பகவத் கீதை ஸ்லோகம் 2.22- மரணம் – பழையன கழிதலும் புதியன புகுதலும்

முகவுரை


ந‌ன்னூ‌ல் எ‌ன்ற இல‌க்கண நூ‌லி‌ன் சொ‌ல் அ‌திகார‌த்‌தி‌ல் உ‌ள்ள “பழையன க‌ழிதலு‌ம் பு‌தியன புகுத‌லு‌ம் வழுவல கால வகை‌யி னானே” எ‌ன்ற தொட‌ர், வழ‌க்‌கிழ‌ந்த இல‌க்கண‌க் கரு‌த்து‌க்களை ‌நீ‌க்குவது‌ம், புதிய வழ‌க்குகளை ஏ‌ற்பது‌ம் தவ‌றி‌ல்லை எ‌ன்‌பதைக் குறிப்பது. அதாவது,
இல‌க்கண‌ம் கால‌‌ந்தோறு‌ம் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌த்‌தி‌ற்கு உ‌ட்ப‌ட்டது எனக் கூறு‌கிறது.  

வீட்டில் உள்ள பயனற்ற பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதுவே இதன் அடிப்படைத் தத்துவம்.

சரி, பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலில் வரும் ஒரு தத்துவத்திற்கும், போகிப் பண்டிகைக்கும், பகவத்கீதைக்கும் என்ன சம்பந்தம்? அதாவது, பழையனவற்றைக் கழித்தலுக்கும், புதியனவற்னை புகுத்தலுக்கும், பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு? போர்க்களத்தில் பார்த்தனுக்கு, சாரதியான கண்ணன் இதைப்பற்றி என்ன அறிவுரை வழங்கினான்?

வாருங்கள், ஒரு முக்கியமான ஸ்லோகத்தை அறிய முற்படுவோம்.

ஸமஸ்க்ருத ஸ்லோகம்

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா2 விஹாய
நவாநி க்3ருஹ்ணாதி நரோபராணி!

ததா2 ஸரீராணி விஹாய ஜீர்ணா
ந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே3ஹீ!!

பகவத் கீதை 2.22

பொருள் விளக்கம்

தொப்புள் கொடி உறவாக தொடங்கிய நாம், முதலில் நம்மை நமது உடலுடன் பிண்ணி இணைக்கிறோம். இது இயல்பு. பின் வளர்ச்சியின் அங்கமாக அது படிப்படியாக உறுதியாகி, உடலே உயிர் எனும் உணர்வினை அடைகிறோம். அதனை வளர்க்க, மெருகுபடுத்த, காக்க, விதவிதமான பொருள், செயல்முறை என்று பலவற்றை உபயோகப்படுத்துகிறோம்.

காலன் விதித்திட்ட வேளை வந்தால் செத்து மடிகிறோம். நாம் இவ்வுலகில் வந்திறங்கியது எதற்காக, வந்து புரிந்தது என்ன என்று அறியாமல்கூட செல்கிறோம். இருக்கும் போது, நாம் இருக்கும் காயம் ஒரு பொய்; இந்த யாக்கை நிலையாதது என்று நொடிப்பொழுதும் உள்நோக்கி ஆய்ந்ததில்லை. இதுதான் யதார்த்தம். மரணம் என்பது ஒரு கசப்பான உண்மை என்பதை உணர மறுக்கிறோம். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ளத்தான் பகவான் கண்ணன் பார்த்தனுக்கு இந்த ஸ்லோகம் வழியாக அறிவுரை வழங்குகிறான்.

“எப்படி ஒரு மனிதன் நைந்து போன ஆடைகளை கழட்டிவிட்டு வேறு புதியவற்றை அணிந்து கொள்கிறானோ, அப்படியே தேஹத்தில் உறைபவன், நைந்து போன உடல்களை விட்டுவிட்டு வேறு புதியவற்றை அடைகிறான்”

என்று பகவான் ஶ்ரீக்ருஷ்ணர் மரணத்தைப் பற்றி கூறுகிறார்.

தாய், குழந்தைக்குப் பழைய அழுக்கான உடுப்பைக் கழட்டிவிட்டு புதியதை அணிவிக்கிறாள். அப்போது குழந்தை அழுகிறது. ஆனால் தாயார் குழந்தை அழுவதைப் பொருட்படுத்துவதில்லை. குழந்தைக்கு “ஹிதம்” (நன்மை) என்று, புதியதை மாற்றிக் கொடுக்கிறாள்.

அது போல, பகவானும் ஜீவனுக்கு ஹிதமாக அவன் அழுவதை கவனியாமல் அவன் உடலை மாற்றிக் கொடுக்கிறார். உடலுக்கு உடை ஆடை; உயிருக்கு உடல் ஆடை.

இதைப் புரிந்தவர் அழுவதில்லை; புரியாதவர் அழுகின்றனர். அதனால்தான் “செத்த பிணத்தைப் பார்த்து சாகாத பிணம் அழுகிறது” என்பர் ஞானியர்.

சொற்களின் உபயோகமும், அவைகளில் பதிந்துள்ள உட்கருத்துக்களும்ஒரு கண்ணோட்டம்

1. “ஜீர்ணாநி” என்பதற்கு நைந்து போனது என்ற பொருளாகும். இந்த சொல் துணிகளுக்குப் பொருந்தும். நைந்த உடலென்று பகவான் ஒப்பிடுவது, வயதாகித் தேய்ந்த (நலிந்த) உடலுக்குத்தான் மரணமெனும் உடை மாற்றத்தைக் குறிப்பதல்ல. சிறு வயதிலும் மரணமெய்தலாம். உடல் நலிவு என்பது, “ஆயுள் முடிந்தது” என்ற பொருளில் கூறப்படுவது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

2. உடையை மாற்றிக் கொள்பவன் ஒரே சமயத்தில் பல உடைகளை (உள்ளாடை, வேஷ்டி, சட்டை, அங்கவஸ்த்திரம் என) மாற்றிக் கொள்ளமுடியும். உயிரைப் (ஜீவாத்மாவைப்) பொருத்தவரை, ஒரே உடலைத்தானே மாற்ற இயலும் என்று இருக்கையிலே, “வாஸாம்ஸி”, “ஸரீராணி”, என்று பன்மையில் பகவான் கூறுவதன் உட்கருத்து என்ன என்பதை இருவகையில் ஆயவேண்டும்:

• ஜீவன் இதுவரை எவ்வளவு உடல்களை விட்டுப் புதிய உடல்களை அடைந்திருக்கிறதோ, அவற்றுக்குக் கணக்கு கிடையாது. வரும் காலத்திலும், ப்ரம்ம ஞானமெனும் ஆத்ம ஞானம் கிட்டும்வரை, இன்னும் எத்தனைப் பழைய உடல்களைவிட்டுப் புதிய உடல்களை அடையப் போகிறது என்பதும் தெரியாது. எனவே சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

• ஸ்தூலம், ஸூக்‌ஷ்மம், காரணம் என்று மூன்று உடல்கள் ஜீவனுக்கு உள்ளன. இந்த உடலுவிட்டு அடுத்த உடலை அடையும்போது, இந்த மூன்றும் மாறுகின்றன. ஸத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஒவ்வொருவருக்கும் குணமயமான, அவனுக்கே உரித்தான, தனித்தன்மையுடைய “வ்யஷ்டிப்ரக்ருதி” அமைகிறதே, அது காரண ஸரீரம். இதையே “ஸ்வபாவம்” என்பர். மனிதன் எப்படிச்செயல்படுகிறானோ, அதற்கு ஏற்றவாறு ஸ்வபாவம் மாறுகிறது. இந்த ஸ்வபாவத்திற்கு ஏற்றவாறுதான் உயிர் பிரியும்போது மனதில் எண்ணமும் உண்டாகிறது. அதன்படிதான் அவனுக்கு ஸூக்‌ஷ்ம ஸரீரம் அமைகிறது. காரணம், ஸூக்‌ஷ்மம் என்ற இரு ஸரீரங்களுடன் இந்த உடலை (ஸ்தூல ஸரீரத்தை) விட்டுப்பிரிந்த பின்னர், ஸூக்‌ஷ்மத்திற்கேற்றவாறு அடுத்த பிறவியில் ஸ்தூல ஸரீரத்தைப் பெற்று, காரண ஸரீரத்திற்கேற்றவாறு அடைந்த அந்த அடுத்த உடலில் அவனது ஸ்வபாவம் அமைகிறது. இப்படி மூவுடலும் மாறுவதால், சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

3. ஆத்மாவிற்கு அசைவில்லை, போக்குவரத்து இல்ல. எனவே ஜீவாத்மா எனும் “தேஹி” அடுத்த உடலைப் போய் சேர்கிறான் என்று சொல்வது எப்படி பொருந்தும் என்பதை இப்போது ஆய்வோம்.

உண்மையில் ஆத்மாவிற்கு அசைவில்லை, செயலில்லை, எந்த நிலையிலும் போக்குவரத்தும் இல்லை. ஆனால், ஒரு குடத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போகும்போது, அதற்குள் இருக்கும் ஆகாயம் போகவில்லையானாலும், குடத்துடன் சம்பந்தத்தால் அது போவதாக நினைக்கிறோம் அல்லவா!

அதுபோல, ஸூக்‌ஷ்ம ஸரீரம் போகும்போது, அத்துடன் இணைந்த ஆத்மாவும் போவதாகத் தெரிகிறது. இதை உலகத்தார்புரிந்து கொள்ளவே, உயிர் வந்து போவதாக கற்பனை செய்து கூறப்பட்டது. “தேஹீ” என்றால் சரீரத்தை உடையவன் என்று பொருள். தேஹத்தை உற்ற உயிர் என்பர். ஆகவே உடலின் சம்பந்தத்தால் அவனிடம் போக்குவரத்து என்ற தோற்றம் ஏற்படுகிறது.

இதனால்தான இந்த ஸ்லோகத்தில் துணியைப் பற்றிக் குறிப்பிடும்போது “க்ருஹ்ணாதி” (ஏற்பது) என்றும், உயிரைப் பற்றிக் கூறும்போது “ஸம்யாதி” (செல்லுதல்) என்ற சொல்லும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

3. “நர”, “தேஹி” என்ற சொற்களின் விளக்கம்

ஆடையை அணிவது, நைந்தது, துறப்பது என்பவைகள் எல்லாம் மனிதனுக்கே உரித்தானது. எனவே இந்த ஸ்லோகத்தில் முதல் சொற்றொடரில், மனிதனைக் குறிக்கும் “நர” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. உடல்களின் போக்குவரத்து என்பது, உடலபிமானமுடைய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். எனவே இரண்டாவது சொற்றொடரில் “தேஹி” என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்லோகத்தின் உட்கருத்து

ஆத்மா உடல் எடுப்பதில்லை, ஸூக்‌ஷும ஸரீரம் மட்டுமே உடல் எடுக்கிறது. ஸூக்‌ஷ்ம ஸரீரமே (mind) பயணிக்கிறது. தூய உணர்வாகிய நான் எங்கும் பயணிப்பதில்லை. நான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.

இறைவனும் ஆத்மாவும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவை. எனவே இறைவனும் ஆத்மாவும் ஒன்றே. இறைவனது உபாதியும், ஆத்மாவின் உபாதியும் வேறு. இறைவன் காரண உபாதியை உடையவர், ஆத்மா காரிய உபாதியை உடையது. காரணமும் காரியமும் மாயத்தோற்றங்களே. இருப்பது பரம்பொருள் ஒன்றே.

ஆத்மா எதையும் அனுபவிக்க வேண்டியதில்லை. அனுபவங்கள் அனைத்தும் மாயை. அனுபவிப்பவனைப் பற்றிய உண்மையே நமக்கு முக்தியை கொடுக்கும். எந்த அனுபவமும் மோக்‌ஷத்தை கொடுக்காது.

அனைத்து உயிர்களில் இருக்கும் ஆத்மா நானே என்கிறான் கண்ணன்.

இதுதான் இந்த ஸ்லோகத்தின் சாரம்.

இதனைத்தான் கவிஞர் கண்ணதாசன், காலத்தால் அழியாத அருமையான திரையிசைப் பாடலாக வடித்துள்ளார்.

பாடலைக் கேளுங்கள்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

பிறந்த நாள் மழலை

சுவரில் வரைந்த சித்திரம் (நன்றி-தீபா)

என் கடன் பணி செய்து கிடப்பதே (பகவத் கீதை 2.47)

முகவுரை

அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்ற ஔவையின் கூற்றின்படி, ஏழுபத்தொன்று வருடங்களுக்குமுன் அரிதான பிறவியை எடுத்த இந்நாளில், அடியேன் இதுவரை கடந்து வந்த பாதையையும் அந்த பாதையின் அடிப்படையையும் அறிய  முயன்றேன்.

அந்த முயற்சியின் முடிவில் கிடைத்த அறிவின் தொகுப்பை எனது மழலையில் மொழிகிறேன் கீழ்வருமாறு:

1. சாதாரண நடுத்தர குடும்பத்திலிருப்பவன் நடந்து வரும் பாதையெனும் ஆறிலிருந்து அறுபது வரையிலான வாழ்வு,

இளமையில் கல்வி,
அறவழியில் பொருளீட்டுதல்,
மனைமாட்சி

என்ற மூன்று படலங்களத் தழுவியது. என் பாதையும்கூட அதுதான்.

2.“காயேன வாசா மனஸா” என்று உடல், வாக்கு, மனம் வழி ஆண்டவனைச் சார்ந்திருந்து, உலகியல் பலன்களை விரும்பாமல், கல்வி புகட்டி மனத்தூய்மையுடன் அறச்செயல்கள் புரிந்திட்ட அன்னை தந்தையின் அறிவுரைகளால், இளவயதிலிருந்தே எனக்கு கிட்டியது அறநெறிப்படி திட்டமிட்டு ஸமபுத்தி மனப்பான்மையுடன் வாழும் ஒழுக்கமிகு வாழ்க்கை. பெற்றோரின் வடிவில் இறையருள் கிட்ட, என்ன பெருந்தவம் செய்தேன் என்று இன்றும் அறியேன் அடியேன்.

3. இளமையில் கல்வி, பொருளீட்டுதல், மனைமாட்சி என்ற மூன்று படலங்களில், தர்மத்தை கடைப்பிடிக்கும்போது கொள்ள வேண்டிய மனோபாவனையை அடைந்திட, பெற்றோரின் அன்றாட எளிய வாழ்க்கையே எனக்கு இலவசமாகக் கிடைத்த பயிற்சிக்கூடம்.

4. இன்பம் “அவன்” கொடுத்தது, துன்பம் எனது முன்வினைப் பயனாலே; ஆகவே இன்பத்தில் களித்திடாமலும், துன்பத்தில் துவண்டிடாமலும் அவர்கள் வாழ்ந்த எளிமையான அனுதின வாழ்வே இன்றும் எனக்கு வழிகாட்டி.

இப்படி, அறிவின் துணை கொண்டு இருமைகளில் சமமான மனப்பான்மை என்பது தான் எனது அறுபது கடந்த ஆன்மீகம் தழுவிய வாழ்வின் அடிப்படை.

சரி, நீ என்ன பெரிய மனிதனா? என்ன சாதித்தாய் இவ்வுலகில்? உன் சுய சரிதையால் எங்களுக்கு என்ன? என்று நீங்கள் வினவுவது எனக்குத் தெளிவாக கேட்கிறது. நான் பெரியவனல்ல; நான் சாதனையாளன் அல்ல. நான் ஒரு சாமான்யனே! எனினும், இன்று நான் அறிந்திடும் பகவத் கீதையின் ஸ்லோகத்திற்கு இது முகவுரையாகும் என்ற எண்ணம் என்னுள் எழுந்ததனால்தான் இந்த சுயசரிதை.

இப்போது கீதையின் ஸ்லோகத்தைக் காண்போம்.

ஸமஸ்க்ருத ஸ்லோகம்

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन |
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि || 2.47 ||

தமிழில் எழுத்துப் பெயர்ப்பு

கர்மண்யேவாதிகாரஸ்தே மா ஃபலேஷு கதாசனா |
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோத்யஸ்த்வகர்மணி || 2.47 ||

தமிழாக்கம்


1. உனக்கு கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு.

2. அவற்றின் பயன்களில் ஒருகாலும் உரிமையில்லை.

3. ஆகவே நீ கர்மங்களின் பயன்களைக் கோருவதற்கு காரணமாக ஆகாதே.

4. மேலும் உனக்கு கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது”

என்று நான்கு அறிவுரைகள் வழங்குகிறான் கண்ணன். அதாவது,

1. செயலின்மையில் நாட்டம் வேண்டாம்.
2. செயலின் பலனிலும் நாட்டம் வேண்டாம்.
3. செயலில் மட்டுமே உன் நாட்டம் இருக்கட்டும்.

4. செயல்புரிவதற்கு மட்டுமே உனக்கு தகுதி இருக்கிறது.
5. செயலைத் (கடமையைத்)துறப்பதற்கு உனக்கு தகுதி வரவில்லை.
6. செயலைத் துறக்க வேண்டுமானால், செயலின் பலனை விரும்பாமல் சில காலம் செயலாற்ற வேண்டும். அப்பொழுதுதான் செயலைத் துறக்க தகுதி ஏற்படும்.

என்று கண்ணன் பார்த்தனுக்கு விளக்குகிறான்.

கர்ம யோகம் புரியாமல், கர்ம சந்யாஸம் செய்ய முடியாது. அதைமீறி கர்ம சந்யாஸம் செய்தால் அதனால் துக்கம் விளையும்.

விளக்கவுரை

வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றிற்கு ஏற்றவாறு மனிதனுக்கு கர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கர்மங்களை “கர்மணி” என்ற சொல் குறிக்கிறது. மறைகளில் செய்யக்கூடாது என்று கூறப்பட்ட பாவச்செயல்களை “கர்மணி” என்ற சொல் குறிக்காது. ஏனெனில், பாவ கர்மங்களைச் செய்ய அவசியமோ, பொறுப்போ மனிதனுக்கு கிடையாது. விருப்பு-வெறுப்புகளினால் உந்தப்பட்டு அவற்றில் ஈடுபடுகிறான். அது அவனுடைய பொறுப்பிலா செய்கை. அதனால் அத்தகைய செயல்கள் புரிபவனுக்கு, துன்பங்களை அனுபவிக்கக்கூடிய தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அறம் வழி நடந்து புரியும் வினைகளே “கர்மணி”.

உனக்கு கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு

உனக்கு செயல் புரிய மட்டுமே தகுதி உள்ளது என்ற இந்தக் கூற்றில்:

1. மனித உடலில்தான் ஜீவனுக்குப் புதிய கர்மங்கள் செய்ய சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அவன் தன் பொறுப்பிற்கு ஏற்றவாறு இறைவனுடைய கட்டளையை ஏற்று நிறைவேற்ற வேண்டும். அந்த கர்மங்களில் “நான் செய்கிறேன்” என்ற ஒட்டுதல்/பற்று இருக்கக்கூடாது. அந்த கர்மங்களை ஆற்றுவதை இறைவனை அடைவதற்கு ஸாதனமாக கருதவேண்டும். அரிதான மானிடப்பிறவி கிட்டியிருப்பது பரம்பொருளை அறிந்துணரவே என்று வினைகள் புரிந்திட வேண்டும்.

2. மனிதனுக்கு கர்மங்களை ஆற்ற மட்டுமே பொறுப்பு உண்டு. அவற்றைச் செய்யாமல் விடுவதற்கு அவனுக்கு சுதந்திரம் கிடையாது. தன்முனைப்பால், பிடிவாதமாக கர்மங்களைச் செய்யாமல் விட்டுவிடலாம் என்றாலும்கூட அவனால் விட்டுவிட முடியாது. ஏனெனில் அவனது ஸ்வபாவம் (இயல்பு) வலுக்கட்டாயமாக ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருக்கச் செய்யும். இந்த நிலையில் அவனுடைய பொறுப்பை நிறைவேற்றாமல், தனக்கு கொடுக்கப்பட்ட உரிமையைத் தவறாகப் பயன்படுத்தினால், விதிக்கப்பட்ட கர்மங்களை விட்டுவிடுவதால்,மறைகள் விதித்த விதிகளை மீறியதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும். எனவே நீ ஆற்றவேண்டிய கர்மங்களை ஆற்றத்தான் வேண்டும், தவிர்க்கக்கூடாது.

3. பிறப்பு-இறப்பு (ஜனன-மரணம்) என்ற பிறவிப்பிணியிலிருந்து (ஸம்ஸார பந்தத்திலிருந்து) விடுதலை பெறுவதற்காகவும், பிறருக்கு நன்மை செய்வதற்காகவும், ஜீவனுக்கு மனம், புத்தி, புலன்களுடன் கூடிய இந்த மனித உடலை (ஸரீரத்தை) அளித்து, அதன்மூலம் செயல்கள் செய்ய விஷேஷ சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த சலுகையை நல்விதத்தில் பயன்படுத்தினால் கர்மபந்தத்திலிருந்து விடுதலை பெற்று பரம்பொருளை அறிந்துணர இயலும். தவறாகப் பயன்படுத்தினால் தண்டனையுடன், அந்தப் பொறுப்பும் பிடுங்கப்படும். அதாவது மறபடி மனிதப்பிறவி பெறுவதற்கான தகுதியை இழக்கிறான். இதனை உணர்ந்து தன் பொறுப்பை நல்முறையில் நிறைவேற்ற வேண்டும்.

என்ற மூன்று முக்கிய உட்கருத்துக்கள் அடங்கியுள்ளன.

கர்ம பயன்களில் ஒருகாலும் உனக்கு உரிமையில்லை

எந்த கர்மத்திற்கு என்ன பயன்? அந்தப் பயன் எப்பிறவியில் கிடைக்கும்? எந்த முறையில் கிடைக்கும்? என்று மனிதன் அறிய மாட்டான். 

தன் விருப்பப்படி தான் வாழும் காலத்தில் அவற்றைப் பெறவும் முடியாது; விரும்பி முயன்றாலும் அவற்றிலிருந்து தப்பவும் முடியாது. அவன் விரும்புவது ஒன்று; அவனுக்கு கிடைப்பது ஒன்று. அவன் விரும்புவதை அடையும் சந்தர்ப்பம் அவன் கையில் இல்லை. கர்மங்களின் பயனை விதிப்பது இறையருள் (அத்வைத வேதாந்தத்தில் முன்வினைப் பயன் எனும் ப்ராரப்தம் என்பதே இறையருள் என்ற விளக்கம் உள்ளது). விருப்பு, வெறுப்பு, ஆசை இவையெல்லாம் அறியாமையே. இவைகளால் இவ்வாழ்வில் விளைவதனைத்தும் (இன்பம், துன்பம்) நிரந்தரமல்ல. அவைகள் உண்மையான ஸுகத்தை அளிக்காது.

“ஆசை அறுமின், ஆசை அறுமின்,
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்”

என்று திருமூலர் கூறுவதும் இதுவே.

கர்ம பயன்கள் கோருவதற்கு காரணம் ஆகாதே

மனம், புத்தி, புலன்கள் மூலமாக நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்களிலும், அவற்றின் பயன்களிலும்

1. தான் செய்வதாக கருதும் எண்ணம் (“மமதை”)
2. பற்று (“ஆஸக்தி”)
3. அச்செயல்களில் உள்ள நுண்ணிய விருப்பம் (“வாஸனா”)
4. எதிர்பார்ப்புகள்

ஆகிய இவைகள்தான் கர்மங்களின் பயன்களுக்கு காரணம் ஆகும்.

கர்மத்திலும், கர்மபலனிலும் பற்றுள்ளவனுக்கு இவைகள்தான் கிட்டும்.

அறிவின் துணைகொண்டு, இருமைகளை சமமான மனதால் எதிர்கொண்டு “வினை புரிபவன் நானல்ல, வினைப் பயனும் எனதல்ல, அனைத்தும் அவன் செயல்” என்ற மனப்பான்மை உடையவனை, புரியும் கர்மங்களும், கர்ம பயன்களும் ஒட்டாது. அவன் புதிதாக பாபச் செயல்களேதும் புரியவே மாட்டான்.

முன்னால் செய்யப்பட்ட பாவங்களும், இப்பொழுது செய்கின்ற பற்றற்ற கர்மங்களின் ப்ரபாவத்தினால் சாம்பலாகி விடுகின்றன. இக்காரணத்தினால் அவன் பாவச்செயல்களின் பயன்களுக்கு காரணம் ஆகமாட்டான். இவ்விதம் கர்மங்களை ஆற்றுபவனுடைய எல்லாக் கர்மங்களும் மறைந்துவிடுகின்றன. அவன் மாறுதலற்ற உயர்ந்த பதவியை அடைவான் என்கிறான் கண்ணன்.

கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது

மறைகளில் நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைப் புரிவதற்கு மாறாக, தடை செய்யப்பட்ட கார்யங்களைச் செய்வது, செயலாற்றும் உரிமையைத் தவறாக உபயோகப்படுத்துவதாகும். அது போல, வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றுக்கு ஏற்றவாறு எவனுக்கு எந்த கர்மம் விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைச் செய்யாமல் இருப்பதுகூட உரிமையைத் தவறாக உபயோகப்படுத்துவதாகும். விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் இருப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை. 

விதிக்கப்பட்ட கர்மங்களை மோஹத்தினால் தியாகம் செய்வது “தாமஸ த்யாகம்”; உடல் நோகும் என்று பயந்து தியாகம் செய்வது “ராஜஸ த்யாகம்”. விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் மனிதன் கர்ம யோகத்தில் ஸித்தி பெற முடியாது. ஆகவே, எக்காரணம் கொண்டும் விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் விடுவதற்கு நீ விரும்பக்கூடாது என்பது கண்ணன் கூறும் அறிவுரை.

முடிவில் ஒரு கேள்வி


ஆறிலிருந்து அறுபதுவரை இந்த ஸ்லோகத்தை அறிந்திராமல் வாழ்ந்திடினும், இதன் சாரத்தின்படி அமைந்ததே என் வாழ்வு என்பது இப்போது என் கருத்து. அதனால்தான் என்னவோ, இறையருளால், அன்றும் இன்றும் படுத்தவுடன் உறங்குகிறேன் கவலைகளேதுமின்றி.


1. அன்றாட வாழ்வில் இந்த ஸ்லோகம் உதவுமா?

2. முகவுரையாக கூறப்பட்ட சிறுவனின் சுய சரிதைக்கும் இந்த ஸ்லோகத்திற்கும் சம்பந்தம் உண்டா? ………..
பதிலும், முடிவும் உங்களுடையது.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து

அனைவருக்கும் இனிய குரோதி வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Narayaneeyam -Dasakam 5 – Sloka 8 நாராயணீயம் – தசகம் 5 – ஸ்லோகம் 8

Audio Link for Chanting

https://www.dropbox.com/scl/fi/urhzb8o8qvnsmdypu34u1/5.8.mp3?rlkey=waojivlof6jfv82ec0jkn6ikp&dl=0

Introduction 

In Dasakam 5, Narayana Bhattathri provides an evolution of the Cosmic Form of the Brahman (in line with Srimad Bhagavatham) to help us focus on the “Virat Rupa” of Brahman. 

Starting with the divine intention (sankalpa) or will within the Supreme Being to bring forth the universe, Bhattathri in the previous Slokas outlined the evolution of Purusha, Prakriti, Mahat, Ahamkara and associated deities for the five organs of perception, five organs of action and the four aspects of inner conscience.He then outlined the evolution of the inner conscience, the sense and action organs.

Now in this Sloka, the evolution of additional elements is highlighted.

முகவுரை

இந்த தசகத்தில், ஸ்ரீ. நாராயண பட்டத்திரி பிரம்மனின் பிரபஞ்ச வடிவத்தின் பரிணாமத்தை (ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஏற்ப) பிரம்மனின் "விராட் ரூபத்தில்" வழியாக அறிய உதவுகிறார். 

பிரபஞ்சத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற தெய்வீக எண்ணம் (சங்கல்பம்) அல்லது பரமாத்மாவிற்குள் உள்ள சித்தத்துடன் தொடங்கி, முந்தைய ஸ்லோகங்களில் பட்டத்திரி, புருஷன், பிரகிருதி, மஹத், அஹம்காரம் மற்றும் உள்மனசாட்சியின் நான்கு அம்சங்கள், ஐந்து புலனுணர்வு உறுப்புகள், ஐந்து செயல் உறுப்புகளுக்குக்குத் தொடர்புடைய தெய்வங்களின் பரிணாமத்தை கோடிட்டுக் காட்டினார். பின்னர், நான்கு அம்சங்கள் நிறைந்ந மனம், உணர்வு மற்றும் செயல் உறுப்புகளின் பரிணாமத்தை கோடிட்டுக் காட்டினார்.

இப்போது இந்த ஸ்லோகத்தில், ஸமஷ்டி நிலையில் உருவாகும் அடுத்த தத்துவங்களின் வெளிப்பாட்டினை விளக்குகிறார்.

Sanskrit Sloka – சமஸ்க்ருத ஸ்லோகம்

श्ब्दाद्व्योम तत: ससर्जिथ विभो स्पर्शं ततो मारुतं

तस्माद्रूपमतो महोऽथ च रसं तोयं च गन्धं महीम् ।

एवं माधव पूर्वपूर्वकलनादाद्याद्यधर्मान्वितं

भूतग्राममिमं त्वमेव भगवन् प्राकाशयस्तामसात् ॥८॥

தமிழில் ஒலிபெயர்ப்பு

ஶப்₃தா₃த்₃வ்யோம தத: ஸஸர்ஜித₂ விபோ₄ ஸ்பர்ஶம் ததோ மாருதம்
தஸ்மாத்₃ரூபமதோ மஹோ(அ)த₂ ச ரஸம் தோயம் ச க₃ந்த₄ம் மஹீம் |
ஏவம் மாத₄வ பூர்வபூர்வகலநாதா₃த்₃யாத்₃யத₄ர்மாந்விதம்
பூ₄தக்₃ராமமிமம் த்வமேவ ப₄க₃வந் ப்ராகாஶயஸ்தாமஸாத் || 8||



தமிழாக்கம்

ஒலிவழி விண்ணும் விண்வழி தொடு உணர்வும்

தொடுதல்வழி காற்றும் காற்றின் வழி வடிவமும்

வடிவம்வழி அழலும் அழல்வழி ருசியும் ருசிவழி

நீரும், நீர்வழி மணமும், மணம் வழி மண்ணும்

ஒன்றின் தன்மாத்திரம் (மூலப்பொருள்) ஒன்றென உறவுடனே

தோன்றின இருள்குணவழி அஹங்காரமிடமிருந்து

உத்தமன் உன்னிச்சையாலே குருவாயூரப்பா! 5.8

Transliteration in English

shabdaadvyOma tataH sasarjitha vibhO sparshaM tatO maarutaM
tasmaadruupamatO mahO(a)tha cha rasaM tOyaM cha gandhaM mahiim |
evaM maadhava puurvapuurvakalanaadaadyaadyadharmaanvitaM
bhuutagraamamimaM tvameva bhagavan praakaashayastaamasaat ||

Meaning in English

O All pervading Lord! From the Tanmaatra of (Shabda) the subtle element of sound, came the element (Aakaash) Space and from it touch (Sparsh). From touch (Sparsh) came the element Air (Vaayu) and from it form (Roopa). From form (Roopa) came the element Fire (Agni) and from it Taste (Rasa). From the Tanmaatra of Taste (Rasa) came the element Water (Jala) and from it smell (Gandha). From smell (Gandha) came the element Earth (Bhoomi). O Maadhava! By Thy will, thus from the Tamasa aspect of Ahankaara, were born the five Tanmaatras and the five Pancha Bhootas each element having the qualities of the preceding one.

Explanatory Notes

We must bear in mind that the focus of Dasakam 5 so far, has been on the evolution of the Cosmic Egg or the Virat Rupa of the Brahman and should not be mixed up with the evolution of human body which is essentially identical to the one happening in the Cosmos.  At the same time we shouldn’t forget that after all what is happening in the Cosmos do happen in our body too. 

விளக்க குறிப்பு

இதுவரை தசகம் 5-ல் கூறப்படுவது, அண்ட பொன் முட்டை (ஹிரன்ய கர்ப்ப) அல்லது பிரம்மனின் விராட ரூபத்தின் பரிணாம வளர்ச்சி. இதி ஒரு சமஷ்டி நிலை கண்ணோக்கம். நடைமுறை நிலையில், மனித உடலின் பரிணாம வளர்ச்சியுடன் (வ்நஷ்டி நிலை) ஒப்பிட்டு கலந்துவிடக் கூடாது. “அண்டத்தில் நடப்பது பிண்டத்திலும்” என்ற சொல்லிற்கிணங்க, இப்பரிணாமங்களை பிண்டத்திலும் காணலாம் என்பதனையும் மறந்துவிடக் கூடாது. 

Meaning of the Sanskrit Words

श्ब्दात्-व्योम - from sound, space

तत: ससर्जिथ - then,Thou created

विभो - O All pervading Lord !

स्पर्शं - touch

तत: मारुतं - then air

तस्मात्-रूपम्- from that (air) form

अत: मह: -then fire

अथ च रसं - and after that taste

तोयं च गन्धं महीम् - then water smell and earth (were born)

एवं माधव - in this manner O Maadhava!

पूर्व-पूर्व-कलनात्- because of association with the preceding (product)

आद्य-आद्य-धर्म-अन्वितं having the qualities of the earlier products

भूत-ग्रामम्-इममं - this group of subtle elements

त्वमेव भगवन् - Thou alone O Lord!

प्राकाशय: - did bring into existence

तामसात् - from the Tamasa Ahankaar

Narayaneeyam – Dasakam 5 – Sloka 3 – The beginning – முதல் வெளிப்பாடு

Link for Audio Chanting

https://www.dropbox.com/s/qc269ec1ozbl326/5.3.mp3?dl=0

Introduction

In the first Sloka, Narayana Bhattahri brought out that before the Maha Pralaya (The great deluge/Big Bang), only Brahman exists.

The question that naturally followed this assertion was “what happened to all the existing things, living and non living entities at the gross and subtle levels?”.

The answer was provided in the next Sloka 2 wherein Bhattathri brought out that everything else was in unmanifested, undifferentiated state inside Brahman.

Now comes the next question. What happens next?
Answer for this question is Sloka 3.

Sanskrit Verse

एवं च द्विपरार्धकालविगतावीक्षां सिसृक्षात्मिकां

बिभ्राणे त्वयि चुक्षुभे त्रिभुवनीभावाय माया स्वयम् ।

मायात: खलु कालशक्तिरखिलादृष्टं स्वभावोऽपि च

प्रादुर्भूय गुणान्विकास्य विदधुस्तस्यास्सहायक्रियाम् ॥३॥

Meaning in Tamil

இருக்கனின் இரு பரார்த்த இறுதியில், இறைவனே நீ

இயக்க இச்சைதனை கடைக்கண்ணால் இயம்பிட,

இச்சையால் உறைந்திருந்த முச்சக்தியவள் அசைந்திட,

முச்சக்தியினுள் முழுதுமாய் நிலைத்திட்ட முக்குணங்கள்

காலச்சக்கர சுழலுடன், காண இயலா வினைப்பலனும்,

முச்சமநிலை இயல்பு மாறி முக்குணமும் வெளித்தோன்றி,

மூவுலகும் தோன்றிட முழு உதவி புரிந்தனவே !!

குறிப்பு – இருக்கன் என்பது நான்முக கடவுளான பிரம்மா. பராரத்த என்பது அந்த நான்முக கடவுளின் வாழ்நாளில் பாதி.

Meaning in English

Thus when a period of two Paraardhaas of Brahma ended, Thou cast Thy glance, which was with the will to create the three worlds. 

Then Maayaa (Thy creative power) got activated and from it emerged the power of time, the impressions of karma and the resulting tendencies.

These supported Maayaa by disturbing the balance of the three Gunaas and diversified as the manifested universe.

English Transliteration

evaM cha dviparaardhakaalavigataaviikshaaM sisR^ikshaatmikaaM

bibhraaNe tvayi chukshubhe tribhuvaniibhaavaaya maayaa svayam |

maayaataH khalu kaalashaktirakhilaadR^iShTaM svabhaavO(a)pi cha

praadurbhuuya guNaanvikaasya vidadhustasyaassahaayakriyaam ||

Meaning of the Sanskrit Words

एवं च - and in this manner

द्वि-परार्ध-काल-विगतौ - the period of two Parardhas having ended

ईक्षां सिसृक्षात्मिकां - (when) the glance with the will to create

बिभ्राणे त्वयि - was cast by Thee

चुक्षुभे - got activated

त्रिभुवनी-भावाय - for the creation of the three worlds

माया स्वयम् - Maayaa (bestirred) herself

मायात: खलु - from Maayaa indeed

काल-शक्ति: - the power known as Time,

अखिल-अदृष्टं - all that is latent (the effects of the deeds of the Jivas)

स्वभाव: -अपि च - and the resulting tendencies (innate nature)

प्रादुर्भूय - emerging

गुणान्-विकास्य - activating the three Gunaas

विदधु: - acted (so as to)

तस्या: -सहायक्रियाम् -support her (Maayaa's) work

Narayaneeyam – Daskam 5 – Sloka 2 – The magic show – முட்டைக்குள் கோழி

Link to the Audio for chanting

https://www.dropbox.com/s/or9l7ulge5omyqm/5.2.mp3?dl=0

Introduction

In the first Sloka, Narayana Bhattahri brought out that before the Maha Pralaya (The great deluge/Big Bang), only Brahman exists.

The question that naturally follows this assertion is “what happened to all the existing things, living and non living entities at the gross and subtle levels?”.

Before finding answers to our question, let us watch an interesting Video.
Now let us come to the core issues on this video. From where did this gigantic Sequoia tree come from ? Well, it came from this simple looking seed.
Wow! How is it possible?  The answer is explained by Narayana Bhattathri in Sloka 2. Now let us study the Sloka.

Sanskrit Verse

काल: कर्म गुणाश्च जीवनिवहा विश्वं च कार्यं विभो

चिल्लीलारतिमेयुषि त्वयि तदा निर्लीनतामाययु: ।

तेषां नैव वदन्त्यसत्त्वमयि भो: शक्त्यात्मना तिष्ठतां

नो चेत् किं गगनप्रसूनसदृशां भूयो भवेत्संभव: ॥२॥

Meaning in Tamil


பேரூழிக் காலமதில் காலமும் கர்மமும்,

வினைப்பலனும், முக்குணமும்

மாயையும், மாயைவிளை அண்டமும்,

உயிரினமும், உயிரிலா பொருட்களும்

உன்னிடத்தில்
ஒன்றியம் அனைத்தும்!

இருப்பில்லை
அவைகளுக்கு என்று

உரைக்கவில்லை மறை நான்கும்!

இருப்பிலா விண்மலர்கள் அவைகளெனில்

இயலுமோ அவைகள் வெளித்தோன்ற!! 5.2

குறிப்பு: வேதாந்தத்தில், இல்லாத விஷயங்கள் (அதாவது, மூன்று காலகட்டங்களில் எப்பொழுதும் இல்லாதவை அல்லது சாத்தியமற்றவை அல்லது உண்மையற்றவை) பொதுவாக மூன்று எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்படுகின்றன, அதாவது விண் மலர்கள் (வானில் வளரும் மலர் செடி/மரம் இல்லாமல்), மலட்டுப் பெண்ணின் குழந்தை, முயலின் கொம்பு. மஹா பிரளயத்தின் போது தற்போதுள்ள அனைத்து பொருட்களும் வெளிப்படுத்தப்படாத/வேறுபடுத்தப்படாத நிலையில் இருந்ததை எடுத்துரைக்க பட்டத்திரி இங்கே விண்மலர்கள் உதாரணத்தைப் பயன்படுத்துகிறார்.

Meaning in English

O All pervading Lord! During the period of Maha Pralaya, You were absorbed in Yourself in Your Cosmic Slumber (Yoga Nidra). At that period, Time, Karmas (& effects of good and bad actions), Gunas (Satwa, Rajas and Tamas), all the Jivas and the entire universe (born out of Maayaa) were all merged in Thee and Thou were absorbed in Thy own nature of pure Consciousness Bliss. O Lord! Even the Srutis (Vedas) do not declare them as being non existent. They remained in causal form. If they have perished or non existent like the sky-flowers (which never existed) , how could they come into existence again? 

Note 1: In Vedanta, the non-existent things (i.e, that which never exists in any of the three periods of time or an impossibility or unreal) are usually explained with three examples viz., sky-flower (flower which grows in the sky without any plant/tree), child of a barren woman, and the horn of a rabbit. Bhattathri is using the sky-flower example here to drive home the point all existing things were in unmanifested/undifferentiated state during Maha Pralaya.
Note 2:

Readers are advised to cross refer to Sloka 2 of Dakshinamurthy Stothram for an overview of the concepts of Vikalpa and Nirvikalpa. Ref:

https://prabhusponder.com/2021/06/30/அண்டமும்-ஆண்டவனும்-the-universe-the-lord/

English Transliteration

kaalaH karma guNaashcha jiivanivahaa vishvaM cha kaaryaM vibhO
chilliilaaratimeyuShi tvayi tadaa nirliinataamaayayuH |

teShaaM naiva vadantyasattvamayi bhOHshaktyaatmanaa tiShThataaM
nO chet kiM gaganaprasuunasadR^ishaaM bhuuyO bhavetsambhavaH ||2

Meaning of the Sanskrit Words

काल: - Time

कर्म - Karma (effects of actions of Jivas)

गुणा: - च - and the three Gunas

जीवनिवहा: - and all the Jivas, multitude of living beings

विश्वं च कार्यं - and the universe which is an effect (of Maya)

विभो - All pervading Lord!

चिल्लीलारतिं - in the sport of meditative sleep (Cosmic Slumber)

एयुषि त्वयि सति - When you were engrossed

तदा - at that time (of Maha Pralaya)

निर्लीनताम्-आययु: - had become completely merged (in Thee)

न-एव वदन्ति - of them (the Srutis) do not declare

असत्त्वम् - absolute non existence

अयि भो: तेषां तिष्ठतां - O Lord! For those entities which did exist

शक्त्यात्मना - in the form of your creative power (Maya) [as causal entities]

नो चेत् किं - otherwise how

गगन-प्रसून-सदृशां - like the sky flower

भूय: भवेत्-संभव: - is manifestation again possible (in the new creative cycle)

Narayaneeyam – Dasakam 5 – Sloka 1 – Dark Matter – முடிவிலியின் முதல்வன்

Link to the Audio – For chanting

https://www.dropbox.com/s/9r4y3xjrb1bcrb9/5.1.mp3?dl=0

Introduction

Let us recall what we learnt in the previous blogs on Cosmic Evolution.

1. At the outset it should be clear that our Rishis, Seers and Saints understood that creation doesn’t mean formation of something out of nothing. By the word creation, they only meant the manifestation of something which was potentially existent in dormant form or Unmanifest form or undifferentiated form (like the tree inside the seed).

2. In the beginning nothing exists except a singularity called Brahman. This is akin to what modern scientists say as “Before the big bang there was no space, time or matter. There was just singularity where the entire un-manifested universe existed”.

This is what is brought out by Bhattathri in this first Sloka.

Let us now study the Sloka

முகவுரை

“ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி

உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி

சென்று ஆசறும் காலத்து அந்நிலையது ஆகி

திறத்து உலகம்தான் ஆகி செஞ்சவே நின்ற

நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே எங்கள்

நவைதீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி

நின்றாரைக் காத்தி அயல் பேரைக் காய்தி

நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே”

கம்பராமாயணம், ஆரண்ய காண்டத்தில்

“முதலில் ஒன்றாக இருந்து, பின்னர் பலவேறு (Cosmic Evolution) வடிவங்களாகி, அவ்வடிவங்களில் அறிவும், உயிரும் வெவ்வேறாகி, ஊழிக் காலம் மஹா பிரளயத்தால் முடியும் போது, முதலில் இருந்த ஒன்றாகும் நிலையைப் பெற்று (Cosmic Dissolution) , மீண்டும் படைப்பு நிகழும்போது பலவகைப்பட்ட உலகங்களாகி, செம்மையாய் நின்ற ஞானக் கொழுந்தே! நீ புண்ணிய செயல்களை மேற்கொண்டவர்களைக் காக்கின்றாய், பாவம் செய்பவர்களை அழிக்கின்றாய். நிலையில்லாத அப்பாவமும் நீ படைத்தது அல்லவா?”

என்று கம்பன் வர்ணிப்பதும் நமது முனிவர்களும், ரிஷிகளும் அறிந்துணர்ந்த அண்டங்களின் படைப்பிற்கு காரணமாகிய ஆதி அந்தமில்லா பரம்பொருளைப் பற்றியதே

இதனைத்தான் நாராயண பட்டத்ரி, ஐந்தாம் தசகத்தில் முதல் ஸ்லோகமாக வரைந்தார்.

அதனை இப்போது ஆய்வோம்.

Sanskrit Verse


व्यक्ताव्यक्तमिदं न किञ्चिदभवत्प्राक्प्राकृतप्रक्षये

मायायाम् गुणसाम्यरुद्धविकृतौ त्वय्यागतायां लयम् ।

नो मृत्युश्च तदाऽमृतं च समभून्नाह्नो न रात्रे: स्थिति –

स्तत्रैकस्त्वमशिष्यथा: किल परानन्दप्रकाशात्मना ॥१॥

தமிழாக்கம்

பருஉடல் தொடங்கி
நுன்நிலை அண்டமனைத்திற்கும்
பெரும் பிரளயம் முன்னே
இருப்பென்று ஒன்றுமில்லை.

முக்குணமும் சமமாகி,
மாற்றமெல்லாம் முழுதுமடங்கி
முன்னவன் உன்னுள்ளே

உறைந்தனளே மாயச்சக்தி

இறப்பில்லை, வீடுபேறென்றில்லை,
இறவு பகல் ஏதுமில்லை
இருப்பென்பது உனையன்றி
வேறெதுவுமல்லை – அப்

பேரழிவுக் காலம் முன்னே
பேரின்ப நிலைதனிலே
தூய இருப்பெனவே
இருந்தனையே பரம்பொருளே 5.1

Meaning in English

This world consisting of the manifest and the unmanifest worlds (gross and the subtle) did not exist at all, before and during the total dissolution.The three Gunaas (Satwa, Rajas and Tamas) of Maya were in equilibrium, preventing any modification and so had become latent in Thee. At that time neither death nor liberation existed. Day and night also did not exist. Thou alone remained at that time as the Supreme Bliss Consciousness.

English Transliteration

vyaktāvyaktamidaṁ na kiñcidabhavatprākprākr̥taprakṣayē

māyāyāṁ guṇasāmyaruddhavikr̥tau tvayyāgatāyāṁ layam |

nō mr̥tyuśca tadāmr̥taṁ ca samabhūnnāhnō na rātrēḥ sthiti -

statraikastvamaśiṣyathāḥ kila parānandaprakāśātmanā || 5

Meaning of the Sanskrit Words

व्यक्त-अव्यक्तम्-इदं - this (universe) made up of the gross and the subtle (manifested and unmanifested)

न किञ्चित्-अभवत् - nothing existed

प्राक्-प्राकृत-प्रक्षये - before Praakrita Pralaya

मायायाम् - (when) Maayaa (Thy cosmic creative power)

गुण-साम्य-रुद्ध-विकृतौ - whose modifications were neutralised by the equipoise of the three Gunaas

त्वयि आगतायां लयम् - and had become latent in Thee,

नो मृत्यु: च - neither death

तदा-अमृतं च - and then nor liberation

समभू - (did) exist

न-अह्न: - neither day

न रात्रे: - or night

स्थिति: - was in existence

तत्र-एक: - त्वम् - then Thou as the Only One (without another)

अशिष्यथा: किल - did remain, verily

परानन्द-प्रकाश-आत्मना - as Supreme Bliss Consciousness

Narayaneeyam Dasakam 5 – Cosmic Evolution – Part 4 – Destruction – The Pralaya

Word of Caution:

This write up below is definitely not an exhaustive description of what our scriptures talk about Pralaya. It is my very limited understanding of the vast literature available in public domain. The objective is to get a broad idea of the principles involved so that when we take up the study of our scriptures and Sanskrit Slokas, we will have a better comprehension of what they say.

Reader is strongly advised to strictly learn these under the guidance of a Guru, if one wants a deep dive in this subject.

Introduction

The concept of Pralaya or dissolution is intimately related with the concept of creation. Our scriptures say that the chain of creation and dissolution continues without break. After each creation, there is dissolution and after dissolution there is again new creation.Following the dissolution, there is a period of rest or interval, known as Pralaya. It's a period of non-existence where the universe remains dormant before the next cycle begins.

Each creation i.e., anything that has an “existence” goes through the dissolution process. The dissolution process is the reverse of the creation process. This means that all the creations at the gross level dissolves into the subtle level and the subtle into causal levels.

Therefore, in addition to the “kaala” or time and its breakdown which we saw in the earlier part, we should also understand what is getting dissolved, where is it getting dissolved and how often do they get dissolved. In other words, we should understand

1. The different forms of existence
2. the realms of existence
3. The cycles of dissolution

Forms of existence

In this universe, (universe included) there are sentient and insentient things that exist. 

Leaving the near infinite number of insentient and inert materials and their different forms aside, the Padma Purana discusses the number of different types of life-forms in the universe. According to the Padma Purana, there are 8,400,000 life-form species, 900,000 of which are aquatic ones; 2,000,000 are trees and plants; 1,100,000 are small living insects species; 1,000,000 are birds; 3,000,000 are beasts and reptiles; and 400,000 are mammal species.

Creation (srishti) and destruction (pralaya) is about all these forms of existence.

Realms of existence

Apart from the infinite time element, as one of the common causes for cosmic evolution, infinite space is to be understood in proper perspective. This is known as “loka” in our scriptures. The most common cosmological conception of lokas in the Veda was that of the trailokya or triple world: three worlds consisting of earth, atmosphere or sky, and heaven, making up the universe.

Hindu mythology defines fourteen worlds (not to be confused with planets) – seven higher worlds (heavens) and seven lower ones (underworlds). (The earth is considered the lowest of the seven higher worlds.) The higher worlds are the seven Vyahrtis (Heavens or Upper worlds) and seven Patalas (Hells or lower worlds).

The 14 Lokas are: (1) Satya (2) Tapa (2) Jana (4) Mahar (5) Svar (6) Bhuvar (7) Bhu (8) Atala (9) Vitala (10) Sutala (11) Talatala (12) Mahatala (13) Rasatala (14) Patala.

Time Cycles and kinds of Pralaya

Visnu Purana describes, four kinds of pralaya viz.,

Naimittika (occasional),
Prakrtika (elemental),
Atyantika (absolute) and
Nitya (perpetual)
All these are directly related to the life of Brahma, the God assigned the responsibility of creation.

(Readers may refer https://en.wikipedia.org/wiki/Hindu_units_of_time for a better understanding of the concept of time, life and life span as per Hinduism)

Naimittika Pralaya:

This Pralaya is also termed as the Brahma Pralaya. This Pralaya at the end of a kalpa or at the end of a day of Brahmas life - 4.32 Billion human calendar years);. After a kalpa, Naimittika pralaya occurs. It is also indicated in the Visnu Purana that this dissolution occurs only in the three lokas, i.e., Bhu, Bhuva and Sva.The Visnu Purana also gives a very fearful description of this dissolution.
Prakrtika Pralaya:

This Pralaya occurs when the whole Brahmanda dissolves in Prakrti. This pralaya occurs at the end of the life span of Brahma (100 years as per his calendar) , viz., at the end of Maha Kalpa - 311.04 Trillion years in human calendar (comprising of two paraardhaas of 155.52 Trillion years each).

At that time all the things of the world return to their causes. This dissolution takes place in the opposite order of their creation. Thus, the seven forms of Prakrti from Mahat to earth enter successively into their causes. The Egg of Brahma is dissolved in the waters that surround it with its seven lokas, seven oceans, seven islands and the mountains. Water is drunk up by fire; that of air absorbs the stratum of fire. Air is merged in ether and Bhutadi or Ahamkara devours the ether. Mahat again takes up Ahamkara. Then Prakrti absorbs Mahat and all these. Prakrti and Purusa also are dissolved into the Supreme Spirit. This is Prakrta Pralaya.
Atyantika Pralaya :

Absolute or final dissolution is attained by the knowledge of the Supreme. It is said that all beings are afflicted by three kinds of worldly pains, viz., adhyatmika, adhibhautika and adhidaivika. The Visnu Purana also describes these three types of pains. Adhyatmika is of two types - bodily and mental. That kind of evil, which is inflicted upon men by beasts, birds etc. are called Adhyatmika. Adhidaivika pain is the work of cold, heat, wind, rain, lightning and other atmospherical phenomena. These three types of afflictions are described in the Samkhya system also in the similar vein.

Only true knowledge about one self (atma vidya, brahma jnanam) can rescue men from these three kinds of affliction. When a man attains true, knowledge & detachment from human afflictions, he obtains final dissolution. In this pralaya, the yogis are merged in the Supreme Spirit.
Nitya Pralaya:

It is said that Nitya or perpetual dissolution is the constant disappearance of all living beings. Experts interpret this as the death of the living beings, which occurs constantly - “Nitya is the extinction of life, like the extinction of a lamp, in sleep at night”. Some Vedantists describe Nitya Pralaya as Susupti or deep sleep.

Conclusion

We have through a five part study tried to have an overview of the cosmic evolution as per the modern and Indian perspectives. This study was essential to appreciate Narayaneeyam Dasakam 5.
From the next blog we will start our study the Slokas of Dasakam 5.

God Bless

நாராயணீயம் தசகம் 5 – அண்டப் பரிணாமம் – ஆன்மீக கண்ணோட்டம் – பகுதி 4 – பிரளயம்

முக்கிய அறிவிப்பு

இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.

நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.

இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை அறிந்தது

பகுதி 1ல், "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் பரம்பொருள் தத்துவம் நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக தன்னை வெளிப்படுத்துகிறது என்று கூறியதை அறிந்தோம்.

பகுதி 2ல், படைப்பு என்பது பரம்பொருளின் இச்சையால் வெளிப்படுகிறது என்றும், அப்பரம்பொருளே படைப்பின் அறிவுக்காரணம் என்றும் அறிந்தோம். மேலும் பரம்பொருளைப் போல ஆதியும் அந்தமும் இல்லாமல் எனினும் பரம்பொருளைச் சார்ந்த சக்தியான மூலப்ரக்ருதி, அவ்யக்தா, மாயா, குணஸம்யா என்றெல்லாம் வடமொழியில் கூறப்படும் மாயையே படைப்பின் பொருட்காரணம் என்றும், அழியா இடம், அழியா காலம் இரண்டும் பொதுக்காரணமென்றும் கண்டோம். அந்த காலத்தின் கணக்கினை நான்முக கடவுளின் ஆயளுடன் இணத்ததையும் அறிந்தோம்.

மூன்றாவது பகுதியில் ஐவகை செறிவு எனும் பஞ்சீகரண செயல்முறை வழியாக அண்டப் பரிணாமத்தின் விவரங்களைக் கண்டோம்.

முடிவாக, இந்தப்பகுதியில் பிரளயம் எனும் கலப்பு தத்துவத்தை காண்போம்.

முகவுரை

“ஒன்றோடொன்றாகவே பற்றிலயமாம் போதினில்” என்று தாயுமானவர் கூற்றின்படி, லயம் என்ற சொல்லுக்கு, ஒன்றுடன் ஒன்றாக கலத்தல் என்ற பொருள் மிகவும் பொருத்தமானது. பலர் இச்சொல்லிற்கு அழிவு என்று பொருள் கொள்கின்றனர். அது ஒரு குறுகிய கண்ணோட்டம். முதற்பதிவல் கண்ட அடிப்படை கொள்கையை நினைவு கூறுக. உருவாக்குதல், அழித்தல் என்று ஒன்றுமில்லை; பரிணாமம் என்று வேறாக, மாறாக, மறைவிலிருந்து வெளிப்படுவதே உண்மை. 

பிரளயம் என்பது, பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கலப்பு என்ற பொருளை குறிக்கும் என்று கூறுகிறது என் சிற்றறிவு. .

நமது ஸனாதன தர்மத்தில், அண்டப் பரிணாமம், என்பது ஒரு சக்கர சுழல். தோன்றியது மறையும; மறைவது தோன்றும். இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும் காலச்சக்கர சுழற்சியின்படி. எதற்கெல்லாம் "இருப்பு" உள்ளதோ அதற்கெல்லாம் “கலப்பு” எனும் “லயம்” உண்டு. எவையெல்லாம் “லயப்படுகின்றனவோ”, அவைகளெல்லாம் “இருப்பாக” வெளிவரும். இதுதான் அண்டத்தின் நியமனம்.

எனவே, இந்த லயம் எவைகளுக்கு, எங்கு, எப்போது என்பதை நாம் அறிய வேண்டும். அதாவது லயத்தின் பொருள், இடம், காலம் இவற்றை நாம் அறிய வேண்டும். அவைகளின் ஒரு கண்ணோட்டம் இதோ.

பிரளயம்எவைகளுக்கு?

இந்த பிரபஞ்சத்தில், (பிரபஞ்சம் உட்பட) “இருப்பு” உள்ளவைகளை உணர்வுள்ள இருப்பு (sentient), உணர்வற்ற பொருட்கள் (insentient) என்று பிரிக்கலாம். முடிவிலியை எட்டும் எண்ணற்ற உணர்ச்சியற்ற மற்றும் செயலற்ற பொருட்களையும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், 8,400,000 உயிரினங்களும், அவற்றில் 900,000 நீர்வாழ் உயிரினங்களாகவும்; 2,000,000 மரங்களும் செடிகளெனவும் ; 1,100,000 சிறிய உயிருள்ள பூச்சி இனங்களாகவும்; 1,000,000 பறவைகள் எனவும்; 3,000,000 மிருகங்கள் மற்றும் ஊர்வன எனவும், பாலூட்டி இனங்கள் 400,000 எனவும் நமது பத்ம புராணம் பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு வகையான வாழ்க்கை வடிவங்களின் எண்ணிக்கையைப் பற்றி விவாதிக்கிறது. பல்லுயிர் பெருக்கம் என்பது அண்டங்களில் உள்ள உயிரின வகைகளின் தொகுப்பாகும்.

ஆக , பிரளயம் என்பது இந்த இருவகை இருப்புகளனைத்தையும் உள்ளடக்கியது என்பதை நாம் உணர வேண்டும்.

பிரளயம்எங்கே நிகழ்கிறது?

அண்ட பரிணாம வளர்ச்சிக்கான பொது காரணங்களில் ஒன்றான, எல்லையற்ற வெளியை சரியான கண்ணோட்டத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது நமது வேதங்களில் "லோகம்" என்று அழைக்கப்படுகிறது.

முடி மன்னர் ஆகில் மூவுலகம் அது ஆள்வார்
அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின்

திருமந்திரம் 1601
தேவர்கள் வாழும் விண்ணுலகம், மனிதர்கள் வாழும் மண்ணுலகம், அசுரர்கள் வாழும் பாதாளவுலகம், ஆகிய மூன்று உலகங்களைக் குறிக்கும். இதுவே மிகவும் பொதுவான அண்டவியல் கருத்து.

எனினும், இந்து புராணங்கள் பதினான்கு உலகங்களை வரையறுக்கின்றன (இதனை கிரகங்களென குழப்பமடையக் கூடாது). ஈரேழு உலகம், 14 லோகங்கள் என நாம் கேட்டிருப்போம். அந்த உலகங்கள் நாம் வாழக்கூடிய பூமிக்கு மேலே ஆறு உலகங்கள் உள்ளன. நம் பூவுலகிற்கு கீழே ஏழு உலங்கள் இருக்கின்றன என குறிப்பிடப்படுகிறது.
பூமிக்கு மேலே உள்ள உலகங்கள்

7. சத்ய லோகம் - பிரம்ம தேவன் இருக்கிறார்
6. தபோ லோகம் - தேவதைகள் இருக்கின்றனர்
5. ஜனோ லோகம் - பித்ருக்கள் (முதாதையர்)
4. மஹர் லோகம் - இந்திரன் உள்ளிட்ட தேவர்கள்
3. சுவர் லோகம் - முனிவர்கள்
2. புவர் லோகம் - கிரகங்கள், நட்சத்திரத்திற்குரிய தேவதைகள்
பூ லோகம் - நாம் வாழும் மண் உலகம்
பூமிக்கு கீழே பாதாளம் எனும் 7 உலகங்கள்

1. அதல லோகம்
2. விதல லோகம் – அரக்கர்கள்
3. சுதல லோகம் – அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், தான, தர்மங்களால் உயர்ந்தவரை உலகளந்த வாமனனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி
4. தலாதல லோகம் – மாயாவிகள்
5. மகாதல லோகம் – நல்ல செயல்கள் பல செய்து புகழ்பெற்ற அசுரர்கள்
6. ரஸாதல லோகம் – அசுர குருக்கள்.
7. பாதாள லோகம் – வாசுகி உள்ளிட்ட பாம்புகள்
ஆக மொத்தம் நாம் வாழும் உலகம் உள்பட 14 லோகங்களிலும் பிரளயம் நடைபெறும்.

பிரளயம்எப்போது நிகழ்கிறது?

அண்டப்பரிணாம வளர்ச்சியின் எதிர்மறை இந்தப் பிரளயம். எது எது எப்படி வெளிவந்தனவோ, அது அது அப்படி ஒன்றறக் கலக்கும் பரம்பொருளுடன். அதாவது பருநிலை இருப்புகள் நுண்நிலையுடன், நுண்நிலை இருப்புகள் காரண நிலையுடன் லயிக்கும்.இவை அனைத்தும் படைக்கும் தொழிலுக்கு தலைவனான நான்முக கடவுளாம் பிரம்மனின் வாழ்வுக் காலத்துடன் நேரடித் தொடர்பினில் நடக்கும் என்று நமது மறைகள் கூறுகின்றன. (பதிவின் முடிவில் உள்ள படத்தை காணவும்)

விஷ்ணு புராணம் நான்கு வகையான பிரளயத்தை விவரிக்கிறது, 1. நைமித்திகா, 2. பிரகிருதிகா, 3. அத்யாந்திகா மற்றும் 4. நித்யா. முதல் இரு வகைகள் அண்டத்தின் கண்ணோட்டத்தில், அடுத்த இருவகைகள் உயிரினத்தின் கண்ணோட்டத்தில்.

1.நைமித்திக பிரளயம்:

இந்த பிரளயத்தை பிரம்ம பிரளயம் என்றும் அழைப்பர். இந்த பிரளயம் ஒரு கல்பத்தின் முடிவில் அல்லது பிரம்மாவின் வாழ்க்கையின் ஒரு நாளின் முடிவில் - 4.32 பில்லியன் மனித காலண்டர் ஆண்டுகள் முடிவில்; பூ, புவ, ஸ்வா ஆகிய மூன்று லோகங்களில் மட்டுமே இந்த கலைப்பு நிகழ்கிறது என்று விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2.பிரகிருதிகா பிரளயம்:

இயற்கையெனும், பிரக்ருதியில் முழு பிரம்மாண்டமும் கலந்திடும் போது இந்த பிரளயம் ஏற்படுகிறது. பிரம்மாவின் ஆயுட்காலத்தின் முடிவில் (அவரது நாட்காட்டியின்படி 100 ஆண்டுகள்), அதாவது மகா கல்பத்தின் முடிவில் - மனித நாட்காட்டியில் 311.04 டிரில்லியன் ஆண்டுகள் (ஒவ்வொன்றும் 155.52 டிரில்லியன் ஆண்டுகள் கொண்ட இரண்டு பரார்தாக்களை உள்ளடக்கியது) இந்த பிரளயா நிகழ்கிறது. அந்த நேரத்தில் உலகின் அனைத்து பொருட்களும் அதன் காரணங்களுக்குத் திரும்புகின்றன. இந்த கலைப்பு உருவாக்கத்தின் எதிர் வரிசையில் நடைபெறுகிறது. இவ்வாறு, மஹத் முதல் பூமி வரையிலான ஏழு பிரக்ருதி வடிவங்கள் அவற்றின் காரணங்களில் அடுத்தடுத்து நுழைகின்றன. பிரம்மாவின் முட்டை அதன் ஏழு லோகங்கள், ஏழு பெருங்கடல்கள், ஏழு தீவுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட நீரில் கரைகிறது. நெருப்பினால் தண்ணீர் குடிக்கப்படுகிறது; காற்றானது நெருப்பின் அடுக்கை உறிஞ்சுகிறது. காற்று ஈதரில் இணைக்கப்பட்டு பூதாதி அல்லது அஹம்காரம் ஈதரை விழுங்குகிறது. மஹத் மீண்டும் அஹம்காரத்தை எடுத்துக்கொள்கிறார். பிறகு பிரக்ருதி மஹத்தையும் இவை அனைத்தையும் உள்வாங்குகிறது. பிரக்ருதியும் புருஷனும் பரம ஆத்மாவில் கரைந்து விடுகிறார்கள். இது பிரக்ருத பிரளயம்.

3.அத்யாந்திகா பிரளயா:

முழுமையான அல்லது இறுதியான கலைப்பு பரம்பொருளின் அறிவால் (ஆத்ம ஞானம், மெய்யறிவு) அடையப்படுகிறது. எல்லா உயிர்களும் அத்யாத்மிகா, அதிபௌதிகா, ஆதிதைவிகா ஆகிய மூன்று விதமான உலகத் துன்பங்களால் பீடிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. விஷ்ணு புராணம் இந்த மூன்று வகையான வலிகளையும் விவரிக்கிறது. அத்யாத்மிகா என்பது உடல் மற்றும் மனதினால் எஊற்படும் வலி; மிருகங்கள், பறவைகள் போன்றவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் தீமையே அத்யாத்மிகா எனப்படும். ஆதிதைவிக வலி என்பது குளிர், வெப்பம், காற்று, மழை, மின்னல் மற்றும் பிற வளிமண்டல நிகழ்வுகளின் வேலை. மெய்ப்பொருள் அறிவு (ஆத்ம வித்யா, பிரம்ம ஞானம்) மட்டுமே இந்த மூன்று வகையான துன்பங்களிலிருந்து மனிதனை மீட்கும். ஒரு மனிதன் உண்மையான, அறிவு மற்றும் மனித இன்னல்களில் இருந்து பற்றின்மை அடையும் போது, அவன் பரம்பொருளுடன் ஒன்றற கலக்கிறான். இந்த பிரளயத்தில், யோகிகள் பரமாத்மாவில் இணைந்துள்ளனர்.

4.நித்ய பிரளயா:

நித்யா அல்லது நிரந்தர லயம் என்பது அனைத்து உயிரினங்களின் மறைவு என்று கூறப்படுகிறது. தொடர்ந்து நிகழும் இக்கலப்பிற்கு ஜீவராசிகளின் மரணம் என வல்லுநர்கள் இதை விளக்குகிறார்கள். சில வேதாந்திகள் நித்ய பிரளயத்தை சுசுப்தி அல்லது ஆழ்ந்த உறக்கம் என்று விவரிக்கின்றனர்.

முடிவுரை

ஐந்து பகுதி ஆய்வின் மூலம் அறிவியல் மற்றும் நமது ஆன்மீக கண்ணோட்டங்களின்படி அண்டப் பரிணாமத்தை அறிய முயன்றோம். 

நாராயணீயம், தசகம் 5 அண்டத்தின் படைப்பை விவரிக்கின்றது. நாராயண பட்டத்ரீயின் ஸ்லோகங்களை அறிந்து கொள்ள இந்த அடிப்படை அறிவு இன்றியமையாதது.

அடுத்த பதிவுகளிலிருந்துது நாராயணீயம் தசகம் ஐந்தினை ஆராயலாம்

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!