Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 2. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 2

Link to Audio for chanting

https://www.dropbox.com/scl/fi/avy5ur4q0ivph1yjxg7wp/Verse-2.mp3?rlkey=e6he6zmr8fy4wd9on5hzshqg3&dl=0

Sanskrit Verse

जङ्घे तलातलमथो सुतलं च जानू
किञ्चोरुभागयुगलं वितलातले द्वे ।
क्षोणीतलं जघनमम्बरमङ्ग नाभि-
र्वक्षश्च शक्रनिलयस्तव चक्रपाणे ॥२॥

Translation in Tamil

சுழல்சக்கரம்தரி குருவாயூரனே ! உன்
முழங்கால்கள் தலாதல உலகமென
துடைகள் அதல விதல உலகமென
இடை இப்புவியென, உந்தி வானென
மார்பகம் உம்பர்வாழ் உலகமென
அமைந்தன என உரைவரே முனிஞானியர் 6.2

Transliteration in English

janghe talaatalamathO sutalaM cha jaanuu
ki~nchOrubhaagayugalaM vitalaatale dve |
kshONiitalaM jaghanamambaramanga naabhirvakshashcha
shakranilayastava chakrapaaNe ||

Transliteration in Tamil

ஜங்கே₄ தலாதலமதோ₂ ஸுதலம் ச ஜாநூ
கிஞ்சோருபா₄க₃யுக₃லம் விதலாதலே த்₃வே |
க்ஷோணீதலம் ஜக₄நமம்ப₃ரமங்க₃ நாபி₄-
ர்வக்ஷஶ்ச ஶக்ரநிலயஸ்தவ சக்ரபாணே || 2||

Meaning in English

O Lord! The wielder of the Discus! (One who handles the Chakra with skill and easily). Then “Your” shanks (a part from the knee to the ankle) are ‘Talatala’ and “Your” knees are ‘Sutala’, further, two parts of “Your” thigh region (the lower part of the thighs and waist region) are the two worlds ‘Vitala’ and ‘Atala’ respectively. “Your” hip is the Earth, navel is the Sky and “Your” chest ‘Swarga’, the abode of Indra.

Meaning of the Sanskrit Words

जङ्घे तलातलम्- (Thy) shins Talaata

अथ: सुतलं च जानू - then, Sutala (are Thy) knees

किञ्च-उरु-भाग-युगलं - moreover, the two thighs (are)

वितल-अतले द्वे - the two (worlds) Vitala and Atala

क्षोणीतलं जघनम्- the earth is (Thy) hip

अम्बरम्-अङ्ग नाभि: - sky is O Lord! the navel

वक्ष: - च -and the chest

शक्र-निलय: तव - of Thine is the abode of Indra (swarga)

चक्रपाणे - O Wielder of the discus

நாராயணீயம் தசகம் 5 – அண்டப் பரிணாமம் – ஆன்மீக கண்ணோட்டம் – பகுதி 1 – மந்திரவாதியும் மந்திரக் காட்சியும்.

ஶ்ரீ குருவாயூரப்பன்
முக்கிய அறிவிப்பு

இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.

நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.

இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களின் சாரத்தை ஒரே பதிவில் எழுதுவது, வேதாந்தத்தில் ஆரம்ப நிலை மாணவனாக உள்ள எனக்கு இயலாத காரணம். ஆகையினால் இதனை பல சிறு பகுதிகளாகப் பிரித்து பதிவுகளை வெளியிடுகிறேன் உங்கள் அனுமதியுடன். இதோ முதல் பகுதி.

மந்திரவாதி

அறிவியல் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக, முந்தைய வலைப்பதிவில், உருவாக்கப்பட வேண்டிய அவசியமின்றி படைப்பை உருவாக்கும் "மந்திரவாதி" யார் என்பதை புரிந்துகொள்ள முயன்றோம். அந்த முயற்சியில் முக்கிய கேள்விக்கு விடை ஒன்றும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பேரியக்கமெனும் “பிக் பேங்கிற்கு” (Big Bang) முன்பான "காரணமற்ற காரணத்தை" அறிவியல் இன்றும் அறியவும் இல்லை, அதற்கேற்ற விளக்கமும் தரவில்லை.

ஆகையினாலே, பொறி புலன்களால் அறியும் காரணமில்லாமல் எந்தக் காரியமில்லை (விளைவு) என்ற கோட்பாடு ஒன்றில் மட்டுமேலேயான திடமான நம்பிக்கை, பொருள் சார்ந்த பொறி புலன் துணைகொண்ட புற நோக்கு என்று இரண்டு முக்கிய வரையறுகளுக்குள் உட்பட்ட அமைப்புகளுக்கு வெளியே நாம் பார்க்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொண்டோம்; ஏனெனில் அந்த காரண - விளைவு அமைப்புகளுக்குள், "காரணமற்ற காரணம்" என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. மேலும், நிறை -ஆற்றல் (matter & energy), அதன் விளைவுகள் இவைகளைக் கடந்து இருப்பு-உணர்வு (existence & consciousness) என்ற இரண்டையும் கொண்ட "ஏதாவது" ஒன்றை நாம் அறிய வேண்டும் என்றும்முந்தைய பதிவில் கண்டோம். ஆக, அறிவியலுக்கு அப்பால் நாம் பார்க்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

நமது முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் அவர்கள் இருந்த காலகட்டத்திற்கேற்ப, பொறி புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆழ்ந்த தியானங்களின் மூலம், விரிவாக இயற்கையின் இயல்பினை அறிந்து, நாம் புரியும் வினைகளையும் வினைப்பலன்களையும் தரவுகளாக கொண்டு, அந்த "காரணமற்ற காரணத்தில்" கவனம் செலுத்தி உள்நோக்கி சிந்தித்து, அதற்கேற்றபடி வாழ்ந்து, வழிமுறைகளையும், அனுபவங்களையும் தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தனர்.

அந்த "காரணமற்ற காரணத்தை" அவர்கள் "பிரம்மன், பரமன்", "ஆன்மா", “பரம்பொருள்” என்று அழைத்தனர். அந்த "பிரம்மன்" என்பது "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் தத்துவம் என்று கூறினர்.

அந்த தத்துவத்தை பொருள் சாரந்த பொறி புலன்களால் விவரிக்க இயலாது. எனவே, நமது மறைகள் அந்த தத்துவத்தை, இது இல்லை, இது இல்லை, இவைகள் அல்ல என்றெல்லாம் விவரிக்கின்றன.

“கண்ணுக்குத் தெரியாதது, சிந்திக்க முடியாதது, பரம்பரை இல்லாதது, எந்த வகைப்பாடும் இல்லாதது (வர்ணம்), கண்கள் மற்றும் காதுகள் இல்லாதது, கைகள் மற்றும் கால்கள் இல்லாதது, மற்றும் நித்தியமானது, எங்கும் நிறைந்தது, மிகவும் நுட்பமானது மற்றும் அழியாதது” என்கிறது முண்டக உபநிஷதம்

முதலும் முடிவும் இல்லா நீக்கமற நிறைந்த அந்த நித்ய உண்மையே அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. எனவே, அந்த இறுதி உண்மை எனும் பிரம்மன்/பரம் பொருளை - “தத் ஏகம்” - வகைப்படுத்த முடியாது.

அது குணங்கள் இல்லாதது, எதிர்மறையானவை கூட. நம்மைக் கடந்தும் நமக்கு உள்ளும் உறைவது. எந்தவொரு விளக்கத்தையும் அதற்குப் பயன்படுத்துவது, வரம்பற்றதைக் கட்டுப்படுத்துவதாகும். “விலையில்லா சொல்லாத சொல்” அது.

அந்தப் பரம்பொருளே மந்திரவாதி.

மந்திரக் காட்சி

பரம்பொருளான பிரம்மம் என்பது தூய பேரின்ப நிலையில், எல்லாவற்றிலும் தன்னை அறியும் தூய இருப்பாய், தூய உணர்வாய் உறைந்திருப்பது. ஆயினும்கூட, படைப்பிற்கு முந்தையதாகக் கருதப்படும் அத்தகைய நிலையை விவரிக்க முயன்ற பிறகு, வேதங்கள் இவை அனைத்தும் ஒரு யூகமே என்று தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறது; ஏனென்றால் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை உறுதியாகக் கூற முடியாது. 

அப்படிப்பட்ட முடிவிலா முழுமையை, மனித அறிவு கொண்டு தீர்மானிக்க முடியாது என்றாலும், அந்த உன்னத பரம்பொருள் மனிதர்களின் உள்ளுணர்விலே தன்னைத்தானே தீர்மானிக்கின்றது; அதாவது தன்னைத் தானே வெளிப்படுத்துகிறது. இதுதான் புரியா புதிராக இருக்கும் மந்திரக் காட்சி.

எப்படி தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது பரம்பொருள் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா.

நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக முன்வைத்து தன்னை வெளிப்படித்திக்கொள்கிறது அந்த பரப்ரம்மம்.

அதாவது கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளில் “நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளும் இருந்து கொண்டு, கோழிக்குள் முட்டையை வைத்து, முட்டைக்குள் கோழியை வைத்து, சிறு விதையில் பெரு தருவினை வைத்து, இல்லாதது ஒன்றில்லை எல்லாமே நான் என்று சொல்லாமல் சொல்லி வைத்து” நமக்கு அந்த தத்துவத்தைப் புரிய வைக்கிறது.

ஆன்மீகத்தில் நாம் கண்டு அனுபவிக்கும் நிலையைப் பொறுத்து நமக்கு நிர்குணப் பரப்ரம்மனெனும் பரம்பொருளாகவோ, சகுணப்ரம்மனெனும் ஈசனாகவோ, உற்ற தேகத்து உயிரான சீவனாகவோ, உயிரை மேவிய உடலாகவோ வெளிப்படுகிறது.

முடிவுரை

இப்படி காட்சிகள் பல கொடுக்கும் அத்தத்துவம்தான் இவ்வுலகை ஆளும் மந்திரவாதி. அதனைத்தான் நாம் கடவுள் என்கிறோம்.  அதனைத்தான் நாராயண பட்டத்ரி ஶ்ரீ குருவாயூரப்பன் வடிவிலே காண்கிறார்.

எனவே நாராயணீயத்தில் ஶ்ரீ குருவாயுரப்பன் என்று நாராயண பட்டத்ரி உரைக்கும் பொழுது, அது ஆதி அந்தமிலா பேரின்ப நிலையில் நீக்கமற நிறைந்திருக்கும் தூய உணர்வினைக் குறிக்கும் என்பதை மனதில் நாம் நிலைத்திட வேண்டும்.

இந்த தத்துவத்தைத்தான் ஆதிசங்கரர், ஶ்ரீதட்சிணாமூர்த்தி வடிவில் கண்டு கீழ்காணும் ஸ்லோகத்தில் எடுத்துரைத்தார்
தட்சிணாமூரத்தி ஸ்தோத்திரம் – 2
இனி அந்த மந்திரவாதி புரியும் மாயாஜாலக் காட்சிகளை நாம் அடுத்த பதிவுகளில் காணலாம்
இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

சங்கரனின் சம்மட்டி அடிகள் – முகவுரை

தமிழ் ஒலித் தொடர் பதிவு இணைப்பு (Link to the Tamil Podcast)

இன்றய காலக் கட்டத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை, இரு வகையாகப் பிரிக்கலாம். 1. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். 2. தமிழ் எழுத, படிக்க தெரியாது; ஆனால் பேச முடியும்; அடுத்தவர் பேசினால் புரிந்து கொள்ள முடியும்.இந்த இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவருக்காக, இந்தப் பதிவின் ஒலித் தொடர் பதிவை (podcast) கீழ்காணும் இணைப்பில் கேட்கலாம்.

https://soundar53.substack.com/podcast

ஏன் பிறந்தாய் மகனே ? ஏன் பிறந்தாயோ? ……….. நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே!

கவிஞர் கண்ணதாசன், திரைப்படம்-பாகப்பிரிவினை
63 வருடங்களுக்கு முன் வந்த பிரபலமான தமிழ் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் தொடக்க வரிகள். வருடங்கள் பல கடந்தாலும் இக்கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனதையும் வருட்டி எடுக்கும் (இடர்கள் நம்மை சூழும் போதாவது) என்றால் அது மிகையாகாது. இந்த திரை இசைப் பாடலில் அடங்கிய தத்துவத்தை இப்போது ஆய்ந்திடலாம்.

மனிதப் பிறவியின் நோக்கம்

மனிதப் பிறவியின் நோக்கம் என்ன? இவ்வினாவிற்கு இப்புவியிலே இன்றும் எண்ணற்ற ஆன்மீகவாதிகள், துறவிகள், முனிவர்கள், தனிநபர்கள், நன்னெறி தத்துவம் பற்றிய எழுத்தாளர்கள், மற்றும் பலர் விடையளிக்க முயன்று கொண்டு வருகின்றனர். இவர்கள் வேறுபட்ட பாதைகளில், மாறுபட்ட கருத்துக்களுடன் ஆராய்ந்த போதிலும் அனைவரும் ஒப்பும் ஒரு உண்மை:

“ஆறறிவு பெற்ற மானிடர் அனைவருமே துன்பம் தவிர்த்து நிலையான இன்பமடையவே அவர்தம் பணிகளின் குறிக்கோளாக வைத்து அவரவர் பணிகளைப் புரிகின்றனர்”

என்பது. இதில் ஐயமேதுமில்லை.

வட மொழியில் வாழ்வின் பொருள் என்பதை புருஷார்த்தம் என்பர். புருஷார்த்தம் என்பது தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் எனபவைகளுக் குறிக்கும். இதனையே அறம், பொருள், இன்பம், வீடு என தமிழில் கூறுவர்.

அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்பதுவே இவ்வழி முறையாகும். அதாவது, முதலில் தர்மத்தை அறம் என்று சொல்லி, அதைத் செய்வதற்காகவே எப்படிப் பொருள் ஈட்ட வேண்டுமோ அந்த நியாயமான முறையைச் சொல்லி, அதனால் இன்னின்ன இன்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று பக்குவம் வருகிற வரையில் கிரமப்படுத்திக் கொடுத்து, அப்புறம் இந்தச் சின்ன சின்ன இன்பங்களை எல்லாம் விடுத்து, இறுதியில் நிரந்தர இன்பமான வீடு என்கிற மோக்ஷத்தைக் காட்டுவதே வாழ்வியல் முறை எனும் நான்கு புருஷார்த்தங்கள்.

பாரதியாரின் எளிமையான வாக்கில் இந்நான்கும் இதோ:

தன்னைக் கட்டுதல் அறம்
பிறர் துயர் தீர்த்தல் பொருள்
பிறர் நலம் நாடுதல் இன்பம்
உலகு காக்கும் ஒருவனைப் போற்றுதல் வீடு.

மனிதப் பிறவியின் நடப்பு

அந்த ஆனந்தத்தை அடைய முயலும் நம் அனைவரின் வாழ்க்கையிலும் அன்றாடம் இடைவிடாது, முக்கியமான மூன்று பெரும் தத்துவங்கள் தொடர்பு கொள்கின்றன. அவை, மனிதன், உலகம் (படைப்பு), இறைவன். 

இவைகளை வாழ்வில் உபயோகித்து (அனுபவித்து) , வினைகள் புரிந்து, “பொருள்” தேடி, “இன்பம்” துய்த்து, களைத்து, முடிவில்

“நாம் வந்த கதை என்ன? நாம் கொண்டது என்ன, கொடுப்பது என்ன? மன்னைத் தோண்டி தண்ணீர் தேடும் நாம், நம்மைத் தோண்டி ஞானம் கண்டோமா? இல்லை, நம் மனமெங்கும் தெருக் கூத்து, பகல் வேஷமா?”

என்றெல்லாம் பிதற்றி, தன்னை அறிவதே தனது பிறவியின் நோக்கம், அதனை அறிய முயலாமல் வாழ்நாளை வீனாக்கினோமே என துன்பமுற்று, வருந்தி மடிகிறோமே. இது தானே நடப்பு.

தாயுமானவர் இந்த நடப்பைத்தான் இப்படி கூறுகிறார்:

“ஆசைக்கோரளவல்லை அகிலமெல்லாம் கட்டி
ஆளினும் கடல்மீதிலே ஆனை செலவே நினைவர்,

அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்

நெடுநாளிருந்த பேரும் நிலையாகவேயினுங்
காயகல்பந்தேடி புண்ணாவர் எல்லாம்

யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவதுமாகடியும் உள்ளதே போதும்

நான் நான் எனக்குளறியே ஒன்றைவிட்டு ஒன்றைப்பற்றி
பாசக்கடற்குள்ளே வீழ…”

இன்பம் பயக்கா இருள் – ஏன்?

சரி, நமது வாழ்க்கை அனுபவம், நம்மை, நமது வாழ்வின் பொருளை நோக்கிச் செலுத்தவில்லையே! ஏன்? 

இந்தக் கேள்விக்கு, இதோ! மூன்று பதில்கள் - கேள்விகள் வடிவில்:

1. அனுபவிக்கின்றவனை அனுபவிக்காமல், அனுபவிக்கப்படுவைகளை அனுபவிக்க முயலும் அறிவிலிகளாக அலைகிறோம் நாம்; அல்லவா! (ஆஹா! நம்ம மொபைல் ஃபோனில் இருந்து நம் சொந்த மொபைல் எண்ணயே அழைக்கிறேனே! எப்படி பதில் கிடைக்கும்? அது போல இருக்கே இந்தக் கேள்வி).

2. அறிவைத் தரும் கருவிகளின் துணை கொண்டு, அறியப்படும் பொருள்களை அறியும் நம்மை, எந்த அறிவைத் தரும் கருவிகளைக் கொண்டு அறிவது என்று என்றேனும் ஆராய்ந்தோமா?

3. “நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குதற் சோதி நான்”

என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி கூறிய “நான்” ஆக இல்லாமல், “இன்பமாகிய நாம், தம்மை இன்பெமென அறியாமல், துன்பத்தின் பின்னால், துன்பத்தில் இன்பம் இருக்கின்றதென்று ஏன் ஓடிக்கொண்டிருந்தோம்”.

கேள்விக்கு என்ன பதில்?

சரி. குழம்பி இருக்கும் நம்முடைய கேள்விகளுக்கு பதில் கூறாமல், கேள்விகளையே திருப்பி வைத்தால், நாம் என்ன செய்வது? எங்கு செல்வது? - நம் அனைவரின் சிந்தனை, அல்லவா! 

சுலபம். வாருங்கள், நம் அனைவரையும் ஒரு கொல்லன் பட்டறைக்கு கூட்டிச் செல்லலாம். அங்கே நமக்கு விடைகள் கிடைக்கும். ஆனால், ஒரு நிபந்தனை! அங்கே ஆசாரி நமக்கு 31 சம்மட்டி அடிகள் கொடுப்பார். அவைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஒன்று மட்டும் நிச்சயம்/உத்தரவாதம். அந்த முப்பதொன்று அடிகளை, கொல்லன் பட்டறையில் இரும்பு வாங்கும் அடிகளாக நாம் ஏற்றிட்டால், கனிந்து மாறிடும் இரும்பு போல,

இருள் நீங்கி இன்பம் பயக்கும்
மருள் நீங்கி மாசறு காட்சி

நமக்கு கிட்டி, நாம் மாறுவோம். அதில் சந்தேகமே இல்லை. சம்மதமா?

பயம் தவிர்த்து, அந்த உத்தரவாதத்துடன் வாருங்கள் ஆதி சங்கரனின் பட்டறைக்கு.
வருக! வருக! மாதம் ஒருமுறையாவது, சங்கரனின் பட்டறைக்குச் செல்வோம், சம்மட்டி அடிகள் வாங்குவோம். பின், நமது நிலையை உணர்வோம்.
சங்கரனின் சம்மட்டி அடி 1 - நவம்பர் 11ம் தேதியில் - கற்ற கல்வியும் சுற்றி விழும் காலன் கயிறும் - யாக்கை நிலையாமை - அடுத்த பதிவில். அதுவரை
இறையருள் பெருக. வளமுடன் வாழ்க

முக்கிய குறிப்பு: இப்பதிவும், வரும் தொடர் பதிவுகள் அனைத்தும், பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காரானந்தாவின் விரிவுரைகளால் ஈர்க்கப்பட்டு, சுவாமிஜியின் சொந்த விரிவுரைகளில் இருந்து அடியேன் அறிந்து கொண்டது. இப்பதிவுகளில் காணும் கல்லாப் பிழை, கருதாப் பிழை, எல்லாப் பிழைகளுக்கும் அடியேனின்அறியாமையே காரணம். அவைகளை சுட்டிக்காட்டின், அடியேனின் அறியாமையைக் களைய உதவும். நன்றி.

Isavasya Upanishad – ஈசனின் உறைவிடம்

அடியேனின் முதல் தமிழ் புத்தகம்.

Amazon Kindle பதிப்பு

தங்களின் ஆதரவு தேவை. தங்கள் நண்பர் குழாமிற்கு தெரிவிக்கவும்.

இப்புத்தக விற்பனையில் வரும் பணம் (விற்பனையானால் 😃) முழுவதும் ஆண்டவனிடம் சேரும்.

இறையருள் பெருக. இனிதே வாழ்க

My first book in Tamil is on Isavasya Upanishad and is now available in Amazon Kindle.

Releasing shortly, Paperback edittion in English for overseas customers