This write up below is definitely not an exhaustive description of what our scriptures talk about Pralaya. It is my very limited understanding of the vast literature available in public domain. The objective is to get a broad idea of the principles involved so that when we take up the study of our scriptures and Sanskrit Slokas, we will have a better comprehension of what they say.
Reader is strongly advised to strictly learn these under the guidance of a Guru, if one wants a deep dive in this subject.
Introduction
The concept of Pralaya or dissolution is intimately related with the concept of creation. Our scriptures say that the chain of creation and dissolution continues without break. After each creation, there is dissolution and after dissolution there is again new creation.Following the dissolution, there is a period of rest or interval, known as Pralaya. It's a period of non-existence where the universe remains dormant before the next cycle begins.
Each creation i.e., anything that has an “existence” goes through the dissolution process. The dissolution process is the reverse of the creation process. This means that all the creations at the gross level dissolves into the subtle level and the subtle into causal levels.
Therefore, in addition to the “kaala” or time and its breakdown which we saw in the earlier part, we should also understand what is getting dissolved, where is it getting dissolved and how often do they get dissolved. In other words, we should understand
1. The different forms of existence 2. the realms of existence 3. The cycles of dissolution
Forms of existence
In this universe, (universe included) there are sentient and insentient things that exist.
Leaving the near infinite number of insentient and inert materials and their different forms aside, the Padma Purana discusses the number of different types of life-forms in the universe. According to the Padma Purana, there are 8,400,000 life-form species, 900,000 of which are aquatic ones; 2,000,000 are trees and plants; 1,100,000 are small living insects species; 1,000,000 are birds; 3,000,000 are beasts and reptiles; and 400,000 are mammal species.
Creation (srishti) and destruction (pralaya) is about all these forms of existence.
Realms of existence
Apart from the infinite time element, as one of the common causes for cosmic evolution, infinite space is to be understood in proper perspective. This is known as “loka” in our scriptures. The most common cosmological conception of lokas in the Veda was that of the trailokya or triple world: three worlds consisting of earth, atmosphere or sky, and heaven, making up the universe.
Hindu mythology defines fourteen worlds (not to be confused with planets) – seven higher worlds (heavens) and seven lower ones (underworlds). (The earth is considered the lowest of the seven higher worlds.) The higher worlds are the seven Vyahrtis (Heavens or Upper worlds) and seven Patalas (Hells or lower worlds).
The 14 Lokas are: (1) Satya (2) Tapa (2) Jana (4) Mahar (5) Svar (6) Bhuvar (7) Bhu (8) Atala (9) Vitala (10) Sutala (11) Talatala (12) Mahatala (13) Rasatala (14) Patala.
Time Cycles and kinds of Pralaya
Visnu Purana describes, four kinds of pralaya viz.,
Naimittika (occasional), Prakrtika (elemental), Atyantika (absolute) and Nitya (perpetual)
All these are directly related to the life of Brahma, the God assigned the responsibility of creation.
This Pralaya is also termed as the Brahma Pralaya. This Pralaya at the end of a kalpa or at the end of a day of Brahmas life - 4.32 Billion human calendar years);. After a kalpa, Naimittika pralaya occurs. It is also indicated in the Visnu Purana that this dissolution occurs only in the three lokas, i.e., Bhu, Bhuva and Sva.The Visnu Purana also gives a very fearful description of this dissolution.
Prakrtika Pralaya:
This Pralaya occurs when the whole Brahmanda dissolves in Prakrti. This pralaya occurs at the end of the life span of Brahma (100 years as per his calendar) , viz., at the end of Maha Kalpa - 311.04 Trillion years in human calendar (comprising of two paraardhaas of 155.52 Trillion years each).
At that time all the things of the world return to their causes. This dissolution takes place in the opposite order of their creation. Thus, the seven forms of Prakrti from Mahat to earth enter successively into their causes. The Egg of Brahma is dissolved in the waters that surround it with its seven lokas, seven oceans, seven islands and the mountains. Water is drunk up by fire; that of air absorbs the stratum of fire. Air is merged in ether and Bhutadi or Ahamkara devours the ether. Mahat again takes up Ahamkara. Then Prakrti absorbs Mahat and all these. Prakrti and Purusa also are dissolved into the Supreme Spirit. This is Prakrta Pralaya.
Atyantika Pralaya :
Absolute or final dissolution is attained by the knowledge of the Supreme. It is said that all beings are afflicted by three kinds of worldly pains, viz., adhyatmika, adhibhautika and adhidaivika. The Visnu Purana also describes these three types of pains. Adhyatmika is of two types - bodily and mental. That kind of evil, which is inflicted upon men by beasts, birds etc. are called Adhyatmika. Adhidaivika pain is the work of cold, heat, wind, rain, lightning and other atmospherical phenomena. These three types of afflictions are described in the Samkhya system also in the similar vein.
Only true knowledge about one self (atma vidya, brahma jnanam) can rescue men from these three kinds of affliction. When a man attains true, knowledge & detachment from human afflictions, he obtains final dissolution. In this pralaya, the yogis are merged in the Supreme Spirit.
Nitya Pralaya:
It is said that Nitya or perpetual dissolution is the constant disappearance of all living beings. Experts interpret this as the death of the living beings, which occurs constantly - “Nitya is the extinction of life, like the extinction of a lamp, in sleep at night”. Some Vedantists describe Nitya Pralaya as Susupti or deep sleep.
Conclusion
We have through a five part study tried to have an overview of the cosmic evolution as per the modern and Indian perspectives. This study was essential to appreciate Narayaneeyam Dasakam 5.
From the next blog we will start our study the Slokas of Dasakam 5.
இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.
நாராயணீயம்தசகம்ஐந்தினைசரியாகபுரிந்துகொள்வதேநமதுகுறிக்கோள். அதற்குதேவையானபுரிதலைநமக்குஅளிக்கவேஇந்தபதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.
இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரைஅறிந்தது
பகுதி 1ல், "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் பரம்பொருள் தத்துவம் நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக தன்னை வெளிப்படுத்துகிறது என்று கூறியதை அறிந்தோம்.
பகுதி 2ல், படைப்பு என்பது பரம்பொருளின் இச்சையால் வெளிப்படுகிறது என்றும், அப்பரம்பொருளே படைப்பின் அறிவுக்காரணம் என்றும் அறிந்தோம். மேலும் பரம்பொருளைப் போல ஆதியும் அந்தமும் இல்லாமல் எனினும் பரம்பொருளைச் சார்ந்த சக்தியான மூலப்ரக்ருதி, அவ்யக்தா, மாயா, குணஸம்யா என்றெல்லாம் வடமொழியில் கூறப்படும் மாயையே படைப்பின் பொருட்காரணம் என்றும், அழியா இடம், அழியா காலம் இரண்டும் பொதுக்காரணமென்றும் கண்டோம். அந்த காலத்தின் கணக்கினை நான்முக கடவுளின் ஆயளுடன் இணத்ததையும் அறிந்தோம்.
மூன்றாவது பகுதியில் ஐவகை செறிவு எனும் பஞ்சீகரண செயல்முறை வழியாக அண்டப் பரிணாமத்தின் விவரங்களைக் கண்டோம்.
முடிவாக, இந்தப்பகுதியில் பிரளயம் எனும் கலப்பு தத்துவத்தை காண்போம்.
முகவுரை
“ஒன்றோடொன்றாகவே பற்றிலயமாம் போதினில்” என்று தாயுமானவர் கூற்றின்படி, லயம் என்ற சொல்லுக்கு, ஒன்றுடன் ஒன்றாக கலத்தல் என்ற பொருள் மிகவும் பொருத்தமானது. பலர் இச்சொல்லிற்கு அழிவு என்று பொருள் கொள்கின்றனர். அது ஒரு குறுகிய கண்ணோட்டம். முதற்பதிவல் கண்ட அடிப்படை கொள்கையை நினைவு கூறுக. உருவாக்குதல், அழித்தல் என்று ஒன்றுமில்லை; பரிணாமம் என்று வேறாக, மாறாக, மறைவிலிருந்து வெளிப்படுவதே உண்மை.
பிரளயம் என்பது, பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கலப்பு என்ற பொருளை குறிக்கும் என்று கூறுகிறது என் சிற்றறிவு. .
நமது ஸனாதன தர்மத்தில், அண்டப் பரிணாமம், என்பது ஒரு சக்கர சுழல். தோன்றியது மறையும; மறைவது தோன்றும். இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும் காலச்சக்கர சுழற்சியின்படி. எதற்கெல்லாம் "இருப்பு" உள்ளதோ அதற்கெல்லாம் “கலப்பு” எனும் “லயம்” உண்டு. எவையெல்லாம் “லயப்படுகின்றனவோ”, அவைகளெல்லாம் “இருப்பாக” வெளிவரும். இதுதான் அண்டத்தின் நியமனம்.
எனவே, இந்த லயம் எவைகளுக்கு, எங்கு, எப்போது என்பதை நாம் அறிய வேண்டும். அதாவது லயத்தின் பொருள், இடம், காலம் இவற்றை நாம் அறிய வேண்டும். அவைகளின் ஒரு கண்ணோட்டம் இதோ.
பிரளயம் – எவைகளுக்கு?
இந்த பிரபஞ்சத்தில், (பிரபஞ்சம் உட்பட) “இருப்பு” உள்ளவைகளை உணர்வுள்ள இருப்பு (sentient), உணர்வற்ற பொருட்கள் (insentient) என்று பிரிக்கலாம். முடிவிலியை எட்டும் எண்ணற்ற உணர்ச்சியற்ற மற்றும் செயலற்ற பொருட்களையும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், 8,400,000 உயிரினங்களும், அவற்றில் 900,000 நீர்வாழ் உயிரினங்களாகவும்; 2,000,000 மரங்களும் செடிகளெனவும் ; 1,100,000 சிறிய உயிருள்ள பூச்சி இனங்களாகவும்; 1,000,000 பறவைகள் எனவும்; 3,000,000 மிருகங்கள் மற்றும் ஊர்வன எனவும், பாலூட்டி இனங்கள் 400,000 எனவும் நமது பத்ம புராணம் பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு வகையான வாழ்க்கை வடிவங்களின் எண்ணிக்கையைப் பற்றி விவாதிக்கிறது. பல்லுயிர் பெருக்கம் என்பது அண்டங்களில் உள்ள உயிரின வகைகளின் தொகுப்பாகும்.
ஆக , பிரளயம் என்பது இந்த இருவகை இருப்புகளனைத்தையும் உள்ளடக்கியது என்பதை நாம் உணர வேண்டும்.
பிரளயம் – எங்கேநிகழ்கிறது?
அண்ட பரிணாம வளர்ச்சிக்கான பொது காரணங்களில் ஒன்றான, எல்லையற்ற வெளியை சரியான கண்ணோட்டத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது நமது வேதங்களில் "லோகம்" என்று அழைக்கப்படுகிறது.
முடி மன்னர் ஆகில் மூவுலகம் அது ஆள்வார் அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின்
திருமந்திரம் 1601
தேவர்கள் வாழும் விண்ணுலகம், மனிதர்கள் வாழும் மண்ணுலகம், அசுரர்கள் வாழும் பாதாளவுலகம், ஆகிய மூன்று உலகங்களைக் குறிக்கும். இதுவே மிகவும் பொதுவான அண்டவியல் கருத்து.
எனினும், இந்து புராணங்கள் பதினான்கு உலகங்களை வரையறுக்கின்றன (இதனை கிரகங்களென குழப்பமடையக் கூடாது). ஈரேழு உலகம், 14 லோகங்கள் என நாம் கேட்டிருப்போம். அந்த உலகங்கள் நாம் வாழக்கூடிய பூமிக்கு மேலே ஆறு உலகங்கள் உள்ளன. நம் பூவுலகிற்கு கீழே ஏழு உலங்கள் இருக்கின்றன என குறிப்பிடப்படுகிறது.
1. அதல லோகம் 2. விதல லோகம் – அரக்கர்கள் 3. சுதல லோகம் – அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், தான, தர்மங்களால் உயர்ந்தவரை உலகளந்த வாமனனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி 4. தலாதல லோகம் – மாயாவிகள் 5. மகாதல லோகம் – நல்ல செயல்கள் பல செய்து புகழ்பெற்ற அசுரர்கள் 6. ரஸாதல லோகம் – அசுர குருக்கள். 7. பாதாள லோகம் – வாசுகி உள்ளிட்ட பாம்புகள்
ஆக மொத்தம் நாம் வாழும் உலகம் உள்பட 14 லோகங்களிலும் பிரளயம் நடைபெறும்.
பிரளயம் – எப்போதுநிகழ்கிறது?
அண்டப்பரிணாம வளர்ச்சியின் எதிர்மறை இந்தப் பிரளயம். எது எது எப்படி வெளிவந்தனவோ, அது அது அப்படி ஒன்றறக் கலக்கும் பரம்பொருளுடன். அதாவது பருநிலை இருப்புகள் நுண்நிலையுடன், நுண்நிலை இருப்புகள் காரண நிலையுடன் லயிக்கும்.இவை அனைத்தும் படைக்கும் தொழிலுக்கு தலைவனான நான்முக கடவுளாம் பிரம்மனின் வாழ்வுக் காலத்துடன் நேரடித் தொடர்பினில் நடக்கும் என்று நமது மறைகள் கூறுகின்றன. (பதிவின் முடிவில் உள்ள படத்தை காணவும்)
விஷ்ணு புராணம் நான்கு வகையான பிரளயத்தை விவரிக்கிறது, 1. நைமித்திகா, 2. பிரகிருதிகா, 3. அத்யாந்திகா மற்றும் 4. நித்யா. முதல் இரு வகைகள் அண்டத்தின் கண்ணோட்டத்தில், அடுத்த இருவகைகள் உயிரினத்தின் கண்ணோட்டத்தில்.
1.நைமித்திக பிரளயம்:
இந்த பிரளயத்தை பிரம்ம பிரளயம் என்றும் அழைப்பர். இந்த பிரளயம் ஒரு கல்பத்தின் முடிவில் அல்லது பிரம்மாவின் வாழ்க்கையின் ஒரு நாளின் முடிவில் - 4.32 பில்லியன் மனித காலண்டர் ஆண்டுகள் முடிவில்; பூ, புவ, ஸ்வா ஆகிய மூன்று லோகங்களில் மட்டுமே இந்த கலைப்பு நிகழ்கிறது என்று விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2.பிரகிருதிகா பிரளயம்:
இயற்கையெனும், பிரக்ருதியில் முழு பிரம்மாண்டமும் கலந்திடும் போது இந்த பிரளயம் ஏற்படுகிறது. பிரம்மாவின் ஆயுட்காலத்தின் முடிவில் (அவரது நாட்காட்டியின்படி 100 ஆண்டுகள்), அதாவது மகா கல்பத்தின் முடிவில் - மனித நாட்காட்டியில் 311.04 டிரில்லியன் ஆண்டுகள் (ஒவ்வொன்றும் 155.52 டிரில்லியன் ஆண்டுகள் கொண்ட இரண்டு பரார்தாக்களை உள்ளடக்கியது) இந்த பிரளயா நிகழ்கிறது. அந்த நேரத்தில் உலகின் அனைத்து பொருட்களும் அதன் காரணங்களுக்குத் திரும்புகின்றன. இந்த கலைப்பு உருவாக்கத்தின் எதிர் வரிசையில் நடைபெறுகிறது. இவ்வாறு, மஹத் முதல் பூமி வரையிலான ஏழு பிரக்ருதி வடிவங்கள் அவற்றின் காரணங்களில் அடுத்தடுத்து நுழைகின்றன. பிரம்மாவின் முட்டை அதன் ஏழு லோகங்கள், ஏழு பெருங்கடல்கள், ஏழு தீவுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட நீரில் கரைகிறது. நெருப்பினால் தண்ணீர் குடிக்கப்படுகிறது; காற்றானது நெருப்பின் அடுக்கை உறிஞ்சுகிறது. காற்று ஈதரில் இணைக்கப்பட்டு பூதாதி அல்லது அஹம்காரம் ஈதரை விழுங்குகிறது. மஹத் மீண்டும் அஹம்காரத்தை எடுத்துக்கொள்கிறார். பிறகு பிரக்ருதி மஹத்தையும் இவை அனைத்தையும் உள்வாங்குகிறது. பிரக்ருதியும் புருஷனும் பரம ஆத்மாவில் கரைந்து விடுகிறார்கள். இது பிரக்ருத பிரளயம்.
3.அத்யாந்திகா பிரளயா:
முழுமையான அல்லது இறுதியான கலைப்பு பரம்பொருளின் அறிவால் (ஆத்ம ஞானம், மெய்யறிவு) அடையப்படுகிறது. எல்லா உயிர்களும் அத்யாத்மிகா, அதிபௌதிகா, ஆதிதைவிகா ஆகிய மூன்று விதமான உலகத் துன்பங்களால் பீடிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. விஷ்ணு புராணம் இந்த மூன்று வகையான வலிகளையும் விவரிக்கிறது. அத்யாத்மிகா என்பது உடல் மற்றும் மனதினால் எஊற்படும் வலி; மிருகங்கள், பறவைகள் போன்றவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் தீமையே அத்யாத்மிகா எனப்படும். ஆதிதைவிக வலி என்பது குளிர், வெப்பம், காற்று, மழை, மின்னல் மற்றும் பிற வளிமண்டல நிகழ்வுகளின் வேலை. மெய்ப்பொருள் அறிவு (ஆத்ம வித்யா, பிரம்ம ஞானம்) மட்டுமே இந்த மூன்று வகையான துன்பங்களிலிருந்து மனிதனை மீட்கும். ஒரு மனிதன் உண்மையான, அறிவு மற்றும் மனித இன்னல்களில் இருந்து பற்றின்மை அடையும் போது, அவன் பரம்பொருளுடன் ஒன்றற கலக்கிறான். இந்த பிரளயத்தில், யோகிகள் பரமாத்மாவில் இணைந்துள்ளனர்.
4.நித்ய பிரளயா:
நித்யா அல்லது நிரந்தர லயம் என்பது அனைத்து உயிரினங்களின் மறைவு என்று கூறப்படுகிறது. தொடர்ந்து நிகழும் இக்கலப்பிற்கு ஜீவராசிகளின் மரணம் என வல்லுநர்கள் இதை விளக்குகிறார்கள். சில வேதாந்திகள் நித்ய பிரளயத்தை சுசுப்தி அல்லது ஆழ்ந்த உறக்கம் என்று விவரிக்கின்றனர்.
முடிவுரை
ஐந்து பகுதி ஆய்வின் மூலம் அறிவியல் மற்றும் நமது ஆன்மீக கண்ணோட்டங்களின்படி அண்டப் பரிணாமத்தை அறிய முயன்றோம்.
நாராயணீயம், தசகம் 5 அண்டத்தின் படைப்பை விவரிக்கின்றது. நாராயண பட்டத்ரீயின் ஸ்லோகங்களை அறிந்து கொள்ள இந்த அடிப்படை அறிவு இன்றியமையாதது.
அடுத்த பதிவுகளிலிருந்துது நாராயணீயம் தசகம் ஐந்தினை ஆராயலாம்
இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.
நாராயணீயம்தசகம்ஐந்தினைசரியாகபுரிந்துகொள்வதேநமதுகுறிக்கோள். அதற்குதேவையானபுரிதலைநமக்குஅளிக்கவேஇந்தபதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.
இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரைஅறிந்தது
பகுதி 1ல், நமது முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் அவர்கள் இருந்த காலகட்டத்திற்கேற்ப, ஆழ்ந்த தியானங்களின் மூலம், "காரணமற்ற காரணத்தில்" கவனம் செலுத்தி உள்நோக்கி சிந்தித்து, "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் தத்துவம் நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக தன்னை வெளிப்படுத்துகிறது என்று கூறியதை அறிந்தோம்.
பகுதி 2ல், படைப்பு என்பது பரம்பொருளின் இச்சையால் வெளிப்படுகிறது என்றும், அப்பரம்பொருளே படைப்பின் அறிவுக்காரணம் என்றும் அறிந்தோம். மேலும் பரம்பொருளைப் போல ஆதியும் அந்தமும் இல்லாமல் எனினும் பரம்பொருளைச் சார்ந்த சக்தியான மூலப்ரக்ருதி, அவ்யக்தா, மாயா, குணஸம்யா என்றெல்லாம் வடமொழியில் கூறப்படும் மாயையே படைப்பின் பொருட்காரணம் என்றும், அழியா இடம், அழியா காலம் இரண்டும் பொதுக்காரணமென்றும் கண்டோம். அந்த காலத்தின் கணக்கினை நான்முக கடவுளின் ஆயுளுடன் இணத்ததையும் அறிந்தோம்.
இனி இந்த மூன்றாவது பகுதியில் அண்டப் பரிணாமத்தின் விவரங்களைக் காண்போம்.
அண்டப்பரிணாமம் – அதிஉயர்நிலைகண்ணோட்டம்
இந்நிலை ஆழ் உறக்க (ஸுஷுப்தி என்பர் சமஸ்க்ருதத்தில்) நிலை. அதாவது பரம்பொருள், படைக்கும் இச்சையிலாமல், அசைவிலாமல்/உணர்வலைகளின் அதிர்விலாமல் இருக்கும் தூய இருப்பு நிலை. இந்நிலையில், ஆதியும் அந்தமுமில்லாமல் பரம்பொருளும் மாயையும் நீக்கமற நிறைந்திருக்கும். ஆதியும் அந்தமுமில்லையதனால் காலம் என்பது இல்லை; நீக்கமற நிறைவதனால் இடம் என்ற ஒன்று இல்லை. ஆக இந்நிலையில், இடம், காலம் என்று ஒன்றில்லை.
இந்நிலையில், அறிவாற்றல் இலா, விவரிக்க இயலா மாயையில், சாத்விக, ரஜ, தாமஸ என்று மூன்று குணங்களும் சமநிலையில் இருக்கும்.
சரியாகச் சொல்ல வேண்டுமானால், இதை ஆரம்ப நிலை, மஹா பிரளயம் அல்லது பேரழிவு அல்லது முடிவு நிலை என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்நிலையில் படைப்பு, காத்தல், அழித்தல் என்று ஒன்றுமில்லை. ஏனெனில் இந்நிலையை அடைந்த ஆய்வாளர் பரம்பொருளே நான் என்று அறிந்துணர்ந்த ஆனந்த நிலை - அனைத்தும் ஒருமையில் அடங்கிய பரம்பொருள் நிலை.
அண்டப்பரிணாமம் – ஐவகை செறிவு
அறிவுக் காரணமான பிரம்மம் எனும் பரம்பொருளுக்கும், பொருட்காரணமான மூலப்ரக்ருத்தி எனும் மாயைக்கும் இடையேயான தொடர்பினால் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று செயல்முறைகள் சக்கர சுழற்சியென, வரையறுத்த காலக்கணக்கின்படி நடைபெறுகின்றன என்று நமது மறைகள் கூறுகின்றன.
பிரம்மாவின் ஒரு ஆயுட்காலம் முடிந்தபின், பரம்பொருளின் படைக்கும் இச்சையால், பரிணாமம் துவங்குகிறது. இந்த இயக்க இச்சை, பரமனின் கடைக்கண் அசைவிற்கு ஒப்பு என்று ஞானியர்கள் ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்களில் வரைந்தனர்.
இந்த இயக்க இச்சையால் மூலப்பரக்ருதி எனும் மாயை அசைந்திட, அந்த அசைவால் முக்குணங்களின் சமநிலை குலைந்து வெளிப்பட, காலச்சக்கரத்தின் உதவி கொண்டு, மாயை எனும் இயற்கையிலிருந்து தத்துவங்கள் என்ற கருவிகள் தோன்றுகின்றன.
ஞானிகளும் முனிவர்களும் கடைப்பிடிக்கும் கோட்பாடுகளின்படி (அத்வைதம், த்வைதம், சைவ சித்தாந்தம் போன்றவை) இந்த தத்துவங்கள் 24ல் இருந்து 36 வரை உள்ளன. ஆக, முக்குண வெளிப்பாட்டிலிருந்து, படிப்படியாக அண்டப் பரிணாமம், மாயா ஜாலங்களாய் தொடர்கிறது.
1. படைப்பு எனும் இந்த சிருஷ்டிச் செயல்பாட்டில் முதன்மையான தத்துவம் மஹத். உலகளாவிய (சமஷ்டி) நிறையின் (matter) வெளிப்பாட்டை அடக்கிய கருப்பை எனலாம். இருப்பினும் இதனை அண்டத்தின் மொத்த உணர்வு (cosmic intelligence) என்றும் கூறலாம். ஏனெனில் அண்டத்தில் அடங்கிய அனைத்துயிரினங்களிலும் இந்த மஹத் புத்தி வடிவத்தில் உள்ளது. இருப்பினும் அது நிறையாகத்தான் இருக்கின்றது. காரணமும் விளைவும் தெளிவாக வெளிப்படாத நிலையில் இருந்து (அவ்யக்தா) மஹத் தத்வா முதலில் வெளிவருகிறது, நிலத்திலுள்ள விதையிலிருந்து முளை வெளிவருவது போல. ஆக, பரம்பொருள் என்பது, நீக்கமற நிறைந்த வேறுபாடுகள் இல்லா, வெளிப்படா தூய இருப்பும் தூய உணர்வும். மாயை என்பது நீக்கமற நிறைந்து வேறுபாடுகள் இல்லா வெளிப்படும் உணர்வு. நீக்கமற நிறைந்து வேறுபாடுகளுடன், வெளிப்படுவது மஹத் எனும் இருப்பும் உணர்வும்.
2. இப்படி வெளிப்பட்ட மஹத் எனும் அனைத்தையும் அறிந்த, எங்கும் நிறைந்த, சர்வ வல்லமையுள்ள படைப்புக் கொள்கை, தன்னைப் பற்றி உணரும் போது, அதாவது, ரஜஸ் எனும் அரச குணம் மஹத்தில் ஆதிக்கம் செலுத்தும் குணமாக இருந்தால், நான் எங்கும் நிறைந்தவன் என்ற அண்டமளாவிய தன்னுணர்வு (சமஷ்டி அஹங்காரம்) வெளிப்படுகிறது. அறியாமை எனும் தமஸ் குண ஆதிக்கம் மஹத்தின் மீதிருந்தால், இதுவே தனிப்பட்ட மட்டத்தில் (வியஷ்டி) சீவனின் தன்னுணர்வாக வெளிப்பட்டு தன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாகக் கருதுகிறது. நான், என்னுடையது என்ற வேறுபடுத்தும் உணர்வாக வெளிப்படுகிறது.
3. மாயையிலிருந்து ஆகாசம் (வெளி), ஆகாசத்திலிருந்து வாயு (காற்று), வாயுவிலிருந்து, தேஜா (நெருப்பு), தேஜாவிலிருந்து, ஆபஹ் (நீர்), “ஆப”த்திலிருந்து, ப்ருத்வி (பூமி) வெளிப்படுகின்றன. விண்வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து கூறுகளும் திரிகுணாத்மிகா எனும் முக்குண மாயையிலிருந்து வெளிப்படுவதால், அவைகளனைத்திலும் முக்குணங்களின் ஆதிக்கம் உள்ளது.
4. அடுத்தது பொறி புலன்களின் (இந்திரியங்களின்) உருவாக்கம். 'இந்திரியா' என்றால் 'பொறி’. இதனை இருவகையாக பிரிக்கலாம். (i) கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற ஐந்து அறிவுப்பொறிகள் (“ஞானேந்திரியங்கள்”)வழியாக ஒளி, ஒலி, சுவாசம், சுவை, உணர்வு என்ற ஐந்து நுண்நிலை புலன்களை (“தன்மாத்திரை” என்பர்)அறிவது. (ii) பேச்சு (வாய்), கைகள், கால்கள், ஆசனவாய் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் என்று நாம் வினைகள் புரிய உதவும் ஐந்து வினைப்பொறிகள் (“கர்மேந்திரியங்கள்”). முன்பு கூறியது போல், நமது மறைகள் ஒவ்வொரு இந்திரியங்களுக்கும் ஒரு கட்டுப்படுத்தும் தெய்வம் அல்லது தேவதையை ஏற்படுத்தியது. இந்த பொறிகளின் உருவாக்கங்களின் செயல்முறைக்கு “பஞ்சீகரனா” என்று பெயர். பஞ்ச பூதங்களான விண்வெளி, காற்று, நெருப்பு, நீர், நிலம் ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து, ஒவ்வொன்றின் ஒரு பாதி நான்கு பகுதிகளாகப் பிரிந்து (அதாவது எட்டில் ஒரு மடங்காக) , பின்னர் ஒவ்வொரு பூதத்திற்கும் அடுத்த நான்கு பூதங்களின் எட்டில் ஒரு பகுதி விநியோகப்படுத்தப்படுகிறது. உதாரணமாக காற்று, நெருப்பு, நீர், பூமி இவை ஒவ்வொன்றும் ஆகாசத்தில் எட்டில் ஒரு பங்கைப் பெறுகின்றன. துணியை நெசவு செய்யும் ஒவ்வொரு உருவாக்கத்தில் பாவு-ஊடு (warp and weft) என்று பிண்ணுவது போல! உதாரணமாக, ஆகாச தத்வத்தின் (விண்வெளி) சத்வ குணத்திலிருந்து, ஷ்ரோத்ரீந்த்ரியா (ஷ்ரோத்ர-இந்திரிய) அதாவது கேட்கும் உறுப்பு (காதுகள்) உருவாக்கப்படுகிறது. ‘ஷ்ரோத்ரா’ என்றால் ஒலி. ஒலியைக் கேட்க, காதுகள் உருவாக்கப்படுகின்றன. ஆகாசத்தின் தரம் சப்தம் அல்லது ஒலி. விண்வெளி என்பது ஒலியை கடத்தும் ஊடகம். ஒலியைக் கேட்பதற்காக, தூய்மையான பகுதியிலிருந்து அதாவது சத்வ குணத்திலிருந்து, காதுகள் உருவாக்கப்பட்டன. ஷ்ரோத்திரத்தின் கட்டுப்படுத்தும் தேவதா திக் அல்லது திசா அல்லது திசைகள் ஆகும். இங்கணம் அனைத்து இந்திரயங்களும் (பொறிகளும்) தன்மாத்தரைகளும் (புலன்களும்) உருவாக்கப்படுகின்றன.
முடிவுரை
இந்த செயல்முறைதனை நான்கே வரிகளில் திருமூலர் எடுத்துரைக்கிறார்.
”மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும் கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த் தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப் பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே”
(திருமந்திரம் – 385)*
பரம்பொருளிடமிருந்து முதலில் வானம் தோன்றியது, வானத்தில் இருந்து காற்று தோன்றியது. காற்று வளர்த்தத் தீயில் இருந்து நீர் தோன்றியது. பிறகு கடினத்தன்மை கொண்ட நிலம் தோன்றியது. இந்தப் பிரபஞ்சம் என்னும் பூவில் உள்ள தேன் தான் படைப்புக்கள் அனைத்தும். அந்த அனைத்துப் படைப்புக்களும் ஐந்து பூதங்களால் ஆனவையே என்கிறார் திருமூலர்.
This write up below is definitely not an exhaustive description of what our scriptures talk about Creation. It is my very limited understanding of the vast literature available in public domain.
The objective is to get a broad idea of the principles involved so that when we take up the study of our scriptures and Sanskrit Slokas, we will have a better comprehension of what they say.
Reader is strongly advised to strictly learn these under the guidance of a Guru if one wants a deep dive in this subject.
What we know so far
1. Our forefathers, the rishis and sages, through deep meditations, focused inward on the "causeless cause", the Ultimate Reality that is responsible for creating this Universe and called that "causeless cause" as "Brahman,"Atma", "Paramatma" etc. They said that "Brahman" is the only pure, omnipresent, indestructible eternal blissful ultimate reality with "existence & consciousness" (science calls these as matter and energy in a materialistic sense).
2. Being eternal, omnipresent and indeterminable because of its absoluteness and infinity, this Supreme and Ultimate Reality determines itself and reveals itself to our consciousness in the universe through the real and fundamental truths of its being which are beyond the universe and yet in it and are the very foundation of its existence.
3. These truths present themselves to our conceptual cognition as the fundamental aspects in which we see and experience the omnipresent Reality like the waves of the sea, the heat of the fire, the fragrance of the flower, the smell of the earth etc. Depending upon one’s progress in spirituality and the level (causal, subtle and gross levels) that one has reached, this is presented/revealed.
If we have to take due cognisance of these manifestations of that Ultimate Reality, we need to understand certain basic principles and requirements. This blog outlines these.
The underlying principles
By observing the behaviour of all living beings and nature, the Rishis and Seers meditated and contemplated deeply to understand the Cosmic processes and the relationship between the various elements of the processes.
Their inward looking study of the cosmic evolution is essentially at three distinct levels viz.,
1. Causal Level, 2. Subtle Level and 3. Gross level
corresponding to their perception of the essential nature of that magician viz., the indescribable eternal omnipresent Brahman, the Universal Intelligent Purusha and the Isvara with definite form and name.
This three-layered contemplative research of the Seers and Saints had the underlying assumptions, which in the absence of any negation whatsoever, becomes the underlying principles:
1. The entire processes of evolution (creation, maintenance and annihilation) are evolving out of the one primordial Absolute Reality which pervades and permeates the whole cosmos. The world form is only a fragment of this divine reality.
2. Creation is considered as a process and not an event. Creation doesn’t mean formation of something out of nothing. By creation, they meant, only the manifestation from a potentially existent in dormant form/Unmanifest form/undifferentiated form. For the purpose of this study we will use both the terms Creation but they essentially means manifestation.
3. Today's scientific thought that matter and energy cannot be created or destroyed (law of conservation of matter and energy) was the basic principle of the thought of our ancestors thousands of years ago. Both of these are results of micro level analysis. The law of conservation of matter and energy was accepted by them long before modern science came.Therefore, the idea of evolution (existence, sustenance and annihilation) is basic to all Indian thought.
At the gross operating level for easy understanding of humans, our rishis, sages and saints identified a Leader/God/Ruler for each of these three processes; Brahma for creation, Vishnu as Narayana for maintenance and sustenance and Shiva as Rudra for destruction/annihilation.
The building blocks
With the above underlying assumptions/principles, their study brings out that for any creation, there are three requirements:
i). The intelligent/efficient cause (Nimitta Kaaran) whose activity makes something and whose inactivity does not make anything.
ii). The material cause (Sadharan Kaaran) or the ‘raw material’ without which nothing can be made.
iii). The common cause (Upadan Kaaran) or the tools/accessories helping in creation.
These three requirements can be seen in a little more detail.
Intelligent Cause (Nimitta Kaaran)
Creation is essentially due to the desire of Brahman to manifest. It is His play. (It is akin to the Big bang theory that says that from a state of singularity, something happened and the singularity manifested into this universe).
In the words of Swami Sivananda “In Brahman there was a Spandan or vibration before the world was projected. This is the Sankalpa of Brahman. He thought or willed:
“Ekoham bahushyami” - I am One, may I become many.
This vibration corresponds to the bulging of the seed within the ground when it is soaked in water. Then the whole world was projected”. This is akin to the swelling of the seed before it germinates into a plant.
Therefore, Brahman is the intelligent cause.
Material cause (Sadharan Kaaran)
The desire of Brahman is the indescribable illusory power. This power of that all pervading eternal pure Existence - Consciousness is called Mula Prakriti. Avyakta, Maya, Pradhana (the chief or first), Gunasamya. Brahman is beginningless and endless. So too Maya; it is also beginningless. It must be noted that māyā is not created, but exists from time immemorial. Nobody knows when was māyā creted and hence it is described as anirvachaniya or indescribable. Māyā is the source of creation, but it is dependent upon Brahman, as it derives the power to act from the mere presence of Brahman.
This primordial non-cognitive force consists of three Gunas (Primordia rerum) viz., Saatvic, Rajas and Tamas (akin to Sentience, Action and Inertia); three basic material modes (qualities) of nature: mode of goodness (Sattva), mode of passion (Rajah) and mode of ignorance (Tamah). (Srimad Bhagavatham 2.5.18.)
This force is in unmanifested state and is hence called Avyakta. Just as the tree exists in the seed in a subtle state, so also this world exists in a seed-state in Avyakta. In the unmanifested/slumbering or latent state (Maha Sushupti), the three Gunas are in a state of equilibrium (Gunasamya). These are in Unmanifest form and can only be understood by the result of their interactions. In the Gunasamya Avastha or the latent state, the three Gunas are in a state of equilibrium. This is the state of Pralaya or Maha-Sushupti. (We will learn about Pralaya in the subsequent blogs/newsletters).
When the Gunas are disturbed, Mula Prakriti is called by the different names as Maya, Avidya, Nature (in English as a near equivalent word) etc. Our scriptures identify this Maya which is incapable of being organized or disorganised by itself in a planned manner and needs an organizer or efficient cause is the Material Cause for the manifestation.
Common cause (Upadan Kaaran)
Common cause includes the eternal time and eternal space.This is true for any creation that happens in world. When we talk about cyclical evolution, our Rishis realised that a principle called time comes attached to it. They then defined “Kala” and broke it down to details. (Refer picture below)
Conclusion
The secret of evolution lies within the organism itself. According to Patanjali, the “urge to evolve” or the desire to be free is the cause of evolution (Yoga Sutras, IV. 2. 3). Therefore, evolution is not caused by blind chance—it is purposeful and has a directing, ruling consciousness. The cause of evolution is the innermost urge of the living organism for the realization of the true nature of the self, which is intrinsically pure, free, and perfect. Involution precedes evolution.
God being intra-cosmic not extra-cosmic, rules the entire cosmic process. He is the soul behind man and the universe, whose subtle presence illuminates our understanding and enables us to unravel the secrets of nature. God is the Supreme Self that brings forth all existence, conscious and unconscious, animate and inanimate, with the help of His maya, which belongs to Him. The unalterable laws of the cosmos are but the expression of the divine energy. As the greatest Lawgiver, God is the source of rule and order.
The Godhead is non-dual but in the relative world the divine expresses itself through different names and forms and may be approached by various paths. The principle of unity in diversity has been the keynote of Hindu thought and life. Formless Brahman conditioned by maya assumes various forms. These forms are like different garments under which Brahman, commonly called God, is always the same.
This unity is not to be confused with uniformity. Awareness of fundamental unity in the Indian mind allows Hindus to understand every being and material object in the universe in terms of its rightful spiritual value in life.
Nature in Vedanta is given a spiritual interpretation, not a mechanistic or materialistic one; nature is not self-evolving, self-preserving, self-destroying. God as the invisible support and essence of all that exists is involved in every aspect of existence.
Can Brahman be both the intelligent and material cause? If it is so, how can sentient beings come out of “Pure Existence”? The spider that spins its web with fluid emitted by itself and then dwells and moves in its own web and finally withdraws it to itself, the manifestations of insentient nails and hairs from a sentient living being like us are classic answers to all these doubts and queries about these principles.
Therefore, it is essential that we have a proper perspective of these before we move forward.
In the next blog we will see the process of evolution.
இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.
நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.
இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரை அறிந்தது
நமது முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் அவர்கள் இருந்த காலகட்டத்திற்கேற்ப, ஆழ்ந்த தியானங்களின் மூலம், "காரணமற்ற காரணத்தில்" கவனம் செலுத்தி உள்நோக்கி சிந்தித்து, அந்த "காரணமற்ற காரணத்தை" "பிரம்மன், பரமன்", "ஆன்மா", “பரம்பொருள்” என்று அழைத்தனர்.
அந்த "பிரம்மன்" என்பது "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் தத்துவம் என்றும் கூறினர்.
நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளும் இருந்து கொண்டு, “இல்லாதது ஒன்றில்லை எல்லாமே நான்” என்று சொல்லாமல் சொல்லி வைத்து, நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக தன்னை வெளிப்படுத்துகிறது என்று முந்தைய பதிவினில் கண்டோம்.
இந்தப் பதிவினில் அந்த தத்துவ வெளிப்பாட்டின் பரிணாமத்தை நாம் அறிந்து அனுபவிப்பதற்கான அடிப்படை கொள்கைகளையும், தேவைகளையும் புரிந்து கொள்ள முயல்வோம்.
அடிப்படைகொள்கைகள்
நமது ஸநாதன தர்மத்தில், அண்டப் பரிணாமத்தைப் பற்றிய உள்நோக்கிய ஆய்வு, அடிப்படையில் மூன்று அடுக்கு நிலைகளில் புரியப்பட்டது. அவைகள் முறையே:
1. அதி உயர் நிலையான “காரண நிலை” ஆய்வு 2. நுண்நிலை ஆய்வு 3. பருநிலை ஆய்வு
இந்த மூன்று நிலை ஆய்வு, முந்தைய பதிவில் கூறியது போல, ஆராய்பவரின் ஆன்மீக சிந்தனை வளர்ச்சியைப் பொறுத்தது.
இந்த மூன்று-அடுக்கு ஆராய்ச்சியானது சில அடிப்படை அனுமானங்களைக் கொண்டிருந்தது. காலப்போக்கில் எந்தவிதமான மறுப்பும் இல்லாத நிலையில் இந்த அனுமானங்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு, அடிப்படைக் கோட்பாடுகளாகியது. அவைகள் முறையே:
1. நமது மறைகள், படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று கட்ட செயல்முறைகளாக உள்ளது பரிணாமம் என்று கூறுகிறது. இந்தப் பரிணாமம், ஆதி அந்தமிலா நீக்கமற நிறைந்த பரம்பொருளுலிருந்தே உருவாகுகிறது. இந்த அண்டமும் அப்படியே. இது உயர்நிலை ஆய்வின் அடிப்படை கோட்பாடு.
2. உருவாக்குதல் எனும் படைத்தல் ஒரு நிகழ்வு அல்ல. இது பரிணாமத்தில் ஒரு செயல்முறை. (Creation is not an event; it is a process of evolution ). உருவாக்கம் என்பது, இல்லாத ஒன்றை இருப்பு உள்ளதாக்குவதில்லை (can’t create something out of nothing) . படைத்தல் என்பது விதையில் அடங்கிய மரம் போல செயலின்றி உறைந்தோ, மரத்தை மறைக்கும் மாமதயானை போல வேறு வடிவிலோ இருப்பாகி உள்ளவற்றை வெளிப்படுத்துவதை மட்டுமே குறிக்கும். ஆக அடிப்படையில் உருவாக்கம்/படைத்தல்/ஆக்கல் என்றெல்லாம் கூறும் போது நாம் கூறுவது வெளிப்பாடைத்தான். இதுபோலத்தான் அழித்தலும் ஒரு செயல்முறையே.
3. பொருளையோ, ஆற்றலையோ ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்று இன்றைய அறிவியல் சிந்தனை (law of conservation of matter and energy) பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்களின் சிந்தனைக்கு அடிப்படை கொள்கையாக இருந்தது. இவையிரண்டும் நுண்நிலை ஆய்வின் முடிவுகள்.
நடைமுறையில், பருநிலை ஆய்வில், எளியோருக்கும் புரியும்படி, ஒவ்வொரு செயல்முறைக்கும் ஒரு அதிபதியை புராணங்கள் வாயிலாக கோடிட்டுக் காட்டினர் நமது ரிஷிகளும், முனிவர்களும், ஞானியர்களும். படைத்தலுக்கு நான்முக கடவுளான பிரம்மா, காத்தலுக்கு நாராயணன் எனும் விஷ்ணு, அழித்தலுக்கு ருத்ரன் எனும் சிவன் என்று நமது புராணங்கள் உரைக்கின்றன.
அடிப்படை தேவைகள்
மேற்கூறிய அடிப்படை அனுமானங்கள்/கொள்கைகள்/கோட்பாடுகளுடன் கூடிய அவர்களின் ஆய்வுகளிலிருந்து, எந்தவொரு உருவாக்கத்திற்கும் (வெளிப்படுத்துதல்) அடிப்படையாக மூன்று தேவைகளை உறுதிப்படுத்துகின்றன. அவைகள்:
1. அறிவு காரணம் - இதனை வடமொழியில் நிமித்த காரணம் என்பர். இது, யாருடைய செயல்பாட்டினால் உருவாக்கம் ஏற்படுகிறதோ, யாருடைய செயலற்ற தன்மையால் உருவாக்கம் ஏதும் இல்லையோ, அதனைக்குறிப்பது. உருவாக்க நாயகன் என்று வேண்டுமானால் இக்காரணத்தை அழைக்கலாம்.
2. பொருள் காரணம் - இதனை வடமொழியில் சாதாரண காரணம் என்பர். இது உருவாக்கத்திற்கு வேண்டிய மூலப்பொருளை குறிப்பது. இந்த மூலப்பொருள் இல்லையென்றால், படைப்பு எனும் வெளிப்பாடு ஏதும் இல்லை.
3. பொது காரணம் - இதனை வடமொழியில் உபாதன காரணம் என்பர். இது உருவாக்கத்திற்கு வேண்டிய கருவிகள், உபரிப்பொருடகளைக் குறிக்கும்.
இந்த மூன்று தேவைகளை, சற்று விரிவாக காணலாம்.
அறிவு காரணம் (நிமித்த காரணம்)
படைப்பு என்பது பரம்பொருளான பிரம்மனின் வெளிப்படுத்த வேண்டும் என்ற விருப்பமே, அறிவு காரணம். எல்லாம் அவன் நடத்தும் நாடகம். அவனின்று ஓர் அணுவும் அசையாது. அறிவியல் விளக்கத்தில் இதனைப் பாரத்தோம் அல்லவா. பேரியக்கத்திற்கு முதலில் அனைத்தும் ஒருமை நிலையில் இருந்து; பின்னர் திடீரென ஏதோ நடந்தது, அண்ட விரிவாக்கம் ஏற்பட்டது என அறிவியல் விளக்குகிறது. அந்த “திடீர் நிகழ்வே” அந்த பரம்பொருளின் இச்சை - ப்ரம்மனின் ஸங்கல்பம். சுவாமி சிவானந்தரின் வார்த்தைகளில், "ஏகோஹம் பஹுஷ்யாமி - ஒருமையாகிய நான் பன்மையாக வேண்டும் என்ற உணர்வலையின் அதிர்வு. அந்த அதிர்வுதான் அறிவு காரணம். நிலத்தடியில் உள்ள விதை, முளைப்பதற்குமுன் அடையும் வீக்கத்திற்கு ஒப்பு இது”.
பொருட் காரணம் (சாதரண காரணம்)
பிரம்மனின் இச்சையெனும் மேற்கூறிய தூய உணர்வலையின் விவரிக்க இயலா மாயையான சக்தி - இதனை மூலப்ரக்ருதி, அவ்யக்தா, மாயா, குணஸம்யா என்றெல்லாம் வடமொழியில் கூறுவர். மிகப்பழமையான இந்த அறிவாற்றல் அல்லாத சக்தி, மூன்று குணங்களைக் கொண்டது - சாத்விக, ரஜ, தாமஸ குணங்கள் (உணர்வு, செயல் மற்றும் செயலற்ற தன்மைக்கு ஒத்தவை); நற்குணம், அரச குணம், அறியாமை/மடமை குணம் என்றும் கூறலாம்.
இந்த முக்குண மாயை சூட்சும நிலையில் விதையில் அடங்கிய மரத்திற்கு ஒப்பியது. இதனைத்தான் அவ்யக்தம் எனும் வடமொழிச் சொல் என்கிறது. ஆழ்உறக்க (ஸுஷுப்தி என்பர் சமஸ்க்ருதத்தில்) நிலையில் அசைவிலா/அதிர்விலா நிலைதனில் மேற்கூறிய மூன்று குணங்களும் சமநிலையில் இருக்கும். இந்நிலையை ப்ரளய நிலை என்றும் கூறுவர். (ப்ரளயம் என்பதை அடுத்து வரும் பதிவில் காணலாம்) அதனால் தான், மாயையை குண ஸம்யதா என்று ஸமஸ்க்ருதத்தில் கூறுவர்.
இந்த மாயை எப்போது உருவாக்கப்பட்டது என்று யாருக்கும் தெரியாது, எனவே அது அநிர்வச்சனியம் அல்லது விவரிக்க முடியாதது என்றும் கூறுவர். பரம்பொருளைப் போல மாயையும் ஆதி அந்தமில்லாதது. அறிவிலா ஜடமான இந்த மாயை உருவாக்கப்பட்டதல்ல. பரம்பொருளைச் சார்ந்து இருப்பது. அதற்கென்று அறிவாற்றல் ஏதும் இல்லை. பரம்பொருளை அறியும் மெய்யறிவு கிட்டினால், மாயை மறைந்து விடும் என்றெல்லாம் ஆய்ந்து கண்ட நமது ரிஷிகள, இந்த மாயைதான் பொருட் காரணம் என்று தமது ஆய்வில் கண்டனர்.
பொது காரணம் (உபாதன காரணம்)
பொது காரணம் என்பது இடம், காலம் இவற்றை உள்ளடக்கியது. இது அழியா இடம், காலத்தைக் (eternal space and eternal time) குறிக்கும். உலகில் நடக்கும் எந்தவொரு படைப்புக்கும் இது பொருந்தும். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற செயல்முறைகளின் சுழற்சியே பரிணாமம் என்று ஆய்ந்து அறிந்த நமது ரிஷிகள், சுழற்சி பரிணாமத்தைப் பற்றி நாம் பேசும்போது, அழியா இடம், காலம் என்ற கொள்கை அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தார்கள். அவர்கள் பின்னர் "காலம்" என்பதை வரையறுத்து அதனை விவரித்தனர். அண்டப்பரிணாமத்தை பிரம்மாவின் ஆயுட்காலத்துடன் இணைத்தனர்.
(கீழே உள்ள படங்களைப் பார்க்கவும்)
காலமும் நேரமும்
முடிவுரை
அண்டப் பரிணாமத்தின் ரகசியம் அதனுள் வாழும் உயிரினங்களுக்குள்ளேயே உள்ளது. பதஞ்சலியின் கூற்றுப்படி, "பரிணாமம் வேண்டும்" என்ற இச்சையே பரிணாம வளர்ச்சிக்குக் காரணம் (யோக சூத்திரங்கள், IV. 2. 3). பருநிலையில், நடைமுறையில், இதனை தடைகளனைத்திலுமிருந்து விடுதலை பெற்று, முழு ஆற்றலையும் உணர வேண்டும் என்ற நமது இச்சைக்கு ஒப்பிடலாம். எனவே, பரிணாமம் என்பது ஒரு குருட்டுத்தனமான தற்செயலால் ஏற்படவில்லை - உள்ளார்ந்த தூய்மையான, சுதந்திரமான மற்றும் முழுமையான சுயத்தின் உண்மையான தன்மையை உணர, உயிரினத்தின் உள்ளார்ந்த தூண்டுதலே பரிணாம வளர்ச்சியின் மூலம் என்று கொள்ளலாம்.
கோழிக்குள் முட்டை வைத்து, முட்டைக்குள் கோழி வைத்து, பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆளும் பரம்பொருளே அந்த உள்ளணுர்வுத் தூண்டுதல். அந்தப் பரம்பொருளின் தூய இருப்பே அண்டத்தை ஒளிர வைக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை நமது சிந்தனை மற்றும் வாழ்வின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. உருவமற்ற பிரம்மன் மாயையினால் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது.
நமது வேதாந்தத்தில் இயற்கைக்கு ஒரு ஆன்மீக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு பொருள்சார்ந்த விளக்கம் அல்ல. இயற்கையானது தன்னைத்தானே பரிணாமம் செய்துகொள்வது; அந்த பரிணாமத்தின் சாராம்சமாகவும் ஆதாரமாக இருப்பதும் ஆதி அந்தமிலா, நீக்கமற நிறை பரம்பொருளே என நமது மறைகள் கூறுகின்றன. இயற்கை அன்னை அந்தப் பரம்பொருளின் வெளிப்பாடு. கடலின் அலைகள், நெருப்பின் வெப்பம், மலரின் மணம், மண்ணின் வாசனை என வாழ்வில் நமக்கு அந்த வெளிப்பாடுகள் பல வகைகளில் இருக்கும்.
தன் இச்சைப்படி தன்னுள் இருக்கும் திரவத்தைக்கொண்டு அழகிய வலைதனைப்பிண்ணி, தன்னிச்சைப்படி அதனை தன்னுள்ளே இழுத்துக் கொள்ளும் சிலந்திப்பூச்சி போல, உயிரும் உணர்வும் கொண்ட மானிடரின் உடலில் உயிரற்ற ஜடப்பொருட்களான நகங்களும் முடிகளும் வளர்வது போல, அண்டத்தில் எண்ணற்ற வெளிப்பாடுகள் அந்த பரம்பொருளின் அருளினால்.
இந்த அடிப்படை கோட்பாட்டினை நாம் நன்கு உணர்ந்தால்தான், அண்டப்பரிணாமத்தை நாம் அறிந்துணர முடியும்.
அடுத்து வரும் பதிவுகளில், அண்டப்பரிணாம செயல்முறைகளை காணலாம்.
இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.
நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.
இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களின் சாரத்தை ஒரே பதிவில் எழுதுவது, வேதாந்தத்தில் ஆரம்ப நிலை மாணவனாக உள்ள எனக்கு இயலாத காரணம். ஆகையினால் இதனை பல சிறு பகுதிகளாகப் பிரித்து பதிவுகளை வெளியிடுகிறேன் உங்கள் அனுமதியுடன். இதோ முதல் பகுதி.
மந்திரவாதி
அறிவியல் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக, முந்தைய வலைப்பதிவில், உருவாக்கப்பட வேண்டிய அவசியமின்றி படைப்பை உருவாக்கும் "மந்திரவாதி" யார் என்பதை புரிந்துகொள்ள முயன்றோம். அந்த முயற்சியில் முக்கிய கேள்விக்கு விடை ஒன்றும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பேரியக்கமெனும் “பிக் பேங்கிற்கு” (Big Bang) முன்பான "காரணமற்ற காரணத்தை" அறிவியல் இன்றும் அறியவும் இல்லை, அதற்கேற்ற விளக்கமும் தரவில்லை.
ஆகையினாலே, பொறி புலன்களால் அறியும் காரணமில்லாமல் எந்தக் காரியமில்லை (விளைவு) என்ற கோட்பாடு ஒன்றில் மட்டுமேலேயான திடமான நம்பிக்கை, பொருள் சார்ந்த பொறி புலன் துணைகொண்ட புற நோக்கு என்று இரண்டு முக்கிய வரையறுகளுக்குள் உட்பட்ட அமைப்புகளுக்கு வெளியே நாம் பார்க்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொண்டோம்; ஏனெனில் அந்த காரண - விளைவு அமைப்புகளுக்குள், "காரணமற்ற காரணம்" என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. மேலும், நிறை -ஆற்றல் (matter & energy), அதன் விளைவுகள் இவைகளைக் கடந்து இருப்பு-உணர்வு (existence & consciousness) என்ற இரண்டையும் கொண்ட "ஏதாவது" ஒன்றை நாம் அறிய வேண்டும் என்றும்முந்தைய பதிவில் கண்டோம். ஆக, அறிவியலுக்கு அப்பால் நாம் பார்க்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
நமது முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் அவர்கள் இருந்த காலகட்டத்திற்கேற்ப, பொறி புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆழ்ந்த தியானங்களின் மூலம், விரிவாக இயற்கையின் இயல்பினை அறிந்து, நாம் புரியும் வினைகளையும் வினைப்பலன்களையும் தரவுகளாக கொண்டு, அந்த "காரணமற்ற காரணத்தில்" கவனம் செலுத்தி உள்நோக்கி சிந்தித்து, அதற்கேற்றபடி வாழ்ந்து, வழிமுறைகளையும், அனுபவங்களையும் தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தனர்.
அந்த "காரணமற்ற காரணத்தை" அவர்கள் "பிரம்மன், பரமன்", "ஆன்மா", “பரம்பொருள்” என்று அழைத்தனர். அந்த "பிரம்மன்" என்பது "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் தத்துவம் என்று கூறினர்.
அந்த தத்துவத்தை பொருள் சாரந்த பொறி புலன்களால் விவரிக்க இயலாது. எனவே, நமது மறைகள் அந்த தத்துவத்தை, இது இல்லை, இது இல்லை, இவைகள் அல்ல என்றெல்லாம் விவரிக்கின்றன.
“கண்ணுக்குத் தெரியாதது, சிந்திக்க முடியாதது, பரம்பரை இல்லாதது, எந்த வகைப்பாடும் இல்லாதது (வர்ணம்), கண்கள் மற்றும் காதுகள் இல்லாதது, கைகள் மற்றும் கால்கள் இல்லாதது, மற்றும் நித்தியமானது, எங்கும் நிறைந்தது, மிகவும் நுட்பமானது மற்றும் அழியாதது” என்கிறது முண்டக உபநிஷதம்
முதலும் முடிவும் இல்லா நீக்கமற நிறைந்த அந்த நித்ய உண்மையே அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. எனவே, அந்த இறுதி உண்மை எனும் பிரம்மன்/பரம் பொருளை - “தத் ஏகம்” - வகைப்படுத்த முடியாது.
அது குணங்கள் இல்லாதது, எதிர்மறையானவை கூட. நம்மைக் கடந்தும் நமக்கு உள்ளும் உறைவது. எந்தவொரு விளக்கத்தையும் அதற்குப் பயன்படுத்துவது, வரம்பற்றதைக் கட்டுப்படுத்துவதாகும். “விலையில்லா சொல்லாத சொல்” அது.
அந்தப் பரம்பொருளே மந்திரவாதி.
மந்திரக் காட்சி
பரம்பொருளான பிரம்மம் என்பது தூய பேரின்ப நிலையில், எல்லாவற்றிலும் தன்னை அறியும் தூய இருப்பாய், தூய உணர்வாய் உறைந்திருப்பது. ஆயினும்கூட, படைப்பிற்கு முந்தையதாகக் கருதப்படும் அத்தகைய நிலையை விவரிக்க முயன்ற பிறகு, வேதங்கள் இவை அனைத்தும் ஒரு யூகமே என்று தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறது; ஏனென்றால் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை உறுதியாகக் கூற முடியாது.
அப்படிப்பட்ட முடிவிலா முழுமையை, மனித அறிவு கொண்டு தீர்மானிக்க முடியாது என்றாலும், அந்த உன்னத பரம்பொருள் மனிதர்களின் உள்ளுணர்விலே தன்னைத்தானே தீர்மானிக்கின்றது; அதாவது தன்னைத் தானே வெளிப்படுத்துகிறது. இதுதான் புரியா புதிராக இருக்கும் மந்திரக் காட்சி.
எப்படி தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது பரம்பொருள் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா.
நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக முன்வைத்து தன்னை வெளிப்படித்திக்கொள்கிறது அந்த பரப்ரம்மம்.
அதாவது கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளில் “நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளும் இருந்து கொண்டு, கோழிக்குள் முட்டையை வைத்து, முட்டைக்குள் கோழியை வைத்து, சிறு விதையில் பெரு தருவினை வைத்து, இல்லாதது ஒன்றில்லை எல்லாமே நான் என்று சொல்லாமல் சொல்லி வைத்து” நமக்கு அந்த தத்துவத்தைப் புரிய வைக்கிறது.
ஆன்மீகத்தில் நாம் கண்டு அனுபவிக்கும் நிலையைப் பொறுத்து நமக்கு நிர்குணப் பரப்ரம்மனெனும் பரம்பொருளாகவோ, சகுணப்ரம்மனெனும் ஈசனாகவோ, உற்ற தேகத்து உயிரான சீவனாகவோ, உயிரை மேவிய உடலாகவோ வெளிப்படுகிறது.
முடிவுரை
இப்படி காட்சிகள் பல கொடுக்கும் அத்தத்துவம்தான் இவ்வுலகை ஆளும் மந்திரவாதி. அதனைத்தான் நாம் கடவுள் என்கிறோம். அதனைத்தான் நாராயண பட்டத்ரி ஶ்ரீ குருவாயூரப்பன் வடிவிலே காண்கிறார்.
எனவே நாராயணீயத்தில் ஶ்ரீ குருவாயுரப்பன் என்று நாராயண பட்டத்ரி உரைக்கும் பொழுது, அது ஆதி அந்தமிலா பேரின்ப நிலையில் நீக்கமற நிறைந்திருக்கும் தூய உணர்வினைக் குறிக்கும் என்பதை மனதில் நாம் நிலைத்திட வேண்டும்.
இந்த தத்துவத்தைத்தான் ஆதிசங்கரர், ஶ்ரீதட்சிணாமூர்த்தி வடிவில் கண்டு கீழ்காணும் ஸ்லோகத்தில் எடுத்துரைத்தார்
தட்சிணாமூரத்தி ஸ்தோத்திரம் – 2
இனி அந்த மந்திரவாதி புரியும் மாயாஜாலக் காட்சிகளை நாம் அடுத்த பதிவுகளில் காணலாம்
நாராயண பட்டத்திரி நாராயணீயத்தை ஶ்ரீ குருவாயூரப்பனின் மகிமையுடன் தொடங்குகிறார் தசகம் 1ல். அதனில் அவர் தூய இருப்பு, தூய உணர்வு மற்றும் தூய பேரின்பம் (சத், சித், ஆனந்தம்) ஆகியவற்றின் உருவான பிரம்மன் எனப்படும் இறுதி யதார்த்தமே அந்த குருவாயூரப்பன் என்று ஒரு அடையாளத்தை நிறுவுகிறார்.
அடுத்த தசகம் 2ல், அந்த பரப்பரம்மமாகிய சத் சித் ஆனந்தத்தை உணர வேண்டும் என்ற ஒன்றினையே குறிக்கோளாக வைத்து வாழ நினைக்கும் அடியார்களுக்கு ஶ்ரீ குருவாயூரப்பனின் (இறைவனின்) வசீகரமான வடிவத்தையும், பக்தி மார்க்கத்தின் மேன்மையையும் வெளிப்படுத்துகிறார்.
இதனை தொடரந்து, தசகம் 3-ல் பட்டத்ரி அப்படி வாழ்ந்திடும் ஒரு பக்தரின் குணாதிசயங்களை எடுத்துரைக்கிறார்.
இங்கனம் படிப்படியாக பக்தர்களின் மனதை பக்குவப்படுத்தியபின், நாராயண பட்டத்திரி தசகம் 4ல், ஶ்ரீ குருவாயூரப்பன் மீது நமது மனதை நிலைநிறுத்துவதற்கான நுட்பங்களை அஷ்டாங்க யோகத்தின் மூலம் (எட்டுவிதமான ஒழுக்க முறைகள்) எடுத்துரைக்கிறார்.
அடுத்து வரும் தசகம் 5ல், ஸ்ரீ நாராயண பட்டத்திரி விசாரணையை அண்டம் (பிரபஞ்சம்) எனும் உயர்நிலைக்கு எடுத்துச்செல்கிறார். ஆன்மீகத்தில் முன்னேற்றம் காணும் போது அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது எனும் உணர்வினை நமக்கு ஊட்டிட, அண்டம் உருவானது எப்படி என்பதை விவரிக்கிறார்.
அண்டமும் அதன் பரிமாணமும்
அண்டம் என்றவுடன் தெளிவான மற்றும் மூடுபனி இல்லாத நாளில், சந்தி வேளையில் அடிவானத்தை தொடர்ந்து அண்ணார்ந்து பார்த்தால், நாம் பிரகாசமான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களைக் காணலாம். அப்படி காணும் போது நமது சிந்தனை எங்கு செல்கிறது?
அடேயப்பா! என்ன அருமை! என்ன படைப்பு! எப்படி இது சாத்தியம்? என்றெல்லாம் வியக்கிறோம் அல்லவா.
1. அண்டம் என்பது என்ன? ஏன் ஒன்றுமில்லை என்பதை விட இருப்பு என்ற ஒன்று இருக்கிறது?
2. அண்டமும் அண்டத்தில் காணும் இவைகளனைத்தும் எவ்வாறு தோன்றின?
3. இந்த செயல்பாட்டில் ஒரு ஒழுங்கு இருக்கிறதா? அல்லது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாக இயங்குகின்றனவா?
இப்படியெல்லாம் வியந்து, நமது எண்ணப் பறவைதனை சிறகடித்துப் பறக்க விடுகின்றோமல்லவா!
அப்படி நாம் பிரபஞ்சத்தை உற்றுப் பார்க்கும்போதும், சிந்திக்கும்போதும், இந்த அற்புதமான பிரபஞ்சத்தை எல்லையற்ற நுண்ணறிவு ஒன்று ஆளுகிறது என்பதை புரிந்து கொள்ள நமது பகுத்தறிவுள்ள மனதிற்கு கடினமாக இருக்காது.
இதைத்தான் நமது ரிஷிகள் ஆழ்ந்து கவனித்து ஆய்வு செய்தனர். இதைத்தான் நாராயண பட்டத்திரி தசகம் 5ல் கோடிட்டுக் காட்டுகிறார்.
தேவையான மனப்பான்மை
தசகம் 5-ஐப் பற்றிக் கூறுவதற்கு முன், ஸ்லோகங்களைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வதற்கு, நமது ரிஷிகளால் நமது மறைகளில் விளக்கப்பட்டுள்ள பிரபஞ்ச பரிணாமத்தைப் (cosmic evolution) பற்றிய ஒரு கண்ணோட்டம் இன்றியமையாதது.
இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் அதி உயர் கணனிகள் (super computers), நவீன அறிவியல் சாதனங்கள் மற்றும் கருவிகள் எதுவும் நம் முன்னோர்களிடம் இருக்கவில்லை என்பதை நாம் மனதில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்த தரவுகள் (data) குறைவு. எனினும் ஆண்டவன், அண்டம், பிண்டம் எனும் மூன்று தத்துவங்களுக்கிடையேயான உறவுகளைப் புரிந்துகொள்வதில் திடமான மன உறுதியும் “எள்ளத் தனைப்பொழுதும் பயனின்றியிராது, நெஞ்சினிலே நீதியும் நேர் கொண்ட பார்வையுடன், நம்புவதே வழி என்ற மறைதன்னை நம்பி” இறைபக்தியுடன் தன் தூய மனமெனும் அதி உயர் கணினி ஒன்றை மட்டுமே பயன்படுத்தி அண்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை புராணக் கதைகளின் வடிவத்தில் விளக்கினர் நமது ரிஷிகளும் முனிவர்களும்.
பொறி புலன் சார்ந்த இன்றைய விஞ்ஞான காலக்கட்டத்தில் பொருள் சார்ந்த ஆராய்ச்சிகளின் வழியாக கண்டவைகள் மட்டுமே உண்மை எனும் தற்போதைய படைப்புக் கோட்பாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை நமக்கு இருப்பதால், இந்த புராணக் கதைகளை மூடநம்பிக்கை என்று நாம் புறக்கணிப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.அந்த ரீதியில் இந்த கதைகளை எடுத்துக் கொண்டால் அவைகளில் எந்த அர்த்தமும் இல்லை என்று தோன்றும்.
இருப்பினும் திறந்த மனமுடன், முன்முடிவுகள் எதுவுமில்லாமல் (open mind without preconceived notions) நாம் நமது பிண்டத்தை உள்நோக்கி ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இதன் பின்னணியில் உள்ள தத்துவத்தை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.
இன்றைய விஞ்ஞானிகள் கணித சமன்பாடுகள், உருவகங்கள், மாதிரிகள் (equations, simulations, models) போன்ற கருவிகளைப் பயன்படுத்தி அண்டத்தை ஆய்வு செய்ய புறநோக்கு வழிமுறைகளைப் பயன்படுத்தி பொறி, புலன், பொருள் சார்ந்த ஆய்வுகளை (materialistic research) நடத்துகின்றனர்.
நமது முன்னோர்கள், நமக்குள் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், புராணக் கதைகள் மூலம் வெளியில் நடப்பதை மாதிரிகளாகப் புரிந்துகொள்வதற்கும் அஷ்ட யோகம், தியானம் முதலிய உள்நோக்கிய வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆன்மீக ஆய்வுகளைப் புரிந்தனர். அவ்வளவுதான் வித்தியாசம்.
இப்படி வேறுபட்ட ஆராய்வுகளின் மூலம் அறிய எண்ணும் ஆண்டவனை (ஆண்டவனின் வெளிப்பாட்டை) நாம் அறிவது என்பது ஒரு முடிவிலி. அதனால் தான் இரண்டு வழிமுறைகளும் வெறும் அனுமானங்களே. நமக்கு தேவை நேரடி சுய உணர்வு. அப்படி இருக்கையில், ஒன்றை மட்டும் வெறும் கட்டுக்கதைகள் என்றும் உண்மை அல்ல என்றும், மற்றொன்றை சரி என்றும் உண்மை என்றும் கருதுவது நமது மடமையைக் குறிக்கும்.
இனி வருவது
அடுத்த சில வலைப்பதிவுகளில், அண்ட பரிணாமத்தின் விஞ்ஞான மற்றும் ஆன்மீக முன்னோக்குகளின் கண்ணோட்டத்தை அறிய முற்படுவோம். இது நாராயணீயம் தசகம் 5 ஐ நன்கு புரிந்துகொள்ள நமக்கு உதவும்.
இந்த வலைப்பதிவுகள் எனது மற்றொரு வலைதளப் பதிவிலும் (substack -சப்ஸ்டாக்) ஆங்கில செய்திமடல் வடிவில் (newsletter) வெளிவரும். அதன் இணைப்பு இதோ.
எனது கோவை நண்பர் திரு. பிரபு அவர்கள், ஒரு அற்புதமான ஒளிப்பதிவில், காலத்தை பற்றி நமது முன்னோர்களின் ஆய்வுகளை விளக்கியுள்ளார். நமது முன்னோர்கள, கண்ணிமைக்கும் நேரத்திலிருந்து ஓராண்டு காலம் வரை பதினான்கு கூறுகளாகவும், ஒரு நாளைச் ‘சிறு பொழுது’ என்று ஆறு கூறாகவும், ஓராண்டைப் ‘பெரும்பொழுது’ எனப் பெயரிட்டு ஆறு வகையாகவும் பகுத்தனர். (மேலே உள்ள அட்டவனையைப் பார்க்கவும்).
வைகறை, விடியல், நன்பகல், மாலை, எற்பாடு, யாமம் என்று ஒரு நாளைப் பகுத்துரைத்தனர். கார் காலம், கூதிர்(குளிர்) காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் என்று ஆண்டினை ஆறு வகைக் காலமாகப் பகுத்துரைத்தனர். இக்காலத்தை அடிப்படையாக வைத்து நமது முன்னோர்கள் பழமொழிகள் பலவற்றைக் கூறி அதன்வழி நமது பண்பாட்டை விளக்கியுள்ளனர்.
1. காலமும் அலையும் காத்திருக்காது. 2. காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது. 3. காலம் போற்று.
அதனால் காலம் அறிந்து செயல்பட்டு நாம் வாழ்ந்தால் வாழ்வில் உயரலாம். காலத்தை வீணாக்காது வாழ்தல் வேண்டும். காலத்தைத் தொலைத்து விட்டால் அதனைத் திரும்பப் பெற முடியாது. வாய்ப்பு என்பது எல்லோருக்கும் வரும் அதனை வீணடிக்காது பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வாழ்வியல் நன்னெறியை இப்பழமொழிகள் நமக்கு வழங்குகின்றன
இதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இருப்பினும் நாம் ஒவ்வொரு நாளும் என்ன செய்கிறோம்? இதோ! 2009-2016 வருடங்களில், உலகமெங்கிலும் உள்ள 15-64 வயது மனிதர்களின் வேலை அட்டைகளின் ஆதாரத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணிப்பின் புள்ளி விவரம்
OurWorldinData
வேலை நேரம் (அலுவல், வீட்டு வேலைகள்), உறங்கும் நேரம், உண்ணும் நேரம், ஓய்வு (தொலைக்காட்சி, நண்பர்களுடன், மற்றும் இதர நேரம்) என்று, நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் 1440 நிமிடங்களில் 80-90% இந்த நான்கு வகை நேரங்களில் செலவிடுகிறோம். நமக்கென்று (நம்மை நாமே அறிந்து கொள்ள, பரம்பொருளை அறிந்திட) நேரமே இல்லை நமக்கு. என்ன ஒரு பரிதாபமான நிலை!
முழு நாள் எப்படி கழிகிறது என்பது கூட நமக்குத் தெரிவதில்லை.. வார இறுதி, மாத இறுதி, ஆண்டு இறுதி மற்றும் விடுமுறை நாட்களுக்காக நாம் காத்திருக்கிறோம். நம்மை அறியாமலே காலம் கடந்து சென்று கொண்டே இருக்கிறது. ஆதி சங்கரர் முதலாவது ஸ்லோகத்தில் கூறியபடி விதித்திட்ட வேளை (ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே) ஒரு இடி போல் வரும்போது, “அய்யகோ! நான் என்ன செய்தேன். எனக்கு ஏன் இப்படி?” என்று புலம்பும் வேளையிலும் கூட, ஆசை அலைகள் ஓய்வதில்லை நமக்கு. இது தான் யதார்த்தம்.
இதைத்தான் ஆதிசங்கரர் இந்த அழகான ஸ்லோகம் 12ல் வெளிப்படுத்துகிறார். இந்த ஸ்லோகத்தை ஆராய்வோம்.
சமஸ்க்ருத ஸ்லோகம்
दिनयामिन्यौ सायं प्रात:
शिशिरवसन्तौ पुनरायात: ।
काल: क्रीडति गछत्यायु
स्तदपि न मुञ्चत्याशावायु: ॥
Adi Sankara
தமிழ் ஒலிபெயர்ப்பு
தி3னயா மின்யௌ ஸாயம் ப்ராதஹ
ஷிஷிர வசந்தௌ புனரா யாதஹ |
காலஹ் கிரீட3தி க3ச்சத் யாயுஹு
தத3பிந முஞ்சத் யாஷா வாயுஹு ||
தமிழ் மொழிபெயர்ப்பு
பகலும் இரவும் மாலையும் காலையும்
பனியும் வசந்தமும் மாறிடும் என்றும்
காலத்தின் ஆட்டத்தில் ஆயுளும் முடியும்
ஆசைக் காற்று நீங்கா தெனினும்
சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள்
दिनयामिन्यौ - தி3னயா மின்யௌ - பகலும் இரவும் सायं - ஸாயம் - மாலை प्रात: - ப்ராதஹ - காலை शिशिरवसन्तौ - ஷிஷிர வசந்தௌ - பனியும் வசந்தமும் पुनरायात: - புனரா யாதஹ - மறுபடியும் வரும் काल: - காலஹ் - காலம் क्रीडति - கிரீட3தி - விளையாடுகிறது गछत्यायु - க3ச்சத் யாயுஹு - செல்லும் (குறையும்) ஆயுள் तदपि - தத3பி - இருப்பினும் न मुञ्चत् - ந முஞ்சத் - இல்லை விடுப்பு याशावायु: - யாஷா வாயுஹு - அவாவின் காற்றிலிருந்து
விளக்கவுரை
நேரடி பொருள்
காலை, மாலை, இரவு என்று காலச் சக்கரம் விரைந்தோடி விளையாடும்; பருவமும் மாறி, முதுமையும் படரும். இருந்தும் ஆசைக்காற்றிலிருந்து இல்லை விடுப்பு.
விளக்கம்
சுவாமி சின்மயானந்தாவின் அருமையான விளக்கம்
இரவில், தானே சிதைந்து முடியத்தான், பகல் பிறக்கிறது. மறுநாள் பகல் மலருவதற்காகத்தான், இரவு இறக்கிறது. அந்த விடியல் வீரியத்துடனும் வெப்பத்துடனும் வளர்ந்து நண்பகலாக இருக்கும், ஆனால் விரைவில் மறைந்து மென்மையான சாயுங்காலமாக மாறும். இந்த நிகழ்வுகளின் சக்கரத்தில், மாதங்கள் சீராக நகர்கின்றன, அதன் மென்மையான கால்களின் அமைதியான அணிவகுப்பில், காலத்தின் தவிர்க்கமுடியாத வெள்ளம் ஆண்டுகளின் அலைகளாக உருண்டு, அதன் இடைவிடாத வலிமைக்கு முன்னால் அனைத்தையும் துடைக்கிறது. இதனை வியந்து, மௌனத்தில் அமைதியாக இருக்கும் நம் வயது, சேறும் சகதியுமான கல்லறைக்குள் உணரப்படாமல் நழுவி நுழைகிறது. காலச் சக்கரத்தில், எது எதிர்காலமாக இருந்ததோ அதுவே நிகழ்காலமாக மாறி, அதுவே கடந்த காலத்தின் முடிவில்லாத கடலில் சேர உருண்டோடுகிறது. காலம் ஒருபோதும் நிற்காது, எந்த நிபந்தனைக்காகவும் அல்லது எந்த நபருக்காகவும்!
மனிதன், தனது 'கடந்த' கால நினைவுகளால், தனது நிகழ் காலத்திற்கு தடுப்புகளை வைத்து, , அன்றாட வாழ்வின் களிப்பால் அத்தடுப்புகளை எரிக்கிறான். அதனால் அவனுள் எழும் புகைகள் அவனது நோக்கை மங்கலாக்கி, அவனது வாழ்க்கையை எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் கவலைகளால் கசக்க வைக்கிறது. நாம் இவ்வாறு நமது முடிவில்லாத முயற்சிகளால் நம்மை நாமே வீணடித்துக் கொள்ளும்போது, காலத்தின் தவிர்க்கமுடியாத சுழற்றத்தில், நமது நம்பிக்கைகளும், திட்டங்களும் தோல்வியுற்று அழிகின்றன.
வாழ்க்கை, காலத்தின் கருணையில் உள்ளது. இதை அறியாமல், உடைமைகளப் பெற்று, பெருக்கி, நம்பிக்கையிடன் மகிழ்ந்து வாழ, மனிதன் புலன்களை அனுபவிக்க ஆசைப்படுகிறான், பாடுபடுகிறான், வியர்வை சிந்துகிறான், முடிவில்லாமல் உழைக்கிறான். ஒரு நொடியில் மரணம், அவனிடமிருந்து அனைத்தையும் பறித்து விடுகிறது. அனைத்தையும் இங்கேயே விட்டு விட்டுச் செல்லும் கட்டாயத்தில் இருக்கிறான். ஆசைகள் நிறைந்த, சுயநலம் மிகுந்த வாழ்வில் பெறப்பட்ட வலிமிகுந்த பதிவுகளுடன் (வினைப்பலன்கள்), துன்பகரமாக உயிரினம் வெளியேறுகிறது. எவ்வளவு வருத்தம்! உண்மையில், எவ்வளவு சோகம்!
தனக்குப் பிரியமான தெய்வீகமான கணவன் இராமன் மீதான எல்லையற்ற அன்பைக் காட்டிலும், தற்போதைக்கு, விரைந்தோடும், பொன் மான் மீதான ஆசையே அதிக சக்தி வாய்ந்ததாகத் தோன்றுகிறது. வாழ்வில், மாயையின் விளையாட்டு இதுதான்.
காட்டில் ஒரு மனிதனை புலி துரத்துகிறது. கிணற்றில் விழுகிறான். கிணற்றின் நடுவழியில் உள்ள ஒரு கிளையில் சிக்கிக் கொண்டான். அவன் சிறிது நழுவினால், விடமுள்ள பாம்புகள் நீந்திக் கொண்டிருக்கும் கீழே உள்ள தண்ணீரில் வீழ்வான். புலி மேலிருந்து அவனை அச்சுறுத்தும். அப்போதுதான் அந்த மனிதனை தேனீக்கள் கொட்டுகின்றன. கிணற்றுப் பொந்தில் வசிக்கும் எலிகள், அந்த மனிதன் பற்றிக்கொண்டிருக்கும் கொடியை கடிப்பதில் மும்முரமாக இருக்கின்றன. ஒரு கரடி வந்து கிணற்றின் மேல் இருக்கும் மரத்திலுள்ள தேன் கூட்டை கலைத்து தேனை உண்ண முயல்கிறது. மேலே உள்ள தேன் கூட்டிலிருந்து ஒரு துளி தேன் அவரது முகத்தில் வடிகிறது. இந்த ஆபத்தான நிலையில், ஒவ்வொரு திருப்பத்திலும் ஆபத்துடன் இருக்கும் மனிதன், தனது எல்லா ஆபத்துகளையும் மறந்து, அந்த தேனை சுவைக்க தன் நாக்கை நீட்டுகிறான்! உலக வாழ்க்கையில் நாம் தேடும் திருப்தியை இது குறிக்கிறது. பாம்புகள் என்பது ஒருவரின் பிணைப்புகள் மற்றும் பிணைப்புகள் அல்லது பொருள்களுடனான இணைப்புகள், கிணறு குடும்ப வாழ்க்கையை குறிக்கிறது. எலிகள் காலத்தைக் குறிக்கின்றன. இந்த எல்லா ஆபத்துகளுக்கும் நடுவில் உள்ள தேன் சிற்றின்ப வாழ்க்கையின் கணநேர இன்பங்களைக் குறிக்கிறது
ஆண்டுகள் கடந்து, வாழும் காலம் சீராக குறைந்தாலும், தெவிட்டா புலன் இன்ப இச்சைகள் மட்டுமே அதிகமாக வளர்கிறது. காலப் போக்கில், உடல் சிதைந்து பலவீனமடைந்து அனுபவிக்கும் வலிமை இல்லாத அளவுக்கு வளர்ந்துவிட்டது; எனினும் மனிதன் புலன் இன்பங்களுக்காக அதிகமாக ஏங்குகிறான். மரணம் பின்னால் ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நோய் நொடி கலந்து, கவலைகள் உந்தும் இந்த துக்க ஊர்வலம், கல்லறை விளிம்பை அடைகிறது. இந்நிலையிலும் மனிதன் அல்லல் நிறைந்த ஆசைகளை விடுவதில்லை. இறப்பதற்குமுன் நிறைவேற்ற வேண்டிய ஆசைகளின் பட்டியல் (ஆங்கிலத்தில் bucket list) நீண்டுகொண்டேதானே இருக்கிறது. எனவே ஆசைகளைக் களைந்து, மனமெனும் மேடையில் நடைபெறும் அவா, பற்று இவைகளின் ஆட்டத்தை நிறுத்தி, அமைதியான மனநிலை பெற்று, நிலையான பேரின்பத்தைத் தரும் மெய்ப்பொருளை நாடு.
முடிவுரை
இந்த ஸ்லோகம் நம்மை எச்சரித்து, புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்தச் சொல்கிறது. பொருளை அனுபவிக்கலாம். ஆனால் பொருட்கள் நம்மை அனுபவிக்க விடக்கூடாது. நமது சுதந்திரத்தைத் தக்கவைத்து, காலப்போக்கில் தன்னிறைவை நம்முள் கண்டறியும் விதத்தில் நாம் நம் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். அதற்கு நாம், நம் இன்பத்திற்காக உலகைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுபட வேண்டும்.
உலகின் எந்தப் பொருளும் அதன் தற்காலிகத் தன்மையால் நிரந்தரமான மகிழ்ச்சியைத் தராது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது நிரந்தரமாக இருக்கிறதோ அதுதான் நிரந்தரமான மகிழ்ச்சியைத் தரும். பரம்பொருள் மட்டுமே நிரந்தரமானது எனவே அது மட்டுமே நிரந்தர மகிழ்ச்சியை அளிக்கும். இதைப் புரிந்துகொண்டு, நாம் தொடர்ந்து சுயமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தால், அதுவே உலகப் பொருட்களின் மீதான மாயையை போக்க ஒரே வழி.
Time and tide wait for no man is an old saying. The wheel of time is constantly moving ahead and waits for no one. The days are passing us by, one after another and the days that have gone by never return. We all know it, don’t we? However how do we do spend our time every day? Here is an interesting statistics:
OurWorldinData
Across the world, we spend the most time working and sleeping; and paid work, housework, leisure, eating and sleeping take together 80-90% of the 1440 minutes that we all have available every day. We hardly have any time for our own self. What a pity!
Here is a time lapse video tailored to depict this state of us.
A dayin our life
We do not know how the whole day passes. We are desperate to wait for the week end, the month end, the year end and the holidays. This goes on and on and on that we do not even heed the passing of each year until suddenly the realisation of “What have I done” comes down like a thunder when the designated time ( Sloka 1 - samprapte sannihite kaale) arrives. Even at that time our desires don’t end. We stil have items to be ticked off in our bucket list.
This is what Adi Sankara brings out in this beautiful Sloka 12. Let us examine this Sloka.
Sanskrit Verse
दिनयामिन्यौ सायं प्रात:
शिशिरवसन्तौ पुनरायात: ।
काल: क्रीडति गछत्यायु
स्तदपि न मुञ्चत्याशावायु: ॥
Adi Sankara
English Transliteration
dinayāminyou sāyam prāta:
shishiravasantou punarāyāta:
kālakrīdati gachatyāyu:
tadapi na munchatyāshāvāyu:
Meaning of the Sanskrit Words
दिनयामिन्यौ= dina+yAminI=day + night; सायं= saayam - evening; प्रातः= praatah - morning; शिशिर= shishira - frosty season; वसन्तौ= (and) vasantau - Spring season; पुनः= punah - again; आयातः= aayaatah - have arrived; कालः= kaalah - Master Time;क् रीडति= kridathi - plays; गच्छति= gachhathi - goes (away); ebbs away आयुः= aayuh - life/age; तदपि= tadapi - tat.h+api, then even; न= na - not; मुञ्चति= mun chatthi - releases; आशा= aasha - desire; वायुः= vayuh - air (the wind of desire does not let off its hold)
Meaning in English
Day and night, dawn and dusk, winter and spring come and depart again and again. Time thus frolics and plays and life ebbs away. Yet, one does not give up the gusts of desires.
Explanation
Swami Chinmayananda’s eloquent explanation
“The day decays to end itself in the night. The night dies only to blossom forth into the following day. The dawn grows in vigour and heat to be the noon, but soon wanes away to be the mellow dusk. On the wheel of happenings, the months steadily glide along and, in its soft-footed silent march, the irresistible floods of time roll up in waves of years, sweeping everything in front of its relentless might. Hushed in the silence of its own wonderment, age slips unperceived into its slushy grave.
Time moves on. That which was future becomes the present, and itself rolls away to join the endless ocean of the past. Time never stops, on no condition, for no person! It is ever on the march! Man, gathering memories from his own 'past', barricades his ‘present’, sets them ablaze with his excitements in his day-to-day life, and the rising fumes of his bosom blur his vision to make his life rigged with his anxieties for the ‘future’. As we thus waste ourselves with our endless manoeuvres, in the irresistible stride of time all our hopes and plans get defeated and routed.
Life is at Time's mercy ... In not recognising this, man desires to enjoy the sense-objects, strives, sweats and toils endlessly to acquire, to possess and to aggrandise - to hope, to spend ... And death snatches away everything from him ... He is compelled to leave everything here - and with painful bundles of impressions (vdsands) acquired in his desire-ridden selfish life, the miserable creature departs. How sad! Indeed, how tragic!
Desire for the fleeting, delusory golden-deer is, for the time being, seemingly more powerful for Sita than her infinite love for Rama, her divine beloved. This is delusion at play - maya with a vengeance.
Life steadily ebbs away, but desire fed by the sense gratifications only grows the more by them. Body decays and becomes infirm; it has grown to have no more strength to enjoy, but the man hungers all the more for sense-enjoyments. Death crawls behind; disease and decay accompany him. Piloted by worries and anxieties, this mournful procession reaches the edge of the grave ... Still man wants the joys of the pain-ridden objects.”
Swami Chinmayananda used to quote a beautiful simile. A man is chased by a tiger in the forest. He falls into a well. He is stuck in the well on a branch midway down. If he slips by a fraction of an inch he will plunge into the water below where water snakes are swimming about. The tiger peers threateningly at him from the top. Just then the man is stung by bees. Soon rats are busy gnawing at the creeper on which the man is being supported. A bear comes and claws into the honeycomb on the tree overhanging the well. In this perilous position, with danger at every turn, a drop of honey drips on his face from the honeycomb above. The man, forgetting all his perils, sticks out his tongue to lick it!
This typifies the kind of satisfaction we are seeking in worldly life. The serpents are one’s binds and bonds or attachments to objects , the well itself represents family life. The rats represent TIME. And the honey in the midst of all these dangers represents the momentary pleasures of sensual life.
Therefore, be wise. Give up desires. Seek the all-satisfying Reality that lies behind the mental show of change and sorrow. The Infinite alone will satisfy you. Seek it with a mind withdrawn from the fever of all passions”.
Conclusion
In Bhagwad Gita, Lord Sri Krishna explains:
All those who are lured to the sense objects and desire them are not awake but asleep to their nature of completeness which is Self contained and needs no perfection. The Jnani who is the knower of Truth, by the power of renunciation bestowed through Grace is able to restrain the outward going senses and is therefore fully awake to the consequences of allowing the sense organs a free play. As such, the Sage is asleep to the temptations of the world which attract the ignorant ones.
We have to understand that none of the objects of the world can give permanent happiness because of its temporary nature. Only that which is permanent alone can give permanent happiness. Self alone is permanent and hence it alone can give permanent happiness. If this is understood and there by if we have constant thought of the Self, that is only way to over come the delusion with the objects of the world.
The Time cycle is unavoidable; it is a law of Nature. But the cycle of joy and sorrow can be overcome by living in the light of knowledge and discovery of our true nature of spirit. This Sloka is cautioning us and telling us to lead our life intelligently. We should enjoy our life in such a manner that we retain our freedom and, in course of time, discover an inner self-sufficiency so that we become free from the dependence upon the world for our enjoyment.
“For that, in our day to day life we need ABCD, says Swami Paramarthananda - what we need is Appropriate Balanced Clean Desire”
பெரும் சாதனை புரிந்த உணர்வு, நம்பிக்கை நிறைந்த முகம், மலர்ந்த புன்னகையுடன் வரும் மகனைக் கண்டு “உன்னைப் பார்க்கும் போது எனக்கு எவ்வளவு கர்வமாக/பெருமையாக இருக்கு தெரியுமா?” என்று கூறும் தாய் ஒரு புறம்.
“அவனிடம் சென்று எதுவும் கேட்காதே. அவன் ரொம்ப கர்வம்/பெருமை புடிச்சவன்” - அண்டை வீட்டுக் காரனைப் பற்றி கூறும் அடுத்தவன் ஒரு பக்கம்.
ஒரே சொல் - கர்வம்/பெருமை. இரண்டு எதிர்மறையான கருத்துள்ள பொருள். முதல் கர்வம்/பெருமை அடுத்தவரைப் பாதிக்காதது. இரண்டாவது, அடுத்தவரைப் பாதிப்பது. இதனை வெளிக்காட்ட ஒரு அருமையான திருக்குறள் உண்டு.
அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.
திருவள்ளுவர்
மற்றவர்களுடன் ஒத்து நடக்காமல், தன் உண்மையான வலிமையின் அளவையும் அறியாமல், தன்னையே வியந்து பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பவன் விரைவிலேயே அழிந்து போவான் என்று ’தன்னை வியந்தான்’ என்ற சொல்லில் திருவள்ளுவர் கர்வம் பிடித்த மனிதர்களை மிக அருமையாக விளக்கி விடுகிறார்.
இந்த தன்னை வியக்கும் தன்மையைத்தான் கர்வம், தற்பெருமை, தலைக்கணம் என்றெல்லாம் எதிர்மறை சிந்தனையில் கூறுகிறோம்.
கர்வம் எதனால் வருகிறது, அதன் விளைவுகள் என்ன, அதனை நீக்குவதற்கு வழி எதுவும் உண்டா என்ற கேள்விகளுக்கு விடைகள், சங்கரனின் வைரக் கூடத்தில் நமக்கு கிட்டும், இந்த 11வது ஸ்லோகம் வழியாக.
வாழ்க்கையின் யதார்த்தத்தை விளக்குவதற்கு, மூன்று எடுத்துக்காட்டுகளை கோடிட்டுக் காட்டுகிறார் ஆதி சங்கரர். இந்த முக்கியமான ஸ்லோகத்தை ஆராய்வோம்.
சமஸ்க்ருத ஸ்லோகம்
मा कुरु धनजनयौवन गर्वं
हरति निमेषात्कालः सर्वम् |
मायामयमिदमखिलं हित्वा
ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा ||
Adi Sankara
தமிழ் ஒலி பெயர்ப்பு
மாகுரு த4ன ஜன யௌவன க3ர்வம்
ஹரதி நிமேஷாத் காலஸ் ஸர்வம் |
மாயாமயமித3ம் அகி2லம் ஹித்வா
ப்3ரம்மபத3ம் தவம் ப்ரவிச’ விதி3த்வா ||
தமிழ் மொழி பெயர்ப்பு
வளம் குடி இளமை கர்வம் வேண்டாம்
கணத்தினில் கவர்ந்திடும் என்றும் காலம்
உலகே மாயம் என்பதால் விடுத்திட்டு
மெய்ப்பொருள் அறிவாய், நீயே என்று
சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள்
मा कुरु - மாகுரு - அடைய வேண்டாம்
धनजनयौवन गर्वं - த4ன ஜன யௌவன க3ர்வம் - வளம் (செல்வம்), குடி (மக்கள்/உறவு), இளமை (இவைகளினால் வரும்) தற்பெருமை
हरति निमेषात्कालः सर्वम् - ஹரதி நிமேஷாத் காலஸ் ஸர்வம் - அழித்திடும் நிமிடத்தில் காலம் அனைத்தையும்
காலம் நினைத்தால் இவற்றை எல்லாம் ஒரே நிமிடத்தில் கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விடும். உலகமே பொய்க் காட்சி. பிரம்மம் மட்டுமே உண்மையானது என்று அறிந்து நீயும் பிரம்மமே என்பதை அறிந்துணர்வாயாக.
விளக்கம்
இந்த ஸ்லோகத்தில், நான்கு தத்துவங்களை கோடிட்டு காட்டி, ஆதி சங்கரர் நிலைக்கண்ணாடியில் நம்மைப் பார்க்க உதவுகிறார். அவைகள் முறையே:
1. மனிதரின் அகந்தைகள் 2. நேரத்தின் விளைவு 3. உலகமும் மாயையும் 4. பரம்பொருளும் (பிரம்மனும்) அவனைப் பற்றிய அறிவும்.
ஒருவர் நேர்மையாகவும், உயர்ந்த குணமுடையவராகவும் இருந்தால், அவர் தன்னைத்தானே ஒரு கேள்வியைக் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று சங்கரர் சொல்லாமல் சொல்லி வைத்தார் இப்பண்ணிலே.
“இவ்வுலகில், என் வாழ்வில், நான் ஒருவன் மட்டுமே எதையாவது ஒன்றை உருவாக்கியிருக்கிறேனா அல்லது பெருமைப்படக்கூடிய ஒன்றை எனக்கு சொந்தமாக வைத்து கட்டுப்படுத்துகிறேனா?”
இது தான் அந்த கேள்வி. இதனை நமக்கு நாமே கேட்டுக்கொண்டு இருந்தோமானால், நமக்கு இந்தப் பண்ணில் உள்ள கீழ்கானும் விளக்கங்கள் புரியும்.
த4ன ஜன யௌவன க3ர்வம்
ஆதி சங்கரர் “தன, ஜன மற்றும் யௌவன” ஆகிய மூன்று வெற்று அகந்தைகளை எடுத்துக்கொள்கிறார். இவை மூன்றும் செல்வம், புகழ் மற்றும் இளமை ஆகியவற்றைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் பொய்யான மாயைகள் என்றும் அவை எந்த நேரத்திலும் மறைந்துவிடும் என்றும் கூறுகிறார்.
இந்த மூன்றும் அனைத்து ஆன்மீக முயற்சிகளுக்கும் பாரம்பரிய தடைகள். ஏனென்றால் தன்முனைப்பு எனும் அஹங்காரத்தை (ego) அழிக்கும் நோக்கமுடைய ஆன்மீகத்திற்கு எதிர்மறையாக, இந்த மூன்று அகந்தைகள், தன்முனைப்பிற்கு முட்டுக் கொடுத்து உதவும்.
இந்த மூன்று "தன்முனைப்பு முட்டுக்களை" ஆராய்வோம்.
தனம் - செல்வம்
முன்னே கூறியது போல், "நான் செல்வத்தை உருவாக்கியுள்ளேனா அல்லது இந்த செல்வத்தின் மீது எனக்கு கட்டுப்பாடு இருக்கிறதா?" என்ற கேள்வியைப் பயன்படுத்துவோம். இக்கேள்விக்கு ஆமாம் என்று என்னால் உறுதியாக பதில் கூற முடியாது. ஏன்?
என்னுடையது என்று நான் சொல்லும் இந்தச் செல்வம் எங்கிருந்து வந்தது? பரம்பரை சொத்தை விட்டு விடலாம். அது என்னால் இல்லை. நான் கடினமாக உழைத்து சம்பாதித்தது என்று நாம் கூறும் செல்வத்தை ஆய்வோம்.
என் உடலை வருத்தி புரியும் உழைப்பு, அதனால் வரும் சம்பாதிப்பு என்றால், உடனடியாக நாம் பட்டிருக்கும் மூன்று கடன்கள் நமக்கு நினைவுக்கு வரவேண்டும்.
1. நம் உடல் எங்கிருந்து வந்தது - பெற்றோரிடமிருந்து. 2. நம் உழைப்பு திறன் எங்கிருந்து வந்தது - ஆசானிடமிருந்து 3. இவரிருவரின் மூலம் எது - பரம்பொருள் எனும் இறைவன்
ஆக, இந்த மூவரும் இலையேல் எங்கிருந்து வரும், நம் கடின உழைப்பும், செல்வமும்.
எனவே தான், கடவுளுக்கும், முன்னோர்களுக்கும்/பெற்றோர்களுக்கும், நமக்கு ஆசானாக விளங்கிய ரிஷிகளுக்கும் நாம் நன்றி செலுத்தி, செலுத்த வேண்டிய கடன்களை (தேவ, பித்ரு, ரிஷி ருணம் என்று வடமொழியில் கூறுவர்) நிறைவேற்ற வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் தெளிவாகச் சொல்கின்றன.
மேலும் நமக்கு உடல் ஆற்றலைக் கொடுக்கும் உணவு எங்கிருந்து வந்தது? கன்னட மொழியில் மிகப் பிரபலாமான, திரு. டி.வி. குண்டப்பா அவர்கள் எழுதிய மக்கு திம்மா என்ற படைப்பில்
பசி களையும் கவளம் வெந்தது உன் வியர்வையிலோ புசிக்கும் வேளை நினை, அது பிறன்தன் கண்ணீரோ இசைவதும் நீ கொடுத்த அளவே ; தின்ற மிகுதியோ இசித்திடும் சமியாக் கடனே -மக்குத் திம்மா
என்று அழகாக நமது கடனை எடுத்துரைக்கிறார்.
எனவே, வாழ்க்கையின் யதார்த்தங்களைப் பற்றி நாம் இப்படி உண்மையிலேயே சிந்திக்கும்போது, நம்மிடம் பணிவும், தன்னடக்கம் மட்டுமே வளரும்/இருக்கும்; பெருமை இருக்காது. இந்த அடிப்படை நன்றியுணர்வை நாம் புரிந்து கொள்ளாமலோ அல்லது உணராமலோ இருந்தால், செல்வத்துடன் வரக்கூடிய மிகப்பெரிய ஆபத்து, ஆணவம், செருக்கு, மமதை என்றெல்லாம் கூறப்படும் தன்முனைப்பு.
செல்வத்தைப் போலவே மக்களும் (உற்றார், உறவினர், நன்பர் - அவர்களால் வரும் புகழும்) இளமையும் என்றும் நிலைப்பதில்லை. முந்தைய பண்களில் (2,5,6) ஆதி சங்கரர், செல்வம் அல்லது சம்பாதிக்கும் சக்தி இல்லாத ஒருவரைத் நெருங்கிய உறவுகள் கூட அண்டமாட்டார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார் அல்லவா!
மேலும் கொழுப்பு மற்றும் சதையை அடிப்படையாகக் கொண்ட இளமையும் உடல் வலிமையும், உடலின் இயற்கையான மாற்றங்களான முதுமையும் இறுதியில் சிதைவு அடைந்தே தீரும். முந்தைய ஸ்லோகங்களில் ஆதிசங்கரர் நம் முட்டாள் மனதிற்கு, உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையேயான குத்தகை ஒப்பந்தம் முடிவடைவதற்கு நியமிக்கப்பட்ட நாளும் நேரம் வரும்போது எதுவும் நமக்கு உதவாது என்று கூறினார் என்பதை நினைவு கூற வேண்டும்.
எனவே, உலகமும் அது வழங்கும் அனைத்து செல்வங்களும் மாயை தான், அவைகள் நிலையற்றவை மட்டுமே. இதைத்தான் அடுத்த சொற்றொடரில் விளக்குகிறார் பரமனின் அவதாரமான ஆதி சங்கரர்.
ஹரதி நிமேஷாத் காலஸ் ஸர்வம்
ஆதி சங்கரர் ஹரதி, நிமேஷ கால, சர்வம் ஆகிய மூன்று முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்; எல்லாம் சில நொடிகளில் அழிந்துவிடும் என்பது நேரடியான பொருள்.
இந்த வாக்கியத்தை விவாதிக்க மற்றும் புரிந்து கொள்ள, ஒருவர் எங்கும் செல்ல வேண்டியதில்லை. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் உலக வங்கியின் தரவுகள் இங்கே:
மார்ச் 2020 முதல், 1000 நாட்களில் (86,400,000 வினாடிகள்), "இது" இதுவரை பின்வரும் தாக்கத்தை ஏற்படுத்தியது:
1. அதிகாரப்பூர்வ, உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான 6,606,624 மனிதர்களின் அகால இறப்பிற்கு “இது” காரணம். அதாவது சுமாராக ஒவ்வொரு 13 வினாடிக்கும் இவ்வுலகில் ஒருவர் மரணம் எய்யக் காரணம் “இது”. 2. கடுமையான அதிர்ச்சி அலைகள் மூலம் உலகப் பொருளாதாரத்தை உலுக்கி, இந்த நூற்றாண்டிலேயே மிகப்பெரிய உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தூண்டியது “இது”. 3. வளர்ந்து வரும் மற்றும் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரங்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வருமான இழப்பினால், வேண்டிய அடிப்படை நுகர்வுகளை மூன்று மாதங்களுக்கு மேல் தக்கவைக்க முடியவில்லை “இதன்” விளைவால். 4. நாடுகளுக்குள்ளும் நாடுகளிலும், சமத்துவமின்மையும், வறுமையும் வெகுவாக உயரக் காரணமாக இருந்தது “இது”.
இந்த 21 ஆம் நூற்றாண்டின் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மதிகளில் , "இது" வரப்போகிறது என்பது நமக்குத் தெரியுமா? "இது" இப்படி "ஹரதி நிமேஷாத் கால: சர்வம்" செய்யும் என்று நமக்குத் தெரியுமா?
இந்த “இது” எது? அதுதான் கோவிட்-19 தொற்றுநோய்.
"அதனால்", அதாவது, கோவிட் 19 தொற்றுநோயால், செல்வம் அழிந்தது, இளமை மறைந்தது, நண்பர்கள் சில நொடிகளில் சென்றுவிட்டனர்.
இதற்கு மேல் என்ன விளக்கம் வேண்டும் இச் சொற்றொடருக்கு!
என்று பத்து வயது பாலக ஞானி, திருஞானசம்பந்தர் அருளிய இரண்டாம் திருமுறை நினைவுக்கு கொண்டு வரும்.
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளதுணர்வார் பெறின்
உண்மை அறிந்தோர், ஒரு தினம் என்பது கால அளவு போல் தோன்றினாலும் அது வாழ்நாளை அறுக்கும் வாள் என்று உணர்வர் என்ற திருக்குறள் இந்த சொற்றொடரைத் தழுவியதே.
மாயாமயமித3ம் அகி2லம்
உலகம் முழுக்க மாயையால் நிரம்பியுள்ளது என்பதே நேரடிப் பொருள். உலகே மாயம். சங்கரர் வெளிப்படுத்திய மாயையின் கருத்தைப் புரிந்துகொள்ள, கோவிட்-19 பற்றிய நமது விவாதத்தை மேலும் தொடர்வோம்.
இல்லாத ஒன்று இருக்கின்றமாயம்
நமது அன்றாட வாழ்வில், நமது உடல், மன வளாகத்தால் (பொறி புலன்களால்) உணர முடியாத “எதை”யும் பொதுவாக நாம் “அது” இல்லாதது என்றும் (இல்லையென்றும்), உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றும், “அதை”ப்பற்றி நாம் கவலையும் படுவதில்லை என்பது உலக இயல்பு அல்லவா! கண்ணால் காணும் பொருளே, நம் விரல் நகத்தைத் தாண்டிவிட்டால் அது நமது “இல்லை” என்கிறோம். காண முடியாத ஒன்றை “இருக்கிறது” என்று கூறுவோமா,இல்லை என்றுதானே “அதை”க் கூறுவோம். அந்த “இல்லாத” (அதாவது நமது பொறி புலன்களால்) உணர முடியாத ஒன்றை இப்பொழுது உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
உங்களால் "அதை" பார்க்க முடியவில்லை, என்னால்"அதை" கேட்க முடியவில்லை, மேலும் அவர்களால் "அதை" உணர முடியவில்லை. அது தான் கொடிய கோவிட்-19 வைரஸ். எனினும் “அது” பரவி இருக்கிறது அல்லவா. அகராதிகளின் வரையறையின்படி, ஒருவர் "அந்த கோவிட்-19 வைரஸை " மாயா என்றும் சொல்லலாம். இல்லாத ஒன்று என்று பொறி புலன்களுக்கு உண்மையற்றதாகத் தோன்றினாலும் அது இருந்தது, இருப்பது, இருக்கும், அது தான் உண்மை.
இருப்பது, இல்லாத மாயம்
இதேபோல், "இருப்பது, உண்மையானது" என்று தோன்றும் "உண்மையற்றதும், இல்லாததும்" உள்ளன, உதாரணமாக கானல் நீர், மந்திரவாதியின் செயல்கள் இவைகளைல்லாம் ஒரு மாயத்தோற்றம்.
நமது உடலையே எடுத்துக் கொள்வோம். நம் உடலுக்கு சுகங்களை நாம் கொடுக்க கொடுக்க, பதிலுக்கு அவ்வுடல் நமக்கு என்ன கொடுக்கிறது; துக்கத்தை ஒன்றே கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இதுவும் மாயமே. ஏனெனில் சுகமும், துக்கமும் நாம் நினைப்பது போன்ற சுகமும் துக்கமும் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆக மாயை என்பது புரிந்து கொள்ள இயலாமை (non apprehension), தவறாக புரிந்துகொள்ளும் தன்மை (mis apprehension) என்ற இரண்டு தத்துவங்களை உள்ளடக்கியது.
அதாவது மறைப்பு, வெளிப்படுத்துதல் என்ற இரண்டு சக்திகளுடையது மாயை. (The AvaraNa shakti is called the power of concealment and the vikShepa-shakti the power of projection). இருப்பு இலாத தன்மை போன்று தோன்றினாலும், உடல் மன வளாகமான நம் உள்ளுணர்வில் வடிவங்களை உருவாக்கும் சக்தியுடையது மாயை.
(மாயை எனும் தத்துவத்தை, எனது மூட மனதிற்கு எட்டிய வரை https://soundar53.substack.com/p/-5- என்ற வலைதளப்பதிவில் விவரித்துள்ளேன். நேரம் கிடைத்தால் காணவும்).
எனவே தனம், ஜனம், யௌவ்வனம் போன்றவைகளைத் தவறாக புரிந்து கொண்டதால் (misapprehension) வளரும் தன்முனைப்பு என்ற கர்வம் எனும் தற்பெருமையால், நம்மை வாழ்க்கையின் யதார்த்தமான நிலையையும் அல்லது இவ்வுலகைப் பற்றிய சார்பற்ற புறநிலை உணர்வையும் புரிந்து கொள்ள இயலாமைக்கு (non apprehension) வழி வகுக்கிறது.
இதனால் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று கிளிஞ்சல் வெள்ளியென, கண்ணாடித்துகள் மணிக்கல்லென, மாக்கலந்தநீர் பாலென, கானல்நீர் தண்ணீரென மருட்சிகொண்டு, நிலையிலாதவற்றை நிலையெனக் கண்டு மயங்குவதே உலக வாழ்க்கை என்பதை உணர்த்தவே, ஆதி சங்கரரின் மாயாமயமித3ம் அகி2லம் என்ற சொற்றொடர்.
ஹித்வா
கைவிடு, துறந்திடு, விட்டுக்கொடு என்பதே நேரடிப் பொருள். ஆதிசங்கரர் இந்த (தன, ஜன, யௌவ்வன) என்ற தன்முனைப்பு முட்டுக்கள் எதிலும் நிலையான மகிழ்வைக் காண முடியாது என்பதை உணருமாறு அறிவுறுத்துகிறார். எனவே "ஹித்வா" அவைகளைத் துறக்குமாறு அவர் வலியுறுத்துகிறார்.
இந்த சொல்லிற்கான தனது விளக்கவுரையில், சுவாமி விதிதாத்மானந்தா கூறுகிறார்:
“வேதாந்தத்தில், துறவு என்பது ஒரு செயல் அல்ல; இது ஒரு மனநிலை, உலக விஷயங்களைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட அணுகுமுறை. புற நிலையில், வினைகள் புரிவதில்லை, பொருட்களை நிராகரிப்பது என்பதெல்லாம் துறவு அல்ல. விட்டுவிட்ட எதையாவதின் இழப்பை உணர்ந்தால், நான் அதை உள்நோக்கி விட்டுக்கொடுக்கவில்லை என்றுதான் அர்த்தம்”.
தூய, நிலையான மகிழ்வெனும் இலக்கை நோக்கி பயணிக்கும் நாம், சோகம், பயம் அல்லது பாதுகாப்பின்மை போன்ற உள்நோக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காண, “பொருளாகிய உலகத்தை நோக்காதே; உலகப் பொருள்களால் இவற்றைத் தீர்க்க முடியாது” என்ற இந்த உண்மையை அங்கீகரிப்பதே துறவு.
எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட அளவே யதார்த்தம் அல்லது பயன் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, அந்த அளவிற்கே அவைகளை மதிப்பிடுவது, அவைகளின் பயனை அனுபவிப்பது என்பதே இந்த “ஹித்வா” என்ற சொல்லின் பொருள்.
குறிப்பு: சமஸ்க்ருத மொழியில், சில பதிவுகளில் “ஹித்வா” என்ற சொல்லிற்கு பதிலாக “பு3த்4வா” என்று காணப்படுகிறது. அதற்கு அறிந்துணர்தல் என்ற பொருள். அதாவது எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட அளவே யதார்த்தம் அல்லது பயன் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, அந்த அளவிற்கே அவைகளை மதிப்பிட்டு, அவைகளின் பயனை அனுபவிப்பதை அறிந்துணர்தல் என்ற பொருளைக் கொள்ளலாம்.
ப்3ரம்மபத3ம் த்வம் ப்ரவிச’ விதி3த்வா
விதி3த்வா என்றால் அறிந்து, உணர்ந்த பிறகு (புரிந்து அனுபவிப்பது), த்வம் ப்3ரம்மபத3ம் ப்ரவிச’, உன்னைப் பற்றிய உண்மையை அறிந்த நீ பரம்பொருளின் (பிரம்மனின்) இருப்பிடத்தில் நுழைவாயாக என்பது நேரடிப் பொருள்.
எனவே, என்னைப் பற்றிய உண்மையை அறிந்து, பிரம்மனின் இருப்பிடத்தில் பிரவேசிக்க, நான் உலகத்தைத் துறக்க வேண்டும், அதாவது, எனது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், எனது இலக்கை அடைவதற்கும் நான் உலகத்தைச் சார்ந்திருக்கும் போது என்னை நான் அறிவதில்லை.
மனிதப் பிறப்பின் நோக்கமே தெய்வீகமாக மாறுவதுதான். மற்றவை அனைத்தும் வாழ்க்கையின் வழிமுறைகள். வாழ்க்கையின் குறிக்கோளுக்கும் வாழ்க்கை வழிமுறைக்கும் இடையில் நாம் ஒருபோதும் குழப்பமடையக்கூடாது. வாழ்க்கையின் குறிக்கோள் நமக்கு நிரந்தர மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
"பிரம்ம சத்யம், ஜகத் மித்யா" (பிரம்மம் மட்டுமே இறுதி உண்மை, மற்றும் உலகம் நிரந்தரமற்றது) என்பதை உணர்ந்து அனுபவித்தால், என் அமைதியான மனம் எந்த கவனச்சிதறல்களிலிருந்தும் விடுபட முடியும். பின்னர் என்னால் என்மேல் கவனத்தை செலுத்த முடியும். அப்படி செலுத்துகையில் தன்னைப் பற்றிய அறிவு எனும் "நீயே அது" ("தத் த்வம் அசி") என்ற மெய்ப்பொருளின் இருப்பிடத்திற்குள் நுழையலாம். ஆகாயத்தில், மேகங்களை விட மேலான சொர்கமெனும் இடத்தில், வின்னவரும் தேவதைகளும், மிளிரும் வெள்ளை நிற ஆடையில் நம்மைச் சுற்றி பறந்திடும் இடமல்ல அது. அந்த இடம் உன்னிடமேதான் உள்ளது.
இங்கேயே, இப்பொழுதே வீடுபேறு எனும் விடுதலை நிலை தன்னை அறிந்தோர்க்கு. இதைத்தான் ஆதி சங்கரர் 9வது ஸ்லோகத்தில் “நிஸ்சல தத்த்வே ஜீவன்முக்தி:” என்று கூறினார்.
முடிவுரை
உலகத்தின் நிலையற்ற தன்மையும் அதன் இன்பங்களும் நம்மை நம் உறக்கத்திலிருந்து நம்மை எழுப்ப வேண்டும். நாம் நமது உடல் மன வளாகத்தைப் பயன்படுத்தி, இவைகளனைத்தும், சாராம்சத்தில் வெறும் மாயை (மாயா) என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பரம தத்துவமான பிரம்மத்தை அறிந்து, அதில் நமது உணர்வை இணைப்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் ஆத்மாவே உண்மையான நிரந்தரமான மெய்ப்பொருள், அதுவே பரம்பொருள் எனும் நிலையான உண்மை. அதுவே தூய இருப்பு, தூய உணர்வு, தூய பேரின்பம்.
ஆதி சங்கரரின் இந்த முக்கியமான செய்தியை நாம் ஆழ்ந்து உணரவேண்டும். அடுத்த வலைப்பதிவில் அடுத்த ஸ்லோகத்திற்குச் செல்வோம்.