Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 5. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 5

Link to the audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/401gtan38laea5ojba4mg/Verse-5.mp3?rlkey=a561mqktct5s89b9ce7691lxs&dl=0

Sanskrit Verse

निश्शेषविश्वरचना च कटाक्षमोक्ष:
कर्णौ दिशोऽश्वियुगलं तव नासिके द्वे ।
लोभत्रपे च भगवन्नधरोत्तरोष्ठौ
तारागणाश्च दशना: शमनश्च दंष्ट्रा ॥५॥

Translation in Tamil 

அறுகுணமுடை ஆண்டவனே, உந்தன்
கடைவிழிப் பார்வையில் அண்ட படைப்பு!
காணும் திசைகள் எட்டும் உன்னிரு செவி!
நாசிகள் இரண்டும் பரியேறு பரிதி குமரர்!

உன்னிரு இதழ்களும் அவாவுடன் பணிவு!
உனதெழில் பல்வரிசை வின்மீண்கள்!
உன் கடைவாய் பற்கள் காலனவனன்றோ !! 6.5

Transliteration in English 

nishsheShavishvarachanaa cha kaTaakshamOkshaH
karNau dishO(a)shviyugalaM tava naasike dve |

lObhatrape cha bhagavannadharOttarOShThau
taaraagaNaashcha radanaaHshamanashcha damShTraa ||

Transliteration in Tamil 

நிஶ்ஶேஷவிஶ்வரசநா ச கடாக்ஷமோக்ஷ:
கர்ணௌ தி₃ஶோ(அ)ஶ்வியுக₃லம் தவ நாஸிகே த்₃வே |

லோப₄த்ரபே ச ப₄க₃வந்நத₄ரோத்தரோஷ்டௌ₂
தாராக₃ணாஶ்ச த₃ஶநா: ஶமநஶ்ச த₃ம்ஷ்ட்ரா || 5||

Meaning in English 

“Your side-long glance constitutes the creation of all the fourteen worlds. Hence, it is needless to say that the closure of Your eye lids is the Great Deluge; Your ears are the Directions; the two Nostrils are the pair of Ashwini devas; Your Upper and lower lips represent modesty and greed respectively; Your Teeth, the Stars and Your Molars is Yama, the God of Death”

Meaning of the Sanskrit Words 

निश्शेष-विश्व-रचना च - the creation of the whole universe

कटाक्ष-मोक्ष: - is by extending a glance of Thy eye

कर्णौ दिश: - (Thy) ears are the directions (quarters)

अश्वियुगलम् - the two Ashvinidevas

तव नासिके द्वे - are Thy two nostrils

लोभत्रपे च - greed and modesty

भगवन् - O Lord!

अधर-उत्तर-ओष्ठौ - (are Thy) lower and upper lips

तारा-गणा: - च - and the galaxy of stars

दशना: - are Thy teeth

शमन: च दंष्ट्रा - the molars are Yama (the god of death

அஷ்டாவக்ர கீதை

அஷ்டாவக்ர கீதையின் ஸ்லோகங்களுக்கு விளக்கவுரைகள், புத்தக வடிவில் குறைவு. சமூக வலைத் தடங்களில் பல பெரியோர்கள் தங்களது விளக்கங்களை ஒளி அல்லது ஒலிப் பதிவுகளாக வெளியிட்டுள்ளனர்.

அடியேனின் ஏட்டறிவு, கீழ்காணும் நூல்கள், ஒளிப்பதிவுகள் ஆகியவற்றிலிருந்து.

  1. பகவத் கீதை – தத்துவ விவேசினீ – கீதா பிரஸ்ஸின் விரிவுரை
  2. திருக்குறள்.
  3. திருமந்திரம்.
  4. தாயுமானவர் பாடல்கள்
  5. சுவாமி சின்மயானந்தரின் அஷ்டாவக்ர கீதை விளக்கவுரை நூல்,
  6. சுவாமி பரமார்த்தானந்தரின் அஷ்டாவக்ர கீதை விளக்கவுரைகளை தொகுத்து வெளியிடப்பட்ட எழுத்துப் பதிவுகள்,
  7. பகவான் ரமணரின் தமிழாக்கம்,
  8. குருநாதர் சுவாமி ஓம்காரானந்தரின் வேதாந்த சொற்பொழிவுகள்,
  9. பகவான் ரமணரின் உள்ளது நாற்பது

பொதுவாக ஒரு புதிய பாடத்தையோ, அறிக்கையையோ, பதிவினையோ நான் படிக்கத் துவங்கினால், குறிப்புகள் எடுத்துக்கொள்வது எனது பழக்கம். அப்படி எடுத்துக்கொண்ட குறிப்புகளின் தொகுப்பினை புத்தக வடிவத்தில் (இரண்டு பாகங்களாக) வெளியிட்டுள்ளேன்.

  1. முதல் பாகம் ஸ்லோகங்களின் தமிழாக்க முயற்சி.
  2. இரண்டாவது பாகம் விளக்கவுரைகளின் தொகுப்பு.

இந்தப் புத்தகம், உலகுக்கு என் அறிவை வெளிப்படுத்தும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.

ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவி நான்,
அத்வைதவாஞ்சையதால், அரியகொம்பில்தேனைஇச்சித்தபடிஆகும்

தாயுமானவர்

என்ற தாயுமானவரின் சொல்லே எனது நிலை.

ஞான யோகத்தில், அரிய முதல்நிலை மாணவனாம் ஜனகருக்கு உரையாடல் வழி உபதேசிக்கப்பட்டதை, அறிவிலியாகிய நான், புத்தக வடிவில் வெளியிடுவது என்பது, என் அகங்காரத்தை அல்ல, மடமையைக் குறிக்கிறது என்றே கூறலாம்.

இந்த புத்தகங்களை நோஷன் பிரஸ் (Notion Press) “அமேஸான் (Amazon) ”, “ப்ளிப்கார்ட் (Flipkart) முதலிய விற்பனை தளங்களிலிருந்து பெறலாம். அதற்கான இணைப்புகள் இதோ:

முதல் பாகம் – ஸ்லோகங்களின் தமிழாக்கம்

https://notionpress.com/read/ashtavakra-gita-part-1-slokas

https://dl.flipkart.com/dl/ashtavakra-gita-part-1-slokas/p/itme30ee853bf8ac?pid=9798894989969&cmpid=product.share.pp&_refId=PP.ed8a7124-be45-41d7-8599-0642a234c18f.9798894989969&_appId=CL

https://www.amazon.in/dp/B0DB1GT65M

இரண்டாம் பாகம் – விளக்கவுரை

https://notionpress.com/read/ashtavakra-gita-part-2

https://www.amazon.in/dp/B0DBDH46XG

https://dl.flipkart.com/dl/ashtavakra-gita-part-2/p/itme77a5d62c2674?pid=9798895192696&cmpid=product.share.pp&_refId=PP.57d316e7-5e99-40c7-a330-59e9a55e808c.9798895192696&_appId=CL

இந்த புத்தகம் நிச்சயமாக வேதாந்தத்தின் முன்நிலை மாணவர்களுக்கோ அல்லது கற்றறிந்த பெரியோருக்கோ அல்ல. அறியாமையைனும் இருண்ட ஆழ்வனத்தில், மருண்டு அலையும் என்போன்ற சிறியோருக்கு, மின்மினிப்புச்சியின் ஒளியென உதவும் முயற்சியே இந்த புத்தகம்.

இந்த புத்தகங்களின் விற்பனையில் வரும் ஈட்டு அனைத்தும் என்னுடையது அல்ல. அது இறை பணிக்கே என்பது எனது உறுதிமொழி.

சொற்குற்றம், பொருட்குற்றம் கண்டீரெனில், மழலை கூறும் குழவியின் தடுமாற்றம் என்று கருதி, அவைகளை சுட்டிக்காட்டிடுவீர். அறிந்துணர முயன்றிடுவேன்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 4. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 4

Link to the audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/b2zqndhlg7wo25k0ou2ju/Verse-4.mp3?rlkey=8fmg3r4rh3a7wd9go050pw5mh&dl=0

Sanskrit Verse

  त्वद्ब्रह्मरन्ध्रपदमीश्वर विश्वकन्द
छन्दांसि केशव घनास्तव केशपाशा: ।
उल्लासिचिल्लियुगलं द्रुहिणस्य गेहं
पक्ष्माणि रात्रिदिवसौ सविता च नेत्रै ॥४॥

Translation in Tamil

அண்டமதின் ஆணிவேராம் ஈசனே
உன் சுழிமுனையே நீ உரை நான்மறை
சுருண்டிரு எழில் குழல் கருமுகில்!

இரு புருவம் இறைஅயனின் இல்லம்
இமை இரண்டும் இரவு பகல்
இருவிழி என்றும் ஒளிரும் பரிதி !! 6.4

Transliteration in English

tvadbrahmarandhrapadamiishvara vishvakanda
Chandaamsi keshava ghanaastava keshapaashaaH |

ullaasichilliyugalaM druhiNasya gehaM
pakshmaaNi raatridivasau savitaa cha netre ||

Transliteration in Tamil

த்வத்₃ப்₃ரஹ்மரந்த்₄ரபத₃மீஶ்வர விஶ்வகந்த₃
ச₂ந்தா₃ம்ஸி கேஶவ க₄நாஸ்தவ கேஶபாஶா: |

உல்லாஸிசில்லியுக₃லம் த்₃ருஹிணஸ்ய கே₃ஹம்
பக்ஷ்மாணி ராத்ரிதி₃வஸௌ ஸவிதா ச நேத்ரை || 4||

Meaning in English

O Lord who are the root cause of the Universe!  Your” Brahmarandhara (an aperture on crown of the head) is the Vedas. O Keshava, one with luxuriant hair and the Slayer of the demon Kesi! “Your” ornamented hair are the dark clouds. “Your” delightful pair of eyebrows are the abode of Brahma, the Creator. “Your” eye-lashes are night and day and “Your” eyes are the sun

Meaning of the Sanskrit Words

त्वत्-ब्रह्मरन्ध्रपदम्- Thy Brahmarandhra area (the psychic orifice on the crown of the head)

ईश्वर विश्वकन्द - O Lord! Thou the source of the universe!

छ्न्दांस - (are) the Vedas

केशव - O Keshava!

घना: तव केशपाशा: - the dark clouds are Thy locks of hair

उल्लासि-चिल्लि-युगलं - the delightful two eyebrows

द्रुहिणस्य गेहं - are the abode of Brahma

पक्ष्माणि - the eyelashes

रात्रि-दिबिसौ -=are night and day

सविता च नेत्रे - and the eyes are the Sun

பகவத் கீதை ஸ்லோகம் 2.22- மரணம் – பழையன கழிதலும் புதியன புகுதலும்

முகவுரை


ந‌ன்னூ‌ல் எ‌ன்ற இல‌க்கண நூ‌லி‌ன் சொ‌ல் அ‌திகார‌த்‌தி‌ல் உ‌ள்ள “பழையன க‌ழிதலு‌ம் பு‌தியன புகுத‌லு‌ம் வழுவல கால வகை‌யி னானே” எ‌ன்ற தொட‌ர், வழ‌க்‌கிழ‌ந்த இல‌க்கண‌க் கரு‌த்து‌க்களை ‌நீ‌க்குவது‌ம், புதிய வழ‌க்குகளை ஏ‌ற்பது‌ம் தவ‌றி‌ல்லை எ‌ன்‌பதைக் குறிப்பது. அதாவது,
இல‌க்கண‌ம் கால‌‌ந்தோறு‌ம் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌த்‌தி‌ற்கு உ‌ட்ப‌ட்டது எனக் கூறு‌கிறது.  

வீட்டில் உள்ள பயனற்ற பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதுவே இதன் அடிப்படைத் தத்துவம்.

சரி, பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலில் வரும் ஒரு தத்துவத்திற்கும், போகிப் பண்டிகைக்கும், பகவத்கீதைக்கும் என்ன சம்பந்தம்? அதாவது, பழையனவற்றைக் கழித்தலுக்கும், புதியனவற்னை புகுத்தலுக்கும், பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு? போர்க்களத்தில் பார்த்தனுக்கு, சாரதியான கண்ணன் இதைப்பற்றி என்ன அறிவுரை வழங்கினான்?

வாருங்கள், ஒரு முக்கியமான ஸ்லோகத்தை அறிய முற்படுவோம்.

ஸமஸ்க்ருத ஸ்லோகம்

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா2 விஹாய
நவாநி க்3ருஹ்ணாதி நரோபராணி!

ததா2 ஸரீராணி விஹாய ஜீர்ணா
ந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே3ஹீ!!

பகவத் கீதை 2.22

பொருள் விளக்கம்

தொப்புள் கொடி உறவாக தொடங்கிய நாம், முதலில் நம்மை நமது உடலுடன் பிண்ணி இணைக்கிறோம். இது இயல்பு. பின் வளர்ச்சியின் அங்கமாக அது படிப்படியாக உறுதியாகி, உடலே உயிர் எனும் உணர்வினை அடைகிறோம். அதனை வளர்க்க, மெருகுபடுத்த, காக்க, விதவிதமான பொருள், செயல்முறை என்று பலவற்றை உபயோகப்படுத்துகிறோம்.

காலன் விதித்திட்ட வேளை வந்தால் செத்து மடிகிறோம். நாம் இவ்வுலகில் வந்திறங்கியது எதற்காக, வந்து புரிந்தது என்ன என்று அறியாமல்கூட செல்கிறோம். இருக்கும் போது, நாம் இருக்கும் காயம் ஒரு பொய்; இந்த யாக்கை நிலையாதது என்று நொடிப்பொழுதும் உள்நோக்கி ஆய்ந்ததில்லை. இதுதான் யதார்த்தம். மரணம் என்பது ஒரு கசப்பான உண்மை என்பதை உணர மறுக்கிறோம். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ளத்தான் பகவான் கண்ணன் பார்த்தனுக்கு இந்த ஸ்லோகம் வழியாக அறிவுரை வழங்குகிறான்.

“எப்படி ஒரு மனிதன் நைந்து போன ஆடைகளை கழட்டிவிட்டு வேறு புதியவற்றை அணிந்து கொள்கிறானோ, அப்படியே தேஹத்தில் உறைபவன், நைந்து போன உடல்களை விட்டுவிட்டு வேறு புதியவற்றை அடைகிறான்”

என்று பகவான் ஶ்ரீக்ருஷ்ணர் மரணத்தைப் பற்றி கூறுகிறார்.

தாய், குழந்தைக்குப் பழைய அழுக்கான உடுப்பைக் கழட்டிவிட்டு புதியதை அணிவிக்கிறாள். அப்போது குழந்தை அழுகிறது. ஆனால் தாயார் குழந்தை அழுவதைப் பொருட்படுத்துவதில்லை. குழந்தைக்கு “ஹிதம்” (நன்மை) என்று, புதியதை மாற்றிக் கொடுக்கிறாள்.

அது போல, பகவானும் ஜீவனுக்கு ஹிதமாக அவன் அழுவதை கவனியாமல் அவன் உடலை மாற்றிக் கொடுக்கிறார். உடலுக்கு உடை ஆடை; உயிருக்கு உடல் ஆடை.

இதைப் புரிந்தவர் அழுவதில்லை; புரியாதவர் அழுகின்றனர். அதனால்தான் “செத்த பிணத்தைப் பார்த்து சாகாத பிணம் அழுகிறது” என்பர் ஞானியர்.

சொற்களின் உபயோகமும், அவைகளில் பதிந்துள்ள உட்கருத்துக்களும்ஒரு கண்ணோட்டம்

1. “ஜீர்ணாநி” என்பதற்கு நைந்து போனது என்ற பொருளாகும். இந்த சொல் துணிகளுக்குப் பொருந்தும். நைந்த உடலென்று பகவான் ஒப்பிடுவது, வயதாகித் தேய்ந்த (நலிந்த) உடலுக்குத்தான் மரணமெனும் உடை மாற்றத்தைக் குறிப்பதல்ல. சிறு வயதிலும் மரணமெய்தலாம். உடல் நலிவு என்பது, “ஆயுள் முடிந்தது” என்ற பொருளில் கூறப்படுவது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

2. உடையை மாற்றிக் கொள்பவன் ஒரே சமயத்தில் பல உடைகளை (உள்ளாடை, வேஷ்டி, சட்டை, அங்கவஸ்த்திரம் என) மாற்றிக் கொள்ளமுடியும். உயிரைப் (ஜீவாத்மாவைப்) பொருத்தவரை, ஒரே உடலைத்தானே மாற்ற இயலும் என்று இருக்கையிலே, “வாஸாம்ஸி”, “ஸரீராணி”, என்று பன்மையில் பகவான் கூறுவதன் உட்கருத்து என்ன என்பதை இருவகையில் ஆயவேண்டும்:

• ஜீவன் இதுவரை எவ்வளவு உடல்களை விட்டுப் புதிய உடல்களை அடைந்திருக்கிறதோ, அவற்றுக்குக் கணக்கு கிடையாது. வரும் காலத்திலும், ப்ரம்ம ஞானமெனும் ஆத்ம ஞானம் கிட்டும்வரை, இன்னும் எத்தனைப் பழைய உடல்களைவிட்டுப் புதிய உடல்களை அடையப் போகிறது என்பதும் தெரியாது. எனவே சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

• ஸ்தூலம், ஸூக்‌ஷ்மம், காரணம் என்று மூன்று உடல்கள் ஜீவனுக்கு உள்ளன. இந்த உடலுவிட்டு அடுத்த உடலை அடையும்போது, இந்த மூன்றும் மாறுகின்றன. ஸத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஒவ்வொருவருக்கும் குணமயமான, அவனுக்கே உரித்தான, தனித்தன்மையுடைய “வ்யஷ்டிப்ரக்ருதி” அமைகிறதே, அது காரண ஸரீரம். இதையே “ஸ்வபாவம்” என்பர். மனிதன் எப்படிச்செயல்படுகிறானோ, அதற்கு ஏற்றவாறு ஸ்வபாவம் மாறுகிறது. இந்த ஸ்வபாவத்திற்கு ஏற்றவாறுதான் உயிர் பிரியும்போது மனதில் எண்ணமும் உண்டாகிறது. அதன்படிதான் அவனுக்கு ஸூக்‌ஷ்ம ஸரீரம் அமைகிறது. காரணம், ஸூக்‌ஷ்மம் என்ற இரு ஸரீரங்களுடன் இந்த உடலை (ஸ்தூல ஸரீரத்தை) விட்டுப்பிரிந்த பின்னர், ஸூக்‌ஷ்மத்திற்கேற்றவாறு அடுத்த பிறவியில் ஸ்தூல ஸரீரத்தைப் பெற்று, காரண ஸரீரத்திற்கேற்றவாறு அடைந்த அந்த அடுத்த உடலில் அவனது ஸ்வபாவம் அமைகிறது. இப்படி மூவுடலும் மாறுவதால், சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

3. ஆத்மாவிற்கு அசைவில்லை, போக்குவரத்து இல்ல. எனவே ஜீவாத்மா எனும் “தேஹி” அடுத்த உடலைப் போய் சேர்கிறான் என்று சொல்வது எப்படி பொருந்தும் என்பதை இப்போது ஆய்வோம்.

உண்மையில் ஆத்மாவிற்கு அசைவில்லை, செயலில்லை, எந்த நிலையிலும் போக்குவரத்தும் இல்லை. ஆனால், ஒரு குடத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போகும்போது, அதற்குள் இருக்கும் ஆகாயம் போகவில்லையானாலும், குடத்துடன் சம்பந்தத்தால் அது போவதாக நினைக்கிறோம் அல்லவா!

அதுபோல, ஸூக்‌ஷ்ம ஸரீரம் போகும்போது, அத்துடன் இணைந்த ஆத்மாவும் போவதாகத் தெரிகிறது. இதை உலகத்தார்புரிந்து கொள்ளவே, உயிர் வந்து போவதாக கற்பனை செய்து கூறப்பட்டது. “தேஹீ” என்றால் சரீரத்தை உடையவன் என்று பொருள். தேஹத்தை உற்ற உயிர் என்பர். ஆகவே உடலின் சம்பந்தத்தால் அவனிடம் போக்குவரத்து என்ற தோற்றம் ஏற்படுகிறது.

இதனால்தான இந்த ஸ்லோகத்தில் துணியைப் பற்றிக் குறிப்பிடும்போது “க்ருஹ்ணாதி” (ஏற்பது) என்றும், உயிரைப் பற்றிக் கூறும்போது “ஸம்யாதி” (செல்லுதல்) என்ற சொல்லும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

3. “நர”, “தேஹி” என்ற சொற்களின் விளக்கம்

ஆடையை அணிவது, நைந்தது, துறப்பது என்பவைகள் எல்லாம் மனிதனுக்கே உரித்தானது. எனவே இந்த ஸ்லோகத்தில் முதல் சொற்றொடரில், மனிதனைக் குறிக்கும் “நர” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. உடல்களின் போக்குவரத்து என்பது, உடலபிமானமுடைய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். எனவே இரண்டாவது சொற்றொடரில் “தேஹி” என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்லோகத்தின் உட்கருத்து

ஆத்மா உடல் எடுப்பதில்லை, ஸூக்‌ஷும ஸரீரம் மட்டுமே உடல் எடுக்கிறது. ஸூக்‌ஷ்ம ஸரீரமே (mind) பயணிக்கிறது. தூய உணர்வாகிய நான் எங்கும் பயணிப்பதில்லை. நான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.

இறைவனும் ஆத்மாவும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவை. எனவே இறைவனும் ஆத்மாவும் ஒன்றே. இறைவனது உபாதியும், ஆத்மாவின் உபாதியும் வேறு. இறைவன் காரண உபாதியை உடையவர், ஆத்மா காரிய உபாதியை உடையது. காரணமும் காரியமும் மாயத்தோற்றங்களே. இருப்பது பரம்பொருள் ஒன்றே.

ஆத்மா எதையும் அனுபவிக்க வேண்டியதில்லை. அனுபவங்கள் அனைத்தும் மாயை. அனுபவிப்பவனைப் பற்றிய உண்மையே நமக்கு முக்தியை கொடுக்கும். எந்த அனுபவமும் மோக்‌ஷத்தை கொடுக்காது.

அனைத்து உயிர்களில் இருக்கும் ஆத்மா நானே என்கிறான் கண்ணன்.

இதுதான் இந்த ஸ்லோகத்தின் சாரம்.

இதனைத்தான் கவிஞர் கண்ணதாசன், காலத்தால் அழியாத அருமையான திரையிசைப் பாடலாக வடித்துள்ளார்.

பாடலைக் கேளுங்கள்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 3. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 3

Link to Audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/12u6hjxt5cblqjqdlcuml/Verse-3.mp3?rlkey=b685prkio4kq0nw9lalku3o1g&dl=0

Sanskrit Verse

ग्रीवा महस्तव मुखं च जनस्तपस्तु
फालं शिरस्तव समस्तमयस्य सत्यम् ।
एवं जगन्मयतनो जगदाश्रितैर-
प्यन्यैर्निबद्धवपुषे भगवन्नमस्ते ॥३॥

Translation in Tamil

உன் மிடறு மகர, முகம் ஜன, நுதல் தவ, சிரம் சத்ய
உலகென ஈரேழு உலகம்தனை உன் உள்ளடக்கி
உன்னுடல் உலகப் பொருட்கள் அனைத்தாலுமே – அந்த
உலகுடலோன் உனைத் துதிப்பேன் குருவாயூரப்பனே 6.3

Transliteration in English

griivaa mahastava mukhaM cha janastapastu
phaalaM shirastava samastamayasya satyam |
evaM jaganmayatanO jagadaashritairapyanyairnibaddhavapuShe
bhagavannamaste ||

Transliteration in Tamil

க்₃ரீவா மஹஸ்தவ முக₂ம் ச ஜநஸ்தபஸ்து
பா₂லம் ஶிரஸ்தவ ஸமஸ்தமயஸ்ய ஸத்யம் |
ஏவம் ஜக₃ந்மயதநோ ஜக₃தா₃ஶ்ரிதைர-
ப்யந்யைர்நிப₃த்₃த₄வபுஷே ப₄க₃வந்நமஸ்தே || 3||

Meaning in English

O Lord! Thy body is the whole universe. Maharloka is Thy neck. Janaloka is Thy face. Tapoloka is Thy forehead. Satyaloka is Thy head. Of all the other things of which the universe is made, Thy body is also conceived of being made up of all that. O Lord! salutations to Thee.

Meaning of the Sanskrit Words

ग्रीवा मह: - तव - Thy neck is Maharloka

मुखं च जन: - and face is Janaloka

तप: - तु फालं Tapoloka, indeed, is forehead

शिर: - head

तव समस्तमयस्य of Thee who are everything

सत्यम् - is Satyaloka

एवं - in this manner

जगन्मयतनो - whose body is the universe!

जगदाश्रितै:-अपि-अन्यै: - of all other things forming the universe

निबद्धवपुषे - whose body is conceived as being made up of

भगवन् नम: - ते - O Lord! Salutations to Thee

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 2. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 2

Link to Audio for chanting

https://www.dropbox.com/scl/fi/avy5ur4q0ivph1yjxg7wp/Verse-2.mp3?rlkey=e6he6zmr8fy4wd9on5hzshqg3&dl=0

Sanskrit Verse

जङ्घे तलातलमथो सुतलं च जानू
किञ्चोरुभागयुगलं वितलातले द्वे ।
क्षोणीतलं जघनमम्बरमङ्ग नाभि-
र्वक्षश्च शक्रनिलयस्तव चक्रपाणे ॥२॥

Translation in Tamil

சுழல்சக்கரம்தரி குருவாயூரனே ! உன்
முழங்கால்கள் தலாதல உலகமென
துடைகள் அதல விதல உலகமென
இடை இப்புவியென, உந்தி வானென
மார்பகம் உம்பர்வாழ் உலகமென
அமைந்தன என உரைவரே முனிஞானியர் 6.2

Transliteration in English

janghe talaatalamathO sutalaM cha jaanuu
ki~nchOrubhaagayugalaM vitalaatale dve |
kshONiitalaM jaghanamambaramanga naabhirvakshashcha
shakranilayastava chakrapaaNe ||

Transliteration in Tamil

ஜங்கே₄ தலாதலமதோ₂ ஸுதலம் ச ஜாநூ
கிஞ்சோருபா₄க₃யுக₃லம் விதலாதலே த்₃வே |
க்ஷோணீதலம் ஜக₄நமம்ப₃ரமங்க₃ நாபி₄-
ர்வக்ஷஶ்ச ஶக்ரநிலயஸ்தவ சக்ரபாணே || 2||

Meaning in English

O Lord! The wielder of the Discus! (One who handles the Chakra with skill and easily). Then “Your” shanks (a part from the knee to the ankle) are ‘Talatala’ and “Your” knees are ‘Sutala’, further, two parts of “Your” thigh region (the lower part of the thighs and waist region) are the two worlds ‘Vitala’ and ‘Atala’ respectively. “Your” hip is the Earth, navel is the Sky and “Your” chest ‘Swarga’, the abode of Indra.

Meaning of the Sanskrit Words

जङ्घे तलातलम्- (Thy) shins Talaata

अथ: सुतलं च जानू - then, Sutala (are Thy) knees

किञ्च-उरु-भाग-युगलं - moreover, the two thighs (are)

वितल-अतले द्वे - the two (worlds) Vitala and Atala

क्षोणीतलं जघनम्- the earth is (Thy) hip

अम्बरम्-अङ्ग नाभि: - sky is O Lord! the navel

वक्ष: - च -and the chest

शक्र-निलय: तव - of Thine is the abode of Indra (swarga)

चक्रपाणे - O Wielder of the discus

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 1. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 1

Link to the Audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/di39albmzdju06c8mnrks/Verse-1.mp3?rlkey=y8u8wlv1dq3m1mqtrrneqhips&dl=0

Sanskrit Verse

एवं चतुर्दशजगन्मयतां गतस्य
पातालमीश तव पादतलं वदन्ति ।
पादोर्ध्वदेशमपि देव रसातलं ते
गुल्फद्वयं खलु महातलमद्भुतात्मन् ॥१॥

Translation in Tamil

ஈரேழு உலகமதின் வடிவு கொண்ட ஈசனே! உன்
கீழிரு உட்பாதங்களே பாதாளமென்றும், உன்
மேலிரு வெளிப்பாதங்களே ரசதளமென்றும்,
உன்னிரு கணுக்கால்கள் மகதளமென்றும்!
கூறுவரே ஞானியர், ஒளியோனே! எழிலோனே!! 6.1

Transliteration in English

evaM chaturdashajaganmayataaM gatasya
paataalamiisha tava paadatalaM vadanti |
paadOrdhvadeshamapi deva rasaatalaM te
gulphadvayaM khalu mahaatalamadbhutaatman ||

Transliteration in Tamil

ஏவம் சதுர்த₃ஶஜக₃ந்மயதாம் க₃தஸ்ய
பாதாலமீஶ தவ பாத₃தலம் வத₃ந்தி |
பாதோ₃ர்த்₄வதே₃ஶமபி தே₃வ ரஸாதலம் தே
கு₃ல்ப₂த்₃வயம் க₂லு மஹாதலமத்₃பு₄தாத்மந் || 1||

Meaning in English

After explaining the evolution of Cosmic Form (Virat Rupa) in Dasakam 5, Sri. Narayana Bhattathri now begins the description of the various parts of this Cosmic Form in this Sloka.


O Lord! “You”, who had taken or assumed in this manner,the form of the 14 worlds. The soles of the feet are said to be “patala”,He Deva! The upper region of “Your” feet, too are said to be “Rasatala”. O Lord, of wondrous form! “Your” two ankles are, indeed, said to be “Mahatala”


From the above, it is understood that out of the 14 worlds, ‘Patala’ is the lowest and that      corresponds with the lowermost portion of the Cosmic body. The lower portion of the feet-Patala, the Upper portion of the feet -Rasatala, two ankles -Mahatala.

Note - The epithets used by Bhattathri in this Sloka (Isha, Deva, AdbhudAtma) are indicative that the Lord shines in all these three worlds too. In fact, there is nothing where the Lord doesn’t shine.

விளக்கவுரை

தசகம் 5 இல் பிரபஞ்ச வடிவத்தின் (விராட் ரூபத்தின்) பரிணாமத்தை விளக்கிய பிறகு, ஸ்ரீ. நாராயண பட்டத்ரி இப்போது இந்த ஸ்லோகத்தில் இந்த பிரபஞ்ச வடிவத்தின் பல்வேறு பகுதிகளின் விளக்கத்தைத் தொடங்குகிறார். 

இரேழு புவனங்களைப் படைத்த ஆண்டவனே! உனது உட்பாதங்களிரண்டும் பாதாளமென்றும், உன் திருவடிகளின் மேல் பகுதி "ரசதல" என்றும் கூறப்படுகிறது. எழில் வதனுமுடையோனே! உன்னிரு கணுக்கால்கள், உண்மையில், "மஹதள" என்று கூறப்படுகின்றன (என அறிவுடை முனி ஞானியர் கூறுகின்றனரே) என நாராயண பட்டத்ரி வர்ணிக்கின்றார்.

இந்த ஸ்லோகத்தில், ஈசனே, ஒளியோனே (தேவனே), எழிலோனே (அற்புத ஆத்மா) என்று பட்டத்திரி பயன்படுத்திய அடைமொழிகள், இங்கு குறிப்பிடப்பட்ட மூன்று கீழ் உலகங்களிலும் இறைவன் பிரகாசிக்கிறார் என்பதைக் குறிக்கிறது. உண்மையில், இறைவன் பிரகாசிக்காத இடம் எதுவும் இல்லை.

Meaning of the Sanskrit Words

एवं - in this manner

चतुर्दश-जगत्-मयतां गतस्य - (of Thee) who had manifested as the fourteen worlds

पातालम्-Paataal

ईश- O Lord!

तव पादतलं - soles (lower part) of Thy feet

वदन्ति - is said to be

पाद-ऊर्ध्व-देशम्-अपि - the upper surface of (Thy) feet

देव - O Effulgent One!

रसातलं - (is) Rasaatala

ते गुल्फद्वयं खलु - Thy two ankles, indeed

महातलम्- (are) Mahaatala

अद्भुत्-आत्मन् - O Lord of wondrous form

பிறந்த நாள் மழலை

சுவரில் வரைந்த சித்திரம் (நன்றி-தீபா)

என் கடன் பணி செய்து கிடப்பதே (பகவத் கீதை 2.47)

முகவுரை

அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்ற ஔவையின் கூற்றின்படி, ஏழுபத்தொன்று வருடங்களுக்குமுன் அரிதான பிறவியை எடுத்த இந்நாளில், அடியேன் இதுவரை கடந்து வந்த பாதையையும் அந்த பாதையின் அடிப்படையையும் அறிய  முயன்றேன்.

அந்த முயற்சியின் முடிவில் கிடைத்த அறிவின் தொகுப்பை எனது மழலையில் மொழிகிறேன் கீழ்வருமாறு:

1. சாதாரண நடுத்தர குடும்பத்திலிருப்பவன் நடந்து வரும் பாதையெனும் ஆறிலிருந்து அறுபது வரையிலான வாழ்வு,

இளமையில் கல்வி,
அறவழியில் பொருளீட்டுதல்,
மனைமாட்சி

என்ற மூன்று படலங்களத் தழுவியது. என் பாதையும்கூட அதுதான்.

2.“காயேன வாசா மனஸா” என்று உடல், வாக்கு, மனம் வழி ஆண்டவனைச் சார்ந்திருந்து, உலகியல் பலன்களை விரும்பாமல், கல்வி புகட்டி மனத்தூய்மையுடன் அறச்செயல்கள் புரிந்திட்ட அன்னை தந்தையின் அறிவுரைகளால், இளவயதிலிருந்தே எனக்கு கிட்டியது அறநெறிப்படி திட்டமிட்டு ஸமபுத்தி மனப்பான்மையுடன் வாழும் ஒழுக்கமிகு வாழ்க்கை. பெற்றோரின் வடிவில் இறையருள் கிட்ட, என்ன பெருந்தவம் செய்தேன் என்று இன்றும் அறியேன் அடியேன்.

3. இளமையில் கல்வி, பொருளீட்டுதல், மனைமாட்சி என்ற மூன்று படலங்களில், தர்மத்தை கடைப்பிடிக்கும்போது கொள்ள வேண்டிய மனோபாவனையை அடைந்திட, பெற்றோரின் அன்றாட எளிய வாழ்க்கையே எனக்கு இலவசமாகக் கிடைத்த பயிற்சிக்கூடம்.

4. இன்பம் “அவன்” கொடுத்தது, துன்பம் எனது முன்வினைப் பயனாலே; ஆகவே இன்பத்தில் களித்திடாமலும், துன்பத்தில் துவண்டிடாமலும் அவர்கள் வாழ்ந்த எளிமையான அனுதின வாழ்வே இன்றும் எனக்கு வழிகாட்டி.

இப்படி, அறிவின் துணை கொண்டு இருமைகளில் சமமான மனப்பான்மை என்பது தான் எனது அறுபது கடந்த ஆன்மீகம் தழுவிய வாழ்வின் அடிப்படை.

சரி, நீ என்ன பெரிய மனிதனா? என்ன சாதித்தாய் இவ்வுலகில்? உன் சுய சரிதையால் எங்களுக்கு என்ன? என்று நீங்கள் வினவுவது எனக்குத் தெளிவாக கேட்கிறது. நான் பெரியவனல்ல; நான் சாதனையாளன் அல்ல. நான் ஒரு சாமான்யனே! எனினும், இன்று நான் அறிந்திடும் பகவத் கீதையின் ஸ்லோகத்திற்கு இது முகவுரையாகும் என்ற எண்ணம் என்னுள் எழுந்ததனால்தான் இந்த சுயசரிதை.

இப்போது கீதையின் ஸ்லோகத்தைக் காண்போம்.

ஸமஸ்க்ருத ஸ்லோகம்

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन |
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि || 2.47 ||

தமிழில் எழுத்துப் பெயர்ப்பு

கர்மண்யேவாதிகாரஸ்தே மா ஃபலேஷு கதாசனா |
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோத்யஸ்த்வகர்மணி || 2.47 ||

தமிழாக்கம்


1. உனக்கு கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு.

2. அவற்றின் பயன்களில் ஒருகாலும் உரிமையில்லை.

3. ஆகவே நீ கர்மங்களின் பயன்களைக் கோருவதற்கு காரணமாக ஆகாதே.

4. மேலும் உனக்கு கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது”

என்று நான்கு அறிவுரைகள் வழங்குகிறான் கண்ணன். அதாவது,

1. செயலின்மையில் நாட்டம் வேண்டாம்.
2. செயலின் பலனிலும் நாட்டம் வேண்டாம்.
3. செயலில் மட்டுமே உன் நாட்டம் இருக்கட்டும்.

4. செயல்புரிவதற்கு மட்டுமே உனக்கு தகுதி இருக்கிறது.
5. செயலைத் (கடமையைத்)துறப்பதற்கு உனக்கு தகுதி வரவில்லை.
6. செயலைத் துறக்க வேண்டுமானால், செயலின் பலனை விரும்பாமல் சில காலம் செயலாற்ற வேண்டும். அப்பொழுதுதான் செயலைத் துறக்க தகுதி ஏற்படும்.

என்று கண்ணன் பார்த்தனுக்கு விளக்குகிறான்.

கர்ம யோகம் புரியாமல், கர்ம சந்யாஸம் செய்ய முடியாது. அதைமீறி கர்ம சந்யாஸம் செய்தால் அதனால் துக்கம் விளையும்.

விளக்கவுரை

வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றிற்கு ஏற்றவாறு மனிதனுக்கு கர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கர்மங்களை “கர்மணி” என்ற சொல் குறிக்கிறது. மறைகளில் செய்யக்கூடாது என்று கூறப்பட்ட பாவச்செயல்களை “கர்மணி” என்ற சொல் குறிக்காது. ஏனெனில், பாவ கர்மங்களைச் செய்ய அவசியமோ, பொறுப்போ மனிதனுக்கு கிடையாது. விருப்பு-வெறுப்புகளினால் உந்தப்பட்டு அவற்றில் ஈடுபடுகிறான். அது அவனுடைய பொறுப்பிலா செய்கை. அதனால் அத்தகைய செயல்கள் புரிபவனுக்கு, துன்பங்களை அனுபவிக்கக்கூடிய தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அறம் வழி நடந்து புரியும் வினைகளே “கர்மணி”.

உனக்கு கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு

உனக்கு செயல் புரிய மட்டுமே தகுதி உள்ளது என்ற இந்தக் கூற்றில்:

1. மனித உடலில்தான் ஜீவனுக்குப் புதிய கர்மங்கள் செய்ய சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அவன் தன் பொறுப்பிற்கு ஏற்றவாறு இறைவனுடைய கட்டளையை ஏற்று நிறைவேற்ற வேண்டும். அந்த கர்மங்களில் “நான் செய்கிறேன்” என்ற ஒட்டுதல்/பற்று இருக்கக்கூடாது. அந்த கர்மங்களை ஆற்றுவதை இறைவனை அடைவதற்கு ஸாதனமாக கருதவேண்டும். அரிதான மானிடப்பிறவி கிட்டியிருப்பது பரம்பொருளை அறிந்துணரவே என்று வினைகள் புரிந்திட வேண்டும்.

2. மனிதனுக்கு கர்மங்களை ஆற்ற மட்டுமே பொறுப்பு உண்டு. அவற்றைச் செய்யாமல் விடுவதற்கு அவனுக்கு சுதந்திரம் கிடையாது. தன்முனைப்பால், பிடிவாதமாக கர்மங்களைச் செய்யாமல் விட்டுவிடலாம் என்றாலும்கூட அவனால் விட்டுவிட முடியாது. ஏனெனில் அவனது ஸ்வபாவம் (இயல்பு) வலுக்கட்டாயமாக ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருக்கச் செய்யும். இந்த நிலையில் அவனுடைய பொறுப்பை நிறைவேற்றாமல், தனக்கு கொடுக்கப்பட்ட உரிமையைத் தவறாகப் பயன்படுத்தினால், விதிக்கப்பட்ட கர்மங்களை விட்டுவிடுவதால்,மறைகள் விதித்த விதிகளை மீறியதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும். எனவே நீ ஆற்றவேண்டிய கர்மங்களை ஆற்றத்தான் வேண்டும், தவிர்க்கக்கூடாது.

3. பிறப்பு-இறப்பு (ஜனன-மரணம்) என்ற பிறவிப்பிணியிலிருந்து (ஸம்ஸார பந்தத்திலிருந்து) விடுதலை பெறுவதற்காகவும், பிறருக்கு நன்மை செய்வதற்காகவும், ஜீவனுக்கு மனம், புத்தி, புலன்களுடன் கூடிய இந்த மனித உடலை (ஸரீரத்தை) அளித்து, அதன்மூலம் செயல்கள் செய்ய விஷேஷ சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த சலுகையை நல்விதத்தில் பயன்படுத்தினால் கர்மபந்தத்திலிருந்து விடுதலை பெற்று பரம்பொருளை அறிந்துணர இயலும். தவறாகப் பயன்படுத்தினால் தண்டனையுடன், அந்தப் பொறுப்பும் பிடுங்கப்படும். அதாவது மறபடி மனிதப்பிறவி பெறுவதற்கான தகுதியை இழக்கிறான். இதனை உணர்ந்து தன் பொறுப்பை நல்முறையில் நிறைவேற்ற வேண்டும்.

என்ற மூன்று முக்கிய உட்கருத்துக்கள் அடங்கியுள்ளன.

கர்ம பயன்களில் ஒருகாலும் உனக்கு உரிமையில்லை

எந்த கர்மத்திற்கு என்ன பயன்? அந்தப் பயன் எப்பிறவியில் கிடைக்கும்? எந்த முறையில் கிடைக்கும்? என்று மனிதன் அறிய மாட்டான். 

தன் விருப்பப்படி தான் வாழும் காலத்தில் அவற்றைப் பெறவும் முடியாது; விரும்பி முயன்றாலும் அவற்றிலிருந்து தப்பவும் முடியாது. அவன் விரும்புவது ஒன்று; அவனுக்கு கிடைப்பது ஒன்று. அவன் விரும்புவதை அடையும் சந்தர்ப்பம் அவன் கையில் இல்லை. கர்மங்களின் பயனை விதிப்பது இறையருள் (அத்வைத வேதாந்தத்தில் முன்வினைப் பயன் எனும் ப்ராரப்தம் என்பதே இறையருள் என்ற விளக்கம் உள்ளது). விருப்பு, வெறுப்பு, ஆசை இவையெல்லாம் அறியாமையே. இவைகளால் இவ்வாழ்வில் விளைவதனைத்தும் (இன்பம், துன்பம்) நிரந்தரமல்ல. அவைகள் உண்மையான ஸுகத்தை அளிக்காது.

“ஆசை அறுமின், ஆசை அறுமின்,
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்”

என்று திருமூலர் கூறுவதும் இதுவே.

கர்ம பயன்கள் கோருவதற்கு காரணம் ஆகாதே

மனம், புத்தி, புலன்கள் மூலமாக நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்களிலும், அவற்றின் பயன்களிலும்

1. தான் செய்வதாக கருதும் எண்ணம் (“மமதை”)
2. பற்று (“ஆஸக்தி”)
3. அச்செயல்களில் உள்ள நுண்ணிய விருப்பம் (“வாஸனா”)
4. எதிர்பார்ப்புகள்

ஆகிய இவைகள்தான் கர்மங்களின் பயன்களுக்கு காரணம் ஆகும்.

கர்மத்திலும், கர்மபலனிலும் பற்றுள்ளவனுக்கு இவைகள்தான் கிட்டும்.

அறிவின் துணைகொண்டு, இருமைகளை சமமான மனதால் எதிர்கொண்டு “வினை புரிபவன் நானல்ல, வினைப் பயனும் எனதல்ல, அனைத்தும் அவன் செயல்” என்ற மனப்பான்மை உடையவனை, புரியும் கர்மங்களும், கர்ம பயன்களும் ஒட்டாது. அவன் புதிதாக பாபச் செயல்களேதும் புரியவே மாட்டான்.

முன்னால் செய்யப்பட்ட பாவங்களும், இப்பொழுது செய்கின்ற பற்றற்ற கர்மங்களின் ப்ரபாவத்தினால் சாம்பலாகி விடுகின்றன. இக்காரணத்தினால் அவன் பாவச்செயல்களின் பயன்களுக்கு காரணம் ஆகமாட்டான். இவ்விதம் கர்மங்களை ஆற்றுபவனுடைய எல்லாக் கர்மங்களும் மறைந்துவிடுகின்றன. அவன் மாறுதலற்ற உயர்ந்த பதவியை அடைவான் என்கிறான் கண்ணன்.

கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது

மறைகளில் நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைப் புரிவதற்கு மாறாக, தடை செய்யப்பட்ட கார்யங்களைச் செய்வது, செயலாற்றும் உரிமையைத் தவறாக உபயோகப்படுத்துவதாகும். அது போல, வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றுக்கு ஏற்றவாறு எவனுக்கு எந்த கர்மம் விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைச் செய்யாமல் இருப்பதுகூட உரிமையைத் தவறாக உபயோகப்படுத்துவதாகும். விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் இருப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை. 

விதிக்கப்பட்ட கர்மங்களை மோஹத்தினால் தியாகம் செய்வது “தாமஸ த்யாகம்”; உடல் நோகும் என்று பயந்து தியாகம் செய்வது “ராஜஸ த்யாகம்”. விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் மனிதன் கர்ம யோகத்தில் ஸித்தி பெற முடியாது. ஆகவே, எக்காரணம் கொண்டும் விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் விடுவதற்கு நீ விரும்பக்கூடாது என்பது கண்ணன் கூறும் அறிவுரை.

முடிவில் ஒரு கேள்வி


ஆறிலிருந்து அறுபதுவரை இந்த ஸ்லோகத்தை அறிந்திராமல் வாழ்ந்திடினும், இதன் சாரத்தின்படி அமைந்ததே என் வாழ்வு என்பது இப்போது என் கருத்து. அதனால்தான் என்னவோ, இறையருளால், அன்றும் இன்றும் படுத்தவுடன் உறங்குகிறேன் கவலைகளேதுமின்றி.


1. அன்றாட வாழ்வில் இந்த ஸ்லோகம் உதவுமா?

2. முகவுரையாக கூறப்பட்ட சிறுவனின் சுய சரிதைக்கும் இந்த ஸ்லோகத்திற்கும் சம்பந்தம் உண்டா? ………..
பதிலும், முடிவும் உங்களுடையது.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து

அனைவருக்கும் இனிய குரோதி வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Narayaneeyam -Dasakam 5 – Sloka 10; நாராயணீயம் – தசகம் 5 – ஸ்லோகம் 10

Audio Link for Chanting

https://www.dropbox.com/scl/fi/9f2lk4g9g026zo40k0u35/5.10.mp3?rlkey=p9mnsmnm8uouulu3twmvpnmon&dl=0

Introduction 

In Dasakam 5,starting with the divine intention (sankalpa) or will within the Supreme Being to bring forth the universe, Narayana Bhattathri has so far outlined the evolution of 

1. Purusha,
2. Prakriti,
3. Mahat,
4. Ahamkara
5. Fourteen Presiding deities
6. Four functions of Inner conscience,
7. Five Sense and five action organs
8. Five Tanmaatras and the five Pancha Bhootas.
9. Creation of Hiranyagarbha, the Golden Egg.

Concluding this Dasakam, Bhattathri brings out the final evolution of the Virat Purush into the fourteen worlds.

முகவுரை

இந்த தசகத்தில், ஸ்ரீ. நாராயண பட்டத்திரி பிரம்மனின் பிரபஞ்ச வடிவத்தின் பரிணாமத்தை (ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஏற்ப) பிரம்மனின் "விராட் ரூபத்தில்" வழியாக அறிய உதவுகிறார். 

இதுவரை

1. புருஷன்,
2. பிரகிருதி,
3. மஹத்,
4. அஹம்காரா
5. பதினான்கு அதிபதிகள்
6 உள் மனசாட்சியின் நான்கு செயல்பாடுகள்,
7. ஐந்து உணர்வுகள் மற்றும் ஐந்து செயல் உறுப்புகள்
8. ஐந்து தன்மாத்திரங்கள் மற்றும் ஐந்து பஞ்ச பூதங்கள்.
9. ஹிரண்யகர்பம் எனும் பொன் முட்டை


என்பவைகளின் பரிமாணத்தை விளக்கினார் நாராயண பட்டத்ரி.இப்போது கடைசியாக, விராட ரூபத்தை விளக்குகிறார இந்த ஸ்லோகத்தில்.

Sanskrit Sloka – சமஸ்க்ருத ஸ்லோகம்

अण्डं तत्खलु पूर्वसृष्टसलिलेऽतिष्ठत् सहस्रं समा:

निर्भिन्दन्नकृथाश्चतुर्दशजगद्रूपं विराडाह्वयम् ।

साहस्रै: करपादमूर्धनिवहैर्निश्शेषजीवात्मको

निर्भातोऽसि मरुत्पुराधिप स मां त्रायस्व सर्वामयात् ॥१०॥

தமிழில் ஒலிபெயர்ப்பு 

அண்ட₃ம் தத்க₂லு பூர்வஸ்ருஷ்டஸலிலே(அ)திஷ்ட₂த் ஸஹஸ்ரம் ஸமா:

நிர்பி₄ந்த₃ந்நக்ருதா₂ஶ்சதுர்த₃ஶஜக₃த்₃ரூபம் விராடா₃ஹ்வயம் |

ஸாஹஸ்ரை: கரபாத₃மூர்த₄நிவஹைர்நிஶ்ஶேஷஜீவாத்மகோ

நிர்பா₄தோ(அ)ஸி மருத்புராதி₄ப ஸ மாம் த்ராயஸ்வ ஸர்வாமயாத் || 10||


தமிழாக்கம்

படைத்த அப் பொன் அண்டம், நீ முன்

படைத்த பேராழிதனில் காலமாயிரம்

உறைந்த பின் உடைத்திட்டு இரேழு

உலகம் படைத்திட்டு விராடமெனும்

அளவிலா பேர் உருவமென பொறிபுலன்

ஆயிரமாயிரமென அனைத்திலும் பறவி

காட்சி அளித்தனையே குருவாயூரப்பா

காத்திடுவாய் எந்தன் துயர் நீக்கிடுவாய் 5.10

Transliteration in English 

aNDaM tatkhalu puurvasR^iShTasalile(a)tiShThat sahasraM samaaH
nirbhindannakR^ithaashchaturdashajagadruupaM viraaDaahvayam |
saahasraiH karapaadamuurdhanivahairnishsheShajiivaatmakO
nirbhaatO(a)si marutpuraadhipa sa maaM traayasva sarvaamayaat

Meaning in English 

This golden egg was submerged in the primeval creation of causal water,

And was divided by you in to fourteen parts and you called it Virat,

And you became all the beings yourself and existed as Virat Purusha,

Along with thousands of hands, legs as well as heads,

And Oh Lord of Guruvayur, you who are the Virat Purusha,

May be kindly pleased to save me from all the diseases. 5.10

Meaning of the Sanskrit Words 

अण्डं तत्-खलु - that Brahamanda, indeed

पुर्व-सृष्ट-सलिले- in the already created Cosmic Waters

अतिष्ठत् - (which) remained

सहस्त्रं समा: - for a thousand years

निर्भिन्दन - (Thou) breaking it open

अकृथा: - Thou did make (it)

चतुर्दश-जगत्-रूपं - in the form of the fourteen worlds

विराट-अह्वयम् - known as 'Virat Swarupa'

साहस्त्रै: करपादमूर्धनिवहै: - with thousands of hands, feet and heads

निश्शेष जीवात्मक: - as all beings (Samashti - total life form of all beings)

निर्भात: असि - Thou did shine (manifest Thyself)

मरुत्पुराधिप - O Lord of Guruvayur!

स मां त्रायस्व - That Thou (of such nature) protect me

सर्व-आमयात् - from all ailment

இறை அருளால் தசகம் 5 முடிவுற்றது.

This ends Dasakam 5.