Sankara’s Smithy – Strike 8 – The family Blow

Introduction

Dictionaries define family as , “a group of persons united by the ties of marriage, blood or adoption, constituting a single household and interacting with each other in their respective social positions, usually those of spouses, parents, children and siblings”.

Adi Sankara in his eighth strike in his Smithy (eighth verse) addresses common people like us who are totally engrossed in this worldly family life and tells us clearly that there are limitations to this social concept and advises us that one should clearly inquire and understand these limitations.

Let us try to understand this strike in its totality

Sanskrit Verse

का ते कान्ता कस्ते पुत्रः

संसारोयमतीव विचित्रः |

कस्य त्वं कुत आयातः

तत्त्वं चिन्तय तदिह भ्रातः ||

Adi Sankara

English Transliteration

Kaa tE kaantaa kastE putrah, 

SamsaarOyamatIva vichitrah

Kasya tvam kuta aayaatah,

Tattvam chintaya tadiha bhraatah

Meaning of the Sanskrit Words

का ते - kaate  = who is your    
कान्ता - kaanta = wife
कस्ते - kaste = who is your
पुत्रः - putrah = son

संसारोयमतीव - सम्सार अयम् - samsaara ayam = this samsara
अतीव - atiiva = supremely
विचित्रः - vichitrah = wonderful

कस्य - kasya = of whom
त्वं - tvam = who are you
कुत - kuta = from where
आयातः - aayatah = have come

तत्त्वं - tatwam = of that Truth
चिन्तय - chintaya - dwell over, think, inquire
तदिह - तद् इह - tad iha = that here alone
भ्रातः - bhraatah : O brother

Meaning in English

Oh, brother! Who is your wife? Who is your son? This life is very strange.  You belong to whom ? Where did you come from? Dwell and reflect on these truths here.

Explanation

Adi Sankara raises some fundamental questions here. He takes us to a different plane of inquiry. 

“Who is your wife? Who is your son? You belong to whom ? Where did you come from?”

The questions posed above are important and fundamental. But can we really ponder over these questions and grasp the explanations given in the scriptures while our minds are clouded by preconceived and unsubstantiated notions underlying our relationships that bind and blind us? Let us try to understand these relationships.

1. Initially the relationship is between two individuals through “marriage”. From a dictionary perspective, marriage is “the state of being united as spouses in a consensual and contractual relationship recognized by law”.

2. Over a period of time, this relationship fructifies into a “family” as defined in the introduction to this blog.

3. The “family” takes us to the arena of interactions with roles, responsibilities, authorities, goals and tasks for each member of the family individually and collectively.

4. Add to this the dimension of “Time” and the impermanence of materialism. We are now in the thick of issues, challenges, attachments, detachments, pains and pleasures.

5. This process is never ending till the soul permanently terminates its lease agreement with the body and identifies itself with the Ultimate Reality, which happens after innumerable cycles of births and deaths (called Samsara)

This is the ground reality which we decide to ignore and continue life till it hits us one day with all its severity. So the definitions of marriage and family continues to be highly controversial. This is not an issue to be resolved by dictionaries. Therefore, Adi Shankaracharya is looking at these relationships, beyond one’s family concerns and encourages us to question:

1. Did these relationships help to discover the inherent oneness and harmony that obtains between them, inspite of their obvious duality at the level of the body, their individual personalities etc.

2. Were these meant to achieve another goal in life; the realisation of the unity of life in this universe?

For many of us it may appear that Adi Sankara is questioning the validity of the institution of the family. The family institution itself has to be seen in the broader context of the purpose of human life. It is valid for a certain period, during the householder’s stage of life. When it has served its purpose, one has to go beyond its parameters, i.e. wife and son, etc. It is valid only for a certain task in life, not throughout life. So look at these relationships from outside, says Sankara. Then only the true nature of worldly existence or Samsara can be understood.

For example, the son was in the mother's womb before birth. Before that, he was as an energy in our own body. Before that, that energy was in the food that we took, that food was from the plants and vegetables in the fields and all of that was earth before that. What we call earth became food, then energy in my body, then a fetus, then a child in the mother's womb. So when we look at the whole process of transformation, what we call wife, son and husband are nothing but transformations of one basic substance called the five elements (pancha bootha) over a period of time.

When we are in a giant roller coaster , we do not know in which direction we are going. Only when we step out of it, can we see see that we were being spun around in never-ending circles. So it is with Samsara. Step out and see says Sankara.

Conclusion

We must bear in mind that this sloka does not demean the structure of family; We should not misjudge that it diminishes one's affection and the performance of one's duties in father, son, spouse, etc.

Spirituality and family life are not mutually exclusive. Spiritual life can be lived without sacrificing family life.

On a practical level, what Adi Sankara is pointing out here is that even as we interact with and feel affection for others in our various roles, we must maintain a sufficient degree of objectivity so that we do not let those bonds blind us and get in the way of our seeking unadulterated, permanent and eternal happiness called liberation (mukti) from the unending cycles of births and deaths (samsara).

Pretty deep questions posed in a simple manner sums up this eighth strike. Let us now get prepared for the next one soon. Until then………

God Bless.

சங்கரனின் வைரக்கூடம் 8 – இல்லற உறவு

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

இந்த உலகம், உண்மையில் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் அது உங்களுக்குத் தீங்கு செய்யாது என்று கூறுகிறது வேதாந்தம். இது தான் வேதாந்தத்தின் உண்மையான உள்நோக்கம் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.  இந்த உலகம் என்பது என்ன என்று நாம் அறிய நமக்கு உதவி புரியவே

வந்த வரவை மறந்து-மிக்க
மாதர்பொன் பூமி மயக்கத்தில் ஆழும்
இந்தம யக்கை அறுக்க-எனக்கு
எந்தை மெய்ஞ்ஞான எழில்வாள் கொடுத்தான்

என்ற தாயுமானவர் பாடல் கூறுவது போல, மண் என்ற நிலம் மீது பெண் துணைகொண்டு, பொருளைக் கொண்டு வாழ்ந்து, அப்பொருள்களிலிருந்து பெறுகின்ற அனுபோகமே இன்பம் என்றும், அதுவே பொருள் என்ற மயக்க நிலையில் மதி கெட்டு இருந்திடும் மூட மனிதனின் அறிவை உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல, அவனுள் உறங்கிக் கிடக்கும் வைரமெனும் வைராக்கியத்தை தோண்டி எடுத்து, பட்டை தீட்டி, மெருகூட்டும் பணியாக இதுவரை ஏழு செயல்முறைகளை, அவரது வைரக் கூடத்தில் நம் அனைவருக்கும் அளித்தார் ஆதி சங்கரர்.

இப்பொழுது அடுத்த படியாக, முக்கியமான அடிப்படை கேள்விகளை எழுப்பி நம் சிந்தனையை தூண்டுகிறார் இந்த எட்டாவது ஸ்லோகத்தில். வாருங்கள், பட்டை தீட்டிக் கொள்வோம் நம் வைரத்தை (வைராக்கியத்தை).

சமஸ்க்ருத ஸ்லோகம்

का ते कान्ता कस्ते पुत्रः

संसारोयमतीव विचित्रः |
कस्य त्वं कुत आयातः

तत्त्वं चिन्तय तदिह भ्रातः ||

ஆதி சங்கரர்

தமிழ் ஒலிபெயர்ப்பு

கா தே காந்தா கஸ்தே புத்ர:

ஸம்ஸாரோயமதீவ விசித்ர: |

கஸ்ய த்வம் குத ஆயாத:

தத்வம் சிந்தய ததி3த3ம் ப்4ராத: ||

தமிழ் மொழிபெயர்ப்பு

யாருந்தன் மனைவி யாருந்தன் பிள்ளை

விந்தை யன்றோ இவ்உலக வாழ்க்கை

யாருந்தன் மூலம் எங்கிருந்து வந்தாய்

தம்பி தத்துவ சிந்தனை செய்வாய்

சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள்

का ते - கா தே - யாருந்தன் 
कान्ता - காந்தா - மனைவி
कस्ते - கஸ்தே - யாருந்தன்
पुत्रः - புத்ர: - பிள்ளை
संसारोयमतीव विचित्रः - ஸம்ஸாரோயமதீவ விசித்ர: - संसार + अयमं + अतीव + विचित्रः - ஸம்ஸார + அயம் + அதீவ + விசித்ர: - ஸம்ஸாரம் + இந்த + மிக + விசித்ரம்कस्य - கஸ்ய - எவருடையவன்
त्वं - த்வம் - நீ
कुत - குத - எங்கிருந்து
आयातः - ஆயாத: - வந்தாய்
तत्त्वं - தத்வம் - இந்த உண்மையை
चिन्तय तदिह - चिन्तय + तद् + इह - சிந்தய+ தத் + இஹ - சிந்தி இங்கேயே
भ्रातः - ப்4ராத: - (உடன் பிறவா) சகோதரனே

விளக்கவுரை

நேரடி பொருள்
 (உடன் பிறவா) சகோதரனே! உன் மனைவி யார்? உன் மகன் யார்? நீ எவரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து இந்த விசித்திரமான சம்சாரத்திற்கு வந்து சேர்ந்தாய்? இந்த உண்மைகளைக் கொஞ்சம் சிந்தனை செய்!
விளக்கம்
குடும்பம் என்ற சொல்லிற்கு  மூவகை உறவுகளால் ஒன்றுபட்ட நபர்களின் குழு என்று பொருள் கொள்ளலாம்.  அதாவது, திருமணம், இரத்தம் அல்லது தத்தெடுப்பு ஆகிய உறவுகளால் ஒன்றுபட்ட நபர்களின் குழு.  இந்தக் குழுவில் ஒவ்வொருவருக்கும் அன்னை, தந்தை, மகன், மகள், அக்கா, தங்கை, அண்ணா, தம்பி, கணவன், மனைவி என்ற சமூக நிலைகள் உண்டு. இணக்கமான வாழ்க்கைக்காக நாம் ஏற்றுக்கொண்ட ஒரு ஏற்பாடுதான் குடும்பம் என்ற ஒரு நிறுவனம். குடும்பத்தின் வெவ்வேறு உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

வாழ்க்கையின் போக்கில், நாம் இந்த உறவுகளின் வலுவான பற்றுதல் காரணமாக நமக்கு பொறுப்புகள், கடமைகள் மற்றும் அவர்கள்/அவைகள் தொடர்பான இன்ப துன்பங்கள், நினைவுகள், கவலைகள் முதலானவற்றை சந்திக்கின்றோம். கால சுழற்சியில் கடைசி காலம் வரும்பொழுது “நான் யார் நீ யார், நாலும் தெரிந்தவர் யார் யார்? தாய் யார், மகன் யார் தெரியார், தந்தை என்பார் அவர் யார் யார்” என்றும், “நான் கேட்டு தாய்தந்தை படைத்தானா; இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா; இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே, வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன” என்றெல்லாம் தத்துவ கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்கிறோம்.

இது தான் உலக யதார்த்தம். இதனைத்தான் ஆதி சங்கரர் நமக்கு தெள்ளத் தெளிவாக இந்த ஸ்லோகத்தில் எடுத்துரைத்து, சிந்திக்க வேண்டும் என நமக்கு அறிவுரை வழங்குகிறார்.

ஆழ்ந்து ஆராய்ந்தால், உண்மை புரியும். உதாரணமாக, மகன் பிறப்பதற்கு முன்பே தாயின் வயிற்றில் இருந்தான். அதற்கு முன், அவன் நம் சொந்த உடலில் ஆற்றலாக இருந்தான். அதற்கு முன்பு அந்த ஆற்றல் உணவாக, அவ்வுணவு வயல்களில் உள்ள தாவரங்கள் மற்றும் காய்கறிகளாக, அவைகளனைத்தும் அதற்கு முன்பு பூமியாக இருந்தது. நாம் பூமி என்று அழைக்கப்படுவது உணவாகவும், பின்னர் என் உடலில் ஆற்றலாகவும் மாறி, பின்னர் கருவாகி, தாயின் வயிற்றில் குழந்தையாக மாறியது. எனவே, மாற்றத்தின் முழு செயல்முறையையும் நாம் பார்க்கும்போது, மனைவி, மகன் மற்றும் கணவன் என்று நாம் அழைப்பது ஐந்து கூறுகள் எனப்படும் ஒரு அடிப்படை பொருளின் மாற்றங்களே தவிர வேறில்லை.

ராட்சத “ரோலர் கோஸ்டர்” எனும் “உயர் சுழல் வீச்சு சவாரி”யில் செல்லும்போது , நாம் எந்த திசையில் செல்கிறோம் என்பது நமக்குத் தெரியாது. அதிலிருந்து வெளியே வரும்போதுதான், முடிவில்லாத வட்டங்களில் நாம் சுழன்று கொண்டிருப்பதைக் காணலாம். குடும்பமும் அப்படித்தான். 'குடும்ப' வாழ்க்கையிலிருந்து வெளியே வரும்போது மட்டுமே உலகத்துடனான நமது உண்மையான உறவு புரியும்.

இந்த அடிப்படைக் கேள்விகளை ஆராய்வதற்கான அழைப்பே இந்த ஸ்லோகம். ஆராய்ந்து அறிந்தால் நமது மனதை தயார்படுத்தி, உள்ளுறங்கும் வைராக்கியத்தை பட்டை தீட்டி மெருகேற்றி வெளிக் கொண்டு வர முடியும்.

நல்லோர் இணக்கம், குருவின் வழிகாட்டு, பரம்பொருளின் மேல் பற்று - இவை மூன்றுமே நமது மனதை தயார்படுத்த நமக்கு வேண்டிய கருவிகள். மிக முக்கியமாக, பரம்பொருளின் மேல் பற்றினை வளர்த்திட பிரார்த்தனை மனப்பான்மை தேவை. அதனால் துதி கோவிந்தனை என்கிறார் ஆதி சங்கரர்.
தமிழ் இலக்கியங்களில் உறவுகள்
திருவாசகம் (யாத்திரைப் பத்து)

தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே. நடை முறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரே. ஆதலால் அடியவர் களே! நீங்கள், நாம் யார்? எம்முடையது என்பது யாது? பாசம் என்பது எது? இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து இவை நம்மை விட்டு நீங்க இறைவனுடைய பழைய அடியாரொடும் சேர்ந்து அவ்விறைவனது திருவுளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக் கொண்டு, பொய் வாழ்வை நீத்துப் பாம்பணிந்தவனும், எமையாள் வோனுமாகிய பெருமானது பொன்போல ஒளிரும் திருவடிக்கீழ் போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

ஐந்தாம் திருமுறை - கொண்டீச்வரம் - அப்பர்

தந்தை தாயொடு தாரம் எனும் தளை
பந்தம் ஆங்கு அறுத்துப் பயில்வு எய்திய
கொந்தவிழ் பொழில் கொண்டீச்சுரவனை
சிந்தை செய்மின் அவனடி சேரவே

தந்தை தாய் தாரம் ஆகிய சொந்தங்களின் பந்தம் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் கட்டாயத்தில் நம்மை தள்ளி விடுகின்றது, மிகவும் அவசியமான தேவைகளை நிறைவேற்றுவது நமது கடமை. ஆனால் பல சமயங்களில் அவர்களது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு நாம் செய்யும் முயற்சிகளில் நாம் இறைவனை மறக்க வாய்ப்பு இருப்பதால், நாம் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தவே பந்தம் எனும் தளை அறுத்து என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இறை சிந்தனை, நாம் பாசக் கட்டுகளிலிருந்து விடுபட உதவு செய்யும் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். மேலும் இறைவனின் திருவடிகளை சென்று அடைவதற்கு ஓரே வழி, அவனைப் பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்வது தான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

பட்டினத்தார் பாடல்

“ஊரும் சதமல்ல – உற்றார் சதமல்ல – உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல – பெண்டில் சதமல்ல – பிள்ளைகளுஞ்
சீரும் சதமல்ல – செல்வம் சதமல்ல – தேசத்திலே
யாரும் சதமல்ல”

“வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே”

முடிவுரை

இந்த ஸ்லோகம், குடும்பம் என்ற கட்டமைப்பை தாழ்த்துகிறது; தந்தை, மகன், துணைவி போன்றவற்றில் ஒருவரின் பாசத்தையும் அவரது கடமைகளின் செயல்திறனையும் குறைத்திடுகிறது என்னெல்லாம் தவறாக நாம் கணிக்கக்கூடாது.

ஆன்மிகமும் குடும்ப வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று முரண்பாடு இல்லாதவை. ஆன்மீக வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கையை துறக்காமலேயே வாழ முடியும். தமிழ்நாட்டில் உள்ள 63 நாயன்மார்கள் என்பவர்களில் குறிப்பாக பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் தான் முக்தி அடைந்து உள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

நடைமுறை மட்டத்தில், அவர் இங்கு சுட்டிக் காட்டுவது என்னவென்றால், நாம் நமது பல்வேறு பாத்திரங்களில் மற்றவர்களுடன் பழகினாலும், அவர்களிடம் பாசம் காட்டினாலும், போதுமான அளவிலான புறநிலையைப் பேண வேண்டும், அந்த பிணைப்புகள் நம்மைக் குருடாக்கி, வழிக்கு வர விடக்கூடாது. நமக்கான விடுதலையை நாமே தேடுகிறோம் என்பதையே இந்த செயல்முறை விளக்குகிறது.

இதனை அறிந்துணர்வோம். சங்கரனின் வைரக் கூடத்தில் மீண்டும் சந்திப்போம். அதுவரை…….

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க

Aditya Hrudayam – செங்கதிரோன் இதயம்

Here is a “iPhone photographic” salute.

வையம் தகளியாய்
வார்கடலே நெய்யாக
வெய்யக் கதிரோன் விளக்காக
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே
சூட்டினேன் சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று

பொய்கை ஆழ்வார்
காசினி இருளை நீக்கும் கதிரொளியாய் எங்கும் 
பூசலை உலகோர் போற்ற புசிப்போடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர் மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரோனே போற்றி.🙏

Sankara’s Smithy – Strike 7 – The “Season”al Blow

Life – A snap shot

Introduction

So far, in the six Slokas of Bhaja Govindam, we have learnt  abiut the impermanence of our body, the acquired wealth, our lust, our life itself, our relations and even our own breadth.

'Rare, rare, rare to be born as a human being. It is even rarer to be born without any challenges such as cripple, blindness or deafness’ said Avvayaar, the famous Tamil poetess.

This rare breed of Human’s life span (the period from birth to death) can be divided into several stages or seasons. The number of categories vary as per each individual's perspective. If you surf the internet, you will find from two stages to tweleve seasons.

In general, these seasons or stages broadly cover the childhood, youth and old age phases. A human being primarily passes through 4 stages of growth

1) infancy (bāla),
2) childhood (koumāra),
3) manhood (youvanna) and
4) old age (vārdhakya).

From the cradle to grave how do we spend our lives? Are we living upto our reputation of being a rare breed?

In Sankara’s Smithy, Adi Sankara, provides a season-wise snapshot of our focus and the way we live in this Strike (Sloka) No 7.

Let us examine this Sloka.

Sanskrit Verse

बालस्तावत्क्रीडासक्तः

तरुणस्तावत्तरुणीसक्तः |

वृद्धस्तावच्चिन्तासक्तः

परमे ब्रह्मणि कोऽपि न सक्तः ||

Adi Sankara

English Transliteration

Baalastaavat kreedaasaktha: 
tarunastaavat taruneesaktha:
Vrddhastaavat chintaasaktha:
paramE brahmani kOpi na saktha:

Meaning of the Sanskrit Words

बालस्तावत् - baalastaavat - When one is a child, so long one is in one’s childhood        

क्रीडा असक्तः - krida + asakth = to play + attached

तरुणस्तावत् - taruna statvat = so long as one is in youth

तरुणीसक्तः - tarunisaktah = attached to one’s young woman(passion)

वृद्धस्तावत् - vridhha stavat = so long as one is old

चिन्तासक्तः - chintasaktah = attached to anxiety

परमे ब्रह्मणि - parame brahmani = to the Supreme Brahman

कोपि न - ka api (kopi) + na = alas + not

असक्तः - asakth = attached

Meaning in English

During childhood one is attached to play, during youth one is attached to women. In old age one is attached to anxiety. Yet no one is attached to the Supreme brahman. O! foolish mind !! Seek Govinda!

Explanation

In the previous two verses, the poet used Death to remind us of how the empty and false relationships can distract our foolish mind from our spiritual goal. 

In this verse, he warns us of the pitfalls that face us in our journey throughout the different stages of our lives. There are distractions in every stage of our life. So much so, that we hardly find time for God or for our own introspection about ourselves.

This Sloka looks at these distractions.

1. When we all were children, by and large we were all busy with play as that was the true nature. This is the situation even today.

2. But as we grew into the next stage, the youth, the principal attraction was the other sex. The young man is concerned about how many girl friends he has and the young woman is concerned how many boyfriends are behind her!

3. As we become old, we enter the pre-final/final stages of our life, our focus shifts completely and is on safety/security/worries of our belongings, children, grand children etc. We start ““vomiting out our memories” on every occasion as our genuine worries.

Sankara laments that in all their lives, not many people make efforts to get engaged with self inquiry and seeking the Supreme Brahman, God. Due to lack of training, the mind will refuse to entertain thoughts about God.

Shankaracharya is clearly addressing this verse to each individual. The responsibility is on each one of us to bring Divinity into our life at the earliest possible age. If this can be done before we get sucked into the worldly affairs of the Body, Mind and Intellect complex of ours, then it would save us a lot of bitter experiences in life.

We must clearly understand that Sankara is not against the worldly pursuits as they are your expected duties. A child must play, a young man must earn and raise a family and obtain wealth by honest means, but one must also find some time, early in life, to begin the God focussed inward journey so that when we are in our old age, avoidable worry about our worldly possessions do not rob us of our composure and peace of mind.

And, as stated in the very opening verse of Bhaja Govindam, we can and must cultivate an attitude of prayerfulness from an early age. We are therefore told, bhaja govindam bhaja govindam, govindam bhaja mudhamate. Remember why you have come here. Do not be diverted from your goal.

Conclusion

A similar message is given in Saint Kabir Das’s  poem in Hindi:

बीत गये दिन भजन बिना रे।
भजन बिना रे, भजन बिना रे॥

बाल अवस्था खेल गवांयो।
जब यौवन तब मान घना रे॥

लाहे कारण मूल गवाँयो।
अजहुं न गयी मन की तृष्णा रे॥

कहत कबीर सुनो भई साधो।
पार उतर गये संत जना रे॥

Saint Kabir Das
“ Alas my life is passed away without your meditation O Lord! I spent my child hood playing, in my youth my pride overtook me.
I have lost most of my life (principal amount) in useless pursuits and the desires of my mind and senses are still not quenched. Kabir says listen o Sadho (seeker), the saints dwelling on His name have crossed this ceaseless ocean of the world”.
This Hammer Strike (Sloka) is a snap shot of our life. It captures clearly our “mooda mathe”, our foolish mind . 

It is a clarion call to each one of us, to take a pause, think and then proceed in our journey called life. It is for us to start executing.

We will continue our visits to Sankara’s Smithy. Until our next visit ……

God Bless.

சங்கரனின் வைரக்கூடம் – 7 – பருவக் கோளாறு

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசை பிடித்து அலையாமல், நமது வாழ்வு நிலையற்றது என்பதை உணர்ந்து, உறவுகள் தொடர்கதைகள் அல்ல என்றும் அந்த உறவுகளும், நாம் ஈட்டும் செல்வமும், நாம் உள்ளிழுத்து விடும் மூச்சுக்காற்றும் உள்ளவரையே என்பதை நன்கு ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆறு செயல்முறைகளை சங்கரனின் வைரக்கூடத்தில் அறிந்தோம் இதுவரை.

‘அரிது அரிது, மானிடராய் பிறப்பது அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது.’ என்றார் ஓளவையார். அப்படிப்பட்ட அரிய பிறவியை எடுத்துள்ள நாம் அதை எப்படி கழிக்கிறோம் என்பதை இந்த நாட்டுப்புற பாடல் எளிமையாக எடுத்துரைக்கிறது..

''தத்தக்கா புத்தக்கா நாலே காலு
தானே நடக்கையிலே ரெண்டேகாலு
உச்சி வெளுக்கையிலே மூணே காலு
ஊருக்குப் போகையிலே எட்டே காலு''

என்ன இது? தத்தக்கா புத்தக்கா என்ற உளரல். இதற்கும் இந்த பஜகோவிந்த ஸ்லோகத்திற்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் உண்டு; இந்த நாட்டுப்புற பாடலின் பொருளை அறிய, முடிவு வரை காத்திருக்கலாம்.

மனித வாழ்வவினை (பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ள காலத்தை) பருவங்களாக பிறிக்கலாம். இந்தப் பிறிவுகள் ஒவ்வொருவரின் கண்ணோக்கத்தைப் பொருத்து; இரண்டிலிருந்து, பண்ணிரண்டு வரை பிரிக்துப் பார்க்கலாம் என்பர். அனைத்து கண்ணோக்களிலும் மூன்று முக்கிய நிலைகள் உண்டு. நமது வாழ்நாளை, குழந்தை, இளமை, முதுமை என்று பருவங்களாகப் பிரிக்கலாம். (மேலே உள்ள படத்தை பாரக்கவும்).

இந்தப் பருவங்களை எப்படி கடக்கிறோம் நாம், என்பதை ஆதி சங்கரர் ஒரு புகைப்படம் போல ஒரு ஒரு வரியில் விவரிக்கின்றார் இந்த அடுத்த செயல்முறையில்.

வாருங்கள். எப்படி என்று பார்க்கலாம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

बालस्तावत्क्रीडासक्तः

तरुणस्तावत्तरुणीसक्तः |

वृद्धस्तावच्चिन्तासक्तः

परमे ब्रह्मणि कोऽपि न सक्तः ||

ஆதி சங்கராச்சார்யா

தமிழ் ஒலிபெயர்ப்பு

பா3லஸ்தாவத் க்ரீடா3 ஸக்த:
தருணஸ் தாவத் தருணீ ஸக்த: |
வ்ருத்3த4ஸ் தாவத் சிந்தா ஸக்த:
பரமே ப்ரஹ்மணி கோபி ந ஸக்த: ||

தமிழ் மொழிபெயர்ப்பு

பாலகனாக பற்றுவோம் ஆட்டம்

வாலிபனாக குமரியில் நாட்டம்

முதியவனாக உள்ளத்தில் கவலை

முத்தனைப் பற்றிட எவனும் இல்லை

சமஸ்க்ருத சொற்களின் பொருள்கள்

बालस्तावत् - பாலஸ்தாவத் - குழந்தைப் பருவத்தில், 

क्रीडा असक्तः - க்ரீடா ஸக்த: - க்ரிட + அஸக்த: - ஆட்டம்/விளையாட்டு + பற்றுதல்

तरुणस्तावत् - தருண ஸ்தாவத் - இளமை பருவத்தில்

तरुणीसक्तः - தருணீஸக்த: - பெண்ணாசை/குமரியில் நாட்டம்

वृद्धस्तावत् - வ்ருத்தஸக்த: - முதுமைப் பருவத்மில்

चिन्तासक्तः - சிந்தாஸக்த: - கவலை உள்ளம் கொள்வது

परमे ब्रह्मणि - பரமே ப்ரஹ்மநி - பரப்பிரம்மனை

कोपि न - கோபி ந - க அபி ந - ஒருவரும் இல்லை

असक्तः - அஸக்த: - பற்றுடன்

விளக்கவுரை

நேரடிப் பொருள்
விளையாட்டு/விளையாட்டுத்தனத்தின் மீதான பற்றுதலால் குழந்தைப் பருவம் நழுவிப் போகிறது. பெண் மீதான பற்றுதலால் இளமை மறைகிறது. பல விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதில் முதுமை கடந்து செல்கிறது. ஐயகோ, பரபிரம்மத்தைப் பற்றிட விரும்பும் எவரும் இல்லை.
தத்துவ விளக்கம்
முந்தைய இரண்டு ஸ்லோகங்களில் , ஆதி சங்கரர் மரண நேரத்தை விளக்கி, நிலையிலா, வெறுமையான, தவறான மனித உறவுகள் எவ்வாறு நமது முட்டாள்தனமான மனதை நமது ஆன்மீக இலக்கிலிருந்து திசைதிருப்ப முடியும் என்பதை நினைவூட்டினார்.

இந்த செயல்முறையில், அவர் நமது வாழ்க்கைப் பயணத்தின் நான்கு நிலைகளை சுட்டிக்காட்டி அந்நிலைகளின் யதார்த்த நிலமையை எடுத்துரைக்கிறார்.

ஒரு மனிதன் வாழ்வில் நான்கு பருவங்களைக் (4 நிலைகளைக்) கடந்து செல்கிறான் - குழந்தை, பாலகன், இளைஞன், முதியவன் என்பவை இவை.

இந்தப் பயணத்தில் நம்மை எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் பற்றி அவர் எச்சரிக்கிறார். நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கவனச்சிதறல்கள் உள்ளன.

இன்றய காலக் கட்டத்தில் நாம் அனைவரும் ஒரே “பிஸி” - ஒய்விலா பரபரப்பு; அல்லவா! எப்படி?

1. குழந்தைகளாக இருந்தபோது, விளையாட்டிலே பிஸி.
2. இளமை எனும் பூங்காற்றுக் காலத்தில் பாலினத்தில் நாட்டம். இளஞனுக்கு எத்தனை பெண் தோழிகள் இருக்கிறார்கள் என்ற கவலையும், குமரிப் பெண்ணுக்கு, தனக்கு பின்னால் எத்தனை ஆண் நண்பர்கள் சுற்றுகிறார்கள் என்ற கவலை.
3. முதுமையில், வாழ்க்கையின் இறுதி/இறுதிக் கட்டங்களுக்குள் நுழைகிறோம். நமது கவனம் முழுவதுமாக மாறி, நமது உடமைகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் போன்றவற்றின் பாதுகாப்பு/கவலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். எவரிடத்தில் பேசினாலும், “நமது மலரும் நினைவுகளை அவர்களின் மீது வாந்தி எடுக்க ஆரம்பிக்கிறோம்”.

பரம்பொருளை அறியவும், மெய்ப்பொருளை உணரவும் நேரமே இல்லை. சிறிது நேரம் ஒதுக்கலாம் என்று நினைத்தாலும், பயிற்சியின்மையால், அப்படிப்பட்ட எண்ணங்களில் மனம் ஈடுபட மறுக்கும், நொண்டிச்சாக்குகளை நோக்கி விரையும்.

நம் வாழ்வில் தெய்வீகத்தை, மிகக் குறைந்த வயதிலேயே கொண்டுவரும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நமது உடல், மனம் மற்றும் புத்தி வளாகம் உலக விவகாரங்களில் சிக்கிக்கொள்ளும் முன் இதைச் செய்ய முடிந்தால், அது வாழ்க்கையில் நிறைய கசப்பான அனுபவங்களைக் கடக்க உதவும். இந்த வைராக்கியமெனும் வைரத்தை தோண்டி எடுத்து, பட்டை தீட்டி, மிருகேற்றி நம்மில் ஒளித்திடவே, ஆதி சங்கராச்சாரியார் இந்த நிலையை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

இப்படி எடுத்துரைப்பதால், சங்கரர் உலக நோக்கங்களுக்கு எதிரானவர் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை விளையாட வேண்டும், ஒரு இளைஞன் சம்பாதித்து குடும்பத்தை வளர்க்க வேண்டும் மற்றும் நேர்மையான வழிகளில் செல்வத்தைப் பெற வேண்டும். ஆனால் ஒருவன் தனது அன்றாட வாழ்வின் தொடகத்திலேயே, கடவுளை மையமாகக் கொண்ட உள்நோக்கிய பயணத்தைத் தொடங்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி செய்தால், வயதான காலத்தில், நமது உலக உடைமைகளைப் பற்றிய தவிர்க்கக்கூடிய கவலைகள் நம்மை தீண்டாது. நமது மன அமைதியையும் பறிக்காது.

இதுவே இந்த ஸ்லோகத்தின் சாரம்.

தமிழ் இலக்கியங்களில் வாழ்க்கைப்பருவங்களின் நிலையாமை

பட்டினத்தார் பாடல்

முதற்சங்கு அமுதூட்டும்,
மெய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு
பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும், அம்மட்டோ?
இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!

வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே

திருமந்திரம்

திருமந்திரப் பாடல் ஒன்றில், பாலன் இளைஞன் முதியவன் என்ற பல பருவ மாறுபாட்டினை உடல் அடைவதைக் கண்ட பின்னரும், இளமை நிலையற்றது என்ற உண்மையை புரிந்து கொள்ளமால் உலகத்தவர் இருக்கின்றார்களோ என்று வருந்தும் திருமூலர், காலத்தையும் அண்டங்களையும் கடந்தவனாகிய இறைவனின் திருவடிகளை நாம் தொழவேண்டும் என்று உணர்த்துகின்றார்.

பாலன் இளையன் விருத்தன் என நின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்து அண்டம் ஊடறுத்தான் அடி
மேலும் கிடந்து விரும்பவன் நானே

ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண்டு ஆரும் புகுந்து அறிவார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே.

அறியாமையிலேயே பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இறைவனே நம் அனைவருக்குத் தந்தையாவான். அவன் நினைவை நெஞ்சில் பூண்டு கொண்டு அவன் ஒளியில் புகுந்து பேரறிவு பெறுபவர் இல்லை. நீண்ட ஆயுள் பெற்று, நீண்ட நாட்கள் வாழ்ந்த போதிலும், தூண்டினால் ஒளியைப் பெருக்கும் விளக்குப் போன்ற இறைவனை அறியாமலேயே உலகில் வாழ்கின்றனர்.

அறநெறிச்சாரம்

தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்
பிரிவுந் துயிலும் உறீஇப் -- பருவந்து
பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு
வித்துக் குற்று உண்பார் பலர். --- அறநெறிச்சாரம்.

(தெரிவு இல் இளமையும்) பொருள்களை ஆராய்தற்கு ஏலாத இளமைப் பருவத்தையும், (தீப்பிணியும்) கொடிய நோய்களையும், (மூப்பும்) கிழத்தன்மையையும், (பிரிவும்) உற்றாரைப் பிரிதலையும், (துயிலும்) மரணத்தால் வருந் துன்பங்களையும், (உறீஇ) அடைந்து, (பருவந்து) வருந்தி, (பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு) பயனற்ற சின்னாள் வாழ்க்கைக்கு, (வித்துக் குற்று உண்பார் பலர்) உணவை விரும்பும் வேளாளன் அறிவின்றி வித்தையும் அழித்து உண்பதைப்போல வீடுபேற்றுக்கு வித்தாய அறத்தையே அழித்து வாழ முயல்பவரே உலகிடைப் பலராவர்.

அப்பரின் தேவாரம்

அப்பர் பிரான், இளமைக் காலத்தில் நம்மை விரும்பும் பெண்கள் நம்மை இகழ்வதற்கு வழி வகுக்கும் முதுமை வரும் முன்னர் இறைவனை நினைத்து வழிபடவேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
எழுது கொடியிடையார் ஏழை மென்தோள்
இளையார்கள் நம்மை இகழா முன்னம்
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டு தான்
என்னோடு பகை தான் உண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றும் கூடி முடியால்
உற வணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான்
ஊர் போலும் ஆரூர் தானே

முடிவுரை

நமது வாழ்நாளின் யதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டும் அருமையான ஸ்லோகம். ஆழ்ந்து நம்மை சிந்திக்க வைக்கும் உண்மைகள்.

நாலு கால்களில் (இரு கை, இரு கால்) தத்தக்கா புத்தக்கா என்று தவழும் குழந்தையாக, பின் தானாக (சக்தியுடன்) இரு கால்களில் நடக்கும் இளைஞனாக, உச்சி வெளுத்து தண்டுகோல் கொண்டு மூன்று கால்களில் நடக்கும் முதுமைப் பருவம் தாண்டி, எமன் அழைத்து செல்லும் ஊருக்குப் போகையிலே எட்டு கால்களுடன் (நம் பிணத்தை தூக்கிச் செல்லும நால்வரின் கால்கள்) செல்லும் நாம், இறைவனை நினக்க தேரம் ஒதுக்கினோமா என்று ஆராய வேண்டும். இது தான் இந்தப் பண்ணின் சாரம்.
இதனைத்தான்  15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹான் கபீர்தாஸ் , இந்தி மொழியில் கூறுகிறார்:

बीत गये दिन भजन बिना रे।
भजन बिना रे, भजन बिना रे॥

बाल अवस्था खेल गवांयो।
जब यौवन तब मान घना रे॥

लाहे कारण मूल गवाँयो।
अजहुं न गयी मन की तृष्णा रे॥

कहत कबीर सुनो भई साधो।
पार उतर गये संत जना रे॥

ஞானி கபீர் தாஸ்
“ஐயோ, உமது தியானம் இல்லாமலேயே என் உயிர் போய்விட்டது ஆண்டவரே! நான் என் குழந்தைப் பருவத்தை விளையாடிக் கழித்தேன், என் இளமையில் என் பெருமை என்னைத் தாண்டியது.நான் என் வாழ்வின் பெரும்பகுதியை (முக்கியத் தொகை) பயனற்ற நாட்டங்களில் இழந்துவிட்டேன், என் மனம் மற்றும் புலன்களின் ஆசைகள் இன்னும் தணியவில்லை”.

ஆய்வோம் உட்கருத்தினை. தயாராகுவோம் அடுத்த பதிவிற்கு. அதுவரை

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க