Hiraṇyagarbha – An overview

Introduction

Narayaneeyam Dasaka 7 is about the Lord Brahma, who is also known as Pitamah, Hiranyagarba, Abjayoni, Prajapati, Vishwasru, Vidatha, Vidhi, Kamalodbhava, Virinji, Andaja, etc. Before we try to understand the verses of this Dasaka, we need an overview of Lord Brahma. Whatever I have understood , I present it  as a preface to the Dasaka

A Vedāntic Perspective

In the pāramārthika (absolute) plane, Parabrahman exists as nirguṇa (devoid of attributes). When reflected through māyā, it appears as saguṇa Brahman, conditioned by upādhis (limitations such as the knower-known distinction, space, time, etc.) and endowed with manifest qualities. This saguṇa Brahman associated with māyā is referred to as Īśvara in His unmanifest (kāraṇa) form. In His manifested (kārya) state, He is called Hiraṇyagarbha or Brahmā (the four-faced deity), who is the kārya Brahman.

The Vedas declare Hiraṇyagarbha to be the first manifest creation. Just as a tree, though initially a mere seed, later branches out into roots, trunk, branches, leaves, flowers, fruits, and seeds again, so too does Hiraṇyagarbha, the saguṇa manifestation of Brahman, emerge through the vikṣepa śakti (projecting power) of māyā.

The term hiraṇya means “gold” or “radiance.” Since both consciousness and gold are luminous, hiraṇya metaphorically refers to consciousness here (Śaṅkara’s bhāṣya on Ṛgveda 10.121 and on the Muṇḍaka Upaniṣad 2.1.1).Garbha means “womb” or “that which is within.” Therefore, Hiraṇyagarbha means “the golden womb,” or more accurately, “the luminous consciousness contained within.” It is the repository of limitless knowledge—the cosmic intelligence or subtle matrix containing within itself the seed-form of all beings, objects, and even the entire cosmos. Because it encompasses the subtle state of all things before their gross manifestation, it is also called Prathama-ja (the First Born) or Sambhūti in technical Sanskrit.

This is the classic adhyāropa–apavāda model. Hiraṇyagarbha is the first manifestation (prathamaja) as the total subtle body (sūkṣma śarīra-samasṭi).  As per Advaita:

• Īśvara = Brahman + māyā (unmanifest)

• Hiraṇyagarbha = Brahman + māyā (manifest subtle totality)

Hiraṇyagarbha: A Scientific Analogy

Suppose you meet an old schoolmate after 50 years at a gathering. How would you respond?

  1. Would you say, “Ah! My 5th-grade classmate! The same features—I haven’t forgotten him in all these years. That’s Damodaran!”
  2. Or would you say, “Due to uninterrupted neural excitation, countless photons struck my retina, producing electromagnetic waves that traveled through my optic nerves to the thalamus and occipital cortex, where they were processed as visual representations. These patterns matched stored memory structures in my prefrontal cortex, thereby enabling me to recognize Damodaran, my schoolmate.”?

Both are valid. The first is subjective and experiential; the second is science based and neurologically objective.

Generally, what we call “mind” refers to a collective of thoughts, emotions, memories, and beliefs. The mind is not made of matter, yet it exerts immense influence. Scientists typically assume that the brain—a three-pound gelatinous organ inside the skull—is the physical substrate of what we experience as mind. Thoughts and feelings, they argue, arise from electrical impulses in neurons and associated neurochemical activity. Most neuroscientists reject the notion of the mind as a separate entity. Rather, they treat it as a by-product of the brain’s computational architecture—a dependent function, not an independent agent.

Thus, cognitive neuroscience attempts to uncover the biological foundations of mental functions—how the mind arises from the brain’s internal information processing structures.

But can we truly understand the mind only by examining the brain in isolation? Can we study an individual’s consciousness from outside social context from where we derive our ideas, opinions etc and a meaning is constructed in our brain based on these inputs?

Our everyday experiences—interacting with the world, society, norms, values, and shared aesthetics—cannot be fully understood by a reductionist view of the brain. In research led by Aaron Barbee of the University of Illinois, it was found that:

“Cognitive neuroscience often assumes that one’s intelligence is individually housed in the brain and can be accessed using tools like MRI or CT scans. However, our research challenges this view. When multiple people engaged simultaneously in a shared cognitive task, their brain scans showed synchronized patterns across similar regions. This suggests that knowledge and cognition extend beyond the individual, and understanding the mind demands looking at interpersonal and collective domains as well.”

This leads us to the notion of Collective Consciousness. The eminent psychologist Carl Jung believed that humans are connected not just with each other, but also with their ancestors, through a shared repository of archetypes and inherited experiences—what he called the collective unconscious. It contains not just our personal memories but also the cumulative experience of the human race.

This collective mind bridges the dualities of part-whole, individual-society, permanence-change, and rationality-creativity. It comprehends individual mental states while simultaneously contributing to a shared group psyche. Extensive scientific research is now underway globally to understand this phenomenon.

While the scientific endeavours are not Advaitic per se, it is fully acceptable as vyāvahārika-level support. Śaṅkara does not reject empirical data; he just prioritizes adhyātma-jñāna. Advaita doesn’t negate empirical sciences, only their claims to ultimate reality.

Understanding the Vedāntic position that mind is not the brain, and that consciousness is not a product of matter is essential.

Hiraṇyagarbha: A Metaphysical Vision

We have thus far viewed mind, brain, and cognition from a material perspective. Let us now move into a higher metaphysical framework, where the universe, galaxies, and all realms (lokas) are examined from a cosmic standpoint.

Look at the night sky. So many stars, constellations, galaxies. Amidst such grandeur, we live on a tiny, seemingly insignificant planet orbiting an ordinary star.

Do we perceive an inherent order—a ṛta, a cosmic dharma—that sustains the unfolding of creation, sustenance, and dissolution?

Regardless of how we answer these questions, one thing becomes evident: there is a pervasive order, and we intuitively accept that it arises from something beyond. That “beyond” may be termed collective intelligence or consciousness, which orchestrates the cosmic processes.

I am deliberately not using the term “collective brain.”Carl Jung’s “collective unconscious” is a useful bridge but is not strictly Advaitic. In Advaita, samasṭi mind (collective mind) is not a Jungian archetypal storehouse, but the total antahkaraṇan associated with Hiraṇyagarbha, which is still mithyā, not satya.

It is still under māyā and hence subject to negation through apavāda.

To the best of my limited understanding, this collective intelligence, or samāṣṭi chaitanyam, is what the Vedas call Hiraṇyagarbha—the first born, the total mind that contains within it all subtle seeds of future manifestation.

Because this total mind includes both intelligence (buddhi) and collective experience, it is beyond the range of sense perception. It cannot be known through any organ of perception. However, due to the projecting power of māyā, this subtle causal state appears as a gross world of objects and entities. It is not only projected but also mistakenly perceived as real and independent.

Sambhūti Upāsanā

Meditation on Hiraṇyagarbha is termed Sambhūti Upāsanā. Narayaneeyam Daskam 7 focusses on this subject.

As Swami Paramārthānanda explains:

“If Hiraṇyagarbha is beyond the reach of the sense organs, how can one meditate upon Him? The method is to use an ālambana (symbol). The individual mind (vyashti manas) becomes the symbol for the total mind (samashti manas). Thus, turning one’s attention inward upon one’s own mind becomes a way of meditating on Hiraṇyagarbha.”

But where is this mind located?

Vedāntic scriptures clarify that mind is not the brain. The brain is a physical organ that can be studied empirically; the mind is a subtle instrument, inaccessible to the senses. Upon death, the brain perishes with the body, but the mind survives and seeks another body—a concept not accepted by modern science.

The Śāstras speak of sense organs (indriyas) and their instrumental counterparts (golakas). For example, the eye is the instrument; sight is the faculty. A blind person may possess eyes (golaka) but lack the power of vision (indriya).

Similarly, the golaka of the mind is said to be the heart (hṛdaya). In waking state, the mind operates through the body. In deep sleep, it withdraws and returns to its base in the heart. Hiraṇyagarbha is that omniscient, omnipresent cosmic mind.

Fruits of Sambhūti Upāsanā

The core practice in this mode of worship is dhyāna (meditation). The upāsaka contemplates Hiraṇyagarbha as the embodiment of all creation—recognizing the essential oneness of creation, nature, and themselves. Yet, in this devotion lies an implicit duality: the upāsaka (devotee) and īśvara (Lord) are seen as distinct.

As a result, such meditators, though attaining relative immortality (through identification with the cosmos), do not gain mokṣa (liberation) immediately. Instead, they attain Krama Mukti—a gradual path leading to Brahma-loka, the divine realm.

The Vedas state that upon death, the subtle and causal bodies of such a meditator exit the physical body through the suṣumnā nāḍī, ascend through the solar path (śukla gati), and finally reach Brahma-loka via the brahma-randhra at the crown of the head. From there, final liberation is attained after gaining Self-knowledge in Brahma-loka.

Though such aspirants may acquire the eightfold supernatural powers (aṣṭa-siddhis), the Vedas clearly state that even those are impermanent.

ஹிரண்ய கர்ப்பன் – ஒரு கண்ணோட்டம்

முன்னுரை

பிதாமஹர், வாலறிவன், ஹிரண்யகர்ப்பர், அப்ஜயோனி, பிரஜாபதி, விஸ்வஸ்ரு, விதாதா, விதி, கமலோத்பவ, விரிஞ்சி, அண்டஜ என்னெல்லாம் அழைக்கப்படும் நான்முகக் கடவுளான பிரம்மனைப் பற்றியது தசகம் 7. இந்த தசகத்தின் ஸ்லோகங்களை அறிய முற்படுமுன், பிரம்மனைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் தேவை நமக்கு. அடியேன் அறிய முற்பட்டதை தசகத்தின் முகவுரையாக அளிக்கிறேன்.

வேதாந்தப் பார்வை

பரமார்த்திகா நிலையில் நிர்குணனாக இருக்கும் பரப்பிரம்மன், மாயையால் பிரதிபலிக்கப்பட்டு, வரையரைகளாலான (அறிபவன்/அறிவது வேறுபாடு, காலம், இடம் போன்றவைகள்), வெளிப்பாடுடைய சகுண பிரம்மனாகிறான். மாயையின் தொடர்புடைய அந்த சகுணப் பிரம்மனின் வெளிப்படா நிலையில் ஈஸ்வரன் (காரணப் பிரம்மன்) என்றும், வெளிப்படும் நிலையில் (manifested state) ஹிரண்யகர்பா, பிரம்மா (நான்முக கடவுள்), காரியப் பிரம்மன் என்றும் அழைக்கப்படுகிறான். 

ஹிரண்யகர்பமே வெளிப்படும் முதல் படைப்பு என்று மறைகள் கூறுகின்றன. வித்தெனும் உள்ளார்ந்த நிலையில், வேர்,  தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், கனிகளென மரம் வெளிப்படுவதைப்போல “காரிய ப்ரம்மன்” (வடிவுடை பரமன்) எனும் “ஹிரண்யகர்ப்பா”, மாயையின்  விக்க்ஷேப சக்தியால் வெளிப்படுகிறான்.

ஹிரண்யம் என்றால் பொன்/தங்கம் என்று பொருள்.  அறிவும் பொன்னும் ஒளிமயமானது என்பதால், இங்கே அதற்கு அறிவு என்ற பொருள். பொன் போன்ற ஒளி படைத்த அறிவால், அறியாமையெனும் இருள் நீங்கியது என்பர். கர்ப்பம் என்றால் கருப்பப்பை என்று பொருள். இந்த இடத்தில் அதற்கு உள்ளே என்ற பொருள்.  ஹிரண்ய கர்ப்பம் என்றால், அதனுள் ஒளிமயமான அறிவு என்ற பொருள். முடிவற்ற அறிவு என்பார்கள். அழியா அறிவதனை உள்ளடக்கிய கருவறை. 

அதாவது, அனத்தின் எல்லைகளையும், அனைத்துப் பொருட்களும், அனைத்து உயிரினங்களையும், அனைத்து அண்டங்களையும் அவைகளின் நுண்ணிய நிலையில் அடக்கிய கருப்பை என்று பொருள். இப்படி, முற்றிலும் வெளிப்பட்ட அனைத்து அண்டங்களின் நுண்ணிய நிலையை உள்ளடக்கிய கருப்பையே ஹிரண்யகர்ப்பம் எனக் கூறப்படுகிறது. காரிய பரமனின் முதல் வெளிப்பாடு என்பதனால்,  “ப்ரதமஜ” அல்லது “முதல்பிறவி” என்றும் பொன் கருவரை அழைக்கப்படுகிறது. இதற்கான சமஸ்க்ருத தொழில்நுட்பச் சொல் “ஸம்பூதி”. 

அறிவியல் (பௌதீக) கண்ணோட்டம்

பள்ளித் தோழன் ஒருவனை, நீங்கள் ஒரு மிக நீண்ட காலம் (உதாரணத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு) பிறகு ஒரு கூட்டத்தில் பார்க்கும் போது என்ன சொல்வீர்கள்? 

1. “அதோ ! என்னுடைய 5ம் வகுப்பு பள்ளித் தோழன். அதே அங்க அடையாளம். ஐம்பது ஆண்டுகளானாலும் நான் மறக்கவிலை. அவன் பெயர் தாமோதரன்” என்று கூறுவீர்களா?

அல்லது

2. “இடைவிடா தொடர்ச்சித் தாக்குதலால் எண்ணற்ற போட்டான்கள் என் விழித்திரையில் விழுந்து, பார்வை நரம்புகள் வழியாக மின்னனு அலையாய் சென்று தாலமஸ் பின்னுள்ள இருமேடு சென்று அங்கிருந்து என் பிரதானமான காட்சிப்புறனி வழியாக, ஸட்ரையேட் காட்சிப்புறனியில் வண்ணங்களை அடையாளம் கண்டு, பின் பொருட்களை நினைவுக்கு கொண்டுவரும் மூளையின் முன்பகுதி சென்று ஆராய்ந்து என் பள்ளித் தோழன் தாமோதரனை தான் கண்டேன்” என்பீர்களா?

இரண்டும் சரியான கூற்று தான்; முதல் கூற்று பொருள் என்று கூறமுடியாத மனம் ரீதியானது, இரண்டாவது பௌதீகப் பொருளான மூளை ரீதியானது. 

பொதுவாக, மனம் என்பது நம் எண்ணங்கள், உணர்வுகள், நினைவுகள், நம்பிக்கைகளின் ஒருபொருட் சொல்லாக கருதப்படுவது. மனம் பொருட்களால் ஆனது அல்ல. எனினும் மிகவும் சக்தி வாய்ந்தது.

மண்டை ஓட்டுக்குள், மூன்று பவுண்டு எடையுள்ள பாலாடைக்கட்டி போன்ற அமைப்பே,  மனம் என்று நாம் கூறுவதன் பொருள் வடிவமான மூளை என குறைந்த பட்சம் விஞ்ஞானிகளாவது கருதுகிறார்கள்.  நமக்கு சிந்தனையோ அல்லது உணர்வோ தோன்றினால்,  அதற்கு மூளையே காரணம் என்றும், மூளை ந்யூரான்கள் வழி மின்னணு அலைகளச் செலுத்தி நரம்பியல் ரசாயனங்களை உற்பத்தி செய்வதால் அந்த சிந்தனையோ உணர்வோ ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள். நரம்பியல் அறிவியல் அறிஞர்கள் பெரும்பாலானோர், மனம் என்பதற்கு தனி இருப்பு என்று ஒன்றுமில்லை என்று வலியுறுத்துகின்றனர். அது மூளையின் ஆற்றலே தவிர அது சுயேச்சையாக இயங்கும் தன்மை கொண்டதல்ல என்றும் கூறுகின்றனர்.

ஆக, அறிதிறன் நரம்பியல் (cognitive neuroscience), மனித மனதின் உயிரியல் அடித்தளங்களை (biological foundations) கண்டறிய முற்படுகிறது. எப்படி மனச்செயல்பாடுகள் (mental operations) மூளையின் தகவல் செயல்முறை அமைப்பிலிருந்து (information processing architecture) உருவெடுக்கின்றது என்பதை அறிவது ஒரு நோக்கு. எப்படி? மனித மனம், மூளை இரண்டையும் தனிநிலையில் ஆய்வதா அல்லது வேறு பார்வையில் ஆய்வதா? 

நம்முடைய அன்றாட உலகில் நாம் நமக்குச் சொந்தமான அனுபவங்களிலிருந்து, நம்மைச் சுற்றியுள்ள உலகம் கண்டு,  சமூக உலகில் பங்கேற்று, , நெறிமுறைகளிலிருந்து வழி தேடி, அழகான அனுபவங்களில் மகிழ்ந்து, அருமை நண்பர்களுடன் பரிவுடன் கலந்து, இந்த அனைத்து அனுபவங்களையும் உள்வாங்கி அதன் அர்த்தங்களைப் புரிந்து கொள்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் மனித மூளையை தனித்த ஒருவரின் நிலையிலிருந்து பௌதீக ரீதியில் பார்ப்பது எப்படி சரியான அணுகுமுறையாகும்?

அரோன் பார்பே, இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மன இயல் பேராசிரியருடன் இன்னும் இருவரும் சேர்ந்து நடத்திய ஆராய்ச்சியில் 

“அறிதிறன் நரம்பியலில் (cognitive neuroscience) பொதுவாக ஒருவரின் அறிவின் பிரதிநிதித்துவம் அவரது மூளையில் என்றும், அது ஒருவொருவருக்கிடையே நேருக்கு நேர் பரிமாற்றப்படுகிறது என கருதப்படுகிறது.  காந்த அதிர்வு அலை வரைவு (MRI), கதிரியக்கத் துழாவல் (CT Scan) போன்ற ஆய்வுகள் தனிப்பட் ஒருவரின் மூளயைத் துழாவி அதன் செயல்பாட்டை யூகிக்க முடியும். எங்களின் ஆய்வு அத்தகயை கருத்து சில முக்கியமான நிகழ்வுகளில் சரியில்லை என்பதை நிருபனம் செய்கிறது. இதை ஊர்ஜிதப்படுத்த, சமீபத்தில் ஒரே சமயத்தில் பலர் ஒரே விஷயத்தை சிந்தனை பரிமாற்றம் செய்யும் பொழுது அவர்களின் மூளைகளை அதே சமயத்தில் காந்த அதிர்வு அலகளைப் படம்பிடித்த போது, அவர்களின் மூளைகளின் அதே பகுதிகளில் மின்னணு அலைகளின் ஆக்கம் தெரிந்தது. ஆக, இந்த அறிதிறன் நரம்பியலின் மிகப் பெரிய சவால் என்னவென்றால், ஒருவரின் மூளையில் உறையாமல் அடுத்தவரிடமோ, சமுகத்திடமோ  வெளிக்குத்தகையிலிருக்கும் (outsourced) அறிவை எங்கனம் நாம் அறியமுடிவது என்பதே. ஒருவரின் அறிவாற்றல் என்பது பௌதீக உலகிற்கும், அடுத்தவர்களின் மூளைக்கும் பரவியுள்ளது”  என்று கூறுகிறார்கள்.

மேல்கூறிய கருத்துக்கள், ஆய்வுகள் நம்மை மற்றொரு முக்கியமான தத்துவத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அதுவே கூட்டுணர்வு (collective consciousness) என்பதாகும்.  கார்ல் ஜங் எனும் புகழ் பெற்ற மனநிலையியல் நிபணர், ஒருவருக்கொருவருடனும், அவர்களின் முன்னோர்களுடனும் தங்களது பகிர்ந்த அனுபவங்கள் மூலம் மனிதர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என நம்புகிறார். நம் உள்ளுணர்வு என்பது, நம் சொந்த அனுபவங்கள், நினைவுகள் மட்டுமில்லாமல், மனித குலத்தின் அனுபவங்களும் நினைவுகளும் நிறைந்த களஞ்சியம். அனைத்து மனிதர்களின் உள்ளுணர்வுகளும் இப்படியே. இக்கூட்டுணர்வு மூலமே நாம் உலக வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்கிறோம் என கார்ல் ஜங் கருதுகிறார்.

மனம் என்பது பொருளான மூளையின் செயல் அல்லது வினைப் பரிமாணம். கூட்டு மனம் (collective mind) என்பது, பகுதிகள்-முழுமை, தனிநபர்-சமூகம், நிலையான தன்மை-மாற்றம், பகுத்தறிவு-படைப்பாற்றல் இவைகளுக்கிடையே உள்ள எல்லைகள்/வேற்றுமைகளைக் கருதாமல், உறவுகளை ஏற்படுத்துகிறது.  அப்படிப்பட்ட கூட்டுமனம் ஒவ்வொருவரின் மனநிலையையும், கூட்டான மனநிலைக்குதவியும் அந்நிலைகளை புரிந்து கொள்கிறது. 

கூட்டு மனம் / கூட்டு உணர்வைப் படித்தறிய உலகம் முழுவதும் விரிவான விஞ்ஞான ஆய்வு நடக்கிறது.

உயர்நிலை தத்துவ கண்ணோட்டம்

இதுவரை பௌதீக அளவில், உலகத்தில் மனம், மூளை, உணர்வு என்பவைகளப்பற்றிய கருத்துக்களைப் பார்த்தோம் இப்பொழுது, இவைகளை உயர்நிலை தத்துவ ரீதியில் (உலகத்திலிருந்து அண்டங்கள் அடங்கிய ப்ரபஞ்ச நிலை) ஆராய்வோம்.

இரவில் விண்ணை நோக்குங்கள். எத்தனை நட்சத்திர மண்டலங்கள, கோளங்கள்? இந்த பிரபஞ்சத்தை நன்றாகப் பாரத்தபின் இவ்வினாக்கள் நம் மனதில் எழும்.

  1. இந்த நட்சத்திரம் சரி, இது தவறு; இந்த மண்டலம் சரியாக அமைந்துள்ளது, இது இல்லை என்று ஒப்பிடுகிறோமா?
  2. விண்மீன் திரைகளில் ஒன்றின் வெளிப்புற விளிம்புகளில் உள்ள ஒரு சிறிய (!) நட்சத்திரத்தை சுற்றி சுழலும் ஒரு முக்கியமற்ற (!) மண், நீர் கலந்த ஒரு பந்து மீது நாம் வாழ்கிறோம் என்று சிந்திக்கின்றோமா?
  3. உருவாக்கம், பராமரிப்பு மற்றும் அழிவு ஆகியவற்றின் தெளிவாக அமைக்கப்பட்ட செயல்முறைகளை நாம் காண்கிறோமா?
  4. இவைகளையெல்லாம் ஊடுருவி, சுற்றிப் பிணைக்கும் பேருணர்வு எனும் நூலை நாம் காண்கிறோமா?

இவ்வினாக்களுக்கு சரியான விடைகள் உண்டோ இல்லையோ தெரியாது; அது ஒவ்வொருவருன் மனநிலையைச் சார்ந்தது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிகிறது. இவற்றின் பின், எல்லாவற்றிலும் நாம் ஒரு ஒழுங்கு, ஒரு தர்மம்  (இந்த பிரபஞ்சத்தை கையாள்வதில் நமது செயல்களைத்தவிர)  பார்க்கிறோம், இல்லையா? இப்படிப்பட்ட ஒழுங்கு, தர்மத்தை எப்படி இப்பிரபஞ்சம் கடைப்பிடிக்கிறது? இந்த உத்தரவு எங்கிருந்து வருகிறது?  எங்கோ கூட்டு மனம் / கூட்டு நுண்ணறிவு / கூட்டுணர்வு ஒன்று இருந்து  இதை நிலைநாட்டிக் கொண்டிருக்க வேண்டும். அது மட்டும் உறுதி அல்லவா?  என் வார்த்தையை குறிக்கவும். நான் “கூட்டு மூளை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

என் வரையறுக்கப்பட்ட அறிவைப் பொருத்தவரை அந்த கூட்டு மனம் / கூட்டு நுண்ணறிவு / கூட்டுணர்வு (சமஷ்டி மனம்) என்பதனையே பொன் கருவறை என அழைக்கிறோம். வேதங்களின்படி இதுவே முதல் படைப்பு. 

பொன் கருவறை என்பது அனைத்தின் ஒன்று கூடிய மனம் (புத்தியும் சேர்ந்த) என்பதனால், அந்த அனைத்து நுண்நிலைகளின்  ஒருமித்த நிலை, உடல் மன வளாகத்திலிருக்கும் பொறிபுலன்களுக்கு அப்பாற்பட்டது. எனவே அப்பொறிபுலன்களுக்கு அக்கருவறை புலப்படாது. அந்நிலையில் மாயையின் வெளிப்படுத்தும் (உந்தும்) சக்தியினால், மன உடல் வளாகமுறை ஜீவன், தானே காரணம், தானே நுகர்வோன் என எண்ணி நுண்நிலை இருப்புகளை பருநிலை உலகாகவும், பொருள்களாகவும் வெளிப்படுத்துகிறது. வெளிப்படுத்தியதோடல்லாமல், அப்படி வெளிப்பட்ட உலகமும், பொருட்களும் நிலையானது என்ற தவறான புரிதலும் கொள்கிறது.

ஸம்பூதி உபாஸநா 

ஹிரண்ய கர்பத்தை தியானம் செய்வதே ஸம்பூதி உபாஸநா எனப்படும்.

ஸ்வாமி பரமாரத்தானந்தாவின் போதனைகளை இங்கு மேற்கோளாக காட்டுகிறேன்:

“ஹிரண்யகர்ப்பம் என்பது பொறி புலன்களுக்கு அப்பாற்பட்டது, அவைகளால் அதனை உணரமுடியாது என்றால் அந்த ஹிரண்யகர்பத்தை எப்படி தியானிப்பது? அதற்கு ஒரு யுக்தி உள்ளது.   ஒரு சின்னத்தை (ஆலம்பனம்) பயன்படுத்துவது. கூட்டு மனதின் (சமஷ்டி மனம்) சின்னமாக நம் மனதை (வ்யஷ்டி மனம்) பயன்படுத்துவது. அதாவது, கவனைத்தை நம் மனம்மேல் திருப்பி தியானிப்பதுவே ஹிரண்யகர்ப்ப தியானம்”. இதுவே ஒரு  எளிய விளக்கம்.

சரி, நம் மனம் எங்குள்ளது?  நமது சாஸ்த்திரங்கள், மனது மூளையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று சொல்கின்றன. மூளை பொறி புலன்களால் அறியக்கூடிய ஒரு பருஉடல் உறுப்பு. மனம் காண இயலா ஒரு நுட்பமான கருவியாகும்.  மரணத்தின் போது, மூளை உடலுடன் எரிந்து சாம்பலாகும். மனம் பிழைத்து, உடல் எரிந்தபின்னர் இன்னொரு உடலைத்தேடி அலையும்.  அறிவியல் இந்த கருத்தை ஏற்கவில்லை.

மறைகள், நமது ஐம்புலன்களுக்கும் (இந்திரியம்) ஏற்ப உடலில் ஐம்பொறிகள் (கோலகம்) உள்ளதை உரைக்கின்றன. உதாரணமாக நமது பார்வைக்கு கண்களே கருவி. குருடர் என்று நாமழைக்கும் மனிதருக்கு பொறிகள் (கோலகம் – கண்கள்) உண்டு புலன் (இந்திரியம் – பார்வை) இல்லை. அதைப்போல நமது மனதின் பொறி (கோலகம்) இதயம் (ஹ்ருதயம்) என்று கூறுகிறர் ஆதி சங்கரர். விழிப்பு நிலையில், மனம் உடலை மேவி பணி புரியும். ஆழ் உறக்க நிலையில் உடலிலிருந்து விலகி அதன் இல்லமான (கோலகம்) இதயத்திற்கு திரும்பும்.  ஹிரண்யகர்பம் என்பது எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த கூட்டு மனம்”.

ஸம்பூதி உபாஸநாவின் பலன்கள்

அடிப்படையில் இந்த வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் நுட்பம், தியானம். இப்படி ஹிரண்யகர்ப்ப (ஸம்பூதியை) தியானிப்பவர்கள், பிரபஞ்சத்தை வழிபடுகிறார்கள். அதாவது அனைத்துப் படைப்புகளும் ஒன்று, இயற்றகையெனும் ப்ரக்ருதியும் ஒன்று என்ற அடிப்படை உணர்வுடன் வழிபடுவது. அந்த உணர்வில் அவர்களும், இயற்கையும் பிரபஞ்சமும் வேறு என்று அவற்றை வழிபடுகின்றனர். அதாவது, இறையும் நானும் வேறு என்ற உட்கருத்துடன் வழிபடுவது.

இவ்வழிபாட்டின் மூலம் இஞ்ஞானிகள் ஓப்பீட்டளவில் அழிவிலா நிலை  அடைந்தாலும், இயற்கையுடன் கலந்திணைந்து மரணத்தைக் கடந்து மறுபிறவி தவிர்ப்பரே (க்ரம முக்தி) அன்றி வீடுபேறு அடைவது என்பது இவ்வகை வழிபாட்டில் இயலாதது. ஏனெனில் அந்த தியானத்தின் உட்கருத்தில் இருமை உளது (நான் வேறு, இறை வேறு). 

அந்த வழிபாடு புரியும் ஞானிகள், பிரம்ம லோகம் என்னும் இறை உலகத்தை ஷுக்ல கதி என்ற பாதை வழி அடைவர் என்று மறைகள் கூறுகின்றன. அந்தப்பாதை இதயத்திலிருந்து தொடங்குவதாய்  மறைகள் கூறுகின்றன. மரணத்தின் போது (உடலை விட்டு உயிர் பிரியும் போது) நுண்ணுடலும், காரண உடலும் இதயத்திற்கு திரும்புகின்றன. அங்கிருந்து தோன்றும, 101 நாடிகளில் ஒன்றான சுஷும்ன நாடி வழியாக மேல்நோக்கி சென்று கபால உச்சி வழியாக, சூரியன் வழியாக பிரம்ம லோகம் அவைகள் அடைந்திடும் என்று மறைகள் உரைக்கின்றன. இதைப்பற்றிய விபரங்கள் இந்த முன்னோக்கில் அடங்க வில்லை என்பதை அறிக.

பிரம்ம லோகம் அடையும் இஞ்ஞானியர் அட்டமா சித்திகளை அடையக்கூடும். எனினும், அவைகளால் அடையும் மகிழ்வும் நிலையற்றதே என மறைகள் கூறுகின்றன.

தசகம் 7 – முதல் ஸ்லோகத்தை அடுத்த பதிவில் காண்போம்.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !

கந்த ஸஷ்டி – ஸூர ஸம்ஹாரம்

On this day of the victory for the Lord over the Demons at Tiruchendur, a coastal town in Tamil Nadu, here is my prayer in the form of Tamil Translation of a Sloka from the epic work of Adi Sankara. “Subramanya Bhujangam”.

சூர பத்மனை வதம் செய்த இந்நாளில், ஆதி சங்கரரின் சுப்ரமண்ய புஜங்கத்திலிருந்து ஒரு ஸ்லோகம் இதோ.

Translations for all Slokas are available in this website. அனைத்து ஸ்லோகங்களின் தமிழாக்கத்திற்கு கீழ்காணும் வலைதளப் பகுதியைக் காணவும்.

https://prabhusponder.com/?s=Subramanya+Bhujangam+

A video presentation is available at YouTube . ஸ்லோகங்களின் பாட்டு வடிவமும், தமிழாக்கமும் அடியேனின் யூட்யூப் பகுதியில் உள்ளது. அதன் இணைப்பு இதோ!

https://youtu.be/3kSlup9ANDg?si=tijY_zSj75fhurLp

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

கயிற்றில் பாம்பு

முன்னுரை

ஊருக்கு வெளியிலே, நீங்கள் தங்கியிருக்கும் அடர்ந்த மரங்களடங்கிய ஓய்வு விடுதிக்கு, சூரியன் மறையும் அந்தி வேளையில், காலையில் துவக்கிய மலை ஏறும் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, சாலையில் ஏதோ ஒன்று வளைந்து, சுருண்டு கிடக்கிறது. உடனே உடலில் ஒரு மின்சாரத் தாக்கு, இதயத்தில் ரத்த ஓட்ட வெள்ளம், புத்தியிலிருந்து வாக்கிற்கும் கால்களுக்கும் ஒரு அவசர தந்தி. “அய்யோ பாம்பு! ஓடு”. ஓடி நின்றபின் உள்ளிருந்து ஒரு குரல் “சரியாகப் பார். உன் கையில்தான் சிறு ஒளி விளக்கு உள்ளதே”. மறுபடியும் அந்த இடத்திற்குச் சென்றால் அந்த “பாம்பு” அங்கேயே உள்ளது. விளக்கு ஒளியில் அது பாம்பு இல்லை, வெறும் கயிறு என்று தெரிகிறது.

“சரி, வெளிச்சம் போதாது. அறியவில்லை சரியாக. அவ்வளவுதான். இதில் என்ன பெரிய தத்துவம்” என நாம் கேட்கலாம்.

வேதாந்தத்தில், இது போல பல உருவகங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அவைகளில் முக்கியமான உருவகங்கள் ஐந்து என்பர். அவைகள்:

1. சிலந்தியும், சிலந்தி வலையும்

2. ஒரு மரத்தில் இரு பறவைகள்

3. குடுவையில் நீர்

4. கயிறும் பாம்பும்

5. குடுவையில் வெளி

பொதுவாக, இந்த உருவகங்கள் மஹா வேத வாக்கியங்கள் எனப்படும் வேதசாரங்களை அறிய உதவும். இவைகளில், கயிறும் பாம்பும் என்ற உருவகத்தை அறிய முயலுவோம்.

“உவமை எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே” என்கிறது தொல்காப்பியம். ஆக, உருவகம் என்பது, ஒரு உயர்ந்த கருத்தினைச் சார்ந்தது. அதன் உபயோகம் அந்த கருத்தினை விளக்க மட்டும்தான். அந்த வரையறைக்குள் இருந்தால்தான் அந்த உருவகத்தின் பயன். எனவே கதிர்மறைக் கருத்துக் கண்ணோட்டத்துடனோ அல்லது உதாரணத்தையோ எடுத்துக் கொண்டு இந்த உருவகத்தின் பலனின்மையை நிலைநிறுத்தாமல், உருவகத்தின் வரையறைக்குள் இருந்து உருவகம் கூறுவிருக்கும் கருத்தினை ஆய வேண்டும். அந்த மனநிலையுடன் இந்த உருவகத்தை இப்போது ஆராய்வோம்.

விளக்கவுரை

இந்த உருவகத்தில்.

1. அரையிருளில் ஏதோ ஒன்று உள்ளது என்பதை அறிய போதுமான வெளிச்சம் உள்ளது,

2. ஆனால் அது என்ன என்பதை அறிய போதுமான வெளிச்சம் இல்லை. கயிற்றை பாம்பு என்று தவறாக எண்ணுவதற்கு இதுதான் சரியான சூழல்.

3. கயிற்றின் யதார்த்தம் மறைக்கப்பட்டு அதன் இடத்தை ஒரு பாம்பு கைப்பற்றுகிறது.

4. கயிறு மறைந்து போவது போல் கயிறு இருந்த இடத்தில் பாம்பு தோன்றும்.

5. பின்னர் விளக்கு இயக்கப்பட்டு “பாம்பு” இருந்த கயிறு பார்க்கப்படுகிறது.

கயிற்றின் மீது பாம்பு எவ்வ்வாறு கற்பிக்கப்பட்டு, இந்த மிகைப்படுத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை இப்போது விவரமாக காணலாம். இந்த உருவகத்தில்

1. கயிறு என்பது – நிலையான அறுதி உண்மையான பிரம்மன் எனும் தூய இருப்பு, தூய உணர்வு. இது பரமாத்மா எனப்படும் பரம்பொருளை குறிக்கும்.  நீக்கமற நிறைந்திருக்கும் இதுவே நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளும் இருக்கும் தூய உணர்வான ஆத்மா.

2. பாம்பு என்பது – உடல் மன வளகத்தில் உறையும் ஜீவாத்மாவை குறிக்கும்.

3. அரையிருட்டு என்பது – அறிவின்ஒரு பகுதியும் அறியாமையையும் குறிப்பது.

4. பிரகாசமான ஒளி  என்பது – அறியாமையை நீக்கும் மெய்யறிவு எனும் ஆத்ம ஞானம். இது அறுதி உண்மையுடன் இணைந்த அறிவினை குறிக்கும்.

இந்த ஒப்புமையைப் புரிந்து கொள்ள, ஒரு பகுப்பாய்வு இதோ.

1. பாம்பின் தோற்றத்திற்கு கயிற்றின் இருப்பு முற்றிலும் அவசியம்.

கயிறு என்ற ஒன்று இருக்கிறது. கயிறு இல்லை என்றால், பாம்பு தோன்றி இருக்காது.

அதாவது பரம்பொருள்/ஆத்மா என்றெல்லாம் அழைக்கப்படும் தூய உணர்வு இருந்தால்தான், உலகம் என்ற ஒன்று தோன்றும். அதனால்தான் எந்த அனுபவமும் சாத்தியமாகிறது. காகிதம் இல்லாமல் எழுத்துக்களின் உலகம் இருக்க முடியுமா? இல்லை. அதேபோல, ஒப்பீட்டளவில் உலகம் இருந்தாலும் அதன் தோற்றத்திற்கு அடி மூலக்கூறு பரமபொருளான ஆத்மா. அதனைச் சார்ந்தே  இவ்வுலகம்.

2: குறைந்தபட்சம் சிறிது வெளிச்சம் இருக்க வேண்டும்

அரையிருளில் ஏதோ ஒன்றைப் பார்க்கிறோம். ஒன்றுமே காணவில்லை என்று இல்லை. எதையாவது பார்க்க, குறைந்தபட்சம் சிறிது வெளிச்சம் இருக்க வேண்டும். அந்தி நேரத்தில் மங்கலான வெளிச்சம் இருந்தது, அதனால்தான் எதோ ஒன்றைப் பார்க்க முடிந்தது. வெளிச்சம் இல்லாவிட்டால், எதையும் பார்க்க இயலாது.

புற உலகமாக இருந்தாலும் அல்லது தனிப்பட்ட எண்ணங்களின் உள்உலகமாக இருந்தாலும் நாம் உண்மையில் எதையாவது பார்க்கிறோம்/தெரிந்துகொண்டிருக்கிறோம். எனவே நாம் முற்றிலும் அறியாதவர்கள் அல்ல. யதார்த்தம் நமக்கு முழுமையாக மறைக்கப்படவில்லை. ஓரளவு மட்டுமே. யதார்த்தம் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தால், உலகத்தைப் பற்றிய எந்தப் பார்வையும் நமக்கு இருக்காது.

3: காணும் பாம்பு, பார்த்தவனுக்கு உண்மை

நீங்கள் உண்மையில் அங்கு ஒரு பாம்பை பார்க்கிறீர்கள். நிழற்படம் ஏதுமில்லை. கயிற்றை பாம்பாகப் பார்க்க முயல்கிறீர்கள் என்பதல்ல. பாம்பு உங்களுக்கு மிகவும் உண்மையானது; ஒரு உண்மையான பாம்பு இருப்பதைப் போன்ற பயம்! உண்மையில் அது ஒரு கயிறு என்ற விழிப்புணர்வு இல்லை. பாம்பு பாரத்தவனுக்கு ஒரு தனிப்பட்ட உண்மை (subjective reality); அது உண்மையானது (வெளிப்படையாக) இல்லாவிட்டாலும், பயத்தின்அனுபவம் உண்மையானது மற்றும் நியாயமானது.

அதுபோல, நாம் உலகைப் பார்க்கும்போது, உண்மையில் ஒரு உலகத்தை”வெளியே” பார்க்கிறோம் – அது, ஒதுக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் உத்தரவுகளால் செயல்படுகிறது. உலகின் செயல்பாடுகள், அவைகளின் அனுபவத்திற்கான நம் எதிர்வினைகள், நமது கவலைகள், துன்பங்கள், இன்பங்கள், விருப்பு வெறுப்புகள்… அனைத்தும் நியாயமானவை மற்றும் உண்மையானவை.

4: கயிறு முற்றிலும் உண்மையானது.

முற்றிலும் உண்மை என்றால் எப்போதும் உண்மையானது. நமது மருண்ட பார்வைக்கு முன்பும், மருண்ட பார்வையின்போதும், ஒளியினால் மருவு கலைந்தபின்னும் அந்த கயிறின் இருப்பு மறுக்கமுடியாத உண்மை. எந்திலையிலும் அது கயிறுதான்.  எனவே கயிறு எப்பொழுதும் அதன் கயிற்றின் தன்மையை தக்க வைத்துக் கொள்கிறது. நமது மருவு கயிறின் கயிற்றுத் தன்மையை மாற்ற இயலாது.  கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் நம் அனுபவங்களால் கயிறு பாதிக்கப்படாமல், நாம் காணும் பாம்பிற்கு ஆதாரமாக இருக்கிறது.

நிலையான, மாறாத, அழியாத நீக்கமற நிறை பரம்பொருளை பிரம்மத்தை, வரையறுக்கப்பட்ட நிலையிலா, மாறும், அழியக்கூடிய உலகம் என்று நாம் தவறாகப் புரிந்து கொண்டாலும் – அந்த பிரம்மம் எனும் பரம்பொருள் தீண்டப்படாமல் இருக்கிறது, உலகத்தின் பண்புகளை ஒருபோதும் அது பெறுவதில்லை. எனினும் உலகத்தின் ஆதாரமாக இருக்கிறது. அது தான் அறுதி உண்மை (ultimate reality).

5: ஒப்பீட்டளவில் பாம்பு வெளிப்படையான உண்மையானது.

பாம்பு முற்றிலும் உண்மையானது அல்ல,  நிபந்தனைக்குட்பட்ட உண்மை. என்ன நிபந்தனை? மருவின் தொடர்ச்சி எனும் நிபந்தனை. மருவு தொடர்ந்து இருக்கும் வரை, பாம்பு உண்மை.  பாம்பு முற்றிலும் உண்மையற்றது என்று நாம் கூற முடியாது – ஏனென்றால் மருவின் போது, நாம் பார்ப்பது ஒரு பாம்புதான். இது ஒருவித யதார்த்தத்தைக் கொண்டுள்ளது. ஆனால் பாம்பு முற்றிலும் உண்மையானது என்று நாம் கூற முடியாது – ஏனென்றால் அந்த மருவு நடந்த இடத்தில் – பாம்பு இல்லை, ஒரு கயிறு மட்டுமே உள்ளது! மேலும், அந்த மருவு  நீங்கியதும், நாம் பாம்பைப் பார்க்க மாட்டோம். இன்னும் சொல்லப்போனால் பாம்பை நாம் பார்க்க முடியாது.  அந்த பாம்பு வெளிப்படுத்திய பார்வை, ஒலி, ஸ்பரிச உணர்வு, வாசனை இவை அனைத்தும் போய்விட்டன.  ஆக, பாம்பின் முழுமையான நிலையை சொற்களில் வெளிப்படுத்த முடியாது. இருப்பினும் தொடர்புநிலையில் சொற்களைப் பயன்படுத்தி – பாம்பு நிபந்தனையுடன் உண்மையானது என்று கூறப்படுகிறது. அதேசமயம் கயிறு முற்றிலும் உண்மையானது.

உலகம் ஒரு முழுமையான யதார்த்தம் இல்லை, ஆனால் அது தொடர்பு நிலையில், மாயாவின் நிபந்தனையின் கீழ் வெளிப்படையான உண்மையானது. உலகம் தற்போதைக்கு உண்மையானது, ஆனால் சுய அறிவு உதயமாகும்போது மறைந்துவிடும். ஆனால் பரம்பொருள்  என்றுமே எந்நிலையிலுமே முற்றிலும் உண்மையானது.

6: கயிற்றின் இருப்பு (existence), தோன்றும் பாம்பின் இருப்பை பிரதிபலிக்கிறது.

பின்னர் பாம்பின் குணங்கள் (தோற்றத்தில்) அந்த இருப்பில் (சத்) அடுக்கப்பட்டது போல தோன்றுகின்றது. எனவே தோற்றம் என்பது கயிற்றின் இருப்பு மற்றும் பாம்பின் குணங்களின் கலவையாகும். கயிறு இல்லை என்றால், பாம்பு தோன்றாது. தொடங்குவதற்கு ஏதாவது இருப்பதால் மட்டுமே பாம்பின் தோற்றம் சாத்தியமாகும். எனவே பாம்பின் இருப்பு, உண்மையில், கயிற்றின் இருப்பு. அந்த மருவு மேவிய இடத்தில் பாம்பு இல்லை. இறுதியில் கயிறு மட்டுமே உள்ளது. இருப்பினும் ஒருவர் பாம்பைப் பார்க்கிறார், அதாவது கயிற்றின் சாரம் (கயிற்றுத்தன்மை) மறைக்கப்பட்டிருப்பதால், பாம்பின் குணங்களை அனுமானிக்க வழிசெய்கிறது. எனவே பாம்பின் குணங்கள் கயிற்றின் இருப்பில் கற்பிக்கப்படுகின்றன. இது மாயையை சாத்தியமாக்குகிறது.

உலகத்தின் இருப்பு கடன் வாங்கப்பட்ட இருப்பு, அது ஆத்மாவினுடையது (அதாவது பரம்பொருளுடையது). உலகத்தின் குணங்கள் (உலகம், மேகம், மரம், கல், மழை, நுண்குருத்து (இழைமணி) , எண்ணம் போன்றவை) பிரம்மனின் இருப்பில் கற்பிக்கப்படுகின்றன.

இந்த கண்ணோட்டம் நாம் பரிவர்த்தனை செய்யும் உலகின் வெளிப்படையான யதார்த்தத்தைக் (transactional reality) கொண்டுவருகிறது.

7:  பாம்பைப் பார்த்தவுடன், பார்க்கும் வரை, ஏதாவது ஒரு வழியில் எதிர்வினையாற்றுவோம்.

பயம், கூவுதல்,  ஓடுவது…. எதைச் செய்தாலும்  அனைத்துச் செயலும் பாம்பு இருப்பதை ஒப்புக்கொள்வதைக் குறிக்கிறது. பாம்பாட்டி.ஆக இருந்தாலும்கூட பாம்புகளைப் பற்றிய பரிச்சயத்தால், அலட்சியமாக நடந்து கொண்டாலும் அந்த அலட்சியம் கூட பாம்பின்உண்மையான அங்கீகாரத்தின் எதிர்வினையாகும்.

நாம் உலகத்தை நுகரும் வரை, நாம் உலகத்து வழிகளில் எதிர்வினையாற்றப்போகிறோம். வெவ்வேறு விஷயங்களுக்கான நமது எதிர்வினைகள், நிச்சயமாக, பரிநாமமாகலாம். ஆனால் பொறி புலன் (பார்வை, ஒலி, வாசனை, தொடுதல், சுவை)  பற்றிய நமது நுகர்தல் செயல்படும் வரை – உலகியல் / மாயாவின் ஒரு குறிப்பிட்ட மயக்கம் இருக்கும்.

8: தவறை முடிவுக்குக் கொண்டுவர, தெளிவாகப் பார்ப்பது மட்டுமே அவசியம்.

வேறு எதையும் குறிப்பாகச் செய்வது தேவையற்றது: பார்ப்பதில் தெளிவு இல்லாததால் தவறு ஏற்படுகிறது. எனவே தவறை நீக்குவதற்குத் தேவையான ஒரே காரணி தெளிவாகப் பார்ப்பதுதான்.

வேறு எதையும் செய்வது, எப்படியாவது இன்னும் தெளிவாகப் பார்க்க உதவியாக இருந்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, நிதானமாக ஆழ்ந்து சுவாசிப்பது, பகுத்தறிவுடன் சிந்திப்பது, பின்னர் ஒருவரின்அமைதியான உடல்-மனதைப் பயன்படுத்தி பாம்பின் உண்மை குறித்து கேள்வி எழுப்புவது போன்ற செயல்கள், நாம் கண்ட பாம்பிடமிருந்து தப்பி ஓட உதவாது. பார்வையின் தெளிவைக் கொண்டுவரும் அறிவு மட்டுமே வேலை செய்யும்.

மாயாவை அகற்ற, உடலால் புரியும் எந்த வினைகளும், செயல்களும், நடவடிக்கையும் தேவையில்லை. நம்மைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் நாம்கொண்டிருக்கும் மருவினை அகற்றுவது சொல்லாலோ, உடலாலோ அல்ல. ஆத்ம ஞானம் ஒன்றே தேவை. அதைப்பெற உதவிடும் எந்த வினைகளும், செயல்களும், நடவடிக்கையும் வரவேற்க வேண்டியது.

9: மருவினால் நமது தவறு தொடங்கும் போது, பாம்பின் அனைத்து தன்மைகளும் ஒரே நேரத்தில் தோன்றும்.

பாம்பின் வெவ்வேறு பண்புகள் படிப்படியாகத் தோன்றி, பின்னர் நாம் அதனை இணைப்பதில்லை. பாம்பின் அனைத்து வரையறுக்கும் குணங்கள், அனைத்து பொருத்தமான பண்புகள் கொண்ட முழு பாம்பு ஒரே நேரத்தில் தோன்றும். அதேபோல, தவறை உணர்ந்தால், உடனே கயிற்றை சிக்கென “பிடிப்போம “. அதாவது, பாம்பின் வெவ்வேறு பாகங்கள்/பண்புகளுடன் தொடர்புடைய நம்மருவு (தவறுகள்) ஒவ்வொன்றாகச் செல்வது அல்ல. பாம்பு முழுவதும் (அதன் எல்லையற்ற குணங்களுடன்) ஒரேயடியாக வெளியேறுகிறது.

உலகங்கள் மற்றும் உயிரினங்கள், அவற்றின் தனிப்பட்ட எல்லையற்ற பண்புகள் – அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றும்.

முதலில் வந்தது நேரம், வெளி. தொடர்ந்து 5 மீதமுள்ள கூறுகள். பின்னர் நெபுலாக்கள், பின்னர் நட்சத்திரங்கள், பின்னர் கிரகங்கள் போன்றவை என்றெல்லாம் ஒருவர் சொல்லலாம். மனித மனதைத் தாண்டிய பரந்த தன்மையைப் புரிந்துகொள்ள வரையறுக்கப்பட்ட மனதுக்கு மட்டுமே இந்த விளக்கம் உதவும். உண்மையில், அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றும். அது வெளிப்படையாக வராமல் இருக்கலாம். மாறாக அது விதையில் மறைந்த மரமென சாத்திய நிலையில்  இருக்கும். காலப்போக்கில் அது வெளிப்படும். எனவே, அது வெளிப்படையாகவோ அல்லது வெளிப்படுத்தப்படாததாகவோ இருந்தாலும், ஆரம்பமில்லாத தொடக்கத்தில் இருந்து, அது ஒரே நேரத்தில் தோன்றியது.

ஆத்ம ஞானத்தால் மாயை மறையும்போது, அதன் பல படைப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் மறைந்துவிடும். ஒரு ஜீவன்முக்தாவிற்கு (இவ்வாழ்விலேயே விடுதலை பெற்றவர்) – உலகம் நிச்சயமாக உடல் ரீதியாக மறைந்துவிடாது. இருமையின் தோற்றம் இன்னும் தொடர்கிறது. இருப்பினும், உலகம் உறுதியாகவும் சந்தேகமின்றியும் ஒரே பிரம்மம் என்று புரிந்துகொள்ளப்படுகிறது.

10: பாம்பு கரைந்தவுடன் வேறு எந்த பிரச்சனையும் இல்லை.

பிரகாசமான கை விளக்கு எரிந்ததும், பாம்பைப் பார்க்கும் உங்கள் பயம்-அனுபவம் உடனே போய்விடும் என்பது அல்ல. உண்மையில் பயம் சிறிது நேரம் நீடிக்கும் – உடலின் இரசாயன மாற்றங்கள் மற்றும் பாம்புப்பற்றிய எண்ணங்கள் மனதில் மறைந்துபோகும் போது சில பதிவுகளை விட்டுச்செல்லும். எனவே பாம்பு கரைந்து விடும் என்பதே சரியான சொற்றொடர். சிறிது நேரமெடுத்தாலும் கவலைகள் மறைகின்றன. இதானால்தான் பாம்பு மறைகிறது என்பதைவிட கரைகிறது என்கிறோம்.

அதேபோல், ஆத்ம ஞானத்தால் நாம் வீடுபேறு பெற்ற நிலையில் நமது ஆன்மீக அறியாமை அழிக்கப்படும்போது, உலகப் பிரச்சனைக்கு தீர்வுகாணப்படுவதில்லை. மாறாக உலகமே வெவ்வேறு உணர்வு/உணர்ச்சியற்றபொருள்களின் உலகமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. தவறான பார்வையின்அடிப்படையில் கண்ட உலகம் கரைந்துவிட்டது. எனவே உலகை முற்றிலும் முழு உண்மையாக காண்பதன் மூலம், இனி எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவேண்டிய அவசியமில்லை. வீடுபேறு அடைந்து தான், பிரச்சனைகளை விடுவிக்கின்றோம் என்று ஏதுமில்லை.அதற்குப் பதிலாக, விடுதலை பெற்றவர், தொடங்குவதற்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை என்பதை புரிந்துகொள்கிறார்.

11: பாம்பையும் கயிற்றையும் ஒன்றாகப் பார்க்கவே முடியாது:

ஒன்று நாம் பாம்பைப் பார்க்கிறோம், அல்லது கயிற்றைப் பார்க்கிறோம். அவற்றை நாம் ஒருபோதும் சமமாக உண்மையாகப் பார்க்க முடியாது. தவறு நீங்கிவிட்டால், பாம்பின் உண்மையும் போய்விடும்.கயிறு எப்படி பாம்பாக இருந்தது என்பதை ஒருவர் இன்னும் பார்க்க முயற்சி செய்யலாம். எனினும் விசாரணையில் எந்த மாற்றமும் இருக்காது. ஏனெனில் அடைந்த அறிவு முழுமையானது.

அதே போல, பிரம்மமும் உலகமும் ஒரே சமயத்தில் சமமாக இருக்க முடியாது. உலகக் கண்ணோட்டம் உண்மையானதாகத் தோன்றும் வரை, பிரம்மம் உண்மையானதாக இருக்க முடியாது. உலகம் தெரிந்தால், ஒருவர் உண்மையாக விடுதலை பெறவில்லை; புத்தியின்வழி, அறிவுபூர்வமாக மட்டுமே பெற்றுள்ளார்.  ஒரு ஜீவன் முக்திக்கு பிரம்மம் மட்டுமே உண்மையானது; உலகின் உறுதியான உண்மை, என்றென்றும் இல்லாமல் போய்விட்டது.

முடிவுரை

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவெனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபாடுற்ற வீக்கம்
கலங்குவதெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவில்லேந்தி
இலங்கையில் பொருதாரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்.

கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் வருகிற ஒரு பாடல் இது. இந்தஉருவகத்தை தழுவியது. ஒரு பூமாலையைப் பார்த்தால் சட்டென்று பாம்பு போல் தோன்றிவிடுகிறது. அதே மாதிரிதான் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்து பிரபஞ்சம் என்னும் மாயத் தோற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. யாரைக் கண்டால் இந்தமாயை விலகும்? பாம்பல்ல, மாலையுமல்ல, பரம்பொருள் என்பதை எவன் உணரவைப்பானோ, அவனே வேதங்களின் சாரமான ராமன்.

இது என்ன? ஒருமையை விளக்கும் முடிவில், இருமையை ராமனாக எடுத்துக்காட்டுகிறாயே என வினவலாம்.

“நீங்கள் கயிற்றைப் பார்க்கும்போது, கயிறு உண்மையில் ஒரு மாயை அல்ல என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒருவேளை பாம்பு முழு உண்மையாகஇருக்கலாம். நீங்கள் நிஜத்தைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள், திடீரென்று கயிற்றின் மாயையைப் பார்க்க ஆரம்பித்தீர்கள். உங்கள் பயம் மறைந்துவிட்டது, மாறாக தவறாக.

இந்த சிந்தனையை எப்படி மறுக்க முடியும்?” இப்படியும் ஒருவர் இந்த உருவகத்தைப்பற்றி கேட்கலாம்.

பாம்பு-கயிறு உருவகம், ஆத்ம ஞான விசாரணைக்கான வழிமுறைகளில் ஒன்று.  இது அறிவார்ந்த விவாதத்திற்காக அல்ல.  இது ஒரு தனிப்பட்ட சுய விசாரணை. மற்ற உருவகங்களப் போல இதுவும் ஒரு வரையறுக்கப்பட்ட குறிக்கோளைக் கொண்டது; எனவே கேள்விக்கு உட்பட்டது. மேலே உள்ள சந்தேகங்கள் ஒவ்வொரு உதாரணத்தையும் எவ்வாறு நிராகரிக்கமுடியும் என்பதை நிரூபிக்கிறது. அதனால்தான், ஒரு தகுதிவாய்ந்த மாணவர், உருவகத்தைப் பற்றி விசாரிப்பதில் உள்ள நுட்பமான வித்தியாசத்தை அறிவர். உருவகத்தினால் அறிய உதவுகிறதா என்று விசாரிப்பர்,  உருவகத்தின் செல்லுபடியை கேள்விக்குட்படுத்தும் விசாரிப்புகளை தவிர்ப்பர்.

பின்குறிப்பு

இந்த உருவகம் அஷ்டாவக்ர கீதையில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அஷ்டாவக்ர கீதையின் விளக்கவுரைகளை அறிய கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும்.

https://soundar53.substack.com/s/ashtavakra-gita

அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும்.

https://www.amazon.com/s?i=stripbooks&rh=p_27%3AP.+Soundara+Rajan&s=relevancerank&text=P.+Soundara+Rajan&ref=dp_byline_sr_book_1

https://notionpress.com/author/374389

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

இறைவனின் திருவடி – ஒரு கண்ணோக்கம்

முன்னுரை

பக்தி என்பது ஒரு உணர்வு. பக்தி என்ற உணர்வு ஒன்றே; இந்த உணர்வில் பல வகைகள் இல்லை. இந்த ஒரே உணர்வினை வெளிப்படுத்தும் வகைகள் மட்டுமே வேறு. நவபக்தி என்பது பக்தியின் ஒன்பது வழிகள். ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத ஸேவநம், அர்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதநம்.

1. ஸ்ரவணம் – இறைவனுடைய நாமங்களையும், அவனுடைய கல்யாண குணங்களையும் கேட்பது.

2. கீர்த்தனம் – பகவானின் பெருமைகளைப் பேசுவது.

3. ஸ்மரணம் – எப்பொழுதும் இறைவனை நினைவது.

4. பாத ஸேவனம் – இறைவன் திருவடிகளை வணங்குவது.

5. வந்தனம் – பகவானை வணங்குவது, அவனைப் போற்றுவது.

6. அர்ச்சனம் – இறைவனுக்கு மலர்களையும், கனிகளையும் கொடுத்து மகிழ்வது.

7. தாஸ்யம் – பகவானின் வேலைக்காரனாக நடந்து கொள்வது.

8. ஸக்யம் – ஆண்டவனிடம் நட்பு கொள்வது.

9. ஆத்ம நிவேதனம் – ஆண்டவனிடம் ஆத்மாவை ஒப்படைப்பது

இந்த ஒன்பது வகையான வெளிப்பாடுகளில் ஒன்று இறைவன் தாழ் பணிதல். குருநாதர் ஓம்காரனந்த ஸ்வாமிகளின் அருளுரைகளிலிருந்து அடியேன் அறிந்ததை இப்போது காண்போம்.

தாள் பணிதல்

நம்மில் பெரும்பாலோர்க்கு ஆண்டவனின் வழிபாடு என்பதே அடி பணிதலில் தான் தொடங்குகிறது. அதனால் தான் ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று திருவாசகம் குறிப்பிடுகிறது. திருவள்ளுவர், கடவுள் வாழ்த்திலுள்ள பத்து குறள்களில் ஏழு குறள்களில் இறைவனின் தாழ், அடி வணங்குவதைக் குறிப்பிடுகிறார். அனைவரும் தேடும் அடைக்கலம் இறைவனின் பாதங்களே.

நாம ரூபமுடைய ஒவ்வொரு இறைவனுக்கும் கரங்கள் பல இருந்தாலும் கூட, கால்கள் மட்டும் இரண்டுதான். காரணம் அடியவர்கள் அப்பொழுது தான் பற்றிக் கொள்ள இயலும். நமக்கெல்லாம் கரங்கள் இரண்டு தான் உள்ளது, வலது கரம்,இடது கரம். எண்ணற்ற கால்கள் இறைவனுக்கு இருந்தால், இந்த இரண்டு கரங்களால் எப்படிப் பற்றிக் கொள்ள இயலும் என்பதால் தான்,கால்கள் இரண்டாகவும், கைகள் அள்ளிக் கொடுப்பதற்கு பலவாகவும் இருக்கின்றது என்பதை நாம் உணரலாம்.

இறைவனின் திருவடிகளை தாமரை மலருக்கு ஒப்பிடுகிறது மறைகள்.

“ஆண்டவரே, உமது இரண்டு தாமரை பாதங்களும் இலையுதிர் காலத்தில் வளரும் தாமரை மலரின் இரண்டு மலர்ந்த இதழ்கள் போல் தோன்றும் அளவுக்கு அழகாக இருக்கின்றன. உண்மையில், உனது தாமரை பாதங்களின் நகங்கள் ஒரு பெரிய பிரகாசத்தை வெளிப்படுத்துகின்றன”

என்கிறது ஶ்ரீமத் பாகவதம் (4.24.52).

அவன் தாளை, அதாவது இறைவனின் திருவடியைப் பணிவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கும் ஆண்டவனின் அருள் வேண்டும் என்று அழகாகக் குறிப்பிட்டுள்ளனர் ஞானிகள்.

திருவடி பணிவதன் பலன்

இறைவன் திருவடிதனைப் பணிவதனால், என்ன பலன் என்ற கேள்வி எழலாம். இதற்கு விடைகள் ஏராளமாக உள்ளன நமது மறைகளில்.

1. “இறைவா! உன் திருவடி நகங்களின் ஒளி, ஒரு வரையறுக்கப்பட்ட ஆத்மாவின் இதயத்தில் உள்ள அனைத்து இருளையும் உடனடியாக அகற்றுகின்றன. என் அன்பான இறைவா, ஒரு பக்தனின் இதயத்தில் உள்ள எல்லா வகையான இருளையும் எப்போதும் அகற்றும் உனது அந்த வடிவத்தை எனக்குக் காட்டுவாயாக. என் அன்பான ஆண்டவரே, நீங்கள் அனைவருக்கும் உயர்ந்த ஆன்மீக குரு; எனவே அறியாமையின் இருளால் மூடப்பட்டிருக்கும் அனைத்து ஆன்மாக்களும் ஆன்மீக குருவாகிய உன்னால் ஞானம் பெற முடியும்” என்கிறது ஶ்ரீமத் பாகவதம் (4.24.52).

2. இறைவனின் திருவடி என்ன செய்யும்,என்பதை அருணகிரிநாதர் தெளிவாகக் கூறியிருக்கிறார். ‘நாளென் செய்யும்! வினைதான் என்செய்யும்! எனை நாடி வந்த கோள் என் செய்யும்!’……‘இங்கு என் தலைமேல் நின் கால்பட்டு அழிந்தது அயன் கையெழுத்தே’ என்பது கந்தர் அலங்காரப் பாடல். எனவே இறைவனின் திருவடியானது நம் விதியை மாற்றவல்லது.

3. பெருமாள் கோவிலுக்குச் சென்றால் நம் திருவடிச் சின்னமான சடாரி வைக்கப்படுவது, நம் தலையெழுத்து சிறப்பாக அமைய வேண்டும் என்பதால் தான்.

4. நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்று இறைவனது திருவடியைப் பணிவதில் ஒரு தத்துவம் உள்ளது. வாழ்வில் ஒவ்வொருவரும் பெரியவர்களுக்கும், குருவாக விளங்கும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கீழ்படிதல் வேண்டும் என்ற ஒப்பற்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகத் தான் திருவடி வழிபாடு உருவாக்கப்பட்டது என்பர் ஞானியர்.

5. திருவடிகளைப் பற்றினால் காலனைக் கூட வெல்ல முடியும். இதற்கு திருக்கடையூர் வரலாறு சாட்சி கூறுகிறது. மார்க்கண்டேயனின் உயிரை எடுப்பதற்கு பாசக்கயிற்றை வீசினான் காலன். மார்க்கண்டேயன் அலறி ஓடி சிவலிங்கத்தை இறுக்கக் கட்டிக் கொண்டான். எமதர்மனால் வீசப்பட்ட பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. லிங்கத்தில் இருந்து சிவபெருமான் வெளிப்பட்டார். காலனைத் தன் காலால் உதைத்தார்.எம தர்மன் இறைவனைப் பணிந்து மார்க்கண்டேயனுக்கு விதி விலக்கு அளித்தது உலகறிந்த உண்மையல்லவா!!

6. ஜோதி வடிவான ஆதிப் பரம்பொருளாகிய ஈசனின் அடி முடி காண, மாலும் அயனும் முயன்றனர்.திருவடி தேடிச் சென்றவர் திருமால், திருமுடி தேடிச் சென்றவர் பிரம்மன்.

இறைவனின் திருவடியை முதலில் பணிந்தால் நம் மனதில் பக்குவம் ஏற்படும். நாம் தலையைக் குனிந்து வழிபட்டால் திருவடி தெரியும். அகக்கண் திறந்து அனைத்தும் வளமாக வேண்டுமானால் இறைவனின் இணையடிகளைப் பார்த்து வழிபாடு செய்வது அவசியமாகும். இறைவனின் திருவடிகள் அறிவைக் (ஞானம்) குறிக்கின்றன. அறிவு உள்ள இடத்தில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.

திருவடிகளும் மெய்ப்பொருள் ஞானமும்

பொதுவாக, இறைவனின் கமலப்பாதங்கள் இரண்டினைப் பற்ற, உடல், வாக்கு, மனம் வழி நாம் புரியும் வழிபாட்டுச் செயல்கள்களால் நமக்கு வரும்/கிடைக்கும் பலன்களை, ஒவ்வொரு திருவடியின் அருள் என எடுத்துக் கொண்டால், அவைகளை இங்கனம் பிரித்துப் பார்க்கலாம்:

இடது திருவடி குறிப்பது

1. அபர ஞானம்

2. கர்ம காண்ட ஞானம்

3. உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது

4. சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)

வலது திருவடி குறிப்பது

1. பர ஞானம்

2. ஞான காண்ட ஞானம்

3. உண்மையை உணர்த்துவது

4. யோகம்(உள்ளத்தால்), ஞானம்

பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.

அந்த நாளும் வந்திடாதோ

மெய்யறிவு மாணவனின் ஏக்கம்

அறியாமைக் காட்டதனில் தனியாகத் திரிந்தலைந்த என்னை,

நெறியுடன் வாழ வல்லமைதந்திட்ட என் தாய் தந்தையரின்

பெருந்தவத்தால் புவிதனில் பொருள் புகழ் பெருமை பெற்றிடினும்,

சிறியோன் என் சிந்தனையில் சிறிதேனுமில்லை மறைஞானம்!!

திரையதனில் தோன்றும் வண்ணமாயையே வாழ்வென அறிந்து,

நரைமுடியும் விழுதருணம் விழைகிறேன் நான்மறை கூறும்

சச்சிதானந்த மெய்ப்பொருளை அறியும்  வேதாந்த வழிதனை!

நடவினையின் ஆட்சிதனை தடை செய்ய இயலுமோ தரணியிலே!!

தூயஇருப்பெனும் அறிவான அனந்தமே அறுதி உண்மையென

மருவேதுமின்றி எதிர்மறை மொழியில் உரைத்தன நான்மறைகள்!

இருப்பெனும் அறிவானந்தமே அறுதி உண்மையெனின், இந்த

இறைவன் எங்கிருந்து வந்தான் இடைச்சாதி நானென்று ?

பொறிபுலன்களை புறம் நோக்கிப் படைத்து, கண்ணிமைக்கும்

நொடிப் பொழுதில் காதம்பல கடந்திடும் மனம் கொடுத்து,

பொருள் நிறை அண்டம்தனை சார்ந்திராதே பற்றுடனே என

சாரதியாய் அவன் வந்து சாத்திரம் சொல்வது சரிதானோ ?

சிறியோன் என் சிந்தையுதி இச்சிதறல்களைச் சீரழித்து, என்

மனதினிலந்த  உண்மைதனை உணர்த்திட, அண்ட பிண்டத்தில்

மாயக்காட்சிகள் நடத்திடும் மாயோனான அந்த இறையே,

ஆத்மா எனும் நான் என்ற மறை மொழியை உள்ளாய்ந்தால்,

சிறுவித்து ஒன்றில் பெருந்தருவை மறைத்துப் பின் சிறப்பித்து,

சிலந்தி வலை வழியே அண்டப் பரிமாண தத்துவத்தை விவரித்து

அலங்கலில் தோன்றும் அரவு கொண்டு ஐம்பெரும் பூதம் விளக்கி

அலங்காரப் பொன் நகைகளில் அடிப்படைக் காரணம் சொல்லி,

கார் இருள் நிறை கருவறை கிழித்து தாய்க்கு வலிதந்து

பாரினில் எனை இறக்கிப் பின் காலன் வரும் நேரமதில்

பாசஉறவுகளுக்கு வலிதந்து காலிலா கட்டிலில் செலுத்தி

நாடகமிப்படி நடத்திடும் மாயோனே அந்த நான் அன்றோ!!

அலங்கலான அந்த நான் யாரென்றறியா அரவே இந்த நான்!

நிழலை நிஜமென இறுகப் பற்றிடும் மருவுநாயகன் இந்த நான்!

பற்றுதல் பலவிதம் ஒவ்வொன்றும் தனிப்பட்ட அமைச்சகம்! அப்

பற்று அமைச்சரவையின் பிரதமரே அறியாமையாம் இந்த நான்!!

நீரினைப் இறுகப்பற்றினால் குளத்திலே நீந்த இயலாது - எனினும்

பிறவிப் பெருங்கடல் நீந்திட இறுகப்பற்றுவது இவ்வுடலையன்றோ !

சிறுவித்து ஒன்றைப் பெருந்தருவாய் சிறப்பிக்கும் அந்த நான்

சிரித்திட்டேன் விந்தையுடன் இந்த நான்தனின் மடமை கண்டு!!

ஆதிஅந்தமிலா பரமனுரையாம் மறையோதும் வேதவிற்பன்னரும்

காயமே பொய்யதனால் காண்பாய் உனையெனும் ஞானியும்

கருமமே கண்ணென மெய்வருத்தி வாழ்ந்திடும் யோகியும் கூறிடும்

காலத்தால் அழியா வாழ்வியல் உண்மையன்றோ அந்த நான்!!

அந்த நாளும் வந்திடாதோ அந்த நானை இந்த நான் அறிந்திட!!

பகவத் கீதை ஸ்லோகம் 2.22- மரணம் – பழையன கழிதலும் புதியன புகுதலும்

முகவுரை


ந‌ன்னூ‌ல் எ‌ன்ற இல‌க்கண நூ‌லி‌ன் சொ‌ல் அ‌திகார‌த்‌தி‌ல் உ‌ள்ள “பழையன க‌ழிதலு‌ம் பு‌தியன புகுத‌லு‌ம் வழுவல கால வகை‌யி னானே” எ‌ன்ற தொட‌ர், வழ‌க்‌கிழ‌ந்த இல‌க்கண‌க் கரு‌த்து‌க்களை ‌நீ‌க்குவது‌ம், புதிய வழ‌க்குகளை ஏ‌ற்பது‌ம் தவ‌றி‌ல்லை எ‌ன்‌பதைக் குறிப்பது. அதாவது,
இல‌க்கண‌ம் கால‌‌ந்தோறு‌ம் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌த்‌தி‌ற்கு உ‌ட்ப‌ட்டது எனக் கூறு‌கிறது.  

வீட்டில் உள்ள பயனற்ற பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதுவே இதன் அடிப்படைத் தத்துவம்.

சரி, பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலில் வரும் ஒரு தத்துவத்திற்கும், போகிப் பண்டிகைக்கும், பகவத்கீதைக்கும் என்ன சம்பந்தம்? அதாவது, பழையனவற்றைக் கழித்தலுக்கும், புதியனவற்னை புகுத்தலுக்கும், பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு? போர்க்களத்தில் பார்த்தனுக்கு, சாரதியான கண்ணன் இதைப்பற்றி என்ன அறிவுரை வழங்கினான்?

வாருங்கள், ஒரு முக்கியமான ஸ்லோகத்தை அறிய முற்படுவோம்.

ஸமஸ்க்ருத ஸ்லோகம்

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா2 விஹாய
நவாநி க்3ருஹ்ணாதி நரோபராணி!

ததா2 ஸரீராணி விஹாய ஜீர்ணா
ந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே3ஹீ!!

பகவத் கீதை 2.22

பொருள் விளக்கம்

தொப்புள் கொடி உறவாக தொடங்கிய நாம், முதலில் நம்மை நமது உடலுடன் பிண்ணி இணைக்கிறோம். இது இயல்பு. பின் வளர்ச்சியின் அங்கமாக அது படிப்படியாக உறுதியாகி, உடலே உயிர் எனும் உணர்வினை அடைகிறோம். அதனை வளர்க்க, மெருகுபடுத்த, காக்க, விதவிதமான பொருள், செயல்முறை என்று பலவற்றை உபயோகப்படுத்துகிறோம்.

காலன் விதித்திட்ட வேளை வந்தால் செத்து மடிகிறோம். நாம் இவ்வுலகில் வந்திறங்கியது எதற்காக, வந்து புரிந்தது என்ன என்று அறியாமல்கூட செல்கிறோம். இருக்கும் போது, நாம் இருக்கும் காயம் ஒரு பொய்; இந்த யாக்கை நிலையாதது என்று நொடிப்பொழுதும் உள்நோக்கி ஆய்ந்ததில்லை. இதுதான் யதார்த்தம். மரணம் என்பது ஒரு கசப்பான உண்மை என்பதை உணர மறுக்கிறோம். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ளத்தான் பகவான் கண்ணன் பார்த்தனுக்கு இந்த ஸ்லோகம் வழியாக அறிவுரை வழங்குகிறான்.

“எப்படி ஒரு மனிதன் நைந்து போன ஆடைகளை கழட்டிவிட்டு வேறு புதியவற்றை அணிந்து கொள்கிறானோ, அப்படியே தேஹத்தில் உறைபவன், நைந்து போன உடல்களை விட்டுவிட்டு வேறு புதியவற்றை அடைகிறான்”

என்று பகவான் ஶ்ரீக்ருஷ்ணர் மரணத்தைப் பற்றி கூறுகிறார்.

தாய், குழந்தைக்குப் பழைய அழுக்கான உடுப்பைக் கழட்டிவிட்டு புதியதை அணிவிக்கிறாள். அப்போது குழந்தை அழுகிறது. ஆனால் தாயார் குழந்தை அழுவதைப் பொருட்படுத்துவதில்லை. குழந்தைக்கு “ஹிதம்” (நன்மை) என்று, புதியதை மாற்றிக் கொடுக்கிறாள்.

அது போல, பகவானும் ஜீவனுக்கு ஹிதமாக அவன் அழுவதை கவனியாமல் அவன் உடலை மாற்றிக் கொடுக்கிறார். உடலுக்கு உடை ஆடை; உயிருக்கு உடல் ஆடை.

இதைப் புரிந்தவர் அழுவதில்லை; புரியாதவர் அழுகின்றனர். அதனால்தான் “செத்த பிணத்தைப் பார்த்து சாகாத பிணம் அழுகிறது” என்பர் ஞானியர்.

சொற்களின் உபயோகமும், அவைகளில் பதிந்துள்ள உட்கருத்துக்களும்ஒரு கண்ணோட்டம்

1. “ஜீர்ணாநி” என்பதற்கு நைந்து போனது என்ற பொருளாகும். இந்த சொல் துணிகளுக்குப் பொருந்தும். நைந்த உடலென்று பகவான் ஒப்பிடுவது, வயதாகித் தேய்ந்த (நலிந்த) உடலுக்குத்தான் மரணமெனும் உடை மாற்றத்தைக் குறிப்பதல்ல. சிறு வயதிலும் மரணமெய்தலாம். உடல் நலிவு என்பது, “ஆயுள் முடிந்தது” என்ற பொருளில் கூறப்படுவது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

2. உடையை மாற்றிக் கொள்பவன் ஒரே சமயத்தில் பல உடைகளை (உள்ளாடை, வேஷ்டி, சட்டை, அங்கவஸ்த்திரம் என) மாற்றிக் கொள்ளமுடியும். உயிரைப் (ஜீவாத்மாவைப்) பொருத்தவரை, ஒரே உடலைத்தானே மாற்ற இயலும் என்று இருக்கையிலே, “வாஸாம்ஸி”, “ஸரீராணி”, என்று பன்மையில் பகவான் கூறுவதன் உட்கருத்து என்ன என்பதை இருவகையில் ஆயவேண்டும்:

• ஜீவன் இதுவரை எவ்வளவு உடல்களை விட்டுப் புதிய உடல்களை அடைந்திருக்கிறதோ, அவற்றுக்குக் கணக்கு கிடையாது. வரும் காலத்திலும், ப்ரம்ம ஞானமெனும் ஆத்ம ஞானம் கிட்டும்வரை, இன்னும் எத்தனைப் பழைய உடல்களைவிட்டுப் புதிய உடல்களை அடையப் போகிறது என்பதும் தெரியாது. எனவே சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

• ஸ்தூலம், ஸூக்‌ஷ்மம், காரணம் என்று மூன்று உடல்கள் ஜீவனுக்கு உள்ளன. இந்த உடலுவிட்டு அடுத்த உடலை அடையும்போது, இந்த மூன்றும் மாறுகின்றன. ஸத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஒவ்வொருவருக்கும் குணமயமான, அவனுக்கே உரித்தான, தனித்தன்மையுடைய “வ்யஷ்டிப்ரக்ருதி” அமைகிறதே, அது காரண ஸரீரம். இதையே “ஸ்வபாவம்” என்பர். மனிதன் எப்படிச்செயல்படுகிறானோ, அதற்கு ஏற்றவாறு ஸ்வபாவம் மாறுகிறது. இந்த ஸ்வபாவத்திற்கு ஏற்றவாறுதான் உயிர் பிரியும்போது மனதில் எண்ணமும் உண்டாகிறது. அதன்படிதான் அவனுக்கு ஸூக்‌ஷ்ம ஸரீரம் அமைகிறது. காரணம், ஸூக்‌ஷ்மம் என்ற இரு ஸரீரங்களுடன் இந்த உடலை (ஸ்தூல ஸரீரத்தை) விட்டுப்பிரிந்த பின்னர், ஸூக்‌ஷ்மத்திற்கேற்றவாறு அடுத்த பிறவியில் ஸ்தூல ஸரீரத்தைப் பெற்று, காரண ஸரீரத்திற்கேற்றவாறு அடைந்த அந்த அடுத்த உடலில் அவனது ஸ்வபாவம் அமைகிறது. இப்படி மூவுடலும் மாறுவதால், சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

3. ஆத்மாவிற்கு அசைவில்லை, போக்குவரத்து இல்ல. எனவே ஜீவாத்மா எனும் “தேஹி” அடுத்த உடலைப் போய் சேர்கிறான் என்று சொல்வது எப்படி பொருந்தும் என்பதை இப்போது ஆய்வோம்.

உண்மையில் ஆத்மாவிற்கு அசைவில்லை, செயலில்லை, எந்த நிலையிலும் போக்குவரத்தும் இல்லை. ஆனால், ஒரு குடத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போகும்போது, அதற்குள் இருக்கும் ஆகாயம் போகவில்லையானாலும், குடத்துடன் சம்பந்தத்தால் அது போவதாக நினைக்கிறோம் அல்லவா!

அதுபோல, ஸூக்‌ஷ்ம ஸரீரம் போகும்போது, அத்துடன் இணைந்த ஆத்மாவும் போவதாகத் தெரிகிறது. இதை உலகத்தார்புரிந்து கொள்ளவே, உயிர் வந்து போவதாக கற்பனை செய்து கூறப்பட்டது. “தேஹீ” என்றால் சரீரத்தை உடையவன் என்று பொருள். தேஹத்தை உற்ற உயிர் என்பர். ஆகவே உடலின் சம்பந்தத்தால் அவனிடம் போக்குவரத்து என்ற தோற்றம் ஏற்படுகிறது.

இதனால்தான இந்த ஸ்லோகத்தில் துணியைப் பற்றிக் குறிப்பிடும்போது “க்ருஹ்ணாதி” (ஏற்பது) என்றும், உயிரைப் பற்றிக் கூறும்போது “ஸம்யாதி” (செல்லுதல்) என்ற சொல்லும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

3. “நர”, “தேஹி” என்ற சொற்களின் விளக்கம்

ஆடையை அணிவது, நைந்தது, துறப்பது என்பவைகள் எல்லாம் மனிதனுக்கே உரித்தானது. எனவே இந்த ஸ்லோகத்தில் முதல் சொற்றொடரில், மனிதனைக் குறிக்கும் “நர” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. உடல்களின் போக்குவரத்து என்பது, உடலபிமானமுடைய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். எனவே இரண்டாவது சொற்றொடரில் “தேஹி” என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்லோகத்தின் உட்கருத்து

ஆத்மா உடல் எடுப்பதில்லை, ஸூக்‌ஷும ஸரீரம் மட்டுமே உடல் எடுக்கிறது. ஸூக்‌ஷ்ம ஸரீரமே (mind) பயணிக்கிறது. தூய உணர்வாகிய நான் எங்கும் பயணிப்பதில்லை. நான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.

இறைவனும் ஆத்மாவும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவை. எனவே இறைவனும் ஆத்மாவும் ஒன்றே. இறைவனது உபாதியும், ஆத்மாவின் உபாதியும் வேறு. இறைவன் காரண உபாதியை உடையவர், ஆத்மா காரிய உபாதியை உடையது. காரணமும் காரியமும் மாயத்தோற்றங்களே. இருப்பது பரம்பொருள் ஒன்றே.

ஆத்மா எதையும் அனுபவிக்க வேண்டியதில்லை. அனுபவங்கள் அனைத்தும் மாயை. அனுபவிப்பவனைப் பற்றிய உண்மையே நமக்கு முக்தியை கொடுக்கும். எந்த அனுபவமும் மோக்‌ஷத்தை கொடுக்காது.

அனைத்து உயிர்களில் இருக்கும் ஆத்மா நானே என்கிறான் கண்ணன்.

இதுதான் இந்த ஸ்லோகத்தின் சாரம்.

இதனைத்தான் கவிஞர் கண்ணதாசன், காலத்தால் அழியாத அருமையான திரையிசைப் பாடலாக வடித்துள்ளார்.

பாடலைக் கேளுங்கள்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

Narayaneeyam Dasakam 5 – Cosmic Evolution – Part 4 – Destruction – The Pralaya

Word of Caution:

This write up below is definitely not an exhaustive description of what our scriptures talk about Pralaya. It is my very limited understanding of the vast literature available in public domain. The objective is to get a broad idea of the principles involved so that when we take up the study of our scriptures and Sanskrit Slokas, we will have a better comprehension of what they say.

Reader is strongly advised to strictly learn these under the guidance of a Guru, if one wants a deep dive in this subject.

Introduction

The concept of Pralaya or dissolution is intimately related with the concept of creation. Our scriptures say that the chain of creation and dissolution continues without break. After each creation, there is dissolution and after dissolution there is again new creation.Following the dissolution, there is a period of rest or interval, known as Pralaya. It's a period of non-existence where the universe remains dormant before the next cycle begins.

Each creation i.e., anything that has an “existence” goes through the dissolution process. The dissolution process is the reverse of the creation process. This means that all the creations at the gross level dissolves into the subtle level and the subtle into causal levels.

Therefore, in addition to the “kaala” or time and its breakdown which we saw in the earlier part, we should also understand what is getting dissolved, where is it getting dissolved and how often do they get dissolved. In other words, we should understand

1. The different forms of existence
2. the realms of existence
3. The cycles of dissolution

Forms of existence

In this universe, (universe included) there are sentient and insentient things that exist. 

Leaving the near infinite number of insentient and inert materials and their different forms aside, the Padma Purana discusses the number of different types of life-forms in the universe. According to the Padma Purana, there are 8,400,000 life-form species, 900,000 of which are aquatic ones; 2,000,000 are trees and plants; 1,100,000 are small living insects species; 1,000,000 are birds; 3,000,000 are beasts and reptiles; and 400,000 are mammal species.

Creation (srishti) and destruction (pralaya) is about all these forms of existence.

Realms of existence

Apart from the infinite time element, as one of the common causes for cosmic evolution, infinite space is to be understood in proper perspective. This is known as “loka” in our scriptures. The most common cosmological conception of lokas in the Veda was that of the trailokya or triple world: three worlds consisting of earth, atmosphere or sky, and heaven, making up the universe.

Hindu mythology defines fourteen worlds (not to be confused with planets) – seven higher worlds (heavens) and seven lower ones (underworlds). (The earth is considered the lowest of the seven higher worlds.) The higher worlds are the seven Vyahrtis (Heavens or Upper worlds) and seven Patalas (Hells or lower worlds).

The 14 Lokas are: (1) Satya (2) Tapa (2) Jana (4) Mahar (5) Svar (6) Bhuvar (7) Bhu (8) Atala (9) Vitala (10) Sutala (11) Talatala (12) Mahatala (13) Rasatala (14) Patala.

Time Cycles and kinds of Pralaya

Visnu Purana describes, four kinds of pralaya viz.,

Naimittika (occasional),
Prakrtika (elemental),
Atyantika (absolute) and
Nitya (perpetual)
All these are directly related to the life of Brahma, the God assigned the responsibility of creation.

(Readers may refer https://en.wikipedia.org/wiki/Hindu_units_of_time for a better understanding of the concept of time, life and life span as per Hinduism)

Naimittika Pralaya:

This Pralaya is also termed as the Brahma Pralaya. This Pralaya at the end of a kalpa or at the end of a day of Brahmas life - 4.32 Billion human calendar years);. After a kalpa, Naimittika pralaya occurs. It is also indicated in the Visnu Purana that this dissolution occurs only in the three lokas, i.e., Bhu, Bhuva and Sva.The Visnu Purana also gives a very fearful description of this dissolution.
Prakrtika Pralaya:

This Pralaya occurs when the whole Brahmanda dissolves in Prakrti. This pralaya occurs at the end of the life span of Brahma (100 years as per his calendar) , viz., at the end of Maha Kalpa - 311.04 Trillion years in human calendar (comprising of two paraardhaas of 155.52 Trillion years each).

At that time all the things of the world return to their causes. This dissolution takes place in the opposite order of their creation. Thus, the seven forms of Prakrti from Mahat to earth enter successively into their causes. The Egg of Brahma is dissolved in the waters that surround it with its seven lokas, seven oceans, seven islands and the mountains. Water is drunk up by fire; that of air absorbs the stratum of fire. Air is merged in ether and Bhutadi or Ahamkara devours the ether. Mahat again takes up Ahamkara. Then Prakrti absorbs Mahat and all these. Prakrti and Purusa also are dissolved into the Supreme Spirit. This is Prakrta Pralaya.
Atyantika Pralaya :

Absolute or final dissolution is attained by the knowledge of the Supreme. It is said that all beings are afflicted by three kinds of worldly pains, viz., adhyatmika, adhibhautika and adhidaivika. The Visnu Purana also describes these three types of pains. Adhyatmika is of two types - bodily and mental. That kind of evil, which is inflicted upon men by beasts, birds etc. are called Adhyatmika. Adhidaivika pain is the work of cold, heat, wind, rain, lightning and other atmospherical phenomena. These three types of afflictions are described in the Samkhya system also in the similar vein.

Only true knowledge about one self (atma vidya, brahma jnanam) can rescue men from these three kinds of affliction. When a man attains true, knowledge & detachment from human afflictions, he obtains final dissolution. In this pralaya, the yogis are merged in the Supreme Spirit.
Nitya Pralaya:

It is said that Nitya or perpetual dissolution is the constant disappearance of all living beings. Experts interpret this as the death of the living beings, which occurs constantly - “Nitya is the extinction of life, like the extinction of a lamp, in sleep at night”. Some Vedantists describe Nitya Pralaya as Susupti or deep sleep.

Conclusion

We have through a five part study tried to have an overview of the cosmic evolution as per the modern and Indian perspectives. This study was essential to appreciate Narayaneeyam Dasakam 5.
From the next blog we will start our study the Slokas of Dasakam 5.

God Bless

நாராயணீயம் தசகம் 5 – அண்டப் பரிணாமம் – ஆன்மீக கண்ணோட்டம் – பகுதி 4 – பிரளயம்

முக்கிய அறிவிப்பு

இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.

நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.

இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை அறிந்தது

பகுதி 1ல், "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் பரம்பொருள் தத்துவம் நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக தன்னை வெளிப்படுத்துகிறது என்று கூறியதை அறிந்தோம்.

பகுதி 2ல், படைப்பு என்பது பரம்பொருளின் இச்சையால் வெளிப்படுகிறது என்றும், அப்பரம்பொருளே படைப்பின் அறிவுக்காரணம் என்றும் அறிந்தோம். மேலும் பரம்பொருளைப் போல ஆதியும் அந்தமும் இல்லாமல் எனினும் பரம்பொருளைச் சார்ந்த சக்தியான மூலப்ரக்ருதி, அவ்யக்தா, மாயா, குணஸம்யா என்றெல்லாம் வடமொழியில் கூறப்படும் மாயையே படைப்பின் பொருட்காரணம் என்றும், அழியா இடம், அழியா காலம் இரண்டும் பொதுக்காரணமென்றும் கண்டோம். அந்த காலத்தின் கணக்கினை நான்முக கடவுளின் ஆயளுடன் இணத்ததையும் அறிந்தோம்.

மூன்றாவது பகுதியில் ஐவகை செறிவு எனும் பஞ்சீகரண செயல்முறை வழியாக அண்டப் பரிணாமத்தின் விவரங்களைக் கண்டோம்.

முடிவாக, இந்தப்பகுதியில் பிரளயம் எனும் கலப்பு தத்துவத்தை காண்போம்.

முகவுரை

“ஒன்றோடொன்றாகவே பற்றிலயமாம் போதினில்” என்று தாயுமானவர் கூற்றின்படி, லயம் என்ற சொல்லுக்கு, ஒன்றுடன் ஒன்றாக கலத்தல் என்ற பொருள் மிகவும் பொருத்தமானது. பலர் இச்சொல்லிற்கு அழிவு என்று பொருள் கொள்கின்றனர். அது ஒரு குறுகிய கண்ணோட்டம். முதற்பதிவல் கண்ட அடிப்படை கொள்கையை நினைவு கூறுக. உருவாக்குதல், அழித்தல் என்று ஒன்றுமில்லை; பரிணாமம் என்று வேறாக, மாறாக, மறைவிலிருந்து வெளிப்படுவதே உண்மை. 

பிரளயம் என்பது, பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கலப்பு என்ற பொருளை குறிக்கும் என்று கூறுகிறது என் சிற்றறிவு. .

நமது ஸனாதன தர்மத்தில், அண்டப் பரிணாமம், என்பது ஒரு சக்கர சுழல். தோன்றியது மறையும; மறைவது தோன்றும். இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும் காலச்சக்கர சுழற்சியின்படி. எதற்கெல்லாம் "இருப்பு" உள்ளதோ அதற்கெல்லாம் “கலப்பு” எனும் “லயம்” உண்டு. எவையெல்லாம் “லயப்படுகின்றனவோ”, அவைகளெல்லாம் “இருப்பாக” வெளிவரும். இதுதான் அண்டத்தின் நியமனம்.

எனவே, இந்த லயம் எவைகளுக்கு, எங்கு, எப்போது என்பதை நாம் அறிய வேண்டும். அதாவது லயத்தின் பொருள், இடம், காலம் இவற்றை நாம் அறிய வேண்டும். அவைகளின் ஒரு கண்ணோட்டம் இதோ.

பிரளயம்எவைகளுக்கு?

இந்த பிரபஞ்சத்தில், (பிரபஞ்சம் உட்பட) “இருப்பு” உள்ளவைகளை உணர்வுள்ள இருப்பு (sentient), உணர்வற்ற பொருட்கள் (insentient) என்று பிரிக்கலாம். முடிவிலியை எட்டும் எண்ணற்ற உணர்ச்சியற்ற மற்றும் செயலற்ற பொருட்களையும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், 8,400,000 உயிரினங்களும், அவற்றில் 900,000 நீர்வாழ் உயிரினங்களாகவும்; 2,000,000 மரங்களும் செடிகளெனவும் ; 1,100,000 சிறிய உயிருள்ள பூச்சி இனங்களாகவும்; 1,000,000 பறவைகள் எனவும்; 3,000,000 மிருகங்கள் மற்றும் ஊர்வன எனவும், பாலூட்டி இனங்கள் 400,000 எனவும் நமது பத்ம புராணம் பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு வகையான வாழ்க்கை வடிவங்களின் எண்ணிக்கையைப் பற்றி விவாதிக்கிறது. பல்லுயிர் பெருக்கம் என்பது அண்டங்களில் உள்ள உயிரின வகைகளின் தொகுப்பாகும்.

ஆக , பிரளயம் என்பது இந்த இருவகை இருப்புகளனைத்தையும் உள்ளடக்கியது என்பதை நாம் உணர வேண்டும்.

பிரளயம்எங்கே நிகழ்கிறது?

அண்ட பரிணாம வளர்ச்சிக்கான பொது காரணங்களில் ஒன்றான, எல்லையற்ற வெளியை சரியான கண்ணோட்டத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது நமது வேதங்களில் "லோகம்" என்று அழைக்கப்படுகிறது.

முடி மன்னர் ஆகில் மூவுலகம் அது ஆள்வார்
அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின்

திருமந்திரம் 1601
தேவர்கள் வாழும் விண்ணுலகம், மனிதர்கள் வாழும் மண்ணுலகம், அசுரர்கள் வாழும் பாதாளவுலகம், ஆகிய மூன்று உலகங்களைக் குறிக்கும். இதுவே மிகவும் பொதுவான அண்டவியல் கருத்து.

எனினும், இந்து புராணங்கள் பதினான்கு உலகங்களை வரையறுக்கின்றன (இதனை கிரகங்களென குழப்பமடையக் கூடாது). ஈரேழு உலகம், 14 லோகங்கள் என நாம் கேட்டிருப்போம். அந்த உலகங்கள் நாம் வாழக்கூடிய பூமிக்கு மேலே ஆறு உலகங்கள் உள்ளன. நம் பூவுலகிற்கு கீழே ஏழு உலங்கள் இருக்கின்றன என குறிப்பிடப்படுகிறது.
பூமிக்கு மேலே உள்ள உலகங்கள்

7. சத்ய லோகம் - பிரம்ம தேவன் இருக்கிறார்
6. தபோ லோகம் - தேவதைகள் இருக்கின்றனர்
5. ஜனோ லோகம் - பித்ருக்கள் (முதாதையர்)
4. மஹர் லோகம் - இந்திரன் உள்ளிட்ட தேவர்கள்
3. சுவர் லோகம் - முனிவர்கள்
2. புவர் லோகம் - கிரகங்கள், நட்சத்திரத்திற்குரிய தேவதைகள்
பூ லோகம் - நாம் வாழும் மண் உலகம்
பூமிக்கு கீழே பாதாளம் எனும் 7 உலகங்கள்

1. அதல லோகம்
2. விதல லோகம் – அரக்கர்கள்
3. சுதல லோகம் – அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், தான, தர்மங்களால் உயர்ந்தவரை உலகளந்த வாமனனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி
4. தலாதல லோகம் – மாயாவிகள்
5. மகாதல லோகம் – நல்ல செயல்கள் பல செய்து புகழ்பெற்ற அசுரர்கள்
6. ரஸாதல லோகம் – அசுர குருக்கள்.
7. பாதாள லோகம் – வாசுகி உள்ளிட்ட பாம்புகள்
ஆக மொத்தம் நாம் வாழும் உலகம் உள்பட 14 லோகங்களிலும் பிரளயம் நடைபெறும்.

பிரளயம்எப்போது நிகழ்கிறது?

அண்டப்பரிணாம வளர்ச்சியின் எதிர்மறை இந்தப் பிரளயம். எது எது எப்படி வெளிவந்தனவோ, அது அது அப்படி ஒன்றறக் கலக்கும் பரம்பொருளுடன். அதாவது பருநிலை இருப்புகள் நுண்நிலையுடன், நுண்நிலை இருப்புகள் காரண நிலையுடன் லயிக்கும்.இவை அனைத்தும் படைக்கும் தொழிலுக்கு தலைவனான நான்முக கடவுளாம் பிரம்மனின் வாழ்வுக் காலத்துடன் நேரடித் தொடர்பினில் நடக்கும் என்று நமது மறைகள் கூறுகின்றன. (பதிவின் முடிவில் உள்ள படத்தை காணவும்)

விஷ்ணு புராணம் நான்கு வகையான பிரளயத்தை விவரிக்கிறது, 1. நைமித்திகா, 2. பிரகிருதிகா, 3. அத்யாந்திகா மற்றும் 4. நித்யா. முதல் இரு வகைகள் அண்டத்தின் கண்ணோட்டத்தில், அடுத்த இருவகைகள் உயிரினத்தின் கண்ணோட்டத்தில்.

1.நைமித்திக பிரளயம்:

இந்த பிரளயத்தை பிரம்ம பிரளயம் என்றும் அழைப்பர். இந்த பிரளயம் ஒரு கல்பத்தின் முடிவில் அல்லது பிரம்மாவின் வாழ்க்கையின் ஒரு நாளின் முடிவில் - 4.32 பில்லியன் மனித காலண்டர் ஆண்டுகள் முடிவில்; பூ, புவ, ஸ்வா ஆகிய மூன்று லோகங்களில் மட்டுமே இந்த கலைப்பு நிகழ்கிறது என்று விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2.பிரகிருதிகா பிரளயம்:

இயற்கையெனும், பிரக்ருதியில் முழு பிரம்மாண்டமும் கலந்திடும் போது இந்த பிரளயம் ஏற்படுகிறது. பிரம்மாவின் ஆயுட்காலத்தின் முடிவில் (அவரது நாட்காட்டியின்படி 100 ஆண்டுகள்), அதாவது மகா கல்பத்தின் முடிவில் - மனித நாட்காட்டியில் 311.04 டிரில்லியன் ஆண்டுகள் (ஒவ்வொன்றும் 155.52 டிரில்லியன் ஆண்டுகள் கொண்ட இரண்டு பரார்தாக்களை உள்ளடக்கியது) இந்த பிரளயா நிகழ்கிறது. அந்த நேரத்தில் உலகின் அனைத்து பொருட்களும் அதன் காரணங்களுக்குத் திரும்புகின்றன. இந்த கலைப்பு உருவாக்கத்தின் எதிர் வரிசையில் நடைபெறுகிறது. இவ்வாறு, மஹத் முதல் பூமி வரையிலான ஏழு பிரக்ருதி வடிவங்கள் அவற்றின் காரணங்களில் அடுத்தடுத்து நுழைகின்றன. பிரம்மாவின் முட்டை அதன் ஏழு லோகங்கள், ஏழு பெருங்கடல்கள், ஏழு தீவுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட நீரில் கரைகிறது. நெருப்பினால் தண்ணீர் குடிக்கப்படுகிறது; காற்றானது நெருப்பின் அடுக்கை உறிஞ்சுகிறது. காற்று ஈதரில் இணைக்கப்பட்டு பூதாதி அல்லது அஹம்காரம் ஈதரை விழுங்குகிறது. மஹத் மீண்டும் அஹம்காரத்தை எடுத்துக்கொள்கிறார். பிறகு பிரக்ருதி மஹத்தையும் இவை அனைத்தையும் உள்வாங்குகிறது. பிரக்ருதியும் புருஷனும் பரம ஆத்மாவில் கரைந்து விடுகிறார்கள். இது பிரக்ருத பிரளயம்.

3.அத்யாந்திகா பிரளயா:

முழுமையான அல்லது இறுதியான கலைப்பு பரம்பொருளின் அறிவால் (ஆத்ம ஞானம், மெய்யறிவு) அடையப்படுகிறது. எல்லா உயிர்களும் அத்யாத்மிகா, அதிபௌதிகா, ஆதிதைவிகா ஆகிய மூன்று விதமான உலகத் துன்பங்களால் பீடிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. விஷ்ணு புராணம் இந்த மூன்று வகையான வலிகளையும் விவரிக்கிறது. அத்யாத்மிகா என்பது உடல் மற்றும் மனதினால் எஊற்படும் வலி; மிருகங்கள், பறவைகள் போன்றவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் தீமையே அத்யாத்மிகா எனப்படும். ஆதிதைவிக வலி என்பது குளிர், வெப்பம், காற்று, மழை, மின்னல் மற்றும் பிற வளிமண்டல நிகழ்வுகளின் வேலை. மெய்ப்பொருள் அறிவு (ஆத்ம வித்யா, பிரம்ம ஞானம்) மட்டுமே இந்த மூன்று வகையான துன்பங்களிலிருந்து மனிதனை மீட்கும். ஒரு மனிதன் உண்மையான, அறிவு மற்றும் மனித இன்னல்களில் இருந்து பற்றின்மை அடையும் போது, அவன் பரம்பொருளுடன் ஒன்றற கலக்கிறான். இந்த பிரளயத்தில், யோகிகள் பரமாத்மாவில் இணைந்துள்ளனர்.

4.நித்ய பிரளயா:

நித்யா அல்லது நிரந்தர லயம் என்பது அனைத்து உயிரினங்களின் மறைவு என்று கூறப்படுகிறது. தொடர்ந்து நிகழும் இக்கலப்பிற்கு ஜீவராசிகளின் மரணம் என வல்லுநர்கள் இதை விளக்குகிறார்கள். சில வேதாந்திகள் நித்ய பிரளயத்தை சுசுப்தி அல்லது ஆழ்ந்த உறக்கம் என்று விவரிக்கின்றனர்.

முடிவுரை

ஐந்து பகுதி ஆய்வின் மூலம் அறிவியல் மற்றும் நமது ஆன்மீக கண்ணோட்டங்களின்படி அண்டப் பரிணாமத்தை அறிய முயன்றோம். 

நாராயணீயம், தசகம் 5 அண்டத்தின் படைப்பை விவரிக்கின்றது. நாராயண பட்டத்ரீயின் ஸ்லோகங்களை அறிந்து கொள்ள இந்த அடிப்படை அறிவு இன்றியமையாதது.

அடுத்த பதிவுகளிலிருந்துது நாராயணீயம் தசகம் ஐந்தினை ஆராயலாம்

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

Narayaneeyam Dasakam 5 – Cosmic evolution – The Indian Perspective Part 3 – Creation – The magic show

Word of Caution

This write up below is definitely not an exhaustive description of what our scriptures talk about Creation. It is my very limited understanding of the vast literature available in public domain.

The objective is to get a broad idea of the principles involved so that when we take up the study of our scriptures and Sanskrit Slokas, we will have a better comprehension of what they say.

Reader is strongly advised to strictly learn these under the guidance of a Guru if one wants a deep dive in this subject.

What is learnt so far

In Part 1, we learnt that our forefathers, the rishis and sages, through deep meditations, focused inward on the "causeless cause" that is responsible for creating this Universe and identified that as "Brahman", the only pure, omnipresent, indestructible eternal blissful ultimate reality with "existence & consciousness". (science calls these as matter and energy in a materialistic sense). We also learnt that Brahman determines itself and reveals itself to our conceptual cognition as the fundamental aspects in which we see and experience through the real and fundamental truths of its being  which are beyond the universe and yet in it and are the very foundation of its existence, like the waves of the sea, the heat of the fire, the fragrance of the flower, the smell of the earth etc.

In Part 2, we learnt that, to understand the Cosmic evolution (a cyclic process of manifestation, sustenance and destruction), we need to clearly understand and accept that the following:

1. Brahman is the intelligent cause for the cosmic evolution

2. Moolaprakrti (called by various names such as Avyakta, Maya, Gunasamya) which like Brahman is without a beginning and end yet completely dependent on Brahman, is the material cause

3. Eternal space and time are the common causes.

4. The cyclic process of evolution is synchronised with the life span of the God Brahma assigned with the responsibility of the process of creation.

Now in this third part we will see an overview of the processes of cosmic evolution.

Cosmic Evolution – Initial State – An apex level Perspective

At the beginning (in a cyclic process this could be the end too) is the Deep Sleep State. (Remember the Scientific Perspective of this state- all that was there was a single point with infinite density and infinite heat. This is that state we are talking about)

1. In this state, the omnipresent and eternal Brahman as pure existence is the only and ultimate reality.

2. The relation between Brahman and Mula Prakṛti is universal pervasion (vyāpti), as He, in very truth, is without beginning and without end.

3. Maya is Abhinna Shakti of Brahman. Abhinna means inseparable. Maya cannot be separated from Brahman. Just as heat is inseparable from fire, so also Maya is inseparable from Brahman.

4. The omnipresence of both Brahman and Maya means that in this state, there are no such thing as Time and Space.

5. The three modes of nature called “gunas” viz., Saatvic, Rajas and Tamas are in perfect equilibrium.

6. There is no such thing as creation, preservation and destruction.

This is the state of Bliss.

Cosmic Evolution – The five pronged iterations – Panchikarana

From this state of bliss, due to the creative will of the Supreme Being, cosmic evolution again begins. In the Big Bang theory, this is stated as “suddenly something happened”. Our saints, seers and sages compare this to the glance from the Brahman’s eyes.

According to Hindu cosmology as described in texts like the Vishnu Purana, Brahma creates the universe through a process involving various stages. Here's a simplified overview of how Brahma is said to create the universe:

1. **Sankalpa (Divine Will):** Before creation, there is a divine intention or will within the Supreme Being to bring forth the universe. This intention is known as "Sankalpa."

2. **Creation of Cosmic Egg:** From the divine intention, a cosmic egg or golden womb known as "Hiranyagarbha" is formed. This egg contains the potential for the entire universe.

3. **Division of Egg:** Brahma emerges from the cosmic egg and divides it into different parts. These divisions form the various planes of existence, including the physical world, the heavens, and the subtle realms.

4. **Creation of Elements:** Brahma then creates the fundamental elements (earth, water, fire, air, and ether) and assembles them to form the physical universe.

5. **Creation of Living Beings:** With the elements in place, Brahma proceeds to create different life forms, from the simplest organisms to more complex beings.

6. **Creation of Celestial Beings:** Brahma also creates celestial beings, including gods, demigods, and other divine entities, who play specific roles in maintaining the cosmic order.

7. **Creation of Time and Natural Laws:** Brahma establishes the laws of nature, the cycles of time (days, nights, seasons, yugas), and the cosmic order that governs the universe.

8. **Creation of Scriptures:** Finally, Brahma imparts knowledge and wisdom to sages and seers, who then record sacred scriptures to guide living beings on their spiritual paths.

It's important to note that these descriptions are symbolic and metaphorical, meant to convey profound spiritual concepts rather than literal scientific explanations. The creation process in Hindu cosmology emphasizes the divine nature of creation and the interconnectedness of all existence.

Our Scriptures say that due to this creative will, Nature called Maya gets activated and the equilibrium among the three gunas that are contained in the Maya gets disturbed. With the disturbed three gunas and aided by the common cause viz., eternal time, Nature then brings out concepts called Tattvas. These Tattvas vary from 24 to 36 as per the philosophies followed by the various sects of Sanatan Dharma (like Advaita, Dvaita, Kashmir Saivaites, Saiva Siddhanta of Southern India etc). While the number of Tattvas may vary, the process of bringing out these Tattvas are essentially the same and is called “Panchikarana”, the five pronged iterations. Thus, from the triadic manifestation if the gunas, gradual cosmic evolution proceeds. Here is an overview.

1. The first out of this process of creation is Mahat.When sattva is dominant, the Mahat (the Great One) is the first reality to arise from Prakriti. It has a global element as the world’s wellspring, as well as a corporeal aspect as living creatures’ intelligence or buddhi. It is in charge of reasoning and discerning awareness. Mahat is the germinating place of all creations. This manifestation is the supreme sum total of matter. The mahat-tattva is directly connected with the supreme consciousness of the Supreme Being, but still it appears as matter. The mahat-tattva is called the total (vyashti) consciousness because a portion of it is represented in everyone as the intellect (samashti).
Mahat, the Cosmic Intelligence may be said to be Hiranyagarbha, the all-knowing creative principle, omnipresent, omniscient, omnipotent consciousness. From the state where the cause and effect are not clearly manifested (avyakta), the Mahat Tattva comes out first, just as the sprout shoots out from the seed in the ground.

2. When Mahat, the all-knowing creative principle, omnipresent, omniscient, omnipotent consciousness becomes conscious of itself in other words if the Rajas Guna is the predominant guna in Mahat,– I-am, omnipresent – it becomes cosmic Ahamkara at the total (Samashti) level . This Ahamkara here is to be understood as Cosmic Self-awareness – the whole universe becoming conscious. This is ascribed to the predominance of Saatvic qualities of Mahat. When Tamas-dominates the Mahat, it generates a specific sense of Aham at the individual level (vyashti), which regards itself different from others. A sense of I am; "I" sense; I, My, Mine. I as different from you, them, it. This is generated in the Jiva the individual soul. Aham is of two kinds, viz., Samashti Aham or collective egoism and Vyashti Aham or individual egoism. The collective egoism is Ishvara and the individual egoism is the Jiva or the human being. The Jiva develops egoism first and begins to feel 'Aham Jiva - I am Jiva,' and then only he begins to cognise the world and the Ishvara. But for the Vyashti Aham, there cannot be any Samashti Aham or Ishvara and the world.

3. From this (māyā), ākāśa (space) was created, from ākāśa, vāyu (air) was created. From vāyu, teja (fire) was created. From teja, āpaḥ (water). From āpaḥ, pruthvi (earth) was created. Since all five elements, space, air, fire, water and earth are created from triguṇātimīkā māyā i.e. māyā containing 3 guṇa-s (satva, rajasa and tamasa), all five elements contain these three guṇas.

4. Next is the creation of indriyas. ‘Indriya’ means ‘organ’.We have five sense organs - ears, eyes, skin, tongue and nose known as Jñānendriyas. We have five karmendriyas which help us to act. They are speech (mouth), hands, legs, anus and reproductive organs. Each indriya has it’s controlling deity or devatā.

5. This creation process is called Panchikarana’. The process involves each of the five elements splitting into two halves and one half of each further spilling into four parts. Thus we have space splitting into two and one of the halves further splitting into four parts. Like that each of the elements undergoes divisions. The four of one-eighth parts are now distributed to other elements. Thus air, fire, water and earth each of them get one eighth of Aakasha. Similarly the other elements get distributed giving again one full for each of the units. Thus Akasha retains half of its own and one -eighth of other Elements. This process is called Panchikaranam or grossification of the five of the Elements in their subtle or fundamental nature. In other words, division of each of the Elements by two equal parts and futher into four equal sub parts with each of the other four elements and so on and such ‘quintiplication process’ is known as ‘Panchikarana’ or a systematic admixture of all the Pancha Bhutas into a warp-weft process of each formation of weaving a cloth!

6. As an example, from satva guṇa part of ākāśa tatva (space element), shrotreindriya (shrotra-indriya) meaning organ of hearing (ears) are created. ‘shrotra’ means sound. To hear sound, ears are created. Here sound is an subject (viṣaya) of sense organ (indriya) ears. The quality of ākāśa is śabda or sound. Space is the medium of transorpting sound. In order to hear sound, from the purest part i.e. sattva guṇa, ears were created.The controlling devatā of shrotra is dik or diśā or directions.

Here is a flow chart which gives an overview which takes into account the Indriya – sense organ, the Viśaya – Subject i.e. what the organ senses and the Adhiṣṭhātā deva or Devatā – controlling deity.
In the concluding part, we will see the end game of Brahman called “Pralaya” as part of the Cosmic Evolution.

God Bless