தி அடைந்து உள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

நடைமுறை மட்டத்தில், அவர் இங்கு சுட்டிக் காட்டுவது என்னவென்றால், நாம் நமது பல்வேறு பாத்திரங்களில் மற்றவர்களுடன் பழகினாலும், அவர்களிடம் பாசம் காட்டினாலும், போதுமான அளவிலான புறநிலையைப் பேண வேண்டும், அந்த பிணைப்புகள் நம்மைக் குருடாக்கி, வழிக்கு வர விடக்கூடாது. நமக்கான விடுதலையை நாமே தேடுகிறோம் என்பதையே இந்த செயல்முறை விளக்குகிறது.

இதனை அறிந்துணர்வோம். சங்கரனின் வைரக் கூடத்தில் மீண்டும் சந்திப்போம். அதுவரை…….

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க

Sankara’s Smithy – Strike 8 – The family Blow

Introduction

Dictionaries define family as , “a group of persons united by the ties of marriage, blood or adoption, constituting a single household and interacting with each other in their respective social positions, usually those of spouses, parents, children and siblings”.

Adi Sankara in his eighth strike in his Smithy (eighth verse) addresses common people like us who are totally engrossed in this worldly family life and tells us clearly that there are limitations to this social concept and advises us that one should clearly inquire and understand these limitations.

Let us try to understand this strike in its totality

Sanskrit Verse

का ते कान्ता कस्ते पुत्रः

संसारोयमतीव विचित्रः |

कस्य त्वं कुत आयातः

तत्त्वं चिन्तय तदिह भ्रातः ||

Adi Sankara

English Transliteration

Kaa tE kaantaa kastE putrah, 

SamsaarOyamatIva vichitrah

Kasya tvam kuta aayaatah,

Tattvam chintaya tadiha bhraatah

Meaning of the Sanskrit Words

का ते - kaate  = who is your    
कान्ता - kaanta = wife
कस्ते - kaste = who is your
पुत्रः - putrah = son

संसारोयमतीव - सम्सार अयम् - samsaara ayam = this samsara
अतीव - atiiva = supremely
विचित्रः - vichitrah = wonderful

कस्य - kasya = of whom
त्वं - tvam = who are you
कुत - kuta = from where
आयातः - aayatah = have come

तत्त्वं - tatwam = of that Truth
चिन्तय - chintaya - dwell over, think, inquire
तदिह - तद् इह - tad iha = that here alone
भ्रातः - bhraatah : O brother

Meaning in English

Oh, brother! Who is your wife? Who is your son? This life is very strange.  You belong to whom ? Where did you come from? Dwell and reflect on these truths here.

Explanation

Adi Sankara raises some fundamental questions here. He takes us to a different plane of inquiry. 

“Who is your wife? Who is your son? You belong to whom ? Where did you come from?”

The questions posed above are important and fundamental. But can we really ponder over these questions and grasp the explanations given in the scriptures while our minds are clouded by preconceived and unsubstantiated notions underlying our relationships that bind and blind us? Let us try to understand these relationships.

1. Initially the relationship is between two individuals through “marriage”. From a dictionary perspective, marriage is “the state of being united as spouses in a consensual and contractual relationship recognized by law”.

2. Over a period of time, this relationship fructifies into a “family” as defined in the introduction to this blog.

3. The “family” takes us to the arena of interactions with roles, responsibilities, authorities, goals and tasks for each member of the family individually and collectively.

4. Add to this the dimension of “Time” and the impermanence of materialism. We are now in the thick of issues, challenges, attachments, detachments, pains and pleasures.

5. This process is never ending till the soul permanently terminates its lease agreement with the body and identifies itself with the Ultimate Reality, which happens after innumerable cycles of births and deaths (called Samsara)

This is the ground reality which we decide to ignore and continue life till it hits us one day with all its severity. So the definitions of marriage and family continues to be highly controversial. This is not an issue to be resolved by dictionaries. Therefore, Adi Shankaracharya is looking at these relationships, beyond one’s family concerns and encourages us to question:

1. Did these relationships help to discover the inherent oneness and harmony that obtains between them, inspite of their obvious duality at the level of the body, their individual personalities etc.

2. Were these meant to achieve another goal in life; the realisation of the unity of life in this universe?

For many of us it may appear that Adi Sankara is questioning the validity of the institution of the family. The family institution itself has to be seen in the broader context of the purpose of human life. It is valid for a certain period, during the householder’s stage of life. When it has served its purpose, one has to go beyond its parameters, i.e. wife and son, etc. It is valid only for a certain task in life, not throughout life. So look at these relationships from outside, says Sankara. Then only the true nature of worldly existence or Samsara can be understood.

For example, the son was in the mother's womb before birth. Before that, he was as an energy in our own body. Before that, that energy was in the food that we took, that food was from the plants and vegetables in the fields and all of that was earth before that. What we call earth became food, then energy in my body, then a fetus, then a child in the mother's womb. So when we look at the whole process of transformation, what we call wife, son and husband are nothing but transformations of one basic substance called the five elements (pancha bootha) over a period of time.

When we are in a giant roller coaster , we do not know in which direction we are going. Only when we step out of it, can we see see that we were being spun around in never-ending circles. So it is with Samsara. Step out and see says Sankara.

Conclusion

We must bear in mind that this sloka does not demean the structure of family; We should not misjudge that it diminishes one's affection and the performance of one's duties in father, son, spouse, etc.

Spirituality and family life are not mutually exclusive. Spiritual life can be lived without sacrificing family life.

On a practical level, what Adi Sankara is pointing out here is that even as we interact with and feel affection for others in our various roles, we must maintain a sufficient degree of objectivity so that we do not let those bonds blind us and get in the way of our seeking unadulterated, permanent and eternal happiness called liberation (mukti) from the unending cycles of births and deaths (samsara).

Pretty deep questions posed in a simple manner sums up this eighth strike. Let us now get prepared for the next one soon. Until then………

God Bless.

சங்கரனின் வைரக்கூடம் – 7 – பருவக் கோளாறு

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசை பிடித்து அலையாமல், நமது வாழ்வு நிலையற்றது என்பதை உணர்ந்து, உறவுகள் தொடர்கதைகள் அல்ல என்றும் அந்த உறவுகளும், நாம் ஈட்டும் செல்வமும், நாம் உள்ளிழுத்து விடும் மூச்சுக்காற்றும் உள்ளவரையே என்பதை நன்கு ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆறு செயல்முறைகளை சங்கரனின் வைரக்கூடத்தில் அறிந்தோம் இதுவரை.

‘அரிது அரிது, மானிடராய் பிறப்பது அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது.’ என்றார் ஓளவையார். அப்படிப்பட்ட அரிய பிறவியை எடுத்துள்ள நாம் அதை எப்படி கழிக்கிறோம் என்பதை இந்த நாட்டுப்புற பாடல் எளிமையாக எடுத்துரைக்கிறது..

''தத்தக்கா புத்தக்கா நாலே காலு
தானே நடக்கையிலே ரெண்டேகாலு
உச்சி வெளுக்கையிலே மூணே காலு
ஊருக்குப் போகையிலே எட்டே காலு''

என்ன இது? தத்தக்கா புத்தக்கா என்ற உளரல். இதற்கும் இந்த பஜகோவிந்த ஸ்லோகத்திற்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் உண்டு; இந்த நாட்டுப்புற பாடலின் பொருளை அறிய, முடிவு வரை காத்திருக்கலாம்.

மனித வாழ்வவினை (பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ள காலத்தை) பருவங்களாக பிறிக்கலாம். இந்தப் பிறிவுகள் ஒவ்வொருவரின் கண்ணோக்கத்தைப் பொருத்து; இரண்டிலிருந்து, பண்ணிரண்டு வரை பிரிக்துப் பார்க்கலாம் என்பர். அனைத்து கண்ணோக்களிலும் மூன்று முக்கிய நிலைகள் உண்டு. நமது வாழ்நாளை, குழந்தை, இளமை, முதுமை என்று பருவங்களாகப் பிரிக்கலாம். (மேலே உள்ள படத்தை பாரக்கவும்).

இந்தப் பருவங்களை எப்படி கடக்கிறோம் நாம், என்பதை ஆதி சங்கரர் ஒரு புகைப்படம் போல ஒரு ஒரு வரியில் விவரிக்கின்றார் இந்த அடுத்த செயல்முறையில்.

வாருங்கள். எப்படி என்று பார்க்கலாம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

बालस्तावत्क्रीडासक्तः

तरुणस्तावत्तरुणीसक्तः |

वृद्धस्तावच्चिन्तासक्तः

परमे ब्रह्मणि कोऽपि न सक्तः ||

ஆதி சங்கராச்சார்யா

தமிழ் ஒலிபெயர்ப்பு

பா3லஸ்தாவத் க்ரீடா3 ஸக்த:
தருணஸ் தாவத் தருணீ ஸக்த: |
வ்ருத்3த4ஸ் தாவத் சிந்தா ஸக்த:
பரமே ப்ரஹ்மணி கோபி ந ஸக்த: ||

தமிழ் மொழிபெயர்ப்பு

பாலகனாக பற்றுவோம் ஆட்டம்

வாலிபனாக குமரியில் நாட்டம்

முதியவனாக உள்ளத்தில் கவலை

முத்தனைப் பற்றிட எவனும் இல்லை

சமஸ்க்ருத சொற்களின் பொருள்கள்

बालस्तावत् - பாலஸ்தாவத் - குழந்தைப் பருவத்தில், 

क्रीडा असक्तः - க்ரீடா ஸக்த: - க்ரிட + அஸக்த: - ஆட்டம்/விளையாட்டு + பற்றுதல்

तरुणस्तावत् - தருண ஸ்தாவத் - இளமை பருவத்தில்

तरुणीसक्तः - தருணீஸக்த: - பெண்ணாசை/குமரியில் நாட்டம்

वृद्धस्तावत् - வ்ருத்தஸக்த: - முதுமைப் பருவத்மில்

चिन्तासक्तः - சிந்தாஸக்த: - கவலை உள்ளம் கொள்வது

परमे ब्रह्मणि - பரமே ப்ரஹ்மநி - பரப்பிரம்மனை

कोपि न - கோபி ந - க அபி ந - ஒருவரும் இல்லை

असक्तः - அஸக்த: - பற்றுடன்

விளக்கவுரை

நேரடிப் பொருள்
விளையாட்டு/விளையாட்டுத்தனத்தின் மீதான பற்றுதலால் குழந்தைப் பருவம் நழுவிப் போகிறது. பெண் மீதான பற்றுதலால் இளமை மறைகிறது. பல விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதில் முதுமை கடந்து செல்கிறது. ஐயகோ, பரபிரம்மத்தைப் பற்றிட விரும்பும் எவரும் இல்லை.
தத்துவ விளக்கம்
முந்தைய இரண்டு ஸ்லோகங்களில் , ஆதி சங்கரர் மரண நேரத்தை விளக்கி, நிலையிலா, வெறுமையான, தவறான மனித உறவுகள் எவ்வாறு நமது முட்டாள்தனமான மனதை நமது ஆன்மீக இலக்கிலிருந்து திசைதிருப்ப முடியும் என்பதை நினைவூட்டினார்.

இந்த செயல்முறையில், அவர் நமது வாழ்க்கைப் பயணத்தின் நான்கு நிலைகளை சுட்டிக்காட்டி அந்நிலைகளின் யதார்த்த நிலமையை எடுத்துரைக்கிறார்.

ஒரு மனிதன் வாழ்வில் நான்கு பருவங்களைக் (4 நிலைகளைக்) கடந்து செல்கிறான் - குழந்தை, பாலகன், இளைஞன், முதியவன் என்பவை இவை.

இந்தப் பயணத்தில் நம்மை எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் பற்றி அவர் எச்சரிக்கிறார். நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கவனச்சிதறல்கள் உள்ளன.

இன்றய காலக் கட்டத்தில் நாம் அனைவரும் ஒரே “பிஸி” - ஒய்விலா பரபரப்பு; அல்லவா! எப்படி?

1. குழந்தைகளாக இருந்தபோது, விளையாட்டிலே பிஸி.
2. இளமை எனும் பூங்காற்றுக் காலத்தில் பாலினத்தில் நாட்டம். இளஞனுக்கு எத்தனை பெண் தோழிகள் இருக்கிறார்கள் என்ற கவலையும், குமரிப் பெண்ணுக்கு, தனக்கு பின்னால் எத்தனை ஆண் நண்பர்கள் சுற்றுகிறார்கள் என்ற கவலை.
3. முதுமையில், வாழ்க்கையின் இறுதி/இறுதிக் கட்டங்களுக்குள் நுழைகிறோம். நமது கவனம் முழுவதுமாக மாறி, நமது உடமைகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் போன்றவற்றின் பாதுகாப்பு/கவலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். எவரிடத்தில் பேசினாலும், “நமது மலரும் நினைவுகளை அவர்களின் மீது வாந்தி எடுக்க ஆரம்பிக்கிறோம்”.

பரம்பொருளை அறியவும், மெய்ப்பொருளை உணரவும் நேரமே இல்லை. சிறிது நேரம் ஒதுக்கலாம் என்று நினைத்தாலும், பயிற்சியின்மையால், அப்படிப்பட்ட எண்ணங்களில் மனம் ஈடுபட மறுக்கும், நொண்டிச்சாக்குகளை நோக்கி விரையும்.

நம் வாழ்வில் தெய்வீகத்தை, மிகக் குறைந்த வயதிலேயே கொண்டுவரும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நமது உடல், மனம் மற்றும் புத்தி வளாகம் உலக விவகாரங்களில் சிக்கிக்கொள்ளும் முன் இதைச் செய்ய முடிந்தால், அது வாழ்க்கையில் நிறைய கசப்பான அனுபவங்களைக் கடக்க உதவும். இந்த வைராக்கியமெனும் வைரத்தை தோண்டி எடுத்து, பட்டை தீட்டி, மிருகேற்றி நம்மில் ஒளித்திடவே, ஆதி சங்கராச்சாரியார் இந்த நிலையை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

இப்படி எடுத்துரைப்பதால், சங்கரர் உலக நோக்கங்களுக்கு எதிரானவர் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை விளையாட வேண்டும், ஒரு இளைஞன் சம்பாதித்து குடும்பத்தை வளர்க்க வேண்டும் மற்றும் நேர்மையான வழிகளில் செல்வத்தைப் பெற வேண்டும். ஆனால் ஒருவன் தனது அன்றாட வாழ்வின் தொடகத்திலேயே, கடவுளை மையமாகக் கொண்ட உள்நோக்கிய பயணத்தைத் தொடங்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி செய்தால், வயதான காலத்தில், நமது உலக உடைமைகளைப் பற்றிய தவிர்க்கக்கூடிய கவலைகள் நம்மை தீண்டாது. நமது மன அமைதியையும் பறிக்காது.

இதுவே இந்த ஸ்லோகத்தின் சாரம்.

தமிழ் இலக்கியங்களில் வாழ்க்கைப்பருவங்களின் நிலையாமை

பட்டினத்தார் பாடல்

முதற்சங்கு அமுதூட்டும்,
மெய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு
பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும், அம்மட்டோ?
இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!

வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே

திருமந்திரம்

திருமந்திரப் பாடல் ஒன்றில், பாலன் இளைஞன் முதியவன் என்ற பல பருவ மாறுபாட்டினை உடல் அடைவதைக் கண்ட பின்னரும், இளமை நிலையற்றது என்ற உண்மையை புரிந்து கொள்ளமால் உலகத்தவர் இருக்கின்றார்களோ என்று வருந்தும் திருமூலர், காலத்தையும் அண்டங்களையும் கடந்தவனாகிய இறைவனின் திருவடிகளை நாம் தொழவேண்டும் என்று உணர்த்துகின்றார்.

பாலன் இளையன் விருத்தன் என நின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்து அண்டம் ஊடறுத்தான் அடி
மேலும் கிடந்து விரும்பவன் நானே

ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண்டு ஆரும் புகுந்து அறிவார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே.

அறியாமையிலேயே பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இறைவனே நம் அனைவருக்குத் தந்தையாவான். அவன் நினைவை நெஞ்சில் பூண்டு கொண்டு அவன் ஒளியில் புகுந்து பேரறிவு பெறுபவர் இல்லை. நீண்ட ஆயுள் பெற்று, நீண்ட நாட்கள் வாழ்ந்த போதிலும், தூண்டினால் ஒளியைப் பெருக்கும் விளக்குப் போன்ற இறைவனை அறியாமலேயே உலகில் வாழ்கின்றனர்.

அறநெறிச்சாரம்

தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்
பிரிவுந் துயிலும் உறீஇப் -- பருவந்து
பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு
வித்துக் குற்று உண்பார் பலர். --- அறநெறிச்சாரம்.

(தெரிவு இல் இளமையும்) பொருள்களை ஆராய்தற்கு ஏலாத இளமைப் பருவத்தையும், (தீப்பிணியும்) கொடிய நோய்களையும், (மூப்பும்) கிழத்தன்மையையும், (பிரிவும்) உற்றாரைப் பிரிதலையும், (துயிலும்) மரணத்தால் வருந் துன்பங்களையும், (உறீஇ) அடைந்து, (பருவந்து) வருந்தி, (பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு) பயனற்ற சின்னாள் வாழ்க்கைக்கு, (வித்துக் குற்று உண்பார் பலர்) உணவை விரும்பும் வேளாளன் அறிவின்றி வித்தையும் அழித்து உண்பதைப்போல வீடுபேற்றுக்கு வித்தாய அறத்தையே அழித்து வாழ முயல்பவரே உலகிடைப் பலராவர்.

அப்பரின் தேவாரம்

அப்பர் பிரான், இளமைக் காலத்தில் நம்மை விரும்பும் பெண்கள் நம்மை இகழ்வதற்கு வழி வகுக்கும் முதுமை வரும் முன்னர் இறைவனை நினைத்து வழிபடவேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
எழுது கொடியிடையார் ஏழை மென்தோள்
இளையார்கள் நம்மை இகழா முன்னம்
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டு தான்
என்னோடு பகை தான் உண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றும் கூடி முடியால்
உற வணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான்
ஊர் போலும் ஆரூர் தானே

முடிவுரை

நமது வாழ்நாளின் யதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டும் அருமையான ஸ்லோகம். ஆழ்ந்து நம்மை சிந்திக்க வைக்கும் உண்மைகள்.

நாலு கால்களில் (இரு கை, இரு கால்) தத்தக்கா புத்தக்கா என்று தவழும் குழந்தையாக, பின் தானாக (சக்தியுடன்) இரு கால்களில் நடக்கும் இளைஞனாக, உச்சி வெளுத்து தண்டுகோல் கொண்டு மூன்று கால்களில் நடக்கும் முதுமைப் பருவம் தாண்டி, எமன் அழைத்து செல்லும் ஊருக்குப் போகையிலே எட்டு கால்களுடன் (நம் பிணத்தை தூக்கிச் செல்லும நால்வரின் கால்கள்) செல்லும் நாம், இறைவனை நினக்க தேரம் ஒதுக்கினோமா என்று ஆராய வேண்டும். இது தான் இந்தப் பண்ணின் சாரம்.
இதனைத்தான்  15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹான் கபீர்தாஸ் , இந்தி மொழியில் கூறுகிறார்:

बीत गये दिन भजन बिना रे।
भजन बिना रे, भजन बिना रे॥

बाल अवस्था खेल गवांयो।
जब यौवन तब मान घना रे॥

लाहे कारण मूल गवाँयो।
अजहुं न गयी मन की तृष्णा रे॥

कहत कबीर सुनो भई साधो।
पार उतर गये संत जना रे॥

ஞானி கபீர் தாஸ்
“ஐயோ, உமது தியானம் இல்லாமலேயே என் உயிர் போய்விட்டது ஆண்டவரே! நான் என் குழந்தைப் பருவத்தை விளையாடிக் கழித்தேன், என் இளமையில் என் பெருமை என்னைத் தாண்டியது.நான் என் வாழ்வின் பெரும்பகுதியை (முக்கியத் தொகை) பயனற்ற நாட்டங்களில் இழந்துவிட்டேன், என் மனம் மற்றும் புலன்களின் ஆசைகள் இன்னும் தணியவில்லை”.

ஆய்வோம் உட்கருத்தினை. தயாராகுவோம் அடுத்த பதிவிற்கு. அதுவரை

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க

Sankara’s Smithy – Strike 6 – The “airy” blow

Introduction

This Sloka is an extension of the previous Sloka. In the previous blog, Sankara declared that recognition and respect is a result of your wealth earning capability. 

This Strike (Sloka ) is an auxiliary strike to the previous one; it amplifies the same thought to yet another bitter reality. The theme begun in the previous Sloka is continued here with a graphic touch added to it, to drive home the same point with added emphasis. It looks at things straight in the eye.

Let us start with a small incident that we often come across.

A child saw a balloon vendor opposite and wanted to get a a balloon. The mother of the child was not willing to get the child the object of her love. The. Child got disappointed and started crying. An elderly saint saw this, went to the vendor, got the baloon, gave it to the child. The child was extremely thrilled, she started playing with the baloon and was very happy.

The mother asked the seer as to why he bought the baloon. The saint smiled at her and responded:

“Look at the child; she is so happy as long as the baloon is in her hand. The moment the baloon goes out of her hand or the baloon gets deflated, the child will be disappointed and will be unhappy again. We all are children like her. We are very happy with our body, play with that in life and are happy because we think we own them and we love the body of ours. The moment the air inside us gets deflated/released, we are gone; there is only distress and crying all around. So don’t bother much” he said and walked away.

This in ident involving the greatest saint of Kanchi Kamkoti Mutt sets the background for this strike by Adi Sankara. Let us now receive the sixth strike.

Sanskrit Verse

यावत्पवनो निवसति देहे,

तावत् पृच्छति कुशलं गेहे |

गतवति वायौ देहापाये,

भार्या बिभ्यति तस्मिन्काये ||

English Transliteration

yāvatpavano nivasati dehe, 

tāvat pṛcchati kuśalaṃ gehe |

gatavati vāyau dehāpāye,

bhāryā bibhyati tasminkāye ||

Meaning of the Sanskrit Words

यावत्  - yaavat. - so long as;
पवनः - pavanaH - air/breath (life breath)
निवसति - nivasati - lives/dwells;
देहे - dehe- in the body;
तावत् - taavat - till then;
पृच्छति - pR^ichchhati - enquires about;
कुशलं - kushalaM - welfare;
गेहे - gehe - in the house; in the family
गतवति - gatavati - while gone; has left
वायौ - vaayau - air(breath);
देह अपाये - dehaapaaye - life departs the body;
भार्या - bhaaryaa - wife;
बिभ्यति - bibhyati - is afraid;fears;
तस्मिन् काये - tasminkaaye - tasmin.h+kaye - in that body;

Meaning in English

As long as he/she is alive, the family members crowd around and enquire about the welfare. But when the breathing stops, even the spouse who has enjoyed this body fears the corpse.

Explanation

For ordinary people like us, death is frightening. We are people with likes and desires and attachments to worldly beings and things. So, we all tend to shun the topic of death. We close our eyes to the reality that is certain to overtake us one day. 

Even if someone talks about it in a conversation, we tend to say “Don’t talk about “inauspicious” matters. We will see when it comes. Why do you worry about that now. We all have very good health now and we have family and friends to take care of us. Relax now and enjoy.” Fine for that moment. But, is this the reality?

The body is important only to the extent that it is an instrument for achieving certain of our goals. However healthy a body may be, it is appreciated only as long as it has “breathing” or life in it. The departure of prana (the spark of consciousness) changes the entire outlook.

Once breathing stops and life is gone, the person becomes a body or a corpse. “He” or “She” becomes “it”, a fast decaying object no longer required. “It” needs to be disposed off first. Everyone including the wife will be scared to be with a corpse. So, the body is laid out, placed on blocks of wood, and set fire to or laid to rest with Mother Earth. The only things that accompany the departed are noble (dhārmic धार्मिक्) acts”.

Then the relatives and others leave. And after the ceremonial rituals, everyone without exception moves on in life to seek new avenues of joy and the dead person becomes history and fades away in memory. This is a sour fact. As long as the gasp of life is there, people come and surround.

This is reality. So, “The blind affection which we give to our family is never shown towards something is ever-present. Unless there is detachment from worldly pleasures, mind can not be turned inwards. The utter worthlessness of the ties will become apparent after one contemplates on the impermanence of the worldly ties. If one enquires deeply, one can rise about merely satisfying the needs of the body and make the mind suitable for self-enquiry by making time for the spiritual dimension of life. So pray Govinda”

Adi Sankara clearly brings out this and advises us to weigh our priorities.

Conclusion

“Knowing the limitations of the body will help us keep a healthy outlook in life and turn the mind to everlasting principles, rather than being obsessively engaged in pampering our bodies. This, however, doesn’t mean we don’t take care of the body and neglect it. Yes, we should take care of the ‘vehicle’ (our body) for living a meaningful life and use that as a means or a tool to understand and realise the truth, but without undue attachment to it. We must pray to the divine to give us the understanding to dispel the ignorance in which we are slowly drowning every day. So, Shankara through this verse reminds us of the temporary nature of the body and advises us to chant the name of the Lord who will ultimately guide and help us to realise our true self”.

This is the essence of the Strike 6. Let us understand the reality of our lives and prepare ourselves dor the inevitable which Adi Sankara continues to remind us in this Bhaja Govindam.

We will get ready for his next strike. Until then……

God Bless

சங்கரனின் வைரக் கூடம் – 6 – காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

தமிழ் வலைதள ஒலித்தொடர் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

ஒரு  குழந்தை எதிரில் இருந்த பலூன் வியாபாரியை பார்த்து     பலூன் வேண்டுமென்று அழுதது. தாய் கண்டிக்க,அங்கிருந்த ஒரு ஞானி,பலூன் வாங்கி குழந்தையிடம் தரும் படி சொன்னார். பலூன் கைக்கு வந்தவுடன் குழந்தைக்கு ஒரே கொண்டாட்டம்,    கும்மாளம். இதைப் பார்த்த அந்த மாமுனி:   

“பாரு!குழந்தை இப்போ ஒரே சந்தோஷமா இருக்கு. அது பலூனில் காத்துள்ள மட்டும் தான். காத்து போயிடுத்தோ அல்லது பலூன் உடைஞ்சி போச்சுன்னாலோ ஒரே வருத்தமாயிடும் அழும். இப்போ எவ்வளவு சந்தோஷமோ, காத்து போனா அவ்வளவு துக்கம் வரும். நாமும் குழந்தை மாதிரி தான் இந்தஉடம்பை வெச்சுண்டு விளையாடுறோம். ரொம்ப சந்தோஷமா, சவுக்கியமா இருக்காப்புல நினைக்கிறோம். ஆனால்,இதுலயும் காத்து போயிட்டா ஒரே துக்கம்,அழுகதான்”. இதைத் தான் சித்தர்கள் ரொம்ப சாதாரணமா

காயமே இது பொய்யடா வெறுங்
காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த
மண்ணு பாண்டம் ஓடடான்னுபாடிவிட்டார்கள் என்றார்.

அந்த மாமுனியே நமது காஞ்சிப் பெரியவர்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

यावत्पवनो निवसति देहे,

तावत् पृच्छति कुशलं गेहे |

गतवति वायौ देहापाये,

भार्या बिभ्यति तस्मिन्काये ||

தமிழ் ஒலிபெயர்ப்பு

யாவத் பவனோ நிவஸதி தே3ஹே
தாவத் ப்ருச்சதி குச’லம் கே3ஹே |
க3தவதி வாயௌ தே3ஹாபாயே
பா4ர்யா பி3ப்4யதி தஸ்மின் காயே ||

தமிழ் மொழிபெயர்ப்பு

காயம் தனிலே காற்றுள்ள வரைக்கும்

குசலம் கேட்பர் சுற்றமும் சூழலும்

மூச்சுக் காற்று நின்று போனதும்

உடலைக் கண்டு மனைவியும் அச்சம்

சமஸ்க்ருத சொற்களின் பொருள்

यावत्  - யாவத் - எவ்வளவு
पवनः - பவன: - மூச்சுக் காற்று - பிராண வாயு
निवसति - நிவஸதி - வசிக்கும் - இருக்கும்
देहे - தேஹ - உடலில்
तावत् - தாவத் - அதுவரைக்கும்;
पृच्छति - ப்ருச்சதி - விசாரித்தல்
कुशलं - குச’லம் - நலம்
गेहे - கே3ஹே - வீட்டில்/குடும்பத்தில்
गतवति - க3தவதி - சென்றது
वायौ - வாயௌ - காற்று
देह अपाये - தே3ஹாபாயே - உடலை விட்டு பிரிதல்
भार्या - பா4ர்யா - மனைவி/இல்லாள்
बिभ्यति - பி3ப்4யதி - அச்சத்தில்;
तस्मिन् काये - தஸ்மின் காயே - அந்த உடலை (உயிர் பிரிந்த உடலை)

விளக்கவுரை

நேரடிப் பொருள்

(உன்) உடலில் எவ்வளவு காலம் வாயு (ஜீவன்) இருக்கிறதோ அதுவரை தான் உனது குடும்பத்தினர் உன் நலனில் இச்சை காட்டுவார்கள். தேஹத்திலிருந்து வாயு (ஜீவன்) அகன்று விட்டாள், உனது மனைவிகூட உன் (உயிரற்ற) சடலத்தை கண்டு ந்டுங்குவாள். அதாவது உடலில் மூச்சுக் காற்றுள்ள வரையே வீட்டில் உள்ளவர்கள் உன் நலத்தை விசாரிப்பார்கள். பிராணன் பிரிந்துவிட்டால், நீ கூடிக்குலாவிய உன் மனைவிகூட உன் உடலைக்கண்டு அஞ்சுகின்றாள்.

விளக்கம்:

நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு, மரணம் பயமாக இருக்கிறது. நாம் அனைவருமே உலக உயிர்கள், பொருள்கள் மீது விருப்பு, வெறுப்பு, ஆசைகள் மற்றும் பற்றுதல் கொண்ட மக்கள். எனவே, நாம் மரணம் என்னும் பேச்சையே தவிர்க்கிறோம். ஏதாவது நமது உரையாடலில் யாராவது அதைப் பற்றி பேசினால் கூட, "அமங்கலமான" விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். வரும்போது பார்ப்போம். அதைப்பற்றி இப்போது ஏன் கவலைப்படுகிறீர்கள். நாம் அனைவரும் இப்போது மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம், நம்மை கவனித்துக் கொள்ள குடும்பம் மற்றும் நண்பர்கள் உள்ளனர். இப்போது ஏன் அதைப் பற்றிய பேச்சு?" என்று கூறி நமது உரையாடலை திசை திருப்பி தொடர்கிறோம். அல்லவா!

ஆனால் இது தான் நிஜ வாழ்வா? சிந்திக்கலாம்.

நமது சில இலக்குகளை அடைவதற்கான கருவியாக இருக்கும் அளவுக்கு மட்டுமே உடல் முக்கியமானது. ஒரு உடல் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், அதில் "சுவாசம்" அல்லது உயிர் இருக்கும் வரை மட்டுமே அது பாராட்டப்படுகிறது. பிராணனின் புறப்பாடு (உற்ற தேகத்மிலிருந்து உயிர் பிரியும் பொழுது), நம் அனைவரின் முழுக் கண்ணோட்டத்தையும் மாற்றுகிறது.

சுவாசம் நின்று, உயிர் போனவுடன், அந்த நபர் உடலாகவோ, பிணமாகவோ மாறுகிறார். "அவன்" அல்லது "அவள்" என்பது "அது" ஆகிவிடும்; வேகமாக அழுகும் பொருள் இனி தேவையில்லை "இது".
முதலில் அகற்றப்பட வேண்டும். மனைவி உட்பட அனைவரும் பிணத்துடன் இருக்க பயப்படுவார்கள். எனவே, உடல் அமைக்கப்பட்டு, மரக் கட்டைகளில் வைக்கப்பட்டு, தீ வைக்கப்படுகிறது அல்லது அன்னை பூமியுடன் சேர்கப்படுகிறது. பிரிந்தவர்களுடன் இருக்கும் ஒரே விஷயங்கள், அவர்களின் உன்னதமான (தார்மிக் धार्मिक्) செயல்கள்”

பின்னர் உறவினர்களும் மற்றவர்களும் சென்று விடுவர். சடங்குகளுக்குப் பிறகு, விதிவிலக்கு இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியின் புதிய வழிகளைத் தேடப் புறப்பட்டு, வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள், இறந்தவர் வரலாற்றாகி நினைவிலிருந்து மங்குகிறார். இது ஒரு கசப்பான உண்மை.

இதுதான் யதார்த்தம். எனவே, “நம் குடும்பத்தின் மீது நாம் காட்டும் கண்மூடித்தனமான பாசம்/பற்று, நிலையாக நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளின் மேல் காட்டப்படுவதில்லை. உலக இன்பங்களிலிருந்து பற்றின்மை இல்லாவிட்டால், மனதை உள்நோக்கித் திருப்ப முடியாது. உலக உறவுகளின் நிலையற்ற தன்மையைப் பற்றி ஒருவர் சிந்தித்த பிறகு, உறவுகள் தொடர்கதை அல்ல அவைகள ரயில் பயண சிநேகிதம் போலவே என்பது தெளிவாகத் தெரியும். ஆழ்ந்து விசாரித்தால், உடலின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து, வாழ்க்கையின் ஆன்மிகப் பரிமாணத்திற்கு நேரத்தை ஒதுக்குவதன் மூலம் மனதை சுய விசாரணைக்கு ஏற்றதாக மாற்ற முடியும். எனவே கோவிந்தாவை வேண்டிக்கொள்”

ஆதிசங்கரர் இதை தெளிவாக வெளிப்படுத்தி, வாழ்க்கையில் நமது முன்னுரிமைகளை எடைபோட அறிவுறுத்துகிறார்.

தமிழ் இலக்கிய மேற்கோள்கள்


திருக்குறள்

உயிர் என்பது நமது உடலை இயக்கும் ஒரு ஆற்றல் என்று கருதப்படுகிறது. உயிர் நிலையானது என்றும், அது மீண்டும் மீண்டும் பல பிறவிகளை எடுக்கிறது என்றும் வள்ளுவர் கருதுகிறார். இவ்வுடம்புக்கும் உயிருக்குமுள்ள நட்பு, முட்டைக்குள் இருந்த பறவை இறக்கை முளைத்தபின் வெளிவந்து, அந்த முட்டையைவிட்டுப் பறந்து போவதைப் போன்றது (குறள் – 338). மற்றும், சாவு என்பது உறக்கத்தைப் போன்றது; பிறப்பு என்பது உறங்கி விழித்தலைப் போன்றது (குறள் – 338). உறங்கியவன் மீண்டும் எழுவதைப்போல், ஒரு உடலில் இருந்த உயிர் அந்த உடலின் மரணத்திற்குப் பிறகு அந்த உடலைவிட்டு வெளியேறி, மீண்டும் மற்றொரு உடலோடு இயங்குகிறது என்பதை உணர்ந்த வள்ளுவர், “உடம்பில் ஒதுக்குக் குடியாயிருந்த உயிர்க்கு புகுந்து தங்குதற்கு நிலையான ஒரு இல்லம் அமைந்திடவில்லையே (குறள் – 340)” என்று வியக்கிறார்.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. (குறள் – 338)

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள் – 339)

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (குறள் – 340)

சுந்தரர் தேவாரம்.

ஊன்மிசை உதிரக் குப்பை
ஒருபொருள் இலாத மாயம்
மான்மறித்து அனைய நோக்கின்
மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுடப் பிறவி வாழ்வு
வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்,
ஆனல்வெள் ளேற்ற ஆரூர்
அப்பனே! அஞ்சி னேனே. --- சுந்தரர் தேவாரம்.

வெள்ளிய நல்ல ஆனேற்றை உடையவனே! திருவாரூரில் உள்ள தந்தையே! இறைச்சியை உள்ளடக்கி ஓடுகின்ற குருதிக்குப் பையாய் உள்ள இவ்வுடம்பு , பொருட்டன்மையாகிய உண்மையை உடைத்தல்லாத பொய்ப்பொருள் ; ஆதலின் , அத் தன்மையை அறியாத , மான் மருண்டாற் போலும் பார்வையினை யுடைய பெண்டிரே மதிக்கின்ற இந்த மானிடப்பிறவி வாழ்வினை , இன்புற்று வாழ்வதொரு வாழ்வாக விரும்புகின்றிலேன்; அத்துன்ப நிலைக்கு அஞ்சுதல் உடையன் ஆயினேன் .

சோமேசர் முதுமொழி வெண்பா

சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

ஆக்கையும் ஆயிரத்துஎட்டு அண்டங்களும் நிலையாத்
தூக்கி அழிந்தான்சூரன், சோமேசா! - நோக்கியிடில்
நில்லாதவற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை.

சூர பத்மன் , தன் உடம்பும், தன் அரசாட்சிக்குரித்தாக ஆணை செலுத்திய ஆயிரத்தெட்டு அண்டங்களும், நிலையுடையவெனக் கருதி, அழிந்தொழிந்தான்; சோமேசா! அதுபோல, ஆராயுமிடத்து நிலையுதல் இலவாகிய பொருள்களை, நிலையுதலை உடையன என்று, புல்லிய அறிவினை உடையராதல் கருதுகின்ற இழிபாம்.

பட்டினத்தார் பாடல்

“காற்றைத் துருத்தி கடிய வினைக்கு உள்ளான
ஊற்றைச் சடலத்தை உண்டு என்று இறுமாந்து
பார்த்து இரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல்
ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே”

யாரோ ஒரு கவி

"பொய்வீடு கட்டிப் புலால் வீட்டைப் போஷித்து
மெய்வீட்டினை இழந்த மேடங்காள்! -- பொய்வீடு
போ என்னும், உங்கள் புலால் வீட்டை உண்பதற்கு
வா என்னும் நல்ல வனம்"

முடிவுரை

வயலில் விளைந்த நெற்பயிரினை அறுவடை செய்யும்போது, நெற்பயிரின் அடிப்பகுதியில் ஒருசாண் அளவிற்கு விட்டு அறுவடை செய்வர். பின் களத்து மேடுகளில் அறுத்த நெற்பயிரிலிருந்து நெல்மணிகள் தனியாக உதிர்ந்து விடுமாறு அடித்து பிரிப்பர். இதற்கு போரடித்தல் என்று பெயர். போரடித்து பிரிக்கப்படும் நெல்மணிகளுடன் தூசு, குறைந்த விளைச்சல் கொண்ட நெல்மணிகளான சாவி போன்றவையும் சேர்ந்து இருக்கும்.போரடித்து வரும் நெல்லை காற்று வீசும்போது அள்ளி தூற்றுவர். இவ்வாறு தூற்றும்போது நல்ல நெல்கள் நேராக கீழேயும், தூசு, பதர் என்று சொல்லப்படும் விளைச்சல் குறைந்த நெல்கள் காற்றின் பிடியில் சிக்கி சற்றுத் தள்ளியும் விழும். நல்ல நெல்லினை இம்முறையில் எளிதில் பிரித்து எடுக்கலாம். இதுவே இப்பழமொழிக்கான நேடியான பொருளாகும். 

ஆனால் இந்தப் பழமொழிக்கு மறைமுகப் பொருள் ஒன்றும் உள்ளது.காற்று என்ற ஒன்று இல்லாதிருந்தால் உயிர்கள் உயிர்வாழ இயலாது.எனவே காற்று என்பது உயிர்களுக்கு மிகவும் அவசியம். இந்தக் காற்று உடலில் உட்சென்று வெளிவந்து தன் பணியை செய்யும் வரையே உடலில் உயிர் நிலைத்து நிற்கும். மாறாக உடலில் காற்று செல்லாத நிலை ஏற்பட்டால் அவ்வுடலைவிட்டு உயிர் நீங்கி விடும். உடலில் காற்று உள்ள வரையே மட்டுமே ஒரு மனிதனுக்கு வாழ்வு உள்ளது. அதற்குள்ளாக தான் தூற்றிக் கொள்ள வேண்டும். மனிதன் தேவையில்லாத கெட்டவற்றை ஒதுக்கிவிட்டு, தேவையான நல்லவற்றை மட்டுமே கடைப்பிடித்து வாழ வேண்டும். இதை விளக்கவே நமது முன்னோர்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று கூறியுள்ளனர்.

இது தான் ஆதி சங்கரரின் ஆறாவது செயல்முறை. இதுவரை நாம் பெற்ற முறைகள் மூலம், உடல், செல்வம், காமம், வாழ்க்கை, உறவு, உயிர் இவைகளின் நிலையாமை பற்றி அறிந்தோம். அடுத்த செயல்முறையை அறியும்வரை….

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

சங்கரனின் வைரக் கூடம் – 5 – உறவும் பிரிவும்

உறவும் பிரிவும்

வலைதள தமிழ் ஒலிப்பதிவு தொடரின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

உடல், பொருள், காமம், வாழ்வு,  இவை அனைத்தும் நிலையற்றவை என ஆதி சங்கரர் இதுவரை நமது மூட மனதிற்கு நான்கு செயல்முறைகளாக எடுத்துரைத்துள்ளார். 

நமது மனம் எவ்வளவு மூடமானது பாருங்கள். நான்கு முறைகளை உள்வாங்கியும், நம் மனது தளராமல் கூறுகிறது

“எனக்கு எதற்கு இந்த முயற்சியெல்லாம். எனக்கு உற்றார், உறவினர், சுற்றம், சூழம் எவ்வளவு பேர்கள் எனக்கு. ஏதாவது ஒன்று எனக்கு என்றால் ஓடி வந்து உதவுவார்கள் தெரியுமா? நதி எங்கே போகிறது? கடலைத் தேடி; நாளெங்கே போகிறது? இரவைத் தேடி; நிலவெங்கே போகிறது? மலரைத் தேடி; நினைவெங்கே போகிறது? உறவைத் தேடி” என்று கூறுகிறது நம் மனம். அல்லவா!

உண்மை தான். உற்றார்களும், உறவினர்களும் எவ்வளவு தடவை, எவ்வளவு நேரம் உதவுவர்? விடை கூற முடியுமா?

வாருங்கள். சங்கரனின் வைரக்கூடத்தில் ஐந்தாவது செயல்முறை காத்திருக்கிறது. அதைப் பெற்றபின், இந்தக் கேள்விக்கு பதில், கிடைக்கும்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

यावद्वित्तोपार्जन सक्तः

स्तावन्निज परिवारो रक्तः |

पश्चाज्जीवति जर्जर देहे

वार्तां कोऽपि पृच्छति गेहे ||

ஆதி சங்கரர்

தமிழ் ஒலிபெயர்ப்பு

யாவத்3 வித்தோ பார்ஜன சக்த:

தாவன் நிஜ பரிவாரோ ரக்த: |

பச்’சாஜ்ஜீவதி ஜர்ஜர தே3ஹே

வார்த்தாம் கோபின ப்ருச்சதி கே3ஹே ||

தமிழ் மொழிபெயர்ப்பு

பொருள்தனை ஈட்டும் ஆற்றல் வரைக்கும்

கொள்வர் சுற்றம் பற்றுடன் பிரியம்!

சக்தி இன்றி தளர்ந்திடும் தேகம்

கேட்பார் இல்லை யோக ஷேமம்!!

சமஸ்க்ருத சொற்களின் பொருள்

यावद्  யாவத்3 - எது வரையில்/எதுவரைக்கும்

वित्त-उपार्जन-सक्तः வித்தோ பார்ஜன சக்த: வித்த உபார்ஜன சக்த: - வித்த - பொருள், உபாரஜன - ஈட்டுதல்/சம்பாதித்தல், சக்த: - சக்தி/ஆற்றல்

तावत् - தாவத் - அதுவரையில்/அதுவரைக்கும்

निज परिवारः நிஜ பரிவார: - சுற்றத்தார்

रक्तः ரக்த: - பற்றுடன் பிரியம்

पश्चात् பச்’சாத் - பின்னர் (பொருள் ஈட்ட இயலா நிலை வரும் பொழுது)

जर्जर देहे जीवति ஜர்ஜர ஜீவதி தே3ஹே - ஜீவதி - பொருள் ஈட்ட முடியா நிலையில் வாழ்தல், ஜர்ஜர - முதுமைக் காலத்தில் (உடல் தளர்ந்த காலத்தில்), தேஹே - உடலில்

कोपि न கோபின - ஒருவரும் இல்லை

गेहे gEhE - கே3ஹே வீட்டினில்

वार्तां पृच्छति வார்த்தாம் ப்ருச்சதி - வார்தைகள் கூற (நலம் விசாரிக்க, அன்புடன் பேச)

விளக்கவுரை

பணம் சம்பாதித்துத் தரும் வரையில் மனைவி, மக்கள் அன்புடன் பழகுவர். உடல் தளர்ந்தபின் அவன் வீட்டில் தங்கிவிட்டால், யாரும் அவனுடன் பேசக்கூட மாட்டார்கள். சுற்றத்தினர்களும் சுயநலவாதிகளே என்று உணர்வாய். இதுதான் நேரடியான பொருள் இப்பண்ணிற்கு. இதன் விளக்கத்தை இப்பொது காணலாம்.

மனிதன் என்பவன் ஒரு சமூகப் பிராணி. குடும்பம், கணவன், மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், குழந்தைகள் போன்ற உறவுகளில், அவர்கள் எப்போதும் தன்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் மனிதன் பாதுகாப்பைத் தேடுகிறான். நம்மைச் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் நம் பரிவாரங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வாழ்வில் நம் குடும்பத்தினர், நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்திருக்கின்றோம். அன்பும் பற்றுதலும் பரஸ்பரம் இருப்பதாக உணர்கிறோம். ஆனால், இந்த பாதுகாப்பு/பற்றுதல்/காதல் என்ற உணர்வு, வாழ்நாளில் நிரந்தரமா, நிலையானதா?

நாம் சுற்றியுள்ளவர்களுக்குப் பயன்படும் வரை, நம் தொடர்புடைய வட்டங்களில் நமக்கு செல்வாக்கு/மரியாதை. நம் வாழ்வில், எத்தனை மேலாளர்கள்/உயர் அதிகாரிகள்/ ஆனையர்கள், அவர்கள் ஓய்வு பெற்ற/வெளியேறிய மறுநாளே, அவர்களால் பணியில் சேர்க்கப்பட்ட காவல் தொழிலாளியால் அதே அலுவலகங்களில், நுழைவதற்கு தடை செய்யப்படுகின்றனர் என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

பதவி, பொருள் ஈட்டும் நிலை, அல்லது நம் திறன்களைக் காலத்தின் செயல்முறை குறைக்கும் போது, மக்கள் நம்மில் எந்த மதிப்பையும்/பயனையும் காண மாட்டார்கள். ஆனால் அதுதான் உலக இயல்பு அல்லவா?

அது போல, நம் பரிவாரம், நம் குடும்பத்தினர், நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உறவுகள் தொடர்கதை என்று நாம் கருதினாலும், அது சிறு கதையாக முடியாமல் இருக்க நம் பதவி, பொருள் ஈட்டும் நிலை, அல்லது நம் திறன் உதவுகிறது என்பது உலக யதார்த்தம்.

முதுமைக்காலத்தில், திறன், உடல் நலக்குறைவு அடைந்து, பணம்/பொருள் சம்பாதிக்க வழி இல்லாத நேரத்தில், சொந்த வீட்டில் கூட நாம் ஒரு சுமை. அப்படி, மற்றவர்களைச் சாரந்து வாழும் போது அன்பின் தரம் மாறுகிறது.

அன்றாட வாழ்வில் இந்த யதார்த்தத்தை நிருபிக்க முதியோர் இல்லங்கள் / முதியோர் பராமரிப்பு நிறுவனங்கள், ஆசிரமங்களில் விடப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒன்றே போதுமானது.

ஒரு சிலர், வயது முதிர்ந்து நெடுநாள் நோய்பட்டு இருக்கும் நபரை வலியிலிருந்து விடுவிப்பதற்காக, இறைவனிடம் பிராரத்தனை; ஆனால் உண்மையில் அவர்கள் எந்த மதிப்பும் இல்லாத அந்த வயோதிகனிடமிருந்து விடுதலையை விரும்புகிறார்கள். அவர்கள் அதை நேரடியாக வெளிப்படுத்தவில்லை ஆனால் அதுதான் மனதில் மறைந்திருக்கும் நிகழ்ச்சி நிரல். இதுவும் யதார்த்தமே.

ஆக, யாரிடமிருந்தும் அன்புக்காக ஏங்காதே. இதனை ஆங்கிலத்தில் Emotional Dependence என்பார்கள்.

உணர்வுகளை உலுக்கிடும் உலக நடப்பை நேரடியாக ஸ்ரீ சங்கராச்சாரியார் சுட்டிக்காட்டுகிறார்.

தமிழ் இலக்கியத்தில் உறவு நிலையாமை

திருமந்திரம்

பந்தல் பிரிந்தது, பண்டாரம் கட்டு அற்ற
ஒன்பது வாலும் ஒக்க அடைத்தன,
துன்பு உறு காலத் துரிசுவர மேன்மேல்
அன்புடையார்கள் அழுது அகன்றார்களே.

உடல் என்னும் அழகிய பந்தல் பிரிந்துவிட்டது. உயிர்நிலை அப்போது நிலை குலைந்துவிட்டது. உடலின் ஒன்பது வாயில்களும் ஒன்றாக மூடிக் கொண்டன. துன்பம் தருகின்ற, காலம் என்பதன் முடிவு வந்து சேர்ந்தது. அன்பு கொண்ட உறவினர்கள் அழுவிட்டு அகன்று சென்றார்கள்.

பண்டம்பெய் கூரைபழகி விழுந்தக்கால்
உண்டஅப்பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமுமல்லது
மண்டியவருடன் வழி நடவாதே.

கன்ம வினைப் பயன்களைத் துய்த்த பின் உடல் விழுந்துவிடும். உடன் இருந்து இன்பங்களை அனுபவித்த மனைவியோ மக்களோ உடன் வரமாட்டார்கள் அப்போது நம்முடன். வாழ்ந்திருந்த காலத்தில் நாம் செய்த நோன்புகளின் பலன்களும்,நாம் சேகரித்த ஞானமும் மட்டுமே நம்மைத் தொடர்ந்து வரும்.

ஆர்த்துஎழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர், ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதி இலோரே.

ஆரவாரம் செய்து எழும் சுற்றத்தவரும், மனைவியும், மக்களும், ஊருக்கு வெளியே உள்ள நீர்நிலை வரை வந்துவிட்டு நீங்குவர். வாழ்க்கைக்கு வேராகிய தலையினை மறைத்து எரி மூட்டுவார்கள். நீரில் தலை முழுகிவிட்டுச் செல்லும் இவர்கள் பந்தம் அற்றவர்கள்.

அப்பர் - பதிக எண்: 5.70 கொண்டீச்சரம் குறுந்தொகை

சுற்றமும் துணை நன் மடவாளொடு
பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர்
குற்றமில் புகழ்க் கொண்டீச்சுரவனார்
பற்று அலால் பற்று மற்று இல்லையே

பொதுவாக உலகியலில் காணப்படும் காட்சியை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். தங்களுக்கு பயனுள்ள வரை ஒட்டி உறவாடும் சுற்றத்தார், நம்மால் ஆகவேண்டிய காரியம் ஏதும் இல்லை என்ற நிலை வந்த பின்னர், நம்மைப் போற்றுவதை நிறுத்திவிடுவார்கள். இத்தகைய செய்கைகளுக்கு, மனைவியும் பெற்ற மக்களும் விதிவிலக்கு அல்ல என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இந்த நிலையை நாம் பல இல்லங்களில் காண்கின்றோம். பயன் கருதி பழகும் மாந்தர்கள், நாம் அவர்களுக்கு பயனாக இருக்கும் தன்மையின் அடிப்படையில் நம்முடன் பழகும் விதத்தில் மாறுபாடு கொள்கின்றார்கள். ஆனால் இறைவனுக்கு நம்மால் ஆக வேண்டிய காரியம் ஏதும் இல்லை. அதனால் என்றும், அவனைச் சார்ந்து வழிபடும் அடியார்களிடம் மாறாத அன்பு கொண்டு அவன் காப்பற்றுகின்றான், எனவே இறைவனை விடவும் சிறந்த பற்றுக்கோடு நமக்கு ஏதும் இல்லை என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

ஔவையாரின் மூதுரை பாடல்

ஒருவனது செல்வம் குறைந்து வறுமை அடையும் நேரத்தில், நீர் குறைந்து வறண்டும் நிலையை அடைந்த குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் விலகுவது போல், சுற்றத்தார் அகன்று விடுவார்கள் என்று இந்த பாடல் ஔவை பிராட்டி கூறுகின்றார்.

அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல்
உற்றுழி தீர்வார் உறவு அல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

பட்டினத்தார் பாடல்கள்

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் உந்தன் வாயில் மட்டே
இனமான சுற்றமும் மயான மட்டே வழிக்கே துணை
தினையாம் அளவு எள்ளளவாகிலும் முன்பு செய்த தலந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்கும் சத்தியமே. 7.

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்பு ஒழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே. 8.

மாடுண்டு கன்றுண்டு மக்கள் உண்டென்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டு எனும்படி கேட்டுவிட்டோம் இனிக் கேள் மனமே
ஓடுண்டு கந்தை உண்டு உள்ளே எழும் ஐந்தும் ஓதவுண்டு
தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையும் உண்டே. 9.

உற்றார் அழுது அலுத்தார் உறன்முறையார் சுட்டு அலுத்தார்
பெற்று அலுத்தால் தாயார் பிறந்து அலுத்தேன் பூரணமே

வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே”

சதுரகிரி சித்தர் பாடல்

காயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்
காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!
கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்
கானல்காட் டும்ப்ர வாகம்!

இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழியைப் போன்றது,இந்த வாழ்க்கையானது மலையைச் சுற்றியுள்ள காட்டிலே ஓடுகின்ற ஆற்று வெள்ளம் ஆகும்,அன்புக்கு உரிய மக்கள், உறவினர், தேடிய வீடு, மனைவி ஆகிய இவைகளெல்லாம் கானல் நீர் காட்டுகின்ற வெள்ளம்!

திரை இசைப்பாடல்கள்

உறவு என்றொரு சொல்லிருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்‍கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவு இருக்‍கும் …..வாலி

வீடு வரை உறவு
வீதி வரை மணைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ……. கண்ணதாசன்

முடிவுரை

உற்றார், உறவினர், சுற்றம், சூழம் இவர்களிடமிருந்து வரும் அன்பு நிலையற்றது. எதிர்பார்ப்புகளுடன் நிறைந்தவை அவை.

எனினும், நமக்கு நம் மேல் என்றுமே, எப்பொழுதுமே அளவிலா, அழியாத அன்பு. அந்த அன்பே இன்பமெனும் உணர்வாக வெளிப்படுகிறது. இது மறுக்க முடியாத உண்மை. அல்லவா?

அதைப்போல, ஒப்புயர்வற்ற பொருளின் (வஸ்து) மேல் நாம் வைக்கும் ஒப்புயர்வற்ற பேரன்பு (परमप्रेमं- பரம ப்ரேமம்), அதாவது, அழியா, மாறா இறைவனிடத்தில் செலுத்தும் அந்த அன்பும், அழியாதது. அந்த அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

எப்படி என்னுள் அழியாமல் எனக்கு இருக்கும் பதப்படுத்தப்படாத அன்பு, இயற்கையாக இன்பமாக(புன்னகையாக) வெளிப்படுகிறதோ, (“யத்ர யத்ர ஸுகம், தத்ர தத்ர ப்ரீதி) அப்படி இன்பத்தோடு உறையும் அன்பே இறைவன். அந்த அன்பு வெளிப்படுத்தப்படும்போது, இருமை வடிவம் (அன்பு, இன்பம்); வெளிப்படுத்தாவிடில் நம்முள்ளே தூய இருப்பாய், தூய உணர்வாய் இருந்திடும் அந்த பேரன்பே இறைவன்; அதுவே கோவிந்தம். அது யாண்டும் அழியாதது.

அதை புரிந்து கொண்டால், அதை வெளியில் தேடமாட்டோம். ஆகையால் கோவிந்தனைத் துதி. இது தான் இந்த பண்ணின் சாரம்.

பின் குறிப்பு

“செல்வம், புகழ் மற்றும் பெயர் ஆகியவற்றின் நிலையற்ற தன்மையின் காரணமாக, அதன் மேல் உள்ள பற்றினை பதப்படுத்த வேண்டும் என ஆதிசங்கரர் கூறுகிறார். செல்வத்தையும் புகழையும் நாம் தவிர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. உண்மையில் அது நம்மிடம் இருக்கும்போது அதை அனுபவிக்க வேண்டும். ஆனால் நாம் அவற்றின் மீது வைக்கும் மதிப்பு/பற்றினை, நிரந்தரமான ஒன்றிலிருந்து பெற வேண்டும். அதுதான் இறை நோக்கமுடைய தூய மனம்.

ஏனெனில், பட்டினத்தார் கூறிய போல “ஆவியோடு காயம் அழிந்தாலும், மேதினியில் பாவி என்று நாமம் படையாதிரு”க்க, அந்த தூய மனத்தை இறை நோக்கி செலுத்திப்பெரும் ஆன்மீகச் சிந்தனைகளே நம்மிடம் எஞ்சியிருக்கும் சொத்து, காலனின் அழைப்பிதழ் வரும் பொழுத”.

ஆக, உடல், பொருள், காமம், வாழ்வு, உறவு இவை அனைத்தும் நிலையற்றவை என்று தெளிவாக, ஐந்து செயல்முறைகளால் ஆதி சங்கரர் நம் உள் உறைந்த வைராக்கியமெனும் வைரக்கல்லினைத் தோண்டி, பட்டை தீட்டி மெருகேற்ற முயல்கிறார்.

ஆறாவது செயல்முறையில் சங்கரர் என்ன செய்யப் போகிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.அதுவரை…..

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!