சங்கரனின் வைரக் கூடம் – 4 – வாழக்கையெனும் ஓடம்

வலைதள தமிழ் ஒலிப்பதிவு தொடரின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

சங்கரரின் வைரக்கூடத்தில், வைராக்கியம் எனும் வைரத்தை பட்டை தீட்டி மெருகேற்றிட,  நிலையாமையை உணர்ந்து, உடல், ஈட்டிய தனம் (செல்வம்),  உடல் மீதுள்ள பற்றுதலின் அடிப்படையிலான காமம் என்ற மூவகைப் பற்றினை விட வேண்டும் என்ற மூன்று செயல்முறைகளை அறிந்து, மன உறுதியுடன், மறுபடியும் கூடத்திற்கு விஜயம் செய்யும் அனைவருக்கும் மிக்க நன்றி. வருக, வருக!

நம் சொந்த (குடும்பம், உடல்நலம் மற்றும் செல்வம்) பாதுகாப்பு, மன அமைதி என்று வரும்போது அன்றாட வாழ்வில் நாம் இதை முழுமையாகப் புரிந்து கொள்கிறோம்; இல்லையெனில், காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் எதுவுமே இவ்வுலகில் தேவையில்லை/இருக்காது.

ஒருபுறம், வாழ்வு நிலையற்றது, அதற்காக காப்பீடு தேவை என்று உணர்ந்த நாம், மறுபுறம் நம்மை அறிய, வாழ்வில் மறைகள் கூறியபடி நடக்க வேண்டும் என்று வரும்போது, எந்த மனநிலையில் இருக்கிறோம்?

“மகனே! வாரம் ஒருமுறையாவது பகவத் கீதையைப் படிக்கலாம் வா” - தந்தையோ அல்லது தாத்தாவோ,

“இதெல்லாம் உங்களைப் போன்ற ஓய்வு பெற்றவர்களுக்காக அப்பா/தாத்தா. எங்களுக்கு தலைபோகும் வேலைகள் உள்ளன, தீர்க்க வேண்டிய சிக்கல்கள் மற்றும் சமாளிக்க ஏராளமான போட்டிகள் மற்றும் சவால்கள் உள்ளன. உங்கள் டீன் ஏஜ் பருவத்தில் இருந்ததைப் போல், வாழ்க்கை எளிதானது அல்ல” - மகன்/மகள்/பேரக்குழந்தைகள்

நம் இல்லங்களில் அடிக்கடி கேட்கப்படும் உரையாடல், அல்லவா! இன்றைய காலக்கட்டத்தில் வீட்டில் ஒரு பெரியவருக்கும் இளைஞனுக்கும் இடையே நடைபெறும் மிகவும் பொதுவான உரையாடல் இது. இங்கே அடிப்படைக் கருப்பொருள், நாங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், பகவத் கீதை போன்றவற்றைப் படிக்கும் நேரம் ஓய்வுக்குப் பிறகுதான், ஆக வாழ்க்கை கணிக்கக்கூடியது என்று முடிவு செய்கிறோம்.

ஆதிசங்கரர் இந்த இருவேறுபாட்டைப் புரிந்து கொண்டு நிலைமையின் அவசரத்தை உணர்த்துகிறார். ஆன்மிகக் குணத்தை வளர்த்துக்கொள்ள இப்போது உங்களுக்கு ஆரோக்கியம், மன மற்றும் அறிவுசார் திறன்கள் உள்ளன. எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? எனவே, இந்த பொன்னான நேரத்தை உள்நோக்கிப் பார்த்து, உங்களைப் பற்றி அறிந்துகொள்ள பயன்படுத்துங்கள் என்று சங்கரர் அறிவுறுத்துகிறார்.

வாருங்கள், சங்கரனின் இந்த செயல்முறையை அறியலாம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

नलिनीदलगतजलमतितरलं

तद्वद्जीवितमतिशयचपलम् |

विद्धिव्याध्याभिमानग्रस्तं

लोकं शोकहतं समस्तम् ||

தமிழ் ஒலிபெயர்ப்பு

நளினி த3ளக3த ஜலமதி தரளம்

தத்3வத் ஜீவித மதி3ச’ய சபலம் |

வித்3தி4 வ்யாத்4யபி4மான க்3ரஸ்தம்

லோகம் சோ’கஹதம் ச ஸமஸ்தம் ||

தமிழ் மொழிபெயர்ப்பு

தாமரை இலைமேல் தண்ணீர் போல

வாழ்க்கையில் என்றும் மிகவும் சஞ்சலம்

நோயும் பற்றும் விழுங்கிடும் உலகம்

துன்பம் ஒன்றே நிறைந்திடும் அறிவாய்

சமஸ்க்ருத சொற்களின் பொருள்

नलिनीदलगतजलमतितरलं - नलिनी दल गत जलं अति तरलं - நளினி த3ளக3த ஜலம் அதி தரளம் - தாமரை, இலையில,  நீர், நிலையற்ற

तद्वद्जीवितमतिशयचपलम् - तद्वद् जीवितं अतिशय चपलम् - தத்3வத் ஜீவிதம் அதி3ச’ய சபலம் - அது போல, வாழ்க்கை, மிகவும், நிலையற்றது

विद्धिव्याध्याभिमानग्रस्तं - विद्धि व्याधि अभिमान ग्रस्तं - வித்3தி4 வியாதி அபி4மான க்3ரஸ்தம் - அறிவாய், நோய், பற்று, விழுங்கிடும் (ஆளாகும்),

लोकं शोकहतं च समस्तम् - लोकं शोक हतं च समस्तम् - லோகம் சோ’க ஹதம் ச ஸமஸ்தம் - உலகம், துன்பம், பீடித்திருத்தல், முழுவதும்

விளக்கவுரை

தாமரை இலைமீது உள்ள நீர்த்துளியைப் போன்றே மனித வாழ்வும் நிலையற்றது. எங்கு நோக்கினும் நோய்களும், கர்வமும் தான் காணப்படுகின்றன. யாருமே தான் இன்பமாக இருப்பதாக நினைப்பது இல்லை. உலக வாழ்க்கைக்காக வீணாக அலையாதே! இது தான் இந்தப் பண்ணின் சாரம். இதை இப்போது ஆராய்வோம்.

இந்த ஸ்லோகத்தை விளக்க நாம் வேறெங்கும் செல்ல வேண்டாம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்தாலே போதும்.

கொடிய வைரஸின் வருகை, அதைத் தொடர்ந்து வந்த கொரோனா தொற்றுநோய் (இப்போது கூட அது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதா என்று கடவுளே அறிவார்) - இந்த உலகத்தில் நம்முடைய இந்த நிச்சயமற்ற காலத்திலும் கூட, பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களுக்கு பஞ்சமில்லை என்பதை நம் அனைவருக்கும் உணர்த்திடும் ஒரு வாழ்க்கைப் பாடம். உடல் ரீதியில் நோய், உணர்ச்சித் தளத்தில் பதற்றம், அறிவார்ந்த நிலையில் ஆணவம் தலைவிரித்தாடுவதைக் கண்டோம்.

இவை அனைத்தும் நமது அன்றாட அனுபவங்களே. இந்த மூன்று வகை மனக் கிளர்ச்சிகளுடன் வாழ நாம் பழகிவிட்டோம். அவைகளைக் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் வாழ்கிறோம். ஆகையினால் அதை கடக்க முயல்வதும் இல்லை.

பஜ கோவிந்தம் ஸ்லோகம் 4 இல், ஆதி சங்கரர், இந்த நமது அறியாமை மனதை தட்டி எழுப்ப முயற்சிக்கிறார். நமது வாழ்க்கை அநித்தியம் என்றும், அது வியாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பிணிகளைக் கொண்டதும் ஆக அமைந்துள்ளது என்ற தத்துவத்தை சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீ சங்கரர்.

தடாகத்தில் மிதக்கும் தாமரை இலயில் தங்கி நிற்க்கும் நீர்த்துளிகள் போல, எப்படி அந்த தாமரை இலை காற்றில் ஆடும்போது தத்தளிக்கிறதோ அதுபோல்தான் நம் வாழ்க்கையும். எந்த நேரமும் அந்த நீர்த்துளிகள் தடாகத்தில் விழ்நேரிடலாம். அதுபோல் தத்தளித்துக் கொண்டிருக்கிற நம் வாழ்வு , எந்த நிமிடமும் முடியலாம். சாஸ்வதமில்லாத, துக்ககரமான உலக வாழ்க்கையை நம்பி ஏமாறாதே என்கிறார். இதைவிட வேறு உகந்த உவமை கிடைக்குமா? எவ்வளவு நளினமாக இந்த மிக பெரிய தத்துவத்தை போதிக்க இந்த உவமையை கைய்யாண்டிருக்கிறார்!

வாழ்க்கை என்பது அதிசய-சபலம் என்று ஸ்ரீ சங்கராச்சாரியார் கூறுகிறார். இதற்கு என்ன பொருள்? வாழ்க்கையை வீணடிக்க நேரம் இல்லை என்று அர்த்தம். செய்ய வேண்டியதை எதிர்காலத்திற்கு தள்ளிப் போடாதீர்கள். பொதுவாக விரும்பத்தகாத அல்லது கடினமானதை நாம் தள்ளிப்போடுவது இயல்பு. ஸ்ரீ சங்கராச்சாரியார், இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறுகிறார்.

வியாதி (உடலில் நோய்) மற்றும் அபிமானம், (மனதில் உள்ள நோய்களான பற்றுதல் மற்றும் தற்பெருமை) தவிர, நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு விஷயம் உள்ளது என்று ஸ்ரீ சங்கராச்சாரியார் சுட்டிக்காட்டுகிறார். மக்கள் எப்போதும் சோகத்தின் மயக்கத்தில் இருக்கிறார்கள்; இந்த உலகம் எப்பொழுதும் துக்கம் நிறைந்தது. இந்த தொற்றுநோய்களின் போது இவை ஒவ்வொன்றும் உலகம் முழுவதும் முழு காட்சிக்கு வைக்கப்பட்டன அல்லவா.

எனவே, எதற்காக நாம் காத்திருக்கிறோம்? கோவிந்தன் துதிக்கு வாழ்க்கையில் ஏன் முன்னுரிமை இல்லை? கடவுளை வழிபடுவதை விட வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள நாட்டங்கள் உள்ளன என்று நீங்கள் நினைத்தால், அந்த நாட்டங்கள் பெருமையையும், பற்றுதலையும், நோயையும் கொண்டு வந்து, துக்கத்தையோ அல்லது சோகத்தையோ ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே, வாழ்க்கையின் உண்மையான தன்மையை உணர்ந்து, உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.

இதுவே இப்பண்ணின் சாரம்

தமிழ் இலக்கியத்தில் வாழ்வின் நிலையாமை

திருக்குறள்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு.

“உறங்குவது போலுந் சாக்காடுறங்கிவிழிப்பது போலும் பிறப்பு” (குறள் - 339)
என்ற குறள் சுட்டுகின்றது. எனவே இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாதது.

தொல்காப்பியம்
” பாங்கருஞ் சிறப்பி பல்லாற்றானுநில்லா வுலகம் புல்லிய நெறித்தே ” (தொல். பொருள். நூற். 78)என்ற தொல்காப்பிய அடிகள் நிலையாமைக் குறித்து குறிப்பிடுகின்றது. இதற்கு நச்சினார்க்கினியர் “ உயிரும் உடம்பும் செல்வமும் இளமையும் முதலியவற்றாலும் நிலைபேறில்லாத உலகம்” என்று குறிப்பிடுகின்றார்.

பட்டினத்தார் பாடல்

"பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்,
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்,
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்,
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்,
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்”

“நீரில் குமிழி – நீர் மேல் எழுத்து
கண்துயில் கனவில் கண்ட காட்சி”

சித்தர் பாடல்

''நந்த வனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடி கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி''

என்ற சித்தர் பாடிய பாட்டினை நாட்டுப்புற மக்கள் தங்கள் பாட்டாகவே கருதி வாழ்ந்து வந்தமையை நாம் காணமுடிகிறது.

வாழ்க்கை நிலையற்றது என உணர்ந்து, வாழ்கின்ற நாட்களில் பயனுடையதாய் ஆக்காத, வாழ்வியல் தத்துவத்தை உணராத, மாந்தர்கள் இவ்வுடலை வீண் செய்து அழித்து விடுவதையே ''கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி'' என்ற வரி உணர்த்துகிறது.

அம்பலவாணக் கவிராயர்

இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழி போன்றது. புதல்வர், கிளை, மனை, மனைவி இவையெல்லாம் கானல் நீர். உயிரோ வெட்ட வெளிதனில் வைத்த தீபம். எனவே வீண்பொழுது போக்காமல் ஆண்டவனை நேயமொடு வழிபட அவனிடமே அருள் வேண்டி நிற்க வேண்டும் என்கிறார்.

காயமொரு புற்புதம் வாழ்வு மலைசூழ் தரும்காட்டில் ஆற்றின் பெருக்காம்கருணைதரு புதல்வர் கிளை மனை மனைவிஇவையெலாம்கானல் காட்டு ப்ரவாகம்மேயபுய பல வலிமை யிளமை அழகு இவையெலாம்வெயில் மஞ்சள், உயிர் தானுமேவெட்ட வெளிதனில் வைத்த தீபமெனவே கருதிவீண்பொழுது போக்காமலேநேயமுடனே தெளிந்து அன்போடுஉன் பாதத்தில்நினைவு வைத்து இரு போதிலும்நீர் கொண்டு மலர் கொண்டு பரிவு கொண்டர்ச்சிக்கநிமலனே யருள் புரிவாய் (19)
(காயம் = உடம்பு; புற்புதம் = நீர்க்குமிழி; பெருக்கம் = வெள்ளம்; கிளை = சுற்றம்; மனை = வீடு; ப்ரவாகம் = வெள்ளம்

முடிவுரை

பகவத் கீதையில் [13-9], பகவான் கிருஷ்ணர், எல்லா நேரத்திலும் நமக்கு பல்வேறு வகையான வலிகள் {ஜென்மத்தில்/பிறப்பில், ம்ருத்யு/மரணத்தில், ஜரத்தில்/முதுமையில், மற்றும் வியாதி/நோய், (ஜென்ம-மிருத்யு-ஜர-வியாதி-துக்கதோஷனு-தர்சனம்)} இருப்பதைப் பற்றி தொடர்ந்து சிந்தி என்று அறிவுரை வழங்குகிறார்.

இறைவனின் இந்த அறிவுரையைத் தான், ஆதி சங்கரர் இந்த பண்வழியாக நம் மூட மனதிற்கு நான்காவது செயல்முறையாகக் கொடுத்து நம்மை சிந்திக்க வைக்கிறார்.

சிந்திப்போம். செயல்படுவோம். அடுத்த செயல்முறைக்குத் தயாராகுவோம். அதுவரை

இறையருள் பெருக. வாழ்க வளமுடன்.

Narayaneeyam- Dasakam 4 – Sloka 14

Introduction

Bhattathri points out the final phase of the luminous path of the “Krama Mukti Sadakas”; the culmination of their journey.

Audio Link for chanting

https://www.dropbox.com/s/p5yowxadytt29va/4-14.mp3?dl=0

Sanskrit Verse

तस्य च क्षितिपयोमहोऽनिलद्योमहत्प्रकृतिसप्तकावृती: ।

तत्तदात्मकतया विशन् सुखी याति ते पदमनावृतं विभो ॥

English Transliteration

tasya cha kshitipayO mahO(a)niladyOmahatprakR^iti saptakaavR^itiiH |

tattadaatmakatayaa vishan sukhii yaati te padamanaavR^itaM vibhO

Tamil Transliteration

தஸ்ய ச க்ஷிதிபயோமஹோ(அ)நிலத்₃யோமஹத்ப்ரக்ருதிஸப்தகாவ்ருதீ: |

தத்ததா₃த்மகதயா விஶந் ஸுகீ₂ யாதி தே பத₃மநாவ்ருதம் விபோ₄ ||

Meaning in Tamil

பஞ்ச பூதமுடன் மாயைகலந்த இயல் நிலையெனும்

ஏழ்கடல் வழிநுழைந்து பேரானந்தக் கடல்மூழ்கித்

திளைத்தெழுந்து அக்கடல் கடந்து ஆனந்த ஜோதி

அருள்நிறை வடிவிலா உன்னிடம் கலந்திடுவர் அவர்!

Meaning in English

O All Pervading Lord! Thy devotee enters each of the seven sheaths of the cosmic sphere,i.e. earth, water, fire, air, space, the cosmic intelligence, and primordial nature. He enjoys the bliss thereof and transcends them to reach Thy unobstructed state -the merger in Thee, The Supreme Brahman

Meaning of the Sanskrit Words

तस्य च - and of that (Brahmaanda)

क्षिति-पयो-मह:-अनिल-द्यो-महत्-प्रकृति - the spheres namely - earth, water, fire air, space, cosmic intelligence, and the primordial nature

सप्तक-आवृती: - the seven barriers (of the cosmic sphere)

तत्-तत्-आत्मकतया विशन् - transcending by realising his identity with each one of them

सुखी - enjoying bliss

याति - reaches

ते पदम्-अनावृतं - The unobstructed state (beyond all barriers)

विभो O - All Pervading Lord!

Sankara’s Smithy- Strike 3 – The “lust”y blow

Link to the Tamil Podcast

https://soundar53.substack.com/p/3#details

Introduction

Welcome to Sankara’s Smithy again. We are now well prepared after the first two strikes which were direct and powerful blows. 

In this verse, Shankara deals with our infatuation with sense enjoyment and uses the technique of “pratipaksha bhavana” to overcome this infatuation. Pratipaksha bhavana is one of Shankara’s greatest contributions to Vedantic thought. It is the ability to look at the same object or situation in many different ways.

One of the ways of looking at objects is by
“Seeing the defects in objects of desire (vishaya dOsha darsana विषयदोषदर्शन ). This is a powerful technique in overcoming improper desires”.

This is the technique that Sankara adopts in this Strike/Sloka.

Let us understand this Sloka.

Sanskrit Verse

नारीस्तनभरनाभीदेशं

दृष्ट्वा मा गा मोहावेशं |

एतन्मांसवसादिविकारं

मनसि विचिन्तय वारं वारं ||

English Transliteration

Nārīstanabharanābhīdēśaṁ

dr̥ṣṭvā māgāmōhāvēśam ।

ētanmānsavasādi vikāraṁ

manasi vicintaya vāraṁ vāram ॥

Meaning of the Sanskrit Words

Seeing -  dhrshtvaa दृष्ट्वा 

the bosom and naval region of women - naaree stana bhara naabheedesam नारी स्तनभर नाभीदेशं

do not attain - maa gaa मा गा

an infatuated state - mOha aavesam मोह आवेशं

Deliberate - vichintaya विचिन्त्य

in [your] mind - manasi मनसि

again and again - vaaram vaaram वारं वारं

[that] this - Etat एतत् [is only]

a modification of flesh and fat - vikaaram मांसावसादि विकारं

Meaning in English

“Seeing the bosom and naval region of women, do not attain an infatuated state.  Deliberate in [your] mind again and again [that] this [is only] a modification of flesh and fat”.

Explanation

The sight of the breast and lower hip (navel area) of a woman arouse lust for menfolk. This is a natural instinct. 

These two body parts are nothing but manifestation/transformation of lumps of flesh and fat covered under skin like any other. Sankara emphasizes the idea that appearances cannot lead to permanent happiness because all of them are not permanent.

In general, overcoming the odds is considered manly by the society. But the most difficult thing is to conquer inward lust and greed. Therefore conquering improper lust is praised as noble virtue.

The essence of this sloka is to avoid lust. The particular reference in the verse to gory flesh and fat is to emphasize the perishability of those objects of desire and not to be fooled by outward appearances.

Though appears to be addressed at renunciates, the above verse equally applies to the householder with regard to women other than one’s spouse and also in maintaining a proper behavior with one’s own spouse. Needless to say, this and other pieces of advice in the saastras (शाश्त्राः) have a parallel applicability to women as well.

He indeed is a seer who sees another’s wife as mother, another’s possessions as dirt, and all beings as oneself. (मातृवत् परदारान्स्च परद्रव्याणि लोष्टवत् आत्मवत् सर्वभूतानां यो पश्यति सो पश्यति Maatrvat paradaaranscha paradravyaani loshtavat, aatmavat sarvabhootaanaam yah pasyati sah pasyati).

In the Tamil literature, there are epic verses in Thirukural, Naaladiar, Jeevaha Chinthamani and Kamba Ramayanam about these concepts. These are highlighted in the Tamil Version of this blog; link given below:

https://prabhusponder.com/2022/12/29/சங்கரனின்-சம்மட்டி-அடி-3-க/

Conclusion

This third hammer strike is the stroke that highlights the need to control lust for body. Two body parts of a woman is taken as examples to highlight our dark ignorance - Simple Words yet deep meaning. 

“For us, the objective of studying this verse is to use pratipaksha bhavana to rise above our obsession for sense enjoyment. Most of us have a weakness for one of the five senses. Yet, when the sense objects are broken down into their individual components, we find none of them attractive. Put together, they somehow seem to mesmerize us. Thus the enjoyment really isn’t in the object, it is in our minds. We project our enjoyment on the object when it is really self-created. Thus the happiness isn’t in the object, it is within us. This is maya, illusion. It is difficult to overcome. Hence the appeal to think over it again and again”.

Let's absorb the impact; stabilise our physical, mental and intellectual complex and prepare for the next strike. Until then……

God Bless

சங்கரனின் வைரக் கூடம் – 3 – காமம் நிலையாமை

தமிழ் வலைதல ஒலிப்பதிவுத் தொடர் இணைப்பு (Tamil Podcast Link)

https://soundar53.substack.com/p/3#details

முகவுரை

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்ற இரண்டு முக்கியமான தத்துவங்களை இரண்டு செயல்முறைகளாகப் பெற்ற நாம், இப்பொழுது சங்கரனின் வைரக் கூடத்தில், மூன்றாவது செயல்முறைக்குத் தயாராகுவோம்.

பொதுவாக, நாம் ஆசைப்படும் பொருட்களின் மீதுள்ள பற்று (முறையற்ற ஆசைகள் என்றும் கூறலாம்) விலக வேண்டும் என்றால், அந்த ஆசைப் பொருட்களில் உள்ள குறைபாடுகளைப் பார்ப்பது ஒரு சக்திவாய்ந்த யுக்தியாகும். இதனை வடமொழியில் விஷய தோஷ தர்சனம் என்பர். இந்த யுக்தியை ஆதி சங்கரர், இந்த மூன்றாவது செயல்முறையில் (ஸ்லோகத்தில்) கையாளுகிறார்.

கம்பனின் கவிதையும், வாலியின் கேள்வியும்

இந்த மூன்றாவது செயல்முறையைக் காணும் முன், கம்பன் காட்டும் கவிதைச் சித்திரத்தைக் காணலாம்:

வார் குலாம் முலை, வைத்த கண் வாங்கிடப்
பேர்கிலாது, பிறங்கு முகத்தினான்,
தேர்கிலான் நெறி; அந்தரில் சென்று, ஒரு
மூரி மா மத யானையை, முட்டினான்!

வார் குலாம் முலை – ஒரு அழகியின் கச்சை அணிந்த மார்பங்களின் மீது
பேர்கிலாது வைத்த கண் வாங்கிட – வைத்த கண்களை எடுக்க முடியாமல் அதையே பார்த்துக் கொண்டு நடந்த
பிறங்கு முகத்தினான் – விளங்குகின்ற முகத்தை ஒரு இளைஞன்
நெறி தேர்கிலான் – தான் செல்ல வேண்டிய வழி தெரியாமல்
அந்தரில் சென்று – குருடனைப் போலச் சென்று
ஒரு மூரி மா மதம் யானையை – வலிமை கொண்ட ஒரு மத யானை மேல் சென்று
முட்டினான் – மோதினான்.

அதாவது கச்சை அணிந்த பெரிய மார்பகங்களைக் கொண்ட அழகி அவள்!அவளை வைத்த கண் விடாமல் பார்க்கிறான் அந்த இளைஞன்.அவள் நடக்க, இவன் நடக்க, அவளையே பார்த்து நடந்து கொண்டிருந்த இளைஞன் தான் செல்ல வேண்டிய வழியை விட்டுக் குருடன் நடந்தது போல நடந்து ஒரு வலிமையுள்ள பெரிய மத யானையின் மீது போய் முட்டினான்.ஆவென்று அலறினான். மற்றவர்கள் சிரித்தார்கள் – நடந்தது என்ன என்று தெரிந்து கொண்டு.

இக்கவியை மனதில் கொண்டோ என்னவோ, கவிஞன் வாலி இப்படி கேட்டான்.

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போகும் பாதையை மறந்து போகலாமா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஆதி சங்கரர் உள்ளங்கை நெல்லிக் கனி போல, “உறைக்கும்” உண்மையை எடுத்துரைத்து, நமக்கு விடையளிக்கிறார்.

சங்கரனின் பதில் – சமஸ்க்ருத ஸ்லோகம்

नारीस्तनभरनाभीदेशं

दृष्ट्वा मा गा मोहावेशं |

एतन्मांसवसादिविकारं

मनसि विचिन्तय वारं वारं ||

தமிழ் ஒலிபெயர்ப்பு (Tamil Transliteration)

நாரீ ஸ்தனப4ர நாபீ4 தே3ச’ம்

த்3ருஷ்ட்வா மாகா3 மோஹாவேச’ம் |

ஏதன் மாம்ஸ வஸாதி3விகாரம்

மனஸி விசிந்தய வாரம் வாரம் ||

தமிழ் மொழிபெயர்ப்பு (Tamil Translation)

மகளிர் மார்பகம் மேகலை உறைவிடம்

மயங்கியே கண்டு மனதினில் மோகம்

மாமிசம் கொழுப்புடன் மாறிடும் தேகம்

மனதில் சிந்தனை வேண்டும் வேண்டும்.

ஸமஸ்க்ருத சொற்களின் பொருள்

नारीस्तनभरनाभीदेशं - नारी स्तनभर नाभीदेशं - நாரீ, ஸ்தனப4ர, நாபீ4 தே3ச’ம் - பெண், மார்பகம், மேகலை இடை வெளி

दृष्ट्वा मा गा मोहावेशं - दृष्ट्वा मा गा मोह आवेशं - த்3ருஷ்ட்வா மாகா3 மோஹ ஆவேச’ம் - பாரத்து/கண்டு, அடையாதே/கொள்ளாதே, மோகம்/மயக்கம், உணர்ச்சிவசப்படுதல்,

एतन्मांसवसादिविकारं एतन्मांसवसादि विकारं ஏதன் மாம்ஸவஸாதி3 விகாரம் - இவை மாமிசம், உவர்நீர் முதலான, மாற்றம்

मनसि विचिन्तय वारं वारं - மனஸி விசிந்தய வாரம் வாரம் - மனதில் சிந்திப்பாய் மீண்டும் மீண்டும்

விளக்கவுரை

ஆணினத்தவர்க்கு பெண்ணின் மார்பு (கொங்கை)யும், மேகலை அணியும் இடைப்பகுதியும் காம இச்சையை தூண்டிவிடும். இந்த இச்சை இயற்கை இயல்பு.

உண்மையில், அவ்விரு உடலுறுப்புகள் (அனைத்து உடலுறுப்புகளுமே) வெறும் மாமிசம் மட்டும் உவர்நீரின் (கொழுப்புகளின்) உருமாற்றமே; அவைகளனைத்தும் நிலையானவைகள் அல்ல என்பதால் வெளித்தோற்றத்தால் நிரந்தர இன்பம் அடைய முடியாது என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

இந்த ஸ்லோகத்தின் சாரம் காம மோஹம் தவிர்த்தல். அதாவது உடல்ரீதியான காம இச்சைகள களைவது.

பொதுவாகப் புறப்பகைகளை வெல்லுதல் ஆண்மை என சமூகத்தால் மதிக்கப்படுகிறது. ஆனால், அகப்பகையான காமம், வெகுளி போன்றவற்றை வெல்லுதல்தான் மிகவும் கடினமான ஒன்று. அதனால் முறையற்ற காமத்தை வெல்லுதல், மதிக்கத்தக்க பேராண்மை என்று பாராட்டப்படுகிறது.

ஆண்மையை விட பெரிய சொல் பேராண்மை. அத்தகைய பேராண்மை உடையவன், பிறர் மனைவியை நோக்காது இருப்பவன்.

தமிழ் இலக்கியத்தில் பேராண்மை

திருக்குறள்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு[திருக்குறள், அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை ]

என்ற குறள் இந்த கருத்தை ஒட்டியதே.

சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணியில்

“பெரியவாள் தடங்கண் செவ்வாய்ப் பிறர்மனை பிழைக்கும் மாந்தர் ….. ஆண்பிறந்தார்கள் அன்றே” இந்தக் கருத்தினைப் பிரதிபலிக்கிறது.

கம்ப ராமாயணம்

கம்பனும் இப்பேராண்மையைப் பற்றி கூறுகையில்,

இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி நாளும் நகையுற நாண் இலன்,
பச்சை மேனி புலர்ந்து பழிப்படூஉம்
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ. --- கம்பராமாயணம், பிணிவீட்டு படலம்.

ஆசையின் இயல்பினால் அயலார் மனைவியை விரும்பி (அதனால்) எந்நாளும் பிறர் தன்னை இகழ்ந்து சிரிக்க, வெட்கமற்றவனாய் பசுமையான உடம்பு உலரப் பெற்று பழிப்பை அடைகின்ற இழிவான இவ்வகை ஆண் தன்மையும், சிறந்த குணங்களில் ஒன்றாகச் சேருமா? (சேராது என்றபடி) என்றான்.

நாலாடியார்

நாலடியார், இந்த நற்குணமில்லாருக்கு ஏற்படும் விளைவினைச் சுட்டிக்காட்டி இதே கருத்தினை எடுத்துரைக்கிறார்

செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ –
உம்மைவலியாற் பிறர்மனைமேற் சென்றாரே,
இம்மைஅலியாகி ஆடிஉண் பார்.

நல்லகுணமின்றி, கீழினத்தாரோடு சேர்ந்து, பெரியமார்களை உடைய பெண்களின் தோளிலே முயங்க விரும்பி, ஒருவன் இப்பிறப்பில் தனக்கு உள்ள செல்வம், வலிமை முதலியவற்றால் மற்றவர் மனைவியரை கூடுவாராயின், மறுபிறப்பில் அவர்கள் ஆணும் பெண்ணுமில்லா அலியாகி கூத்தாடி வயிறு பிழைக்க நேரிடும்.

பட்டினத்தார் பாடல்

மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே

மறைகள்

ஒருவரின் மனைவியைத் தவிர மற்ற பெண்களைப் பொறுத்தவரை மற்றும் ஒருவரின் சொந்த மனைவியுடன் சரியான நடத்தையைப் பேணுவதில் இந்த கருத்து பொருந்தும். மேலும், சாஸ்திரங்களில் உள்ள மற்ற அறிவுரைகளும் பெண்களுக்கும் இணையாகப் பொருந்தும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

நமது மறைகள், உண்மையில் மற்றொருவரின் மனைவியை தாயாகவும், மற்றொருவரின் உடைமைகளை அழுக்காகவும், எல்லா உயிர்களையும் தன்னைப் போலவும் பார்க்கும் ஒருவரே தீர்க்தரிசி/ஞானி என்று கூறுகின்றன. (मातृवत् परदारान्स्च परद्रव्याणि लोष्टवत् आत्मवत् सर्वभूतानां यो पश्यति सो पश्यति Maatrvat paradaaranscha paradravyaani loshtavat, aatmavat sarvabhootaanaam yah pasyati sah pasyati).

முடிவுரை

இரண்டு உடலுறுப்புகளை எடுத்துக்காட்டி, இருளென உறையும் நம் அறியாமையை எளிதினில் அறிய வைப்பது, இந்த மூன்றாவது செயல்முறை.  உண்மை என்றுமே உறைக்கும் என்பதை உணர வைக்கும் சொற்கள். உள்வாங்கி உணர்வோம் உட்கருத்தினை. நம் உடல், மன, புத்தி வளாகத்தை உறுதிப்படுத்தி, அடுத்த செயல்முறைக்குத் தயாராகுவோம். அதுவரை……..

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

Narayaneeyam- Dasakam 4 – Sloka 13

Introduction

Bhattathri in this Sloka outlines the process of liberation (salvation) from the higher Lokas for the Krama Mukti Sadakas who have reached there and living there.

Audios Link for chanting

https://www.dropbox.com/s/hzc6jxu2cfmwvoc/4-13.mp3?dl=0

Sanskrit Verse

तत्र वा तव पदेऽथवा वसन् प्राकृतप्रलय एति मुक्तताम् ।

स्वेच्छया खलु पुरा विमुच्यते संविभिद्य जगदण्डमोजसा ॥

English Transliteration

tatra vaa tava pade(a)thavaa vasan praakR^itapralaya eti muktataam |

svechChayaa khalu puraa vimuchyate sanvibhidya jagadaNDamOjasaa ||

Tamil Transliteration

தத்ர வா தவ பதே₃(அ)த₂வா வஸந் ப்ராக்ருதப்ரலய ஏதி முக்ததாம் |

ஸ்வேச்ச₂யா க₂லு புரா விமுச்யதே ஸம்விபி₄த்₃ய ஜக₃த₃ண்ட₃மோஜஸா ||

Meaning in Tamil

அயனுலகிலோ, அனந்தன் உன் உலகிலோ வசித்து

அவரடைவர் பேரின்ப வீடுபேறு பேரழிவு காலமதில்!

அவர்தம் யோகவலிமை கொண்டு பேரண்டம் துளைத்து

அடைந்திடுவர் முக்தியெனும் வீடுபேறு விரைவினிலே

அவர் விழைந்தனில், அகிலமெலாம் ஆளும் ஆண்டவனே!

Meaning in English

The yogi who attains this aspect of the migration into the Brahmaloka or in Thy abode, Vaikuntha is liberated at the time of Maha Pralaya. Or, if he so desires, he is liberated even earlier by piercing through the Brahmaanda and releasing himself by his yogic power.

Meaning of the Sanskrit Words

तत्र वा - either there (in Brahmaloka)

तव पदे-अथवा - or in Thy world (Vaikuntha)

वसन् - residing

प्राकृतप्रलये - at the time of Prakrita pralaya

एति मुक्तताम् - he attains liberation

स्वेच्छया खलु पुरा - (or) at his will even earlier, indeed

विमुच्यते - he becomes liberated

संविभिद्य - piercing through

जगत्-अण्डम् - the Brahmaanda (the cosmic sphere)

ओजसा - by his yogic power

சங்கரனின் வைரக் கூடம் – 2 – செல்வம் நிலையாமை

தமிழ் வலைதல ஒலிப்பதிவுத் தொடர் இணைப்பு (Tamil Podcast Link)

https://soundar53.substack.com/podcast

முகவுரை

உடலுக்கும், உயிருக்கும் உள்ளது வெறும் குத்தகை ஒப்பந்தமே என்றும், யாக்கை நிலையற்றது என்றும் அறிந்து உணர்ந்து, இரண்டாவது முறையாக சங்கரனின் வைரக் கூடத்திற்கு பட்டை தீட்டி மெருகேற்றிக் கொள்ள வருகை தந்த, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இன்று நாம் அனைவரும் எதிர்கொள்ளும் செயல்முறைக்கு (diamond cutting and polishing process), செல்வம் நிலையாமை என்று பெயர். “ஸரீர அநித்யம்” என்பதை முதல் செயல்முறையில் வழங்கிய ஆதி சங்கரர், “தன அநித்யத்தை” இரண்டாவது செயல்முறை வழியே நம் மூட மனத்திற்கு கொடுக்கிறார்.

இந்த செயல்முறையை உள்வாங்கினால், பணம்/செல்வம் என்பவை, நிரந்தரமான மகிழ்வைத் தேடும் நமக்கு ஒரு கருவிகளே அன்றி அவைகளை அடைவதே நமது குறி அல்ல என்பது ஆழமாகப் பதியும்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

मूढ जहीहि धनागमतृष्णां

कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् ।

यल्लभसे निजकर्मोपात्तं

वित्तं तेन विनोदय चित्तम् ||

தமிழ் ஒலி பெயர்ப்பு

மூட4! ஜஹீஹி த4நாக3ம த்ருஷ்ணாம்

கு1ரு ஸத்3புத்3தி4ம் விஷயவித்ருஷ்ணாம் |

யல்லப4ஸே நிஜகர்மோபாத்தம்

வித்தம் தேன வினோத3ய சித்தம் ||

தமிழ் மொழிபெயர்ப்பு

மூடனே வெல்வாய் செல்வத் தாகம்

மனதினில் தணித்திடும் நல்லறி ஞானம்

மறை வழி ஈட்டிய செல்வம் போதும்

நிறைவடை என்றும் சிந்தையில் செல்வம்

சமஸ்க்ருத சொற்றொடர்களின் பொருள்

முதல் சொற்றொடர்

मूढ - மூட - ஏ அறிவிலியே, ஏ மூட மனமே !

जहीहि - ஜஹீஹீ - விட்டுவிடு, வென்றுவிடு

धनागमतृष्णां = धन + आगम + तृष्णां
1. धन - தன - செல்வம். தனம் என்று சொல்வது, பணத்தால் கிடைக்க கூடிய எல்லா பொருட்கள், வசதிகளைக் குறிக்கும்.
2. आगम - ஆகம - வரவு
3. तृष्णां - த்ருஷ்நாம் - வேட்கை, தாகம், அடக்கமுடியா விருப்பம்,

कुरु सद्बुद्धिं = குரு ஸத்புத்திம் = कुरु + सद्बुद्धिं - வளர்த்திடு நல்லறிவை

मनसि - மனஸி - மனதினில்

वितृष्णाम् - வித்ருஷ்நாம் - வேட்கையின்றி, தாகமின்றி

அதாவது, செல்வத்தின் மேல் உள்ள வேட்கையை வென்று, நல்லறிவை மனதில் வளர்த்திடு என்ற பொருள் இச்சொற் தொடருக்கு.

இரண்டாம் சொற்றொடர்

यल्लभसे - ய்ல்லபஸே= यत् யத்+ लभसे லபஸே - எந்த, அடைவது,

निजकर्मोपात्तं = நிஜகர்மோபாத்தம் = निजकर्मणा उपात्तम् = நிஜகர்மணா + உபாத்தம் = உனக்கு விதிக்கப்பட் வினைகளைப்புரிந்ததால் விளையும்; தனக்கு விதிக்கப்பட்ட வினைகளை, அற வழியில் (தர்ம ரீதியாக) , தனது முற்பிறவி வினைப்பலானக

वित्तं तेन विनोदय चित्तम् - வித்தம் தேந விநோதய சித்தம்
वित्तं - வித்தம் - செல்வம்
तेन - தேந - அவ்வழியில்
विनोदय - விநோதய - மகிழ்
चित्तम् - சித்தம் - மனது

அதாவது, நேர்வழியில் ஈட்டியதாலோ மற்றும் தனது முற்பிறவி வினைப்பலானக அடைந்ததாலோ எந்த ஒரு செல்வத்தை அடைந்திருக்கிறாயோ, அவ்வழிகளில் வந்த அந்தச் செல்வத்தை வைத்து மனமகிழ்வு அடை என்ற பொருள் இச்சொற்றோடருக்கு.

விளக்கவுரை

அன்றாட வாழ்வில் செல்வத்தால் சுகம் கிடைக்கும் என்ற கருத்து நமது மனித இயல்பு. செல்வமில்லையேல் வாழ்வதெப்படி? ஆதலினால் பணத்தாசை ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணம் நமக்கு. 

பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழியை அறிந்த நாம், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை அறிய விரும்புவதில்லை. இந்த தவறான கருத்தினால், பணத்தின் மீது அளவு கடந்த அவா நமக்கு அதிகம்.

மனிதப் பிறவி என்றால் வினைகளைப் புரிந்தே ஆக வேண்டும். கர்மம் பண்ணுவது நமது கடமை. அதுவும் அதில் கிடைக்கும் பலனை பரமனிடம் விட்டுவிட்டு கர்மம் புரியவேண்டும் என நமது மறைகள் எடுத்துரைக்கின்றன.

அப்படி மனதில் பேராசையை வளர்க்காமல் நம் கர்மத்தில் மனதை செலுத்தி அதன்மூலம் தானே கிடைக்கும் பலனை அனுபவிக்க மனதை பழக்கிக்கொள்ள வேண்டும். கர்மபலன், முப்பிறவியிலும், இப்பிறவியிலும் நாம் புரியும் கர்மத்தின் தன்மையை பொறுத்திருக்கிறது. அது நம் வசம் இல்லை.

ஆசை கூடாது என்றோ, பணத்தை தியாகம் செய்யவோ, அதை உபயோகிக்க கூடாது என்றோ இப்பண்ணில் ஆதி சங்கரர் கூறவில்லை. நம் கர்மத்திர்க்கு ஏற்ப கிடைக்கும் தனத்தில் த்ருப்தி கொண்டு சந்தோஷமாக அதை உபயோகித்து மனதை சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள்; அதன் மூலமாகவே மன சாந்தி ஏற்படும் என பொருள் கொள்ள வேண்டும்.

இதுவே இப்பண்ணின் சாரம்.

தமிழ் இலக்கியத்தில் செல்வம் நிலையாமை

செல்வம் நிலையாமையைப் பற்றி எண்ணற்ற விளக்கங்களை, தமிழ் புலவர்கள் அளித்துள்ளனர். அதில் சிலவற்றை ஆய்வோம்.

திருமூலர்

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கு ஓர்வீடு பேறுஆகச்
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே.

முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற செல்வமும், தானே முயன்று ஈட்டிய செல்வமும் அனைத்துமே நீரில் மூழ்கும் படகு போலக் கவிழக் கூடியது. அழியும் இயல்பு கொண்ட மனித உடலுக்கு ஓர் அழியாத சேமிப்பு வீடு பேறு என்பதை அறிந்து கொண்டவர் அழியும் செல்வத்தைப் பெருக்க எண்ணார்.

நாலடியார்

துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால்
தொட்டுப்பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.

குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறி வரும்.

திருக்குறள்

அற்கா வியல்பிற்றுச் செல்வ மது
பெற்றா லற்குப வாங்கே செயல். - 333 நிலையாமை

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்ரஎன்று உணர்த்தப்படுகிறது.

வளையாபதி

வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங்
கள்வரென்(று) இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளில் உறுபொருளை யொட்டா(து) ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோ யெவ்வம் இகப்பவோ. 35

ஒருவர் சேர்க்கும் செல்வமானது வெள்ளம், மறதி, வெற்றியுடைய வேந்தர், நெருப்பு, தாயத்தார், கள்வர் என்று கூறப்படுகின்ற இந்த ஆறு வழிகளாலும் உடையவனது கையினின்றும் மறைவாக ஒழிந்து போகும் இயல்புடையதாகும். ஆதலால் உள்ளீடற்ற நமக்கு உதவாத பொய்யான பொருளாகிய செல்வத்தைப் பற்றாமல் துறந்த சான்றோர் பிறர் இகழ்வதற்குக் காரணமான பெரிய துயரங்களைச் செய்யும் பிறவிப் பிணியாகிய துன்பத்தை நீங்கி வாழ்வர் எனப்படுகிறது.

(உதாரணங்கள் - சென்ற 2015 டிசம்பரில் சென்னையில் மழையினாலும், ஏரிகள் உடைப்பினாலும் ஏற்பட்ட இழப்பு, மறதியினால் நாம் செய்யும் தவிர்க்கக்கூடிய செலவுகள், வேந்தன் எனும் அரசு, மதுபானம் விற்று மக்கள் சம்பாதிப்பதை சேமிக்க விடாமல் குடிபோதைக்கு ஆளாக்கி விடுவது, அங்கங்கே வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகளால ஏற்படும் பெரும் நட்ம், தாயாதிக்காரர்களாகிய அண்ணன் தம்பிகள் வழக்கு, வீடு, வங்கிகளில் கொள்ளை என நாம் இவைகளைக் கண்கூடாகக் காண்கிறோம்).பொருள் முயன்று ஈட்டிய போதும் நம்மை விட்டு அகலுதற்குப் பலவேறு வழிகளையும் உடைத்தாம். ஆகவே அதனை ஈட்டல் பயனின்றாம். பொய்யாகிய அப்பொருளின்பாற் பற்று விட்டவர்களே பேரின்பம் எய்துபவர் என்பதாகும்.

சித்தர் பாடல்கள்

“தேடிய செம்பொன்னும் செத்தபோது உன்னோடு
நாடி வருவதுண்டோ
போம்போது தேடும் பொருளில் அணுவேணும்
சாம்போது தான் வருமோ

என்ற பாடலில் நாளும்நாளும் தேடிய செல்வங்கள் யாவும் சாவும் போது துணைக்கு வாரது. ஒரு மனிதன் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும் கடைசியில் அவனுக்கு மண் மட்டுமே சொந்தமாகும்.

செல்வம் நிலையாமை குறித்து பாம்பாட்டிச்சித்தர் ,கூறுகையில்,

“மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ ” (பாம்.சித்,பா. 44)

என்ற பாடலில் மலைபோன்ற செல்வங்களை வைத்திருந்தாலும் எமன் வந்து அழைத்தபின் பயனாகுமா ?என்று கேள்வி எழுப்புகிறார்

நாட்டுப்பாடல்

வாழ்வே நிலையற்றது எனக் கூறுகையில் அதில் ஒருவன் ஓடித்தேடி சம்பாதிக்கும் செல்வமும் இறுதி காலத்தில் துணைவராது, சகடம் எனச் சென்று கொண்டே இருக்கும் தன்மையானது என்பதை,

''பஞ்சு பருத்தி எடுத்து - அதைப்
பேரான மணையிலே ஊட்டி அரைத்து
நெஞ்சக் கருத்தாலே நூத்து - அதை
நேரோடும் பாவில் ஓடி நெய்தாலும்
நாலு முழத்தில் ஒரு துண்டு - அதில்
நாலைந்து பக்கமும் பீத்தலும் உண்டு
பாதியைப் பறையன் கிழித்தான் - அதில்
பகுபாதி அம்பட்டான் கொண்டோடிப் போனான்
அக்கினி தேவுக்குப் பாதி - இந்த
அழகான கட்டைக்குப் போத்தப்பத்தாது''

என்ற பாடல் எடுத்துரைக்கின்றது.

முடிவுரை

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.

நாம் செல்வம் உடையோம் என்ற கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத சிற்றறிவுடையோரின் பெரும் செல்வம், இரவில் கருமையான மேகம் வாய் திறப்பதால் உண்டான மின்னலைப் போலத் தோன்றி, இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்!

ஆதலினால், துதி கோவிந்தனை, துதி கோவிந்தனை, கோவிந்தனைத் துதி மூட மனமே என்று எடுத்துரைக்கிறது இந்த இரண்டாவது செயல்முறை.

செல்வத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஆதி சங்கரர் கூறுகிறார் என்று தவறான முடிவிற்று நாம் வரக்கூடாது. தங்கள் சொந்த நலனுக்காக கண்மூடித்தனமான ஈடுபாட்டிற்கு எதிரான அறிவுரையாக இந்த இரண்டாவது செயல்முறையை கவனமாக உட்கொள்ள வேண்டும்.

உள்ளுணர்வோம். அடுத்த செயல்முறை என்னவென்று புது வருட முதல் நாள் (01-01-2023) அன்று அறிவோம். அதுவரை

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

Sankara’s Smithy- Strike 2 – The “Wealth”y Blow

Vanishing Wealth

Link to the Tamil Podcast

https://soundar53.substack.com/podcast

Introduction

Welcome to Sankara's Smithy, the Forge Shop where we have commenced our transformation process by receiving the first hammer blow. The hammer did  strike the very core of our misbelief  that we are nothing without our body and our physical body is permanent. It shatters that misconception.

Now comes the second hammer blow. This deals with the impermanence of wealth - “Dhana” as we call it. This blow will remove our wrong notions about acquisition, storage and distribution of wealth. We will realise that wealth is after all a “means” and not an “end”.

Sanskrit Verse

मूढ जहीहि धनागमतृष्णां

कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् ।

यल्लभसे निजकर्मोपात्तं

वित्तं तेन विनोदय चित्तम् ||

Adi Sankara

English Transliteration

Mooda jaheehi dhanaagama trushnaam

Kuru sadbuddhim manasi vitrshnaam

YallabhasE nija karmOpaattam

Vittam tEna viNodaya chittam

Meaning in English

Oh ignorant ! Win over the thirst for the inflow of wealth. In your mind develop detached noble thoughts. Rejoice your mind
with that wealth which is obtained with your own efforts or karma.

Explanation

Meaning of the Sanskrit Words 
1. मूढ - Mooda - Oh! Ignorant mind.

2. जहीहि - jaheehi - Win over

3. धनागमतृष्णां = dhanaagama trushnaam - धन + आगम + तृष्णां
a) धन - dhana - wealth - This includes money and all worldly things.

b) आगम - aagama - receipts/inflows

c) तृष्णां - trushnaam - thirst, yearn, uncontrolled desire

4. कुरु सद्बुद्धिं - Kuru sadbuddhim - develop noble thoughts

5. मनसि - manasi - in the mind

6. वितृष्णाम् - vitrshnaam - detached, not thirsty

7. यल्लभसे - YallabhasE - यत् yat + लभसे labhase - which is + obtained

8. निजकर्मोपात्तं - nija karmOpaattam - निजकर्मणा उपात्तम् - nija + karma + upaattam - with your own efforts. It means that whatever actions that are prescribed to oneself by the scriptures and what you are destined to perform as residual fruits of actions from your previous births.

9. वित्तं तेन विनोदय चित्तम् - Vittam tEna viNodaya chittam - wealth (vittam) , that (tEna), rejoice (vinodaya) , mind (chittam) - rejoice your mind with that wealth)

The philosophy behind these words

As a householder, one has to earn money and acquire various possessions to support one’s family and also to meet one’s obligations to society.   

The great poet Tiruvalluvar said that those without possessions do not really have a world here — பொருளில்லாற்கு இவ்வுலகு இல்லை (“porulillaarukku ivvulaku illai”).

It is human nature to think that wealth brings happiness in everyday life. This thinking is due to the fear that how one can one live without wealth.

While we accept proverbs which highlight the importance of wealth/money, we conveniently choose to forget the fact that anything in excess is a poison. Because of this misconception, we have more money cravings.

The first sentence of this Sloka can be misinterpreted as Adi Sankara holding worldly pursuits in such disdain as to call everyone shun wealth, worldly pursuits and opt for sanyaasa.

No, the approach towards wealth is brought out in the second sentence.

As an admonition against indiscriminate indulgence in wealth for their own sake at the expense of one’s growth into a higher plane, Sankara “advices to keep one’s pursuits legitimate and in conformity with dharma, making adequate room for the contemplation of higher goals”.

Simple living & great thinking is the need of the hour.

Tamil literatures like THIRUKURAL, Naaladiyaar, Thirumanduram, Valayapathy etc have given innumerable explanations including separate Chapters on the impermanence of wealth. A few of them are highlighted in the Tamil Version of this blog.

Conclusion

Adi Sankara drives home the point that wealth like our body is not eternal and is perishable. It is not an end in itself and cannot be the goal of our life. It is only a means to lead a  Dharmic life to achieve our higher goal of sorrows free permanent happiness. 

What a great impact it will have on our lives, if only we could absorb this second strike and start our journey with this fresh rethinking.

With that rethinking, let us proceed to the next strike which will be on the first day of the new year (01-01-2023).

Until then, take care. Introspect and turn a fresh page in life.

God Bless

தலைப்பு மாற்ற அறிவிப்பு – சங்கரனின் வைரக் கூடம்

வைரக் கூடம்
பஜ கோவிந்தம் என்று அழைக்கப்படும் “மோக முத்கரா”வைப் பற்றிய எனது பதிவைத் தொடங்கியபோது, சமூக ஊடகங்களில் “மூட மனம்” கொண்ட எனக்கும், கற்றறிந்தவர்களுக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான கருத்துப் பரிமாற்றங்களைப் பற்றி எழுதியிருந்தேன்.
“மோஹ முத்கரா” என்பது 31 ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு. இதற்கு பின்னர் பஜ கோவிந்தம் என்று பெயரிடப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆதி சங்கரரும், அவரது சீடர்களும் காசியில் வழங்கியது என்றும் கூறப்படுகிறது. நிலையற்றவற்றை நிலையென நம்பி வாழும் நம் மருட்சியுடை (மோஹம்) மனதை தட்டி எழுப்பும் சம்மட்டி (வடமொழியில் முத்கரா என்பர்) அடிகள் இவை. இது மறுக்க இயலா உண்மை.
அதே நேரம், “உண்மை என்றுமே உறைக்கும்” என்ற உலக இயல்புற்கேற்ப, சங்கரனின் சம்மட்டி அடிகள் என்று கொடுத்த தலைப்பு பொருத்தமானதல்ல, அது வன்முறையைக் குறிக்கும் சொல், அச்சொல்லிற்கும் ஆதி சங்கரருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறும் சில பெரியோர்களின் கருத்துக்களையும் நாம் மதித்து ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு தலைப்பின் மேல் பற்றை வளர்க்க எனக்கு விருப்பமில்லை. சமஸ்க்ருத மொழியில் வைராக்கியம் (वैराग्य) என்பது உலகம் தரும் இன்பப் பொருட்களின் மீதான பற்றை நீக்குவதே. நாம் விரும்பும் எந்த ஒரு வைரத்திற்கும் மேலான விலையிலா வைரம் இந்த வைராக்கியம். ஆதி சங்கரரும் அவரது சீடர்களும் “மோஹ முத்கரா”வில் உள்ள ஸ்லோகங்கள் வழியாக, நம் உடல் மன வளாகமெனும் சுரங்கத்துள் ஒளிந்துள்ள இந்த வைராக்கியத்தை நம்மிடமிருந்து வெளிக்கொணரவே முயல்கின்றனர்.
எனவே, இந்த வலைதள தொடர்பதிவின் தலைப்பை

சங்கரனின் வைரக் கூடம்

என்று மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
வைரத்தை தோண்டி எடுத்து பட்டை தீட்டும் இடம் வைரக் கூடம். ஒவ்வொரு ஸ்லோகமும் நம்முள் ஒளிந்திருக்கும் வைராக்கியம் எனும் பற்றிலா வைரத்தை, தோண்டி எடுத்து, பட்டை தீட்டி ஒளிர வைக்கும் செயல்முறை (process) என்பதே இத்தலைப்பின் பொருள். இரும்பை சம்மட்டி அடியால் மாற்றுவதை விட, வைரத்தை தோண்டி எடுத்து பட்டை தீட்டுவது என்பது வன்முறையிலா செயலெனத் தோன்றும் காரணமே இத்தலைப்பின் தோற்றம்.
இந்த மாற்றம் வலைதளப்பதிவுகளில் (blogs) இரண்டாவது ஸ்லோகத்திலிருந்தும் (01-12-2022), வலைதள ஒலிப்பதிவத் தொடரில் (podcast) மூன்றாவது ஸ்லோகத்திலிருந்து (23-12-2022) நடைபெறும். 

இந்த “தலைப்பு மாற்றம்” தமிழ் பதிவுகளுக்கு மட்டுமே. ஆங்கிலப் பதிவுகளில் எந்த மாற்றமும் இல்லை.

There is no change in respect of the blogs in English on the subject and it continues to be “Sankara’s Smithy”.
சங்கரனின் வைரக்கூடத்திற்கு வருகை தந்து, தோண்டி எடுத்து, பட்டை தீட்டி மெருகேற்றி பற்றிலா நம் வைராக்கியத்தை வெளிக் கொணர்வோம். வாருங்கள்.

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க

Narayaneeyam- Dasakam 4 – Sloka 11

Introduction

“There are in the Upanishads, intimations of Krama-Mukti or the progressive process of the liberation of the soul. 

The Upanishads are emphatic in their statements that one who reaches through unselfish meditation and knowledge this Supreme Cause does not return to the mortal coil, but proceeds further to the Absolute Reality.

The Mundaka Upanishad says that the sages in the world of Brahma are liberated beyond death in the end of time. Those who attain the world of the Karya-Brahman remain there until the end of the universe, enjoying the effects of their "Satyakamas" and "Satyasankalpas", the fruits of their desires and willings based on Truth. Whatever they wish arises then and there instantaneously, for they are in harmony with the Universal Being. They enjoy the highest approximation to the bliss of the Lord of the universe”.

This is what Bhattathri is highlighting in this Sloka 11.

Audio Link for chanting

https://www.dropbox.com/s/94kkjiubrzmeul9/4-11.mp3?dl=0

Sanskrit Verse

अग्निवासरवलर्क्षपक्षगैरुत्तरायणजुषा च दैवतै: ।

प्रापितो रविपदं भवत्परो मोदवान् ध्रुवपदान्तमीयते ॥११॥

English Transliteration

agnivaasaravalarkshapakshagair uttaraayaNajuShaa cha daivataiH |

praapitO ravipadaM bhavatparO mOdavaan dhruvapadaantamiiyate || 11

Tamil Transliteration

அக்₃நிவாஸரவலர்க்ஷபக்ஷகை₃ருத்தராயணஜுஷா ச தை₃வதை: |
ப்ராபிதோ ரவிபத₃ம் ப₄வத்பரோ மோத₃வாந் த்₄ருவபதா₃ந்தமீயதே ||

Meaning in Tamil


பகல் நேரமதில், வளர்பிறையில், அழல் உதவியுடன்,

பகலவனின் வடதிசைப் பயணத்தில், தேவதைகள் வழிகாட்ட


சுழுமுனையில் பிராணம் விடுத்து, அடைவர் ஆதவனுலகம்!

அங்கு, ஆனந்த போகம் அனுபவித்துப்பின் அடைவர்


துருவமண்டலம், கிரமமுக்திவிழை உன் பக்தர்கள் பரமனே, !!

Meaning in English

O Lord! Thy devotee who follows the Krama Mukti path is led by the presiding deities of fire, day time, the bright fortnight, and Uttaraayana to the plane of the sun and enjoying in each of these spheres reaches the realm of Dhruva

Meaning of the Sanskrit Words

अग्नि-वासर-वलर्क्ष-पक्षगै: - Agni (fire), Vaasara (daytime), Valaraksh paksha (the bright fortnight-Shukla Paksha)

उत्तरायणजुषा - and the Uttaraayanaa

दैवतै: presided over by the respective deities

प्रापितो रविपदं - (then) being led to the plane of the Sun

भवत्-पर: - he who is devoted to Thee

मोदवान् - while enjoying (the facilities of the various higher realms)

ध्रुवपदान्तम् ईयते - is next led to the sphere of Dhruvaloka

சங்கரனின் சம்மட்டி அடி 1 – யாக்கை நிலையாமை

வலை ஒலிப் பதிவு (Podcast) இணைப்பு

https://soundar53.substack.com/p/1#details

ஒளிப்பதிவு இணைப்பு

https://youtu.be/–oQVC7mJnc

முகவுரை

சங்கரனின் பட்டறைக்கு வருகை தந்து, முதல் சம்மட்டி அடி வாங்கிட ஒப்பிய உங்களனைவருக்கும் மிக்க நன்றி. 

இறை வணக்கம் போல் துவங்குகிறார் ஆதி சங்கரர் அவரது முதல் சம்மட்டி அடியை.

“கோவிந்தனைத் துதி; உனது மரண காலத்தில் உன்னை ஏட்டறிவு காத்திடாது”. இது தான் இந்த பண்ணின் (அடியின்) சாரம்.

விழும் முதல் அடியை பார்க்கும் பொழுது, மெதுவான அடி போலத்தான் தெரியும். பொதுவாக, விழுந்த பின்தான் தெரியும் அடியின் வலி. அதைப் போல, இந்த அடியின் வலிமையை உணர, பண்ணின் உட்கருத்தை ஆராய வேண்டும்.

வாருங்கள், விழும் அடியை ஆராயலாம். சங்கரனின் இந்த அடிக்குப் பெயர் யாக்கை நிலையாமை.

சமஸ்க்ருத ஸ்லோகம்

भज गोविन्दं भज गोविन्दं,

गोविन्दं भज मूढ़मते।


संप्राप्ते सन्निहिते काले,


न हि न हि रक्षति डुकृञ् करणे॥१॥

தமிழில் ஒலி பெயர்ப்பு

ப4ஜ கோ3விந்த3ம் ப4ஜ கோ3விந்த3ம்

கோ3விந்த3ம் ப4ஜ மூட4மதே |

ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

நஹி நஹி ரக்ஷதி ‘டு3க்ருஞ் கரணே’ ||

தமிழில் மொழிபெயர்ப்பு

துதி கோவிந்தனை துதி கோவிந்தனை

கோவிந்தனைத் துதி மூட மனமே

விதித்திட்ட வேளையில் காயம் அழியும்

காத்திடுமோ உனை வாழ்வியல் பாடம்.

விளக்கவுரை

பஜ

“பஜ“ என்ற சொல்லிற்கு நினை, பூசி, துதி என்ற பொருட்கள் உண்டு. பஜனம் என்பதற்கு சேவை என்ற பொருள்.

இந்தப் பண்ணில் ஆதி சங்கரர் இந்தச் சொல்லையும், கோவிந்தம் என்ற அடுத்த சொல்லையும் மூன்று முறை பயன்படுத்துகிறார்.

ஏன் மூன்று முறை? அதற்கு முக்கியத்துவம் உள்ளதா?

உள்ளது. ஏன் என்பதற்கான சுருக்கமான விளக்கம் இங்கே.

மூன்று வகையான தடைகளை நீக்குவது அல்லது மூன்று வகையான துன்பங்களை (துக்கங்களை) நீக்குவது என்பது வாழ்க்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று நமது மறை நூல்கள் நமக்குச் சொல்கின்றன.

மூன்று வகை துன்பங்கள் வெளிப்படையாக வரையறுக்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு வர்ணனையாளரும் பின்வரும் மூன்று வகையான துன்பங்களைக் குறிக்கின்றனர்:

1. ஆதிதைவிகா (தெய்வீக தோற்றம்) - கடவுளின், இயற்கையின் செயல் காரணமாக வரும் துன்பங்கள். இயற்கையின் சீற்றத்தால் விளையும் துக்கங்கள்.
2. ஆதிபௌதிகா (உடல், ஜட உயிரினங்களில் உருவானது) - வெளிப்புற தாக்கங்கள் காரணமாக வரும் துன்பங்கள்
3. அத்யாத்மிகா (நாமே உருவாக்கியது) - உடல் நோய்கள், மனப்பிரச்சனைகள் (ஆசை, கோபம், பயம், வெறுப்பு, பொறாமை, மோகம், சோகம், அவமானம், காழ்ப்பு…..) முலம் வரும் துன்பங்கள்

இம்மூவகை துக்கங்கள் (தாபத்ரையம்) நீங்கிட இறை வழிபாட்டில் மூன்று முறை முறையிடுதல் மரபு.
கோவிந்தம்

இந்த சொல் கோ, விந்தம் என்ற இரு சொற்களடங்கியது. முதலில் கோ என்ற சொல்லின் பொருளைக் காண்போம்.

1. “கோ” என்றால் - பசு, உயிரினம் (சைவ சித்தாந்தத்தில் பசு என்பது உயிரினங்கள்/மனிதர்களைக் குறிக்கும்), கால்நடை என்று பொருள்.

2. விந்தம் என்றால் - பேணுதல் (காத்தல்), அறிதல்

பசுக்களை/உயிரினங்களை அறிந்து பேணிக் காப்பவன் கோவிந்தன்.

காக்கும் கடவளாம் திருமாலுக்குப் பயன்படுத்தப்படும் அடைமொழிகளில் ஒன்று கோவிந்தா. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 187, 539 வது நாமங்களாக இந்த சொல் உபயோகிக்கப் படுகிறது. இவ்வார்த்தை இரண்டு விளக்கங்களை வழங்குகிறது.

1. முதலாவது வேதங்களின் மூலம் அறியப்பட்டவர். பிரம்மசூத்திரம், வேதங்கள் மூலம் மட்டுமே பிரம்மம் உணரப்படுகிறது என்று கூறுகிறது (गोपिः वेत्ति इति गोविन्दः gopi: vEthi iti gOvinda:).

2. இந்த வார்த்தையின் இரண்டாவது விளக்கம், உயிர்களை அறிந்தவர் (गाः विन्दति इति गोविन्दः கா: விந்ததி இதி கோவிந்த:). இல்லாததொன்றுமில்லை, எல்லாமே அவன் என்று நீக்கமற நிறைந்திருப்பதால், இடம், காலப் பரிமாணங்களைக் கடந்து, உயிரினங்களையும் அவற்றின் செயல்களையும் அறிந்திருப்பவர் கோவிந்தன்.

ஆக, ப்ரம்மம், பரம்பொருள் என்ற தூய இருப்பு, தூய உணர்வு, தூய இன்பம் தான், கோவிந்தன் என்ற சொல்லுக்குப் பொருள்.
மூட மதே

மனிதர்களாகிய நாம் மற்ற உயிரினங்களை விட மிக உயர்ந்த மனமும் புத்தியும் உடையவர்களாக இருக்கிறோம். வேண்டியது, வேண்டாதது, நல்லது, கெட்டது, என்று பகுத்தறியும் தன்மை நம்மிடம் மட்டுமே உண்டு. வெறும் உள்ளுணர்வால் (உயிரியல் மற்றும் உடலியல் தூண்டுதல்களால்) மட்டும் நாம் வாழ்வதில்லை; உயர்ந்த குறிக்கோள்களால் நிர்வகிக்கப்படுகிறது நம் வாழ்வு.

ஆயினும்கூட, அன்றாட வாழ்வில் இந்த மனம் நம்மை எங்கெலாம், எப்படியெல்லாம் “ஒன்றை விட்டு ஒன்று பற்றிப் பாசக் கடலக்குள் வீழ்த்திட” அழைத்துச் செல்கிறது. மனதைப் பற்றிய இந்தப் பாமரனின் விளக்கத்தை, கீழ்காணும் வலைப் பதிவில் காண்க. https://soundar53.substack.com/p/-6-


முந்தைய பதிவில் கூறியபடி, அன்றாட வாழ்வில் நடப்பு வேறு. அறிவில்லாத ஒன்றை அறிவு என்றும், தெளிவிலாத ஒன்றை தெளிவு என்றும், நிலையற்றவற்றை நிலையானவை என்றும், முழுமையற்றவற்றை முழுமையானவை என்றும் எண்ணும் நம் மனதை, ஆதி சங்கரர் “மூட மனமே” “அறிவிலியே” என்று அழைப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

நேரடி மொழி பெயர்ப்பு என்பது “குறித்த நேரம் வந்திடினில்” என்று பொருளாகும். யாருக்கு, யார் குறித்த, எந்த நேரம்? நமக்கு, காலன் குறித்த, மரண நேரம் என்பது நேரடி விடை. நாட்கள் கடக்க கடக்க, காலன் வரும் நேரமும் நெருங்குகிறது. அது சரி, மரணம் யாருக்கு?

“மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா! மரணத்தின் தன்மை சொல்வேன். மானிடர் ஆத்மா மரணம் எய்யாது. மறுபடிப் பிறந்திருக்கும். மேனியைக் கொல்வாய். நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி சென்றுதான் தீரும் ஓர் நாள்” என்று போர்க்களத்தில் அறிவுரை கூறினானே பாரத்தசாரதியான இறைவன் கண்ணன்.

ஆக உடலினுள் உயிர் ஒண்டுக் குடித்தனம். வாடகைதான் வாழ்வு.
நஹி நஹி ரக்ஷதி

“காப்பாற்றாது, காப்பாற்றாது” என்பது நேரடி மொழிபெயர்ப்பு. யாரை, எப்போது, எது காப்பாற்றாது?

விளக்கம் இதோ:

யாரைக் காப்பாற்றாது - “என்றும் அழியும் இக்காயம், மலம் ஊறித் ததும்பும் இவ்வுடலை மெய்யென்று கொண்டு பிழைத்திடும்” மூட மனமுடை அறிவிலிகளாகிய நம்மை

எப்போது காப்பாற்றாது - விதித்திட்ட வேளையில் - அதாவது “காலனின் பாசக் கயிறு நம்மைச் சுற்றி விழும்” நேரம். எமனின் ஓலை நமை அடையும் நேரம். உடலை விட்டு உயிர் பிரியும் நேரம்.

எது காப்பாற்றாது - இதற்கு விளக்கம் அடுத்த சொல்லில்
டுக்ருங் கரனே

டுக்ருங் என்பது சமஸ்கிருத இலக்கணத்தில் (வ்யாகரந) கர்ணே (கரனே) என்ற செயலைக் கொண்ட ஒரு வேர் சொல். இலக்கண விதிகளை மனனம் செய்வது என்று பொருள்.

வேதங்கள் மற்றும் வேதாந்தம் படிக்க சமஸ்கிருத இலக்கண அறிவு மிகவும் விரும்பத்தக்கது. பெரிய இலக்கண அறிஞர் பாணினி போன்ற பல அறிஞர்கள் வடித்த சூத்திரங்களை பாட, மனப்பாடம் செய்ய, அறிஞர்கள் இலக்கணத்தில் புலமை பெறுவதற்கான வழிகளில் ஒன்று, "டுக்ருங் கரனே".

இந்தப் பண்ணில் நாம் இதனை வெறும் ஏட்டுக்கல்வி என்று மட்டுமே எடுத்துக் கொள்ளாமல், இன்னும் சற்று விரிவான நோக்கத்தில் அறிந்து கொள்ள வேண்டும்.

அறிவு (வித்யா) இரு வகை: 1. இறையறிவு (மெய்ப்பொருள் அறிவு). இதனை பர வித்யா என்பர். 2. இறையறிவில்லா மற்ற அனைத்து அறிவு. இதனை அபர வித்யா என்பர். அதாவது அன்றாட வாழ்வில், நமக்கு வரையறுக்கப்பட்ட (விதிக்கப்பட்ட) உலகியல், இறையியல் வினைகள் (லௌகீக, வைதீக கர்மங்கள்). அபர வித்யா இன்றி, பர வித்யாவை அடைய முடியாது. பர வித்யா இல்லாமல் அபர வித்யா முமழுமை அடையாது.

ஆக இங்கு குறிப்பிடுவது, அபர வித்யா நம்மைக் காப்பாற்றாது என்ற பரந்த அர்த்தத்தில்.

தமிழ் இலக்கியத்தில் யாக்கை நிலையாமை

இச்சொற்களின் சாரத்தை பல தமிழ் ஞானிளும் சைவ சித்தாந்த அறிஞர்களும், கவிஞர்களும் எண்ணற்ற கவி வடிவிலே எழுதியுள்ளனர். யாக்கை நிலையாமை/நிலையாமை என்ற அத்தியாயங்கள் திருமந்திரத்திலும், திருக்குறளிலும் உள்ளன.

திருமந்திரம்

“மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிது உணர்ந்தவார் இல்லை
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே”.

(நன்கு நெய்து தயாரிக்கப் பட்ட பட்டாடையும் கிழிந்து போய்விடும். இந்த உண்மையைப்பற்றி உலகத்தவர் சிறிதும் சிந்திப்பதில்லை. அழகிய கருங் கூந்தல் வெண் கூந்தலாக மாறிவிடுவதும் கண்கூடு. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே ஒரு சிறு பொழுதே உள்ளது. இந்த உண்மைகளைச் சிந்தித்து நன்கு உணர்வீர் உலகத்தோரே).

மேலும்

“ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே”

என்று திருமூலர் உரைக்கிறார்.

திருக்குறள்

இதனையே திருவள்ளுவர்:

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு (குறள் 340)

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்பொரு உயிரிடை நட்பு (குறள் 338)

என்றும் கூறுகிறார்.

சிவ வாக்கியார்

“ மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணமென்று பேணவார்
நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் ” (சிவ.பா.80)

என்ற சிவவாக்கியர் பாடல் அழியும் உடல் பற்றி குறிப்பிடுகிறது.

நாட்டுப் பாடல்

''குச்சு வீடுங் கட்டலாம்
குறுங் கதவு சாத்தலாம்
வாழ வேண்டும் என்று சொன்னால்
வாய் மதங்கள் பேசலாம்
காலனுட ஓலை வந்தால்
கனத்தவீடும் தாங்குமோ
குச்சு வீடும் தாங்குமோ
குறுங்கதவும் தாங்குமோ''

என்ற பாடல் மூலம் அறியப்படும் தத்துவங்கள் பலப்பல. உடம்பு ஒரு குச்சு வீடு. அதில் ஆசைகள் கதவுகளாகும். எனவே வாழ நினைப்பவன் ஆசையை அடக்குதல் வேண்டும். உடம்பு ஒரு குச்சுவீடு, அக்குச்சு வீடு எவ்வளவு கனத்திருந்தாலும் அதாவது (புண்ணியம் செய்திருந்தாலும்) காலதேவன் வந்துவிட்டால் கணப் பொழுதும் நில்லாது மறைந்து விடும் என்ற நிலையாமைத் தத்துவத்தை இப்பாடல் நயம்பட கூறுகிறது.

திரை இசைப் பாடல்

பாத்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
செத்தா வெறகுக்காகுமா -
ஞானத்தங்கமே...
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?
கட்டழகு மேனியைப் பார்
பொட்டும் பூவுமா - நீட்டி
கட்டையிலே படுத்துவிட்டா
காசுக்காகுமா?'

முடிவுரை

மேற்கூறிய விளக்கங்கள் எதுவும், வேதங்களின் பூர்வபாகத்தில் (ஆரம்ப பகுதி) பொதிந்துள்ள பல்வேறு சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளை இழிவுபடுத்துவதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதில்லை. 

பெரும்பாலானவர்களுக்கு, அவை மனதையும் உடலையும் சுத்தப்படுத்துவதிலும், பெரிய பயணத்திற்கு ஒருவரைத் தயார் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.

ஸ்ரீ ஆதி சங்கரரைப் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், விரிவான தயாரிப்புகள் இல்லாமல் நேரடியாக அந்தப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராக பிறந்தவர்கள், அந்த வகையில் மிகவும் வித்தியாசமானவர்கள்.

உண்மையில், இறுதிக்கான வழிமுறைகளைத் தவறாகப் புரிந்துகொள்வதையும், சடங்குகளில் மட்டுமே திருப்தியடைவதையும், அவற்றின் உண்மையான நோக்கத்தையும் பொருளையும் புரிந்து கொள்ளாமல் அவற்றைச் செய்வதையும் தவிர்த்து பரம்பொருளை உணருவதை முயலவேண்டும் என்று கூறுகிறது இப்பண்.

ஏன் இறைவன் நாமத்தை சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். இறைவனே இதற்கு பகவத்கீதையில் 8வது அத்தியாயத்தில் பதில் அளிக்கிறார்:

अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥८- ५॥

அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் |
ய: ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸ²ய: || 8- 5||

ய: அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரந் = எவன் இறுதிக் காலத்தில் எனது நினைவுடன்
கலேவரம் முக்த்வா ப்ரயாதி = உடம்பைத் துறந்து கிளம்புகிறானோ (இறப்போன்)
ஸ: மத்³பா⁴வம் யாதி = எனதியல்பை எய்துவான்
நாஸ்தி அத்ர ஸம்ஸ²ய: = இதில் ஐயமில்லை.

இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை.

வாழ்நாட்களில் மனதுக்குக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டுபண்ணினால்தான் அம்மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலைபெறும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் அல்லவா. ஆகையால் நாம் அனைவரும் நம் வாழ்நாட்களில் மனதால் கடவுளைத் தியானம் செய்துகொண்டே தங்கள் கர்மங்களைச் செய்யது, கரமத்தின் பலனை அவனிடமே விட்டு விட வேண்டும்.


இது தான் இந்த முதல் சம்மட்டி அடி. என்ன ஒரு ஆழமான அடி! இந்த அடியை உள்வாங்கினால், உற்ற தேகத்தின் உயிரையும், உயிரை மேவிய உடலையும் ஊடுருவி, உலுக்கி எடுத்து, நம் உணர்வினை தட்டி எழுப்பும் என்பது உறுதி.
அடுத்த பதிவில் சங்கரனின் இரண்டாவது சம்மட்டி அடி.     அதைப் பெறும் வரை…….

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க