Bhattathri in this Sloka outlines the process of liberation (salvation) from the higher Lokas for the Krama Mukti Sadakas who have reached there and living there.
The yogi who attains this aspect of the migration into the Brahmaloka or in Thy abode, Vaikuntha is liberated at the time of Maha Pralaya. Or, if he so desires, he is liberated even earlier by piercing through the Brahmaanda and releasing himself by his yogic power.
Meaning of the Sanskrit Words
तत्र वा - either there (in Brahmaloka)
तव पदे-अथवा - or in Thy world (Vaikuntha)
वसन् - residing
प्राकृतप्रलये - at the time of Prakrita pralaya
एति मुक्तताम् - he attains liberation
स्वेच्छया खलु पुरा - (or) at his will even earlier, indeed
உடலுக்கும், உயிருக்கும் உள்ளது வெறும் குத்தகை ஒப்பந்தமே என்றும், யாக்கை நிலையற்றது என்றும் அறிந்து உணர்ந்து, இரண்டாவது முறையாக சங்கரனின் வைரக் கூடத்திற்கு பட்டை தீட்டி மெருகேற்றிக் கொள்ள வருகை தந்த, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இன்று நாம் அனைவரும் எதிர்கொள்ளும் செயல்முறைக்கு (diamond cutting and polishing process), செல்வம் நிலையாமை என்று பெயர். “ஸரீர அநித்யம்” என்பதை முதல் செயல்முறையில் வழங்கிய ஆதி சங்கரர், “தன அநித்யத்தை” இரண்டாவது செயல்முறை வழியே நம் மூட மனத்திற்கு கொடுக்கிறார்.
இந்த செயல்முறையை உள்வாங்கினால், பணம்/செல்வம் என்பவை, நிரந்தரமான மகிழ்வைத் தேடும் நமக்கு ஒரு கருவிகளே அன்றி அவைகளை அடைவதே நமது குறி அல்ல என்பது ஆழமாகப் பதியும்.
சமஸ்க்ருத ஸ்லோகம்
मूढ जहीहि धनागमतृष्णां
कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् ।
यल्लभसे निजकर्मोपात्तं
वित्तं तेन विनोदय चित्तम् ||
தமிழ் ஒலி பெயர்ப்பு
மூட4! ஜஹீஹி த4நாக3ம த்ருஷ்ணாம்
கு1ரு ஸத்3புத்3தி4ம் விஷயவித்ருஷ்ணாம் |
யல்லப4ஸே நிஜகர்மோபாத்தம்
வித்தம் தேன வினோத3ய சித்தம் ||
தமிழ் மொழிபெயர்ப்பு
மூடனே வெல்வாய் செல்வத் தாகம்
மனதினில் தணித்திடும் நல்லறி ஞானம்
மறை வழி ஈட்டிய செல்வம் போதும்
நிறைவடை என்றும் சிந்தையில் செல்வம்
சமஸ்க்ருத சொற்றொடர்களின்பொருள்
முதல்சொற்றொடர்
मूढ - மூட - ஏ அறிவிலியே, ஏ மூட மனமே !
जहीहि - ஜஹீஹீ - விட்டுவிடு, வென்றுவிடு
धनागमतृष्णां = धन + आगम + तृष्णां 1. धन - தன - செல்வம். தனம் என்று சொல்வது, பணத்தால் கிடைக்க கூடிய எல்லா பொருட்கள், வசதிகளைக் குறிக்கும். 2. आगम - ஆகம - வரவு 3. तृष्णां - த்ருஷ்நாம் - வேட்கை, தாகம், அடக்கமுடியா விருப்பம்,
அதாவது, நேர்வழியில் ஈட்டியதாலோ மற்றும் தனது முற்பிறவி வினைப்பலானக அடைந்ததாலோ எந்த ஒரு செல்வத்தை அடைந்திருக்கிறாயோ, அவ்வழிகளில் வந்த அந்தச் செல்வத்தை வைத்து மனமகிழ்வு அடை என்ற பொருள் இச்சொற்றோடருக்கு.
விளக்கவுரை
அன்றாட வாழ்வில் செல்வத்தால் சுகம் கிடைக்கும் என்ற கருத்து நமது மனித இயல்பு. செல்வமில்லையேல் வாழ்வதெப்படி? ஆதலினால் பணத்தாசை ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணம் நமக்கு.
பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழியை அறிந்த நாம், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை அறிய விரும்புவதில்லை. இந்த தவறான கருத்தினால், பணத்தின் மீது அளவு கடந்த அவா நமக்கு அதிகம்.
மனிதப் பிறவி என்றால் வினைகளைப் புரிந்தே ஆக வேண்டும். கர்மம் பண்ணுவது நமது கடமை. அதுவும் அதில் கிடைக்கும் பலனை பரமனிடம் விட்டுவிட்டு கர்மம் புரியவேண்டும் என நமது மறைகள் எடுத்துரைக்கின்றன.
அப்படி மனதில் பேராசையை வளர்க்காமல் நம் கர்மத்தில் மனதை செலுத்தி அதன்மூலம் தானே கிடைக்கும் பலனை அனுபவிக்க மனதை பழக்கிக்கொள்ள வேண்டும். கர்மபலன், முப்பிறவியிலும், இப்பிறவியிலும் நாம் புரியும் கர்மத்தின் தன்மையை பொறுத்திருக்கிறது. அது நம் வசம் இல்லை.
ஆசை கூடாது என்றோ, பணத்தை தியாகம் செய்யவோ, அதை உபயோகிக்க கூடாது என்றோ இப்பண்ணில் ஆதி சங்கரர் கூறவில்லை. நம் கர்மத்திர்க்கு ஏற்ப கிடைக்கும் தனத்தில் த்ருப்தி கொண்டு சந்தோஷமாக அதை உபயோகித்து மனதை சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள்; அதன் மூலமாகவே மன சாந்தி ஏற்படும் என பொருள் கொள்ள வேண்டும்.
இதுவே இப்பண்ணின் சாரம்.
தமிழ் இலக்கியத்தில் செல்வம் நிலையாமை
செல்வம் நிலையாமையைப் பற்றி எண்ணற்ற விளக்கங்களை, தமிழ் புலவர்கள் அளித்துள்ளனர். அதில் சிலவற்றை ஆய்வோம்.
திருமூலர்
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல் அவிழ்கின்ற ஆக்கைக்கு ஓர்வீடு பேறுஆகச் சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே.
முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற செல்வமும், தானே முயன்று ஈட்டிய செல்வமும் அனைத்துமே நீரில் மூழ்கும் படகு போலக் கவிழக் கூடியது. அழியும் இயல்பு கொண்ட மனித உடலுக்கு ஓர் அழியாத சேமிப்பு வீடு பேறு என்பதை அறிந்து கொண்டவர் அழியும் செல்வத்தைப் பெருக்க எண்ணார்.
நாலடியார்
துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்.
குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறி வரும்.
ஒருவர் சேர்க்கும் செல்வமானது வெள்ளம், மறதி, வெற்றியுடைய வேந்தர், நெருப்பு, தாயத்தார், கள்வர் என்று கூறப்படுகின்ற இந்த ஆறு வழிகளாலும் உடையவனது கையினின்றும் மறைவாக ஒழிந்து போகும் இயல்புடையதாகும். ஆதலால் உள்ளீடற்ற நமக்கு உதவாத பொய்யான பொருளாகிய செல்வத்தைப் பற்றாமல் துறந்த சான்றோர் பிறர் இகழ்வதற்குக் காரணமான பெரிய துயரங்களைச் செய்யும் பிறவிப் பிணியாகிய துன்பத்தை நீங்கி வாழ்வர் எனப்படுகிறது.
(உதாரணங்கள் - சென்ற 2015 டிசம்பரில் சென்னையில் மழையினாலும், ஏரிகள் உடைப்பினாலும் ஏற்பட்ட இழப்பு, மறதியினால் நாம் செய்யும் தவிர்க்கக்கூடிய செலவுகள், வேந்தன் எனும் அரசு, மதுபானம் விற்று மக்கள் சம்பாதிப்பதை சேமிக்க விடாமல் குடிபோதைக்கு ஆளாக்கி விடுவது, அங்கங்கே வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகளால ஏற்படும் பெரும் நட்ம், தாயாதிக்காரர்களாகிய அண்ணன் தம்பிகள் வழக்கு, வீடு, வங்கிகளில் கொள்ளை என நாம் இவைகளைக் கண்கூடாகக் காண்கிறோம்).பொருள் முயன்று ஈட்டிய போதும் நம்மை விட்டு அகலுதற்குப் பலவேறு வழிகளையும் உடைத்தாம். ஆகவே அதனை ஈட்டல் பயனின்றாம். பொய்யாகிய அப்பொருளின்பாற் பற்று விட்டவர்களே பேரின்பம் எய்துபவர் என்பதாகும்.
சித்தர் பாடல்கள்
“தேடிய செம்பொன்னும் செத்தபோது உன்னோடு நாடி வருவதுண்டோ போம்போது தேடும் பொருளில் அணுவேணும் சாம்போது தான் வருமோ
என்ற பாடலில் நாளும்நாளும் தேடிய செல்வங்கள் யாவும் சாவும் போது துணைக்கு வாரது. ஒரு மனிதன் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும் கடைசியில் அவனுக்கு மண் மட்டுமே சொந்தமாகும்.
செல்வம் நிலையாமை குறித்து பாம்பாட்டிச்சித்தர் ,கூறுகையில்,
என்ற பாடலில் மலைபோன்ற செல்வங்களை வைத்திருந்தாலும் எமன் வந்து அழைத்தபின் பயனாகுமா ?என்று கேள்வி எழுப்புகிறார்
நாட்டுப்பாடல்
வாழ்வே நிலையற்றது எனக் கூறுகையில் அதில் ஒருவன் ஓடித்தேடி சம்பாதிக்கும் செல்வமும் இறுதி காலத்தில் துணைவராது, சகடம் எனச் சென்று கொண்டே இருக்கும் தன்மையானது என்பதை,
''பஞ்சு பருத்தி எடுத்து - அதைப் பேரான மணையிலே ஊட்டி அரைத்து நெஞ்சக் கருத்தாலே நூத்து - அதை நேரோடும் பாவில் ஓடி நெய்தாலும் நாலு முழத்தில் ஒரு துண்டு - அதில் நாலைந்து பக்கமும் பீத்தலும் உண்டு பாதியைப் பறையன் கிழித்தான் - அதில் பகுபாதி அம்பட்டான் கொண்டோடிப் போனான் அக்கினி தேவுக்குப் பாதி - இந்த அழகான கட்டைக்குப் போத்தப்பத்தாது''
என்ற பாடல் எடுத்துரைக்கின்றது.
முடிவுரை
செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கறக் கெட்டு விடும்.
நாம் செல்வம் உடையோம் என்ற கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத சிற்றறிவுடையோரின் பெரும் செல்வம், இரவில் கருமையான மேகம் வாய் திறப்பதால் உண்டான மின்னலைப் போலத் தோன்றி, இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்!
ஆதலினால், துதி கோவிந்தனை, துதி கோவிந்தனை, கோவிந்தனைத் துதி மூட மனமே என்று எடுத்துரைக்கிறது இந்த இரண்டாவது செயல்முறை.
செல்வத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஆதி சங்கரர் கூறுகிறார் என்று தவறான முடிவிற்று நாம் வரக்கூடாது. தங்கள் சொந்த நலனுக்காக கண்மூடித்தனமான ஈடுபாட்டிற்கு எதிரான அறிவுரையாக இந்த இரண்டாவது செயல்முறையை கவனமாக உட்கொள்ள வேண்டும்.
உள்ளுணர்வோம். அடுத்த செயல்முறை என்னவென்று புது வருட முதல் நாள் (01-01-2023) அன்று அறிவோம். அதுவரை
Welcome to Sankara's Smithy, the Forge Shop where we have commenced our transformation process by receiving the first hammer blow. The hammer did strike the very core of our misbelief that we are nothing without our body and our physical body is permanent. It shatters that misconception.
Now comes the second hammer blow. This deals with the impermanence of wealth - “Dhana” as we call it. This blow will remove our wrong notions about acquisition, storage and distribution of wealth. We will realise that wealth is after all a “means” and not an “end”.
Sanskrit Verse
मूढ जहीहि धनागमतृष्णां
कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् ।
यल्लभसे निजकर्मोपात्तं
वित्तं तेन विनोदय चित्तम् ||
Adi Sankara
English Transliteration
Mooda jaheehi dhanaagama trushnaam
Kuru sadbuddhim manasi vitrshnaam
YallabhasE nija karmOpaattam
Vittam tEna viNodaya chittam
Meaning in English
Oh ignorant ! Win over the thirst for the inflow of wealth. In your mind develop detached noble thoughts. Rejoice your mind with that wealth which is obtained with your own efforts or karma.
Explanation
Meaning of the Sanskrit Words
1. मूढ - Mooda - Oh! Ignorant mind.
2. जहीहि - jaheehi - Win over
3. धनागमतृष्णां = dhanaagama trushnaam - धन + आगम + तृष्णां a) धन - dhana - wealth - This includes money and all worldly things.
b) आगम - aagama - receipts/inflows
c) तृष्णां - trushnaam - thirst, yearn, uncontrolled desire
4. कुरु सद्बुद्धिं - Kuru sadbuddhim - develop noble thoughts
5. मनसि - manasi - in the mind
6. वितृष्णाम् - vitrshnaam - detached, not thirsty
7. यल्लभसे - YallabhasE - यत् yat + लभसे labhase - which is + obtained
8. निजकर्मोपात्तं - nija karmOpaattam - निजकर्मणा उपात्तम् - nija + karma + upaattam - with your own efforts. It means that whatever actions that are prescribed to oneself by the scriptures and what you are destined to perform as residual fruits of actions from your previous births.
9. वित्तं तेन विनोदय चित्तम् - Vittam tEna viNodaya chittam - wealth (vittam) , that (tEna), rejoice (vinodaya) , mind (chittam) - rejoice your mind with that wealth)
The philosophy behind these words
As a householder, one has to earn money and acquire various possessions to support one’s family and also to meet one’s obligations to society.
The great poet Tiruvalluvar said that those without possessions do not really have a world here — பொருளில்லாற்கு இவ்வுலகு இல்லை (“porulillaarukku ivvulaku illai”).
It is human nature to think that wealth brings happiness in everyday life. This thinking is due to the fear that how one can one live without wealth.
While we accept proverbs which highlight the importance of wealth/money, we conveniently choose to forget the fact that anything in excess is a poison. Because of this misconception, we have more money cravings.
The first sentence of this Sloka can be misinterpreted as Adi Sankara holding worldly pursuits in such disdain as to call everyone shun wealth, worldly pursuits and opt for sanyaasa.
No, the approach towards wealth is brought out in the second sentence.
As an admonition against indiscriminate indulgence in wealth for their own sake at the expense of one’s growth into a higher plane, Sankara “advices to keep one’s pursuits legitimate and in conformity with dharma, making adequate room for the contemplation of higher goals”.
Simple living & great thinking is the need of the hour.
Tamil literatures like THIRUKURAL, Naaladiyaar, Thirumanduram, Valayapathy etc have given innumerable explanations including separate Chapters on the impermanence of wealth. A few of them are highlighted in the Tamil Version of this blog.
Conclusion
Adi Sankara drives home the point that wealth like our body is not eternal and is perishable. It is not an end in itself and cannot be the goal of our life. It is only a means to lead a Dharmic life to achieve our higher goal of sorrows free permanent happiness.
What a great impact it will have on our lives, if only we could absorb this second strike and start our journey with this fresh rethinking.
With that rethinking, let us proceed to the next strike which will be on the first day of the new year (01-01-2023).
Until then, take care. Introspect and turn a fresh page in life.
பஜ கோவிந்தம் என்று அழைக்கப்படும் “மோக முத்கரா”வைப் பற்றிய எனது பதிவைத் தொடங்கியபோது, சமூக ஊடகங்களில் “மூட மனம்” கொண்ட எனக்கும், கற்றறிந்தவர்களுக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான கருத்துப் பரிமாற்றங்களைப் பற்றி எழுதியிருந்தேன்.
“மோஹ முத்கரா” என்பது 31 ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு. இதற்கு பின்னர் பஜ கோவிந்தம் என்று பெயரிடப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆதி சங்கரரும், அவரது சீடர்களும் காசியில் வழங்கியது என்றும் கூறப்படுகிறது. நிலையற்றவற்றை நிலையென நம்பி வாழும் நம் மருட்சியுடை (மோஹம்) மனதை தட்டி எழுப்பும் சம்மட்டி (வடமொழியில் முத்கரா என்பர்) அடிகள் இவை. இது மறுக்க இயலா உண்மை.
அதே நேரம், “உண்மை என்றுமே உறைக்கும்” என்ற உலக இயல்புற்கேற்ப, சங்கரனின் சம்மட்டி அடிகள் என்று கொடுத்த தலைப்பு பொருத்தமானதல்ல, அது வன்முறையைக் குறிக்கும் சொல், அச்சொல்லிற்கும் ஆதி சங்கரருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறும் சில பெரியோர்களின் கருத்துக்களையும் நாம் மதித்து ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு தலைப்பின் மேல் பற்றை வளர்க்க எனக்கு விருப்பமில்லை. சமஸ்க்ருத மொழியில் வைராக்கியம் (वैराग्य) என்பது உலகம் தரும் இன்பப் பொருட்களின் மீதான பற்றை நீக்குவதே. நாம் விரும்பும் எந்த ஒரு வைரத்திற்கும் மேலான விலையிலா வைரம் இந்த வைராக்கியம். ஆதி சங்கரரும் அவரது சீடர்களும் “மோஹ முத்கரா”வில் உள்ள ஸ்லோகங்கள் வழியாக, நம் உடல் மன வளாகமெனும் சுரங்கத்துள் ஒளிந்துள்ள இந்த வைராக்கியத்தை நம்மிடமிருந்து வெளிக்கொணரவே முயல்கின்றனர்.
எனவே, இந்த வலைதள தொடர்பதிவின் தலைப்பை
“சங்கரனின் வைரக் கூடம்”
என்று மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
வைரத்தை தோண்டி எடுத்து பட்டை தீட்டும் இடம் வைரக் கூடம். ஒவ்வொரு ஸ்லோகமும் நம்முள் ஒளிந்திருக்கும் வைராக்கியம் எனும் பற்றிலா வைரத்தை, தோண்டி எடுத்து, பட்டை தீட்டி ஒளிர வைக்கும் செயல்முறை (process) என்பதே இத்தலைப்பின் பொருள். இரும்பை சம்மட்டி அடியால் மாற்றுவதை விட, வைரத்தை தோண்டி எடுத்து பட்டை தீட்டுவது என்பது வன்முறையிலா செயலெனத் தோன்றும் காரணமே இத்தலைப்பின் தோற்றம்.
இந்த மாற்றம் வலைதளப்பதிவுகளில் (blogs) இரண்டாவது ஸ்லோகத்திலிருந்தும் (01-12-2022), வலைதள ஒலிப்பதிவத் தொடரில் (podcast) மூன்றாவது ஸ்லோகத்திலிருந்து (23-12-2022) நடைபெறும்.
இந்த “தலைப்பு மாற்றம்” தமிழ் பதிவுகளுக்கு மட்டுமே. ஆங்கிலப் பதிவுகளில் எந்த மாற்றமும் இல்லை.
There is no change in respect of the blogs in English on the subject and it continues to be “Sankara’s Smithy”.
சங்கரனின் வைரக்கூடத்திற்கு வருகை தந்து, தோண்டி எடுத்து, பட்டை தீட்டி மெருகேற்றி பற்றிலா நம் வைராக்கியத்தை வெளிக் கொணர்வோம். வாருங்கள்.
“There are in the Upanishads, intimations of Krama-Mukti or the progressive process of the liberation of the soul.
The Upanishads are emphatic in their statements that one who reaches through unselfish meditation and knowledge this Supreme Cause does not return to the mortal coil, but proceeds further to the Absolute Reality.
The Mundaka Upanishad says that the sages in the world of Brahma are liberated beyond death in the end of time. Those who attain the world of the Karya-Brahman remain there until the end of the universe, enjoying the effects of their "Satyakamas" and "Satyasankalpas", the fruits of their desires and willings based on Truth. Whatever they wish arises then and there instantaneously, for they are in harmony with the Universal Being. They enjoy the highest approximation to the bliss of the Lord of the universe”.
This is what Bhattathri is highlighting in this Sloka 11.
துருவமண்டலம், கிரமமுக்திவிழை உன் பக்தர்கள் பரமனே, !!
Meaning in English
O Lord! Thy devotee who follows the Krama Mukti path is led by the presiding deities of fire, day time, the bright fortnight, and Uttaraayana to the plane of the sun and enjoying in each of these spheres reaches the realm of Dhruva
சங்கரனின் பட்டறைக்கு வருகை தந்து, முதல் சம்மட்டி அடி வாங்கிட ஒப்பிய உங்களனைவருக்கும் மிக்க நன்றி.
இறை வணக்கம் போல் துவங்குகிறார் ஆதி சங்கரர் அவரது முதல் சம்மட்டி அடியை.
“கோவிந்தனைத் துதி; உனது மரண காலத்தில் உன்னை ஏட்டறிவு காத்திடாது”. இது தான் இந்த பண்ணின் (அடியின்) சாரம்.
விழும் முதல் அடியை பார்க்கும் பொழுது, மெதுவான அடி போலத்தான் தெரியும். பொதுவாக, விழுந்த பின்தான் தெரியும் அடியின் வலி. அதைப் போல, இந்த அடியின் வலிமையை உணர, பண்ணின் உட்கருத்தை ஆராய வேண்டும்.
வாருங்கள், விழும் அடியை ஆராயலாம். சங்கரனின் இந்த அடிக்குப் பெயர் யாக்கை நிலையாமை.
சமஸ்க்ருத ஸ்லோகம்
भज गोविन्दं भज गोविन्दं, गोविन्दं भज मूढ़मते। संप्राप्ते सन्निहिते काले, न हि न हि रक्षति डुकृञ् करणे॥१॥
தமிழில் ஒலி பெயர்ப்பு
ப4ஜ கோ3விந்த3ம் ப4ஜ கோ3விந்த3ம்
கோ3விந்த3ம் ப4ஜ மூட4மதே |
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி ‘டு3க்ருஞ் கரணே’ ||
தமிழில் மொழிபெயர்ப்பு
துதி கோவிந்தனை துதி கோவிந்தனை
கோவிந்தனைத் துதி மூட மனமே
விதித்திட்ட வேளையில் காயம் அழியும்
காத்திடுமோ உனை வாழ்வியல் பாடம்.
விளக்கவுரை
பஜ
“பஜ“ என்ற சொல்லிற்கு நினை, பூசி, துதி என்ற பொருட்கள் உண்டு. பஜனம் என்பதற்கு சேவை என்ற பொருள்.
இந்தப் பண்ணில் ஆதி சங்கரர் இந்தச் சொல்லையும், கோவிந்தம் என்ற அடுத்த சொல்லையும் மூன்று முறை பயன்படுத்துகிறார்.
ஏன் மூன்று முறை? அதற்கு முக்கியத்துவம் உள்ளதா?
உள்ளது. ஏன் என்பதற்கான சுருக்கமான விளக்கம் இங்கே.
மூன்று வகையான தடைகளை நீக்குவது அல்லது மூன்று வகையான துன்பங்களை (துக்கங்களை) நீக்குவது என்பது வாழ்க்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று நமது மறை நூல்கள் நமக்குச் சொல்கின்றன.
மூன்று வகை துன்பங்கள் வெளிப்படையாக வரையறுக்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு வர்ணனையாளரும் பின்வரும் மூன்று வகையான துன்பங்களைக் குறிக்கின்றனர்:
1. ஆதிதைவிகா (தெய்வீக தோற்றம்) - கடவுளின், இயற்கையின் செயல் காரணமாக வரும் துன்பங்கள். இயற்கையின் சீற்றத்தால் விளையும் துக்கங்கள். 2. ஆதிபௌதிகா (உடல், ஜட உயிரினங்களில் உருவானது) - வெளிப்புற தாக்கங்கள் காரணமாக வரும் துன்பங்கள் 3. அத்யாத்மிகா (நாமே உருவாக்கியது) - உடல் நோய்கள், மனப்பிரச்சனைகள் (ஆசை, கோபம், பயம், வெறுப்பு, பொறாமை, மோகம், சோகம், அவமானம், காழ்ப்பு…..) முலம் வரும் துன்பங்கள்
இம்மூவகை துக்கங்கள் (தாபத்ரையம்) நீங்கிட இறை வழிபாட்டில் மூன்று முறை முறையிடுதல் மரபு.
கோவிந்தம்
இந்த சொல் கோ, விந்தம் என்ற இரு சொற்களடங்கியது. முதலில் கோ என்ற சொல்லின் பொருளைக் காண்போம்.
1. “கோ” என்றால் - பசு, உயிரினம் (சைவ சித்தாந்தத்தில் பசு என்பது உயிரினங்கள்/மனிதர்களைக் குறிக்கும்), கால்நடை என்று பொருள்.
2. விந்தம் என்றால் - பேணுதல் (காத்தல்), அறிதல்
பசுக்களை/உயிரினங்களை அறிந்து பேணிக் காப்பவன் கோவிந்தன்.
காக்கும் கடவளாம் திருமாலுக்குப் பயன்படுத்தப்படும் அடைமொழிகளில் ஒன்று கோவிந்தா. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 187, 539 வது நாமங்களாக இந்த சொல் உபயோகிக்கப் படுகிறது. இவ்வார்த்தை இரண்டு விளக்கங்களை வழங்குகிறது.
1. முதலாவது வேதங்களின் மூலம் அறியப்பட்டவர். பிரம்மசூத்திரம், வேதங்கள் மூலம் மட்டுமே பிரம்மம் உணரப்படுகிறது என்று கூறுகிறது (गोपिः वेत्ति इति गोविन्दः gopi: vEthi iti gOvinda:).
2. இந்த வார்த்தையின் இரண்டாவது விளக்கம், உயிர்களை அறிந்தவர் (गाः विन्दति इति गोविन्दः கா: விந்ததி இதி கோவிந்த:). இல்லாததொன்றுமில்லை, எல்லாமே அவன் என்று நீக்கமற நிறைந்திருப்பதால், இடம், காலப் பரிமாணங்களைக் கடந்து, உயிரினங்களையும் அவற்றின் செயல்களையும் அறிந்திருப்பவர் கோவிந்தன்.
ஆக, ப்ரம்மம், பரம்பொருள் என்ற தூய இருப்பு, தூய உணர்வு, தூய இன்பம் தான், கோவிந்தன் என்ற சொல்லுக்குப் பொருள்.
மூட மதே
மனிதர்களாகிய நாம் மற்ற உயிரினங்களை விட மிக உயர்ந்த மனமும் புத்தியும் உடையவர்களாக இருக்கிறோம். வேண்டியது, வேண்டாதது, நல்லது, கெட்டது, என்று பகுத்தறியும் தன்மை நம்மிடம் மட்டுமே உண்டு. வெறும் உள்ளுணர்வால் (உயிரியல் மற்றும் உடலியல் தூண்டுதல்களால்) மட்டும் நாம் வாழ்வதில்லை; உயர்ந்த குறிக்கோள்களால் நிர்வகிக்கப்படுகிறது நம் வாழ்வு.
ஆயினும்கூட, அன்றாட வாழ்வில் இந்த மனம் நம்மை எங்கெலாம், எப்படியெல்லாம் “ஒன்றை விட்டு ஒன்று பற்றிப் பாசக் கடலக்குள் வீழ்த்திட” அழைத்துச் செல்கிறது. மனதைப் பற்றிய இந்தப் பாமரனின் விளக்கத்தை, கீழ்காணும் வலைப் பதிவில் காண்க. https://soundar53.substack.com/p/-6-
முந்தைய பதிவில் கூறியபடி, அன்றாட வாழ்வில் நடப்பு வேறு. அறிவில்லாத ஒன்றை அறிவு என்றும், தெளிவிலாத ஒன்றை தெளிவு என்றும், நிலையற்றவற்றை நிலையானவை என்றும், முழுமையற்றவற்றை முழுமையானவை என்றும் எண்ணும் நம் மனதை, ஆதி சங்கரர் “மூட மனமே” “அறிவிலியே” என்று அழைப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நேரடி மொழி பெயர்ப்பு என்பது “குறித்த நேரம் வந்திடினில்” என்று பொருளாகும். யாருக்கு, யார் குறித்த, எந்த நேரம்? நமக்கு, காலன் குறித்த, மரண நேரம் என்பது நேரடி விடை. நாட்கள் கடக்க கடக்க, காலன் வரும் நேரமும் நெருங்குகிறது. அது சரி, மரணம் யாருக்கு?
“மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா! மரணத்தின் தன்மை சொல்வேன். மானிடர் ஆத்மா மரணம் எய்யாது. மறுபடிப் பிறந்திருக்கும். மேனியைக் கொல்வாய். நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி சென்றுதான் தீரும் ஓர் நாள்” என்று போர்க்களத்தில் அறிவுரை கூறினானே பாரத்தசாரதியான இறைவன் கண்ணன்.
ஆக உடலினுள் உயிர் ஒண்டுக் குடித்தனம். வாடகைதான் வாழ்வு.
நஹி நஹி ரக்ஷதி
“காப்பாற்றாது, காப்பாற்றாது” என்பது நேரடி மொழிபெயர்ப்பு. யாரை, எப்போது, எது காப்பாற்றாது?
எப்போது காப்பாற்றாது - விதித்திட்ட வேளையில் - அதாவது “காலனின் பாசக் கயிறு நம்மைச் சுற்றி விழும்” நேரம். எமனின் ஓலை நமை அடையும் நேரம். உடலை விட்டு உயிர் பிரியும் நேரம்.
எது காப்பாற்றாது - இதற்கு விளக்கம் அடுத்த சொல்லில்
டுக்ருங் கரனே
டுக்ருங் என்பது சமஸ்கிருத இலக்கணத்தில் (வ்யாகரந) கர்ணே (கரனே) என்ற செயலைக் கொண்ட ஒரு வேர் சொல். இலக்கண விதிகளை மனனம் செய்வது என்று பொருள்.
வேதங்கள் மற்றும் வேதாந்தம் படிக்க சமஸ்கிருத இலக்கண அறிவு மிகவும் விரும்பத்தக்கது. பெரிய இலக்கண அறிஞர் பாணினி போன்ற பல அறிஞர்கள் வடித்த சூத்திரங்களை பாட, மனப்பாடம் செய்ய, அறிஞர்கள் இலக்கணத்தில் புலமை பெறுவதற்கான வழிகளில் ஒன்று, "டுக்ருங் கரனே".
இந்தப் பண்ணில் நாம் இதனை வெறும் ஏட்டுக்கல்வி என்று மட்டுமே எடுத்துக் கொள்ளாமல், இன்னும் சற்று விரிவான நோக்கத்தில் அறிந்து கொள்ள வேண்டும்.
அறிவு (வித்யா) இரு வகை: 1. இறையறிவு (மெய்ப்பொருள் அறிவு). இதனை பர வித்யா என்பர். 2. இறையறிவில்லா மற்ற அனைத்து அறிவு. இதனை அபர வித்யா என்பர். அதாவது அன்றாட வாழ்வில், நமக்கு வரையறுக்கப்பட்ட (விதிக்கப்பட்ட) உலகியல், இறையியல் வினைகள் (லௌகீக, வைதீக கர்மங்கள்). அபர வித்யா இன்றி, பர வித்யாவை அடைய முடியாது. பர வித்யா இல்லாமல் அபர வித்யா முமழுமை அடையாது.
ஆக இங்கு குறிப்பிடுவது, அபர வித்யா நம்மைக் காப்பாற்றாது என்ற பரந்த அர்த்தத்தில்.
தமிழ் இலக்கியத்தில் யாக்கை நிலையாமை
இச்சொற்களின் சாரத்தை பல தமிழ் ஞானிளும் சைவ சித்தாந்த அறிஞர்களும், கவிஞர்களும் எண்ணற்ற கவி வடிவிலே எழுதியுள்ளனர். யாக்கை நிலையாமை/நிலையாமை என்ற அத்தியாயங்கள் திருமந்திரத்திலும், திருக்குறளிலும் உள்ளன.
திருமந்திரம்
“மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை பீறும் அதனைப் பெரிது உணர்ந்தவார் இல்லை கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும் ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே”.
(நன்கு நெய்து தயாரிக்கப் பட்ட பட்டாடையும் கிழிந்து போய்விடும். இந்த உண்மையைப்பற்றி உலகத்தவர் சிறிதும் சிந்திப்பதில்லை. அழகிய கருங் கூந்தல் வெண் கூந்தலாக மாறிவிடுவதும் கண்கூடு. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே ஒரு சிறு பொழுதே உள்ளது. இந்த உண்மைகளைச் சிந்தித்து நன்கு உணர்வீர் உலகத்தோரே).
என்ற சிவவாக்கியர் பாடல் அழியும் உடல் பற்றி குறிப்பிடுகிறது.
நாட்டுப் பாடல்
''குச்சு வீடுங் கட்டலாம் குறுங் கதவு சாத்தலாம் வாழ வேண்டும் என்று சொன்னால் வாய் மதங்கள் பேசலாம் காலனுட ஓலை வந்தால் கனத்தவீடும் தாங்குமோ குச்சு வீடும் தாங்குமோ குறுங்கதவும் தாங்குமோ''
என்ற பாடல் மூலம் அறியப்படும் தத்துவங்கள் பலப்பல. உடம்பு ஒரு குச்சு வீடு. அதில் ஆசைகள் கதவுகளாகும். எனவே வாழ நினைப்பவன் ஆசையை அடக்குதல் வேண்டும். உடம்பு ஒரு குச்சுவீடு, அக்குச்சு வீடு எவ்வளவு கனத்திருந்தாலும் அதாவது (புண்ணியம் செய்திருந்தாலும்) காலதேவன் வந்துவிட்டால் கணப் பொழுதும் நில்லாது மறைந்து விடும் என்ற நிலையாமைத் தத்துவத்தை இப்பாடல் நயம்பட கூறுகிறது.
மேற்கூறிய விளக்கங்கள் எதுவும், வேதங்களின் பூர்வபாகத்தில் (ஆரம்ப பகுதி) பொதிந்துள்ள பல்வேறு சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளை இழிவுபடுத்துவதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதில்லை.
பெரும்பாலானவர்களுக்கு, அவை மனதையும் உடலையும் சுத்தப்படுத்துவதிலும், பெரிய பயணத்திற்கு ஒருவரைத் தயார் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.
ஸ்ரீ ஆதி சங்கரரைப் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், விரிவான தயாரிப்புகள் இல்லாமல் நேரடியாக அந்தப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராக பிறந்தவர்கள், அந்த வகையில் மிகவும் வித்தியாசமானவர்கள்.
உண்மையில், இறுதிக்கான வழிமுறைகளைத் தவறாகப் புரிந்துகொள்வதையும், சடங்குகளில் மட்டுமே திருப்தியடைவதையும், அவற்றின் உண்மையான நோக்கத்தையும் பொருளையும் புரிந்து கொள்ளாமல் அவற்றைச் செய்வதையும் தவிர்த்து பரம்பொருளை உணருவதை முயலவேண்டும் என்று கூறுகிறது இப்பண்.
ஏன் இறைவன் நாமத்தை சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். இறைவனே இதற்கு பகவத்கீதையில் 8வது அத்தியாயத்தில் பதில் அளிக்கிறார்:
अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् । यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥८- ५॥
ய: அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரந் = எவன் இறுதிக் காலத்தில் எனது நினைவுடன் கலேவரம் முக்த்வா ப்ரயாதி = உடம்பைத் துறந்து கிளம்புகிறானோ (இறப்போன்) ஸ: மத்³பா⁴வம் யாதி = எனதியல்பை எய்துவான் நாஸ்தி அத்ர ஸம்ஸ²ய: = இதில் ஐயமில்லை.
இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை.
வாழ்நாட்களில் மனதுக்குக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டுபண்ணினால்தான் அம்மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலைபெறும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் அல்லவா. ஆகையால் நாம் அனைவரும் நம் வாழ்நாட்களில் மனதால் கடவுளைத் தியானம் செய்துகொண்டே தங்கள் கர்மங்களைச் செய்யது, கரமத்தின் பலனை அவனிடமே விட்டு விட வேண்டும்.
இது தான் இந்த முதல் சம்மட்டி அடி. என்ன ஒரு ஆழமான அடி! இந்த அடியை உள்வாங்கினால், உற்ற தேகத்தின் உயிரையும், உயிரை மேவிய உடலையும் ஊடுருவி, உலுக்கி எடுத்து, நம் உணர்வினை தட்டி எழுப்பும் என்பது உறுதி.
அடுத்த பதிவில் சங்கரனின் இரண்டாவது சம்மட்டி அடி. அதைப் பெறும் வரை…….
When I commenced my study of Moha Mudgara otherwise known as Bhaja Govindam, there were interesting exchange of comments between a novice like myself and learned individuals, in the social media.
Some were of the view that the title that I have given “Sankara’s Smithy” and சங்கரனின் சம்மட்டி அடிகள் (“Sankaranin Sammatti Adigal” in Tamil) is not appropriate.
“Adi Sankara never had to resort to violence, vulgarity, force,guile or such aids to advance his views. Intellect and compassion were his forte. Please do not ascribe such epithets to write about Adi Sankara’s achievements; why this kind of rebellious/militant attitude of force to defend one’s belief system?”
These were some of the remarks.
This is to reconfirm that my intention is not to project Sankara in that manner at all. I never even realised that there could be an interpretation from that angle.
In a smithy, the iron is heated and struck with hammer blows before it is converted into a fine product. Those strikes are not rebellious/militant. They are meant to transform a rigid matter into useful product. If my little understanding of these Slokas are correct, the message of each sloka is like a hammer blow(mudgara) to the ignorant minds of ours, pointing out the stark realties which we choose to ignore in our life.
It is with this intention that I gave the title for my study as Sankara’s Smithy (being an engineer myself) and have taken up my study of Bhaja Govindam. I am absolutely open for any change or suggestions for the title. Please let me know through your comments.
Just thought I will clarify my thought process to all. After all, the idea is to learn and understand the message of Adi Sankara.
Thank you.
பஜ கோவிந்தம் என்று அழைக்கப்படும் “மோக முத்கரா”வைப் பற்றிய எனது ஆய்வைத் தொடங்கியபோது, சமூக ஊடகங்களில் “மூட மனம்” கொண்ட எனக்கும், கற்றறிந்தவர்களுக்கும் இடையே சுவாரஸ்யமான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன.
“Sankara’s Smithy” சங்கரனின் சம்மட்டி அடிகள் என்று கொடுத்த தலைப்பு பொருத்தமானதல்ல, ஆதி சங்கரர் ஒருபோதும் “வன்முறை, அசிங்கம், பலம், வஞ்சகம் போன்றவற்றை நாட வேண்டியதில்லை” என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.
“ஆதி சங்கரரின் சாதனைகளைப் பற்றி எழுத தயவு செய்து இது போன்ற அடைமொழிகளைக் கூறாதீர்கள்; ஒருவரின் நம்பிக்கை அமைப்பைப் பாதுகாக்க ஏன் இந்த வகையான கிளர்ச்சி/போராளி மனப்பான்மை?” இவை சில குறிப்புகள்.
அந்த வகையில் ஆதி சங்கரரை முன்னிறுத்துவதோ அல்லது வர்ணிப்பதோ என் எண்ணம் அல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதுதான் இந்த விளக்கம். இப்படி ஒரு கோணத்தில் பார்க்கக்கூடும் என்று நான் சிறிதேனும் சிந்திக்ககூட இல்லை.
ஒரு பட்டறையில், இரும்பை சூடாக்கி, சுத்தியலால் அடித்து, நீரில் மூழ்கடித்து, அதனை ஒரு உபயோகமுள்ள சிறந்த பொருளாக மாற்றுவர். அது போல, ஒவ்வொரு ஸ்லோகத்தின் செய்தியும் நமது அறியாமை மனங்களுக்கு பட்டறையில் விழும் சுத்தியல் அடி போன்றது; நம் வாழ்க்கையில் நாம் புறக்கணிக்கத் தேர்ந்தெடுக்கும் அப்பட்டமான உண்மைகளைச் சுட்டிக்காட்டுவது என்பதே எனது தாழ்மையான கருத்து.
இந்த நோக்கத்தில்தான் பஜ கோவிந்தம் பற்றிய எனது ஆய்வையும், நான் பகிர்ந்து கொள்ள முயன்ற எண்ணங்களையும் எடுத்துக் கொண்டு, சங்கரனின் சம்மட்டி அடிகள் என்ற தலைப்பை கொடுத்தேன் (என் பொறி இயல் படிப்பு இந்த தலைப்பை கொடுக்க உந்தியது). தலைப்பில் ஏதேனும் மாற்றம் அல்லது பரிந்துரைகளுக்கு நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன். உங்கள் கருத்துகள் மூலம் எனக்கு அவசியம் தெரியப்படுத்துங்கள்.
எனது இந்த சிந்தனை முறையை அனைவருக்கும் தெளிவுபடுத்தலாம் என்று நினைத்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆதி சங்கரரின் செய்தியைக் கற்று புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணம்.
“Sadyomukti is the processless immediate experience of Brahman, spaceless and timeless, on account of one's habituation to the non-dual knowledge of the Self. It is given to a very few to realise Brahman in this way, for most of the aspirants cannot proceed with their meditations without some kind of objective content in their consciousness. The meditation and the control of the Prana reaches a pinnacle that only a very few Sadhakas can realise.
In Krama Mukti, the liberated souls think and work through the higher thought of the spiritual nature, not through the mind and sense-organs of the lower nature. They breathe the universal life and exist as partakers of the joy of the Master of the universe. They have the unceasing immediacy of the consciousness of everything, an awareness of the inmost objective essences of the complete universe. Their experiences are, no doubt, objective, they being not identical with the Absolute, but they can have an entire knowledge of the universe through self-identification with anything, at any time”. In other words, they get rid of the gross body and use subtle their subtle and causal bodies.
These states are achieved through the Ashtanga Yoga of meditation and control of Praana. This is outlined by Bhattathri in this Sloka 10.
One who is desireless of visiting the other heavenly worlds, gives up (through his Aagyaa chakra) his gross body as well as the subtle bodies and merges in Thee. The one who desires to visit the heavenly regions before attaining liberation, goes out through the orifice in the crown of the head ( the Brahmarandhra)
Meaning of the Sanskrit Words
लिङ्ग-देहम्-अपि - even the subtle body
सन्त्यजन्-अथ: - giving up, then
लीयते - merges
त्वयि परे - in Thee, the Supreme Brahman
निराग्रह: - the one who is desireless
ऊर्ध्व-लोक-कुतुकी तु - but the one who desires to go to higher spiritual worlds
मूर्धत: - through the orifice in the head ( Brahmarandhra)
தமிழ் ஒலித் தொடர் பதிவு இணைப்பு (Link to the Tamil Podcast)
இன்றய காலக் கட்டத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை, இரு வகையாகப் பிரிக்கலாம். 1. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். 2. தமிழ் எழுத, படிக்க தெரியாது; ஆனால் பேச முடியும்; அடுத்தவர் பேசினால் புரிந்து கொள்ள முடியும்.இந்த இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவருக்காக, இந்தப் பதிவின் ஒலித் தொடர் பதிவை (podcast) கீழ்காணும் இணைப்பில் கேட்கலாம்.
ஏன் பிறந்தாய் மகனே ? ஏன் பிறந்தாயோ? ……….. நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே!
கவிஞர் கண்ணதாசன், திரைப்படம்-பாகப்பிரிவினை
63 வருடங்களுக்கு முன் வந்த பிரபலமான தமிழ் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் தொடக்க வரிகள். வருடங்கள் பல கடந்தாலும் இக்கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனதையும் வருட்டி எடுக்கும் (இடர்கள் நம்மை சூழும் போதாவது) என்றால் அது மிகையாகாது. இந்த திரை இசைப் பாடலில் அடங்கிய தத்துவத்தை இப்போது ஆய்ந்திடலாம்.
மனிதப் பிறவியின் நோக்கம்
மனிதப் பிறவியின் நோக்கம் என்ன? இவ்வினாவிற்கு இப்புவியிலே இன்றும் எண்ணற்ற ஆன்மீகவாதிகள், துறவிகள், முனிவர்கள், தனிநபர்கள், நன்னெறி தத்துவம் பற்றிய எழுத்தாளர்கள், மற்றும் பலர் விடையளிக்க முயன்று கொண்டு வருகின்றனர். இவர்கள் வேறுபட்ட பாதைகளில், மாறுபட்ட கருத்துக்களுடன் ஆராய்ந்த போதிலும் அனைவரும் ஒப்பும் ஒரு உண்மை:
“ஆறறிவு பெற்ற மானிடர் அனைவருமே துன்பம் தவிர்த்து நிலையான இன்பமடையவே அவர்தம் பணிகளின் குறிக்கோளாக வைத்து அவரவர் பணிகளைப் புரிகின்றனர்”
என்பது. இதில் ஐயமேதுமில்லை.
வட மொழியில் வாழ்வின் பொருள் என்பதை புருஷார்த்தம் என்பர். புருஷார்த்தம் என்பது தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் எனபவைகளுக் குறிக்கும். இதனையே அறம், பொருள், இன்பம், வீடு என தமிழில் கூறுவர்.
அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்பதுவே இவ்வழி முறையாகும். அதாவது, முதலில் தர்மத்தை அறம் என்று சொல்லி, அதைத் செய்வதற்காகவே எப்படிப் பொருள் ஈட்ட வேண்டுமோ அந்த நியாயமான முறையைச் சொல்லி, அதனால் இன்னின்ன இன்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று பக்குவம் வருகிற வரையில் கிரமப்படுத்திக் கொடுத்து, அப்புறம் இந்தச் சின்ன சின்ன இன்பங்களை எல்லாம் விடுத்து, இறுதியில் நிரந்தர இன்பமான வீடு என்கிற மோக்ஷத்தைக் காட்டுவதே வாழ்வியல் முறை எனும் நான்கு புருஷார்த்தங்கள்.
பாரதியாரின் எளிமையான வாக்கில் இந்நான்கும் இதோ:
தன்னைக் கட்டுதல் அறம் பிறர் துயர் தீர்த்தல் பொருள் பிறர் நலம் நாடுதல் இன்பம் உலகு காக்கும் ஒருவனைப் போற்றுதல் வீடு.
மனிதப் பிறவியின் நடப்பு
அந்த ஆனந்தத்தை அடைய முயலும் நம் அனைவரின் வாழ்க்கையிலும் அன்றாடம் இடைவிடாது, முக்கியமான மூன்று பெரும் தத்துவங்கள் தொடர்பு கொள்கின்றன. அவை, மனிதன், உலகம் (படைப்பு), இறைவன்.
இவைகளை வாழ்வில் உபயோகித்து (அனுபவித்து) , வினைகள் புரிந்து, “பொருள்” தேடி, “இன்பம்” துய்த்து, களைத்து, முடிவில்
“நாம் வந்த கதை என்ன? நாம் கொண்டது என்ன, கொடுப்பது என்ன? மன்னைத் தோண்டி தண்ணீர் தேடும் நாம், நம்மைத் தோண்டி ஞானம் கண்டோமா? இல்லை, நம் மனமெங்கும் தெருக் கூத்து, பகல் வேஷமா?”
என்றெல்லாம் பிதற்றி, தன்னை அறிவதே தனது பிறவியின் நோக்கம், அதனை அறிய முயலாமல் வாழ்நாளை வீனாக்கினோமே என துன்பமுற்று, வருந்தி மடிகிறோமே. இது தானே நடப்பு.
தாயுமானவர் இந்த நடப்பைத்தான் இப்படி கூறுகிறார்:
“ஆசைக்கோரளவல்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல்மீதிலே ஆனை செலவே நினைவர்,
அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநாளிருந்த பேரும் நிலையாகவேயினுங் காயகல்பந்தேடி புண்ணாவர் எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும் உறங்குவதுமாகடியும் உள்ளதே போதும்
நான் நான் எனக்குளறியே ஒன்றைவிட்டு ஒன்றைப்பற்றி பாசக்கடற்குள்ளே வீழ…”
இன்பம் பயக்கா இருள் – ஏன்?
சரி, நமது வாழ்க்கை அனுபவம், நம்மை, நமது வாழ்வின் பொருளை நோக்கிச் செலுத்தவில்லையே! ஏன்?
இந்தக் கேள்விக்கு, இதோ! மூன்று பதில்கள் - கேள்விகள் வடிவில்:
1. அனுபவிக்கின்றவனை அனுபவிக்காமல், அனுபவிக்கப்படுவைகளை அனுபவிக்க முயலும் அறிவிலிகளாக அலைகிறோம் நாம்; அல்லவா! (ஆஹா! நம்ம மொபைல் ஃபோனில் இருந்து நம் சொந்த மொபைல் எண்ணயே அழைக்கிறேனே! எப்படி பதில் கிடைக்கும்? அது போல இருக்கே இந்தக் கேள்வி).
2. அறிவைத் தரும் கருவிகளின் துணை கொண்டு, அறியப்படும் பொருள்களை அறியும் நம்மை, எந்த அறிவைத் தரும் கருவிகளைக் கொண்டு அறிவது என்று என்றேனும் ஆராய்ந்தோமா?
3. “நானெனும் பொய்யை நடத்துவோன் நான் ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான் ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய் அறிவாய் விளங்குதற் சோதி நான்”
என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி கூறிய “நான்” ஆக இல்லாமல், “இன்பமாகிய நாம், தம்மை இன்பெமென அறியாமல், துன்பத்தின் பின்னால், துன்பத்தில் இன்பம் இருக்கின்றதென்று ஏன் ஓடிக்கொண்டிருந்தோம்”.
கேள்விக்கு என்ன பதில்?
சரி. குழம்பி இருக்கும் நம்முடைய கேள்விகளுக்கு பதில் கூறாமல், கேள்விகளையே திருப்பி வைத்தால், நாம் என்ன செய்வது? எங்கு செல்வது? - நம் அனைவரின் சிந்தனை, அல்லவா!
சுலபம். வாருங்கள், நம்அனைவரையும்ஒருகொல்லன்பட்டறைக்குகூட்டிச்செல்லலாம். அங்கேநமக்குவிடைகள்கிடைக்கும். ஆனால், ஒருநிபந்தனை! அங்கேஆசாரிநமக்கு 31 சம்மட்டிஅடிகள்கொடுப்பார்.அவைகளைஉள்வாங்கிக்கொள்ளவேண்டும்.
ஒன்று மட்டும் நிச்சயம்/உத்தரவாதம். அந்த முப்பதொன்று அடிகளை, கொல்லன் பட்டறையில் இரும்பு வாங்கும் அடிகளாக நாம் ஏற்றிட்டால், கனிந்து மாறிடும் இரும்பு போல,
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சி
நமக்கு கிட்டி, நாம் மாறுவோம். அதில் சந்தேகமே இல்லை. சம்மதமா?
பயம் தவிர்த்து, அந்த உத்தரவாதத்துடன் வாருங்கள் ஆதி சங்கரனின் பட்டறைக்கு.
வருக! வருக! மாதம் ஒருமுறையாவது, சங்கரனின் பட்டறைக்குச் செல்வோம், சம்மட்டி அடிகள் வாங்குவோம். பின், நமது நிலையை உணர்வோம்.
சங்கரனின் சம்மட்டி அடி 1 - நவம்பர் 11ம் தேதியில் - கற்ற கல்வியும் சுற்றி விழும் காலன் கயிறும் - யாக்கை நிலையாமை - அடுத்த பதிவில். அதுவரை
இறையருள் பெருக. வளமுடன் வாழ்க
முக்கிய குறிப்பு: இப்பதிவும், வரும் தொடர் பதிவுகள் அனைத்தும், பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காரானந்தாவின் விரிவுரைகளால் ஈர்க்கப்பட்டு, சுவாமிஜியின் சொந்த விரிவுரைகளில் இருந்து அடியேன் அறிந்து கொண்டது. இப்பதிவுகளில் காணும் கல்லாப் பிழை, கருதாப் பிழை, எல்லாப் பிழைகளுக்கும் அடியேனின்அறியாமையே காரணம். அவைகளை சுட்டிக்காட்டின், அடியேனின் அறியாமையைக் களைய உதவும். நன்றி.
The opening lines of a song from a popular Tamil movie released 63 years ago starts with a physically challenged hero, in contemplative mood asking question to his child
Why were you born son? Why were you born? Why did you come here and be born, son? Why were you born, before I knew the reason for my birth, dear son!
Kannadasan
It is no exaggeration to say that even after many years, these questions haunt each of us when trials and tribulations surround us and whenever we turn into a contemplative mood . Now let's analyze the philosophy behind this lyrics.
The Goal
Countless spiritualists, saints, sages, individuals, writers on ethical philosophy, poets, lyricists, and many others are still trying to answer this question. However, one truth they all agree on, even though they explored it on different paths, with different perspectives.
“All with six senses aim for unceasing permanent happiness without pains and suffering; they keep this aim as the target and carry on with their work day in and day out”.
Swami Omkarananda
There are no two opinions about this aim.
"alpa aayasham ananta Sugam" - Adi Sankara says in his Vishnu Sahasranama text (in Bhashyam).
Well, in the life of all of us who are trying to achieve that ananta sugam (bliss): there are three words that are very important; Man, Universe (or more broadly called Creation) & God.
All three of these words contain great philosophies. If we deeply examine these three words, many questions such as these given below, will arise in us.
Who am I? Why do I do what I do? How can I do what I do better?
What does birth and death really mean?
Who is God? What is His nature?
What is this world? What do I have to do with this world?
What is the relationship between me and God and this world?
One can ask “What is the benefit of finding answers to these questions?”. Such a question may arise for all of us. This is answered by the Tamil Saint “Thayumanavar”.
"If you know yourself, you will be attached to the Lord, the leader. After that, is there anything else to get attached”?
The path to the Goal
So, the purpose of human birth is to know oneself. If we want to know ourselves, we need to know what the meaning of our life is. “Purushartham “ is the word for this in Sanskrit. Here are two perspectives for this word.
1. “Purusha” means “Human”. "Artham" means "ideal" or "goal". The goal of unceasing peaceful bliss, and the efforts (prayatanam) we have to make to achieve this goal are called Purushartham.
There are many different species in this world. In this, only man is given the opportunity (wisdom) to choose. Other species do not have the opportunity to choose. The ideal or goal comes in when there is an opportunity to choose.
Thus, Purushartham can be divided into two types of power i.e Shakti (Icha Shakti, Kriya Shakti) which are the desire for the goal and the actions to achieve it.
Icha (pleasure) is of two kinds. One is cultivated by our senses - sense pleasure; that which are outward looking and initiated through the body mind intellect complex of us. This is peripheral and unstable. The other is cultivated by knowledge. An inward looking set of actions - Dharma, Bhakti, Gnana and Moksha are the highest goals. Actions that help you to undetermine who you are.
2. The great Mahaan Bhaskara Raya, from Bhaga in Maharashtra, explains that Purushartham means Dharma, Artha, Kama and Moksha. These four Purusharthas are also considered as the vital modes of human life.
The focus of this perspective is to stay on the path of virtue always , seek material things (through ethical means) required for supporting one’s family and the society, gradually start giving up and then reach the abode of the Lord.
Here are all four in Bharatiyar’s simple words:
Self-restraint is Dharma Remove distress in others is Artha Seeking the welfare of others is Kama Praise the one who saves the world is Moksha
So far so good….Well, we know the reality of purpose, object and means. But what happens in our daily lives? What is the reality?
Goal v.s. Reality
Day in and day out we see human beings doing actions through their body, mouth and mind ; earn money,fame and do actions that give them what they call it as happiness. As we start ageing we start wondering as to what is that we have been doing so far and where are we heading; as age catches up and the body starts withering, this thinking turns into worries and finally we perish after worrying about men, materials and matter which have only “shelf life” and nothing else. Did we at any point of time have the time to ponder and compare our journey with our ultimate goal of pure and permanent happiness? Why is that our journey and our goal were not in sync?
For this question, here it is! Answers – in the form of questions:
1. We wander about ignorantly trying to experience the world without experiencing the experiencer. Isn't it! (Wow! It is like trying desperately to call our mobile number from our own cell phone. How foolish are we! How can we get an answer? That's the question).
2. We learn with the help of instruments of knowledge; have we ever inquired what instruments of knowledge are required to know about ourselves?
3. Why are we, not knowing that we are the embodiment of absolute happiness,running behind sufferings, thinking that there is happiness in sufferings?
The Course Correction
“What is this? When we want answers and ask questions, we are given questions to answer. This is a problem” - we all must be wondering.
Don’t worry. Let us visit a Forge Shop, a traditional Smithy owned by Adi Sankara. Answers are there for all our questions in the form of 31 hammer blows. There is a guarantee that comes along with these hammer blows.
If we absorb these blows internally and contemplate, our transformation and subsequent happiness is ensured; just like the hot solid iron is worked into a wonderful product.
Avoid fear and come to Adi Sankara's workshop with that assurance.
What next?
Welcome! At least once a month, we will visit Sankara's workshop and get the hammer blows.
The first visit will be on November 11th. Looking forward to seeing you there.
Until then, take care. Start looking inwards. God Bless.
Important Note:
This post and all subsequent posts on this subject are inspired by Guru, Pujyasree Swami Omkarananda. Guruji's lectures in public domain and what I learnt from Swamiji’ Atma Vidya Course lectures are the principal source of reference.
All errors if any on these posts are entirely due to my ignorance and incapability to understand.
I seek your feedback which will be of immense help to me in my learning process.