இறைவனின் திருவடி – ஒரு கண்ணோக்கம்

முன்னுரை

பக்தி என்பது ஒரு உணர்வு. பக்தி என்ற உணர்வு ஒன்றே; இந்த உணர்வில் பல வகைகள் இல்லை. இந்த ஒரே உணர்வினை வெளிப்படுத்தும் வகைகள் மட்டுமே வேறு. நவபக்தி என்பது பக்தியின் ஒன்பது வழிகள். ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத ஸேவநம், அர்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதநம்.

1. ஸ்ரவணம் – இறைவனுடைய நாமங்களையும், அவனுடைய கல்யாண குணங்களையும் கேட்பது.

2. கீர்த்தனம் – பகவானின் பெருமைகளைப் பேசுவது.

3. ஸ்மரணம் – எப்பொழுதும் இறைவனை நினைவது.

4. பாத ஸேவனம் – இறைவன் திருவடிகளை வணங்குவது.

5. வந்தனம் – பகவானை வணங்குவது, அவனைப் போற்றுவது.

6. அர்ச்சனம் – இறைவனுக்கு மலர்களையும், கனிகளையும் கொடுத்து மகிழ்வது.

7. தாஸ்யம் – பகவானின் வேலைக்காரனாக நடந்து கொள்வது.

8. ஸக்யம் – ஆண்டவனிடம் நட்பு கொள்வது.

9. ஆத்ம நிவேதனம் – ஆண்டவனிடம் ஆத்மாவை ஒப்படைப்பது

இந்த ஒன்பது வகையான வெளிப்பாடுகளில் ஒன்று இறைவன் தாழ் பணிதல். குருநாதர் ஓம்காரனந்த ஸ்வாமிகளின் அருளுரைகளிலிருந்து அடியேன் அறிந்ததை இப்போது காண்போம்.

தாள் பணிதல்

நம்மில் பெரும்பாலோர்க்கு ஆண்டவனின் வழிபாடு என்பதே அடி பணிதலில் தான் தொடங்குகிறது. அதனால் தான் ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று திருவாசகம் குறிப்பிடுகிறது. திருவள்ளுவர், கடவுள் வாழ்த்திலுள்ள பத்து குறள்களில் ஏழு குறள்களில் இறைவனின் தாழ், அடி வணங்குவதைக் குறிப்பிடுகிறார். அனைவரும் தேடும் அடைக்கலம் இறைவனின் பாதங்களே.

நாம ரூபமுடைய ஒவ்வொரு இறைவனுக்கும் கரங்கள் பல இருந்தாலும் கூட, கால்கள் மட்டும் இரண்டுதான். காரணம் அடியவர்கள் அப்பொழுது தான் பற்றிக் கொள்ள இயலும். நமக்கெல்லாம் கரங்கள் இரண்டு தான் உள்ளது, வலது கரம்,இடது கரம். எண்ணற்ற கால்கள் இறைவனுக்கு இருந்தால், இந்த இரண்டு கரங்களால் எப்படிப் பற்றிக் கொள்ள இயலும் என்பதால் தான்,கால்கள் இரண்டாகவும், கைகள் அள்ளிக் கொடுப்பதற்கு பலவாகவும் இருக்கின்றது என்பதை நாம் உணரலாம்.

இறைவனின் திருவடிகளை தாமரை மலருக்கு ஒப்பிடுகிறது மறைகள்.

“ஆண்டவரே, உமது இரண்டு தாமரை பாதங்களும் இலையுதிர் காலத்தில் வளரும் தாமரை மலரின் இரண்டு மலர்ந்த இதழ்கள் போல் தோன்றும் அளவுக்கு அழகாக இருக்கின்றன. உண்மையில், உனது தாமரை பாதங்களின் நகங்கள் ஒரு பெரிய பிரகாசத்தை வெளிப்படுத்துகின்றன”

என்கிறது ஶ்ரீமத் பாகவதம் (4.24.52).

அவன் தாளை, அதாவது இறைவனின் திருவடியைப் பணிவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கும் ஆண்டவனின் அருள் வேண்டும் என்று அழகாகக் குறிப்பிட்டுள்ளனர் ஞானிகள்.

திருவடி பணிவதன் பலன்

இறைவன் திருவடிதனைப் பணிவதனால், என்ன பலன் என்ற கேள்வி எழலாம். இதற்கு விடைகள் ஏராளமாக உள்ளன நமது மறைகளில்.

1. “இறைவா! உன் திருவடி நகங்களின் ஒளி, ஒரு வரையறுக்கப்பட்ட ஆத்மாவின் இதயத்தில் உள்ள அனைத்து இருளையும் உடனடியாக அகற்றுகின்றன. என் அன்பான இறைவா, ஒரு பக்தனின் இதயத்தில் உள்ள எல்லா வகையான இருளையும் எப்போதும் அகற்றும் உனது அந்த வடிவத்தை எனக்குக் காட்டுவாயாக. என் அன்பான ஆண்டவரே, நீங்கள் அனைவருக்கும் உயர்ந்த ஆன்மீக குரு; எனவே அறியாமையின் இருளால் மூடப்பட்டிருக்கும் அனைத்து ஆன்மாக்களும் ஆன்மீக குருவாகிய உன்னால் ஞானம் பெற முடியும்” என்கிறது ஶ்ரீமத் பாகவதம் (4.24.52).

2. இறைவனின் திருவடி என்ன செய்யும்,என்பதை அருணகிரிநாதர் தெளிவாகக் கூறியிருக்கிறார். ‘நாளென் செய்யும்! வினைதான் என்செய்யும்! எனை நாடி வந்த கோள் என் செய்யும்!’……‘இங்கு என் தலைமேல் நின் கால்பட்டு அழிந்தது அயன் கையெழுத்தே’ என்பது கந்தர் அலங்காரப் பாடல். எனவே இறைவனின் திருவடியானது நம் விதியை மாற்றவல்லது.

3. பெருமாள் கோவிலுக்குச் சென்றால் நம் திருவடிச் சின்னமான சடாரி வைக்கப்படுவது, நம் தலையெழுத்து சிறப்பாக அமைய வேண்டும் என்பதால் தான்.

4. நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்று இறைவனது திருவடியைப் பணிவதில் ஒரு தத்துவம் உள்ளது. வாழ்வில் ஒவ்வொருவரும் பெரியவர்களுக்கும், குருவாக விளங்கும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கீழ்படிதல் வேண்டும் என்ற ஒப்பற்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகத் தான் திருவடி வழிபாடு உருவாக்கப்பட்டது என்பர் ஞானியர்.

5. திருவடிகளைப் பற்றினால் காலனைக் கூட வெல்ல முடியும். இதற்கு திருக்கடையூர் வரலாறு சாட்சி கூறுகிறது. மார்க்கண்டேயனின் உயிரை எடுப்பதற்கு பாசக்கயிற்றை வீசினான் காலன். மார்க்கண்டேயன் அலறி ஓடி சிவலிங்கத்தை இறுக்கக் கட்டிக் கொண்டான். எமதர்மனால் வீசப்பட்ட பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. லிங்கத்தில் இருந்து சிவபெருமான் வெளிப்பட்டார். காலனைத் தன் காலால் உதைத்தார்.எம தர்மன் இறைவனைப் பணிந்து மார்க்கண்டேயனுக்கு விதி விலக்கு அளித்தது உலகறிந்த உண்மையல்லவா!!

6. ஜோதி வடிவான ஆதிப் பரம்பொருளாகிய ஈசனின் அடி முடி காண, மாலும் அயனும் முயன்றனர்.திருவடி தேடிச் சென்றவர் திருமால், திருமுடி தேடிச் சென்றவர் பிரம்மன்.

இறைவனின் திருவடியை முதலில் பணிந்தால் நம் மனதில் பக்குவம் ஏற்படும். நாம் தலையைக் குனிந்து வழிபட்டால் திருவடி தெரியும். அகக்கண் திறந்து அனைத்தும் வளமாக வேண்டுமானால் இறைவனின் இணையடிகளைப் பார்த்து வழிபாடு செய்வது அவசியமாகும். இறைவனின் திருவடிகள் அறிவைக் (ஞானம்) குறிக்கின்றன. அறிவு உள்ள இடத்தில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.

திருவடிகளும் மெய்ப்பொருள் ஞானமும்

பொதுவாக, இறைவனின் கமலப்பாதங்கள் இரண்டினைப் பற்ற, உடல், வாக்கு, மனம் வழி நாம் புரியும் வழிபாட்டுச் செயல்கள்களால் நமக்கு வரும்/கிடைக்கும் பலன்களை, ஒவ்வொரு திருவடியின் அருள் என எடுத்துக் கொண்டால், அவைகளை இங்கனம் பிரித்துப் பார்க்கலாம்:

இடது திருவடி குறிப்பது

1. அபர ஞானம்

2. கர்ம காண்ட ஞானம்

3. உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது

4. சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)

வலது திருவடி குறிப்பது

1. பர ஞானம்

2. ஞான காண்ட ஞானம்

3. உண்மையை உணர்த்துவது

4. யோகம்(உள்ளத்தால்), ஞானம்

பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.

Sriman Narayaneeyam-Dasakam 6 -Virat Rupa-Sloka 6. ஶ்ரீமந் நாராயணீயம்-தசகம் 6-விராட ரூபம்- ஸ்லோகம் 6

Link to the audio for Chanting

https://www.dropbox.com/scl/fi/8mc1df4vpv1f8ro3i95fu/Verse-6.mp3?rlkey=jf5xkykia6mgbdvo2g7t4j2im&dl=0

Sanskrit Verse

माया विलासहसितं श्वसितं समीरो
जिह्वा जलं वचनमीश शकुन्तपङ्क्ति: ।

सिद्धादय: स्वरगणा मुखरन्ध्रमग्नि-
र्देवा भुजा: स्तनयुगं तव धर्मदेव: ॥६॥

Translation in Tamil 

மயக்கிடும் மாயை புன்முறுவலாய்,
மன்றம் வீசுதென்றல் சுவாசமாய்,
மண்டிலாத் தெளிநீர் நாவாய்,
திரள்புள் சிலம்பம் மொழியாய்,

சித்த ஞானியர் ஏழிசையாய்,
சிவந்த கனல் திருவாயாய்,
வின்னவரினம் திருக்கரமாய்,
இல்லற துறவற தர்மங்கள் இருமார்பாய்
அமைந்த ஆண்டவன் உனை
அடிபணிவேனே எளியன் யான்!! 6.6

Transliteration in English 

maayaa vilaasahasitaM shvasitaM samiirO
jihvaa jalaM vachanamiisha shakuntapanktiH |

siddhaadayaH svaragaNaa mukharandhramagnirdevaa
bhujaaH stanayugaM tava dharmadevaH ||

Transliteration in Tamil 

மாயா விலாஸஹஸிதம் ஶ்வஸிதம் ஸமீரோ
ஜிஹ்வா ஜலம் வசநமீஶ ஶகுந்தபங்க்தி: |

ஸித்₃தா₄த₃ய: ஸ்வரக₃ணா முக₂ரந்த்₄ரமக்₃நி-
ர்தே₃வா பு₄ஜா: ஸ்தநயுக₃ம் தவ த₄ர்மதே₃வ: || 6||

Meaning in English 

O Lord! Controller of the Universe, Your sportive smile constitutes Maya, Your Cosmic Creative Power; Your breath is the wind; Your tongue is water, Your speech the formation of beautiful birds; 

Your tunes (The seven notes Sa,Ri, Ga, Ma, Pa, Da, Ni) are the divine Siddhas, and Gandharvas; Your mouth is the God of Fire, arms the Devas, and Your twin breasts are the God of Dharma representing Pravriti and Nivriti Dharmas !

Meaning of the Sanskrit Words 

माया	 - Maayaa (Thy cosmic creative power)

विलास-हसितं - is (Thy) charming smile

श्वसितं समीर: - (Thy) breath is the wind

जिह्वा जल - (Thy) tongue is water

वचनम्- speech

ईश O Lord !

शकुन्त-पङ्क्ति - is the birds' chirping in formation

सिद्ध-आदय: स्वरगणा: - (Thy) voice is the Sidhdhaas (and other divine artists)

मुख-रन्ध्रम्-अग्नि: - (Thy) mouth is fire

देवा भुजा: - (Thy) arms are the gods (Devaa)

स्तनयुगं तव धर्मदेव: - Thy breasts is the Dharmadeva (the god of righteousness)

அஷ்டாவக்ர கீதை

அஷ்டாவக்ர கீதையின் ஸ்லோகங்களுக்கு விளக்கவுரைகள், புத்தக வடிவில் குறைவு. சமூக வலைத் தடங்களில் பல பெரியோர்கள் தங்களது விளக்கங்களை ஒளி அல்லது ஒலிப் பதிவுகளாக வெளியிட்டுள்ளனர்.

அடியேனின் ஏட்டறிவு, கீழ்காணும் நூல்கள், ஒளிப்பதிவுகள் ஆகியவற்றிலிருந்து.

  1. பகவத் கீதை – தத்துவ விவேசினீ – கீதா பிரஸ்ஸின் விரிவுரை
  2. திருக்குறள்.
  3. திருமந்திரம்.
  4. தாயுமானவர் பாடல்கள்
  5. சுவாமி சின்மயானந்தரின் அஷ்டாவக்ர கீதை விளக்கவுரை நூல்,
  6. சுவாமி பரமார்த்தானந்தரின் அஷ்டாவக்ர கீதை விளக்கவுரைகளை தொகுத்து வெளியிடப்பட்ட எழுத்துப் பதிவுகள்,
  7. பகவான் ரமணரின் தமிழாக்கம்,
  8. குருநாதர் சுவாமி ஓம்காரானந்தரின் வேதாந்த சொற்பொழிவுகள்,
  9. பகவான் ரமணரின் உள்ளது நாற்பது

பொதுவாக ஒரு புதிய பாடத்தையோ, அறிக்கையையோ, பதிவினையோ நான் படிக்கத் துவங்கினால், குறிப்புகள் எடுத்துக்கொள்வது எனது பழக்கம். அப்படி எடுத்துக்கொண்ட குறிப்புகளின் தொகுப்பினை புத்தக வடிவத்தில் (இரண்டு பாகங்களாக) வெளியிட்டுள்ளேன்.

  1. முதல் பாகம் ஸ்லோகங்களின் தமிழாக்க முயற்சி.
  2. இரண்டாவது பாகம் விளக்கவுரைகளின் தொகுப்பு.

இந்தப் புத்தகம், உலகுக்கு என் அறிவை வெளிப்படுத்தும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.

ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவி நான்,
அத்வைதவாஞ்சையதால், அரியகொம்பில்தேனைஇச்சித்தபடிஆகும்

தாயுமானவர்

என்ற தாயுமானவரின் சொல்லே எனது நிலை.

ஞான யோகத்தில், அரிய முதல்நிலை மாணவனாம் ஜனகருக்கு உரையாடல் வழி உபதேசிக்கப்பட்டதை, அறிவிலியாகிய நான், புத்தக வடிவில் வெளியிடுவது என்பது, என் அகங்காரத்தை அல்ல, மடமையைக் குறிக்கிறது என்றே கூறலாம்.

இந்த புத்தகங்களை நோஷன் பிரஸ் (Notion Press) “அமேஸான் (Amazon) ”, “ப்ளிப்கார்ட் (Flipkart) முதலிய விற்பனை தளங்களிலிருந்து பெறலாம். அதற்கான இணைப்புகள் இதோ:

முதல் பாகம் – ஸ்லோகங்களின் தமிழாக்கம்

https://notionpress.com/read/ashtavakra-gita-part-1-slokas

https://dl.flipkart.com/dl/ashtavakra-gita-part-1-slokas/p/itme30ee853bf8ac?pid=9798894989969&cmpid=product.share.pp&_refId=PP.ed8a7124-be45-41d7-8599-0642a234c18f.9798894989969&_appId=CL

https://www.amazon.in/dp/B0DB1GT65M

இரண்டாம் பாகம் – விளக்கவுரை

https://notionpress.com/read/ashtavakra-gita-part-2

https://www.amazon.in/dp/B0DBDH46XG

https://dl.flipkart.com/dl/ashtavakra-gita-part-2/p/itme77a5d62c2674?pid=9798895192696&cmpid=product.share.pp&_refId=PP.57d316e7-5e99-40c7-a330-59e9a55e808c.9798895192696&_appId=CL

இந்த புத்தகம் நிச்சயமாக வேதாந்தத்தின் முன்நிலை மாணவர்களுக்கோ அல்லது கற்றறிந்த பெரியோருக்கோ அல்ல. அறியாமையைனும் இருண்ட ஆழ்வனத்தில், மருண்டு அலையும் என்போன்ற சிறியோருக்கு, மின்மினிப்புச்சியின் ஒளியென உதவும் முயற்சியே இந்த புத்தகம்.

இந்த புத்தகங்களின் விற்பனையில் வரும் ஈட்டு அனைத்தும் என்னுடையது அல்ல. அது இறை பணிக்கே என்பது எனது உறுதிமொழி.

சொற்குற்றம், பொருட்குற்றம் கண்டீரெனில், மழலை கூறும் குழவியின் தடுமாற்றம் என்று கருதி, அவைகளை சுட்டிக்காட்டிடுவீர். அறிந்துணர முயன்றிடுவேன்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

பகவத் கீதை ஸ்லோகம் 2.22- மரணம் – பழையன கழிதலும் புதியன புகுதலும்

முகவுரை


ந‌ன்னூ‌ல் எ‌ன்ற இல‌க்கண நூ‌லி‌ன் சொ‌ல் அ‌திகார‌த்‌தி‌ல் உ‌ள்ள “பழையன க‌ழிதலு‌ம் பு‌தியன புகுத‌லு‌ம் வழுவல கால வகை‌யி னானே” எ‌ன்ற தொட‌ர், வழ‌க்‌கிழ‌ந்த இல‌க்கண‌க் கரு‌த்து‌க்களை ‌நீ‌க்குவது‌ம், புதிய வழ‌க்குகளை ஏ‌ற்பது‌ம் தவ‌றி‌ல்லை எ‌ன்‌பதைக் குறிப்பது. அதாவது,
இல‌க்கண‌ம் கால‌‌ந்தோறு‌ம் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌த்‌தி‌ற்கு உ‌ட்ப‌ட்டது எனக் கூறு‌கிறது.  

வீட்டில் உள்ள பயனற்ற பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதுவே இதன் அடிப்படைத் தத்துவம்.

சரி, பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலில் வரும் ஒரு தத்துவத்திற்கும், போகிப் பண்டிகைக்கும், பகவத்கீதைக்கும் என்ன சம்பந்தம்? அதாவது, பழையனவற்றைக் கழித்தலுக்கும், புதியனவற்னை புகுத்தலுக்கும், பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு? போர்க்களத்தில் பார்த்தனுக்கு, சாரதியான கண்ணன் இதைப்பற்றி என்ன அறிவுரை வழங்கினான்?

வாருங்கள், ஒரு முக்கியமான ஸ்லோகத்தை அறிய முற்படுவோம்.

ஸமஸ்க்ருத ஸ்லோகம்

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா2 விஹாய
நவாநி க்3ருஹ்ணாதி நரோபராணி!

ததா2 ஸரீராணி விஹாய ஜீர்ணா
ந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே3ஹீ!!

பகவத் கீதை 2.22

பொருள் விளக்கம்

தொப்புள் கொடி உறவாக தொடங்கிய நாம், முதலில் நம்மை நமது உடலுடன் பிண்ணி இணைக்கிறோம். இது இயல்பு. பின் வளர்ச்சியின் அங்கமாக அது படிப்படியாக உறுதியாகி, உடலே உயிர் எனும் உணர்வினை அடைகிறோம். அதனை வளர்க்க, மெருகுபடுத்த, காக்க, விதவிதமான பொருள், செயல்முறை என்று பலவற்றை உபயோகப்படுத்துகிறோம்.

காலன் விதித்திட்ட வேளை வந்தால் செத்து மடிகிறோம். நாம் இவ்வுலகில் வந்திறங்கியது எதற்காக, வந்து புரிந்தது என்ன என்று அறியாமல்கூட செல்கிறோம். இருக்கும் போது, நாம் இருக்கும் காயம் ஒரு பொய்; இந்த யாக்கை நிலையாதது என்று நொடிப்பொழுதும் உள்நோக்கி ஆய்ந்ததில்லை. இதுதான் யதார்த்தம். மரணம் என்பது ஒரு கசப்பான உண்மை என்பதை உணர மறுக்கிறோம். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ளத்தான் பகவான் கண்ணன் பார்த்தனுக்கு இந்த ஸ்லோகம் வழியாக அறிவுரை வழங்குகிறான்.

“எப்படி ஒரு மனிதன் நைந்து போன ஆடைகளை கழட்டிவிட்டு வேறு புதியவற்றை அணிந்து கொள்கிறானோ, அப்படியே தேஹத்தில் உறைபவன், நைந்து போன உடல்களை விட்டுவிட்டு வேறு புதியவற்றை அடைகிறான்”

என்று பகவான் ஶ்ரீக்ருஷ்ணர் மரணத்தைப் பற்றி கூறுகிறார்.

தாய், குழந்தைக்குப் பழைய அழுக்கான உடுப்பைக் கழட்டிவிட்டு புதியதை அணிவிக்கிறாள். அப்போது குழந்தை அழுகிறது. ஆனால் தாயார் குழந்தை அழுவதைப் பொருட்படுத்துவதில்லை. குழந்தைக்கு “ஹிதம்” (நன்மை) என்று, புதியதை மாற்றிக் கொடுக்கிறாள்.

அது போல, பகவானும் ஜீவனுக்கு ஹிதமாக அவன் அழுவதை கவனியாமல் அவன் உடலை மாற்றிக் கொடுக்கிறார். உடலுக்கு உடை ஆடை; உயிருக்கு உடல் ஆடை.

இதைப் புரிந்தவர் அழுவதில்லை; புரியாதவர் அழுகின்றனர். அதனால்தான் “செத்த பிணத்தைப் பார்த்து சாகாத பிணம் அழுகிறது” என்பர் ஞானியர்.

சொற்களின் உபயோகமும், அவைகளில் பதிந்துள்ள உட்கருத்துக்களும்ஒரு கண்ணோட்டம்

1. “ஜீர்ணாநி” என்பதற்கு நைந்து போனது என்ற பொருளாகும். இந்த சொல் துணிகளுக்குப் பொருந்தும். நைந்த உடலென்று பகவான் ஒப்பிடுவது, வயதாகித் தேய்ந்த (நலிந்த) உடலுக்குத்தான் மரணமெனும் உடை மாற்றத்தைக் குறிப்பதல்ல. சிறு வயதிலும் மரணமெய்தலாம். உடல் நலிவு என்பது, “ஆயுள் முடிந்தது” என்ற பொருளில் கூறப்படுவது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

2. உடையை மாற்றிக் கொள்பவன் ஒரே சமயத்தில் பல உடைகளை (உள்ளாடை, வேஷ்டி, சட்டை, அங்கவஸ்த்திரம் என) மாற்றிக் கொள்ளமுடியும். உயிரைப் (ஜீவாத்மாவைப்) பொருத்தவரை, ஒரே உடலைத்தானே மாற்ற இயலும் என்று இருக்கையிலே, “வாஸாம்ஸி”, “ஸரீராணி”, என்று பன்மையில் பகவான் கூறுவதன் உட்கருத்து என்ன என்பதை இருவகையில் ஆயவேண்டும்:

• ஜீவன் இதுவரை எவ்வளவு உடல்களை விட்டுப் புதிய உடல்களை அடைந்திருக்கிறதோ, அவற்றுக்குக் கணக்கு கிடையாது. வரும் காலத்திலும், ப்ரம்ம ஞானமெனும் ஆத்ம ஞானம் கிட்டும்வரை, இன்னும் எத்தனைப் பழைய உடல்களைவிட்டுப் புதிய உடல்களை அடையப் போகிறது என்பதும் தெரியாது. எனவே சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

• ஸ்தூலம், ஸூக்‌ஷ்மம், காரணம் என்று மூன்று உடல்கள் ஜீவனுக்கு உள்ளன. இந்த உடலுவிட்டு அடுத்த உடலை அடையும்போது, இந்த மூன்றும் மாறுகின்றன. ஸத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஒவ்வொருவருக்கும் குணமயமான, அவனுக்கே உரித்தான, தனித்தன்மையுடைய “வ்யஷ்டிப்ரக்ருதி” அமைகிறதே, அது காரண ஸரீரம். இதையே “ஸ்வபாவம்” என்பர். மனிதன் எப்படிச்செயல்படுகிறானோ, அதற்கு ஏற்றவாறு ஸ்வபாவம் மாறுகிறது. இந்த ஸ்வபாவத்திற்கு ஏற்றவாறுதான் உயிர் பிரியும்போது மனதில் எண்ணமும் உண்டாகிறது. அதன்படிதான் அவனுக்கு ஸூக்‌ஷ்ம ஸரீரம் அமைகிறது. காரணம், ஸூக்‌ஷ்மம் என்ற இரு ஸரீரங்களுடன் இந்த உடலை (ஸ்தூல ஸரீரத்தை) விட்டுப்பிரிந்த பின்னர், ஸூக்‌ஷ்மத்திற்கேற்றவாறு அடுத்த பிறவியில் ஸ்தூல ஸரீரத்தைப் பெற்று, காரண ஸரீரத்திற்கேற்றவாறு அடைந்த அந்த அடுத்த உடலில் அவனது ஸ்வபாவம் அமைகிறது. இப்படி மூவுடலும் மாறுவதால், சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

3. ஆத்மாவிற்கு அசைவில்லை, போக்குவரத்து இல்ல. எனவே ஜீவாத்மா எனும் “தேஹி” அடுத்த உடலைப் போய் சேர்கிறான் என்று சொல்வது எப்படி பொருந்தும் என்பதை இப்போது ஆய்வோம்.

உண்மையில் ஆத்மாவிற்கு அசைவில்லை, செயலில்லை, எந்த நிலையிலும் போக்குவரத்தும் இல்லை. ஆனால், ஒரு குடத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போகும்போது, அதற்குள் இருக்கும் ஆகாயம் போகவில்லையானாலும், குடத்துடன் சம்பந்தத்தால் அது போவதாக நினைக்கிறோம் அல்லவா!

அதுபோல, ஸூக்‌ஷ்ம ஸரீரம் போகும்போது, அத்துடன் இணைந்த ஆத்மாவும் போவதாகத் தெரிகிறது. இதை உலகத்தார்புரிந்து கொள்ளவே, உயிர் வந்து போவதாக கற்பனை செய்து கூறப்பட்டது. “தேஹீ” என்றால் சரீரத்தை உடையவன் என்று பொருள். தேஹத்தை உற்ற உயிர் என்பர். ஆகவே உடலின் சம்பந்தத்தால் அவனிடம் போக்குவரத்து என்ற தோற்றம் ஏற்படுகிறது.

இதனால்தான இந்த ஸ்லோகத்தில் துணியைப் பற்றிக் குறிப்பிடும்போது “க்ருஹ்ணாதி” (ஏற்பது) என்றும், உயிரைப் பற்றிக் கூறும்போது “ஸம்யாதி” (செல்லுதல்) என்ற சொல்லும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

3. “நர”, “தேஹி” என்ற சொற்களின் விளக்கம்

ஆடையை அணிவது, நைந்தது, துறப்பது என்பவைகள் எல்லாம் மனிதனுக்கே உரித்தானது. எனவே இந்த ஸ்லோகத்தில் முதல் சொற்றொடரில், மனிதனைக் குறிக்கும் “நர” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. உடல்களின் போக்குவரத்து என்பது, உடலபிமானமுடைய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். எனவே இரண்டாவது சொற்றொடரில் “தேஹி” என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்லோகத்தின் உட்கருத்து

ஆத்மா உடல் எடுப்பதில்லை, ஸூக்‌ஷும ஸரீரம் மட்டுமே உடல் எடுக்கிறது. ஸூக்‌ஷ்ம ஸரீரமே (mind) பயணிக்கிறது. தூய உணர்வாகிய நான் எங்கும் பயணிப்பதில்லை. நான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.

இறைவனும் ஆத்மாவும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவை. எனவே இறைவனும் ஆத்மாவும் ஒன்றே. இறைவனது உபாதியும், ஆத்மாவின் உபாதியும் வேறு. இறைவன் காரண உபாதியை உடையவர், ஆத்மா காரிய உபாதியை உடையது. காரணமும் காரியமும் மாயத்தோற்றங்களே. இருப்பது பரம்பொருள் ஒன்றே.

ஆத்மா எதையும் அனுபவிக்க வேண்டியதில்லை. அனுபவங்கள் அனைத்தும் மாயை. அனுபவிப்பவனைப் பற்றிய உண்மையே நமக்கு முக்தியை கொடுக்கும். எந்த அனுபவமும் மோக்‌ஷத்தை கொடுக்காது.

அனைத்து உயிர்களில் இருக்கும் ஆத்மா நானே என்கிறான் கண்ணன்.

இதுதான் இந்த ஸ்லோகத்தின் சாரம்.

இதனைத்தான் கவிஞர் கண்ணதாசன், காலத்தால் அழியாத அருமையான திரையிசைப் பாடலாக வடித்துள்ளார்.

பாடலைக் கேளுங்கள்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

பிறந்த நாள் மழலை

சுவரில் வரைந்த சித்திரம் (நன்றி-தீபா)

என் கடன் பணி செய்து கிடப்பதே (பகவத் கீதை 2.47)

முகவுரை

அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்ற ஔவையின் கூற்றின்படி, ஏழுபத்தொன்று வருடங்களுக்குமுன் அரிதான பிறவியை எடுத்த இந்நாளில், அடியேன் இதுவரை கடந்து வந்த பாதையையும் அந்த பாதையின் அடிப்படையையும் அறிய  முயன்றேன்.

அந்த முயற்சியின் முடிவில் கிடைத்த அறிவின் தொகுப்பை எனது மழலையில் மொழிகிறேன் கீழ்வருமாறு:

1. சாதாரண நடுத்தர குடும்பத்திலிருப்பவன் நடந்து வரும் பாதையெனும் ஆறிலிருந்து அறுபது வரையிலான வாழ்வு,

இளமையில் கல்வி,
அறவழியில் பொருளீட்டுதல்,
மனைமாட்சி

என்ற மூன்று படலங்களத் தழுவியது. என் பாதையும்கூட அதுதான்.

2.“காயேன வாசா மனஸா” என்று உடல், வாக்கு, மனம் வழி ஆண்டவனைச் சார்ந்திருந்து, உலகியல் பலன்களை விரும்பாமல், கல்வி புகட்டி மனத்தூய்மையுடன் அறச்செயல்கள் புரிந்திட்ட அன்னை தந்தையின் அறிவுரைகளால், இளவயதிலிருந்தே எனக்கு கிட்டியது அறநெறிப்படி திட்டமிட்டு ஸமபுத்தி மனப்பான்மையுடன் வாழும் ஒழுக்கமிகு வாழ்க்கை. பெற்றோரின் வடிவில் இறையருள் கிட்ட, என்ன பெருந்தவம் செய்தேன் என்று இன்றும் அறியேன் அடியேன்.

3. இளமையில் கல்வி, பொருளீட்டுதல், மனைமாட்சி என்ற மூன்று படலங்களில், தர்மத்தை கடைப்பிடிக்கும்போது கொள்ள வேண்டிய மனோபாவனையை அடைந்திட, பெற்றோரின் அன்றாட எளிய வாழ்க்கையே எனக்கு இலவசமாகக் கிடைத்த பயிற்சிக்கூடம்.

4. இன்பம் “அவன்” கொடுத்தது, துன்பம் எனது முன்வினைப் பயனாலே; ஆகவே இன்பத்தில் களித்திடாமலும், துன்பத்தில் துவண்டிடாமலும் அவர்கள் வாழ்ந்த எளிமையான அனுதின வாழ்வே இன்றும் எனக்கு வழிகாட்டி.

இப்படி, அறிவின் துணை கொண்டு இருமைகளில் சமமான மனப்பான்மை என்பது தான் எனது அறுபது கடந்த ஆன்மீகம் தழுவிய வாழ்வின் அடிப்படை.

சரி, நீ என்ன பெரிய மனிதனா? என்ன சாதித்தாய் இவ்வுலகில்? உன் சுய சரிதையால் எங்களுக்கு என்ன? என்று நீங்கள் வினவுவது எனக்குத் தெளிவாக கேட்கிறது. நான் பெரியவனல்ல; நான் சாதனையாளன் அல்ல. நான் ஒரு சாமான்யனே! எனினும், இன்று நான் அறிந்திடும் பகவத் கீதையின் ஸ்லோகத்திற்கு இது முகவுரையாகும் என்ற எண்ணம் என்னுள் எழுந்ததனால்தான் இந்த சுயசரிதை.

இப்போது கீதையின் ஸ்லோகத்தைக் காண்போம்.

ஸமஸ்க்ருத ஸ்லோகம்

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन |
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि || 2.47 ||

தமிழில் எழுத்துப் பெயர்ப்பு

கர்மண்யேவாதிகாரஸ்தே மா ஃபலேஷு கதாசனா |
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோத்யஸ்த்வகர்மணி || 2.47 ||

தமிழாக்கம்


1. உனக்கு கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு.

2. அவற்றின் பயன்களில் ஒருகாலும் உரிமையில்லை.

3. ஆகவே நீ கர்மங்களின் பயன்களைக் கோருவதற்கு காரணமாக ஆகாதே.

4. மேலும் உனக்கு கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது”

என்று நான்கு அறிவுரைகள் வழங்குகிறான் கண்ணன். அதாவது,

1. செயலின்மையில் நாட்டம் வேண்டாம்.
2. செயலின் பலனிலும் நாட்டம் வேண்டாம்.
3. செயலில் மட்டுமே உன் நாட்டம் இருக்கட்டும்.

4. செயல்புரிவதற்கு மட்டுமே உனக்கு தகுதி இருக்கிறது.
5. செயலைத் (கடமையைத்)துறப்பதற்கு உனக்கு தகுதி வரவில்லை.
6. செயலைத் துறக்க வேண்டுமானால், செயலின் பலனை விரும்பாமல் சில காலம் செயலாற்ற வேண்டும். அப்பொழுதுதான் செயலைத் துறக்க தகுதி ஏற்படும்.

என்று கண்ணன் பார்த்தனுக்கு விளக்குகிறான்.

கர்ம யோகம் புரியாமல், கர்ம சந்யாஸம் செய்ய முடியாது. அதைமீறி கர்ம சந்யாஸம் செய்தால் அதனால் துக்கம் விளையும்.

விளக்கவுரை

வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றிற்கு ஏற்றவாறு மனிதனுக்கு கர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கர்மங்களை “கர்மணி” என்ற சொல் குறிக்கிறது. மறைகளில் செய்யக்கூடாது என்று கூறப்பட்ட பாவச்செயல்களை “கர்மணி” என்ற சொல் குறிக்காது. ஏனெனில், பாவ கர்மங்களைச் செய்ய அவசியமோ, பொறுப்போ மனிதனுக்கு கிடையாது. விருப்பு-வெறுப்புகளினால் உந்தப்பட்டு அவற்றில் ஈடுபடுகிறான். அது அவனுடைய பொறுப்பிலா செய்கை. அதனால் அத்தகைய செயல்கள் புரிபவனுக்கு, துன்பங்களை அனுபவிக்கக்கூடிய தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அறம் வழி நடந்து புரியும் வினைகளே “கர்மணி”.

உனக்கு கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு

உனக்கு செயல் புரிய மட்டுமே தகுதி உள்ளது என்ற இந்தக் கூற்றில்:

1. மனித உடலில்தான் ஜீவனுக்குப் புதிய கர்மங்கள் செய்ய சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அவன் தன் பொறுப்பிற்கு ஏற்றவாறு இறைவனுடைய கட்டளையை ஏற்று நிறைவேற்ற வேண்டும். அந்த கர்மங்களில் “நான் செய்கிறேன்” என்ற ஒட்டுதல்/பற்று இருக்கக்கூடாது. அந்த கர்மங்களை ஆற்றுவதை இறைவனை அடைவதற்கு ஸாதனமாக கருதவேண்டும். அரிதான மானிடப்பிறவி கிட்டியிருப்பது பரம்பொருளை அறிந்துணரவே என்று வினைகள் புரிந்திட வேண்டும்.

2. மனிதனுக்கு கர்மங்களை ஆற்ற மட்டுமே பொறுப்பு உண்டு. அவற்றைச் செய்யாமல் விடுவதற்கு அவனுக்கு சுதந்திரம் கிடையாது. தன்முனைப்பால், பிடிவாதமாக கர்மங்களைச் செய்யாமல் விட்டுவிடலாம் என்றாலும்கூட அவனால் விட்டுவிட முடியாது. ஏனெனில் அவனது ஸ்வபாவம் (இயல்பு) வலுக்கட்டாயமாக ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருக்கச் செய்யும். இந்த நிலையில் அவனுடைய பொறுப்பை நிறைவேற்றாமல், தனக்கு கொடுக்கப்பட்ட உரிமையைத் தவறாகப் பயன்படுத்தினால், விதிக்கப்பட்ட கர்மங்களை விட்டுவிடுவதால்,மறைகள் விதித்த விதிகளை மீறியதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும். எனவே நீ ஆற்றவேண்டிய கர்மங்களை ஆற்றத்தான் வேண்டும், தவிர்க்கக்கூடாது.

3. பிறப்பு-இறப்பு (ஜனன-மரணம்) என்ற பிறவிப்பிணியிலிருந்து (ஸம்ஸார பந்தத்திலிருந்து) விடுதலை பெறுவதற்காகவும், பிறருக்கு நன்மை செய்வதற்காகவும், ஜீவனுக்கு மனம், புத்தி, புலன்களுடன் கூடிய இந்த மனித உடலை (ஸரீரத்தை) அளித்து, அதன்மூலம் செயல்கள் செய்ய விஷேஷ சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த சலுகையை நல்விதத்தில் பயன்படுத்தினால் கர்மபந்தத்திலிருந்து விடுதலை பெற்று பரம்பொருளை அறிந்துணர இயலும். தவறாகப் பயன்படுத்தினால் தண்டனையுடன், அந்தப் பொறுப்பும் பிடுங்கப்படும். அதாவது மறபடி மனிதப்பிறவி பெறுவதற்கான தகுதியை இழக்கிறான். இதனை உணர்ந்து தன் பொறுப்பை நல்முறையில் நிறைவேற்ற வேண்டும்.

என்ற மூன்று முக்கிய உட்கருத்துக்கள் அடங்கியுள்ளன.

கர்ம பயன்களில் ஒருகாலும் உனக்கு உரிமையில்லை

எந்த கர்மத்திற்கு என்ன பயன்? அந்தப் பயன் எப்பிறவியில் கிடைக்கும்? எந்த முறையில் கிடைக்கும்? என்று மனிதன் அறிய மாட்டான். 

தன் விருப்பப்படி தான் வாழும் காலத்தில் அவற்றைப் பெறவும் முடியாது; விரும்பி முயன்றாலும் அவற்றிலிருந்து தப்பவும் முடியாது. அவன் விரும்புவது ஒன்று; அவனுக்கு கிடைப்பது ஒன்று. அவன் விரும்புவதை அடையும் சந்தர்ப்பம் அவன் கையில் இல்லை. கர்மங்களின் பயனை விதிப்பது இறையருள் (அத்வைத வேதாந்தத்தில் முன்வினைப் பயன் எனும் ப்ராரப்தம் என்பதே இறையருள் என்ற விளக்கம் உள்ளது). விருப்பு, வெறுப்பு, ஆசை இவையெல்லாம் அறியாமையே. இவைகளால் இவ்வாழ்வில் விளைவதனைத்தும் (இன்பம், துன்பம்) நிரந்தரமல்ல. அவைகள் உண்மையான ஸுகத்தை அளிக்காது.

“ஆசை அறுமின், ஆசை அறுமின்,
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்”

என்று திருமூலர் கூறுவதும் இதுவே.

கர்ம பயன்கள் கோருவதற்கு காரணம் ஆகாதே

மனம், புத்தி, புலன்கள் மூலமாக நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்களிலும், அவற்றின் பயன்களிலும்

1. தான் செய்வதாக கருதும் எண்ணம் (“மமதை”)
2. பற்று (“ஆஸக்தி”)
3. அச்செயல்களில் உள்ள நுண்ணிய விருப்பம் (“வாஸனா”)
4. எதிர்பார்ப்புகள்

ஆகிய இவைகள்தான் கர்மங்களின் பயன்களுக்கு காரணம் ஆகும்.

கர்மத்திலும், கர்மபலனிலும் பற்றுள்ளவனுக்கு இவைகள்தான் கிட்டும்.

அறிவின் துணைகொண்டு, இருமைகளை சமமான மனதால் எதிர்கொண்டு “வினை புரிபவன் நானல்ல, வினைப் பயனும் எனதல்ல, அனைத்தும் அவன் செயல்” என்ற மனப்பான்மை உடையவனை, புரியும் கர்மங்களும், கர்ம பயன்களும் ஒட்டாது. அவன் புதிதாக பாபச் செயல்களேதும் புரியவே மாட்டான்.

முன்னால் செய்யப்பட்ட பாவங்களும், இப்பொழுது செய்கின்ற பற்றற்ற கர்மங்களின் ப்ரபாவத்தினால் சாம்பலாகி விடுகின்றன. இக்காரணத்தினால் அவன் பாவச்செயல்களின் பயன்களுக்கு காரணம் ஆகமாட்டான். இவ்விதம் கர்மங்களை ஆற்றுபவனுடைய எல்லாக் கர்மங்களும் மறைந்துவிடுகின்றன. அவன் மாறுதலற்ற உயர்ந்த பதவியை அடைவான் என்கிறான் கண்ணன்.

கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது

மறைகளில் நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைப் புரிவதற்கு மாறாக, தடை செய்யப்பட்ட கார்யங்களைச் செய்வது, செயலாற்றும் உரிமையைத் தவறாக உபயோகப்படுத்துவதாகும். அது போல, வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றுக்கு ஏற்றவாறு எவனுக்கு எந்த கர்மம் விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைச் செய்யாமல் இருப்பதுகூட உரிமையைத் தவறாக உபயோகப்படுத்துவதாகும். விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் இருப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை. 

விதிக்கப்பட்ட கர்மங்களை மோஹத்தினால் தியாகம் செய்வது “தாமஸ த்யாகம்”; உடல் நோகும் என்று பயந்து தியாகம் செய்வது “ராஜஸ த்யாகம்”. விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் மனிதன் கர்ம யோகத்தில் ஸித்தி பெற முடியாது. ஆகவே, எக்காரணம் கொண்டும் விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் விடுவதற்கு நீ விரும்பக்கூடாது என்பது கண்ணன் கூறும் அறிவுரை.

முடிவில் ஒரு கேள்வி


ஆறிலிருந்து அறுபதுவரை இந்த ஸ்லோகத்தை அறிந்திராமல் வாழ்ந்திடினும், இதன் சாரத்தின்படி அமைந்ததே என் வாழ்வு என்பது இப்போது என் கருத்து. அதனால்தான் என்னவோ, இறையருளால், அன்றும் இன்றும் படுத்தவுடன் உறங்குகிறேன் கவலைகளேதுமின்றி.


1. அன்றாட வாழ்வில் இந்த ஸ்லோகம் உதவுமா?

2. முகவுரையாக கூறப்பட்ட சிறுவனின் சுய சரிதைக்கும் இந்த ஸ்லோகத்திற்கும் சம்பந்தம் உண்டா? ………..
பதிலும், முடிவும் உங்களுடையது.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து

அனைவருக்கும் இனிய குரோதி வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Narayaneeyam -Dasakam 5 – Sloka 8 நாராயணீயம் – தசகம் 5 – ஸ்லோகம் 8

Audio Link for Chanting

https://www.dropbox.com/scl/fi/urhzb8o8qvnsmdypu34u1/5.8.mp3?rlkey=waojivlof6jfv82ec0jkn6ikp&dl=0

Introduction 

In Dasakam 5, Narayana Bhattathri provides an evolution of the Cosmic Form of the Brahman (in line with Srimad Bhagavatham) to help us focus on the “Virat Rupa” of Brahman. 

Starting with the divine intention (sankalpa) or will within the Supreme Being to bring forth the universe, Bhattathri in the previous Slokas outlined the evolution of Purusha, Prakriti, Mahat, Ahamkara and associated deities for the five organs of perception, five organs of action and the four aspects of inner conscience.He then outlined the evolution of the inner conscience, the sense and action organs.

Now in this Sloka, the evolution of additional elements is highlighted.

முகவுரை

இந்த தசகத்தில், ஸ்ரீ. நாராயண பட்டத்திரி பிரம்மனின் பிரபஞ்ச வடிவத்தின் பரிணாமத்தை (ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஏற்ப) பிரம்மனின் "விராட் ரூபத்தில்" வழியாக அறிய உதவுகிறார். 

பிரபஞ்சத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற தெய்வீக எண்ணம் (சங்கல்பம்) அல்லது பரமாத்மாவிற்குள் உள்ள சித்தத்துடன் தொடங்கி, முந்தைய ஸ்லோகங்களில் பட்டத்திரி, புருஷன், பிரகிருதி, மஹத், அஹம்காரம் மற்றும் உள்மனசாட்சியின் நான்கு அம்சங்கள், ஐந்து புலனுணர்வு உறுப்புகள், ஐந்து செயல் உறுப்புகளுக்குக்குத் தொடர்புடைய தெய்வங்களின் பரிணாமத்தை கோடிட்டுக் காட்டினார். பின்னர், நான்கு அம்சங்கள் நிறைந்ந மனம், உணர்வு மற்றும் செயல் உறுப்புகளின் பரிணாமத்தை கோடிட்டுக் காட்டினார்.

இப்போது இந்த ஸ்லோகத்தில், ஸமஷ்டி நிலையில் உருவாகும் அடுத்த தத்துவங்களின் வெளிப்பாட்டினை விளக்குகிறார்.

Sanskrit Sloka – சமஸ்க்ருத ஸ்லோகம்

श्ब्दाद्व्योम तत: ससर्जिथ विभो स्पर्शं ततो मारुतं

तस्माद्रूपमतो महोऽथ च रसं तोयं च गन्धं महीम् ।

एवं माधव पूर्वपूर्वकलनादाद्याद्यधर्मान्वितं

भूतग्राममिमं त्वमेव भगवन् प्राकाशयस्तामसात् ॥८॥

தமிழில் ஒலிபெயர்ப்பு

ஶப்₃தா₃த்₃வ்யோம தத: ஸஸர்ஜித₂ விபோ₄ ஸ்பர்ஶம் ததோ மாருதம்
தஸ்மாத்₃ரூபமதோ மஹோ(அ)த₂ ச ரஸம் தோயம் ச க₃ந்த₄ம் மஹீம் |
ஏவம் மாத₄வ பூர்வபூர்வகலநாதா₃த்₃யாத்₃யத₄ர்மாந்விதம்
பூ₄தக்₃ராமமிமம் த்வமேவ ப₄க₃வந் ப்ராகாஶயஸ்தாமஸாத் || 8||



தமிழாக்கம்

ஒலிவழி விண்ணும் விண்வழி தொடு உணர்வும்

தொடுதல்வழி காற்றும் காற்றின் வழி வடிவமும்

வடிவம்வழி அழலும் அழல்வழி ருசியும் ருசிவழி

நீரும், நீர்வழி மணமும், மணம் வழி மண்ணும்

ஒன்றின் தன்மாத்திரம் (மூலப்பொருள்) ஒன்றென உறவுடனே

தோன்றின இருள்குணவழி அஹங்காரமிடமிருந்து

உத்தமன் உன்னிச்சையாலே குருவாயூரப்பா! 5.8

Transliteration in English

shabdaadvyOma tataH sasarjitha vibhO sparshaM tatO maarutaM
tasmaadruupamatO mahO(a)tha cha rasaM tOyaM cha gandhaM mahiim |
evaM maadhava puurvapuurvakalanaadaadyaadyadharmaanvitaM
bhuutagraamamimaM tvameva bhagavan praakaashayastaamasaat ||

Meaning in English

O All pervading Lord! From the Tanmaatra of (Shabda) the subtle element of sound, came the element (Aakaash) Space and from it touch (Sparsh). From touch (Sparsh) came the element Air (Vaayu) and from it form (Roopa). From form (Roopa) came the element Fire (Agni) and from it Taste (Rasa). From the Tanmaatra of Taste (Rasa) came the element Water (Jala) and from it smell (Gandha). From smell (Gandha) came the element Earth (Bhoomi). O Maadhava! By Thy will, thus from the Tamasa aspect of Ahankaara, were born the five Tanmaatras and the five Pancha Bhootas each element having the qualities of the preceding one.

Explanatory Notes

We must bear in mind that the focus of Dasakam 5 so far, has been on the evolution of the Cosmic Egg or the Virat Rupa of the Brahman and should not be mixed up with the evolution of human body which is essentially identical to the one happening in the Cosmos.  At the same time we shouldn’t forget that after all what is happening in the Cosmos do happen in our body too. 

விளக்க குறிப்பு

இதுவரை தசகம் 5-ல் கூறப்படுவது, அண்ட பொன் முட்டை (ஹிரன்ய கர்ப்ப) அல்லது பிரம்மனின் விராட ரூபத்தின் பரிணாம வளர்ச்சி. இதி ஒரு சமஷ்டி நிலை கண்ணோக்கம். நடைமுறை நிலையில், மனித உடலின் பரிணாம வளர்ச்சியுடன் (வ்நஷ்டி நிலை) ஒப்பிட்டு கலந்துவிடக் கூடாது. “அண்டத்தில் நடப்பது பிண்டத்திலும்” என்ற சொல்லிற்கிணங்க, இப்பரிணாமங்களை பிண்டத்திலும் காணலாம் என்பதனையும் மறந்துவிடக் கூடாது. 

Meaning of the Sanskrit Words

श्ब्दात्-व्योम - from sound, space

तत: ससर्जिथ - then,Thou created

विभो - O All pervading Lord !

स्पर्शं - touch

तत: मारुतं - then air

तस्मात्-रूपम्- from that (air) form

अत: मह: -then fire

अथ च रसं - and after that taste

तोयं च गन्धं महीम् - then water smell and earth (were born)

एवं माधव - in this manner O Maadhava!

पूर्व-पूर्व-कलनात्- because of association with the preceding (product)

आद्य-आद्य-धर्म-अन्वितं having the qualities of the earlier products

भूत-ग्रामम्-इममं - this group of subtle elements

त्वमेव भगवन् - Thou alone O Lord!

प्राकाशय: - did bring into existence

तामसात् - from the Tamasa Ahankaar

Narayaneeyam – Dasakam 5 – Sloka 3 – The beginning – முதல் வெளிப்பாடு

Link for Audio Chanting

https://www.dropbox.com/s/qc269ec1ozbl326/5.3.mp3?dl=0

Introduction

In the first Sloka, Narayana Bhattahri brought out that before the Maha Pralaya (The great deluge/Big Bang), only Brahman exists.

The question that naturally followed this assertion was “what happened to all the existing things, living and non living entities at the gross and subtle levels?”.

The answer was provided in the next Sloka 2 wherein Bhattathri brought out that everything else was in unmanifested, undifferentiated state inside Brahman.

Now comes the next question. What happens next?
Answer for this question is Sloka 3.

Sanskrit Verse

एवं च द्विपरार्धकालविगतावीक्षां सिसृक्षात्मिकां

बिभ्राणे त्वयि चुक्षुभे त्रिभुवनीभावाय माया स्वयम् ।

मायात: खलु कालशक्तिरखिलादृष्टं स्वभावोऽपि च

प्रादुर्भूय गुणान्विकास्य विदधुस्तस्यास्सहायक्रियाम् ॥३॥

Meaning in Tamil

இருக்கனின் இரு பரார்த்த இறுதியில், இறைவனே நீ

இயக்க இச்சைதனை கடைக்கண்ணால் இயம்பிட,

இச்சையால் உறைந்திருந்த முச்சக்தியவள் அசைந்திட,

முச்சக்தியினுள் முழுதுமாய் நிலைத்திட்ட முக்குணங்கள்

காலச்சக்கர சுழலுடன், காண இயலா வினைப்பலனும்,

முச்சமநிலை இயல்பு மாறி முக்குணமும் வெளித்தோன்றி,

மூவுலகும் தோன்றிட முழு உதவி புரிந்தனவே !!

குறிப்பு – இருக்கன் என்பது நான்முக கடவுளான பிரம்மா. பராரத்த என்பது அந்த நான்முக கடவுளின் வாழ்நாளில் பாதி.

Meaning in English

Thus when a period of two Paraardhaas of Brahma ended, Thou cast Thy glance, which was with the will to create the three worlds. 

Then Maayaa (Thy creative power) got activated and from it emerged the power of time, the impressions of karma and the resulting tendencies.

These supported Maayaa by disturbing the balance of the three Gunaas and diversified as the manifested universe.

English Transliteration

evaM cha dviparaardhakaalavigataaviikshaaM sisR^ikshaatmikaaM

bibhraaNe tvayi chukshubhe tribhuvaniibhaavaaya maayaa svayam |

maayaataH khalu kaalashaktirakhilaadR^iShTaM svabhaavO(a)pi cha

praadurbhuuya guNaanvikaasya vidadhustasyaassahaayakriyaam ||

Meaning of the Sanskrit Words

एवं च - and in this manner

द्वि-परार्ध-काल-विगतौ - the period of two Parardhas having ended

ईक्षां सिसृक्षात्मिकां - (when) the glance with the will to create

बिभ्राणे त्वयि - was cast by Thee

चुक्षुभे - got activated

त्रिभुवनी-भावाय - for the creation of the three worlds

माया स्वयम् - Maayaa (bestirred) herself

मायात: खलु - from Maayaa indeed

काल-शक्ति: - the power known as Time,

अखिल-अदृष्टं - all that is latent (the effects of the deeds of the Jivas)

स्वभाव: -अपि च - and the resulting tendencies (innate nature)

प्रादुर्भूय - emerging

गुणान्-विकास्य - activating the three Gunaas

विदधु: - acted (so as to)

तस्या: -सहायक्रियाम् -support her (Maayaa's) work

Narayaneeyam – Daskam 5 – Sloka 2 – The magic show – முட்டைக்குள் கோழி

Link to the Audio for chanting

https://www.dropbox.com/s/or9l7ulge5omyqm/5.2.mp3?dl=0

Introduction

In the first Sloka, Narayana Bhattahri brought out that before the Maha Pralaya (The great deluge/Big Bang), only Brahman exists.

The question that naturally follows this assertion is “what happened to all the existing things, living and non living entities at the gross and subtle levels?”.

Before finding answers to our question, let us watch an interesting Video.
Now let us come to the core issues on this video. From where did this gigantic Sequoia tree come from ? Well, it came from this simple looking seed.
Wow! How is it possible?  The answer is explained by Narayana Bhattathri in Sloka 2. Now let us study the Sloka.

Sanskrit Verse

काल: कर्म गुणाश्च जीवनिवहा विश्वं च कार्यं विभो

चिल्लीलारतिमेयुषि त्वयि तदा निर्लीनतामाययु: ।

तेषां नैव वदन्त्यसत्त्वमयि भो: शक्त्यात्मना तिष्ठतां

नो चेत् किं गगनप्रसूनसदृशां भूयो भवेत्संभव: ॥२॥

Meaning in Tamil


பேரூழிக் காலமதில் காலமும் கர்மமும்,

வினைப்பலனும், முக்குணமும்

மாயையும், மாயைவிளை அண்டமும்,

உயிரினமும், உயிரிலா பொருட்களும்

உன்னிடத்தில்
ஒன்றியம் அனைத்தும்!

இருப்பில்லை
அவைகளுக்கு என்று

உரைக்கவில்லை மறை நான்கும்!

இருப்பிலா விண்மலர்கள் அவைகளெனில்

இயலுமோ அவைகள் வெளித்தோன்ற!! 5.2

குறிப்பு: வேதாந்தத்தில், இல்லாத விஷயங்கள் (அதாவது, மூன்று காலகட்டங்களில் எப்பொழுதும் இல்லாதவை அல்லது சாத்தியமற்றவை அல்லது உண்மையற்றவை) பொதுவாக மூன்று எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்படுகின்றன, அதாவது விண் மலர்கள் (வானில் வளரும் மலர் செடி/மரம் இல்லாமல்), மலட்டுப் பெண்ணின் குழந்தை, முயலின் கொம்பு. மஹா பிரளயத்தின் போது தற்போதுள்ள அனைத்து பொருட்களும் வெளிப்படுத்தப்படாத/வேறுபடுத்தப்படாத நிலையில் இருந்ததை எடுத்துரைக்க பட்டத்திரி இங்கே விண்மலர்கள் உதாரணத்தைப் பயன்படுத்துகிறார்.

Meaning in English

O All pervading Lord! During the period of Maha Pralaya, You were absorbed in Yourself in Your Cosmic Slumber (Yoga Nidra). At that period, Time, Karmas (& effects of good and bad actions), Gunas (Satwa, Rajas and Tamas), all the Jivas and the entire universe (born out of Maayaa) were all merged in Thee and Thou were absorbed in Thy own nature of pure Consciousness Bliss. O Lord! Even the Srutis (Vedas) do not declare them as being non existent. They remained in causal form. If they have perished or non existent like the sky-flowers (which never existed) , how could they come into existence again? 

Note 1: In Vedanta, the non-existent things (i.e, that which never exists in any of the three periods of time or an impossibility or unreal) are usually explained with three examples viz., sky-flower (flower which grows in the sky without any plant/tree), child of a barren woman, and the horn of a rabbit. Bhattathri is using the sky-flower example here to drive home the point all existing things were in unmanifested/undifferentiated state during Maha Pralaya.
Note 2:

Readers are advised to cross refer to Sloka 2 of Dakshinamurthy Stothram for an overview of the concepts of Vikalpa and Nirvikalpa. Ref:

https://prabhusponder.com/2021/06/30/அண்டமும்-ஆண்டவனும்-the-universe-the-lord/

English Transliteration

kaalaH karma guNaashcha jiivanivahaa vishvaM cha kaaryaM vibhO
chilliilaaratimeyuShi tvayi tadaa nirliinataamaayayuH |

teShaaM naiva vadantyasattvamayi bhOHshaktyaatmanaa tiShThataaM
nO chet kiM gaganaprasuunasadR^ishaaM bhuuyO bhavetsambhavaH ||2

Meaning of the Sanskrit Words

काल: - Time

कर्म - Karma (effects of actions of Jivas)

गुणा: - च - and the three Gunas

जीवनिवहा: - and all the Jivas, multitude of living beings

विश्वं च कार्यं - and the universe which is an effect (of Maya)

विभो - All pervading Lord!

चिल्लीलारतिं - in the sport of meditative sleep (Cosmic Slumber)

एयुषि त्वयि सति - When you were engrossed

तदा - at that time (of Maha Pralaya)

निर्लीनताम्-आययु: - had become completely merged (in Thee)

न-एव वदन्ति - of them (the Srutis) do not declare

असत्त्वम् - absolute non existence

अयि भो: तेषां तिष्ठतां - O Lord! For those entities which did exist

शक्त्यात्मना - in the form of your creative power (Maya) [as causal entities]

नो चेत् किं - otherwise how

गगन-प्रसून-सदृशां - like the sky flower

भूय: भवेत्-संभव: - is manifestation again possible (in the new creative cycle)