பகவத் கீதை ஸ்லோகம் 2.22- மரணம் – பழையன கழிதலும் புதியன புகுதலும்

முகவுரை


ந‌ன்னூ‌ல் எ‌ன்ற இல‌க்கண நூ‌லி‌ன் சொ‌ல் அ‌திகார‌த்‌தி‌ல் உ‌ள்ள “பழையன க‌ழிதலு‌ம் பு‌தியன புகுத‌லு‌ம் வழுவல கால வகை‌யி னானே” எ‌ன்ற தொட‌ர், வழ‌க்‌கிழ‌ந்த இல‌க்கண‌க் கரு‌த்து‌க்களை ‌நீ‌க்குவது‌ம், புதிய வழ‌க்குகளை ஏ‌ற்பது‌ம் தவ‌றி‌ல்லை எ‌ன்‌பதைக் குறிப்பது. அதாவது,
இல‌க்கண‌ம் கால‌‌ந்தோறு‌ம் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌த்‌தி‌ற்கு உ‌ட்ப‌ட்டது எனக் கூறு‌கிறது.  

வீட்டில் உள்ள பயனற்ற பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதுவே இதன் அடிப்படைத் தத்துவம்.

சரி, பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலில் வரும் ஒரு தத்துவத்திற்கும், போகிப் பண்டிகைக்கும், பகவத்கீதைக்கும் என்ன சம்பந்தம்? அதாவது, பழையனவற்றைக் கழித்தலுக்கும், புதியனவற்னை புகுத்தலுக்கும், பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு? போர்க்களத்தில் பார்த்தனுக்கு, சாரதியான கண்ணன் இதைப்பற்றி என்ன அறிவுரை வழங்கினான்?

வாருங்கள், ஒரு முக்கியமான ஸ்லோகத்தை அறிய முற்படுவோம்.

ஸமஸ்க்ருத ஸ்லோகம்

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா2 விஹாய
நவாநி க்3ருஹ்ணாதி நரோபராணி!

ததா2 ஸரீராணி விஹாய ஜீர்ணா
ந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே3ஹீ!!

பகவத் கீதை 2.22

பொருள் விளக்கம்

தொப்புள் கொடி உறவாக தொடங்கிய நாம், முதலில் நம்மை நமது உடலுடன் பிண்ணி இணைக்கிறோம். இது இயல்பு. பின் வளர்ச்சியின் அங்கமாக அது படிப்படியாக உறுதியாகி, உடலே உயிர் எனும் உணர்வினை அடைகிறோம். அதனை வளர்க்க, மெருகுபடுத்த, காக்க, விதவிதமான பொருள், செயல்முறை என்று பலவற்றை உபயோகப்படுத்துகிறோம்.

காலன் விதித்திட்ட வேளை வந்தால் செத்து மடிகிறோம். நாம் இவ்வுலகில் வந்திறங்கியது எதற்காக, வந்து புரிந்தது என்ன என்று அறியாமல்கூட செல்கிறோம். இருக்கும் போது, நாம் இருக்கும் காயம் ஒரு பொய்; இந்த யாக்கை நிலையாதது என்று நொடிப்பொழுதும் உள்நோக்கி ஆய்ந்ததில்லை. இதுதான் யதார்த்தம். மரணம் என்பது ஒரு கசப்பான உண்மை என்பதை உணர மறுக்கிறோம். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ளத்தான் பகவான் கண்ணன் பார்த்தனுக்கு இந்த ஸ்லோகம் வழியாக அறிவுரை வழங்குகிறான்.

“எப்படி ஒரு மனிதன் நைந்து போன ஆடைகளை கழட்டிவிட்டு வேறு புதியவற்றை அணிந்து கொள்கிறானோ, அப்படியே தேஹத்தில் உறைபவன், நைந்து போன உடல்களை விட்டுவிட்டு வேறு புதியவற்றை அடைகிறான்”

என்று பகவான் ஶ்ரீக்ருஷ்ணர் மரணத்தைப் பற்றி கூறுகிறார்.

தாய், குழந்தைக்குப் பழைய அழுக்கான உடுப்பைக் கழட்டிவிட்டு புதியதை அணிவிக்கிறாள். அப்போது குழந்தை அழுகிறது. ஆனால் தாயார் குழந்தை அழுவதைப் பொருட்படுத்துவதில்லை. குழந்தைக்கு “ஹிதம்” (நன்மை) என்று, புதியதை மாற்றிக் கொடுக்கிறாள்.

அது போல, பகவானும் ஜீவனுக்கு ஹிதமாக அவன் அழுவதை கவனியாமல் அவன் உடலை மாற்றிக் கொடுக்கிறார். உடலுக்கு உடை ஆடை; உயிருக்கு உடல் ஆடை.

இதைப் புரிந்தவர் அழுவதில்லை; புரியாதவர் அழுகின்றனர். அதனால்தான் “செத்த பிணத்தைப் பார்த்து சாகாத பிணம் அழுகிறது” என்பர் ஞானியர்.

சொற்களின் உபயோகமும், அவைகளில் பதிந்துள்ள உட்கருத்துக்களும்ஒரு கண்ணோட்டம்

1. “ஜீர்ணாநி” என்பதற்கு நைந்து போனது என்ற பொருளாகும். இந்த சொல் துணிகளுக்குப் பொருந்தும். நைந்த உடலென்று பகவான் ஒப்பிடுவது, வயதாகித் தேய்ந்த (நலிந்த) உடலுக்குத்தான் மரணமெனும் உடை மாற்றத்தைக் குறிப்பதல்ல. சிறு வயதிலும் மரணமெய்தலாம். உடல் நலிவு என்பது, “ஆயுள் முடிந்தது” என்ற பொருளில் கூறப்படுவது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

2. உடையை மாற்றிக் கொள்பவன் ஒரே சமயத்தில் பல உடைகளை (உள்ளாடை, வேஷ்டி, சட்டை, அங்கவஸ்த்திரம் என) மாற்றிக் கொள்ளமுடியும். உயிரைப் (ஜீவாத்மாவைப்) பொருத்தவரை, ஒரே உடலைத்தானே மாற்ற இயலும் என்று இருக்கையிலே, “வாஸாம்ஸி”, “ஸரீராணி”, என்று பன்மையில் பகவான் கூறுவதன் உட்கருத்து என்ன என்பதை இருவகையில் ஆயவேண்டும்:

• ஜீவன் இதுவரை எவ்வளவு உடல்களை விட்டுப் புதிய உடல்களை அடைந்திருக்கிறதோ, அவற்றுக்குக் கணக்கு கிடையாது. வரும் காலத்திலும், ப்ரம்ம ஞானமெனும் ஆத்ம ஞானம் கிட்டும்வரை, இன்னும் எத்தனைப் பழைய உடல்களைவிட்டுப் புதிய உடல்களை அடையப் போகிறது என்பதும் தெரியாது. எனவே சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

• ஸ்தூலம், ஸூக்‌ஷ்மம், காரணம் என்று மூன்று உடல்கள் ஜீவனுக்கு உள்ளன. இந்த உடலுவிட்டு அடுத்த உடலை அடையும்போது, இந்த மூன்றும் மாறுகின்றன. ஸத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஒவ்வொருவருக்கும் குணமயமான, அவனுக்கே உரித்தான, தனித்தன்மையுடைய “வ்யஷ்டிப்ரக்ருதி” அமைகிறதே, அது காரண ஸரீரம். இதையே “ஸ்வபாவம்” என்பர். மனிதன் எப்படிச்செயல்படுகிறானோ, அதற்கு ஏற்றவாறு ஸ்வபாவம் மாறுகிறது. இந்த ஸ்வபாவத்திற்கு ஏற்றவாறுதான் உயிர் பிரியும்போது மனதில் எண்ணமும் உண்டாகிறது. அதன்படிதான் அவனுக்கு ஸூக்‌ஷ்ம ஸரீரம் அமைகிறது. காரணம், ஸூக்‌ஷ்மம் என்ற இரு ஸரீரங்களுடன் இந்த உடலை (ஸ்தூல ஸரீரத்தை) விட்டுப்பிரிந்த பின்னர், ஸூக்‌ஷ்மத்திற்கேற்றவாறு அடுத்த பிறவியில் ஸ்தூல ஸரீரத்தைப் பெற்று, காரண ஸரீரத்திற்கேற்றவாறு அடைந்த அந்த அடுத்த உடலில் அவனது ஸ்வபாவம் அமைகிறது. இப்படி மூவுடலும் மாறுவதால், சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

3. ஆத்மாவிற்கு அசைவில்லை, போக்குவரத்து இல்ல. எனவே ஜீவாத்மா எனும் “தேஹி” அடுத்த உடலைப் போய் சேர்கிறான் என்று சொல்வது எப்படி பொருந்தும் என்பதை இப்போது ஆய்வோம்.

உண்மையில் ஆத்மாவிற்கு அசைவில்லை, செயலில்லை, எந்த நிலையிலும் போக்குவரத்தும் இல்லை. ஆனால், ஒரு குடத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போகும்போது, அதற்குள் இருக்கும் ஆகாயம் போகவில்லையானாலும், குடத்துடன் சம்பந்தத்தால் அது போவதாக நினைக்கிறோம் அல்லவா!

அதுபோல, ஸூக்‌ஷ்ம ஸரீரம் போகும்போது, அத்துடன் இணைந்த ஆத்மாவும் போவதாகத் தெரிகிறது. இதை உலகத்தார்புரிந்து கொள்ளவே, உயிர் வந்து போவதாக கற்பனை செய்து கூறப்பட்டது. “தேஹீ” என்றால் சரீரத்தை உடையவன் என்று பொருள். தேஹத்தை உற்ற உயிர் என்பர். ஆகவே உடலின் சம்பந்தத்தால் அவனிடம் போக்குவரத்து என்ற தோற்றம் ஏற்படுகிறது.

இதனால்தான இந்த ஸ்லோகத்தில் துணியைப் பற்றிக் குறிப்பிடும்போது “க்ருஹ்ணாதி” (ஏற்பது) என்றும், உயிரைப் பற்றிக் கூறும்போது “ஸம்யாதி” (செல்லுதல்) என்ற சொல்லும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

3. “நர”, “தேஹி” என்ற சொற்களின் விளக்கம்

ஆடையை அணிவது, நைந்தது, துறப்பது என்பவைகள் எல்லாம் மனிதனுக்கே உரித்தானது. எனவே இந்த ஸ்லோகத்தில் முதல் சொற்றொடரில், மனிதனைக் குறிக்கும் “நர” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. உடல்களின் போக்குவரத்து என்பது, உடலபிமானமுடைய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். எனவே இரண்டாவது சொற்றொடரில் “தேஹி” என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்லோகத்தின் உட்கருத்து

ஆத்மா உடல் எடுப்பதில்லை, ஸூக்‌ஷும ஸரீரம் மட்டுமே உடல் எடுக்கிறது. ஸூக்‌ஷ்ம ஸரீரமே (mind) பயணிக்கிறது. தூய உணர்வாகிய நான் எங்கும் பயணிப்பதில்லை. நான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.

இறைவனும் ஆத்மாவும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவை. எனவே இறைவனும் ஆத்மாவும் ஒன்றே. இறைவனது உபாதியும், ஆத்மாவின் உபாதியும் வேறு. இறைவன் காரண உபாதியை உடையவர், ஆத்மா காரிய உபாதியை உடையது. காரணமும் காரியமும் மாயத்தோற்றங்களே. இருப்பது பரம்பொருள் ஒன்றே.

ஆத்மா எதையும் அனுபவிக்க வேண்டியதில்லை. அனுபவங்கள் அனைத்தும் மாயை. அனுபவிப்பவனைப் பற்றிய உண்மையே நமக்கு முக்தியை கொடுக்கும். எந்த அனுபவமும் மோக்‌ஷத்தை கொடுக்காது.

அனைத்து உயிர்களில் இருக்கும் ஆத்மா நானே என்கிறான் கண்ணன்.

இதுதான் இந்த ஸ்லோகத்தின் சாரம்.

இதனைத்தான் கவிஞர் கண்ணதாசன், காலத்தால் அழியாத அருமையான திரையிசைப் பாடலாக வடித்துள்ளார்.

பாடலைக் கேளுங்கள்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

Narayaneeyam Dasakam 5 – Cosmic Evolution – Part 4 – Destruction – The Pralaya

Word of Caution:

This write up below is definitely not an exhaustive description of what our scriptures talk about Pralaya. It is my very limited understanding of the vast literature available in public domain. The objective is to get a broad idea of the principles involved so that when we take up the study of our scriptures and Sanskrit Slokas, we will have a better comprehension of what they say.

Reader is strongly advised to strictly learn these under the guidance of a Guru, if one wants a deep dive in this subject.

Introduction

The concept of Pralaya or dissolution is intimately related with the concept of creation. Our scriptures say that the chain of creation and dissolution continues without break. After each creation, there is dissolution and after dissolution there is again new creation.Following the dissolution, there is a period of rest or interval, known as Pralaya. It's a period of non-existence where the universe remains dormant before the next cycle begins.

Each creation i.e., anything that has an “existence” goes through the dissolution process. The dissolution process is the reverse of the creation process. This means that all the creations at the gross level dissolves into the subtle level and the subtle into causal levels.

Therefore, in addition to the “kaala” or time and its breakdown which we saw in the earlier part, we should also understand what is getting dissolved, where is it getting dissolved and how often do they get dissolved. In other words, we should understand

1. The different forms of existence
2. the realms of existence
3. The cycles of dissolution

Forms of existence

In this universe, (universe included) there are sentient and insentient things that exist. 

Leaving the near infinite number of insentient and inert materials and their different forms aside, the Padma Purana discusses the number of different types of life-forms in the universe. According to the Padma Purana, there are 8,400,000 life-form species, 900,000 of which are aquatic ones; 2,000,000 are trees and plants; 1,100,000 are small living insects species; 1,000,000 are birds; 3,000,000 are beasts and reptiles; and 400,000 are mammal species.

Creation (srishti) and destruction (pralaya) is about all these forms of existence.

Realms of existence

Apart from the infinite time element, as one of the common causes for cosmic evolution, infinite space is to be understood in proper perspective. This is known as “loka” in our scriptures. The most common cosmological conception of lokas in the Veda was that of the trailokya or triple world: three worlds consisting of earth, atmosphere or sky, and heaven, making up the universe.

Hindu mythology defines fourteen worlds (not to be confused with planets) – seven higher worlds (heavens) and seven lower ones (underworlds). (The earth is considered the lowest of the seven higher worlds.) The higher worlds are the seven Vyahrtis (Heavens or Upper worlds) and seven Patalas (Hells or lower worlds).

The 14 Lokas are: (1) Satya (2) Tapa (2) Jana (4) Mahar (5) Svar (6) Bhuvar (7) Bhu (8) Atala (9) Vitala (10) Sutala (11) Talatala (12) Mahatala (13) Rasatala (14) Patala.

Time Cycles and kinds of Pralaya

Visnu Purana describes, four kinds of pralaya viz.,

Naimittika (occasional),
Prakrtika (elemental),
Atyantika (absolute) and
Nitya (perpetual)
All these are directly related to the life of Brahma, the God assigned the responsibility of creation.

(Readers may refer https://en.wikipedia.org/wiki/Hindu_units_of_time for a better understanding of the concept of time, life and life span as per Hinduism)

Naimittika Pralaya:

This Pralaya is also termed as the Brahma Pralaya. This Pralaya at the end of a kalpa or at the end of a day of Brahmas life - 4.32 Billion human calendar years);. After a kalpa, Naimittika pralaya occurs. It is also indicated in the Visnu Purana that this dissolution occurs only in the three lokas, i.e., Bhu, Bhuva and Sva.The Visnu Purana also gives a very fearful description of this dissolution.
Prakrtika Pralaya:

This Pralaya occurs when the whole Brahmanda dissolves in Prakrti. This pralaya occurs at the end of the life span of Brahma (100 years as per his calendar) , viz., at the end of Maha Kalpa - 311.04 Trillion years in human calendar (comprising of two paraardhaas of 155.52 Trillion years each).

At that time all the things of the world return to their causes. This dissolution takes place in the opposite order of their creation. Thus, the seven forms of Prakrti from Mahat to earth enter successively into their causes. The Egg of Brahma is dissolved in the waters that surround it with its seven lokas, seven oceans, seven islands and the mountains. Water is drunk up by fire; that of air absorbs the stratum of fire. Air is merged in ether and Bhutadi or Ahamkara devours the ether. Mahat again takes up Ahamkara. Then Prakrti absorbs Mahat and all these. Prakrti and Purusa also are dissolved into the Supreme Spirit. This is Prakrta Pralaya.
Atyantika Pralaya :

Absolute or final dissolution is attained by the knowledge of the Supreme. It is said that all beings are afflicted by three kinds of worldly pains, viz., adhyatmika, adhibhautika and adhidaivika. The Visnu Purana also describes these three types of pains. Adhyatmika is of two types - bodily and mental. That kind of evil, which is inflicted upon men by beasts, birds etc. are called Adhyatmika. Adhidaivika pain is the work of cold, heat, wind, rain, lightning and other atmospherical phenomena. These three types of afflictions are described in the Samkhya system also in the similar vein.

Only true knowledge about one self (atma vidya, brahma jnanam) can rescue men from these three kinds of affliction. When a man attains true, knowledge & detachment from human afflictions, he obtains final dissolution. In this pralaya, the yogis are merged in the Supreme Spirit.
Nitya Pralaya:

It is said that Nitya or perpetual dissolution is the constant disappearance of all living beings. Experts interpret this as the death of the living beings, which occurs constantly - “Nitya is the extinction of life, like the extinction of a lamp, in sleep at night”. Some Vedantists describe Nitya Pralaya as Susupti or deep sleep.

Conclusion

We have through a five part study tried to have an overview of the cosmic evolution as per the modern and Indian perspectives. This study was essential to appreciate Narayaneeyam Dasakam 5.
From the next blog we will start our study the Slokas of Dasakam 5.

God Bless

நாராயணீயம் தசகம் 5 – அண்டப் பரிணாமம் – ஆன்மீக கண்ணோட்டம் – பகுதி 4 – பிரளயம்

முக்கிய அறிவிப்பு

இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.

நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.

இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை அறிந்தது

பகுதி 1ல், "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் பரம்பொருள் தத்துவம் நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக தன்னை வெளிப்படுத்துகிறது என்று கூறியதை அறிந்தோம்.

பகுதி 2ல், படைப்பு என்பது பரம்பொருளின் இச்சையால் வெளிப்படுகிறது என்றும், அப்பரம்பொருளே படைப்பின் அறிவுக்காரணம் என்றும் அறிந்தோம். மேலும் பரம்பொருளைப் போல ஆதியும் அந்தமும் இல்லாமல் எனினும் பரம்பொருளைச் சார்ந்த சக்தியான மூலப்ரக்ருதி, அவ்யக்தா, மாயா, குணஸம்யா என்றெல்லாம் வடமொழியில் கூறப்படும் மாயையே படைப்பின் பொருட்காரணம் என்றும், அழியா இடம், அழியா காலம் இரண்டும் பொதுக்காரணமென்றும் கண்டோம். அந்த காலத்தின் கணக்கினை நான்முக கடவுளின் ஆயளுடன் இணத்ததையும் அறிந்தோம்.

மூன்றாவது பகுதியில் ஐவகை செறிவு எனும் பஞ்சீகரண செயல்முறை வழியாக அண்டப் பரிணாமத்தின் விவரங்களைக் கண்டோம்.

முடிவாக, இந்தப்பகுதியில் பிரளயம் எனும் கலப்பு தத்துவத்தை காண்போம்.

முகவுரை

“ஒன்றோடொன்றாகவே பற்றிலயமாம் போதினில்” என்று தாயுமானவர் கூற்றின்படி, லயம் என்ற சொல்லுக்கு, ஒன்றுடன் ஒன்றாக கலத்தல் என்ற பொருள் மிகவும் பொருத்தமானது. பலர் இச்சொல்லிற்கு அழிவு என்று பொருள் கொள்கின்றனர். அது ஒரு குறுகிய கண்ணோட்டம். முதற்பதிவல் கண்ட அடிப்படை கொள்கையை நினைவு கூறுக. உருவாக்குதல், அழித்தல் என்று ஒன்றுமில்லை; பரிணாமம் என்று வேறாக, மாறாக, மறைவிலிருந்து வெளிப்படுவதே உண்மை. 

பிரளயம் என்பது, பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கலப்பு என்ற பொருளை குறிக்கும் என்று கூறுகிறது என் சிற்றறிவு. .

நமது ஸனாதன தர்மத்தில், அண்டப் பரிணாமம், என்பது ஒரு சக்கர சுழல். தோன்றியது மறையும; மறைவது தோன்றும். இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும் காலச்சக்கர சுழற்சியின்படி. எதற்கெல்லாம் "இருப்பு" உள்ளதோ அதற்கெல்லாம் “கலப்பு” எனும் “லயம்” உண்டு. எவையெல்லாம் “லயப்படுகின்றனவோ”, அவைகளெல்லாம் “இருப்பாக” வெளிவரும். இதுதான் அண்டத்தின் நியமனம்.

எனவே, இந்த லயம் எவைகளுக்கு, எங்கு, எப்போது என்பதை நாம் அறிய வேண்டும். அதாவது லயத்தின் பொருள், இடம், காலம் இவற்றை நாம் அறிய வேண்டும். அவைகளின் ஒரு கண்ணோட்டம் இதோ.

பிரளயம்எவைகளுக்கு?

இந்த பிரபஞ்சத்தில், (பிரபஞ்சம் உட்பட) “இருப்பு” உள்ளவைகளை உணர்வுள்ள இருப்பு (sentient), உணர்வற்ற பொருட்கள் (insentient) என்று பிரிக்கலாம். முடிவிலியை எட்டும் எண்ணற்ற உணர்ச்சியற்ற மற்றும் செயலற்ற பொருட்களையும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், 8,400,000 உயிரினங்களும், அவற்றில் 900,000 நீர்வாழ் உயிரினங்களாகவும்; 2,000,000 மரங்களும் செடிகளெனவும் ; 1,100,000 சிறிய உயிருள்ள பூச்சி இனங்களாகவும்; 1,000,000 பறவைகள் எனவும்; 3,000,000 மிருகங்கள் மற்றும் ஊர்வன எனவும், பாலூட்டி இனங்கள் 400,000 எனவும் நமது பத்ம புராணம் பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு வகையான வாழ்க்கை வடிவங்களின் எண்ணிக்கையைப் பற்றி விவாதிக்கிறது. பல்லுயிர் பெருக்கம் என்பது அண்டங்களில் உள்ள உயிரின வகைகளின் தொகுப்பாகும்.

ஆக , பிரளயம் என்பது இந்த இருவகை இருப்புகளனைத்தையும் உள்ளடக்கியது என்பதை நாம் உணர வேண்டும்.

பிரளயம்எங்கே நிகழ்கிறது?

அண்ட பரிணாம வளர்ச்சிக்கான பொது காரணங்களில் ஒன்றான, எல்லையற்ற வெளியை சரியான கண்ணோட்டத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது நமது வேதங்களில் "லோகம்" என்று அழைக்கப்படுகிறது.

முடி மன்னர் ஆகில் மூவுலகம் அது ஆள்வார்
அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின்

திருமந்திரம் 1601
தேவர்கள் வாழும் விண்ணுலகம், மனிதர்கள் வாழும் மண்ணுலகம், அசுரர்கள் வாழும் பாதாளவுலகம், ஆகிய மூன்று உலகங்களைக் குறிக்கும். இதுவே மிகவும் பொதுவான அண்டவியல் கருத்து.

எனினும், இந்து புராணங்கள் பதினான்கு உலகங்களை வரையறுக்கின்றன (இதனை கிரகங்களென குழப்பமடையக் கூடாது). ஈரேழு உலகம், 14 லோகங்கள் என நாம் கேட்டிருப்போம். அந்த உலகங்கள் நாம் வாழக்கூடிய பூமிக்கு மேலே ஆறு உலகங்கள் உள்ளன. நம் பூவுலகிற்கு கீழே ஏழு உலங்கள் இருக்கின்றன என குறிப்பிடப்படுகிறது.
பூமிக்கு மேலே உள்ள உலகங்கள்

7. சத்ய லோகம் - பிரம்ம தேவன் இருக்கிறார்
6. தபோ லோகம் - தேவதைகள் இருக்கின்றனர்
5. ஜனோ லோகம் - பித்ருக்கள் (முதாதையர்)
4. மஹர் லோகம் - இந்திரன் உள்ளிட்ட தேவர்கள்
3. சுவர் லோகம் - முனிவர்கள்
2. புவர் லோகம் - கிரகங்கள், நட்சத்திரத்திற்குரிய தேவதைகள்
பூ லோகம் - நாம் வாழும் மண் உலகம்
பூமிக்கு கீழே பாதாளம் எனும் 7 உலகங்கள்

1. அதல லோகம்
2. விதல லோகம் – அரக்கர்கள்
3. சுதல லோகம் – அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், தான, தர்மங்களால் உயர்ந்தவரை உலகளந்த வாமனனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி
4. தலாதல லோகம் – மாயாவிகள்
5. மகாதல லோகம் – நல்ல செயல்கள் பல செய்து புகழ்பெற்ற அசுரர்கள்
6. ரஸாதல லோகம் – அசுர குருக்கள்.
7. பாதாள லோகம் – வாசுகி உள்ளிட்ட பாம்புகள்
ஆக மொத்தம் நாம் வாழும் உலகம் உள்பட 14 லோகங்களிலும் பிரளயம் நடைபெறும்.

பிரளயம்எப்போது நிகழ்கிறது?

அண்டப்பரிணாம வளர்ச்சியின் எதிர்மறை இந்தப் பிரளயம். எது எது எப்படி வெளிவந்தனவோ, அது அது அப்படி ஒன்றறக் கலக்கும் பரம்பொருளுடன். அதாவது பருநிலை இருப்புகள் நுண்நிலையுடன், நுண்நிலை இருப்புகள் காரண நிலையுடன் லயிக்கும்.இவை அனைத்தும் படைக்கும் தொழிலுக்கு தலைவனான நான்முக கடவுளாம் பிரம்மனின் வாழ்வுக் காலத்துடன் நேரடித் தொடர்பினில் நடக்கும் என்று நமது மறைகள் கூறுகின்றன. (பதிவின் முடிவில் உள்ள படத்தை காணவும்)

விஷ்ணு புராணம் நான்கு வகையான பிரளயத்தை விவரிக்கிறது, 1. நைமித்திகா, 2. பிரகிருதிகா, 3. அத்யாந்திகா மற்றும் 4. நித்யா. முதல் இரு வகைகள் அண்டத்தின் கண்ணோட்டத்தில், அடுத்த இருவகைகள் உயிரினத்தின் கண்ணோட்டத்தில்.

1.நைமித்திக பிரளயம்:

இந்த பிரளயத்தை பிரம்ம பிரளயம் என்றும் அழைப்பர். இந்த பிரளயம் ஒரு கல்பத்தின் முடிவில் அல்லது பிரம்மாவின் வாழ்க்கையின் ஒரு நாளின் முடிவில் - 4.32 பில்லியன் மனித காலண்டர் ஆண்டுகள் முடிவில்; பூ, புவ, ஸ்வா ஆகிய மூன்று லோகங்களில் மட்டுமே இந்த கலைப்பு நிகழ்கிறது என்று விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2.பிரகிருதிகா பிரளயம்:

இயற்கையெனும், பிரக்ருதியில் முழு பிரம்மாண்டமும் கலந்திடும் போது இந்த பிரளயம் ஏற்படுகிறது. பிரம்மாவின் ஆயுட்காலத்தின் முடிவில் (அவரது நாட்காட்டியின்படி 100 ஆண்டுகள்), அதாவது மகா கல்பத்தின் முடிவில் - மனித நாட்காட்டியில் 311.04 டிரில்லியன் ஆண்டுகள் (ஒவ்வொன்றும் 155.52 டிரில்லியன் ஆண்டுகள் கொண்ட இரண்டு பரார்தாக்களை உள்ளடக்கியது) இந்த பிரளயா நிகழ்கிறது. அந்த நேரத்தில் உலகின் அனைத்து பொருட்களும் அதன் காரணங்களுக்குத் திரும்புகின்றன. இந்த கலைப்பு உருவாக்கத்தின் எதிர் வரிசையில் நடைபெறுகிறது. இவ்வாறு, மஹத் முதல் பூமி வரையிலான ஏழு பிரக்ருதி வடிவங்கள் அவற்றின் காரணங்களில் அடுத்தடுத்து நுழைகின்றன. பிரம்மாவின் முட்டை அதன் ஏழு லோகங்கள், ஏழு பெருங்கடல்கள், ஏழு தீவுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட நீரில் கரைகிறது. நெருப்பினால் தண்ணீர் குடிக்கப்படுகிறது; காற்றானது நெருப்பின் அடுக்கை உறிஞ்சுகிறது. காற்று ஈதரில் இணைக்கப்பட்டு பூதாதி அல்லது அஹம்காரம் ஈதரை விழுங்குகிறது. மஹத் மீண்டும் அஹம்காரத்தை எடுத்துக்கொள்கிறார். பிறகு பிரக்ருதி மஹத்தையும் இவை அனைத்தையும் உள்வாங்குகிறது. பிரக்ருதியும் புருஷனும் பரம ஆத்மாவில் கரைந்து விடுகிறார்கள். இது பிரக்ருத பிரளயம்.

3.அத்யாந்திகா பிரளயா:

முழுமையான அல்லது இறுதியான கலைப்பு பரம்பொருளின் அறிவால் (ஆத்ம ஞானம், மெய்யறிவு) அடையப்படுகிறது. எல்லா உயிர்களும் அத்யாத்மிகா, அதிபௌதிகா, ஆதிதைவிகா ஆகிய மூன்று விதமான உலகத் துன்பங்களால் பீடிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. விஷ்ணு புராணம் இந்த மூன்று வகையான வலிகளையும் விவரிக்கிறது. அத்யாத்மிகா என்பது உடல் மற்றும் மனதினால் எஊற்படும் வலி; மிருகங்கள், பறவைகள் போன்றவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் தீமையே அத்யாத்மிகா எனப்படும். ஆதிதைவிக வலி என்பது குளிர், வெப்பம், காற்று, மழை, மின்னல் மற்றும் பிற வளிமண்டல நிகழ்வுகளின் வேலை. மெய்ப்பொருள் அறிவு (ஆத்ம வித்யா, பிரம்ம ஞானம்) மட்டுமே இந்த மூன்று வகையான துன்பங்களிலிருந்து மனிதனை மீட்கும். ஒரு மனிதன் உண்மையான, அறிவு மற்றும் மனித இன்னல்களில் இருந்து பற்றின்மை அடையும் போது, அவன் பரம்பொருளுடன் ஒன்றற கலக்கிறான். இந்த பிரளயத்தில், யோகிகள் பரமாத்மாவில் இணைந்துள்ளனர்.

4.நித்ய பிரளயா:

நித்யா அல்லது நிரந்தர லயம் என்பது அனைத்து உயிரினங்களின் மறைவு என்று கூறப்படுகிறது. தொடர்ந்து நிகழும் இக்கலப்பிற்கு ஜீவராசிகளின் மரணம் என வல்லுநர்கள் இதை விளக்குகிறார்கள். சில வேதாந்திகள் நித்ய பிரளயத்தை சுசுப்தி அல்லது ஆழ்ந்த உறக்கம் என்று விவரிக்கின்றனர்.

முடிவுரை

ஐந்து பகுதி ஆய்வின் மூலம் அறிவியல் மற்றும் நமது ஆன்மீக கண்ணோட்டங்களின்படி அண்டப் பரிணாமத்தை அறிய முயன்றோம். 

நாராயணீயம், தசகம் 5 அண்டத்தின் படைப்பை விவரிக்கின்றது. நாராயண பட்டத்ரீயின் ஸ்லோகங்களை அறிந்து கொள்ள இந்த அடிப்படை அறிவு இன்றியமையாதது.

அடுத்த பதிவுகளிலிருந்துது நாராயணீயம் தசகம் ஐந்தினை ஆராயலாம்

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

Narayaneeyam Dasakam 5 – Cosmic evolution – The Indian Perspective Part 3 – Creation – The magic show

Word of Caution

This write up below is definitely not an exhaustive description of what our scriptures talk about Creation. It is my very limited understanding of the vast literature available in public domain.

The objective is to get a broad idea of the principles involved so that when we take up the study of our scriptures and Sanskrit Slokas, we will have a better comprehension of what they say.

Reader is strongly advised to strictly learn these under the guidance of a Guru if one wants a deep dive in this subject.

What is learnt so far

In Part 1, we learnt that our forefathers, the rishis and sages, through deep meditations, focused inward on the "causeless cause" that is responsible for creating this Universe and identified that as "Brahman", the only pure, omnipresent, indestructible eternal blissful ultimate reality with "existence & consciousness". (science calls these as matter and energy in a materialistic sense). We also learnt that Brahman determines itself and reveals itself to our conceptual cognition as the fundamental aspects in which we see and experience through the real and fundamental truths of its being  which are beyond the universe and yet in it and are the very foundation of its existence, like the waves of the sea, the heat of the fire, the fragrance of the flower, the smell of the earth etc.

In Part 2, we learnt that, to understand the Cosmic evolution (a cyclic process of manifestation, sustenance and destruction), we need to clearly understand and accept that the following:

1. Brahman is the intelligent cause for the cosmic evolution

2. Moolaprakrti (called by various names such as Avyakta, Maya, Gunasamya) which like Brahman is without a beginning and end yet completely dependent on Brahman, is the material cause

3. Eternal space and time are the common causes.

4. The cyclic process of evolution is synchronised with the life span of the God Brahma assigned with the responsibility of the process of creation.

Now in this third part we will see an overview of the processes of cosmic evolution.

Cosmic Evolution – Initial State – An apex level Perspective

At the beginning (in a cyclic process this could be the end too) is the Deep Sleep State. (Remember the Scientific Perspective of this state- all that was there was a single point with infinite density and infinite heat. This is that state we are talking about)

1. In this state, the omnipresent and eternal Brahman as pure existence is the only and ultimate reality.

2. The relation between Brahman and Mula Prakṛti is universal pervasion (vyāpti), as He, in very truth, is without beginning and without end.

3. Maya is Abhinna Shakti of Brahman. Abhinna means inseparable. Maya cannot be separated from Brahman. Just as heat is inseparable from fire, so also Maya is inseparable from Brahman.

4. The omnipresence of both Brahman and Maya means that in this state, there are no such thing as Time and Space.

5. The three modes of nature called “gunas” viz., Saatvic, Rajas and Tamas are in perfect equilibrium.

6. There is no such thing as creation, preservation and destruction.

This is the state of Bliss.

Cosmic Evolution – The five pronged iterations – Panchikarana

From this state of bliss, due to the creative will of the Supreme Being, cosmic evolution again begins. In the Big Bang theory, this is stated as “suddenly something happened”. Our saints, seers and sages compare this to the glance from the Brahman’s eyes.

According to Hindu cosmology as described in texts like the Vishnu Purana, Brahma creates the universe through a process involving various stages. Here's a simplified overview of how Brahma is said to create the universe:

1. **Sankalpa (Divine Will):** Before creation, there is a divine intention or will within the Supreme Being to bring forth the universe. This intention is known as "Sankalpa."

2. **Creation of Cosmic Egg:** From the divine intention, a cosmic egg or golden womb known as "Hiranyagarbha" is formed. This egg contains the potential for the entire universe.

3. **Division of Egg:** Brahma emerges from the cosmic egg and divides it into different parts. These divisions form the various planes of existence, including the physical world, the heavens, and the subtle realms.

4. **Creation of Elements:** Brahma then creates the fundamental elements (earth, water, fire, air, and ether) and assembles them to form the physical universe.

5. **Creation of Living Beings:** With the elements in place, Brahma proceeds to create different life forms, from the simplest organisms to more complex beings.

6. **Creation of Celestial Beings:** Brahma also creates celestial beings, including gods, demigods, and other divine entities, who play specific roles in maintaining the cosmic order.

7. **Creation of Time and Natural Laws:** Brahma establishes the laws of nature, the cycles of time (days, nights, seasons, yugas), and the cosmic order that governs the universe.

8. **Creation of Scriptures:** Finally, Brahma imparts knowledge and wisdom to sages and seers, who then record sacred scriptures to guide living beings on their spiritual paths.

It's important to note that these descriptions are symbolic and metaphorical, meant to convey profound spiritual concepts rather than literal scientific explanations. The creation process in Hindu cosmology emphasizes the divine nature of creation and the interconnectedness of all existence.

Our Scriptures say that due to this creative will, Nature called Maya gets activated and the equilibrium among the three gunas that are contained in the Maya gets disturbed. With the disturbed three gunas and aided by the common cause viz., eternal time, Nature then brings out concepts called Tattvas. These Tattvas vary from 24 to 36 as per the philosophies followed by the various sects of Sanatan Dharma (like Advaita, Dvaita, Kashmir Saivaites, Saiva Siddhanta of Southern India etc). While the number of Tattvas may vary, the process of bringing out these Tattvas are essentially the same and is called “Panchikarana”, the five pronged iterations. Thus, from the triadic manifestation if the gunas, gradual cosmic evolution proceeds. Here is an overview.

1. The first out of this process of creation is Mahat.When sattva is dominant, the Mahat (the Great One) is the first reality to arise from Prakriti. It has a global element as the world’s wellspring, as well as a corporeal aspect as living creatures’ intelligence or buddhi. It is in charge of reasoning and discerning awareness. Mahat is the germinating place of all creations. This manifestation is the supreme sum total of matter. The mahat-tattva is directly connected with the supreme consciousness of the Supreme Being, but still it appears as matter. The mahat-tattva is called the total (vyashti) consciousness because a portion of it is represented in everyone as the intellect (samashti).
Mahat, the Cosmic Intelligence may be said to be Hiranyagarbha, the all-knowing creative principle, omnipresent, omniscient, omnipotent consciousness. From the state where the cause and effect are not clearly manifested (avyakta), the Mahat Tattva comes out first, just as the sprout shoots out from the seed in the ground.

2. When Mahat, the all-knowing creative principle, omnipresent, omniscient, omnipotent consciousness becomes conscious of itself in other words if the Rajas Guna is the predominant guna in Mahat,– I-am, omnipresent – it becomes cosmic Ahamkara at the total (Samashti) level . This Ahamkara here is to be understood as Cosmic Self-awareness – the whole universe becoming conscious. This is ascribed to the predominance of Saatvic qualities of Mahat. When Tamas-dominates the Mahat, it generates a specific sense of Aham at the individual level (vyashti), which regards itself different from others. A sense of I am; "I" sense; I, My, Mine. I as different from you, them, it. This is generated in the Jiva the individual soul. Aham is of two kinds, viz., Samashti Aham or collective egoism and Vyashti Aham or individual egoism. The collective egoism is Ishvara and the individual egoism is the Jiva or the human being. The Jiva develops egoism first and begins to feel 'Aham Jiva - I am Jiva,' and then only he begins to cognise the world and the Ishvara. But for the Vyashti Aham, there cannot be any Samashti Aham or Ishvara and the world.

3. From this (māyā), ākāśa (space) was created, from ākāśa, vāyu (air) was created. From vāyu, teja (fire) was created. From teja, āpaḥ (water). From āpaḥ, pruthvi (earth) was created. Since all five elements, space, air, fire, water and earth are created from triguṇātimīkā māyā i.e. māyā containing 3 guṇa-s (satva, rajasa and tamasa), all five elements contain these three guṇas.

4. Next is the creation of indriyas. ‘Indriya’ means ‘organ’.We have five sense organs - ears, eyes, skin, tongue and nose known as Jñānendriyas. We have five karmendriyas which help us to act. They are speech (mouth), hands, legs, anus and reproductive organs. Each indriya has it’s controlling deity or devatā.

5. This creation process is called Panchikarana’. The process involves each of the five elements splitting into two halves and one half of each further spilling into four parts. Thus we have space splitting into two and one of the halves further splitting into four parts. Like that each of the elements undergoes divisions. The four of one-eighth parts are now distributed to other elements. Thus air, fire, water and earth each of them get one eighth of Aakasha. Similarly the other elements get distributed giving again one full for each of the units. Thus Akasha retains half of its own and one -eighth of other Elements. This process is called Panchikaranam or grossification of the five of the Elements in their subtle or fundamental nature. In other words, division of each of the Elements by two equal parts and futher into four equal sub parts with each of the other four elements and so on and such ‘quintiplication process’ is known as ‘Panchikarana’ or a systematic admixture of all the Pancha Bhutas into a warp-weft process of each formation of weaving a cloth!

6. As an example, from satva guṇa part of ākāśa tatva (space element), shrotreindriya (shrotra-indriya) meaning organ of hearing (ears) are created. ‘shrotra’ means sound. To hear sound, ears are created. Here sound is an subject (viṣaya) of sense organ (indriya) ears. The quality of ākāśa is śabda or sound. Space is the medium of transorpting sound. In order to hear sound, from the purest part i.e. sattva guṇa, ears were created.The controlling devatā of shrotra is dik or diśā or directions.

Here is a flow chart which gives an overview which takes into account the Indriya – sense organ, the Viśaya – Subject i.e. what the organ senses and the Adhiṣṭhātā deva or Devatā – controlling deity.
In the concluding part, we will see the end game of Brahman called “Pralaya” as part of the Cosmic Evolution.

God Bless

நாராயணீயம் தசகம் 5 – அண்டப் பரிணாமம் – ஆன்மீக கண்ணோட்டம் – பகுதி 1 – மந்திரவாதியும் மந்திரக் காட்சியும்.

ஶ்ரீ குருவாயூரப்பன்
முக்கிய அறிவிப்பு

இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.

நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.

இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களின் சாரத்தை ஒரே பதிவில் எழுதுவது, வேதாந்தத்தில் ஆரம்ப நிலை மாணவனாக உள்ள எனக்கு இயலாத காரணம். ஆகையினால் இதனை பல சிறு பகுதிகளாகப் பிரித்து பதிவுகளை வெளியிடுகிறேன் உங்கள் அனுமதியுடன். இதோ முதல் பகுதி.

மந்திரவாதி

அறிவியல் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக, முந்தைய வலைப்பதிவில், உருவாக்கப்பட வேண்டிய அவசியமின்றி படைப்பை உருவாக்கும் "மந்திரவாதி" யார் என்பதை புரிந்துகொள்ள முயன்றோம். அந்த முயற்சியில் முக்கிய கேள்விக்கு விடை ஒன்றும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பேரியக்கமெனும் “பிக் பேங்கிற்கு” (Big Bang) முன்பான "காரணமற்ற காரணத்தை" அறிவியல் இன்றும் அறியவும் இல்லை, அதற்கேற்ற விளக்கமும் தரவில்லை.

ஆகையினாலே, பொறி புலன்களால் அறியும் காரணமில்லாமல் எந்தக் காரியமில்லை (விளைவு) என்ற கோட்பாடு ஒன்றில் மட்டுமேலேயான திடமான நம்பிக்கை, பொருள் சார்ந்த பொறி புலன் துணைகொண்ட புற நோக்கு என்று இரண்டு முக்கிய வரையறுகளுக்குள் உட்பட்ட அமைப்புகளுக்கு வெளியே நாம் பார்க்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொண்டோம்; ஏனெனில் அந்த காரண - விளைவு அமைப்புகளுக்குள், "காரணமற்ற காரணம்" என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. மேலும், நிறை -ஆற்றல் (matter & energy), அதன் விளைவுகள் இவைகளைக் கடந்து இருப்பு-உணர்வு (existence & consciousness) என்ற இரண்டையும் கொண்ட "ஏதாவது" ஒன்றை நாம் அறிய வேண்டும் என்றும்முந்தைய பதிவில் கண்டோம். ஆக, அறிவியலுக்கு அப்பால் நாம் பார்க்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

நமது முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் அவர்கள் இருந்த காலகட்டத்திற்கேற்ப, பொறி புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆழ்ந்த தியானங்களின் மூலம், விரிவாக இயற்கையின் இயல்பினை அறிந்து, நாம் புரியும் வினைகளையும் வினைப்பலன்களையும் தரவுகளாக கொண்டு, அந்த "காரணமற்ற காரணத்தில்" கவனம் செலுத்தி உள்நோக்கி சிந்தித்து, அதற்கேற்றபடி வாழ்ந்து, வழிமுறைகளையும், அனுபவங்களையும் தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தனர்.

அந்த "காரணமற்ற காரணத்தை" அவர்கள் "பிரம்மன், பரமன்", "ஆன்மா", “பரம்பொருள்” என்று அழைத்தனர். அந்த "பிரம்மன்" என்பது "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் தத்துவம் என்று கூறினர்.

அந்த தத்துவத்தை பொருள் சாரந்த பொறி புலன்களால் விவரிக்க இயலாது. எனவே, நமது மறைகள் அந்த தத்துவத்தை, இது இல்லை, இது இல்லை, இவைகள் அல்ல என்றெல்லாம் விவரிக்கின்றன.

“கண்ணுக்குத் தெரியாதது, சிந்திக்க முடியாதது, பரம்பரை இல்லாதது, எந்த வகைப்பாடும் இல்லாதது (வர்ணம்), கண்கள் மற்றும் காதுகள் இல்லாதது, கைகள் மற்றும் கால்கள் இல்லாதது, மற்றும் நித்தியமானது, எங்கும் நிறைந்தது, மிகவும் நுட்பமானது மற்றும் அழியாதது” என்கிறது முண்டக உபநிஷதம்

முதலும் முடிவும் இல்லா நீக்கமற நிறைந்த அந்த நித்ய உண்மையே அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. எனவே, அந்த இறுதி உண்மை எனும் பிரம்மன்/பரம் பொருளை - “தத் ஏகம்” - வகைப்படுத்த முடியாது.

அது குணங்கள் இல்லாதது, எதிர்மறையானவை கூட. நம்மைக் கடந்தும் நமக்கு உள்ளும் உறைவது. எந்தவொரு விளக்கத்தையும் அதற்குப் பயன்படுத்துவது, வரம்பற்றதைக் கட்டுப்படுத்துவதாகும். “விலையில்லா சொல்லாத சொல்” அது.

அந்தப் பரம்பொருளே மந்திரவாதி.

மந்திரக் காட்சி

பரம்பொருளான பிரம்மம் என்பது தூய பேரின்ப நிலையில், எல்லாவற்றிலும் தன்னை அறியும் தூய இருப்பாய், தூய உணர்வாய் உறைந்திருப்பது. ஆயினும்கூட, படைப்பிற்கு முந்தையதாகக் கருதப்படும் அத்தகைய நிலையை விவரிக்க முயன்ற பிறகு, வேதங்கள் இவை அனைத்தும் ஒரு யூகமே என்று தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறது; ஏனென்றால் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை உறுதியாகக் கூற முடியாது. 

அப்படிப்பட்ட முடிவிலா முழுமையை, மனித அறிவு கொண்டு தீர்மானிக்க முடியாது என்றாலும், அந்த உன்னத பரம்பொருள் மனிதர்களின் உள்ளுணர்விலே தன்னைத்தானே தீர்மானிக்கின்றது; அதாவது தன்னைத் தானே வெளிப்படுத்துகிறது. இதுதான் புரியா புதிராக இருக்கும் மந்திரக் காட்சி.

எப்படி தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது பரம்பொருள் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா.

நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக முன்வைத்து தன்னை வெளிப்படித்திக்கொள்கிறது அந்த பரப்ரம்மம்.

அதாவது கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளில் “நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளும் இருந்து கொண்டு, கோழிக்குள் முட்டையை வைத்து, முட்டைக்குள் கோழியை வைத்து, சிறு விதையில் பெரு தருவினை வைத்து, இல்லாதது ஒன்றில்லை எல்லாமே நான் என்று சொல்லாமல் சொல்லி வைத்து” நமக்கு அந்த தத்துவத்தைப் புரிய வைக்கிறது.

ஆன்மீகத்தில் நாம் கண்டு அனுபவிக்கும் நிலையைப் பொறுத்து நமக்கு நிர்குணப் பரப்ரம்மனெனும் பரம்பொருளாகவோ, சகுணப்ரம்மனெனும் ஈசனாகவோ, உற்ற தேகத்து உயிரான சீவனாகவோ, உயிரை மேவிய உடலாகவோ வெளிப்படுகிறது.

முடிவுரை

இப்படி காட்சிகள் பல கொடுக்கும் அத்தத்துவம்தான் இவ்வுலகை ஆளும் மந்திரவாதி. அதனைத்தான் நாம் கடவுள் என்கிறோம்.  அதனைத்தான் நாராயண பட்டத்ரி ஶ்ரீ குருவாயூரப்பன் வடிவிலே காண்கிறார்.

எனவே நாராயணீயத்தில் ஶ்ரீ குருவாயுரப்பன் என்று நாராயண பட்டத்ரி உரைக்கும் பொழுது, அது ஆதி அந்தமிலா பேரின்ப நிலையில் நீக்கமற நிறைந்திருக்கும் தூய உணர்வினைக் குறிக்கும் என்பதை மனதில் நாம் நிலைத்திட வேண்டும்.

இந்த தத்துவத்தைத்தான் ஆதிசங்கரர், ஶ்ரீதட்சிணாமூர்த்தி வடிவில் கண்டு கீழ்காணும் ஸ்லோகத்தில் எடுத்துரைத்தார்
தட்சிணாமூரத்தி ஸ்தோத்திரம் – 2
இனி அந்த மந்திரவாதி புரியும் மாயாஜாலக் காட்சிகளை நாம் அடுத்த பதிவுகளில் காணலாம்
இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

Guru Purnima 2023 – குரு பூர்ணிமா 2023

ஒரு குருவாக வந்து மாணவனை ஆட்கொள்பவர் ஒப்பற்ற ஈசனே ஆவார். அவர் தன் மாணவனின் வினைகள் அழியும் வண்ணம் நாள்தோறும் உபதேசிக்கிறார். அவர் நீர்மலிந்த நீள் சடையை உடைய சிவனே அன்றி வேறு எவரும் அல்ல. சிவனே மனம் இரங்கியும் கீழே இறங்கியும் வந்து மாணவனின் வருத்துகின்ற வல்வினைகளை அழித்து விடுகின்றார்.

எனது மாதா, பிதா – இவர்களே எனை ஆட்கொண்ட குருவும் தெய்வமும்.

“ஆட்கொண்ட வர்தனி நாயகன் அன்புற
மேற்கொண்ட வர்வினை போயற நாடொறும்
நிற்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறலை வீவித் துளானே”.

திருமூலர்

ஆட்கொண்ட அந்த நாயகனை வணங்கி, அடியேனின் சமர்ப்பணம்.

Dakshinamurthy Dhyana Slokas

“ Dakshinamurthy is regarded as an aspect of Shiva, as the universal teacher. He is the young and radiant Adi-Guru, Para-Guru, the Supreme Guru, imparting knowledge that liberates. He is the very personification of spiritual wisdom and eminence; and one who is immersed in Self. His teaching is through the subtlest form of speech- para vak – beyond the range of the physical ear, abiding in silence; the sort of silence that envelops within itself all other forms of expressions. It is the silence that underlines the limitations of rational knowledge, futilities of the blind alleys of metaphysical queries and the frailty hollowness of words. His teaching transcends speech and thought; it is experience. His listeners are learned and wise; ripe in intuitional understanding. The Guru’s language of silence dispels the doubts, the confusion and uncertainties in the minds of those around sitting in silence.

The banyan tree (vata vruksha) under which the Guru sits symbolizes creation as also the expanding universe , which regenerates itself. The tree known as Akshya vruksha with its unique growth pattern also represents the eternal principle, the Dharma. (Vata derived from vat means: to expand, to surround and to encompass). It is meant to suggest that Sri Dakshinamurthy who sits under the vata tree presides over the cyclic processes of srishti (creation), sthiti (preservation), samhara (absorption or gathering up), tirobhava (suppression) and anugraha (revealing true knowledge)”.

My humble attempt to understand the Dhayana Slokas on Lord Dakshinamurthy as presented by Sureshvaracharya in Manasolasa Vartikam is presented in Tamil.

சங்கரனின் வைரக்கூடம் 12 – காலத்தின் கோலம்

நன்றி – ஞானத் தேடல் – திரு. பிரபு (YouTube)

முகவுரை

எனது கோவை நண்பர் திரு. பிரபு அவர்கள், ஒரு அற்புதமான ஒளிப்பதிவில், காலத்தை பற்றி நமது முன்னோர்களின் ஆய்வுகளை விளக்கியுள்ளார். நமது முன்னோர்கள, கண்ணிமைக்கும் நேரத்திலிருந்து ஓராண்டு காலம் வரை பதினான்கு கூறுகளாகவும்,  ஒரு நாளைச் ‘சிறு பொழுது’ என்று ஆறு கூறாகவும், ஓராண்டைப் ‘பெரும்பொழுது’ எனப் பெயரிட்டு ஆறு வகையாகவும் பகுத்தனர். (மேலே உள்ள அட்டவனையைப் பார்க்கவும்). 

வைகறை, விடியல், நன்பகல், மாலை, எற்பாடு, யாமம் என்று ஒரு நாளைப் பகுத்துரைத்தனர். கார் காலம், கூதிர்(குளிர்) காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் என்று ஆண்டினை ஆறு வகைக் காலமாகப் பகுத்துரைத்தனர். இக்காலத்தை அடிப்படையாக வைத்து நமது முன்னோர்கள் பழமொழிகள் பலவற்றைக் கூறி அதன்வழி நமது பண்பாட்டை விளக்கியுள்ளனர்.

1. காலமும் அலையும் காத்திருக்காது.
2. காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது.
3. காலம் போற்று.

அதனால் காலம் அறிந்து செயல்பட்டு நாம் வாழ்ந்தால் வாழ்வில் உயரலாம். காலத்தை வீணாக்காது வாழ்தல் வேண்டும். காலத்தைத் தொலைத்து விட்டால் அதனைத் திரும்பப் பெற முடியாது. வாய்ப்பு என்பது எல்லோருக்கும் வரும் அதனை வீணடிக்காது பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வாழ்வியல் நன்னெறியை இப்பழமொழிகள் நமக்கு வழங்குகின்றன

இதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இருப்பினும் நாம் ஒவ்வொரு நாளும் என்ன செய்கிறோம்? இதோ! 2009-2016 வருடங்களில், உலகமெங்கிலும் உள்ள 15-64 வயது மனிதர்களின் வேலை அட்டைகளின் ஆதாரத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணிப்பின் புள்ளி விவரம்
OurWorldinData
வேலை நேரம் (அலுவல், வீட்டு வேலைகள்), உறங்கும் நேரம், உண்ணும் நேரம், ஓய்வு (தொலைக்காட்சி, நண்பர்களுடன், மற்றும் இதர நேரம்) என்று, நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் 1440 நிமிடங்களில் 80-90% இந்த நான்கு வகை நேரங்களில் செலவிடுகிறோம். நமக்கென்று (நம்மை நாமே அறிந்து கொள்ள, பரம்பொருளை அறிந்திட) நேரமே இல்லை நமக்கு. என்ன ஒரு பரிதாபமான நிலை!

முழு நாள் எப்படி கழிகிறது என்பது கூட நமக்குத் தெரிவதில்லை.. வார இறுதி, மாத இறுதி, ஆண்டு இறுதி மற்றும் விடுமுறை நாட்களுக்காக நாம் காத்திருக்கிறோம். நம்மை அறியாமலே காலம் கடந்து சென்று கொண்டே இருக்கிறது. ஆதி சங்கரர் முதலாவது ஸ்லோகத்தில் கூறியபடி விதித்திட்ட வேளை (ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே) ஒரு இடி போல் வரும்போது, “அய்யகோ! நான் என்ன செய்தேன். எனக்கு ஏன் இப்படி?” என்று புலம்பும் வேளையிலும் கூட, ஆசை அலைகள் ஓய்வதில்லை நமக்கு. இது தான் யதார்த்தம்.

இதைத்தான் ஆதிசங்கரர் இந்த அழகான ஸ்லோகம் 12ல் வெளிப்படுத்துகிறார். இந்த ஸ்லோகத்தை ஆராய்வோம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

दिनयामिन्यौ सायं प्रात:

शिशिरवसन्तौ पुनरायात: ।

काल: क्रीडति गछत्यायु

स्तदपि न मुञ्चत्याशावायु: ॥

Adi Sankara

தமிழ் ஒலிபெயர்ப்பு

தி3னயா மின்யௌ ஸாயம் ப்ராதஹ

ஷிஷிர வசந்தௌ புனரா யாதஹ |

காலஹ் கிரீட3தி க3ச்சத் யாயுஹு

தத3பிந முஞ்சத் யாஷா வாயுஹு ||

தமிழ் மொழிபெயர்ப்பு

பகலும் இரவும் மாலையும் காலையும்

பனியும் வசந்தமும் மாறிடும் என்றும்

காலத்தின் ஆட்டத்தில் ஆயுளும் முடியும்

ஆசைக் காற்று நீங்கா தெனினும்

சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள்

दिनयामिन्यौ - தி3னயா மின்யௌ - பகலும் இரவும்
सायं - ஸாயம் - மாலை
प्रात: - ப்ராதஹ - காலை
शिशिरवसन्तौ - ஷிஷிர வசந்தௌ - பனியும் வசந்தமும்
पुनरायात: - புனரா யாதஹ - மறுபடியும் வரும்
काल: - காலஹ் - காலம்
क्रीडति - கிரீட3தி - விளையாடுகிறது
गछत्यायु - க3ச்சத் யாயுஹு - செல்லும் (குறையும்) ஆயுள்
तदपि - தத3பி - இருப்பினும்
न मुञ्चत् - ந முஞ்சத் - இல்லை விடுப்பு
याशावायु: - யாஷா வாயுஹு - அவாவின் காற்றிலிருந்து

விளக்கவுரை

நேரடி பொருள்
காலை, மாலை, இரவு என்று காலச் சக்கரம் விரைந்தோடி விளையாடும்; பருவமும் மாறி, முதுமையும் படரும். இருந்தும் ஆசைக்காற்றிலிருந்து இல்லை விடுப்பு.
விளக்கம்
சுவாமி சின்மயானந்தாவின் அருமையான விளக்கம்

இரவில், தானே சிதைந்து முடியத்தான், பகல் பிறக்கிறது. மறுநாள் பகல் மலருவதற்காகத்தான், இரவு இறக்கிறது. அந்த விடியல் வீரியத்துடனும் வெப்பத்துடனும் வளர்ந்து நண்பகலாக இருக்கும், ஆனால் விரைவில் மறைந்து மென்மையான சாயுங்காலமாக மாறும். இந்த நிகழ்வுகளின் சக்கரத்தில், மாதங்கள் சீராக நகர்கின்றன, அதன் மென்மையான கால்களின் அமைதியான அணிவகுப்பில், காலத்தின் தவிர்க்கமுடியாத வெள்ளம் ஆண்டுகளின் அலைகளாக உருண்டு, அதன் இடைவிடாத வலிமைக்கு முன்னால் அனைத்தையும் துடைக்கிறது. இதனை வியந்து, மௌனத்தில் அமைதியாக இருக்கும் நம் வயது, சேறும் சகதியுமான கல்லறைக்குள் உணரப்படாமல் நழுவி நுழைகிறது. காலச் சக்கரத்தில், எது எதிர்காலமாக இருந்ததோ அதுவே நிகழ்காலமாக மாறி, அதுவே கடந்த காலத்தின் முடிவில்லாத கடலில் சேர உருண்டோடுகிறது. காலம் ஒருபோதும் நிற்காது, எந்த நிபந்தனைக்காகவும் அல்லது எந்த நபருக்காகவும்!

மனிதன், தனது 'கடந்த' கால நினைவுகளால், தனது நிகழ் காலத்திற்கு தடுப்புகளை வைத்து, , அன்றாட வாழ்வின் களிப்பால் அத்தடுப்புகளை எரிக்கிறான். அதனால் அவனுள் எழும் புகைகள் அவனது நோக்கை மங்கலாக்கி, அவனது வாழ்க்கையை எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் கவலைகளால் கசக்க வைக்கிறது. நாம் இவ்வாறு நமது முடிவில்லாத முயற்சிகளால் நம்மை நாமே வீணடித்துக் கொள்ளும்போது, காலத்தின் தவிர்க்கமுடியாத சுழற்றத்தில், நமது நம்பிக்கைகளும், திட்டங்களும் தோல்வியுற்று அழிகின்றன.

வாழ்க்கை, காலத்தின் கருணையில் உள்ளது. இதை அறியாமல், உடைமைகளப் பெற்று, பெருக்கி, நம்பிக்கையிடன் மகிழ்ந்து வாழ, மனிதன் புலன்களை அனுபவிக்க ஆசைப்படுகிறான், பாடுபடுகிறான், வியர்வை சிந்துகிறான், முடிவில்லாமல் உழைக்கிறான். ஒரு நொடியில் மரணம், அவனிடமிருந்து அனைத்தையும் பறித்து விடுகிறது. அனைத்தையும் இங்கேயே விட்டு விட்டுச் செல்லும் கட்டாயத்தில் இருக்கிறான். ஆசைகள் நிறைந்த, சுயநலம் மிகுந்த வாழ்வில் பெறப்பட்ட வலிமிகுந்த பதிவுகளுடன் (வினைப்பலன்கள்), துன்பகரமாக உயிரினம் வெளியேறுகிறது. எவ்வளவு வருத்தம்! உண்மையில், எவ்வளவு சோகம்!

தனக்குப் பிரியமான தெய்வீகமான கணவன் இராமன் மீதான எல்லையற்ற அன்பைக் காட்டிலும், தற்போதைக்கு, விரைந்தோடும், பொன் மான் மீதான ஆசையே அதிக சக்தி வாய்ந்ததாகத் தோன்றுகிறது. வாழ்வில், மாயையின் விளையாட்டு இதுதான்.

காட்டில் ஒரு மனிதனை புலி துரத்துகிறது. கிணற்றில் விழுகிறான். கிணற்றின் நடுவழியில் உள்ள ஒரு கிளையில் சிக்கிக் கொண்டான். அவன் சிறிது நழுவினால், விடமுள்ள பாம்புகள் நீந்திக் கொண்டிருக்கும் கீழே உள்ள தண்ணீரில் வீழ்வான். புலி மேலிருந்து அவனை அச்சுறுத்தும். அப்போதுதான் அந்த மனிதனை தேனீக்கள் கொட்டுகின்றன. கிணற்றுப் பொந்தில் வசிக்கும் எலிகள், அந்த மனிதன் பற்றிக்கொண்டிருக்கும் கொடியை கடிப்பதில் மும்முரமாக இருக்கின்றன. ஒரு கரடி வந்து கிணற்றின் மேல் இருக்கும் மரத்திலுள்ள தேன் கூட்டை கலைத்து தேனை உண்ண முயல்கிறது. மேலே உள்ள தேன் கூட்டிலிருந்து ஒரு துளி தேன் அவரது முகத்தில் வடிகிறது. இந்த ஆபத்தான நிலையில், ஒவ்வொரு திருப்பத்திலும் ஆபத்துடன் இருக்கும் மனிதன், தனது எல்லா ஆபத்துகளையும் மறந்து, அந்த தேனை சுவைக்க தன் நாக்கை நீட்டுகிறான்! உலக வாழ்க்கையில் நாம் தேடும் திருப்தியை இது குறிக்கிறது.
பாம்புகள் என்பது ஒருவரின் பிணைப்புகள் மற்றும் பிணைப்புகள் அல்லது பொருள்களுடனான இணைப்புகள், கிணறு குடும்ப வாழ்க்கையை குறிக்கிறது. எலிகள் காலத்தைக் குறிக்கின்றன. இந்த எல்லா ஆபத்துகளுக்கும் நடுவில் உள்ள தேன் சிற்றின்ப வாழ்க்கையின் கணநேர இன்பங்களைக் குறிக்கிறது

ஆண்டுகள் கடந்து, வாழும் காலம் சீராக குறைந்தாலும், தெவிட்டா புலன் இன்ப இச்சைகள் மட்டுமே அதிகமாக வளர்கிறது. காலப் போக்கில், உடல் சிதைந்து பலவீனமடைந்து அனுபவிக்கும் வலிமை இல்லாத அளவுக்கு வளர்ந்துவிட்டது; எனினும் மனிதன் புலன் இன்பங்களுக்காக அதிகமாக ஏங்குகிறான். மரணம் பின்னால் ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நோய் நொடி கலந்து, கவலைகள் உந்தும் இந்த துக்க ஊர்வலம், கல்லறை விளிம்பை அடைகிறது. இந்நிலையிலும் மனிதன் அல்லல் நிறைந்த ஆசைகளை விடுவதில்லை. இறப்பதற்குமுன் நிறைவேற்ற வேண்டிய ஆசைகளின் பட்டியல் (ஆங்கிலத்தில் bucket list) நீண்டுகொண்டேதானே இருக்கிறது. எனவே ஆசைகளைக் களைந்து, மனமெனும் மேடையில் நடைபெறும் அவா, பற்று இவைகளின் ஆட்டத்தை நிறுத்தி, அமைதியான மனநிலை பெற்று, நிலையான பேரின்பத்தைத் தரும் மெய்ப்பொருளை நாடு.

முடிவுரை

இந்த ஸ்லோகம் நம்மை எச்சரித்து, புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்தச் சொல்கிறது. பொருளை அனுபவிக்கலாம். ஆனால் பொருட்கள் நம்மை அனுபவிக்க விடக்கூடாது. நமது சுதந்திரத்தைத் தக்கவைத்து, காலப்போக்கில் தன்னிறைவை நம்முள் கண்டறியும் விதத்தில் நாம் நம் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். அதற்கு நாம், நம் இன்பத்திற்காக உலகைச் சார்ந்திருப்பதிலிருந்து  விடுபட வேண்டும்.

உலகின் எந்தப் பொருளும் அதன் தற்காலிகத் தன்மையால் நிரந்தரமான மகிழ்ச்சியைத் தராது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது நிரந்தரமாக இருக்கிறதோ அதுதான் நிரந்தரமான மகிழ்ச்சியைத் தரும். பரம்பொருள் மட்டுமே நிரந்தரமானது எனவே அது மட்டுமே நிரந்தர மகிழ்ச்சியை அளிக்கும். இதைப் புரிந்துகொண்டு, நாம் தொடர்ந்து சுயமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தால், அதுவே உலகப் பொருட்களின் மீதான மாயையை போக்க ஒரே வழி.

Sankara’s Smithy 12 – The Seasonal Strike

Introduction

Time and tide wait for no man is an old saying. The wheel of time is constantly moving ahead and waits for no one. The days are passing us by, one after another and the days that have gone by never return. We all know it, don’t we? However how do we do spend our time every day? Here is an interesting statistics:
OurWorldinData
Across the world, we spend the most time working and sleeping; and paid work, housework, leisure, eating and sleeping take together 80-90% of the 1440 minutes that we all have available every day. We hardly have any time for our own self. What a pity!

Here is a time lapse video tailored to depict this state of us.
A dayin our life
We do not know how the whole day passes. We are desperate to wait for the week end, the month end, the year end and the holidays. This goes on and on and on that we do not even heed the passing of each year until suddenly the realisation of “What have I done” comes down like a thunder when the designated time ( Sloka 1 - samprapte sannihite kaale) arrives. Even at that time our desires don’t end. We stil have items to be ticked off in our bucket list.

This is what Adi Sankara brings out in this beautiful Sloka 12. Let us examine this Sloka.

Sanskrit Verse

दिनयामिन्यौ सायं प्रात:

शिशिरवसन्तौ पुनरायात: ।

काल: क्रीडति गछत्यायु

स्तदपि न मुञ्चत्याशावायु: ॥

Adi Sankara

English Transliteration

dinayāminyou sāyam prāta: 

shishiravasantou punarāyāta:

kālakrīdati gachatyāyu:

tadapi na munchatyāshāvāyu:

Meaning of the Sanskrit Words

दिनयामिन्यौ= dina+yAminI=day + night;
सायं= saayam - evening;
प्रातः= praatah - morning;
शिशिर= shishira - frosty season;
वसन्तौ= (and) vasantau - Spring season;
पुनः= punah - again;
आयातः= aayaatah - have arrived;
कालः= kaalah - Master Time;क्
रीडति= kridathi - plays;
गच्छति= gachhathi - goes (away); ebbs away
आयुः= aayuh - life/age;
तदपि= tadapi - tat.h+api, then even;
न= na - not;
मुञ्चति= mun chatthi - releases;
आशा= aasha - desire;
वायुः= vayuh - air (the wind of desire does not let off its hold)

Meaning in English

Day and night, dawn and dusk, winter and spring come and depart again and again. Time thus frolics and plays and life ebbs away. Yet, one does not give up the gusts of desires.

Explanation

Swami Chinmayananda’s eloquent explanation 

“The day decays to end itself in the night. The night dies only to blossom forth into the following day. The dawn grows in vigour and heat to be the noon, but soon wanes away to be the mellow dusk. On the wheel of happenings, the months steadily glide along and, in its soft-footed silent march, the irresistible floods of time roll up in waves of years, sweeping everything in front of its relentless might. Hushed in the silence of its own wonderment, age slips unperceived into its slushy grave.

Time moves on. That which was future becomes the present, and itself rolls away to join the endless ocean of the past. Time never stops, on no condition, for no person! It is ever on the march! Man, gathering memories from his own 'past', barricades his ‘present’, sets them ablaze with his excitements in his day-to-day life, and the rising fumes of his bosom blur his vision to make his life rigged with his anxieties for the ‘future’. As we thus waste ourselves with our endless manoeuvres, in the irresistible stride of time all our hopes and plans get defeated and routed.

Life is at Time's mercy ... In not recognising this, man desires to enjoy the sense-objects, strives, sweats and toils endlessly to acquire, to possess and to aggrandise - to hope, to spend ... And death snatches away everything from him ... He is compelled to leave everything here - and with painful bundles of impressions (vdsands) acquired in his desire-ridden selfish life, the miserable creature departs. How sad! Indeed, how tragic!

Desire for the fleeting, delusory golden-deer is, for the time being, seemingly more powerful for Sita than her infinite love for Rama, her divine beloved. This is delusion at play - maya with a vengeance.

Life steadily ebbs away, but desire fed by the sense gratifications only grows the more by them. Body decays and becomes infirm; it has grown to have no more strength to enjoy, but the man hungers all the more for sense-enjoyments. Death crawls behind; disease and decay accompany him. Piloted by worries and anxieties, this mournful procession reaches the edge of the grave ... Still man wants the joys of the pain-ridden objects.”

Swami Chinmayananda used to quote a beautiful simile. A man is chased by a tiger in the forest. He falls into a well. He is stuck in the well on a branch midway down. If he slips by a fraction of an inch he will plunge into the water below where water snakes are swimming about. The tiger peers threateningly at him from the top. Just then the man is stung by bees. Soon rats are busy gnawing at the creeper on which the man is being supported. A bear comes and claws into the honeycomb on the tree overhanging the well. In this perilous position, with danger at every turn, a drop of honey drips on his face from the honeycomb above. The man, forgetting all his perils, sticks out his tongue to lick it!

This typifies the kind of satisfaction we are seeking in worldly life.
The serpents are one’s binds and bonds or attachments to objects , the well itself represents family life. The rats represent TIME. And the honey in the midst of all these dangers represents the momentary pleasures of sensual life.

Therefore, be wise. Give up desires. Seek the all-satisfying Reality that lies behind the mental show of change and sorrow. The Infinite alone will satisfy you. Seek it with a mind withdrawn from the fever of all passions”.

Conclusion

In Bhagwad Gita, Lord Sri Krishna explains: 

All those who are lured to the sense objects and desire them are not awake but asleep to their nature of completeness which is Self contained and needs no perfection. The Jnani who is the knower of Truth, by the power of renunciation bestowed through Grace is able to restrain the outward going senses and is therefore fully awake to the consequences of allowing the sense organs a free play. As such, the Sage is asleep to the temptations of the world which attract the ignorant ones.

We have to understand that none of the objects of the world can give permanent happiness because of its temporary nature. Only that which is permanent alone can give permanent happiness. Self alone is permanent and hence it alone can give permanent happiness. If this is understood and there by if we have constant thought of the Self, that is only way to over come the delusion with the objects of the world.

The Time cycle is unavoidable; it is a law of Nature. But the cycle of joy and sorrow can be overcome by living in the light of knowledge and discovery of our true nature of spirit. This Sloka is cautioning us and telling us to lead our life intelligently. We should enjoy our life in such a manner that we retain our freedom and, in course of time, discover an inner self-sufficiency so that we become free from the dependence upon the world for our enjoyment.

“For that, in our day to day life we need ABCD, says Swami Paramarthananda - what we need is Appropriate Balanced Clean Desire”

சங்கரனின் வைரக்கூடம் 11 – மாயச் செருக்கு

Well lit balcony – a Maya?

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

பெரும் சாதனை புரிந்த உணர்வு, நம்பிக்கை நிறைந்த முகம்,  மலர்ந்த புன்னகையுடன் வரும் மகனைக் கண்டு “உன்னைப் பார்க்கும் போது எனக்கு எவ்வளவு கர்வமாக/பெருமையாக இருக்கு தெரியுமா?”  என்று கூறும் தாய் ஒரு புறம்.

“அவனிடம் சென்று எதுவும் கேட்காதே. அவன் ரொம்ப கர்வம்/பெருமை புடிச்சவன்” - அண்டை வீட்டுக் காரனைப் பற்றி கூறும் அடுத்தவன் ஒரு பக்கம்.

ஒரே சொல் - கர்வம்/பெருமை. இரண்டு எதிர்மறையான கருத்துள்ள பொருள். முதல் கர்வம்/பெருமை அடுத்தவரைப் பாதிக்காதது. இரண்டாவது, அடுத்தவரைப் பாதிப்பது. இதனை வெளிக்காட்ட ஒரு அருமையான திருக்குறள் உண்டு.


அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

திருவள்ளுவர்

மற்றவர்களுடன் ஒத்து நடக்காமல், தன் உண்மையான வலிமையின் அளவையும் அறியாமல், தன்னையே வியந்து பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பவன் விரைவிலேயே அழிந்து போவான் என்று ’தன்னை வியந்தான்’ என்ற சொல்லில் திருவள்ளுவர் கர்வம் பிடித்த மனிதர்களை மிக அருமையாக விளக்கி விடுகிறார்.

இந்த தன்னை வியக்கும் தன்மையைத்தான் கர்வம், தற்பெருமை, தலைக்கணம் என்றெல்லாம் எதிர்மறை சிந்தனையில் கூறுகிறோம்.

கர்வம் எதனால் வருகிறது, அதன் விளைவுகள் என்ன, அதனை நீக்குவதற்கு வழி எதுவும் உண்டா என்ற கேள்விகளுக்கு விடைகள், சங்கரனின் வைரக் கூடத்தில் நமக்கு கிட்டும், இந்த 11வது ஸ்லோகம் வழியாக.

வாழ்க்கையின் யதார்த்தத்தை விளக்குவதற்கு, மூன்று எடுத்துக்காட்டுகளை கோடிட்டுக் காட்டுகிறார் ஆதி சங்கரர். இந்த முக்கியமான ஸ்லோகத்தை ஆராய்வோம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

मा कुरु धनजनयौवन गर्वं

हरति निमेषात्कालः सर्वम् |

मायामयमिदमखिलं हित्वा

ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा ||

Adi Sankara

தமிழ் ஒலி பெயர்ப்பு

மாகுரு த4ன ஜன யௌவன க3ர்வம்

ஹரதி நிமேஷாத் காலஸ் ஸர்வம் |

மாயாமயமித3ம் அகி2லம் ஹித்வா

ப்3ரம்மபத3ம் தவம் ப்ரவிச’ விதி3த்வா ||

தமிழ் மொழி பெயர்ப்பு

வளம் குடி இளமை கர்வம் வேண்டாம்

கணத்தினில் கவர்ந்திடும் என்றும் காலம்

உலகே மாயம் என்பதால் விடுத்திட்டு

மெய்ப்பொருள் அறிவாய், நீயே என்று

சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள்

मा कुरु  - மாகுரு - அடைய வேண்டாம்

धनजनयौवन गर्वं - த4ன ஜன யௌவன க3ர்வம் - வளம் (செல்வம்), குடி (மக்கள்/உறவு), இளமை (இவைகளினால் வரும்) தற்பெருமை

हरति निमेषात्कालः सर्वम् - ஹரதி நிமேஷாத் காலஸ் ஸர்வம் - அழித்திடும் நிமிடத்தில் காலம் அனைத்தையும்

मायामयमिदमखिलं - மாயாமயமித3ம் அகி2லம் - உலகே மாயம்

हित्वा - ஹித்வா - துறந்து

ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा - ப்3ரம்மபத3ம் தவம் ப்ரவிச’ விதி3த்வா - மெய்ப்பொருள் அறிவாய், நீயே என்று

விளக்கவுரை

நேரடி பொருள்
“நான் பணக்காரன்” ; “எனக்கு நிறைய சுற்றத்தினர் உள்ளனர்”;“நான் இளமையுடன் எழிலுடன் (யௌவனம்) இருப்பவன்” என்றெல்லாம் கர்வம் கொள்ளாதே.

காலம் நினைத்தால் இவற்றை எல்லாம் ஒரே நிமிடத்தில் கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விடும். உலகமே பொய்க் காட்சி. பிரம்மம் மட்டுமே உண்மையானது என்று அறிந்து நீயும் பிரம்மமே என்பதை அறிந்துணர்வாயாக.
விளக்கம் 
இந்த ஸ்லோகத்தில், நான்கு தத்துவங்களை கோடிட்டு காட்டி, ஆதி சங்கரர் நிலைக்கண்ணாடியில் நம்மைப் பார்க்க உதவுகிறார். அவைகள் முறையே:

1. மனிதரின் அகந்தைகள்
2. நேரத்தின் விளைவு
3. உலகமும் மாயையும்
4. பரம்பொருளும் (பிரம்மனும்) அவனைப் பற்றிய அறிவும்.

ஒருவர் நேர்மையாகவும், உயர்ந்த குணமுடையவராகவும் இருந்தால், அவர் தன்னைத்தானே ஒரு கேள்வியைக் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று சங்கரர் சொல்லாமல் சொல்லி வைத்தார் இப்பண்ணிலே.

“இவ்வுலகில், என் வாழ்வில், நான் ஒருவன் மட்டுமே எதையாவது ஒன்றை உருவாக்கியிருக்கிறேனா அல்லது பெருமைப்படக்கூடிய ஒன்றை எனக்கு சொந்தமாக வைத்து கட்டுப்படுத்துகிறேனா?”

இது தான் அந்த கேள்வி. இதனை நமக்கு நாமே கேட்டுக்கொண்டு இருந்தோமானால், நமக்கு இந்தப் பண்ணில் உள்ள கீழ்கானும் விளக்கங்கள் புரியும். 
த4ன ஜன யௌவன க3ர்வம்

ஆதி சங்கரர் “தன, ஜன மற்றும் யௌவன” ஆகிய மூன்று வெற்று அகந்தைகளை எடுத்துக்கொள்கிறார். இவை மூன்றும் செல்வம், புகழ் மற்றும் இளமை ஆகியவற்றைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் பொய்யான மாயைகள் என்றும் அவை எந்த நேரத்திலும் மறைந்துவிடும் என்றும் கூறுகிறார்.

இந்த மூன்றும் அனைத்து ஆன்மீக முயற்சிகளுக்கும் பாரம்பரிய தடைகள். ஏனென்றால் தன்முனைப்பு எனும் அஹங்காரத்தை (ego) அழிக்கும் நோக்கமுடைய ஆன்மீகத்திற்கு எதிர்மறையாக, இந்த மூன்று அகந்தைகள், தன்முனைப்பிற்கு முட்டுக் கொடுத்து உதவும்.

இந்த மூன்று "தன்முனைப்பு முட்டுக்களை" ஆராய்வோம்.

தனம் - செல்வம்

முன்னே கூறியது போல், "நான் செல்வத்தை உருவாக்கியுள்ளேனா அல்லது இந்த செல்வத்தின் மீது எனக்கு கட்டுப்பாடு இருக்கிறதா?" என்ற கேள்வியைப் பயன்படுத்துவோம். இக்கேள்விக்கு ஆமாம் என்று என்னால் உறுதியாக பதில் கூற முடியாது. ஏன்?

என்னுடையது என்று நான் சொல்லும் இந்தச் செல்வம் எங்கிருந்து வந்தது? பரம்பரை சொத்தை விட்டு விடலாம். அது என்னால் இல்லை. நான் கடினமாக உழைத்து சம்பாதித்தது என்று நாம் கூறும் செல்வத்தை ஆய்வோம்.

என் உடலை வருத்தி புரியும் உழைப்பு, அதனால் வரும் சம்பாதிப்பு என்றால், உடனடியாக நாம் பட்டிருக்கும் மூன்று கடன்கள் நமக்கு நினைவுக்கு வரவேண்டும்.

1. நம் உடல் எங்கிருந்து வந்தது - பெற்றோரிடமிருந்து.
2. நம் உழைப்பு திறன் எங்கிருந்து வந்தது - ஆசானிடமிருந்து
3. இவரிருவரின் மூலம் எது - பரம்பொருள் எனும் இறைவன்

ஆக, இந்த மூவரும் இலையேல் எங்கிருந்து வரும், நம் கடின உழைப்பும், செல்வமும்.

எனவே தான், கடவுளுக்கும், முன்னோர்களுக்கும்/பெற்றோர்களுக்கும், நமக்கு ஆசானாக விளங்கிய ரிஷிகளுக்கும் நாம் நன்றி செலுத்தி, செலுத்த வேண்டிய கடன்களை (தேவ, பித்ரு, ரிஷி ருணம் என்று வடமொழியில் கூறுவர்) நிறைவேற்ற வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் தெளிவாகச் சொல்கின்றன.

மேலும் நமக்கு உடல் ஆற்றலைக் கொடுக்கும் உணவு எங்கிருந்து வந்தது? கன்னட மொழியில் மிகப் பிரபலாமான, திரு. டி.வி. குண்டப்பா அவர்கள் எழுதிய மக்கு திம்மா என்ற படைப்பில்

பசி களையும் கவளம் வெந்தது உன் வியர்வையிலோ
புசிக்கும் வேளை நினை, அது பிறன்தன் கண்ணீரோ
இசைவதும் நீ கொடுத்த அளவே ; தின்ற மிகுதியோ
இசித்திடும் சமியாக் கடனே -மக்குத் திம்மா

என்று அழகாக நமது கடனை எடுத்துரைக்கிறார்.

எனவே, வாழ்க்கையின் யதார்த்தங்களைப் பற்றி நாம் இப்படி உண்மையிலேயே சிந்திக்கும்போது, நம்மிடம் பணிவும், தன்னடக்கம் மட்டுமே வளரும்/இருக்கும்; பெருமை இருக்காது. இந்த அடிப்படை நன்றியுணர்வை நாம் புரிந்து கொள்ளாமலோ அல்லது உணராமலோ இருந்தால், செல்வத்துடன் வரக்கூடிய மிகப்பெரிய ஆபத்து, ஆணவம், செருக்கு, மமதை என்றெல்லாம் கூறப்படும் தன்முனைப்பு.

செல்வத்தைப் போலவே மக்களும் (உற்றார், உறவினர், நன்பர் - அவர்களால் வரும் புகழும்) இளமையும் என்றும் நிலைப்பதில்லை. முந்தைய பண்களில் (2,5,6) ஆதி சங்கரர், செல்வம் அல்லது சம்பாதிக்கும் சக்தி இல்லாத ஒருவரைத் நெருங்கிய உறவுகள் கூட அண்டமாட்டார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார் அல்லவா!

மேலும் கொழுப்பு மற்றும் சதையை அடிப்படையாகக் கொண்ட இளமையும் உடல் வலிமையும், உடலின் இயற்கையான மாற்றங்களான முதுமையும் இறுதியில் சிதைவு அடைந்தே தீரும். முந்தைய ஸ்லோகங்களில் ஆதிசங்கரர் நம் முட்டாள் மனதிற்கு, உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையேயான குத்தகை ஒப்பந்தம் முடிவடைவதற்கு நியமிக்கப்பட்ட நாளும் நேரம் வரும்போது எதுவும் நமக்கு உதவாது என்று கூறினார் என்பதை நினைவு கூற வேண்டும்.

எனவே, உலகமும் அது வழங்கும் அனைத்து செல்வங்களும் மாயை தான், அவைகள் நிலையற்றவை மட்டுமே. இதைத்தான் அடுத்த சொற்றொடரில் விளக்குகிறார் பரமனின் அவதாரமான ஆதி சங்கரர்.
ஹரதி நிமேஷாத் காலஸ் ஸர்வம்

ஆதி சங்கரர் ஹரதி, நிமேஷ கால, சர்வம் ஆகிய மூன்று முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்; எல்லாம் சில நொடிகளில் அழிந்துவிடும் என்பது நேரடியான பொருள்.

இந்த வாக்கியத்தை விவாதிக்க மற்றும் புரிந்து கொள்ள, ஒருவர் எங்கும் செல்ல வேண்டியதில்லை. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் உலக வங்கியின் தரவுகள் இங்கே:

மார்ச் 2020 முதல், 1000 நாட்களில் (86,400,000 வினாடிகள்), "இது" இதுவரை பின்வரும் தாக்கத்தை ஏற்படுத்தியது:

1. அதிகாரப்பூர்வ, உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான 6,606,624 மனிதர்களின் அகால இறப்பிற்கு “இது” காரணம். அதாவது சுமாராக ஒவ்வொரு 13 வினாடிக்கும் இவ்வுலகில் ஒருவர் மரணம் எய்யக் காரணம் “இது”.
2. கடுமையான அதிர்ச்சி அலைகள் மூலம் உலகப் பொருளாதாரத்தை உலுக்கி, இந்த நூற்றாண்டிலேயே மிகப்பெரிய உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தூண்டியது “இது”.
3. வளர்ந்து வரும் மற்றும் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரங்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வருமான இழப்பினால், வேண்டிய அடிப்படை நுகர்வுகளை மூன்று மாதங்களுக்கு மேல் தக்கவைக்க முடியவில்லை “இதன்” விளைவால்.
4. நாடுகளுக்குள்ளும் நாடுகளிலும், சமத்துவமின்மையும், வறுமையும் வெகுவாக உயரக் காரணமாக இருந்தது “இது”.

இந்த 21 ஆம் நூற்றாண்டின் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மதிகளில் , "இது" வரப்போகிறது என்பது நமக்குத் தெரியுமா? "இது" இப்படி "ஹரதி நிமேஷாத் கால: சர்வம்" செய்யும் என்று நமக்குத் தெரியுமா?

இந்த “இது” எது? அதுதான் கோவிட்-19 தொற்றுநோய்.

"அதனால்", அதாவது, கோவிட் 19 தொற்றுநோயால், செல்வம் அழிந்தது, இளமை மறைந்தது, நண்பர்கள் சில நொடிகளில் சென்றுவிட்டனர்.

இதற்கு மேல் என்ன விளக்கம் வேண்டும் இச் சொற்றொடருக்கு!

இந்த நிகழ்வுகள்,

“நீநாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார்
சாநாளும் வாழ்நாளும்”

என்று பத்து வயது பாலக ஞானி, திருஞானசம்பந்தர் அருளிய இரண்டாம் திருமுறை நினைவுக்கு கொண்டு வரும்.

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாளதுணர்வார் பெறின்

உண்மை அறிந்தோர், ஒரு தினம் என்பது கால அளவு போல் தோன்றினாலும் அது வாழ்நாளை அறுக்கும் வாள் என்று உணர்வர் என்ற திருக்குறள் இந்த சொற்றொடரைத் தழுவியதே.
மாயாமயமித3ம் அகி2லம் 

உலகம் முழுக்க மாயையால் நிரம்பியுள்ளது என்பதே நேரடிப் பொருள். உலகே மாயம். சங்கரர் வெளிப்படுத்திய மாயையின் கருத்தைப் புரிந்துகொள்ள, கோவிட்-19 பற்றிய நமது விவாதத்தை மேலும் தொடர்வோம்.

இல்லாத ஒன்று இருக்கின்ற மாயம்

நமது அன்றாட வாழ்வில், நமது உடல், மன வளாகத்தால் (பொறி புலன்களால்) உணர முடியாத “எதை”யும் பொதுவாக நாம் “அது” இல்லாதது என்றும் (இல்லையென்றும்), உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றும், “அதை”ப்பற்றி நாம் கவலையும் படுவதில்லை என்பது உலக இயல்பு அல்லவா! கண்ணால் காணும் பொருளே, நம் விரல் நகத்தைத் தாண்டிவிட்டால் அது நமது “இல்லை” என்கிறோம். காண முடியாத ஒன்றை “இருக்கிறது” என்று கூறுவோமா,இல்லை என்றுதானே “அதை”க் கூறுவோம். அந்த “இல்லாத” (அதாவது நமது பொறி புலன்களால்) உணர முடியாத ஒன்றை இப்பொழுது உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

உங்களால் "அதை" பார்க்க முடியவில்லை, என்னால்"அதை" கேட்க முடியவில்லை, மேலும் அவர்களால் "அதை" உணர முடியவில்லை. அது தான் கொடிய கோவிட்-19 வைரஸ். எனினும் “அது” பரவி இருக்கிறது அல்லவா. அகராதிகளின் வரையறையின்படி, ஒருவர் "அந்த கோவிட்-19 வைரஸை " மாயா என்றும் சொல்லலாம். இல்லாத ஒன்று என்று பொறி புலன்களுக்கு உண்மையற்றதாகத் தோன்றினாலும் அது இருந்தது, இருப்பது, இருக்கும், அது தான் உண்மை.

இருப்பது, இல்லாத மாயம்

இதேபோல், "இருப்பது, உண்மையானது" என்று தோன்றும் "உண்மையற்றதும், இல்லாததும்" உள்ளன, உதாரணமாக கானல் நீர், மந்திரவாதியின் செயல்கள் இவைகளைல்லாம் ஒரு மாயத்தோற்றம்.

நமது உடலையே எடுத்துக் கொள்வோம். நம் உடலுக்கு சுகங்களை நாம் கொடுக்க கொடுக்க, பதிலுக்கு அவ்வுடல் நமக்கு என்ன கொடுக்கிறது; துக்கத்தை ஒன்றே கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இதுவும் மாயமே. ஏனெனில் சுகமும், துக்கமும் நாம் நினைப்பது போன்ற சுகமும் துக்கமும் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக மாயை என்பது புரிந்து கொள்ள இயலாமை (non apprehension), தவறாக புரிந்துகொள்ளும் தன்மை (mis apprehension) என்ற இரண்டு தத்துவங்களை உள்ளடக்கியது.

அதாவது மறைப்பு, வெளிப்படுத்துதல் என்ற இரண்டு சக்திகளுடையது மாயை. (The AvaraNa shakti is called the power of concealment and the vikShepa-shakti the power of projection). இருப்பு இலாத தன்மை போன்று தோன்றினாலும், உடல் மன வளாகமான நம் உள்ளுணர்வில் வடிவங்களை உருவாக்கும் சக்தியுடையது மாயை.

(மாயை எனும் தத்துவத்தை, எனது மூட மனதிற்கு எட்டிய வரை https://soundar53.substack.com/p/-5- என்ற வலைதளப்பதிவில் விவரித்துள்ளேன். நேரம் கிடைத்தால் காணவும்).

எனவே தனம், ஜனம், யௌவ்வனம் போன்றவைகளைத் தவறாக புரிந்து கொண்டதால் (misapprehension) வளரும் தன்முனைப்பு என்ற கர்வம் எனும் தற்பெருமையால், நம்மை வாழ்க்கையின் யதார்த்தமான நிலையையும் அல்லது இவ்வுலகைப் பற்றிய சார்பற்ற புறநிலை உணர்வையும் புரிந்து கொள்ள இயலாமைக்கு (non apprehension) வழி வகுக்கிறது.

இதனால் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று கிளிஞ்சல் வெள்ளியென, கண்ணாடித்துகள் மணிக்கல்லென, மாக்கலந்தநீர் பாலென, கானல்நீர் தண்ணீரென மருட்சிகொண்டு, நிலையிலாதவற்றை நிலையெனக் கண்டு மயங்குவதே உலக வாழ்க்கை என்பதை உணர்த்தவே, ஆதி சங்கரரின் மாயாமயமித3ம் அகி2லம் என்ற சொற்றொடர்.
ஹித்வா

கைவிடு, துறந்திடு, விட்டுக்கொடு என்பதே நேரடிப் பொருள். ஆதிசங்கரர் இந்த (தன, ஜன, யௌவ்வன) என்ற தன்முனைப்பு முட்டுக்கள் எதிலும் நிலையான மகிழ்வைக் காண முடியாது என்பதை உணருமாறு அறிவுறுத்துகிறார். எனவே "ஹித்வா" அவைகளைத் துறக்குமாறு அவர் வலியுறுத்துகிறார்.

இந்த சொல்லிற்கான தனது விளக்கவுரையில், சுவாமி விதிதாத்மானந்தா கூறுகிறார்:

“வேதாந்தத்தில், துறவு என்பது ஒரு செயல் அல்ல; இது ஒரு மனநிலை, உலக விஷயங்களைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட அணுகுமுறை. புற நிலையில், வினைகள் புரிவதில்லை, பொருட்களை நிராகரிப்பது என்பதெல்லாம் துறவு அல்ல. விட்டுவிட்ட எதையாவதின் இழப்பை உணர்ந்தால், நான் அதை உள்நோக்கி விட்டுக்கொடுக்கவில்லை என்றுதான் அர்த்தம்”.

தூய, நிலையான மகிழ்வெனும் இலக்கை நோக்கி பயணிக்கும் நாம், சோகம், பயம் அல்லது பாதுகாப்பின்மை போன்ற உள்நோக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காண, “பொருளாகிய உலகத்தை நோக்காதே; உலகப் பொருள்களால் இவற்றைத் தீர்க்க முடியாது” என்ற இந்த உண்மையை அங்கீகரிப்பதே துறவு.

எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட அளவே யதார்த்தம் அல்லது பயன் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, அந்த அளவிற்கே அவைகளை மதிப்பிடுவது, அவைகளின் பயனை அனுபவிப்பது என்பதே இந்த “ஹித்வா” என்ற சொல்லின் பொருள்.

குறிப்பு: சமஸ்க்ருத மொழியில், சில பதிவுகளில் “ஹித்வா” என்ற சொல்லிற்கு பதிலாக “பு3த்4வா” என்று காணப்படுகிறது. அதற்கு அறிந்துணர்தல் என்ற பொருள். அதாவது எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட அளவே யதார்த்தம் அல்லது பயன் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, அந்த அளவிற்கே அவைகளை மதிப்பிட்டு, அவைகளின் பயனை அனுபவிப்பதை அறிந்துணர்தல் என்ற பொருளைக் கொள்ளலாம்.
ப்3ரம்மபத3ம் த்வம் ப்ரவிச’ விதி3த்வா

விதி3த்வா என்றால் அறிந்து, உணர்ந்த பிறகு (புரிந்து அனுபவிப்பது), த்வம் ப்3ரம்மபத3ம் ப்ரவிச’, உன்னைப் பற்றிய உண்மையை அறிந்த நீ பரம்பொருளின் (பிரம்மனின்) இருப்பிடத்தில் நுழைவாயாக என்பது நேரடிப் பொருள்.

எனவே, என்னைப் பற்றிய உண்மையை அறிந்து, பிரம்மனின் இருப்பிடத்தில் பிரவேசிக்க, நான் உலகத்தைத் துறக்க வேண்டும், அதாவது, எனது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், எனது இலக்கை அடைவதற்கும் நான் உலகத்தைச் சார்ந்திருக்கும் போது என்னை நான் அறிவதில்லை.

மனிதப் பிறப்பின் நோக்கமே தெய்வீகமாக மாறுவதுதான். மற்றவை அனைத்தும் வாழ்க்கையின் வழிமுறைகள். வாழ்க்கையின் குறிக்கோளுக்கும் வாழ்க்கை வழிமுறைக்கும் இடையில் நாம் ஒருபோதும் குழப்பமடையக்கூடாது. வாழ்க்கையின் குறிக்கோள் நமக்கு நிரந்தர மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

"பிரம்ம சத்யம், ஜகத் மித்யா" (பிரம்மம் மட்டுமே இறுதி உண்மை, மற்றும் உலகம் நிரந்தரமற்றது) என்பதை உணர்ந்து அனுபவித்தால், என் அமைதியான மனம் எந்த கவனச்சிதறல்களிலிருந்தும் விடுபட முடியும். பின்னர் என்னால் என்மேல் கவனத்தை செலுத்த முடியும். அப்படி செலுத்துகையில் தன்னைப் பற்றிய அறிவு எனும் "நீயே அது" ("தத் த்வம் அசி") என்ற மெய்ப்பொருளின் இருப்பிடத்திற்குள் நுழையலாம். ஆகாயத்தில், மேகங்களை விட மேலான சொர்கமெனும் இடத்தில், வின்னவரும் தேவதைகளும், மிளிரும் வெள்ளை நிற ஆடையில் நம்மைச் சுற்றி பறந்திடும் இடமல்ல அது. அந்த இடம் உன்னிடமேதான் உள்ளது.

இங்கேயே, இப்பொழுதே வீடுபேறு எனும் விடுதலை நிலை தன்னை அறிந்தோர்க்கு. இதைத்தான் ஆதி சங்கரர் 9வது ஸ்லோகத்தில் “நிஸ்சல தத்த்வே ஜீவன்முக்தி:” என்று கூறினார்.

முடிவுரை

உலகத்தின் நிலையற்ற தன்மையும் அதன் இன்பங்களும் நம்மை நம் உறக்கத்திலிருந்து நம்மை எழுப்ப வேண்டும். நாம் நமது உடல் மன வளாகத்தைப் பயன்படுத்தி, இவைகளனைத்தும், சாராம்சத்தில் வெறும் மாயை (மாயா) என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பரம தத்துவமான பிரம்மத்தை அறிந்து, அதில் நமது உணர்வை இணைப்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் ஆத்மாவே உண்மையான நிரந்தரமான மெய்ப்பொருள், அதுவே பரம்பொருள் எனும் நிலையான உண்மை. அதுவே தூய இருப்பு, தூய உணர்வு, தூய பேரின்பம்.

ஆதி சங்கரரின் இந்த முக்கியமான செய்தியை நாம் ஆழ்ந்து உணரவேண்டும். அடுத்த வலைப்பதிவில் அடுத்த ஸ்லோகத்திற்குச் செல்வோம்.

அதுவரை……

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!