சங்கரனின் வைரக்கூடம் – 7 – பருவக் கோளாறு

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசை பிடித்து அலையாமல், நமது வாழ்வு நிலையற்றது என்பதை உணர்ந்து, உறவுகள் தொடர்கதைகள் அல்ல என்றும் அந்த உறவுகளும், நாம் ஈட்டும் செல்வமும், நாம் உள்ளிழுத்து விடும் மூச்சுக்காற்றும் உள்ளவரையே என்பதை நன்கு ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆறு செயல்முறைகளை சங்கரனின் வைரக்கூடத்தில் அறிந்தோம் இதுவரை.

‘அரிது அரிது, மானிடராய் பிறப்பது அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது.’ என்றார் ஓளவையார். அப்படிப்பட்ட அரிய பிறவியை எடுத்துள்ள நாம் அதை எப்படி கழிக்கிறோம் என்பதை இந்த நாட்டுப்புற பாடல் எளிமையாக எடுத்துரைக்கிறது..

''தத்தக்கா புத்தக்கா நாலே காலு
தானே நடக்கையிலே ரெண்டேகாலு
உச்சி வெளுக்கையிலே மூணே காலு
ஊருக்குப் போகையிலே எட்டே காலு''

என்ன இது? தத்தக்கா புத்தக்கா என்ற உளரல். இதற்கும் இந்த பஜகோவிந்த ஸ்லோகத்திற்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் உண்டு; இந்த நாட்டுப்புற பாடலின் பொருளை அறிய, முடிவு வரை காத்திருக்கலாம்.

மனித வாழ்வவினை (பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ள காலத்தை) பருவங்களாக பிறிக்கலாம். இந்தப் பிறிவுகள் ஒவ்வொருவரின் கண்ணோக்கத்தைப் பொருத்து; இரண்டிலிருந்து, பண்ணிரண்டு வரை பிரிக்துப் பார்க்கலாம் என்பர். அனைத்து கண்ணோக்களிலும் மூன்று முக்கிய நிலைகள் உண்டு. நமது வாழ்நாளை, குழந்தை, இளமை, முதுமை என்று பருவங்களாகப் பிரிக்கலாம். (மேலே உள்ள படத்தை பாரக்கவும்).

இந்தப் பருவங்களை எப்படி கடக்கிறோம் நாம், என்பதை ஆதி சங்கரர் ஒரு புகைப்படம் போல ஒரு ஒரு வரியில் விவரிக்கின்றார் இந்த அடுத்த செயல்முறையில்.

வாருங்கள். எப்படி என்று பார்க்கலாம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

बालस्तावत्क्रीडासक्तः

तरुणस्तावत्तरुणीसक्तः |

वृद्धस्तावच्चिन्तासक्तः

परमे ब्रह्मणि कोऽपि न सक्तः ||

ஆதி சங்கராச்சார்யா

தமிழ் ஒலிபெயர்ப்பு

பா3லஸ்தாவத் க்ரீடா3 ஸக்த:
தருணஸ் தாவத் தருணீ ஸக்த: |
வ்ருத்3த4ஸ் தாவத் சிந்தா ஸக்த:
பரமே ப்ரஹ்மணி கோபி ந ஸக்த: ||

தமிழ் மொழிபெயர்ப்பு

பாலகனாக பற்றுவோம் ஆட்டம்

வாலிபனாக குமரியில் நாட்டம்

முதியவனாக உள்ளத்தில் கவலை

முத்தனைப் பற்றிட எவனும் இல்லை

சமஸ்க்ருத சொற்களின் பொருள்கள்

बालस्तावत् - பாலஸ்தாவத் - குழந்தைப் பருவத்தில், 

क्रीडा असक्तः - க்ரீடா ஸக்த: - க்ரிட + அஸக்த: - ஆட்டம்/விளையாட்டு + பற்றுதல்

तरुणस्तावत् - தருண ஸ்தாவத் - இளமை பருவத்தில்

तरुणीसक्तः - தருணீஸக்த: - பெண்ணாசை/குமரியில் நாட்டம்

वृद्धस्तावत् - வ்ருத்தஸக்த: - முதுமைப் பருவத்மில்

चिन्तासक्तः - சிந்தாஸக்த: - கவலை உள்ளம் கொள்வது

परमे ब्रह्मणि - பரமே ப்ரஹ்மநி - பரப்பிரம்மனை

कोपि न - கோபி ந - க அபி ந - ஒருவரும் இல்லை

असक्तः - அஸக்த: - பற்றுடன்

விளக்கவுரை

நேரடிப் பொருள்
விளையாட்டு/விளையாட்டுத்தனத்தின் மீதான பற்றுதலால் குழந்தைப் பருவம் நழுவிப் போகிறது. பெண் மீதான பற்றுதலால் இளமை மறைகிறது. பல விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதில் முதுமை கடந்து செல்கிறது. ஐயகோ, பரபிரம்மத்தைப் பற்றிட விரும்பும் எவரும் இல்லை.
தத்துவ விளக்கம்
முந்தைய இரண்டு ஸ்லோகங்களில் , ஆதி சங்கரர் மரண நேரத்தை விளக்கி, நிலையிலா, வெறுமையான, தவறான மனித உறவுகள் எவ்வாறு நமது முட்டாள்தனமான மனதை நமது ஆன்மீக இலக்கிலிருந்து திசைதிருப்ப முடியும் என்பதை நினைவூட்டினார்.

இந்த செயல்முறையில், அவர் நமது வாழ்க்கைப் பயணத்தின் நான்கு நிலைகளை சுட்டிக்காட்டி அந்நிலைகளின் யதார்த்த நிலமையை எடுத்துரைக்கிறார்.

ஒரு மனிதன் வாழ்வில் நான்கு பருவங்களைக் (4 நிலைகளைக்) கடந்து செல்கிறான் - குழந்தை, பாலகன், இளைஞன், முதியவன் என்பவை இவை.

இந்தப் பயணத்தில் நம்மை எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் பற்றி அவர் எச்சரிக்கிறார். நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கவனச்சிதறல்கள் உள்ளன.

இன்றய காலக் கட்டத்தில் நாம் அனைவரும் ஒரே “பிஸி” - ஒய்விலா பரபரப்பு; அல்லவா! எப்படி?

1. குழந்தைகளாக இருந்தபோது, விளையாட்டிலே பிஸி.
2. இளமை எனும் பூங்காற்றுக் காலத்தில் பாலினத்தில் நாட்டம். இளஞனுக்கு எத்தனை பெண் தோழிகள் இருக்கிறார்கள் என்ற கவலையும், குமரிப் பெண்ணுக்கு, தனக்கு பின்னால் எத்தனை ஆண் நண்பர்கள் சுற்றுகிறார்கள் என்ற கவலை.
3. முதுமையில், வாழ்க்கையின் இறுதி/இறுதிக் கட்டங்களுக்குள் நுழைகிறோம். நமது கவனம் முழுவதுமாக மாறி, நமது உடமைகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் போன்றவற்றின் பாதுகாப்பு/கவலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். எவரிடத்தில் பேசினாலும், “நமது மலரும் நினைவுகளை அவர்களின் மீது வாந்தி எடுக்க ஆரம்பிக்கிறோம்”.

பரம்பொருளை அறியவும், மெய்ப்பொருளை உணரவும் நேரமே இல்லை. சிறிது நேரம் ஒதுக்கலாம் என்று நினைத்தாலும், பயிற்சியின்மையால், அப்படிப்பட்ட எண்ணங்களில் மனம் ஈடுபட மறுக்கும், நொண்டிச்சாக்குகளை நோக்கி விரையும்.

நம் வாழ்வில் தெய்வீகத்தை, மிகக் குறைந்த வயதிலேயே கொண்டுவரும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நமது உடல், மனம் மற்றும் புத்தி வளாகம் உலக விவகாரங்களில் சிக்கிக்கொள்ளும் முன் இதைச் செய்ய முடிந்தால், அது வாழ்க்கையில் நிறைய கசப்பான அனுபவங்களைக் கடக்க உதவும். இந்த வைராக்கியமெனும் வைரத்தை தோண்டி எடுத்து, பட்டை தீட்டி, மிருகேற்றி நம்மில் ஒளித்திடவே, ஆதி சங்கராச்சாரியார் இந்த நிலையை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

இப்படி எடுத்துரைப்பதால், சங்கரர் உலக நோக்கங்களுக்கு எதிரானவர் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை விளையாட வேண்டும், ஒரு இளைஞன் சம்பாதித்து குடும்பத்தை வளர்க்க வேண்டும் மற்றும் நேர்மையான வழிகளில் செல்வத்தைப் பெற வேண்டும். ஆனால் ஒருவன் தனது அன்றாட வாழ்வின் தொடகத்திலேயே, கடவுளை மையமாகக் கொண்ட உள்நோக்கிய பயணத்தைத் தொடங்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி செய்தால், வயதான காலத்தில், நமது உலக உடைமைகளைப் பற்றிய தவிர்க்கக்கூடிய கவலைகள் நம்மை தீண்டாது. நமது மன அமைதியையும் பறிக்காது.

இதுவே இந்த ஸ்லோகத்தின் சாரம்.

தமிழ் இலக்கியங்களில் வாழ்க்கைப்பருவங்களின் நிலையாமை

பட்டினத்தார் பாடல்

முதற்சங்கு அமுதூட்டும்,
மெய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு
பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும், அம்மட்டோ?
இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!

வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே

திருமந்திரம்

திருமந்திரப் பாடல் ஒன்றில், பாலன் இளைஞன் முதியவன் என்ற பல பருவ மாறுபாட்டினை உடல் அடைவதைக் கண்ட பின்னரும், இளமை நிலையற்றது என்ற உண்மையை புரிந்து கொள்ளமால் உலகத்தவர் இருக்கின்றார்களோ என்று வருந்தும் திருமூலர், காலத்தையும் அண்டங்களையும் கடந்தவனாகிய இறைவனின் திருவடிகளை நாம் தொழவேண்டும் என்று உணர்த்துகின்றார்.

பாலன் இளையன் விருத்தன் என நின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்து அண்டம் ஊடறுத்தான் அடி
மேலும் கிடந்து விரும்பவன் நானே

ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண்டு ஆரும் புகுந்து அறிவார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே.

அறியாமையிலேயே பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இறைவனே நம் அனைவருக்குத் தந்தையாவான். அவன் நினைவை நெஞ்சில் பூண்டு கொண்டு அவன் ஒளியில் புகுந்து பேரறிவு பெறுபவர் இல்லை. நீண்ட ஆயுள் பெற்று, நீண்ட நாட்கள் வாழ்ந்த போதிலும், தூண்டினால் ஒளியைப் பெருக்கும் விளக்குப் போன்ற இறைவனை அறியாமலேயே உலகில் வாழ்கின்றனர்.

அறநெறிச்சாரம்

தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்
பிரிவுந் துயிலும் உறீஇப் -- பருவந்து
பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு
வித்துக் குற்று உண்பார் பலர். --- அறநெறிச்சாரம்.

(தெரிவு இல் இளமையும்) பொருள்களை ஆராய்தற்கு ஏலாத இளமைப் பருவத்தையும், (தீப்பிணியும்) கொடிய நோய்களையும், (மூப்பும்) கிழத்தன்மையையும், (பிரிவும்) உற்றாரைப் பிரிதலையும், (துயிலும்) மரணத்தால் வருந் துன்பங்களையும், (உறீஇ) அடைந்து, (பருவந்து) வருந்தி, (பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு) பயனற்ற சின்னாள் வாழ்க்கைக்கு, (வித்துக் குற்று உண்பார் பலர்) உணவை விரும்பும் வேளாளன் அறிவின்றி வித்தையும் அழித்து உண்பதைப்போல வீடுபேற்றுக்கு வித்தாய அறத்தையே அழித்து வாழ முயல்பவரே உலகிடைப் பலராவர்.

அப்பரின் தேவாரம்

அப்பர் பிரான், இளமைக் காலத்தில் நம்மை விரும்பும் பெண்கள் நம்மை இகழ்வதற்கு வழி வகுக்கும் முதுமை வரும் முன்னர் இறைவனை நினைத்து வழிபடவேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
எழுது கொடியிடையார் ஏழை மென்தோள்
இளையார்கள் நம்மை இகழா முன்னம்
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டு தான்
என்னோடு பகை தான் உண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றும் கூடி முடியால்
உற வணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான்
ஊர் போலும் ஆரூர் தானே

முடிவுரை

நமது வாழ்நாளின் யதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டும் அருமையான ஸ்லோகம். ஆழ்ந்து நம்மை சிந்திக்க வைக்கும் உண்மைகள்.

நாலு கால்களில் (இரு கை, இரு கால்) தத்தக்கா புத்தக்கா என்று தவழும் குழந்தையாக, பின் தானாக (சக்தியுடன்) இரு கால்களில் நடக்கும் இளைஞனாக, உச்சி வெளுத்து தண்டுகோல் கொண்டு மூன்று கால்களில் நடக்கும் முதுமைப் பருவம் தாண்டி, எமன் அழைத்து செல்லும் ஊருக்குப் போகையிலே எட்டு கால்களுடன் (நம் பிணத்தை தூக்கிச் செல்லும நால்வரின் கால்கள்) செல்லும் நாம், இறைவனை நினக்க தேரம் ஒதுக்கினோமா என்று ஆராய வேண்டும். இது தான் இந்தப் பண்ணின் சாரம்.
இதனைத்தான்  15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹான் கபீர்தாஸ் , இந்தி மொழியில் கூறுகிறார்:

बीत गये दिन भजन बिना रे।
भजन बिना रे, भजन बिना रे॥

बाल अवस्था खेल गवांयो।
जब यौवन तब मान घना रे॥

लाहे कारण मूल गवाँयो।
अजहुं न गयी मन की तृष्णा रे॥

कहत कबीर सुनो भई साधो।
पार उतर गये संत जना रे॥

ஞானி கபீர் தாஸ்
“ஐயோ, உமது தியானம் இல்லாமலேயே என் உயிர் போய்விட்டது ஆண்டவரே! நான் என் குழந்தைப் பருவத்தை விளையாடிக் கழித்தேன், என் இளமையில் என் பெருமை என்னைத் தாண்டியது.நான் என் வாழ்வின் பெரும்பகுதியை (முக்கியத் தொகை) பயனற்ற நாட்டங்களில் இழந்துவிட்டேன், என் மனம் மற்றும் புலன்களின் ஆசைகள் இன்னும் தணியவில்லை”.

ஆய்வோம் உட்கருத்தினை. தயாராகுவோம் அடுத்த பதிவிற்கு. அதுவரை

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க

Sankara’s Smithy – Strike 7 – The “Season”al Blow

Life – A snap shot

Introduction

So far, in the six Slokas of Bhaja Govindam, we have learnt  abiut the impermanence of our body, the acquired wealth, our lust, our life itself, our relations and even our own breadth.

'Rare, rare, rare to be born as a human being. It is even rarer to be born without any challenges such as cripple, blindness or deafness’ said Avvayaar, the famous Tamil poetess.

This rare breed of Human’s life span (the period from birth to death) can be divided into several stages or seasons. The number of categories vary as per each individual's perspective. If you surf the internet, you will find from two stages to tweleve seasons.

In general, these seasons or stages broadly cover the childhood, youth and old age phases. A human being primarily passes through 4 stages of growth

1) infancy (bāla),
2) childhood (koumāra),
3) manhood (youvanna) and
4) old age (vārdhakya).

From the cradle to grave how do we spend our lives? Are we living upto our reputation of being a rare breed?

In Sankara’s Smithy, Adi Sankara, provides a season-wise snapshot of our focus and the way we live in this Strike (Sloka) No 7.

Let us examine this Sloka.

Sanskrit Verse

बालस्तावत्क्रीडासक्तः

तरुणस्तावत्तरुणीसक्तः |

वृद्धस्तावच्चिन्तासक्तः

परमे ब्रह्मणि कोऽपि न सक्तः ||

Adi Sankara

English Transliteration

Baalastaavat kreedaasaktha: 
tarunastaavat taruneesaktha:
Vrddhastaavat chintaasaktha:
paramE brahmani kOpi na saktha:

Meaning of the Sanskrit Words

बालस्तावत् - baalastaavat - When one is a child, so long one is in one’s childhood        

क्रीडा असक्तः - krida + asakth = to play + attached

तरुणस्तावत् - taruna statvat = so long as one is in youth

तरुणीसक्तः - tarunisaktah = attached to one’s young woman(passion)

वृद्धस्तावत् - vridhha stavat = so long as one is old

चिन्तासक्तः - chintasaktah = attached to anxiety

परमे ब्रह्मणि - parame brahmani = to the Supreme Brahman

कोपि न - ka api (kopi) + na = alas + not

असक्तः - asakth = attached

Meaning in English

During childhood one is attached to play, during youth one is attached to women. In old age one is attached to anxiety. Yet no one is attached to the Supreme brahman. O! foolish mind !! Seek Govinda!

Explanation

In the previous two verses, the poet used Death to remind us of how the empty and false relationships can distract our foolish mind from our spiritual goal. 

In this verse, he warns us of the pitfalls that face us in our journey throughout the different stages of our lives. There are distractions in every stage of our life. So much so, that we hardly find time for God or for our own introspection about ourselves.

This Sloka looks at these distractions.

1. When we all were children, by and large we were all busy with play as that was the true nature. This is the situation even today.

2. But as we grew into the next stage, the youth, the principal attraction was the other sex. The young man is concerned about how many girl friends he has and the young woman is concerned how many boyfriends are behind her!

3. As we become old, we enter the pre-final/final stages of our life, our focus shifts completely and is on safety/security/worries of our belongings, children, grand children etc. We start ““vomiting out our memories” on every occasion as our genuine worries.

Sankara laments that in all their lives, not many people make efforts to get engaged with self inquiry and seeking the Supreme Brahman, God. Due to lack of training, the mind will refuse to entertain thoughts about God.

Shankaracharya is clearly addressing this verse to each individual. The responsibility is on each one of us to bring Divinity into our life at the earliest possible age. If this can be done before we get sucked into the worldly affairs of the Body, Mind and Intellect complex of ours, then it would save us a lot of bitter experiences in life.

We must clearly understand that Sankara is not against the worldly pursuits as they are your expected duties. A child must play, a young man must earn and raise a family and obtain wealth by honest means, but one must also find some time, early in life, to begin the God focussed inward journey so that when we are in our old age, avoidable worry about our worldly possessions do not rob us of our composure and peace of mind.

And, as stated in the very opening verse of Bhaja Govindam, we can and must cultivate an attitude of prayerfulness from an early age. We are therefore told, bhaja govindam bhaja govindam, govindam bhaja mudhamate. Remember why you have come here. Do not be diverted from your goal.

Conclusion

A similar message is given in Saint Kabir Das’s  poem in Hindi:

बीत गये दिन भजन बिना रे।
भजन बिना रे, भजन बिना रे॥

बाल अवस्था खेल गवांयो।
जब यौवन तब मान घना रे॥

लाहे कारण मूल गवाँयो।
अजहुं न गयी मन की तृष्णा रे॥

कहत कबीर सुनो भई साधो।
पार उतर गये संत जना रे॥

Saint Kabir Das
“ Alas my life is passed away without your meditation O Lord! I spent my child hood playing, in my youth my pride overtook me.
I have lost most of my life (principal amount) in useless pursuits and the desires of my mind and senses are still not quenched. Kabir says listen o Sadho (seeker), the saints dwelling on His name have crossed this ceaseless ocean of the world”.
This Hammer Strike (Sloka) is a snap shot of our life. It captures clearly our “mooda mathe”, our foolish mind . 

It is a clarion call to each one of us, to take a pause, think and then proceed in our journey called life. It is for us to start executing.

We will continue our visits to Sankara’s Smithy. Until our next visit ……

God Bless.

Sankara’s Smithy – Strike 6 – The “airy” blow

Introduction

This Sloka is an extension of the previous Sloka. In the previous blog, Sankara declared that recognition and respect is a result of your wealth earning capability. 

This Strike (Sloka ) is an auxiliary strike to the previous one; it amplifies the same thought to yet another bitter reality. The theme begun in the previous Sloka is continued here with a graphic touch added to it, to drive home the same point with added emphasis. It looks at things straight in the eye.

Let us start with a small incident that we often come across.

A child saw a balloon vendor opposite and wanted to get a a balloon. The mother of the child was not willing to get the child the object of her love. The. Child got disappointed and started crying. An elderly saint saw this, went to the vendor, got the baloon, gave it to the child. The child was extremely thrilled, she started playing with the baloon and was very happy.

The mother asked the seer as to why he bought the baloon. The saint smiled at her and responded:

“Look at the child; she is so happy as long as the baloon is in her hand. The moment the baloon goes out of her hand or the baloon gets deflated, the child will be disappointed and will be unhappy again. We all are children like her. We are very happy with our body, play with that in life and are happy because we think we own them and we love the body of ours. The moment the air inside us gets deflated/released, we are gone; there is only distress and crying all around. So don’t bother much” he said and walked away.

This in ident involving the greatest saint of Kanchi Kamkoti Mutt sets the background for this strike by Adi Sankara. Let us now receive the sixth strike.

Sanskrit Verse

यावत्पवनो निवसति देहे,

तावत् पृच्छति कुशलं गेहे |

गतवति वायौ देहापाये,

भार्या बिभ्यति तस्मिन्काये ||

English Transliteration

yāvatpavano nivasati dehe, 

tāvat pṛcchati kuśalaṃ gehe |

gatavati vāyau dehāpāye,

bhāryā bibhyati tasminkāye ||

Meaning of the Sanskrit Words

यावत्  - yaavat. - so long as;
पवनः - pavanaH - air/breath (life breath)
निवसति - nivasati - lives/dwells;
देहे - dehe- in the body;
तावत् - taavat - till then;
पृच्छति - pR^ichchhati - enquires about;
कुशलं - kushalaM - welfare;
गेहे - gehe - in the house; in the family
गतवति - gatavati - while gone; has left
वायौ - vaayau - air(breath);
देह अपाये - dehaapaaye - life departs the body;
भार्या - bhaaryaa - wife;
बिभ्यति - bibhyati - is afraid;fears;
तस्मिन् काये - tasminkaaye - tasmin.h+kaye - in that body;

Meaning in English

As long as he/she is alive, the family members crowd around and enquire about the welfare. But when the breathing stops, even the spouse who has enjoyed this body fears the corpse.

Explanation

For ordinary people like us, death is frightening. We are people with likes and desires and attachments to worldly beings and things. So, we all tend to shun the topic of death. We close our eyes to the reality that is certain to overtake us one day. 

Even if someone talks about it in a conversation, we tend to say “Don’t talk about “inauspicious” matters. We will see when it comes. Why do you worry about that now. We all have very good health now and we have family and friends to take care of us. Relax now and enjoy.” Fine for that moment. But, is this the reality?

The body is important only to the extent that it is an instrument for achieving certain of our goals. However healthy a body may be, it is appreciated only as long as it has “breathing” or life in it. The departure of prana (the spark of consciousness) changes the entire outlook.

Once breathing stops and life is gone, the person becomes a body or a corpse. “He” or “She” becomes “it”, a fast decaying object no longer required. “It” needs to be disposed off first. Everyone including the wife will be scared to be with a corpse. So, the body is laid out, placed on blocks of wood, and set fire to or laid to rest with Mother Earth. The only things that accompany the departed are noble (dhārmic धार्मिक्) acts”.

Then the relatives and others leave. And after the ceremonial rituals, everyone without exception moves on in life to seek new avenues of joy and the dead person becomes history and fades away in memory. This is a sour fact. As long as the gasp of life is there, people come and surround.

This is reality. So, “The blind affection which we give to our family is never shown towards something is ever-present. Unless there is detachment from worldly pleasures, mind can not be turned inwards. The utter worthlessness of the ties will become apparent after one contemplates on the impermanence of the worldly ties. If one enquires deeply, one can rise about merely satisfying the needs of the body and make the mind suitable for self-enquiry by making time for the spiritual dimension of life. So pray Govinda”

Adi Sankara clearly brings out this and advises us to weigh our priorities.

Conclusion

“Knowing the limitations of the body will help us keep a healthy outlook in life and turn the mind to everlasting principles, rather than being obsessively engaged in pampering our bodies. This, however, doesn’t mean we don’t take care of the body and neglect it. Yes, we should take care of the ‘vehicle’ (our body) for living a meaningful life and use that as a means or a tool to understand and realise the truth, but without undue attachment to it. We must pray to the divine to give us the understanding to dispel the ignorance in which we are slowly drowning every day. So, Shankara through this verse reminds us of the temporary nature of the body and advises us to chant the name of the Lord who will ultimately guide and help us to realise our true self”.

This is the essence of the Strike 6. Let us understand the reality of our lives and prepare ourselves dor the inevitable which Adi Sankara continues to remind us in this Bhaja Govindam.

We will get ready for his next strike. Until then……

God Bless

சங்கரனின் வைரக் கூடம் – 6 – காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

தமிழ் வலைதள ஒலித்தொடர் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

ஒரு  குழந்தை எதிரில் இருந்த பலூன் வியாபாரியை பார்த்து     பலூன் வேண்டுமென்று அழுதது. தாய் கண்டிக்க,அங்கிருந்த ஒரு ஞானி,பலூன் வாங்கி குழந்தையிடம் தரும் படி சொன்னார். பலூன் கைக்கு வந்தவுடன் குழந்தைக்கு ஒரே கொண்டாட்டம்,    கும்மாளம். இதைப் பார்த்த அந்த மாமுனி:   

“பாரு!குழந்தை இப்போ ஒரே சந்தோஷமா இருக்கு. அது பலூனில் காத்துள்ள மட்டும் தான். காத்து போயிடுத்தோ அல்லது பலூன் உடைஞ்சி போச்சுன்னாலோ ஒரே வருத்தமாயிடும் அழும். இப்போ எவ்வளவு சந்தோஷமோ, காத்து போனா அவ்வளவு துக்கம் வரும். நாமும் குழந்தை மாதிரி தான் இந்தஉடம்பை வெச்சுண்டு விளையாடுறோம். ரொம்ப சந்தோஷமா, சவுக்கியமா இருக்காப்புல நினைக்கிறோம். ஆனால்,இதுலயும் காத்து போயிட்டா ஒரே துக்கம்,அழுகதான்”. இதைத் தான் சித்தர்கள் ரொம்ப சாதாரணமா

காயமே இது பொய்யடா வெறுங்
காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த
மண்ணு பாண்டம் ஓடடான்னுபாடிவிட்டார்கள் என்றார்.

அந்த மாமுனியே நமது காஞ்சிப் பெரியவர்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

यावत्पवनो निवसति देहे,

तावत् पृच्छति कुशलं गेहे |

गतवति वायौ देहापाये,

भार्या बिभ्यति तस्मिन्काये ||

தமிழ் ஒலிபெயர்ப்பு

யாவத் பவனோ நிவஸதி தே3ஹே
தாவத் ப்ருச்சதி குச’லம் கே3ஹே |
க3தவதி வாயௌ தே3ஹாபாயே
பா4ர்யா பி3ப்4யதி தஸ்மின் காயே ||

தமிழ் மொழிபெயர்ப்பு

காயம் தனிலே காற்றுள்ள வரைக்கும்

குசலம் கேட்பர் சுற்றமும் சூழலும்

மூச்சுக் காற்று நின்று போனதும்

உடலைக் கண்டு மனைவியும் அச்சம்

சமஸ்க்ருத சொற்களின் பொருள்

यावत्  - யாவத் - எவ்வளவு
पवनः - பவன: - மூச்சுக் காற்று - பிராண வாயு
निवसति - நிவஸதி - வசிக்கும் - இருக்கும்
देहे - தேஹ - உடலில்
तावत् - தாவத் - அதுவரைக்கும்;
पृच्छति - ப்ருச்சதி - விசாரித்தல்
कुशलं - குச’லம் - நலம்
गेहे - கே3ஹே - வீட்டில்/குடும்பத்தில்
गतवति - க3தவதி - சென்றது
वायौ - வாயௌ - காற்று
देह अपाये - தே3ஹாபாயே - உடலை விட்டு பிரிதல்
भार्या - பா4ர்யா - மனைவி/இல்லாள்
बिभ्यति - பி3ப்4யதி - அச்சத்தில்;
तस्मिन् काये - தஸ்மின் காயே - அந்த உடலை (உயிர் பிரிந்த உடலை)

விளக்கவுரை

நேரடிப் பொருள்

(உன்) உடலில் எவ்வளவு காலம் வாயு (ஜீவன்) இருக்கிறதோ அதுவரை தான் உனது குடும்பத்தினர் உன் நலனில் இச்சை காட்டுவார்கள். தேஹத்திலிருந்து வாயு (ஜீவன்) அகன்று விட்டாள், உனது மனைவிகூட உன் (உயிரற்ற) சடலத்தை கண்டு ந்டுங்குவாள். அதாவது உடலில் மூச்சுக் காற்றுள்ள வரையே வீட்டில் உள்ளவர்கள் உன் நலத்தை விசாரிப்பார்கள். பிராணன் பிரிந்துவிட்டால், நீ கூடிக்குலாவிய உன் மனைவிகூட உன் உடலைக்கண்டு அஞ்சுகின்றாள்.

விளக்கம்:

நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு, மரணம் பயமாக இருக்கிறது. நாம் அனைவருமே உலக உயிர்கள், பொருள்கள் மீது விருப்பு, வெறுப்பு, ஆசைகள் மற்றும் பற்றுதல் கொண்ட மக்கள். எனவே, நாம் மரணம் என்னும் பேச்சையே தவிர்க்கிறோம். ஏதாவது நமது உரையாடலில் யாராவது அதைப் பற்றி பேசினால் கூட, "அமங்கலமான" விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். வரும்போது பார்ப்போம். அதைப்பற்றி இப்போது ஏன் கவலைப்படுகிறீர்கள். நாம் அனைவரும் இப்போது மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம், நம்மை கவனித்துக் கொள்ள குடும்பம் மற்றும் நண்பர்கள் உள்ளனர். இப்போது ஏன் அதைப் பற்றிய பேச்சு?" என்று கூறி நமது உரையாடலை திசை திருப்பி தொடர்கிறோம். அல்லவா!

ஆனால் இது தான் நிஜ வாழ்வா? சிந்திக்கலாம்.

நமது சில இலக்குகளை அடைவதற்கான கருவியாக இருக்கும் அளவுக்கு மட்டுமே உடல் முக்கியமானது. ஒரு உடல் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், அதில் "சுவாசம்" அல்லது உயிர் இருக்கும் வரை மட்டுமே அது பாராட்டப்படுகிறது. பிராணனின் புறப்பாடு (உற்ற தேகத்மிலிருந்து உயிர் பிரியும் பொழுது), நம் அனைவரின் முழுக் கண்ணோட்டத்தையும் மாற்றுகிறது.

சுவாசம் நின்று, உயிர் போனவுடன், அந்த நபர் உடலாகவோ, பிணமாகவோ மாறுகிறார். "அவன்" அல்லது "அவள்" என்பது "அது" ஆகிவிடும்; வேகமாக அழுகும் பொருள் இனி தேவையில்லை "இது".
முதலில் அகற்றப்பட வேண்டும். மனைவி உட்பட அனைவரும் பிணத்துடன் இருக்க பயப்படுவார்கள். எனவே, உடல் அமைக்கப்பட்டு, மரக் கட்டைகளில் வைக்கப்பட்டு, தீ வைக்கப்படுகிறது அல்லது அன்னை பூமியுடன் சேர்கப்படுகிறது. பிரிந்தவர்களுடன் இருக்கும் ஒரே விஷயங்கள், அவர்களின் உன்னதமான (தார்மிக் धार्मिक्) செயல்கள்”

பின்னர் உறவினர்களும் மற்றவர்களும் சென்று விடுவர். சடங்குகளுக்குப் பிறகு, விதிவிலக்கு இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியின் புதிய வழிகளைத் தேடப் புறப்பட்டு, வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள், இறந்தவர் வரலாற்றாகி நினைவிலிருந்து மங்குகிறார். இது ஒரு கசப்பான உண்மை.

இதுதான் யதார்த்தம். எனவே, “நம் குடும்பத்தின் மீது நாம் காட்டும் கண்மூடித்தனமான பாசம்/பற்று, நிலையாக நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளின் மேல் காட்டப்படுவதில்லை. உலக இன்பங்களிலிருந்து பற்றின்மை இல்லாவிட்டால், மனதை உள்நோக்கித் திருப்ப முடியாது. உலக உறவுகளின் நிலையற்ற தன்மையைப் பற்றி ஒருவர் சிந்தித்த பிறகு, உறவுகள் தொடர்கதை அல்ல அவைகள ரயில் பயண சிநேகிதம் போலவே என்பது தெளிவாகத் தெரியும். ஆழ்ந்து விசாரித்தால், உடலின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து, வாழ்க்கையின் ஆன்மிகப் பரிமாணத்திற்கு நேரத்தை ஒதுக்குவதன் மூலம் மனதை சுய விசாரணைக்கு ஏற்றதாக மாற்ற முடியும். எனவே கோவிந்தாவை வேண்டிக்கொள்”

ஆதிசங்கரர் இதை தெளிவாக வெளிப்படுத்தி, வாழ்க்கையில் நமது முன்னுரிமைகளை எடைபோட அறிவுறுத்துகிறார்.

தமிழ் இலக்கிய மேற்கோள்கள்


திருக்குறள்

உயிர் என்பது நமது உடலை இயக்கும் ஒரு ஆற்றல் என்று கருதப்படுகிறது. உயிர் நிலையானது என்றும், அது மீண்டும் மீண்டும் பல பிறவிகளை எடுக்கிறது என்றும் வள்ளுவர் கருதுகிறார். இவ்வுடம்புக்கும் உயிருக்குமுள்ள நட்பு, முட்டைக்குள் இருந்த பறவை இறக்கை முளைத்தபின் வெளிவந்து, அந்த முட்டையைவிட்டுப் பறந்து போவதைப் போன்றது (குறள் – 338). மற்றும், சாவு என்பது உறக்கத்தைப் போன்றது; பிறப்பு என்பது உறங்கி விழித்தலைப் போன்றது (குறள் – 338). உறங்கியவன் மீண்டும் எழுவதைப்போல், ஒரு உடலில் இருந்த உயிர் அந்த உடலின் மரணத்திற்குப் பிறகு அந்த உடலைவிட்டு வெளியேறி, மீண்டும் மற்றொரு உடலோடு இயங்குகிறது என்பதை உணர்ந்த வள்ளுவர், “உடம்பில் ஒதுக்குக் குடியாயிருந்த உயிர்க்கு புகுந்து தங்குதற்கு நிலையான ஒரு இல்லம் அமைந்திடவில்லையே (குறள் – 340)” என்று வியக்கிறார்.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. (குறள் – 338)

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள் – 339)

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (குறள் – 340)

சுந்தரர் தேவாரம்.

ஊன்மிசை உதிரக் குப்பை
ஒருபொருள் இலாத மாயம்
மான்மறித்து அனைய நோக்கின்
மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுடப் பிறவி வாழ்வு
வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்,
ஆனல்வெள் ளேற்ற ஆரூர்
அப்பனே! அஞ்சி னேனே. --- சுந்தரர் தேவாரம்.

வெள்ளிய நல்ல ஆனேற்றை உடையவனே! திருவாரூரில் உள்ள தந்தையே! இறைச்சியை உள்ளடக்கி ஓடுகின்ற குருதிக்குப் பையாய் உள்ள இவ்வுடம்பு , பொருட்டன்மையாகிய உண்மையை உடைத்தல்லாத பொய்ப்பொருள் ; ஆதலின் , அத் தன்மையை அறியாத , மான் மருண்டாற் போலும் பார்வையினை யுடைய பெண்டிரே மதிக்கின்ற இந்த மானிடப்பிறவி வாழ்வினை , இன்புற்று வாழ்வதொரு வாழ்வாக விரும்புகின்றிலேன்; அத்துன்ப நிலைக்கு அஞ்சுதல் உடையன் ஆயினேன் .

சோமேசர் முதுமொழி வெண்பா

சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

ஆக்கையும் ஆயிரத்துஎட்டு அண்டங்களும் நிலையாத்
தூக்கி அழிந்தான்சூரன், சோமேசா! - நோக்கியிடில்
நில்லாதவற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை.

சூர பத்மன் , தன் உடம்பும், தன் அரசாட்சிக்குரித்தாக ஆணை செலுத்திய ஆயிரத்தெட்டு அண்டங்களும், நிலையுடையவெனக் கருதி, அழிந்தொழிந்தான்; சோமேசா! அதுபோல, ஆராயுமிடத்து நிலையுதல் இலவாகிய பொருள்களை, நிலையுதலை உடையன என்று, புல்லிய அறிவினை உடையராதல் கருதுகின்ற இழிபாம்.

பட்டினத்தார் பாடல்

“காற்றைத் துருத்தி கடிய வினைக்கு உள்ளான
ஊற்றைச் சடலத்தை உண்டு என்று இறுமாந்து
பார்த்து இரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல்
ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே”

யாரோ ஒரு கவி

"பொய்வீடு கட்டிப் புலால் வீட்டைப் போஷித்து
மெய்வீட்டினை இழந்த மேடங்காள்! -- பொய்வீடு
போ என்னும், உங்கள் புலால் வீட்டை உண்பதற்கு
வா என்னும் நல்ல வனம்"

முடிவுரை

வயலில் விளைந்த நெற்பயிரினை அறுவடை செய்யும்போது, நெற்பயிரின் அடிப்பகுதியில் ஒருசாண் அளவிற்கு விட்டு அறுவடை செய்வர். பின் களத்து மேடுகளில் அறுத்த நெற்பயிரிலிருந்து நெல்மணிகள் தனியாக உதிர்ந்து விடுமாறு அடித்து பிரிப்பர். இதற்கு போரடித்தல் என்று பெயர். போரடித்து பிரிக்கப்படும் நெல்மணிகளுடன் தூசு, குறைந்த விளைச்சல் கொண்ட நெல்மணிகளான சாவி போன்றவையும் சேர்ந்து இருக்கும்.போரடித்து வரும் நெல்லை காற்று வீசும்போது அள்ளி தூற்றுவர். இவ்வாறு தூற்றும்போது நல்ல நெல்கள் நேராக கீழேயும், தூசு, பதர் என்று சொல்லப்படும் விளைச்சல் குறைந்த நெல்கள் காற்றின் பிடியில் சிக்கி சற்றுத் தள்ளியும் விழும். நல்ல நெல்லினை இம்முறையில் எளிதில் பிரித்து எடுக்கலாம். இதுவே இப்பழமொழிக்கான நேடியான பொருளாகும். 

ஆனால் இந்தப் பழமொழிக்கு மறைமுகப் பொருள் ஒன்றும் உள்ளது.காற்று என்ற ஒன்று இல்லாதிருந்தால் உயிர்கள் உயிர்வாழ இயலாது.எனவே காற்று என்பது உயிர்களுக்கு மிகவும் அவசியம். இந்தக் காற்று உடலில் உட்சென்று வெளிவந்து தன் பணியை செய்யும் வரையே உடலில் உயிர் நிலைத்து நிற்கும். மாறாக உடலில் காற்று செல்லாத நிலை ஏற்பட்டால் அவ்வுடலைவிட்டு உயிர் நீங்கி விடும். உடலில் காற்று உள்ள வரையே மட்டுமே ஒரு மனிதனுக்கு வாழ்வு உள்ளது. அதற்குள்ளாக தான் தூற்றிக் கொள்ள வேண்டும். மனிதன் தேவையில்லாத கெட்டவற்றை ஒதுக்கிவிட்டு, தேவையான நல்லவற்றை மட்டுமே கடைப்பிடித்து வாழ வேண்டும். இதை விளக்கவே நமது முன்னோர்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று கூறியுள்ளனர்.

இது தான் ஆதி சங்கரரின் ஆறாவது செயல்முறை. இதுவரை நாம் பெற்ற முறைகள் மூலம், உடல், செல்வம், காமம், வாழ்க்கை, உறவு, உயிர் இவைகளின் நிலையாமை பற்றி அறிந்தோம். அடுத்த செயல்முறையை அறியும்வரை….

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

Sankara’s Smithy – Strike 5 – The “love”ly blow

Relationship

Link to the Tamil Podcast

https://soundar53.substack.com/podcast

Introduction

Adi Sankara has so far explained to our closed mind, that body, wealth , lust, life are all impermanent. 

Our mind at times can be very rigid and closed. Even after taking four strikes at Sankara’s Smithy, it will not let go. It will come out with this response:

"Do you how much attached, are my kith and kin? I have plenty of them. If something happens to me, they will come and help me”

May be, it's true. But how often and for how long do siblings and relatives help? Can you answer?

Come on! The fifth strike awaits us in Sankara’s Smithy. After receiving it, the answer to this question will be automatically available.

Sanskrit Verse

यावद्वित्तोपार्जन सक्तः

स्तावन्निज परिवारो रक्तः |

पश्चाज्जीवति जर्जर देहे

वार्तां कोऽपि पृच्छति गेहे ||

Adi Sankara

English Transliteration

Yaavad vithOpaarjana saktha:

TaavannijaparivaarO raktha:

Paschaajjeevati jarjara dehe

Vaarta kOpi na prchati gEhE

Meaning of the Sanskrit Words

यावद्  yaavad So long as 

वित्त-उपार्जन-सक्तः vithah upaarjana saktha: - one is able to earn money (), [only] Vitta = wealth; Upaarjana = earning / acquiring; Shaktah = capability / vigor

तावत् taavat - until then

निज परिवारः nija parivara: - one’s relations

रक्तः raktha: - remain affectionate

पश्चात् paschaat - later i.e.,when one is unable to earn

जर्जर देहे जीवति jarjara dehe jeevati - one lives in a decript body Jiivati = living (when you are living without earning); Jarjara = feeble/ frail (by disease etcetera), Dehe = in the body;

कोपि न kOpi na - No one

गेहे gEhE - at home

वार्तां पृच्छति vaarthaam prchati - bothers to ask even a word

Meaning in English

As long as there is the capability to earn, so long the kith and kin are attached to you. Later on, when you come to live with an infirm body no one at home cares to speak even a word with you.

Explanation

Man is a social animal, they say. Man seeks security in relationships such as those of family, husband, wife, brothers, sisters or children, in the hope that they will always be with him. Those who sit all around you are called parivara. ParitaH means surround you. You are attached to your parivara, your family, your friends and retinue and feels that the love and attachment is mutual.  But, is this feeling of security/attachment/love eternal or permanent in life time? 

There is a common saying that “There ain't no such thing as a free lunch“. It is a popular adage. [The "free lunch" refers to the once-common tradition of Saloons/Bars in the USA providing a free lunch to patrons who had purchased at least one drink. Many foods on offer were high in salt (e.g., ham, cheese, and salted crackers), so those who ate them ended up buying a lot of beer. You get lunch free if hou have money to buy beer, as simple as that. If not, out you go & you are no more a patron].

We command respect in our corresponding circles of influence as long as we are of use to those around. When our “utility factor” wanes, so does the respect we command.

In our professional careers, we see/have seen several cases of Bosses/CEOs/MDs/Chairmen getting entry refused, the very next day of their exit/retirement at the very same organisations they have contributed and were controlling for years.

When the titles are taken away from us or the process of time diminishes our abilities, fewer people seem to find any value/utility in us anymore. But that is the nature of the world isn’t it?

You are so attached to your parivara, your family, your friends and retinue, but only so long as you are capable of earning and making money. Later on, when you become old and infirm, and are no more capable of earning any money or commanding any respect, what happens to you? Nobody will ask after your welfare, even in your own home. Today, you are receiving a lot of respect from people because you are capable of earning money. Here, money implies all potential.

If one becomes a liability in old age, physical burden and financial burden, with dependence on others, quality of love changes.
People send application to Lord to relieve the person from pain but actually they actually want freedom from that person who is of no more value. They don’t express it but that is the hidden agenda in the mind.

Aren’t we seeing a growing number of parents left at old age homes/elder care institutions, ashrams? Aren’t we seeing increase in domestic litigations for property?

The adage is equally applicable in the case of “parivaar” too. Any source of love from anyone is conditional love. Nobody loves anyone for that person. Everybody loves only for their own well being. If I expect unconditional love from world, it is my Moha – delusion. When I mistake conditional love as unconditional love, world gives me shock one day.

Sri Sankaracarya points out this very crude fact of life here.

Conclusion

It is an undeniable fact that we have eternal love for ourselves. No one dislikes oneself; that love manifests itself as a feeling of happiness/pleasure.

Similarly, the incomparable love, which we have for the incomparable object (vastu), i.e., that love towards the imperishable, eternal, omnipresent Lord, is also imperishable.

Just as the unprocessed love that I have within me does not perish and naturally manifests itself as happiness/pleasure (smile), so is the love of the Lord. When that love is expressed, the dual form it, is devotion and pleasure). If that love is not expressed and experienced within us, that devotion and pleasure that exists within us and we are aware about it, is Bliss. After all the Supreme Reality is nothing but pure existence, pure consciousness and pure Bliss. That is Govindham.

If we understand that happiness/love, we will not seek it outside. This is the essence of this Sloka.

Thus, Adi Sankara tries to clear our closed mind with five strong Hammer strokes by stating clearly that body, material, lust, life and relationship are all impermanent. It is up to us to live our lives.

A word of caution.

“Because of the transitory nature of wealth, fame and name, Shankara asks us to temper the value we place on these frills of life. This is not to say that we must shun wealth and fame. In fact we must enjoy it while it we have it. But we must derive our sense of value and self-worth from something deeper and more permanent. We must find our worth from pursuing our goal of self-development and self-purification. Because the only thing that remains with us is are our spiritual assets which are gained through introspection, reflection and contemplation on the higher values of life”.

Let us absorb this and contemplate our future course of actions. We will get ready for the next strike in the next blog. Until then……

God Bless

சங்கரனின் வைரக் கூடம் – 3 – காமம் நிலையாமை

தமிழ் வலைதல ஒலிப்பதிவுத் தொடர் இணைப்பு (Tamil Podcast Link)

https://soundar53.substack.com/p/3#details

முகவுரை

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்ற இரண்டு முக்கியமான தத்துவங்களை இரண்டு செயல்முறைகளாகப் பெற்ற நாம், இப்பொழுது சங்கரனின் வைரக் கூடத்தில், மூன்றாவது செயல்முறைக்குத் தயாராகுவோம்.

பொதுவாக, நாம் ஆசைப்படும் பொருட்களின் மீதுள்ள பற்று (முறையற்ற ஆசைகள் என்றும் கூறலாம்) விலக வேண்டும் என்றால், அந்த ஆசைப் பொருட்களில் உள்ள குறைபாடுகளைப் பார்ப்பது ஒரு சக்திவாய்ந்த யுக்தியாகும். இதனை வடமொழியில் விஷய தோஷ தர்சனம் என்பர். இந்த யுக்தியை ஆதி சங்கரர், இந்த மூன்றாவது செயல்முறையில் (ஸ்லோகத்தில்) கையாளுகிறார்.

கம்பனின் கவிதையும், வாலியின் கேள்வியும்

இந்த மூன்றாவது செயல்முறையைக் காணும் முன், கம்பன் காட்டும் கவிதைச் சித்திரத்தைக் காணலாம்:

வார் குலாம் முலை, வைத்த கண் வாங்கிடப்
பேர்கிலாது, பிறங்கு முகத்தினான்,
தேர்கிலான் நெறி; அந்தரில் சென்று, ஒரு
மூரி மா மத யானையை, முட்டினான்!

வார் குலாம் முலை – ஒரு அழகியின் கச்சை அணிந்த மார்பங்களின் மீது
பேர்கிலாது வைத்த கண் வாங்கிட – வைத்த கண்களை எடுக்க முடியாமல் அதையே பார்த்துக் கொண்டு நடந்த
பிறங்கு முகத்தினான் – விளங்குகின்ற முகத்தை ஒரு இளைஞன்
நெறி தேர்கிலான் – தான் செல்ல வேண்டிய வழி தெரியாமல்
அந்தரில் சென்று – குருடனைப் போலச் சென்று
ஒரு மூரி மா மதம் யானையை – வலிமை கொண்ட ஒரு மத யானை மேல் சென்று
முட்டினான் – மோதினான்.

அதாவது கச்சை அணிந்த பெரிய மார்பகங்களைக் கொண்ட அழகி அவள்!அவளை வைத்த கண் விடாமல் பார்க்கிறான் அந்த இளைஞன்.அவள் நடக்க, இவன் நடக்க, அவளையே பார்த்து நடந்து கொண்டிருந்த இளைஞன் தான் செல்ல வேண்டிய வழியை விட்டுக் குருடன் நடந்தது போல நடந்து ஒரு வலிமையுள்ள பெரிய மத யானையின் மீது போய் முட்டினான்.ஆவென்று அலறினான். மற்றவர்கள் சிரித்தார்கள் – நடந்தது என்ன என்று தெரிந்து கொண்டு.

இக்கவியை மனதில் கொண்டோ என்னவோ, கவிஞன் வாலி இப்படி கேட்டான்.

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போகும் பாதையை மறந்து போகலாமா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஆதி சங்கரர் உள்ளங்கை நெல்லிக் கனி போல, “உறைக்கும்” உண்மையை எடுத்துரைத்து, நமக்கு விடையளிக்கிறார்.

சங்கரனின் பதில் – சமஸ்க்ருத ஸ்லோகம்

नारीस्तनभरनाभीदेशं

दृष्ट्वा मा गा मोहावेशं |

एतन्मांसवसादिविकारं

मनसि विचिन्तय वारं वारं ||

தமிழ் ஒலிபெயர்ப்பு (Tamil Transliteration)

நாரீ ஸ்தனப4ர நாபீ4 தே3ச’ம்

த்3ருஷ்ட்வா மாகா3 மோஹாவேச’ம் |

ஏதன் மாம்ஸ வஸாதி3விகாரம்

மனஸி விசிந்தய வாரம் வாரம் ||

தமிழ் மொழிபெயர்ப்பு (Tamil Translation)

மகளிர் மார்பகம் மேகலை உறைவிடம்

மயங்கியே கண்டு மனதினில் மோகம்

மாமிசம் கொழுப்புடன் மாறிடும் தேகம்

மனதில் சிந்தனை வேண்டும் வேண்டும்.

ஸமஸ்க்ருத சொற்களின் பொருள்

नारीस्तनभरनाभीदेशं - नारी स्तनभर नाभीदेशं - நாரீ, ஸ்தனப4ர, நாபீ4 தே3ச’ம் - பெண், மார்பகம், மேகலை இடை வெளி

दृष्ट्वा मा गा मोहावेशं - दृष्ट्वा मा गा मोह आवेशं - த்3ருஷ்ட்வா மாகா3 மோஹ ஆவேச’ம் - பாரத்து/கண்டு, அடையாதே/கொள்ளாதே, மோகம்/மயக்கம், உணர்ச்சிவசப்படுதல்,

एतन्मांसवसादिविकारं एतन्मांसवसादि विकारं ஏதன் மாம்ஸவஸாதி3 விகாரம் - இவை மாமிசம், உவர்நீர் முதலான, மாற்றம்

मनसि विचिन्तय वारं वारं - மனஸி விசிந்தய வாரம் வாரம் - மனதில் சிந்திப்பாய் மீண்டும் மீண்டும்

விளக்கவுரை

ஆணினத்தவர்க்கு பெண்ணின் மார்பு (கொங்கை)யும், மேகலை அணியும் இடைப்பகுதியும் காம இச்சையை தூண்டிவிடும். இந்த இச்சை இயற்கை இயல்பு.

உண்மையில், அவ்விரு உடலுறுப்புகள் (அனைத்து உடலுறுப்புகளுமே) வெறும் மாமிசம் மட்டும் உவர்நீரின் (கொழுப்புகளின்) உருமாற்றமே; அவைகளனைத்தும் நிலையானவைகள் அல்ல என்பதால் வெளித்தோற்றத்தால் நிரந்தர இன்பம் அடைய முடியாது என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

இந்த ஸ்லோகத்தின் சாரம் காம மோஹம் தவிர்த்தல். அதாவது உடல்ரீதியான காம இச்சைகள களைவது.

பொதுவாகப் புறப்பகைகளை வெல்லுதல் ஆண்மை என சமூகத்தால் மதிக்கப்படுகிறது. ஆனால், அகப்பகையான காமம், வெகுளி போன்றவற்றை வெல்லுதல்தான் மிகவும் கடினமான ஒன்று. அதனால் முறையற்ற காமத்தை வெல்லுதல், மதிக்கத்தக்க பேராண்மை என்று பாராட்டப்படுகிறது.

ஆண்மையை விட பெரிய சொல் பேராண்மை. அத்தகைய பேராண்மை உடையவன், பிறர் மனைவியை நோக்காது இருப்பவன்.

தமிழ் இலக்கியத்தில் பேராண்மை

திருக்குறள்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு[திருக்குறள், அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை ]

என்ற குறள் இந்த கருத்தை ஒட்டியதே.

சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணியில்

“பெரியவாள் தடங்கண் செவ்வாய்ப் பிறர்மனை பிழைக்கும் மாந்தர் ….. ஆண்பிறந்தார்கள் அன்றே” இந்தக் கருத்தினைப் பிரதிபலிக்கிறது.

கம்ப ராமாயணம்

கம்பனும் இப்பேராண்மையைப் பற்றி கூறுகையில்,

இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி நாளும் நகையுற நாண் இலன்,
பச்சை மேனி புலர்ந்து பழிப்படூஉம்
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ. --- கம்பராமாயணம், பிணிவீட்டு படலம்.

ஆசையின் இயல்பினால் அயலார் மனைவியை விரும்பி (அதனால்) எந்நாளும் பிறர் தன்னை இகழ்ந்து சிரிக்க, வெட்கமற்றவனாய் பசுமையான உடம்பு உலரப் பெற்று பழிப்பை அடைகின்ற இழிவான இவ்வகை ஆண் தன்மையும், சிறந்த குணங்களில் ஒன்றாகச் சேருமா? (சேராது என்றபடி) என்றான்.

நாலாடியார்

நாலடியார், இந்த நற்குணமில்லாருக்கு ஏற்படும் விளைவினைச் சுட்டிக்காட்டி இதே கருத்தினை எடுத்துரைக்கிறார்

செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ –
உம்மைவலியாற் பிறர்மனைமேற் சென்றாரே,
இம்மைஅலியாகி ஆடிஉண் பார்.

நல்லகுணமின்றி, கீழினத்தாரோடு சேர்ந்து, பெரியமார்களை உடைய பெண்களின் தோளிலே முயங்க விரும்பி, ஒருவன் இப்பிறப்பில் தனக்கு உள்ள செல்வம், வலிமை முதலியவற்றால் மற்றவர் மனைவியரை கூடுவாராயின், மறுபிறப்பில் அவர்கள் ஆணும் பெண்ணுமில்லா அலியாகி கூத்தாடி வயிறு பிழைக்க நேரிடும்.

பட்டினத்தார் பாடல்

மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே

மறைகள்

ஒருவரின் மனைவியைத் தவிர மற்ற பெண்களைப் பொறுத்தவரை மற்றும் ஒருவரின் சொந்த மனைவியுடன் சரியான நடத்தையைப் பேணுவதில் இந்த கருத்து பொருந்தும். மேலும், சாஸ்திரங்களில் உள்ள மற்ற அறிவுரைகளும் பெண்களுக்கும் இணையாகப் பொருந்தும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

நமது மறைகள், உண்மையில் மற்றொருவரின் மனைவியை தாயாகவும், மற்றொருவரின் உடைமைகளை அழுக்காகவும், எல்லா உயிர்களையும் தன்னைப் போலவும் பார்க்கும் ஒருவரே தீர்க்தரிசி/ஞானி என்று கூறுகின்றன. (मातृवत् परदारान्स्च परद्रव्याणि लोष्टवत् आत्मवत् सर्वभूतानां यो पश्यति सो पश्यति Maatrvat paradaaranscha paradravyaani loshtavat, aatmavat sarvabhootaanaam yah pasyati sah pasyati).

முடிவுரை

இரண்டு உடலுறுப்புகளை எடுத்துக்காட்டி, இருளென உறையும் நம் அறியாமையை எளிதினில் அறிய வைப்பது, இந்த மூன்றாவது செயல்முறை.  உண்மை என்றுமே உறைக்கும் என்பதை உணர வைக்கும் சொற்கள். உள்வாங்கி உணர்வோம் உட்கருத்தினை. நம் உடல், மன, புத்தி வளாகத்தை உறுதிப்படுத்தி, அடுத்த செயல்முறைக்குத் தயாராகுவோம். அதுவரை……..

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

சங்கரனின் சம்மட்டி அடி 1 – யாக்கை நிலையாமை

வலை ஒலிப் பதிவு (Podcast) இணைப்பு

https://soundar53.substack.com/p/1#details

ஒளிப்பதிவு இணைப்பு

https://youtu.be/–oQVC7mJnc

முகவுரை

சங்கரனின் பட்டறைக்கு வருகை தந்து, முதல் சம்மட்டி அடி வாங்கிட ஒப்பிய உங்களனைவருக்கும் மிக்க நன்றி. 

இறை வணக்கம் போல் துவங்குகிறார் ஆதி சங்கரர் அவரது முதல் சம்மட்டி அடியை.

“கோவிந்தனைத் துதி; உனது மரண காலத்தில் உன்னை ஏட்டறிவு காத்திடாது”. இது தான் இந்த பண்ணின் (அடியின்) சாரம்.

விழும் முதல் அடியை பார்க்கும் பொழுது, மெதுவான அடி போலத்தான் தெரியும். பொதுவாக, விழுந்த பின்தான் தெரியும் அடியின் வலி. அதைப் போல, இந்த அடியின் வலிமையை உணர, பண்ணின் உட்கருத்தை ஆராய வேண்டும்.

வாருங்கள், விழும் அடியை ஆராயலாம். சங்கரனின் இந்த அடிக்குப் பெயர் யாக்கை நிலையாமை.

சமஸ்க்ருத ஸ்லோகம்

भज गोविन्दं भज गोविन्दं,

गोविन्दं भज मूढ़मते।


संप्राप्ते सन्निहिते काले,


न हि न हि रक्षति डुकृञ् करणे॥१॥

தமிழில் ஒலி பெயர்ப்பு

ப4ஜ கோ3விந்த3ம் ப4ஜ கோ3விந்த3ம்

கோ3விந்த3ம் ப4ஜ மூட4மதே |

ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

நஹி நஹி ரக்ஷதி ‘டு3க்ருஞ் கரணே’ ||

தமிழில் மொழிபெயர்ப்பு

துதி கோவிந்தனை துதி கோவிந்தனை

கோவிந்தனைத் துதி மூட மனமே

விதித்திட்ட வேளையில் காயம் அழியும்

காத்திடுமோ உனை வாழ்வியல் பாடம்.

விளக்கவுரை

பஜ

“பஜ“ என்ற சொல்லிற்கு நினை, பூசி, துதி என்ற பொருட்கள் உண்டு. பஜனம் என்பதற்கு சேவை என்ற பொருள்.

இந்தப் பண்ணில் ஆதி சங்கரர் இந்தச் சொல்லையும், கோவிந்தம் என்ற அடுத்த சொல்லையும் மூன்று முறை பயன்படுத்துகிறார்.

ஏன் மூன்று முறை? அதற்கு முக்கியத்துவம் உள்ளதா?

உள்ளது. ஏன் என்பதற்கான சுருக்கமான விளக்கம் இங்கே.

மூன்று வகையான தடைகளை நீக்குவது அல்லது மூன்று வகையான துன்பங்களை (துக்கங்களை) நீக்குவது என்பது வாழ்க்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று நமது மறை நூல்கள் நமக்குச் சொல்கின்றன.

மூன்று வகை துன்பங்கள் வெளிப்படையாக வரையறுக்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு வர்ணனையாளரும் பின்வரும் மூன்று வகையான துன்பங்களைக் குறிக்கின்றனர்:

1. ஆதிதைவிகா (தெய்வீக தோற்றம்) - கடவுளின், இயற்கையின் செயல் காரணமாக வரும் துன்பங்கள். இயற்கையின் சீற்றத்தால் விளையும் துக்கங்கள்.
2. ஆதிபௌதிகா (உடல், ஜட உயிரினங்களில் உருவானது) - வெளிப்புற தாக்கங்கள் காரணமாக வரும் துன்பங்கள்
3. அத்யாத்மிகா (நாமே உருவாக்கியது) - உடல் நோய்கள், மனப்பிரச்சனைகள் (ஆசை, கோபம், பயம், வெறுப்பு, பொறாமை, மோகம், சோகம், அவமானம், காழ்ப்பு…..) முலம் வரும் துன்பங்கள்

இம்மூவகை துக்கங்கள் (தாபத்ரையம்) நீங்கிட இறை வழிபாட்டில் மூன்று முறை முறையிடுதல் மரபு.
கோவிந்தம்

இந்த சொல் கோ, விந்தம் என்ற இரு சொற்களடங்கியது. முதலில் கோ என்ற சொல்லின் பொருளைக் காண்போம்.

1. “கோ” என்றால் - பசு, உயிரினம் (சைவ சித்தாந்தத்தில் பசு என்பது உயிரினங்கள்/மனிதர்களைக் குறிக்கும்), கால்நடை என்று பொருள்.

2. விந்தம் என்றால் - பேணுதல் (காத்தல்), அறிதல்

பசுக்களை/உயிரினங்களை அறிந்து பேணிக் காப்பவன் கோவிந்தன்.

காக்கும் கடவளாம் திருமாலுக்குப் பயன்படுத்தப்படும் அடைமொழிகளில் ஒன்று கோவிந்தா. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 187, 539 வது நாமங்களாக இந்த சொல் உபயோகிக்கப் படுகிறது. இவ்வார்த்தை இரண்டு விளக்கங்களை வழங்குகிறது.

1. முதலாவது வேதங்களின் மூலம் அறியப்பட்டவர். பிரம்மசூத்திரம், வேதங்கள் மூலம் மட்டுமே பிரம்மம் உணரப்படுகிறது என்று கூறுகிறது (गोपिः वेत्ति इति गोविन्दः gopi: vEthi iti gOvinda:).

2. இந்த வார்த்தையின் இரண்டாவது விளக்கம், உயிர்களை அறிந்தவர் (गाः विन्दति इति गोविन्दः கா: விந்ததி இதி கோவிந்த:). இல்லாததொன்றுமில்லை, எல்லாமே அவன் என்று நீக்கமற நிறைந்திருப்பதால், இடம், காலப் பரிமாணங்களைக் கடந்து, உயிரினங்களையும் அவற்றின் செயல்களையும் அறிந்திருப்பவர் கோவிந்தன்.

ஆக, ப்ரம்மம், பரம்பொருள் என்ற தூய இருப்பு, தூய உணர்வு, தூய இன்பம் தான், கோவிந்தன் என்ற சொல்லுக்குப் பொருள்.
மூட மதே

மனிதர்களாகிய நாம் மற்ற உயிரினங்களை விட மிக உயர்ந்த மனமும் புத்தியும் உடையவர்களாக இருக்கிறோம். வேண்டியது, வேண்டாதது, நல்லது, கெட்டது, என்று பகுத்தறியும் தன்மை நம்மிடம் மட்டுமே உண்டு. வெறும் உள்ளுணர்வால் (உயிரியல் மற்றும் உடலியல் தூண்டுதல்களால்) மட்டும் நாம் வாழ்வதில்லை; உயர்ந்த குறிக்கோள்களால் நிர்வகிக்கப்படுகிறது நம் வாழ்வு.

ஆயினும்கூட, அன்றாட வாழ்வில் இந்த மனம் நம்மை எங்கெலாம், எப்படியெல்லாம் “ஒன்றை விட்டு ஒன்று பற்றிப் பாசக் கடலக்குள் வீழ்த்திட” அழைத்துச் செல்கிறது. மனதைப் பற்றிய இந்தப் பாமரனின் விளக்கத்தை, கீழ்காணும் வலைப் பதிவில் காண்க. https://soundar53.substack.com/p/-6-


முந்தைய பதிவில் கூறியபடி, அன்றாட வாழ்வில் நடப்பு வேறு. அறிவில்லாத ஒன்றை அறிவு என்றும், தெளிவிலாத ஒன்றை தெளிவு என்றும், நிலையற்றவற்றை நிலையானவை என்றும், முழுமையற்றவற்றை முழுமையானவை என்றும் எண்ணும் நம் மனதை, ஆதி சங்கரர் “மூட மனமே” “அறிவிலியே” என்று அழைப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

நேரடி மொழி பெயர்ப்பு என்பது “குறித்த நேரம் வந்திடினில்” என்று பொருளாகும். யாருக்கு, யார் குறித்த, எந்த நேரம்? நமக்கு, காலன் குறித்த, மரண நேரம் என்பது நேரடி விடை. நாட்கள் கடக்க கடக்க, காலன் வரும் நேரமும் நெருங்குகிறது. அது சரி, மரணம் யாருக்கு?

“மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா! மரணத்தின் தன்மை சொல்வேன். மானிடர் ஆத்மா மரணம் எய்யாது. மறுபடிப் பிறந்திருக்கும். மேனியைக் கொல்வாய். நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி சென்றுதான் தீரும் ஓர் நாள்” என்று போர்க்களத்தில் அறிவுரை கூறினானே பாரத்தசாரதியான இறைவன் கண்ணன்.

ஆக உடலினுள் உயிர் ஒண்டுக் குடித்தனம். வாடகைதான் வாழ்வு.
நஹி நஹி ரக்ஷதி

“காப்பாற்றாது, காப்பாற்றாது” என்பது நேரடி மொழிபெயர்ப்பு. யாரை, எப்போது, எது காப்பாற்றாது?

விளக்கம் இதோ:

யாரைக் காப்பாற்றாது - “என்றும் அழியும் இக்காயம், மலம் ஊறித் ததும்பும் இவ்வுடலை மெய்யென்று கொண்டு பிழைத்திடும்” மூட மனமுடை அறிவிலிகளாகிய நம்மை

எப்போது காப்பாற்றாது - விதித்திட்ட வேளையில் - அதாவது “காலனின் பாசக் கயிறு நம்மைச் சுற்றி விழும்” நேரம். எமனின் ஓலை நமை அடையும் நேரம். உடலை விட்டு உயிர் பிரியும் நேரம்.

எது காப்பாற்றாது - இதற்கு விளக்கம் அடுத்த சொல்லில்
டுக்ருங் கரனே

டுக்ருங் என்பது சமஸ்கிருத இலக்கணத்தில் (வ்யாகரந) கர்ணே (கரனே) என்ற செயலைக் கொண்ட ஒரு வேர் சொல். இலக்கண விதிகளை மனனம் செய்வது என்று பொருள்.

வேதங்கள் மற்றும் வேதாந்தம் படிக்க சமஸ்கிருத இலக்கண அறிவு மிகவும் விரும்பத்தக்கது. பெரிய இலக்கண அறிஞர் பாணினி போன்ற பல அறிஞர்கள் வடித்த சூத்திரங்களை பாட, மனப்பாடம் செய்ய, அறிஞர்கள் இலக்கணத்தில் புலமை பெறுவதற்கான வழிகளில் ஒன்று, "டுக்ருங் கரனே".

இந்தப் பண்ணில் நாம் இதனை வெறும் ஏட்டுக்கல்வி என்று மட்டுமே எடுத்துக் கொள்ளாமல், இன்னும் சற்று விரிவான நோக்கத்தில் அறிந்து கொள்ள வேண்டும்.

அறிவு (வித்யா) இரு வகை: 1. இறையறிவு (மெய்ப்பொருள் அறிவு). இதனை பர வித்யா என்பர். 2. இறையறிவில்லா மற்ற அனைத்து அறிவு. இதனை அபர வித்யா என்பர். அதாவது அன்றாட வாழ்வில், நமக்கு வரையறுக்கப்பட்ட (விதிக்கப்பட்ட) உலகியல், இறையியல் வினைகள் (லௌகீக, வைதீக கர்மங்கள்). அபர வித்யா இன்றி, பர வித்யாவை அடைய முடியாது. பர வித்யா இல்லாமல் அபர வித்யா முமழுமை அடையாது.

ஆக இங்கு குறிப்பிடுவது, அபர வித்யா நம்மைக் காப்பாற்றாது என்ற பரந்த அர்த்தத்தில்.

தமிழ் இலக்கியத்தில் யாக்கை நிலையாமை

இச்சொற்களின் சாரத்தை பல தமிழ் ஞானிளும் சைவ சித்தாந்த அறிஞர்களும், கவிஞர்களும் எண்ணற்ற கவி வடிவிலே எழுதியுள்ளனர். யாக்கை நிலையாமை/நிலையாமை என்ற அத்தியாயங்கள் திருமந்திரத்திலும், திருக்குறளிலும் உள்ளன.

திருமந்திரம்

“மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிது உணர்ந்தவார் இல்லை
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே”.

(நன்கு நெய்து தயாரிக்கப் பட்ட பட்டாடையும் கிழிந்து போய்விடும். இந்த உண்மையைப்பற்றி உலகத்தவர் சிறிதும் சிந்திப்பதில்லை. அழகிய கருங் கூந்தல் வெண் கூந்தலாக மாறிவிடுவதும் கண்கூடு. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே ஒரு சிறு பொழுதே உள்ளது. இந்த உண்மைகளைச் சிந்தித்து நன்கு உணர்வீர் உலகத்தோரே).

மேலும்

“ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே”

என்று திருமூலர் உரைக்கிறார்.

திருக்குறள்

இதனையே திருவள்ளுவர்:

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு (குறள் 340)

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்பொரு உயிரிடை நட்பு (குறள் 338)

என்றும் கூறுகிறார்.

சிவ வாக்கியார்

“ மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணமென்று பேணவார்
நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் ” (சிவ.பா.80)

என்ற சிவவாக்கியர் பாடல் அழியும் உடல் பற்றி குறிப்பிடுகிறது.

நாட்டுப் பாடல்

''குச்சு வீடுங் கட்டலாம்
குறுங் கதவு சாத்தலாம்
வாழ வேண்டும் என்று சொன்னால்
வாய் மதங்கள் பேசலாம்
காலனுட ஓலை வந்தால்
கனத்தவீடும் தாங்குமோ
குச்சு வீடும் தாங்குமோ
குறுங்கதவும் தாங்குமோ''

என்ற பாடல் மூலம் அறியப்படும் தத்துவங்கள் பலப்பல. உடம்பு ஒரு குச்சு வீடு. அதில் ஆசைகள் கதவுகளாகும். எனவே வாழ நினைப்பவன் ஆசையை அடக்குதல் வேண்டும். உடம்பு ஒரு குச்சுவீடு, அக்குச்சு வீடு எவ்வளவு கனத்திருந்தாலும் அதாவது (புண்ணியம் செய்திருந்தாலும்) காலதேவன் வந்துவிட்டால் கணப் பொழுதும் நில்லாது மறைந்து விடும் என்ற நிலையாமைத் தத்துவத்தை இப்பாடல் நயம்பட கூறுகிறது.

திரை இசைப் பாடல்

பாத்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
செத்தா வெறகுக்காகுமா -
ஞானத்தங்கமே...
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?
கட்டழகு மேனியைப் பார்
பொட்டும் பூவுமா - நீட்டி
கட்டையிலே படுத்துவிட்டா
காசுக்காகுமா?'

முடிவுரை

மேற்கூறிய விளக்கங்கள் எதுவும், வேதங்களின் பூர்வபாகத்தில் (ஆரம்ப பகுதி) பொதிந்துள்ள பல்வேறு சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளை இழிவுபடுத்துவதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதில்லை. 

பெரும்பாலானவர்களுக்கு, அவை மனதையும் உடலையும் சுத்தப்படுத்துவதிலும், பெரிய பயணத்திற்கு ஒருவரைத் தயார் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.

ஸ்ரீ ஆதி சங்கரரைப் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், விரிவான தயாரிப்புகள் இல்லாமல் நேரடியாக அந்தப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராக பிறந்தவர்கள், அந்த வகையில் மிகவும் வித்தியாசமானவர்கள்.

உண்மையில், இறுதிக்கான வழிமுறைகளைத் தவறாகப் புரிந்துகொள்வதையும், சடங்குகளில் மட்டுமே திருப்தியடைவதையும், அவற்றின் உண்மையான நோக்கத்தையும் பொருளையும் புரிந்து கொள்ளாமல் அவற்றைச் செய்வதையும் தவிர்த்து பரம்பொருளை உணருவதை முயலவேண்டும் என்று கூறுகிறது இப்பண்.

ஏன் இறைவன் நாமத்தை சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். இறைவனே இதற்கு பகவத்கீதையில் 8வது அத்தியாயத்தில் பதில் அளிக்கிறார்:

अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥८- ५॥

அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் |
ய: ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸ²ய: || 8- 5||

ய: அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரந் = எவன் இறுதிக் காலத்தில் எனது நினைவுடன்
கலேவரம் முக்த்வா ப்ரயாதி = உடம்பைத் துறந்து கிளம்புகிறானோ (இறப்போன்)
ஸ: மத்³பா⁴வம் யாதி = எனதியல்பை எய்துவான்
நாஸ்தி அத்ர ஸம்ஸ²ய: = இதில் ஐயமில்லை.

இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை.

வாழ்நாட்களில் மனதுக்குக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டுபண்ணினால்தான் அம்மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலைபெறும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் அல்லவா. ஆகையால் நாம் அனைவரும் நம் வாழ்நாட்களில் மனதால் கடவுளைத் தியானம் செய்துகொண்டே தங்கள் கர்மங்களைச் செய்யது, கரமத்தின் பலனை அவனிடமே விட்டு விட வேண்டும்.


இது தான் இந்த முதல் சம்மட்டி அடி. என்ன ஒரு ஆழமான அடி! இந்த அடியை உள்வாங்கினால், உற்ற தேகத்தின் உயிரையும், உயிரை மேவிய உடலையும் ஊடுருவி, உலுக்கி எடுத்து, நம் உணர்வினை தட்டி எழுப்பும் என்பது உறுதி.
அடுத்த பதிவில் சங்கரனின் இரண்டாவது சம்மட்டி அடி.     அதைப் பெறும் வரை…….

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க

சங்கரனின் சம்மட்டி அடிகள் – முகவுரை

தமிழ் ஒலித் தொடர் பதிவு இணைப்பு (Link to the Tamil Podcast)

இன்றய காலக் கட்டத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை, இரு வகையாகப் பிரிக்கலாம். 1. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். 2. தமிழ் எழுத, படிக்க தெரியாது; ஆனால் பேச முடியும்; அடுத்தவர் பேசினால் புரிந்து கொள்ள முடியும்.இந்த இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவருக்காக, இந்தப் பதிவின் ஒலித் தொடர் பதிவை (podcast) கீழ்காணும் இணைப்பில் கேட்கலாம்.

https://soundar53.substack.com/podcast

ஏன் பிறந்தாய் மகனே ? ஏன் பிறந்தாயோ? ……….. நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே!

கவிஞர் கண்ணதாசன், திரைப்படம்-பாகப்பிரிவினை
63 வருடங்களுக்கு முன் வந்த பிரபலமான தமிழ் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் தொடக்க வரிகள். வருடங்கள் பல கடந்தாலும் இக்கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனதையும் வருட்டி எடுக்கும் (இடர்கள் நம்மை சூழும் போதாவது) என்றால் அது மிகையாகாது. இந்த திரை இசைப் பாடலில் அடங்கிய தத்துவத்தை இப்போது ஆய்ந்திடலாம்.

மனிதப் பிறவியின் நோக்கம்

மனிதப் பிறவியின் நோக்கம் என்ன? இவ்வினாவிற்கு இப்புவியிலே இன்றும் எண்ணற்ற ஆன்மீகவாதிகள், துறவிகள், முனிவர்கள், தனிநபர்கள், நன்னெறி தத்துவம் பற்றிய எழுத்தாளர்கள், மற்றும் பலர் விடையளிக்க முயன்று கொண்டு வருகின்றனர். இவர்கள் வேறுபட்ட பாதைகளில், மாறுபட்ட கருத்துக்களுடன் ஆராய்ந்த போதிலும் அனைவரும் ஒப்பும் ஒரு உண்மை:

“ஆறறிவு பெற்ற மானிடர் அனைவருமே துன்பம் தவிர்த்து நிலையான இன்பமடையவே அவர்தம் பணிகளின் குறிக்கோளாக வைத்து அவரவர் பணிகளைப் புரிகின்றனர்”

என்பது. இதில் ஐயமேதுமில்லை.

வட மொழியில் வாழ்வின் பொருள் என்பதை புருஷார்த்தம் என்பர். புருஷார்த்தம் என்பது தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் எனபவைகளுக் குறிக்கும். இதனையே அறம், பொருள், இன்பம், வீடு என தமிழில் கூறுவர்.

அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்பதுவே இவ்வழி முறையாகும். அதாவது, முதலில் தர்மத்தை அறம் என்று சொல்லி, அதைத் செய்வதற்காகவே எப்படிப் பொருள் ஈட்ட வேண்டுமோ அந்த நியாயமான முறையைச் சொல்லி, அதனால் இன்னின்ன இன்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று பக்குவம் வருகிற வரையில் கிரமப்படுத்திக் கொடுத்து, அப்புறம் இந்தச் சின்ன சின்ன இன்பங்களை எல்லாம் விடுத்து, இறுதியில் நிரந்தர இன்பமான வீடு என்கிற மோக்ஷத்தைக் காட்டுவதே வாழ்வியல் முறை எனும் நான்கு புருஷார்த்தங்கள்.

பாரதியாரின் எளிமையான வாக்கில் இந்நான்கும் இதோ:

தன்னைக் கட்டுதல் அறம்
பிறர் துயர் தீர்த்தல் பொருள்
பிறர் நலம் நாடுதல் இன்பம்
உலகு காக்கும் ஒருவனைப் போற்றுதல் வீடு.

மனிதப் பிறவியின் நடப்பு

அந்த ஆனந்தத்தை அடைய முயலும் நம் அனைவரின் வாழ்க்கையிலும் அன்றாடம் இடைவிடாது, முக்கியமான மூன்று பெரும் தத்துவங்கள் தொடர்பு கொள்கின்றன. அவை, மனிதன், உலகம் (படைப்பு), இறைவன். 

இவைகளை வாழ்வில் உபயோகித்து (அனுபவித்து) , வினைகள் புரிந்து, “பொருள்” தேடி, “இன்பம்” துய்த்து, களைத்து, முடிவில்

“நாம் வந்த கதை என்ன? நாம் கொண்டது என்ன, கொடுப்பது என்ன? மன்னைத் தோண்டி தண்ணீர் தேடும் நாம், நம்மைத் தோண்டி ஞானம் கண்டோமா? இல்லை, நம் மனமெங்கும் தெருக் கூத்து, பகல் வேஷமா?”

என்றெல்லாம் பிதற்றி, தன்னை அறிவதே தனது பிறவியின் நோக்கம், அதனை அறிய முயலாமல் வாழ்நாளை வீனாக்கினோமே என துன்பமுற்று, வருந்தி மடிகிறோமே. இது தானே நடப்பு.

தாயுமானவர் இந்த நடப்பைத்தான் இப்படி கூறுகிறார்:

“ஆசைக்கோரளவல்லை அகிலமெல்லாம் கட்டி
ஆளினும் கடல்மீதிலே ஆனை செலவே நினைவர்,

அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்

நெடுநாளிருந்த பேரும் நிலையாகவேயினுங்
காயகல்பந்தேடி புண்ணாவர் எல்லாம்

யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவதுமாகடியும் உள்ளதே போதும்

நான் நான் எனக்குளறியே ஒன்றைவிட்டு ஒன்றைப்பற்றி
பாசக்கடற்குள்ளே வீழ…”

இன்பம் பயக்கா இருள் – ஏன்?

சரி, நமது வாழ்க்கை அனுபவம், நம்மை, நமது வாழ்வின் பொருளை நோக்கிச் செலுத்தவில்லையே! ஏன்? 

இந்தக் கேள்விக்கு, இதோ! மூன்று பதில்கள் - கேள்விகள் வடிவில்:

1. அனுபவிக்கின்றவனை அனுபவிக்காமல், அனுபவிக்கப்படுவைகளை அனுபவிக்க முயலும் அறிவிலிகளாக அலைகிறோம் நாம்; அல்லவா! (ஆஹா! நம்ம மொபைல் ஃபோனில் இருந்து நம் சொந்த மொபைல் எண்ணயே அழைக்கிறேனே! எப்படி பதில் கிடைக்கும்? அது போல இருக்கே இந்தக் கேள்வி).

2. அறிவைத் தரும் கருவிகளின் துணை கொண்டு, அறியப்படும் பொருள்களை அறியும் நம்மை, எந்த அறிவைத் தரும் கருவிகளைக் கொண்டு அறிவது என்று என்றேனும் ஆராய்ந்தோமா?

3. “நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குதற் சோதி நான்”

என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி கூறிய “நான்” ஆக இல்லாமல், “இன்பமாகிய நாம், தம்மை இன்பெமென அறியாமல், துன்பத்தின் பின்னால், துன்பத்தில் இன்பம் இருக்கின்றதென்று ஏன் ஓடிக்கொண்டிருந்தோம்”.

கேள்விக்கு என்ன பதில்?

சரி. குழம்பி இருக்கும் நம்முடைய கேள்விகளுக்கு பதில் கூறாமல், கேள்விகளையே திருப்பி வைத்தால், நாம் என்ன செய்வது? எங்கு செல்வது? - நம் அனைவரின் சிந்தனை, அல்லவா! 

சுலபம். வாருங்கள், நம் அனைவரையும் ஒரு கொல்லன் பட்டறைக்கு கூட்டிச் செல்லலாம். அங்கே நமக்கு விடைகள் கிடைக்கும். ஆனால், ஒரு நிபந்தனை! அங்கே ஆசாரி நமக்கு 31 சம்மட்டி அடிகள் கொடுப்பார். அவைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஒன்று மட்டும் நிச்சயம்/உத்தரவாதம். அந்த முப்பதொன்று அடிகளை, கொல்லன் பட்டறையில் இரும்பு வாங்கும் அடிகளாக நாம் ஏற்றிட்டால், கனிந்து மாறிடும் இரும்பு போல,

இருள் நீங்கி இன்பம் பயக்கும்
மருள் நீங்கி மாசறு காட்சி

நமக்கு கிட்டி, நாம் மாறுவோம். அதில் சந்தேகமே இல்லை. சம்மதமா?

பயம் தவிர்த்து, அந்த உத்தரவாதத்துடன் வாருங்கள் ஆதி சங்கரனின் பட்டறைக்கு.
வருக! வருக! மாதம் ஒருமுறையாவது, சங்கரனின் பட்டறைக்குச் செல்வோம், சம்மட்டி அடிகள் வாங்குவோம். பின், நமது நிலையை உணர்வோம்.
சங்கரனின் சம்மட்டி அடி 1 - நவம்பர் 11ம் தேதியில் - கற்ற கல்வியும் சுற்றி விழும் காலன் கயிறும் - யாக்கை நிலையாமை - அடுத்த பதிவில். அதுவரை
இறையருள் பெருக. வளமுடன் வாழ்க

முக்கிய குறிப்பு: இப்பதிவும், வரும் தொடர் பதிவுகள் அனைத்தும், பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காரானந்தாவின் விரிவுரைகளால் ஈர்க்கப்பட்டு, சுவாமிஜியின் சொந்த விரிவுரைகளில் இருந்து அடியேன் அறிந்து கொண்டது. இப்பதிவுகளில் காணும் கல்லாப் பிழை, கருதாப் பிழை, எல்லாப் பிழைகளுக்கும் அடியேனின்அறியாமையே காரணம். அவைகளை சுட்டிக்காட்டின், அடியேனின் அறியாமையைக் களைய உதவும். நன்றி.