This Hindu festival celebrating the birth of Lord Surya (the Sun God) and the onset of spring. Known as Surya Jayanti or Arogya Saptami, it marks the sun turning its seven-horse chariot toward the northern hemisphere (Uttarayana), symbolizing light over darkness and the start of warmer, longer days.
Vividly remember going around the bushes in the village and plucking leaves with the flowers (called Calotropis gigantea – “Erukkalam Poo” ) and having early morning bath with the leaves and flowers on the head and pouring water over it. It is called Arunodaya Snan.
Here is my maiden venture into Carnatic Music Composition. As a novice, I have no clue about this genre and its notations. All I heard was the song Muruga Muruga sung by the legendary sisters Radha & Jayalakshmi in the raga Saveri.
माम्-अवदत् पुमान्- (who) spoke to me, the revered person
इति – thus (thinking)
जल-आपूर्णे जगन्मण्डले – in the worlds fully engulfed in water
दिक्षु-उद्वीक्ष्य – in all the directions looking around
किम्-अपि-अनीक्षितवता – anything not seeing
वाक्य-अर्थम्-उत्पश्यता – the meaning of the words then understanding
दिव्यं वर्ष-सहस्रम् -for a thousand divine years
आत्त-तपसा – doing penance
तेन त्वम्-आराधित: – by him (Brahma) Thou were worshipped
तस्मै दर्शितवान्-असि – to him (Brahma) Thou revealed
स्व-निलयं – Thy own abode
वैकुण्ठम्-एक-अद्भुतं – the Vaikunthloka wonderful
Meaning in English
This Sloka gives a clear indication of the Universe, at the beginning of the great deluge called “Pralaya”.
“Who could be the person who directed me to do Tapas” (last Sloka 7.2) ? Brahma looked around in all the directions to look for the revered person who spoke those words. The world was engulfed in water and there was no one to be seen.
Then the meaning of the words dawned on him and for a thousand divine years (360 human years is one divine year) he did penance and worshipped Thee. Thou , then revealed Thy wonderful abode Vaikunth to Brahma.
அண்டமனைத்தும் நீரதனில் ஆழ்ந்திருக்க ஒலித்தது யாரென திக்கெங்கும் தேடிக் காணாது, அச்சொல் அதனின் பொருள் ஆய்ந்தறிந்து ஆயிரம் இறையாண்டு தவம் இருந்த அயனுக்கு ஆண்டவனே உன் இருப்பாம் வைகுண்டமதனின் காட்சிதனை அருளினாயே குருவாயூரப்பனே !!
விளக்கம்
பூமியானது நீரில் மூழ்கியிருக்கும்போது, யார் இவ்வாறு சொல்கிறார்கள் என்று பிரம்மதேவன் எல்லா திக்குகளிலும் தேடியும், ஒன்றும் புலப்படவில்லை. உடனே, அவர் ஆயிரம் தேவ வருஷங்கள் தவம் செய்யத் தொடங்கினார். அப்போது, பிரம்மதேவனுக்கு நீர் உம்முடைய இருப்பிடமான வைகுண்ட லோகத்தைக் காட்டினீர்களல்லவா?
இந்த ஸ்லோகம், இந்த பிரபஞ்சம், பிரளயத்தின் துவக்கத்தில் எப்படி இருந்தது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.
विश्व-विसर्ग-दत्त-हृदय: – to create the universe resolving in the heart
सम्पश्यमान: स्वयं – trying to contemplate by himself
बोधं खलु-अनवाप्य – the knowledge (required to create) indeed not getting
विश्वविषयं – about the subject universe
चिन्ता-आकुल: -तस्थिवान् – worried remained
तावत्-त्वं जगतां पते – then Thou O Lord of the universe!
तप तप-इति-एवं हि – Do penance, do penance’ thus indeed
वैहायसीं वाणीं- by a voice from the sky
एनम्-अशिश्रव: – to him (Brahma) made (him) hear
श्रुति-सुखां – (which was) pleasing to the ears
कुर्वन्-तप: प्रेरणाम् – (and) prompted him to do penance
Meaning in English
That Brahma made attempts for creation, but since he did not know anything about the universe became very pensive and very sad. Oh Lord of the universe, then you egged him to do penance,
And whispered to him “Do Thapas, do Thapas” as the voice of the sky. 7.2
Note – Brahma has to create beings in the same manner as in the previous kalpa, i.e., before Praakrita pralaya. Penance is the only way by which he can know what the creation was like in the previous kalpa.
முந்தைய ஸ்லோகத்தில் ஹிரண்யகர்பன் என உரைக்கப்பட்ட அந்த பிரம்மதேவர், உலகைப் படைக்க நினத்தார். படைப்பின் ஞானம் அடையாமல் கவலை அடைந்தார். அப்போது, தவம் செய், தவம் செய் என்று இனிமையான தங்கள் அசரீரி வாக்கைக் கேட்டு மகிழ்ந்து அருந்தவமேற்கொள்ள அடியெடுத்தார்.
குறிப்பு – நான்முகன் படைக்க வேண்டுமெனில், முந்தைய கல்பத்தில் எந்த வடிவங்களில் உயிரினங்களும் மற்றவைகளும் (தாவர ஜங்கமங்கள்) இருந்தனவோ, அதே வடிவங்களில் இக்கல்பத்திலும் இருக்க வேண்டும். இந்த நினைவாற்றலைப் பெற தவம் ஒன்றே வழி என்பதனால், இறைவன் நான்முகனை தவமிருந்திட ஊக்குவிக்கின்றான்.
அம்பரத்தார் முயன்றும் தீர்க்க இயலா அடியாரின் பிறவிப் பிணிதனை மெய் அறிவெனும் மருந்து புகட்டிக் குணம் அளித்திடும் பேர் மருத்துவனை பிறவிப் பெருங்கடல் மூழ்கி உழலும் பேதை யான் அடிபணிந்தேன் அகிலாண்ட நாதனே !! 18
சொற்களின் பொருள்
யஹ - எவரொருவர் பரைர் - மேலான அமர்த்யைஹி - தேவர்களால் கதமபி - எங்கேனும், எப்படியாயினும் அசிகித்ஸ்யா - குணப்படுத்த இயலாத, தீரக்கமுடியாத பக்தாக்ர்யாணாம் - முதன்மை பக்தர்களின் ஸம்ஸாராக்யாம் - உடல் உயிரெடுத்ததால் விளையும் துன்பங்களான ருஜம் - நோயினை ஸ்வாத்மபோத ஔஷதேந - தன்னைப் பற்றிய தெளிந்த அறிவு எனும் மருந்தால் ஶமயதி - தீர்க்கிறாரோ
தம் - அத்தகைய பவ மஹா தீர்க தீவ்ர அமயேந - பிறவிச் சுழலாகியமிகப் பெரிய, இடைவிடாது ஆழமாகத் துன்புறுத்துகிற நோயால் க்லிஷ்டோ - அவதிப்படும் (துன்பப்படும்’ அஹம் - நான் வரத - வேண்டிய வரமளித்திடும் ஸம்ஸாரவைத்யம் - பிறவிப்பிணிதீர் மருத்துவராம் த்வாம் - உன்னை ஶரணம் யாமி - சரணமடைகிறேன் ஸர்வாதீஶ்வர - அனைத்திற்கும் தலைவனே
விளக்கம்
வாழ்க்கையின் இன்ப துன்ப அனுபவங்களுக்கு சம்சாரம் எனப்பெயர். நிறைவின்மை எனும் நெருடலே சம்சாரம். பவ ரோகம் (பிறவிப் பிணி) என்பர் இதனை. பிறவிப் பிணியை தேவர்களால் தீர்க்க இயலாது. இறைவன் ஒருவனால் மட்டுமே இது சாத்தியம். இந்த ஸம்ஸாரம் என்பது ஒரு ரோகம். இந்த வியாதிக்கு வைத்தியம் செய்ய வேறு ஒரு வைத்தியனாலும் முடியாது. மற்ற தேவர்கள் சில வரங்களைக் கொடுக்கலாம். ஆனால், இந்த ஸம்ஸார வியாதியைத் தீர்க்க அவர்களால் இயலாது.
ஸ்மரஹர - மன்மதனை எரித்தவனே, காமனை எரித்தவனே, ஆசையை அழித்தவனே யஹ - எந்த பரமேஸ்வரன் ஏக: - ஒருவராகவும் சிதசிததிக: - சித் அசித அதிக: - ஜீவன் ஜடம் இவற்றிற்கு வேறானவராகவும் ப்ரஹ்மாதீந் - பிரம்மன் முதலான ஸர்வாந் பஸுந் - அனைத்து உயிரினங்களையும் மோஹபாஶேந - மோஹம் எனும் கயிற்றால் பத்த்வா - கட்டி ஆத்மக்ருத்யம் - அவரவருடைய கடமைகளை காரயித்வா - செய்யுமாறு செய்து ய: ச - எந்த பரமேஸ்வரன் ஏதேஷு - இவர்களுள் ஸ்வபதஶரணாந்வித்யயா - தன் திருவடிகளை சரணடைந்தவர்களை வித்யயா - மெய்யறிவினால் மோசயித்வா - விடுவித்து ஸாந்த்ராநந்தம் - ஒப்புயர்வற்ற பேரின்பத்தை பரம் - பரமனின் தாம - ஸ்வரூபத்தை (மேலான இருப்பிடத்தை, மோக்ஷத்தை) கமயதி - அடையும்படி செய்கிறாரோ (உணரத்துகிறாரோ) தம் த்வாம் ப்ரபத்யே - அந்த உம்மை முழுமையாக சரண்டைகிறேன்.
விளக்கம்
சிதசிததிக: என்பது இறையின் இலக்கணம். உயிர்களையும், உயிரற்றவைகளையும் தன் உடலாகக் கொண்டு, அந்த உடலுக்கு வேறாக இருப்பவரே இறைவன். அவருக்கு சமமாகவோ, உயர்வாகவோ யாரும் இல்லை.
அவரே குருவாக வந்து (வித்யையா மோசயித்வா) அறிவால் உணர்த்துகிறார். கோகழி ஆண்ட குருமணிதன் தாழ் வாழ்க என்கிறார் மாணிக்கவாசகர்.
பிரம்ம தேவன் உத்தமமான பசு. இந்த பசுவான படைக்கும் கடவுள் பரமனால் படைக்கப்பட்டார்.
பசு என்றால் உயிரினம் என்று பொருள். விலங்கினமான பசு, புல் உண்டு, விவேகமின்றி, தன்னை வேலை வாங்கும் மனிதர்களுக்கு அடிமையாகி பாரமிழுத்தல் முதலிய காரியங்களில் புரிந்து, க்லேசமும் துக்கமுமடையும்.
அவைகளைப்போல, அஜ்ஞானக் கயிற்றால் கட்டி, ஜீவர்களை இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் கட்டுண்டு , வினைகள் புரிந்து வினைப்பலன்களை அடைய வைக்கின்றான் ஆண்டவன். இந்த ஜீவன்களை கட்டுவதும் அவிழ்த்து விடுவதும் பரமேஸ்வரனே.
இந்த ஜீவன்களிடையே எவன் உன்னைச் சரண மடைகின்றானோ அவனுக்கு ஞானத்தை அளித்து அவனுடைய கட்டை அவிழ்த்து விட்டு நித்யானந்த பரிபூர்ணமான உன்னுடைய அப்ராக்ருதமான பதவிக்கு அவனை அழைத்துக் கொள்ளுகிறாய் நீ. அந்த முப்புரம் எரி முதல்வனாம் பரமேஸ்வரன் உன்னை நான் சரணடைகிறேன் என்று துதிக்கின்றார் அப்பைய தீக்ஷிதர்.
யார் படைப்பின் தொடக்கத்தில் பிரம்ம தேவரைப் படைத்து (“யோ ப்ரஹ்மானாம் விததாதி ரூபம்”) அவரிடம் வேதங்களைக் கொடுத்து (“யோ வை வேதாஷ்ஷ்ச ப்ரஹிநோதி தஸ்மை”), இந்த படைப்பை படைக்கும்படி செய்தாரோ, என்னுடைய மனதையும் புத்தியையும் ஒளிர்விக்கும் அந்த இறைவனை (“தம் தேவ ஆத்மபுத்திப்ரகாஸம்”) மோக்ஷத்தை விரும்பும் நான் சரணடைகிறேன் (“முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே”)
என்கிறது ஷ்வேதாஷ்த்வரோப உபநிஷத் 6.28. அதே போல இங்கு தீக்ஷிதர் கூறுகிறார்.
சிருஷ்டி இருவகைப்படும். ஒன்று ப்ரகிருதி சிருஷ்டி. மற்றொன்று விக்ருதி சிருஷ்டி. ப்ரகிருதி சிருஷ்டியில் சிவனிடமிருந்து பிரமன் உண்டானது. ஷ்ருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. ஶ்ரீமத் பாகவதத்தின் தியான ஸ்லோகமும் இதனை கூறுகிறது. பகவத் கீதை அத்தியாயம் 15 இதைப் பற்றியே (15.1-15.4).
அப்படிப்பட்ட ஆண்டவன் ஆத்ம, புத்திப்ரகாஶம்; அதாவது இறைவன் உணர்வாக இருக்கிறார்; நான், உணர்த்த உணர்பவனாக இருக்கிறேன் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார் அப்பைய தீக்ஷிதர்.
Located on a site measuring 162.6 hectares (1.6 km2; 401.8 acres) within the ancient Khmer capital city of Angkor, it was originally constructed in 1150 CE as a Hindu temple dedicated to the deity Vishnu.
Angkor Wat was built at the behest of the Khmer king Suryavarman II in the early 12th century in Yaśodharapura (present-day Angkor), the capital of the Khmer Empire, as his state temple and eventual mausoleum.
Angkor Wat combines two basic plans of Khmer temple architecture: the temple-mountain and the later galleried temple. It is designed to represent Mount Meru and is surrounded by a moat more than 5 km (3.1 mi).
Enclosed within an outer wall 3.6 kilometres (2.2 mi) long are three rectangular galleries, each raised above the next. The expansive Temple complex covers an area of 400 acres. At the centre of the temple stands a quincunx of towers.
In 1177, approximately 27 years after the death of Suryavarman II, Angkor was sacked by the Chams, the traditional enemies of the Khmer. Thereafter, the Khmer empire was restored by Jayavarman VII, who established a new capital at Angkor Thom and the Bayon as the state temple, situated to the north. The temple was dedicated to Buddhism as the king’s wife Indradevi was a devout Mahayana Buddhist who encouraged him to convert. Angkor Wat was therefore also gradually converted into a Buddhist site with many Hindu sculptures replaced by Buddhist art.
The construction of Angkor Wat suggests that there was a celestial significance with certain features of the temple. This is observed in the temple’s east–west orientation, and lines of sight from terraces within the temple that show specific towers to be at the precise location of the solstice at sunrise. The Angkor Wat temple’s main tower aligns with the morning sun of the spring equinox.
Integrated with the architecture of the building, one of the causes for its fame is Angkor Wat’s extensive decoration. The inner walls of the outer gallery bear a series of large-scale scenes mainly depicting episodes from the Hindu epics the Ramayana and the Mahabharata.
க்ரியா யோகசர்யா: – கிரியை, யோகம் வழியாக அதாவது வழிபடுதல், தியானம் முதலான சாதனைகளை
ந கர்தும் (ஶக்நோமி) – செய்ய இயலாதவனாக இருக்கிறேன்
அநிதரகதி:- வேறு வழியின்றி
கேவலம் த்வாம் ப்ரபத்யே – உன் ஒருவனையே சரணடைந்து சார்ந்துள்ளேன்
விளக்கம்
சைவ சித்தாந்தத்தில், இறைவனை அடைவதற்கான உபாயமாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களை வரையறுத்துள்ளனர் பெரியோர்.
1. இதில் சரியை என்பது உழவாரப்பணி முதலாக சிவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் செய்யும் தொண்டு. அதோடு சிவனடியார்களை அன்பாக உபசரிப்பதும் ஆகும்.பெரிய புராணத்தில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதன் மூலமே இறையருளைப் பெற்ற எண்ணற்ற நாயன்மார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
2. அடுத்து கிரியை எனப்படுவது, உள்ளத்தாலும் புறத்தாலும் பூஜிப்பது.
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே
தாயுமானவர்
3. சிவம் ஒன்றையே ஒருமுகப்படுத்தி வழிபடும் நிலை யோகம். புலன்களின் வழியாக வேறு எந்த சிந்தனைகளும் நமக்குள் தோன்றாதவாறு, நாம், இறைவனாகிய பரம்பொருளை தியானிக்கிறோம் என்னும் வேறுபாடு மறைந்து, நாமும் தியானமும் இரண்டறக் கலக்கும் நிலையே யோகம்.
4. இறைவனைப் பற்றியும் உயிரைப் பற்றியும் தெரிவிக்கும் நூல்களைக் கற்று பெரியவர்களின் உபதேசங்களைப் பெற்று இறைவனின் அருளைப் பெறுவதற்கான ஞானத்தைப் பெறுவது.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இந்த நான்கு வழிகளின் மூலமாக இறைவனின் அருள் கிடைக்கும்.
சிவன் அடியார்களைப் போற்றி சிவன் ஆலயங்களில் செய்யும் தொண்டால், சாலோகம் (சிவன் உலகம்),
உள்ளும் புறமும் பூஜிப்பதால் சாமீபம் (சிவன் அருகில் இருத்தல்),
பரிபூரண யோகத்தால் சாரூபம் (சிவ ஸ்வரூபமும்) கிடைக்கும்.
சிவ சிந்தனையை ஞானத்தில் தேக்கி இருப்பதால் முக்தி எனும் பலன் கிடைக்கும்.
மரணம் எப்பொழுது வரும் என்பதை அறிந்திலேன் நான். இங்கு இருப்பதோ இரவலாக கிட்டியது. “நம் மனே அல்லீநே! இல்லி சும்மனே பந்திதீனே!” (எம் வீடு அங்குதான்; இங்கு சும்மா வந்துள்ளேன்) என்கிறார் புரந்தர தாசர். எனவே இமைப்பொழுதும் என் நெஞ்சம் நீங்காதான் தாழ் இப்பொழுதே பணிகிறேன்.
“பெருமானே, என் உடல், உயிர் அனைத்திலும் இப்போது நீதான் நிறைந்திருக்கிறாய். இனி நான் செய்கின்ற செயல்கள் யாவும் நீ செய்வதுதான். நான் சரியான காரியங்களைச் செய்தாலும், தவறான செயல்களைப் புரிந்தாலும் அத்தனைக்கும் நீ தான் பொறுப்பு ” என்றும்
“அன்றே எந்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ? இன்றுஓர் இடையூறு எனக்கு உண்டோ எண்தோள் முக்கண் எம்மானே? நன்றே செய்வாய், பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே?”
என்றும் இறைவனிடம் கேட்கிறார் மாணிகக வாசகர்.
இதே மனநிலையில் உள்ள அப்பைய தீக்ஷிதர்,
“ஹே பரமசிவ! எனக்கு உன் இருப்பிடமோ தெரியாது, கர்மானுஷ்டானத்தையோ யோகாப்யாஸத்தையோ செய்ய என்னால் இயலாது. வேறு ஒரு வழியும் அறியாத நான் உன்னைச் சரணமடைவது ஒன்றையே அனுஷ்டிக்கிறேன். அந்த்ய காலத்தில் மனதை ஈசுவரனிடம் அர்ப்பணம் செய்வது அஸாத்யமானபடியால் இப்பொழுது உன் நினைவு வந்திருக்கும் பொழுதே நான் உன்னிடம் என்னை ஸமர்ப்பணம் செய்து விடுகிறேன். என்னை மட்டுமில்லை. என் பரிவாரங்களையும் சேர்த்துக் கொண்டு ஆத்மார்பணம் செய்து விடுகிறேன்”.
एवं देव in this manner O Lord! चतुर्दश-आत्मक-जगत्-रूपेण in the form of the fourteen worlds जात: पुन: – manifesting (Thyself) again तस्य-ऊर्ध्वं खलु at the head (peak) of that (the worlds) सत्य-लोक-निलये in the abode of Satyaloka जात: -असि धाता स्वयं manifested as Brahma (the Creator) Thyself यं शंसन्ति whom (Brahma) (the Srutis) describe हिरण्यगर्भम्- (as) Hiranyagarbh अखिल-त्रैलोक्य-जीवात्मकं of all the beings in the three worlds as the collective soul य: -अभूत् who became स्फीत-रज:-विकार-विकसन्- because of the upsurge of Rajoguna नाना-सिसृक्षा-रस:- became desirous of creating various beings.
Meaning in English:
The fourteen worlds are also known as trilokyam (3 worlds). The 7 worlds together below the earth are taken as one, called Patala. The Earth is taken as Bhuloka as second and the six worlds above the earth are taken as third as Upper world.
Thus O Lord! Thou who manifested in the form of the fourteen worlds, again by Thy own will, manifested as Brahma, in Satyaloka, which is the highest and loftiest of all the worlds.This Brahma is known as Hiranya Garbh (the golden egg) the cosmic intelligence of all the beings of the three worlds. With the upsurge of Rajoguna, Thou as this Hiranya Garbha became desirous of creating various beings.
சுவாசம் அடங்கும் வேளையிலே உள்ளம் உன்பாதம் பணித்திட்டு பிறவி ஈனும் பாபமுழுதும் உதறி எறிய இயலும் புரமெரி நாதனே ! ஒருகால் அக்காலம் என் உள்ளம் ஓரிரு நோய் வாய்ப்பட்டு நினைவு தவறிட்டால் உனதடி பணிந்திட எங்கனம் எனக்கு கை கூடும் !! 13
சொற்களின் பொருள்
நாத – உயிரின் தலைவனே! ஸ்வாமீ!
புரஹர – முப்புரத்தை எரித்தோனே
ஜந: – மனிதன் (உயிர்)
ஶ்வாஸப்ரஶமஸமயே – மூச்சு நன்கு அடங்கும் சமயம்
சேத: – மனதை (சித்தத்தை)
த்வத்பாதாப்ஜே – உன் திருவடித் தாமரைகளில்
நிதாய – பணித்திட்டு (அர்ப்பணம் செய்து)
ஸம்ஸ்ருதிப்ராப்தம் – பிறவிகளில் வந்து அடைந்திருக்கும்
ஸர்வம் – அனைத்து
ஆக3ஹ – பாபங்களையும்
ஷேப்தும் – உதறி எறிந்துவிட
ப்ரபவதி – முடியும் (எனினும்,)
தஸ்மிந் காலே – அந்த சமயத்தில்
யதி – ஒரு வேளை
தோஷத்ரயார்தம் – வாதம், பித்தம்,கபம் என்ற மூன்று தோஷங்களால் (பீடிக்கப்பட்ட என் உடலால்)
மம மநோ – என் மனது ப்ரஜ்ஞாஹீநம் – நினைவு தவறியதாக
பவேத் – ஆகிவிட்டால்
தத் – அப்படி (திருவடித் மாமரைகளில் அரப்பணிக்க)
கதம் மே – எப்படி எனக்கு
கடேத – கைகூடும்
விளக்கம்
எவ்வித பாபிக்கும் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. இறக்கும் காலத்தில் இறைவனுடைய திருவடிகளில் மனதைச் செலுத்தி, உயிரை உடலிலிருந்து பிரித்துக்கொண்டால், இந்தப் பிறவியில் செய்த அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபடலாம். அந்திய காலத்தில் பிரஜ்ஞையுடன் கூடி இருப்பது அரிது. வாத பித்த கபங்களின் விபரீதங்களால் மூர்ச்சை ஏற்பட்டும் விடலாம். ஆகையினால் ப்ராண வியோக சமயத்தில் மனத்தை ஈசுவரனிடம் செலுத்தி ஸர்வ பாபங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்றும் நிச்சயமாக நம்பியிருக்கவும் முடியாது. நோயின் பிடியில் சிக்கி, தன் நிலை இழந்த மனதால் இறைவனைத் தியானிக்க முடியாது. என் செய்வது என வருந்துகிறார் அப்பையர்.
திருவடித் தாமரை பணிவது பாபங்களை களைந்திடும் – விளக்கம்
இறைவன் திருவடியைப் பற்றினால், பாவங்கள் களையும் என்று அப்பையர் கூறுவதற்கு ஆதாரம் (ப்ரமாணம்) என்ன என்பதை முதலில் காண்போம்.
இறைவனின் பாத அபிஷேகங்களின் போது வேதத்தில் உள்ள (தைத்ரிய ப்ராஹ்மணம் 3.12.3) சில மந்திரங்கள் உரைக்கப்படும். அதில் ஒன்று
இறைவன் திருவடி எங்கும் நிறைந்திருக்கிறது, பழமையானது, புனிதமானது. அதுவே அடைக்கலம். அதன் மூலம் எல்லா உயிர்களும் தமது பாபகர்மங்களைத் தாண்டிச் செல்கின்றன. அதே புனிதமானதும், தூய்மையானதும் ஆன அத்திருவடிகளால் தாம் தூய்மை அடைவோமாக !.மிகுந்த பாபங்களையும் நன்கு கடந்துடுவோமாக!……இறைவன் திருவடி நமக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் !
என்கிறது தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3).
இறைவன் திருவடிகள் , அறிவினை (ஞானம்) குறிப்பது.
இடது திருவடி குறிப்பது
அபர ஞானம்
கர்ம காண்ட ஞானம்
உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது
சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)
வலது திருவடி குறிப்பது
பர ஞானம்
ஞான காண்ட ஞானம்
உண்மையை உணர்த்துவது
யோகம்(உள்ளத்தால்), ஞானம்
பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.
தோஷத்ரயார்தம் – அல்லது திரிதோடங்கள் – ஓரிரு நோய் – விளக்கம்
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
என்கிறது திருக்குறள் (941).
நம் உடலில் வாதம், பித்தம், கபம் (சிலேட்டுமம்) அல்லது `வளி (காற்று) , அழல் (நெருப்பு) , கபம் (நீர்)’ என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில் சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.
வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.
பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.
சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.
இப்படி இருநூறுக்கும் அதிகமான நோய்களில் ஏதேனும் ஒன்று, வயது முதிர்ந்து, உயிர் பிரியும் தருணம் நம்மைத் தாக்கலாம். அப்போது இறைவன் திருவடித் தாமரையை எப்படி தியானிப்பது என்று உழல்கிறார் அப்பையர்.